Aggregator

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
பலம் வாய்ந்த நிலையில் பங்களாதேஷ் 18 JUN, 2025 | 12:26 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் மிகவும் பலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை 3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் மதிய போசன இடைவேளையின்போது 4 விக்கெட்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாம் நாள் ஆட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி சதங்கள் குவித்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிமும் 4ஆவது விக்கெட்டில் 264 ஓட்டங்ங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஷன்டோ 148 ஓட்டங்களைப் பெற்று அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 383 ஓட்டங்களாக உயர்த்தினர். முஷ்பிக்குர் ரஹிம் 7 பவுண்டறிகள் அடங்கலாக 141 ஓட்டங்களுடனும் லிட்டன் தாஸ் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 43 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்னர். https://www.virakesari.lk/article/217801

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
கில், ஜெய்ஸ்வால் அபார சதம்: இந்திய இளம் படை இங்கிலாந்து மண்ணில் முதல் நாளே புதிய சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில்லும், ஜெய்ஸ்வாலும் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோரின் அபார சதம், ரிஷப் பந்தின் அரைசதம் ஆகியவற்றால் இளம் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை மிரட்டலாகத் தொடங்கியுள்ளது. ஹெடிங்லியில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது. ஜெய்ஸ்வால் (101) ரன்களில் ஆட்டமிழக்கவே, கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முதல் விக்கெட்டுக்கு கேஎல்.ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்ததே நடுவரிசை வீரர்கள் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினார். வலுவான தொடக்கம் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கவே, இந்தியா சார்பில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். இங்கிலாந்து வீரர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்திய அணியின் பேட்டிங் அவர்களை திணறடிக்கும் வகையில் அமைந்திருந்தது. ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி அற்புதமாக இங்கிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து ஆடினர். குறிப்பாக ஜெய்ஸ்வால் பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்கவில்லை. நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்து, ஆப் சைடிலேயே தனது பெரும்பகுதி ஷாட்களில் ரன்களைச் சேர்த்தார். ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கில் நிதானமும், பொறுமையும் நன்கு தெரிந்தது. 15 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ராகுல் 42 ரன்கள் சேர்த்த நிலையில் கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல் 42 ரன்கள் சேர்த்தநிலையில் கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சுதர்சன் டக் அவுட் ராகுல், ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து அறிமுக ஆட்டத்தில் களமிறங்கிய சாய் சுதர்சன், 4 பந்துகளில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். சுதர்சன் களமிறங்கிய போது லெக் திசையில் ஸ்லிப் வைத்து ஸ்டோக்ஸ் பந்து வீசினார். லெக் சைடில் விலக்கி வீசப்பட்ட 2வது பந்தில் சுதர்சன் தட்டவே பந்து கால்காப்பில் பட்டு கேட்சானது, இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்யவே அவுட் வழங்கவில்லை. இந்த சம்பவத்திலேயே சுதர்சன் தன்னை சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும், ஆனால், 4வது பந்தும் அதே போன்று ஸ்டோக்ஸ் வீச, தேவையற்ற ஷாட்டை சுதர்சன் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் செஷனில் இந்திய அணி 100 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,4 பந்துகளில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறிய சாய் சுதர்சன் கில், ஜெய்ஸ்வால் வலுவான கூட்டணி 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி சேர்ந்தனர். ஜெய்ஸ்வால் ஏற்கெனவே நன்கு செட்டில் ஆகி இருந்தார். ஜெய்ஸ்வால் 96 பந்துகளில் அரைசதம் அடித்தார், கில் 56பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரைசதத்தை வேகமாக எட்டினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கார்க், வோக்ஸ், டங், ஸ்டோக்ஸ் ஆகியோர் மாறிமாறிப் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சில் கில், ஜெய்ஸ்வால் இருவரும் ரன் எடுக்கும் வேகத்தை குறைத்தார்களே தவிர தடுமாறவில்லை. இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்து சென்றது. ஜெய்ஸ்வால் 144 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கமாகும். ஜெய்ஸ்வால் தனது சதத்தில் பெரும்பாலான ரன்களை ஆப் சைடிலேயே அடித்திருந்தார். வழக்காக லெக்திசையில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய ஜெய்ஸ்வால் பந்துவீச்சுக்கு ஏற்ப பேட்டிங்கை மாற்றி தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். பிற்பகல் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து 2வது செஷனில் வலுவாக காலூன்றியிருந்தது. தேநீர் இடைவேளைக்குப்பின் ஜெய்ஸ்வால் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. ஜெய்ஸ்வால் சதம் அடித்து 101 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 129 ரன்கள் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஷப் பந்த் அதிரடி தொடக்கம் 4வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் களமிறங்கி கில்லுடன் சேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ரிஷப் பந்த், தான் சந்தித்த 2வது பந்திலேயே கவர் திசையில் பவுண்டரி அடித்தார். இதைப் பார்த்த பந்துவீச்சாளர் ஸ்டோக்ஸ் சிரித்துக்கொண்டே ரிஷப் பந்தை கடந்து சென்றார். ரிஷப் பந்த், கில் இருவரும் 3வது செஷனில் ஆதிக்கம் செய்து ரன்களை வேகமாகச் சேர்த்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இருவருக்கும் பெரிதாக எந்த சிரமத்தையும் அளிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப்பின் இந்திய அணி 300 ரன்களை எட்டியது. சுப்மன் கில் வேகமாக அரைசதம் அடித்திருந்த நிலையில் 140 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பந்த் 90 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் முயற்சி எந்த பலனையும் அளிக்கவில்லை. ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்தாலும் அவ்வப்போது தனது பெரிய ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை அடித்து ரன்களைச் சேர்த்தார். ரிஷப் பந்த் பொதுவாக கடினமான ஆடுகளங்களில் சிறப்பாக பேட் செய்து ரன்களைச் சேர்க்கக் கூடியவர். ஹெடிங்லி ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட ரிஷப் பந்த் அதற்கு ஏற்றார்போல் தனது ஆட்டத்தை மாற்றி நிதானமாக பேட் செய்தார். 2வது புதிய பந்து 80-வது ஓவரில்தான் எடுக்கப்பட்டது. புதிய பந்து எடுத்தபின் விக்கெட் வீழ்த்தலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், ஏற்கெனவே செட்டில் ஆன பேட்டர்கள் கில், ரிஷப் பந்த் இருவரும் பந்துகளை நன்கு எதிர்கொண்டு ஆடியதால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 4வது விக்கெட்டுக்கு கில், ரிஷப் பந்த் இருவரும் 138 ரன்கள் சேர்த்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுப்மன் கில் வேகமாக அரைசதம் அடித்த நிலையில் 140 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார் இங்கிலாந்தில் இந்திய இளம் படை முதல் நாளே புதிய சாதனை சீனியர் பேட்டர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் இல்லாத நிலையில் இளம் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் என்ன செய்யப் போகிறது, அதிலும் ஸ்விங்கிற்கும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வாறு சமாளித்து ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கும், கேள்விக்கும் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பதில் அளித்துவிட்டனர். ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2022-ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்ததுதான் இந்திய அணியின் அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணிகள் முதல் நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 89 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால் புதிய சாதனை ஜெய்ஸ்வால் கடந்த 18 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்திருந்தார், இப்போது மீண்டும் அந்த அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் சதம் அடித்து ஜெய்ஸ்வால் தன்னை நிரூபித்துள்ளார். வெளிநாடுகளில் ஜெய்ஸ்வால் அடித்த 3வது சதம் இதுவாகும். 2023-ல் ரோஸோவில் 171 ரன்கள், 2024-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் 161 ரன்கள், லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 101 ரன்கள் என 3 சதங்களை ஜெய்ஸ்வால் வெளிநாட்டு மண்ணில் அடித்துள்ளார். இதுவரை எந்த பேட்டரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அறிமுக ஆட்டத்தில் 3 சதங்களை அடித்தது இல்லை. 96 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த 48 பந்துகளில் விரைவாக 50 ரன்கள் சேர்த்து 144 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இதில் 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். 23 வயதில், ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன் சயத் 1936ம் ஆண்டு ஓல்டு ட்ராபோர்ட் மைதானத்தில் 21 வயதில் 112 ரன்கள் சேர்த்த முஸ்தாக் அலிதான் குறைந்த வயதில் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த பேட்டர் ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,96 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த 48 பந்துகளில் விரைவாக 50 ரன்கள் சேர்த்து 144 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். கில்லின் 'தில்' பதில் கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாத நிலையில் தனக்கு கிடைத்த கேப்டன் வாய்ப்பிலும், ஆட்டத்திலும் கில் சாதித்து பதில் அளித்துவிட்டார். சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டபின், கேப்டன் பொறுப்பு சுமையுடன் அவரின் பேட்டிங் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற கேள்விக்கும், எதிர்பார்ப்புக்கும் சரியான பதில் அளித்துள்ளார். கேப்டன் பொறுப்பு ஏற்றவுடன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெயரை சுப்மன் கில் பெற்றார். இதற்கு முன் விஜய் ஹசாரே(1951, இங்கிலாந்து), சுனில் கவாஸ்கர்(1976, நியூசிலாந்து) திலீப் வெங்சர்க்கர்(வெஸ்ட் இண்டீஸ், 1987), விராட் கோலி(2014, இங்கிலாந்து) ஆகியோர் கேப்டன் பொறுப்பேற்றவுடன் முதல் ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தனர். சுப்மன் கில் களத்துக்கு வந்ததில் இருந்து டெஸ்ட் போட்டியைப் போன்று நிதானமாக ஆடவில்லை. மாறாக வேகமாக ரன்களைச் சேர்த்து, 56 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த 50 ரன்களைச் சேர்க்க 84 பந்துகளை எடுத்துக்கொண்டு 140 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். இங்கிலாந்து பந்துவீச்சு சொதப்பல் இங்கிலாந்து அணியில் ஆண்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாத குறை நன்றாகவே வெளிப்பட்டது. கார்ஸ், டங், வோக்ஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சு எந்த விதத்திலும் இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை. விதிவிலக்காக இருந்தது சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சு மட்டும்தான். இங்கிலாந்து மண்ணில் நன்கு பந்தை திருப்பும் பஷீர், இந்திய பேட்டர்களை சற்று யோசித்து ஆடவைத்தது. வேகப்பந்துவீச்சில் கார்ஸ் பந்துவீச்சு மட்டுமே பரவாயில்லை ரகம். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் "லைன் அன்ட் லென்த்தில்" சரிவர பந்துவீசாததே முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பெரிய ஸ்கோர் சேர்க்க காரணமாக இருந்தது. முதல் நாள் ஆட்டத்தின் பின், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தங்களின் பந்துவீச்சில் எத்தனை பந்துகளை "ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்" வீசியிருக்கிறோம் என ஆய்வு செய்தால் அவர்களின் தவறு தெரிந்துவிடும். காயத்திலிருந்து மீண்டுவந்த கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் வேகம் இருக்கிறது, 145 கி.மீ வேகத்தில் பந்துவீசினாலும் சரியான லைன் அன்ட் லென்த் இல்லை என்பதால் அவரது பந்துவீச்சு பேட்டர்களுக்கு பெரிதாக சிரமத்தை தரவில்லை. ஹெடிங்லி ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதைப் புரிந்து கொண்டு இங்கிலாந்து அணி அதற்கேற்ப பந்துவீசவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்விங், காற்றின் வேகத்துக்கு ஏற்ப பந்தை திருப்பும் பாணி, துல்லியமான யார்கர்கள் என எதுவுமே இல்லை. முதல் நாளில் செய்த தவறுகளை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆய்வு செய்து திருத்தி விட்டு 2வது நாளான இன்று ஆட்டத்தை எதிர்கொண்டால் மட்டுமே அந்த அணியால் சமாளிக்க முடியும். இல்லாவிட்டால், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் பிரமாண்ட ஸ்கோராக மாறிவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14elmx1yyyo

யாழ். பல்கலையில் போதைப் பாவனை இல்லை; போதை ஒழிப்பு RTI இல் வெளிவந்த உண்மை

2 months 3 weeks ago
21 JUN, 2025 | 09:57 AM “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்ட முறைப்பாடுகள் எவையும் கடந்த ஓராண்டு காலமாக கிடைக்கப் பெறவில்லை” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “போதைப் பொருட் பாவனை” தொடர்பில் கோரப்பட்ட விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்க் கோரப்பட்ட பின்வரும் விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் போதைப் பொருள் பாவனையோ அதுசார்ந்த முறைப்பாடுகளோ கிடைக்கப் பெறவில்லை என்று பதிலளித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்டதாக முறைப்பாடுகள் எவையேனும் பல்கலைக்கழக மாணவர்கள், கலைப்பீட மாணவர்களிற்கு எதிராக கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள் பதிவாகியுள்ளதா? அவ்வாறு பதிவாகியிருப்பின் பதிவாகிய சம்பவங்கள் எத்தனை? பதிவாகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளிற்கு தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? போதைப் பொருட்கள் எவையேனும் கைப்பற்றப்பட்டிருப்பின், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது யாருடைய பாதுகாப்பில் ஃ கையிருப்பில் உள்ளன? போதைப் பொருள் பாவனையோடு தொடர்புடைய மாணவர்கள் மீள கற்றல் நடவடிக்கைளிற்கு திரும்புவதற்கு ஏதேனும் ஆற்றுப்படுத்தல் அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனை உள்ளதென்று பல்கலைக்கழக மாணவர்களின் மீது பாராதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்து கலைப்பீடப் பீடாதிபதி சி.ரகுராம் கடந்த 25, சனவரி 2025 அன்று பதவி விலகி, ஒரு வாரகாலத்தினுள் மீள பொறுப்பேற்றிருந்தார். மாணவர்களிற்கு எதிராக தான் மேற்கொண்ட நிர்வாக முறைகேடுகளை மூடிமறைப்பதற்காகவே அவர் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களிற்கும் எதிராக இவ்வாறான பொய்யானதொரு அவதூறினை பரப்பியிருந்தார் என்பது தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக 25, சனவரி அன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அவரது முறைகேடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவரது நிர்வாக முறைகேடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றிய சட்டத்துறை மாணவனினால் சவாலிற்கு உட்டபடுத்தப்பட்டது. பேராசிரியர் ரகுராமின் வலியுறுத்தலின் பேரில் அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. எனினும் குறித்த வகுப்புத்தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மாணவனிடம் சரணடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், 26.03.2025 அன்று எவ்வித நிபந்தனைகளுமின்றி வகுப்புத்தடை, விசாரணைச் செயன்முறைகள் யாவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து நீக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் அளித்துள்ள பதிலின் அடிப்படையில் அவரது குற்றச்சாட்டு பொய்யானதொன்று என்பது நிரூபிக்கப்பட்டள்ளது. மேலும் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்று கோரிய பேராசிரியர் ரகுராமினால் கூட எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218041

யாழ். பல்கலையில் போதைப் பாவனை இல்லை; போதை ஒழிப்பு RTI இல் வெளிவந்த உண்மை

2 months 3 weeks ago

21 JUN, 2025 | 09:57 AM

image

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்ட முறைப்பாடுகள் எவையும் கடந்த ஓராண்டு காலமாக கிடைக்கப் பெறவில்லை” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “போதைப் பொருட் பாவனை” தொடர்பில் கோரப்பட்ட விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்க் கோரப்பட்ட பின்வரும் விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் போதைப் பொருள் பாவனையோ அதுசார்ந்த முறைப்பாடுகளோ கிடைக்கப் பெறவில்லை என்று பதிலளித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்டதாக முறைப்பாடுகள் எவையேனும் பல்கலைக்கழக மாணவர்கள், கலைப்பீட மாணவர்களிற்கு எதிராக கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள் பதிவாகியுள்ளதா?

அவ்வாறு பதிவாகியிருப்பின் பதிவாகிய சம்பவங்கள் எத்தனை?

பதிவாகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை?

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளிற்கு தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 

போதைப் பொருட்கள் எவையேனும் கைப்பற்றப்பட்டிருப்பின், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது யாருடைய பாதுகாப்பில் ஃ கையிருப்பில் உள்ளன?

போதைப் பொருள் பாவனையோடு தொடர்புடைய மாணவர்கள் மீள கற்றல் நடவடிக்கைளிற்கு திரும்புவதற்கு ஏதேனும் ஆற்றுப்படுத்தல் அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனை உள்ளதென்று பல்கலைக்கழக மாணவர்களின் மீது பாராதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்து கலைப்பீடப் பீடாதிபதி சி.ரகுராம் கடந்த 25, சனவரி 2025 அன்று பதவி விலகி, ஒரு வாரகாலத்தினுள் மீள பொறுப்பேற்றிருந்தார். 

மாணவர்களிற்கு எதிராக தான் மேற்கொண்ட நிர்வாக முறைகேடுகளை மூடிமறைப்பதற்காகவே அவர் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களிற்கும் எதிராக இவ்வாறான பொய்யானதொரு அவதூறினை பரப்பியிருந்தார் என்பது தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டது. 

குறிப்பாக 25, சனவரி அன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அவரது முறைகேடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவரது நிர்வாக முறைகேடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றிய சட்டத்துறை மாணவனினால் சவாலிற்கு உட்டபடுத்தப்பட்டது. 

பேராசிரியர் ரகுராமின் வலியுறுத்தலின் பேரில் அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. 

எனினும் குறித்த வகுப்புத்தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மாணவனிடம் சரணடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், 26.03.2025 அன்று எவ்வித நிபந்தனைகளுமின்றி வகுப்புத்தடை, விசாரணைச் செயன்முறைகள் யாவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து நீக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் அளித்துள்ள பதிலின் அடிப்படையில் அவரது குற்றச்சாட்டு பொய்யானதொன்று என்பது நிரூபிக்கப்பட்டள்ளது.

மேலும் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்று கோரிய பேராசிரியர் ரகுராமினால் கூட எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/218041

யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

2 months 3 weeks ago
சில மாதங்களுக்கு முன்பு யாழ். களத்தில் வந்த செய்தியில்... உப அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் மகன், நிறை போதையில் தந்தையின் அரச வாகனத்தை செலுத்தி, கந்தர்மடத்தில் பெரிய விபத்து ஒன்றை ஏற்படுத்தியதாக வாசித்த நினைவு உள்ளது. அந்த வாகனத்தில்... மகனின் நண்பரும் இருந்து பெரும் காயம் அடைந்ததாக செய்தி வந்திருந்தது. அதனைப் பற்றிய செய்தி இணைப்பை தேடினேன் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. யாராவது கண்டால்... இணைத்து விடவும். மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்... அரச செல்வாக்கு, மகன் செய்த குற்றங்களை மறைத்தது மட்டுமல்ல பாதுகாத்து பதவி உயர்வும் பெற்றுக் கொடுத்துள்ளது. தேசிய மக்கள் சக்தியும்.... மற்றைய சிங்கள கட்சிகளைப் போல்தான். மாற்றம் வரும் என்று நம்பியவர்களுக்கு.. "அல்வா" கொடுக்கின்றது.

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து

2 months 3 weeks ago
சிங்கள சம்பந்திகளுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு என்ன? என்பதை... பத்திரிகைகள் ஏன் வெளியிடவில்லை. இதில்... சுத்துமாத்துத்தனம் செய்வதற்காக அதை இரகசியமாக வைத்துள்ளார்களோ. விக்கியரின்... மாகாணசபைத்தலைவர் பதவிவிக்கு ஆப்பு வைத்த சுமந்திரன், இதிலும் விக்கியரின் காலை வருவார் என எதிர்பார்க்கலாம்.. சிலருக்கு... பட்டும், புத்தி வரமாட்டுது என்றால்.. ஒன்றும் செய்ய முடியாது.

எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!

2 months 3 weeks ago

Presidential-pardon-for-197-prisoners-on

எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில் எந்தவித ஆவணங்களும் இன்றி 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகள் குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதையும் விசாரனை செய்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 37 பேர் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிறைச்சாலைத் திணைக்களத்தின் விரிவான மறுசீரமைப்பு குறித்து நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதுடன் அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே நாளில் பிற்பகல் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தலைமையில் மற்றொரு கலந்துரையாடலும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436484

நல்லூரில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் புதிய நிலையம் விரைவில் அமைக்கப்படும்; தவிசாளர் மயூரன் அறிவிப்பு

2 months 3 weeks ago
நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை! நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நிலையத்தில் மருத்துவ, இலத்திரனியல், இரசாயன, பொலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அண்மைக்காலமாக இனம் தெரியாத நபர்கள் குறித்த கழிவுகளுக்கு இரவு வேளைகளில் தீ வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான நிலையில் இதனை ஒரு பொதுத் தொல்லையாகவும் சூழல் மாசடையக் கூடிய வகையில் காணப்படுகின்றமை தொடர்பிலும் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த வழக்கின் மீதான விசாரணைகளை அடுத்து அப்பகுதியில் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும் அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2025/1436491

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

2 months 3 weeks ago
கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி! குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 314 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 291 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து குறித்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படுவதுடன் அங்கு குறித்த அசோதா பரீசிலனை செய்யப்படும். இதேவேளை குறித்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். மேலும், அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436481

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

2 months 3 weeks ago

New-Project-292.jpg?resize=600%2C300&ssl

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 314 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 291 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதை அடுத்து குறித்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படுவதுடன் அங்கு குறித்த அசோதா பரீசிலனை செய்யப்படும்.

இதேவேளை குறித்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

மேலும், அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436481

நல்லூரில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் புதிய நிலையம் விரைவில் அமைக்கப்படும்; தவிசாளர் மயூரன் அறிவிப்பு

2 months 3 weeks ago
யாழ். நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை 21 JUN, 2025 | 11:27 AM நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி, அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த நிலையத்தால், அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மருத்துவ, இலத்திரனியல், இரசாயன, பொலித்தீன், பிளாஸ்டி உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதேவேளை தாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் துர்நாற்றத்தையே சுவாசித்து வருவதாகவும் , நிலத்தடி நீரை சுத்தமாக குடிக்க முடியாமலும் நிம்மதியாக உறங்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாகவும் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மைக்காலமாக இனம் தெரியாத நபர்கள் குறித்த கழிவுகளுக்கு இரவு வேளைகளில் தீ வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பிரதேச சபையினர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், தீயினால் ஏற்படும் புகையினால் அயல் மக்கள் பெரும் துன்பங்களையும் எதிர்கொண்டு வந்தனர். அவ்வாறான நிலையில் இதனை ஒரு பொதுத் தொல்லையாகவும் சூழல் மாசடையக் கூடிய வகையில் காணப்படுகின்றமை தொடர்பிலும் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் மீதான விசாரணைகளை அடுத்து, அப்பகுதியில் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும், அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை காரைக்காலில் உள்ள கழிவு தரம் பிரிக்கும் மையத்தை அப்பகுதியில் இருந்து அகற்றி, பிறிதொரு இடத்திற்கு அதனை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்தே கையளிக்க வேண்டும் எனவும், தரம் பிரிக்காத கழிவுகளை பிரதேச சபை சுகாதார தொழிலாளிகள் கையேற்க மாட்டார்கள் எனவும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218047

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

2 months 3 weeks ago
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்! adminJune 21, 2025 யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை. எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும் என்கிற குறியீட்டு அர்த்தத்திலேயே இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எரியக்கூடிய அணையா விளக்கு ஏற்றப்படுகின்றது. போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி் முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக அளிக்கையும் இடம்பெறும். 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும். போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/217105/

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

2 months 3 weeks ago

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

adminJune 21, 2025

0-1-3.jpg?fit=1170%2C1170&ssl=1

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது.

இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை.

எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும் என்கிற குறியீட்டு அர்த்தத்திலேயே இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எரியக்கூடிய அணையா விளக்கு ஏற்றப்படுகின்றது.

போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி் முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக அளிக்கையும் இடம்பெறும்.

25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும். போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0-2-3.jpg?resize=800%2C800&ssl=10-3-2.jpg?resize=640%2C800&ssl=1

https://globaltamilnews.net/2025/217105/

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 3 weeks ago
என்ன நீங்க இப்படிச் சொல்லீட்டீங்க. அதுதான் 'ஆனையிறவு உப்பு' என்று மாத்தியாச்சாமே. உப்புச்சப்பில்லாத விடயங்களைச் செய்தவாறு விகாரங்களையும், தாதுகோபுரங்களையும் மறைமுகமாக விரைந்து அமைத்து ஐ.தே.க,சி.சு.க, இ.பொ.முன்னணி போன்றவற்றைமிஞ்சியோர் என்று அதிகமாகத் தமிழரது நிலங்களைப் பிடித்துள்ளோம் எனச் காட்ட வேண்டாமோ. எங்கட சனமும் ஏடேய் நல்ல அரசு பெயரையே மாத்தீட்டாங்கள் என்று புளங்காகிதமடைந்து மீண்டும் குப்பறப் படுத்துவிடுவர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அத்துடன் கஞ்சா மற்றும் போதைப்பொருள்களின் பரவலாக்கம் கரணியமாக இருக்கின்ற இளசுகளுக்கு எப்பிடி நாட்டம் வரும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 3 weeks ago
வடக்கில் சனத்தொகை வீழ்ச்சிக்கு காரணங்களாவன: தமிழ் மக்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கலவரங்கள், பொருளியல் பொருளாதார சேதம், விவசாய நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, சொந்த நிலத்திலிருந்து விரட்டல், தேவையற்ற கைதுகள், பயமுறுத்தல்கள், போர், இநவழிப்பு, விதவைகள், அனாதைகள் அதிகரிப்பு, தமிழ் மக்கள் திட்டமிட்ட புறக்கணிப்பு, அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், தேவையற்ற கைதுகள் போன்றனவே முக்கிய காரணங்கள்.