Aggregator

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2 months 2 weeks ago
ஏறும்போதும், இறங்கும்போதும் மட்டும்தானா பேயாட்டம் ஆடுது. ஏறமுன்னம் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விடயம்தான். 😁

"மூன்று கவிதைகள் / 05"

2 months 2 weeks ago
"மூன்று கவிதைகள் / 05" 'அக்கினியானவளே' செம்மணியில் உன்னைச் சிதைத்தவர்கள் யாரோ செல்லம் கொட்டிய என் தங்கையே! செவ்வாய் திறந்து சொல்ல மாட்டியோ செந்நெல் வயலில் புதைத்தவர் எவரோ செங்கோல் மடிந்த நாள் இதுவோ? அகன்ற மண் எல்லாம் எலும்புக்கூடுகள் அண்ணன் அங்கே காத்துக் கிடக்கிறானே! அன்பு போதித்த புத்தரும் மௌனம் அறிவு தொலைத்த படையினர் பிடியில் அழிந்ததோ கற்பு என் அக்கினியானவளே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ......................................................... 'சீவி முடித்து சிங்காரித்து' சீவி முடித்து சிங்காரித்து கண்ணே, சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு, சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ! சித்திரம் சொல்லாத வனிதை நீயே, சீதை காணாத காதல் தருவேன்! கூவி அழைக்குது சிட்டுக் குருவி, தாவிப் போகுது அன்ன நடையில், தேவி அங்கே சுந்தரியைக் காண்கிறேன்! ஆவி பொருள் உடல் அனைத்தும், தூவி உன்னை மடியில் தாலாட்டுவேன்!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .......................................... 'ஒரு மழைகால இரவு' ஒரு மழைகால இரவு இருளுதே பருவ ஆசை மனதில் தூறுதே இரு கைகள் ஏங்கித் தேடுதே கரு விழியாளே கருணை காட்டாயோ? ஆறு பாயும் பேராதனை வளாகத்தில் ஆறுதல் கொடுக்கும் அழகு மலரே இறுமாப்பு உனக்கு இன்னும் வேண்டுமா வெறுப்பு அகற்றி அருகில் வாராயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் https://www.facebook.com/share/p/1CZWhQNpBP/?mibextid=wwXIfr

"மூன்று கவிதைகள் / 05"

2 months 2 weeks ago

"மூன்று கவிதைகள் / 05"

'அக்கினியானவளே'

செம்மணியில் உன்னைச் சிதைத்தவர்கள் யாரோ

செல்லம் கொட்டிய என் தங்கையே!

செவ்வாய் திறந்து சொல்ல மாட்டியோ

செந்நெல் வயலில் புதைத்தவர் எவரோ

செங்கோல் மடிந்த நாள் இதுவோ?

அகன்ற மண் எல்லாம் எலும்புக்கூடுகள்

அண்ணன் அங்கே காத்துக் கிடக்கிறானே!

அன்பு போதித்த புத்தரும் மௌனம்

அறிவு தொலைத்த படையினர் பிடியில்

அழிந்ததோ கற்பு என் அக்கினியானவளே?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

.........................................................

'சீவி முடித்து சிங்காரித்து'

சீவி முடித்து சிங்காரித்து கண்ணே,

சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு,

சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ!

சித்திரம் சொல்லாத வனிதை நீயே,

சீதை காணாத காதல் தருவேன்!

கூவி அழைக்குது சிட்டுக் குருவி,

தாவிப் போகுது அன்ன நடையில்,

தேவி அங்கே சுந்தரியைக் காண்கிறேன்!

ஆவி பொருள் உடல் அனைத்தும்,

தூவி உன்னை மடியில் தாலாட்டுவேன்!!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

..........................................

'ஒரு மழைகால இரவு'

ஒரு மழைகால இரவு இருளுதே

பருவ ஆசை மனதில் தூறுதே

இரு கைகள் ஏங்கித் தேடுதே

கரு விழியாளே கருணை காட்டாயோ?

ஆறு பாயும் பேராதனை வளாகத்தில்

ஆறுதல் கொடுக்கும் அழகு மலரே

இறுமாப்பு உனக்கு இன்னும் வேண்டுமா

வெறுப்பு அகற்றி அருகில் வாராயோ?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

https://www.facebook.com/share/p/1CZWhQNpBP/?mibextid=wwXIfr

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு : வெள்ளை மாளிகை

2 months 2 weeks ago
இந்தியாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பானுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக எவ்வளவு கூத்தாடினார்கள். அமெரிக்காவை குளிரவைக்கவே இன்னமும் பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளார்கள். அமெரிக்காவிடம் வேண்டிக்கட்டிக் கொண்டதன் பின்பே கண் விழிக்கிறார்கள். இதிலிருந்து மீழ்வதற்கு சில காலங்கள் எடுக்கலாம்.

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2 months 2 weeks ago
விமான நிலையத்திற்கு செல்லும் போது பார்த்தேன் எம் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் வாழை தோட்டம் செய்கின்றனர், பார்க்கவே மனம் கொதித்தது அதை பார்க்கும் அந்த காணியின் சொந்த காரனுக்கு எவ்வளவு வயிறு எரியும் விமான நிலையத்தில் சொல்லிக்கொள்ளும்படியா வசதிகள் எதுவுமே இல்லை, சுங்கம் என்று பேருக்கு 2 மேசையை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள் , ஆனால் விமானங்கள் நிரம்பியபடியே தான் பயணிக்கின்றன , சின்ன விமானம் இறங்கும் போதும் ஏறும் போதும் பேயாட்டம் ஆடுது வயிறு கலங்கும் இப்பிடியான விமானத்தில் ஏறி பழக்கம் இல்லாவிடில்

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு : வெள்ளை மாளிகை

2 months 2 weeks ago
இதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கின் முரண்நகைக்கிடமான முயற்சி, ஒரு புறம் போருக்கு மஸ்தியஸ்தம் செய்யும் நடுநிலை என காட்டிக்கொண்டு, மறு புறம் ஒரு தரப்பிற்கெதிராக பாதகமான முறையில் பக்கசார்பாக இயங்குவது. ஒரு தரப்புக்கு ஆயுத உளவு தகவல்களை வழங்கிக்கொண்டு மறுப்புறத்திற்கு பொருளாதார தடை விதிக்கும் நடுநிலை இது. ஐரோப்பிய நாடுகள் இரஸ்சியாவின் ஆக்கிரமிப்பு தவறு என்பதனை எதிர்ப்பதற்காக போரிடுவதாக காட்டிக்கொள்ளும் நாடுகள் இரஸ்சியா 2021 பிற்பகுதியில் இருந்து 2022 உக்கிரேன் மீது அதன் நடவடிக்கையினை ஆரம்பிக்கும் வரையில் நேட்டோவிடமிருந்து தமக்கு பாதுகாப்ப்பு உறுதி வேண்டும் என கேட்ட போது அதனை மறுத்தவர்களின் உள்நோக்கம் இரஸ்சியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலை தொடர்வதே எனும் நிலைப்பாடாகும். இந்த நிலை இருக்கும் வரை இரஸ்சியாவின் அழிவு உறுதிப்படுத்தப்படும் வரை போர் தொடரும். இவ்வளவு அழிவின் பின்னராவது ஐரோப்பிய தலைவர்கள் நேட்டோவின் பிரசன்னம் ஏதோ ஒரு வகையில் இரஸ்சிய எல்லைக்கு நீடிக்க வேண்டும் எனும் முயற்சியில் உலகினை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லாமல் இருக்க முயற்சிக்கவேண்டும். இந்த போருக்கும் அழிவிற்கும் காரணம் மேற்கும்தான்.

உப்பு விலை குறைந்தது

2 months 2 weeks ago
ரம்புடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த பெருவெற்றி கிடைத்துள்ளது....அடுத்து பழப்புளி விலை 5 ரூபாவால் குறைக்க முயற்சி எடுக்கப்படும்

நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

2 months 2 weeks ago
ஜெர்மனியில் நடந்த மக்கள் சந்திப்பில் இது வலியுறுத்தப் பட்டதாம் ...இனி ஜெர்மன்காரர் என் .பி.பி பக்கம் ...சிறியர் ..சாமியர் நீங்கள் என்ன சொல்லுறியள்🙃

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2 months 2 weeks ago
சர்வதேச விமானநிலையம் எப்பவருமோ தெரியாது....இனி உங்கள் காணிகள் விடமுடியாது..என்பதே என் கருத்து..

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர்

2 months 2 weeks ago
(பணக்காரக் )கடவுளுக்கு மேலும் பணமா ? அழியாத செல்வம் கல்வி அதை முன்னெடுக்கு நேர்மையான (அகரம் ) போன்ற கல்வி நிறுவங்களுக்கு கொடுத்தால் பிள்ளைகள் பயன்பெறுவர். படிக்க விருப்பு இருந்தும் எத்தனயோ குழந்தைகள் வசதி வாய்ப்பு இல்லாமல் வாழ் கிறார்கள்

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

2 months 2 weeks ago
அந்தளவுக்கு மண்டை தேவையற்றது. மனிதாபிமானம் என்பது உயிர் சார்ந்த சிந்தனை. ஒருவனை எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவனது குடும்பத்தையே அழிக்க முடியாது.

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

2 months 2 weeks ago
மேதகு பிரபாகரன் அவர்களின் ஆட்சியின்போது தமிழீழத்தில் அவர் காற்றாலையை நிறுவியதான செய்திஒன்று வந்து வாசித்ததான நினைவு வருகிறது.😇 அது இன்று இல்லை. அரசபடை அதனை அழித்துவிட்டதா??

முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?

2 months 2 weeks ago
ஏராளன்… ஏற்கெனவே, சருமத்திற்கு பூசுகின்ற கிறீம் வகைகள் சிலவற்றை தலைமுடியில் இருந்துதான் தயாரிக்கின்றார்களாம். திருப்பதி, பழனி போன்ற கோவில்களில்… பக்தர்கள் மொட்டை அடிக்கும் முடிகள் எல்லாம் தொன் கணக்கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. சில சொக்லேட்டுக்களில் கூட முடி கலந்துதான் தயாரிப்பு வேலை நடக்கின்றதாம்.

முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?

2 months 2 weeks ago
அண்ணை அவசரப்படாதேயுங்க, இப்ப ஆய்வு நடந்துகொண்டு இருக்காம்! எதிர்காலத்தில் தான் வரும்போல.

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2 months 2 weeks ago
20 AUG, 2025 | 12:54 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் 27 / 2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நாளாந்தம் இரண்டு விமான சேவைகள் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து இடம்பெறுவதுடன், அந்த விமான சேவைகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஜுலை வரையில் யாழப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 140 விமானங்கள், 2021 ம் ஆண்டில் 32 விமானங்கள், 2022ம் ஆண்டில் 383 விமானங்கள், 2023 ம் ஆண்டில் 864 விமானங்கள், 2024 ம் ஆண்டில் 1156 விமானங்கள் வந்து சென்றுள்ளதுடன், 2025 ஜுலை 31ஆம் ஆண்டு வரையில் 752 விமானங்கள் வருகை தந்துள்ளன. அத்துடன் இந்த விமானங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 3491 பயணிகளும் 2021ஆம் ஆண்டில் 110 பயணிகளும், 2022ஆம் ஆண்டில் 881 பயணிகளும், 2023ஆம் ஆண்டில் 29,717 பயணிகளும் 2024ஆம் ஆண்டில் 40,680 பயணிகளும், 2025ஆம் ஆண்டில் ஜுலை வரையில் 31,917 பயணிகளும் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர். இந்த சிறியளவிலான விமானங்களில் குறிப்பிட்டளவிலான பயணிகள் ஆசனங்கள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க வசதிகள் வழங்கப்படுகின்றன. இதேவேளை 2021ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தினால் லாபம் இருக்கவில்லை. 41 மில்லியன் ரூபா நஷ்டம் இருந்தது. 2022இல் 5 மில்லியன் வருமானம் கிடைத்தாலும் 82 மில்லியன் ரூபா செயற்பாட்டு நஷ்டமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 152 மில்லியன் ரூபா இலாபம் இருந்தது. 2024இல் 286 மில்லியன் ரூபா வருமானமும், செயற்பாட்டு லாபமாக 76 மில்லியன் ரூபாவும் இருந்தது. அத்துடன் 2025 ஜுலை வரையில் 197 மில்லியன் ரூபா வருமானமும் செயற்பாட்டு லாபமாக 67 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இலங்கை விமான சேவைகள், விமான நிலையங்கள் நிறுவனத்தை சேர்ந்த 76 பேரும், சுங்கம், வெளிநாட்டு சேவைகள், சுற்றுலாத்துறை, பொலிஸ் உள்ளிட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த 182 பேரும் பணியாற்றுகின்றனர். இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பெரியளவிலான விமானங்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் பெரியளவிலான விமான ஓடுபாதை, விமான நுழைவு பகுதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி மற்றும் பயணிகள் பகுதி உள்ளிட்ட நிர்மாணங்களுக்காக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலதிக காணிகளையும் கையகப்படுத்த வேண்டிவரும். இங்கு ஆய்வுகளை நடத்தி அது தொடர்பான அறிக்கைகளை பெற்றே அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அங்கே தற்போது பயணிகளை வரவேற்க, வழியனுப்ப செல்லும் உறவினர்களுக்காக அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு தற்காலிக டென்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும் நிரந்த நிர்மானமொன்றை வரும் மாதங்களில் அதனை செய்வோம். நிச்சயமாக சர்வதேச விமான நிலையமாக யாழ். விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. அதனை வணிக திட்டங்களுடனேயே செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். கட்டம் கட்டமாக பெரிய விமான நிலையமாக மாற்ற வேண்டும். மத்தள விமான நிலையம் பெரிய விமானங்களை தரையிறக்ககூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அதனை போன்று யாழ். விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும். ஆனால் முறையான வணிக திட்டமிடல்கள் இன்றி அதனை செய்தால் அது தோல்வியடையும். இதனால் கட்டம் கட்டமாக நாங்கள் அதனை அபிவிருத்தி செய்வோம். நல்ல நிலைக்கு தற்போது விமான நிலையம் செல்கின்றது. இந்நிலையில் யாழ். விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. ஆனால் தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும், இதனை மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/222928

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2 months 2 weeks ago

20 AUG, 2025 | 12:54 PM

image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என  துறைமுகம்  மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் 27 / 2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது,

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நாளாந்தம்  இரண்டு விமான சேவைகள் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து இடம்பெறுவதுடன், அந்த விமான சேவைகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஜுலை வரையில் யாழப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 140 விமானங்கள், 2021 ம் ஆண்டில்  32 விமானங்கள், 2022ம் ஆண்டில்   383 விமானங்கள்,  2023 ம் ஆண்டில்   864 விமானங்கள், 2024 ம் ஆண்டில்   1156 விமானங்கள் வந்து சென்றுள்ளதுடன், 2025 ஜுலை 31ஆம் ஆண்டு வரையில் 752 விமானங்கள் வருகை தந்துள்ளன.

அத்துடன் இந்த விமானங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 3491 பயணிகளும் 2021ஆம் ஆண்டில் 110 பயணிகளும்,  2022ஆம் ஆண்டில் 881 பயணிகளும்,  2023ஆம் ஆண்டில் 29,717 பயணிகளும் 2024ஆம் ஆண்டில் 40,680 பயணிகளும், 2025ஆம் ஆண்டில் ஜுலை வரையில் 31,917 பயணிகளும் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர்.

இந்த  சிறியளவிலான விமானங்களில் குறிப்பிட்டளவிலான பயணிகள் ஆசனங்கள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதேவேளை 2021ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தினால் லாபம் இருக்கவில்லை. 41 மில்லியன் ரூபா நஷ்டம் இருந்தது. 2022இல் 5 மில்லியன் வருமானம் கிடைத்தாலும் 82 மில்லியன் ரூபா செயற்பாட்டு நஷ்டமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 152 மில்லியன் ரூபா இலாபம் இருந்தது.   

2024இல் 286 மில்லியன் ரூபா வருமானமும், செயற்பாட்டு லாபமாக 76 மில்லியன் ரூபாவும் இருந்தது. அத்துடன் 2025 ஜுலை வரையில் 197 மில்லியன் ரூபா வருமானமும் செயற்பாட்டு லாபமாக 67 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் இலங்கை விமான சேவைகள், விமான நிலையங்கள் நிறுவனத்தை சேர்ந்த 76 பேரும், சுங்கம், வெளிநாட்டு சேவைகள், சுற்றுலாத்துறை, பொலிஸ் உள்ளிட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த 182 பேரும் பணியாற்றுகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பெரியளவிலான விமானங்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் பெரியளவிலான விமான ஓடுபாதை, விமான நுழைவு பகுதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி மற்றும் பயணிகள் பகுதி உள்ளிட்ட நிர்மாணங்களுக்காக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலதிக காணிகளையும் கையகப்படுத்த வேண்டிவரும். இங்கு ஆய்வுகளை நடத்தி அது தொடர்பான அறிக்கைகளை பெற்றே அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அங்கே தற்போது பயணிகளை வரவேற்க, வழியனுப்ப செல்லும் உறவினர்களுக்காக அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அங்கு தற்காலிக டென்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும் நிரந்த நிர்மானமொன்றை வரும் மாதங்களில் அதனை செய்வோம். நிச்சயமாக சர்வதேச விமான நிலையமாக யாழ். விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்  என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. அதனை வணிக திட்டங்களுடனேயே செய்ய வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். கட்டம் கட்டமாக பெரிய விமான நிலையமாக மாற்ற வேண்டும். மத்தள விமான நிலையம் பெரிய விமானங்களை தரையிறக்ககூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. 

அதனை போன்று யாழ். விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும். ஆனால் முறையான வணிக திட்டமிடல்கள் இன்றி அதனை செய்தால் அது தோல்வியடையும். இதனால் கட்டம் கட்டமாக நாங்கள் அதனை அபிவிருத்தி செய்வோம். நல்ல நிலைக்கு தற்போது விமான நிலையம் செல்கின்றது. 

இந்நிலையில் யாழ். விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. ஆனால் தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும், இதனை மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/222928