Aggregator

NPP + தமிழ் பேசும் கட்சிகள்-பொறுப்பும் கூட்டுப் பொறுப்பும் — கருணாகரன் —

2 months 2 weeks ago

NPP + தமிழ் பேசும் கட்சிகள்-பொறுப்பும் கூட்டுப் பொறுப்பும்

August 20, 2025

— கருணாகரன் —

‘வரலாற்றில் ஒரு மாற்றுத் தரப்பு‘என்ற அறிவிப்போடும் அடையாளத்தோடும் அதிகாரத்தில் – ஆட்சியில் இருக்கிறது NPP. 

அது மாற்றுத் தரப்பா, இல்லையா? 

அது பிரகடனப்படுத்தியதைப் போலமுறைமை மாற்றத்தை (System change) மெய்யாகவே நடைமுறைப்படுத்துகிறதா? 

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாற்றங்களை நிச்சயமாகச்  செய்யுமா? செய்யாதா? 

NPP சுயாதீனமாக இயங்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது அதை JVP கட்டுப்படுத்தித் தன்னுடையபிடியில் வைத்திருக்கிறதா? 

அல்லது NPP யும் ஏனைய ஆட்சியாளர்களைப்போலத்தான்இயங்குகின்றதா; சிந்திக்கின்றதா? அதை மீறிச்செயற்படுமா? என்ற சந்தேகங்கள், விமர்சனங்கள், விவாதங்கள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு. 

ஆனாலும் ஆட்சியில் (அதிகாரத்தில்) பெரும்பான்மை பலத்தோடு NPP யே இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளவேண்டிய – மறுக்க முடியாத – உண்மை. இந்த உண்மையிலிருந்தே நாம் விடயங்களை அணுக வேண்டும். 

இந்த உண்மையை ஏற்றுக்கொண்டபடியால்தான் இந்தியா பல வழிகளிலும் NPP அரசாங்கத்தோடு ஒத்துழைக்கிறது. அநுர குமார திசநாயக்கவுக்கு புதுடெல்லி அளித்த உற்சாகமான வரவேற்பிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடியும். 

இந்தியா மட்டுமல்ல, சீனா, மேற்குலக நாடுகள், அரபுதேசங்கள் எல்லாம் NPP அரசாங்கத்துடன் சீரானஉறவையே கொண்டிருக்கின்றன. IMF, ADB என சர்வதேச நிதி நிறுவனங்களும் UN போன்ற சர்வதேச அமைப்புகளும் NPP ஆட்சியுடன் இணைந்தே பயணிக்கின்றன.

விருப்பமோ விருப்பமில்லையோ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புத்தான் ஆட்சியிலிருக்கும். அந்தத் தரப்புடன்தான் தொடர்பு கொள்ள முடியும். அதனோடு இணைந்தே எதையும் செய்ய முடியும்.

பெரும்பான்மை மக்கள் (இந்தப்பெரும்பான்மை வேறு. சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ்பேசும் மக்களிலும் கணிசமானவர்கள்) NPP யையே ஆட்சியமைப்பதற்குத் தெரிவு செய்துள்ளனர். ஆகவே அந்த மக்களுடைய தெரிவின் அடிப்படையிலே, அதற்கு மதிப்பளித்தே இந்தத் தரப்புகள் எல்லாம் NPP ஆட்சியுடன் தொடர்புறுகின்றன; தம்முடைய வேலைகளைச் செய்கின்றன. இதைத் தவிர்க்க  முடியாது. 

இங்கே இந்தத் தரப்புகள் கவனத்திற் கொள்வது, தம்முடைய தொடர்பைப் பேணுவதையும் தம்முடைய வேலைகளைச் செய்வதையும் பற்றியே. 

இதற்காக NPP அரசாங்கத்தை – ஆட்சியிலிருக்கும் தரப்பை -எப்படிக் கையாள்வது என்பதையே சிந்திக்கின்றன. அதற்கப்பால் எதைப்பற்றியும் அவை சிந்திக்கவில்லை. 

ஆனால், தமிழ் பேசும் தரப்புகளோ தமக்கு முன்னே உள்ள துலக்கமான உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளன. அல்லது அதை மறுக்கின்றன. அதனால் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் மாறாகவே சிந்திக்கின்றன; செயற்படுகின்றன.

என்பதால்தான் NPP ஐ எதிர்ச்சக்தியாகவே பிரகடனப்படுத்தி வைத்துக்கொண்டு, அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், இதற்கு முன்னிருந்த இனவாதத் தரப்புகளான UNP, SLFP, SLPP போன்றவற்றோடு இணங்கியும் பிணங்கியும் உறவைக் கொண்ட கட்சிகள், NPP யோடு மட்டும் விலக்கம் கொள்கின்றன. ஒப்பீட்டளவில் UNP, SLFP, SLPP ஆகியவற்றை விட NPP இனவாதக் கட்சியல்ல. மட்டுமல்ல, முன்றேற்றச் சிந்தனைகளையும் ஊழல் எதிர்ப்பையும் அதிகாரக் குறைப்பையும் கொண்ட சக்தி. சுருக்கமாகச் சொன்னால், மற்றவற்றை விட நெருக்கம் கொள்ளக்கூடிய தரப்பு – சக்தி. என்பதால்தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் NPP க்கு தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளனர். சிங்கள மக்களும் கூட மாற்றத்தைக் குறித்த நம்பிக்கையை NPP மீதே வைத்துள்ளனர். என்பதால்தான் அவர்கள் NPP க்குப் பேராதரவை வழங்கினர்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், மக்களின் உணர்வுக்கும் தெரிவுக்கும் வெளியே – மாறாக தமிழ், முஸ்லிம், மலைகக் கட்சிகள் நிற்கின்றன. காரணம், இவற்றின் அரசியல் இருப்புக்கு NPP சவாலை உருவாக்கியதே. இதை பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்வந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொண்ட விதமும்  அதற்குப் பின் சபைகளை அமைக்கும்போது இந்தத் தமிழ்பேசும் கட்சிகள் நடந்து கொண்ட முறையும் தெளிவாகவே வெளிப்படுத்தின. 

இதனால் அரசாங்கத்துக்கு (ஆட்சிக்கு) முற்றிலும் வெளியிலேயே தமிழ்பேசும் தரப்புகள் நிற்கின்றன. அரசாங்கத்துக்கு வெளியே என்பதை, ‘அரசாங்கத்தை எந்த நிலையிலும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில்‘ என்றுபொருள் கொள்ள வேண்டும். 

இங்கே ஒரு ஆழமான உண்மையை உணருவது அவசியம். 

சுதந்திர இலங்கையில் முதற்தடவையாக இப்போதுதான் தமிழ்பேசும் தரப்புகள் முற்றாகவே ஆட்சிக்கு வெளியே நிற்கின்றன. இதற்கு முன்பெல்லாம் எப்படியாவது சில கட்சிகள் ஆட்சியில் பங்கேற்கும். அது சரியானதா பிழையானதா என்பதல்ல இங்கே உள்ள விடயம். இங்கே கவனத்திற்குரியது, அப்படிச் சிலகட்சிகளாவது அரசாங்கத்தோடு (ஆட்சித்தரப்போடு) இணைந்து நின்றதால் – பங்கேற்றதால் – அந்தந்தச் சமூகங்கள் முழுச்சுமையிலிருந்து அல்லது முழுமையான நெருக்கடியிலிருந்து தப்பியிருந்தன. 

இப்போது தமிழ்பேசும் தரப்புகள் மொத்தமாக வெளியே – ஆட்சித்தரப்புக்கு எதிராக நிற்பதால், ஒட்டுமொத்தத் தமிழ்பேசும் சமூகங்களின் நலன்களும் உரிமைகளும் கேள்விக்குள்ளாகியுள்ளன.  

NPP எந்தளவுக்கு நியாயத்தோடும்விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்ளுமோ அதைப்பொறுத்தே இந்தச் சமூகங்களின் நலன்களும் உரிமைகளும் பேணப்படும். இதில் NPP யில் உள்ள தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் NPP ஐ ஆதரிக்கும் தமிழ்பேசும் சமூகத்திலுள்ள நபர்களும் ஏதாவது செல்வாக்கைச் செலுத்தினால் சற்றுக் கூடுதலாக ஏதாவது நடக்கலாம். 

ஆனால், அதற்குரிய வல்லமையை அவர்களிடம் காணமுடியவில்லை. ஆகவே தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கட்சிகளும் NPP யுடன் கொள்ளும் தொடர்பும் உறவும் அதைக் கையாளும் முறையுமே இந்தச் சமூகங்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும். 

ஆனால், NPP ஐக் கையாளத்தெரியாமலே – அதற்கான வல்லமை இல்லாமலேயே தமிழ்பேசும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உள்ளன. (இதே நிலையிற்தான் NPP யும் உள்ளது. இதைப்பற்றிப் பின்னர் சற்றுவிரிவாகப் பார்க்கலாம்). 

ஆக, தமக்கு முன்னே உள்ள உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளத் தவறினால் அல்லது புரிந்து கொள்ள முடியாமல் போனால் அது எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். 

இதுவே தமிழரின் அரசியலில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் விடுதலைப்புலிகள் பகைத்துக்கொண்டதும் இலங்கை அரசுடன் தமிழ்த்தேசியவாதக் கட்சிகள்   தொடர்ச்சியாகவே எதிர்ப்பு அரசியலை மேற்கொள்வதும் இவ்வாறான கையாள்கையின் தவறுகளாலேயே. 

“இலங்கையின் ஆட்சியாளர்கள் இனவாதத்துக்கு அப்பால் எப்போது சிந்தித்தனர்? இனவாதத்துக்கு வெளியே வருவதற்கு யார் தயாராக இருந்தனர்? அப்படி யாராவது வந்திருந்தால் அதை வரவேற்றிருப்போமே!” என்று யாரும் இதற்குப் பதில் அளிக்கக் கூடும். 

இலங்கையின் சிக்கலான இனத்துவ அரசியற் சூழலில், இனவாதமும் மதவாதமும் பின்னிப் பிணைந்திருக்கும் ஆட்சி முறையில், இந்தியாவும் தமிழ்நாடும் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆகவே தமிழர்களை விட தாம் சிறுபான்மையினர் என்று சிந்திக்கும் தாழ்வுணர்ச்சியைக் கொண்ட சிங்களத் தரப்பிடமிருந்து முழு நிறைவான அதிகாரப் பகிர்வை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கலாம். 

அரசியல் யதார்த்தத்தின்படி அந்த நியாயத்தை படிப்படியாகவே உணரச் செய்ய முடியும். படிப்படியாகவே வென்றெடுக்க முடியும். அதற்கு முடிவற்ற அரசியல் வேலைத்திட்டங்களும் கூர்மையான நுண்திறனும் வலிமையான உத்திகளும் உச்ச நிதானமும் தேவை. முகப்புத்தகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அள்ளிச் சொரியும் குப்பைகளால் அதைச் செய்யவே முடியாது. 

அரசியலில் ‘கையாள்கை‘ என்ற சொல்லை Handling, Diplomacy, Strategy என்றே கொள்ளவேண்டும். இவை அனைத்தும் கலந்ததாகவே ‘கையாள்கை‘யின் செயற்பாட்டுத் தன்மை இருக்கும்.

தமிழரின் அரசியலில் ‘கையாள்கை‘ என்பது படுதோல்வியான விசயம். இப்பொழுது இந்தச் சுழிக்குள் மலையக, முஸ்லிம் கட்சிகளும் சிக்கியுள்ளன. இதற்குக்காரணம், தேசியம் (Nationalism) என்பதை இவை தவறாகப் புரிந்துகொண்டு, அதை இனவாதமாக(Racism) மடைமாற்றம்(Metamorphosis) செய்திருப்பதேயாகும். 

இந்தத் தவறை நீண்டகாலமாவே செய்தது தமிழ்த்தரப்பே. பின்னாளில் இதில்  முஸ்லிம், மலையகச் சக்திகளும் இணைந்து கொண்டன. என்பதால்தான் இவற்றினால் அரசோடு பேசவே முடியாதிருக்கிறது. இதனால் இப்பொழுது அனைத்தும் எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

இதை அந்தக் கட்சியின் தலைவர்கள் மறுக்கலாம். ஆனால், உண்மை இதுதான். காலம் கடந்து இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். 

இங்கே இன்னொரு கடினமான – அவசியமான உண்மையைக் கவனிக்க வேண்டும். 

NPP என்பது தனியே ஆட்சியை நடத்தும் தரப்போ கட்சியோ  மட்டுமல்ல. அது பெரும்பான்மையான மக்களின் தரப்பாகும். முந்திய ஆட்சித்தரப்புகளைப் போலன்றி, தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் செல்வாக்கையும் (ஆதரவையும்) பெற்ற தரப்பாக உள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தில் அது அறுதிப்  பெரும்பான்மையையும்  கொண்டுள்ளது. அதுதான் சர்வதேச சமூகத்தின் பாதியுமாகும். 

எப்படியென்றால், அரசாங்கத்தைக் கடந்து எந்த வெளிச்சக்தியும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது. அப்படித் தலையிட்டாலும் அதற்கு வரையறைகள் உண்டு. ஆகவே NPP யுடன் அல்லது அரசாங்கத்துடன் எதிர்த்து நிற்பதோ விலகி நிற்பதோ சர்வதேச சமூகத்தோடும் விலகி நிற்பதாகவே யதார்த்தத்தில் அமையும். 

அரசாங்கத்தை – ஆட்சித்தரப்பைப் பகைத்துக் கொண்டு வெளிச்சமூகம் அரசுக்குவெளியே நிற்கும் தமிழ்பேசும் தரப்போடு உருப்படியான எந்தவேலைகளையும் செய்யாது. வேண்டுமானால் வழமையைப் போலச்சம்பிரதாயமாக அவ்வப்போது சந்திப்புகளைச் செய்யலாம். ஏதாவது உரையாடலாம். நடைமுறையில் அவற்றினால் எந்தப் பயனும் குறிப்பிடக்கூடிய நன்மைகளும் கிட்டாது. கடந்த காலச் சந்திப்புகளும் படமெடுப்புகளும் இதைத் தெளிவாகவே உணர்த்துகின்றன. 

ஆகவே NPP யின் ஆட்சியை எதிர்த்து நிற்பதென்பது, ஒரேநேரத்தில் அரசாங்கம், வெளிச்சமூகம், பெரும்பான்மை மக்கள் ஆகிய மூன்று தரப்பையும் எதிர்த்து நிற்பதாகும். 

அப்படியென்றால், NPP என்னசெய்தாலும், எப்படிச்செயற்பட்டாலும் அதைக்கண்மூடித்தனமாக – எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்வதா? என்ற கேள்வியை ஒரு குண்டாக யாரும் தூக்கிப் போடலாம். 

NPP இன்னும் பொறுப்புக் கூறும் ஒரு ஆட்சித் தரப்பாகமாறவில்லை என்பது உண்மையே. அப்படிமாறியிருந்தால், ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல, அரசாங்கத்தை நிர்வகிக்கும் – ஆட்சியை நடத்தும் – தரப்பு, மாற்றங்களைச் செய்ய விரும்பும் தரப்பு, மக்கள் நலனை முன்னிறுத்தும் தரப்பு, பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் தரப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண விரும்பும் தரப்பு, ஒட்டுமொத்தமாக ஒரு மாற்றுச்சக்தி என NPP பொதுவாகக்கருதப்படுவதால் தமிழ்பேசும் தரப்புகளை – தமிழ்பேசும்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை NPP இணக்கமான முறையில் அணுகியிருக்கவேண்டும். 

ஏனென்றால் NPP இப்பொழுது ஒரு அணியோ கட்சியோ அல்ல. அது ஆட்சியிலிருக்கும் தரப்பு. ஆட்சியிலிருக்கும் தரப்பு அதற்குரிய பொறுப்போடும் கடமைகளோடும் கண்ணியத்தோடும் இருக்கவேண்டும். அது கட்சி ஒன்றைப்போல விருப்பு வெறுப்பு, லாப நட்டக் கணக்குப் பார்த்துச்செயற்படக் கூடாது. கட்சியாகச்சுருங்கிச் செயற்பட முடியாது. 

ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்றவை அப்படித் தவறாக (கட்சியாக) செயற்பட்டதன் விளைவே கடந்தகாலத் துன்பியல் வரலாறும் இலங்கையின் வீழ்ச்சியுமாகும். 

இந்தப்படிப்பினைகளிலிருந்து NPP உண்மையாகவே எதையாவது படித்திருந்தால், அதுகட்சி என்ற உணர்விலிருந்துவிடுபட்டு, பொறுப்புடைய அரசாங்கத் தரப்பாகவே தான் உள்ளேன் என்று கருதிச்செயற்படும். தன்னுடைய பொறுப்புக் கூறலை, இணக்க நடவடிக்கைளை, மாற்றத்துக்கான செயற்பாடுகளை, தீர்வுக்கான முயற்சிகளை ஆரம்பிக்கும். 

இங்கும் ஒரு வேடிக்கையான – துயரமான உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அதிகாரத்துக்கு வருவதற்கு முன், தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்றவற்றோடு சிநேகபூர்வமான உறவைக் கொண்டிருந்த அநுரவும் NPP யும் ஆட்சி பீடமேறியபின் எதிர்மனோபாவத்தோடு அணுகும் நிலை தோன்றியுள்ளது. அப்படித்தான் ஆட்சி அமைப்பதற்கு முன், நட்புடன் கைகுலுக்கிய மேற்படி தரப்புகள் இப்பொழுது முகத்தை மறுவளமாகத் திருப்பிக் கொண்டுள்ளன. இந்த முட்டாள்தனத்தை (அறியாமையை) என்னவென்று சொல்வது?

ஆகவே இந்த இருளிலிருந்து ஒவ்வொரு தரப்பும் விலகி, ஒளியை நோக்கிப் பயணிக்க வேண்டும். இதில் கூடுதல் பொறுப்பு அரசாங்கத்தை நிர்வகிக்கும் NPP க்கு உண்டு. 

பொறுப்புக் கூறல் என்பது  பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண்பதற்கான, காயங்களை ஆற்றக் கூடிய, எதிர் முகாம்களை இணக்கத்துக்குக் கொண்டுவரக்கூடிய, அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய சிறப்பான ஒரு முன்னாரம்ப நடவடிக்கையாகும். (Accountability is a great first step towards finding solutions to problems, healing wounds, bringing opposing camps to reconciliation, and giving hope to all).

அப்படிப் பொறுப்புக் கூறும் தரப்பாக, பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பும் தரப்பாக NPP  செயற்படுமாக இருந்தால், அது எத்தகைய அரசியல் தவறுகளைத் தமிழ்பேசும் தரப்புகள் விட்டாலும் அதைக் கடந்து, அவற்றைச்சுமுகமாக்க முயன்றிருக்கும். இந்த ஓராண்டு ஆட்சிக்காலத்துள் அனைத்துத் தமிழ்பேசும் தரப்போடும் குறைந்தபட்சம் ஒரு சம்பிரதாயபூர்வமான சந்திப்பையாவது மேற்கொண்டிருக்கும். அதாவது பொருத்தமான அணுகுமுறையின் மூலம் தமிழ்பேசும் தரப்புகளைக் கையாண்டிருக்கும். அதில் வெற்றி கொண்டிருக்கும். ஒரு மாற்றுச் சக்தியானால் அதுவே நிகழ்ந்திருக்க வேண்டியது. 

NPP யின் அழைப்பையும் நல்லெண்ண முயற்சிகளையும் தமிழ்பேசும் தரப்புகள் புறக்கணித்தால் அல்லது தவிர்த்தால் அது NPP க்கே மதிப்பைக் கூட்டும். பதிலாக தமிழ்பேசும் தரப்புகளுக்கு நெருக்கடியை உண்டாக்கும். குறிப்பாக அரசாங்கத்தின் அழைப்பையும் நல்லெண்ணத்தையும் ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பும். 

இப்பொழுது கூட இரண்டுதரப்புக்கும் (அரசாங்கம் {NPP} – தமிழ்பேசும் தரப்புகள்) காலம்கடந்து விடவில்லை. பரஸ்பரம் இரண்டு தரப்பும் சுமுகம் கொள்வதற்கான வழிகளைத்தேடலாம். 

NPP ஏற்றுக்கொள்ளவே முடியாத சக்தி என்றால், ஐ.தே.கவை அல்லது சு.கவை அல்லது பெரமுனவை அல்லது ஐக்கியமக்கள் சக்தியை ஏற்றுக்கொள்ளப்போகிறீர்களா? இவைதானே முன்பு ஆட்சியில் இருந்தன. இவற்றோடு குறைந்தளவிலேனும் உரையாடப்பட்டது. உறவாடப்பட்டது. ஏற்பட்ட விளைவு?

ஐ.தே.க, சு.க, பெரமுன, ஐக்கியமக்கள் சக்தி போன்றவற்றை விட NPP ஆபத்தானதா?

NPP தவறு என்றால் அடுத்ததெரிவு என்ன?

அதைப்போல தமிழ் பேசும் சக்திகளைப் புறக்கணித்துவிட்டு, இந்த நாட்டில் எத்தகைய தீர்வை எட்ட முடியும்? எத்தகைய முன்னேற்றத்தை உருவாக்கலாம்?

இந்த நாட்டில் மாற்றம் வேண்டும் என்றால், அது தனியே NPP யால் மட்டும் நிறைவேறக் கூடியதல்ல. அனைத்துத் தரப்பினதும் அனைத்துச் சமூகங்களினதும் பங்களிப்புடன்தான் ஏற்படக்கூடியது. அதற்கான கதவுகளை (வாசல்களை) திறக்கவேண்டிய பொறுப்பு Responsibility (கடப்பாடு – Obligation) அனைவருக்கும் உண்டு. 

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்

அன்னியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?“

பாரதி பாடல் சொல்கின்ற இந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைச் சமூகங்கள் தங்களுக்கிடையில் இணக்கம் கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணையவில்லை என்றால். இலங்கையில் பன்மைத்தன்மைக்கான இடமில்லை என்றால், அந்திய சக்திகள்(வெளியார்) (The forces of darkness  – outsider)  ஆதிக்கம் செய்யவே வழியேற்படும். அது இலங்கையை வெளியாரிடம் அடிமைப்படுத்துவதாகவே அமையும். 

என்ன செய்யப்போகிறோம்?

https://arangamnews.com/?p=12262

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல - மைத்திரிபால

2 months 2 weeks ago
”4/21 சூத்திரதாரியை எல்லோருக்கும் தெரியும்,ஆனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது” 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார். அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்தவர் என்றும், ஆனால் அவரை அடைய முடியாது என்றும் அவர் கூறினார். இலங்கை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, கொடிய தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் துடித்துக் கொண்டிருந்தாலும், உண்மையை பொதுமக்களுக்கு எளிதில் வெளிப்படுத்த முடியாது என்று கூறினார். “அது எப்படி நடந்தது என்பது பற்றி நான் சிஐடியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளியிட முடியாது. மூளையாகச் செயல்படுபவரைக் கண்டுபிடிக்க அனைவரும் துடிக்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் – அது யார் என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். ஒவ்வொரு அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும், உளவுத்துறைக்கும் தெரியும். மூளையாகச் செயல்படுபவர் எங்கே இருக்கிறார் என்பதை நாம் சொல்ல முடியும் என்றாலும், அவர்களை நாம் எதிர்கொள்ள முடியாது,” என்று சிறிசேன கூறினார். “கடுமையான குற்றங்கள் நடந்துள்ளன – சில வேண்டுமென்றே திட்டமிடப்பட்டன. இந்தத் திட்டங்கள் எனது பெயரை சேற்றில் இழுத்து, எனது அரசாங்கத்தை நாசமாக்கி, எனது கட்சியை அழித்துவிட்டன,” என்று அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி புவிசார் அரசியல் மற்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சமீபத்தில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஒரு புதிய சிந்தனைக் குழுவைத் தொடங்கி வைக்கும் போது கருத்து தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=337732

காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

2 months 2 weeks ago
காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு காசா நகர் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ள தரைவழித் தாக்குதலின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், நகரின் புறநகர் பகுதிகளை ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கான களத்தை அமைப்பதற்காக, செய்தூன் மற்றும் ஜபலியா பகுதிகளில் படைகள் ஏற்கெனவே செயல்பட்டு வருவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நடவடிக்கைகளுக்காக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 மேலதிக வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது களப்பணிக்குத் தேவையான வீரர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான கொடூரமான போரைத் தொடர்வதற்கு ஆதரவாக இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தடையாக இருப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், காசா நகரில் வசிக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் திட்டத்தை அதன் பல நட்பு நாடுகள் கண்டித்துள்ளன. இது “இரண்டு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும். மேலும், நிரந்தரப் போர்ச் சுழற்சியில் இப்பகுதி முழுவதையும் தள்ளிவிடும்” என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை எச்சரித்துள்ளார். இதற்கிடையில், மேலும் அதிகமான மக்கள் இடம்பெயர்வதும், தாக்குதல்கள் தீவிரமடைவதும், காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கான ஏற்கெனவே பேரழிவுகரமான சூழ்நிலையை மோசமாக்கும் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ICRC) தெரிவித்துள்ளது. https://akkinikkunchu.com/?p=337727

காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

2 months 2 weeks ago

காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

gaza-2-770x470.jpg

காசா நகர் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ள தரைவழித் தாக்குதலின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், நகரின் புறநகர் பகுதிகளை ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கான களத்தை அமைப்பதற்காக, செய்தூன் மற்றும் ஜபலியா பகுதிகளில் படைகள் ஏற்கெனவே செயல்பட்டு வருவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 மேலதிக வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது களப்பணிக்குத் தேவையான வீரர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும்.

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான கொடூரமான போரைத் தொடர்வதற்கு ஆதரவாக இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தடையாக இருப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், காசா நகரில் வசிக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் திட்டத்தை அதன் பல நட்பு நாடுகள் கண்டித்துள்ளன. இது “இரண்டு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும். மேலும், நிரந்தரப் போர்ச் சுழற்சியில் இப்பகுதி முழுவதையும் தள்ளிவிடும்” என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், மேலும் அதிகமான மக்கள் இடம்பெயர்வதும், தாக்குதல்கள் தீவிரமடைவதும், காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கான ஏற்கெனவே பேரழிவுகரமான சூழ்நிலையை மோசமாக்கும் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ICRC) தெரிவித்துள்ளது.

https://akkinikkunchu.com/?p=337727

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும்

2 months 2 weeks ago
இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி அன்பாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை அகதிகள் நாடு திரும்பிய போது சட்ட குறைபாடுகளால் நடந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலையடைவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் இலங்கை திரும்பிய போது கைது செய்யப்பட்டமை தொடர்பில் இந்த விவாதத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்கள் இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியிலேயே இந்தியாவுக்கு அகதிகளாக அகதி முகாமுக்கு சென்றுள்ளனர். யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாக செல்வதில்லை. உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும்.தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள். இதன்படி தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் 110க்கும் அதிகளவில் காணப்படும் அகதி முகாம்கள் தொடர்பில் எமது நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இந்த அகதி முகாம்களில் ஒரு இலட்சத்து 10ஆயிரம் பேர் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களில் 28ஆயிரத்து 500 பேர் வரையிலானோர் இலங்கையினதோ இந்தியாவினதோ குடியுரிமை இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர். இதனால் ஜே.வி.பி என்ற வகையில் நானும் இராமலிங்கம் சந்திரசேகரனும் அந்த முகாம்களுக்கு சென்று காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இ ரட்ண சிறி விக்கிரமநாயக்கவின் உதவியுடன் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றி குறித்த 28ஆயிரத்து 500 பேருக்கும் இலங்கை குரியுரிமையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம். இந்நிலையில் இப்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த அகதி முகாம்களில் இருந்தவர்களில் குறைந்தது 6ஆயிரம் பேர் வரையிலானோர் இலங்கை வந்து குடியேறியுள்ளனர். கிளிநொச்சியில் கனகபுரம், பாரதிபுரம் போன்ற இடங்களில் இவ்வாறு குடியேறியவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் காணி மற்றும் மின்சாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளேன். இவ்வாறான நிலைமையில் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் அகதிகள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. அண்மையில் சின்னையா சிவலோகநாதன் என்பவர் பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தோல்வியடைந்த எம்.பியொருவர் பெரும் கோசமெழுப்பி நீதிமன்றத்திற்கும் சென்றார். ஆனால் அதன்பின்னர் நானும், குடிவரவு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி 2 நாட்களில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்படுவது சரியானது அல்ல. இது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல. நாங்கள் அதிகாரிகள் ஊடாகவே நாட்டை நிர்வாகம் செய்கின்றோம். இதனால் அதிகாரிகள் தவறிழைக்கலாம். இதனை அரசாங்கத்தின் செயற்பாடு என்று அரசாங்கதிற்கு சேறு பூச கூடாது. தமிழ் அகதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே இடையூறுகளை ஏற்படுத்துகின்றது என்று காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர். வடக்கில் உள்ள சிலர் இவ்வாறு செய்கின்றனர். பச்சை இனவாதத்தை தமது செயற்பாடாக கொண்டவர்களே அவர்கள். வடக்கில் ராஜபக்‌ஷக்களின் பிம்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களை தமிழ் என்பதனால் பழிவாங்குகின்றது என்று காட்டவே முயற்சிக்கின்றனர். இதேவேளை ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்னுமொரு சம்பவம் நடந்தது. அதாவது ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கை அகதிகளே. இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டம் உள்ளது. அதன்படியே இவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் . இந்த விடயத்தில் நாங்கள் கவலையடைகின்றோம். இவ்வாறு வருபவர்களில் ஒருவர், இருவருக்காவது இவ்வாறு நடக்கலாம். இதற்கான சட்ட ரீதியான காரணங்கள் உள்ளன. ஆனால் இது மாற்ற முடியாத விடயம் அல்ல. இந்த திருத்தங்களை முன்னரே செய்திருக்கலாம். அரசாங்கம் என்ற வகையில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை அன்பாக ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் அவர்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான உதவிகளை வழங்குவோம். அமைச்சர் ஆனந்த விஜேபால புனர்வாழ்வு அதிகாரசபையின் முன்னாள் தலைவராவார். இவர் 5 வருடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் இருந்த முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள சகல வீடுகளுக்கும் சென்றவரே. 2015ஆம் ஆண்டின் பின்னர் வீடுகளுக்கு சென்று படிவங்களை விநியோகித்தவர்களே. இதனால் எந்த வகையிலும் கொள்கை ரீதியில் இவ்வாறு வரும் அகதிகளை தடுத்து வைத்தல் மற்றும் கைது செய்யப் போவதில்லை. இந்நிலையில் ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். குறிப்பிட்ட இரண்டு சம்பங்களை பயன்படுத்தி ஏன் இவ்வாறு இலங்கைக்கு அவர்கள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும். எவ்வாறாயினும் இங்கிருந்து அகதிகளாகியுள்ள எமது மக்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான வசதிகளை வழங்கி அவர்களை பாதுகாத்து இந்நாட்டின் பிரஜைகளாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இந்த விடயத்தில் சட்ட விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து அவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம். இதனால் வேறு அதிகாரிகளால் இழைக்கப்படும் தவறுகளை இனவாத அர்த்தத்தில் பார்க்க வேண்டாம். இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதனால் அநீதிக்கு இலக்காவதாக கூறப்படும் செய்தி முதமைச்சர் கனவில் இருப்பவர்களுக்கு அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பெறுமதியானதாக இருக்கலாம். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்களுக்கு அவ்வாறான எண்ணம் இருக்காது என்று நினைக்கின்றோம். நாங்கள் ஒரே இலங்கையை அமைப்போம். குறைபாடுகளை எங்களுக்கு சுட்க்காட்டுங்கள். ஆனால் இனவாத திட்டங்களுக்கு உதவ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார். https://akkinikkunchu.com/?p=337765

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும்

2 months 2 weeks ago

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும்

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி அன்பாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை அகதிகள் நாடு திரும்பிய போது சட்ட குறைபாடுகளால் நடந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலையடைவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் இலங்கை திரும்பிய போது கைது செய்யப்பட்டமை தொடர்பில் இந்த விவாதத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்கள் இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியிலேயே இந்தியாவுக்கு அகதிகளாக அகதி முகாமுக்கு சென்றுள்ளனர். யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாக செல்வதில்லை. உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும்.தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள்.

இதன்படி தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் 110க்கும் அதிகளவில் காணப்படும் அகதி முகாம்கள் தொடர்பில் எமது நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இந்த அகதி முகாம்களில் ஒரு இலட்சத்து 10ஆயிரம் பேர் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களில் 28ஆயிரத்து 500 பேர் வரையிலானோர் இலங்கையினதோ இந்தியாவினதோ குடியுரிமை இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர்.

இதனால் ஜே.வி.பி என்ற வகையில் நானும் இராமலிங்கம் சந்திரசேகரனும் அந்த முகாம்களுக்கு சென்று காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இ ரட்ண சிறி விக்கிரமநாயக்கவின் உதவியுடன் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றி குறித்த 28ஆயிரத்து 500 பேருக்கும் இலங்கை குரியுரிமையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம்.

இந்நிலையில் இப்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த அகதி முகாம்களில் இருந்தவர்களில் குறைந்தது 6ஆயிரம் பேர் வரையிலானோர் இலங்கை வந்து குடியேறியுள்ளனர். கிளிநொச்சியில் கனகபுரம், பாரதிபுரம் போன்ற இடங்களில் இவ்வாறு குடியேறியவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் காணி மற்றும் மின்சாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளேன்.

இவ்வாறான நிலைமையில் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் அகதிகள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. அண்மையில் சின்னையா சிவலோகநாதன் என்பவர் பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தோல்வியடைந்த எம்.பியொருவர் பெரும் கோசமெழுப்பி நீதிமன்றத்திற்கும் சென்றார். ஆனால் அதன்பின்னர் நானும், குடிவரவு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி 2 நாட்களில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்படுவது சரியானது அல்ல. இது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல. நாங்கள் அதிகாரிகள் ஊடாகவே நாட்டை நிர்வாகம் செய்கின்றோம். இதனால் அதிகாரிகள் தவறிழைக்கலாம். இதனை அரசாங்கத்தின் செயற்பாடு என்று அரசாங்கதிற்கு சேறு பூச கூடாது. தமிழ் அகதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே இடையூறுகளை ஏற்படுத்துகின்றது என்று காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர். வடக்கில் உள்ள சிலர் இவ்வாறு செய்கின்றனர்.

பச்சை இனவாதத்தை தமது செயற்பாடாக கொண்டவர்களே அவர்கள். வடக்கில் ராஜபக்‌ஷக்களின் பிம்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களை தமிழ் என்பதனால் பழிவாங்குகின்றது என்று காட்டவே முயற்சிக்கின்றனர்.

இதேவேளை ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்னுமொரு சம்பவம் நடந்தது. அதாவது ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கை அகதிகளே. இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டம் உள்ளது. அதன்படியே இவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் . இந்த விடயத்தில் நாங்கள் கவலையடைகின்றோம். இவ்வாறு வருபவர்களில் ஒருவர், இருவருக்காவது இவ்வாறு நடக்கலாம். இதற்கான சட்ட ரீதியான காரணங்கள் உள்ளன. ஆனால் இது மாற்ற முடியாத விடயம் அல்ல. இந்த திருத்தங்களை முன்னரே செய்திருக்கலாம்.

அரசாங்கம் என்ற வகையில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை அன்பாக ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் அவர்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான உதவிகளை வழங்குவோம். அமைச்சர் ஆனந்த விஜேபால புனர்வாழ்வு அதிகாரசபையின் முன்னாள் தலைவராவார். இவர் 5 வருடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் இருந்த முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள சகல வீடுகளுக்கும் சென்றவரே. 2015ஆம் ஆண்டின் பின்னர் வீடுகளுக்கு சென்று படிவங்களை விநியோகித்தவர்களே. இதனால் எந்த வகையிலும் கொள்கை ரீதியில் இவ்வாறு வரும் அகதிகளை தடுத்து வைத்தல் மற்றும் கைது செய்யப் போவதில்லை.

இந்நிலையில் ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். குறிப்பிட்ட இரண்டு சம்பங்களை பயன்படுத்தி ஏன் இவ்வாறு இலங்கைக்கு அவர்கள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்.

எவ்வாறாயினும் இங்கிருந்து அகதிகளாகியுள்ள எமது மக்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான வசதிகளை வழங்கி அவர்களை பாதுகாத்து இந்நாட்டின் பிரஜைகளாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இந்த விடயத்தில் சட்ட விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து அவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம். இதனால் வேறு அதிகாரிகளால் இழைக்கப்படும் தவறுகளை இனவாத அர்த்தத்தில் பார்க்க வேண்டாம். இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் என்பதனால் அநீதிக்கு இலக்காவதாக கூறப்படும் செய்தி முதமைச்சர் கனவில் இருப்பவர்களுக்கு அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பெறுமதியானதாக இருக்கலாம். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்களுக்கு அவ்வாறான எண்ணம் இருக்காது என்று நினைக்கின்றோம். நாங்கள் ஒரே இலங்கையை அமைப்போம். குறைபாடுகளை எங்களுக்கு சுட்க்காட்டுங்கள். ஆனால் இனவாத திட்டங்களுக்கு உதவ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

https://akkinikkunchu.com/?p=337765

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை

2 months 2 weeks ago
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை 21 Aug, 2025 | 11:37 AM யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். மாணவர் பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு, பாடசாலைகள் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை உருவாக்குவதற்கும், அது குறித்த ஒரு கருத்தாடலைக் கட்டியெழுப்பவும் பங்களிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு “Clean Sri Lanka” வேலைத்திட்டம் மற்றும் அதன் கருத்தியல் பெறுமதி குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அடையாள ரீதியான பரிசாக பெறுமதியான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோருடன் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/222993

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை

2 months 2 weeks ago

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை

21 Aug, 2025 | 11:37 AM

image

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின்  14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை  மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன.

யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

மாணவர் பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு, பாடசாலைகள் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை உருவாக்குவதற்கும், அது குறித்த ஒரு கருத்தாடலைக் கட்டியெழுப்பவும் பங்களிக்கிறது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு “Clean Sri Lanka”  வேலைத்திட்டம் மற்றும் அதன் கருத்தியல் பெறுமதி குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அடையாள ரீதியான பரிசாக பெறுமதியான  மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோருடன் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/222993

கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு

2 months 2 weeks ago
கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு செய்திகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன் பினை மனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmekrzab80002qpu752l58f74

கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு

2 months 2 weeks ago

கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன் பினை மனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmekrzab80002qpu752l58f74

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

2 months 2 weeks ago
இப்போதுள்ள இள வயதினருக்கு சோம்பேறித்தனம் கூடுதல் ஆகவே தான் நான்கு நாள் வேலை மற்ற நாட்களில் விடுமுறை தேவை என்று எதிர் பார்க்கிறார்கள்.

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2 months 2 weeks ago
எப்பவும் ஜெற் விமானத்தில் பறப்பவர்களுக்கு சிறிய இரட்டை என்ஜின் விமானங்களில் பறப்பது புது அனுபவமாக இருக்கலாம். 😃

கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை!

2 months 2 weeks ago
கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை! adminAugust 20, 2025 கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது வெற்றியடைந்துள்ளது. இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர். அவ் நடமாடும் சேவைகளில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள். மேலும், மேற்படி நடமாடும் சேவைகளில் குறிப்பாக கண் பரிசோதனை, ஆட்பதிவுச் சேவை, மருத்துவ பரிசோதனைச் சேவை, பிறப்பு இறப்பு பதிவுச் சேவை, மோட்டார் வாகன போக்குவரத்து சேவை மற்றும் ஓய்வூதியச் சேவைக்கே அதிக பொது மக்கள் பங்குபற்றினார்கள். பொது மக்களின் மேற்படி சேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடாத்தவுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி சங்கானை பிரதேச செயலகத்திலும், 30 ஆம் திகதி காரைநகர் பிரதேச செயலக த்திலும் மாவட்டச் செயலகத்தினால் நடமாடும் சேவை பிரதேச செயலக ஒத்துழைப்புடன் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும், பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கண் பரிசோதனையில் இனங்காணப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 36 பேருக்கு கண்புரை சிகிச்சை இரண்டு வாரத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளது என மேலும் தெரிவித்தார். அத்துடன் மக்களுக்கான சேவையில் அனைவரதும் ஒத்துழைப்புக்களை வினைத்திறனாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2025/219495/

கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை!

2 months 2 weeks ago

கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை!

adminAugust 20, 2025

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற  விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது  வெற்றியடைந்துள்ளது. இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர்.

அவ் நடமாடும் சேவைகளில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.

மேலும், மேற்படி நடமாடும் சேவைகளில் குறிப்பாக கண் பரிசோதனை, ஆட்பதிவுச் சேவை, மருத்துவ பரிசோதனைச் சேவை, பிறப்பு இறப்பு பதிவுச் சேவை, மோட்டார் வாகன போக்குவரத்து சேவை மற்றும் ஓய்வூதியச் சேவைக்கே அதிக பொது மக்கள் பங்குபற்றினார்கள்.

பொது மக்களின் மேற்படி சேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடாத்தவுள்ளது.

அந்த வகையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி சங்கானை பிரதேச செயலகத்திலும், 30 ஆம் திகதி காரைநகர் பிரதேச செயலக த்திலும் மாவட்டச் செயலகத்தினால் நடமாடும் சேவை பிரதேச செயலக ஒத்துழைப்புடன் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கண் பரிசோதனையில் இனங்காணப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 36 பேருக்கு கண்புரை சிகிச்சை இரண்டு வாரத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளது என மேலும் தெரிவித்தார்.

அத்துடன் மக்களுக்கான சேவையில் அனைவரதும் ஒத்துழைப்புக்களை வினைத்திறனாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

https://globaltamilnews.net/2025/219495/

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு : வெள்ளை மாளிகை

2 months 2 weeks ago
ஆரம்பத்தில் பிறிக்ஸ் பொது நாணய உருவாக்கத்தில் முட்டுக்கட்டை போட்ட இந்தியா, சீனாவின் வகிபாகம் அதிகரிக்கும் என கருதினார்கள், அதே சமயம் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்குபெருமளவில் முதலீடுகளை செய்தார்கள், மறுபுறம் மலிவு விலை எரிபொருளை இரஸ்சியாவிடம் வாங்கிய வண்ணம், ஆனால் அமெரிக்கா பாகிஸ்தான் சார்பு நிலையினை தெளிவாக எடுத்த பின் தற்போது சீனாவுடன் நல்லுறவினை ஏற்படுத்த முனைகிறார்கள். பிறிக்ஸ் நாணய உருவாக்கத்தில் பின்னடிப்பு செய்யாமல் விட்டிருந்தால் தற்போது இடம்பெறப்போகும் பொருளாதார தடையினை எதிர்கொள்வதில் ஓரளவு சிரமம் இல்லாமல் இருந்திருக்கலாம். எவ்வாறு இரஸ்சியா இந்த பொருளாதார தடையினை எதிர்கொள்கிறது என்பதனை அறிந்து கொள்ளும் முயற்சியில் இந்திய வெளியுறவுத்துறை உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வெளியுறவுத்துறையின் தோல்வியாக கருதப்படுகிறது. இரண்டு பெரும் தொழிலதிபர்களுக்காக ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்க செய்கிறார்கள் எனும் அமெரிக்க குற்றசாட்டிற்கு இந்திய எதிர்கட்சி வலுச்சேர்க்கிறது. பொருளாதார தடை சாமானிய மக்களின் மேலே போடப்படு ஒரு அழுத்தம், இந்த உத்தியினை போரை ஏவும் சக்திகள் பயன்படுத்தி வருவதன் நோக்கம் குறித்த நாட்டின் ஆட்சி பீடத்திற்கு ஏற்படுத்தும் அழுத்தம் அதன் மூலம் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியாக மட்டுமே. இது இந்திய ஆளும் கட்சிக்கும் தெரியும், அமெரிக்கா இந்திய ஆளும் கட்சிக்கெதிரான ஆட்சி மாற்றத்திற்கு தாயாராகி வருகிறது போல தெரிகிறது, தற்போதய அமெரிக்க இந்திய வேறுபாடு ஏதோ ஒரு வகையில் இலங்கையிலும், இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகத்தின் தீர்விலும் ஆதிக்கம் செலுத்தலாம் என கருதுகிறேன்.

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு சென்று வெளிவந்த பெண் ஒருவர் சினிமா பாணியில் ஆட்டோவில் கடத்தல்

2 months 2 weeks ago
Published By: VISHNU 21 AUG, 2025 | 03:35 AM மட்டக்களப்பில் இந்திய சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) காலையில் நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இத பற்றி தெரியவருவதாவது; 27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார் அவ்வாறே காதலன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் சில காலங்களுக்கு பின்னர் இந்த பதிவு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பெற்றோருக்கு தெரிய வந்துள்ள நிலையில் குறித்த காதலன் வெளிநாடு சென்றுள்ளார். அதன் பின்னர் வெளிநாடு சென்ற காதலன் பல தீய பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக காதலிக்கு தெரியவந்ததையடுத்து அவருடன் வாழ முடியாது என விவாகரத்து கோரி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து வெளிநாடு சென்றுள்ள காதலனுக்கு பதிலாக அவரது சகோதரியார் நீதிமன்றில் ஆஜராகி வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து காதலன் திரும்ப நாட்டுக்கு வந்து வழக்கிற்கு நீதிமன்றில் ஆஜராகி 3 தவணைக்கு சென்று வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது. இந்நிலையில் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (19) குறித்த வழக்கு விசாரணைக்கு காதலி அவரது சகோதரி மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். அதேவேளை காதலன் அவரது சகோதரி மற்றும் ஒரு குழுவினருடன் சென்று நீதிமன்ற பகுதிக்கு இருவர்களின் உறவினர்களும் வெளியில் காத்து நின்றபோது நீதிமன்றத்துக்குள் காதலியும் காதலனும் சென்று வழக்கு விசாரணையின் பின்னர் அங்கிருந்து திருப்பி வெளியே வந்து வீதிக்கு வரும் போது அங்கு வைத்து காதலியை காதலனின் சகோதரி திடீரென அவரின் வாயை பிடித்து பொத்திக் கொண்டார். இதன்போது காதலன் அவளை இழுத்து சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அங்கிருந்த காதலியின் உறவினர் ஒருவர் உடனடியாக ஆட்டோ மீது பாய்ந்து அவரை காப்பாற்ற முற்பட்ட போது ஆட்டோ அவரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று அங்கு தள்ளி விட்டுவிட்டு இந்திய தமிழ் சினிமா பாணியில் குறித்த காதலியை காதலன் அவரது சகோதரியும் கடத்தி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/222981

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

2 months 2 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES/SKYNESHER படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரம் என்பது உற்பத்தித்திறனை பாதிக்காமல் நல்வாழ்வை மேம்படுத்துவது புதிய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது கட்டுரை தகவல் சோஃபியா பெட்டிஸா, பிபிசி உலக சேவை 20 ஆகஸ்ட் 2025 வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்து, வார இறுதியை கொண்டாடுவோம். அதன் பின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் சோகத்திற்கு தயாராவோம். ஆனால் இந்த நடைமுறை இனியும் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்? நேட்ஷர் ஹியூமன் பிஹேவியர் இதழில் வெளியான பெரிய அளவிலான ஆய்வு ஒன்று வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் மனிதர்களில் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாகக் கூறுகிறது. பாஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள 141 நிறுவனங்களில் சோர்வு, வேலை திருப்தி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட நான்கு முக்கிய குறியீடுகளை கண்காணித்தனர் "ஊழியர்களின் நல்வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம்" என முன்னணி ஆசிரியர் வென் ஃபேன் பிபிசியிடம் தெரிவித்தார். "நிறுவனங்கள் உற்பத்தித்திறன் மற்றும் வருவாயிலும் லாபம் கண்டன. தற்போது ஆய்வு முடிந்த பிறகு 90 சதவிகிதமானோர் நான்கு நாள் வேலை முறையையே தேர்வு செய்கின்றனர்" என்றார். இது குறைந்த வேலைவாரத்தை நல்ல ஆரோக்கியம், மேம்பட்ட வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் ஒட்டுமொத்த மேம்பட்ட வேலை திருப்தியுடன் தொடர்புபடுத்தும் ஆய்வுகளோடு சேர்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று நீண்ட வேலை நேரங்கள் மூளை கட்டமைப்பை மாற்றுவதாக கண்டறிந்துள்ளது, அதன் வரிசையிலே இந்த ஆய்வும் வந்துள்ளது. எனவே இதன் ஆரோக்கிய நலன்கள் வெளிப்படையான பிறகு எது நம்மைத் தடுக்கிறது என்கிற கேள்வியும் உள்ளது. அதிகவேலை மரியாதையின் சின்னமா? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பல கலாச்சாரங்களில் கூடுதல் வேலை என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது சீனா '996' வேலை கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது. அங்கு தொழிலாளர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை செய்கிறார்கள். இந்தியாவில் வளர்ந்து மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊழியர்கள் நீண்ட, ஒழுங்கற்ற நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற இடைவிடாத அழுத்தத்தை அடிக்கடி சந்திக்கின்றனர். "சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நீண்ட வேலை நேரம் என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் பேராசிரியர் ஃபேன். ஜப்பானில் சம்பளமில்லாத கூடுதல் வேலை நேரம் மிகவும் சகஜமானது. எந்த அளவிற்கு என்றால் கூடுதல் வேலையால் ஏற்படும் மரணத்திற்கு 'கரோஷி' என தனி வார்த்தையே உள்ளது. "ஜப்பானில் வேலை என்பது வேலை மட்டுமல்ல, அது ஒரு சமூக சடங்கு போல உள்ளது" என்கிறார் ஹிரோஷி ஓனோ. இவர் ஜப்பானில் உள்ள வேலையிட கலாச்சாரம் மற்றும் தொழிலாளர் சந்தைகளின் வல்லுநர் ஆவார். "மக்கள் சீக்கிரமாக வந்து, வேலையே இல்லையென்றாலும் தங்களின் உறுதிபாட்டை காண்பிப்பதற்கு என்றே தாமதமாக செல்வார்கள். இது தற்காப்பு கலைகள் போன்று செயல்திறன் சார்ந்தது, அதைச் செய்வதற்கு வழி உள்ளது" எனத் தெரிவிக்கிறார் ஹிரோஷி இதனை ஜப்பானின் கூட்டு கலாச்சாரம் எனக் கூறிய ஹிரோஷி தொடர்ந்து விளக்குகிறார். " ஜப்பானில் 'வேலையில் சமாளிப்பவர்களுக்கு (ஃப்ரீ ரைடர்ஸ்) எதிராக ஒரு வலுவான களங்கம் உள்ளது. ஒரு வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்தால் மற்றவர்கள் 'அவர் ஏன் இன்று வேலையைத் தவிர்த்துவிட்டார்' என யோசிப்பார்கள்" என்றார். இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் சட்டப்பூர்வமான பலன்களான பேறுகால விடுப்பு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. "ஆண்கள் ஒரு ஆண்டு வரை விடுப்பு எடுக்கலாம், ஆனால் வெகு சிலர் மட்டுமே அவ்வாறு செய்கின்றனர் - விடுப்பு தங்கள் உடன் வேலை செய்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் என நினைப்பார்கள்" எனத் தெரிவித்தார் ஹிரோஷி. எனினும் இது போன்ற ஆய்வுகள் கூடுதல் வேலை செய்யும் வலுவான பாரம்பரியம் உள்ள இடங்களிலும் பார்வையை மாற்றி வருகிறது என்கிறார் வென் ஃபேன். ஐஸ்லாந்தில் 90 சதவிகிதமானோர் தற்போது குறைவான நேரங்களே வேலை செய்கின்றனர் அல்லது அவர்களின் வேலை நாட்களை குறைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர். தென் ஆப்ரிக்கா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெய்ன், டொமினிகன் குடியரசு, போட்ஸ்வானா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடைபபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சி செய்யத் தொடங்கியது. துபாயிலும் அரசு ஊழியர்களுக்கு இதே போன்றதொரு கோடைக்கால முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியா அக்டோபர் 2025-இல் 67 நிறுவனங்களில் 4.5 நாள் வேலைவாரத்தை பரிசோதிக்க உள்ளது. வேலை என்பது வாழ்க்கையுடன் தொடர்பில்லாமல் உள்ளது பட மூலாதாரம், CITY OF GOLDEN PD படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறிய பிறகு கொலராடோ காவல்துறை ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது. "கொரோனாவுக்குப் பிறகு பலரும் தங்களின் வேலையும் வாழ்க்கையும் தொடர்பில்லாமல் இருப்பதாக உணர்கின்றனர். இந்தப் போக்கை உங்களால் திருப்ப முடியும்" என்கிறார் 4 டே வீக் குளோபல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கேரன் லோவ். அவரின் அமைப்பு பிரேசில், நமிபியா, ஜெர்மனி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் நிறுவனங்கள் நான்கு நாள் முறையை சோதிக்க உதவுகின்றன. அவரின் வெற்றிகரமான முயற்சிகளில் ஒன்று கொலராடோவின் கொல்டன் நகர காவல்துறையில் 250 பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டது தான். நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய பிறகு கூடுதல் வேலை நேர செலவுகள் 80% வரை குறைந்துள்ளது, ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது. "அவசர காலங்களில் வேலை செய்யும், ரோந்து செய்யும் காவல்துறையில் இது வேலை செய்கிறது என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும்" என்கிறார் லோவ். "நாங்கள் 2019-இல் இந்த ஆய்வை தொடங்கியபோது ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டின. தற்போது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இதைச் செய்து வருகின்றன. ஆதாரம் உள்ளது, ஆனால் இல்லாத ஒரு விஷயம் புரிதல் தான்" என்றார். பட மூலாதாரம், KAREN LOWE படக்குறிப்பு, நான்கு நாள் வாரம் என்பது தேவையற்றவைகளை குறைப்பது என்கிறார் கேரன் லோவ் குறைந்த வேலை நாட்கள் என்றால் குறைவான செயல்திறன் ஒரு பொதுவான தவறான புரிதல் இருக்கிறது என்கிறார் லோவ். ஆனால் அதற்கு மாறானது தான் உண்மை என அவர் வாதிடுகிறார். 2019-இல் மைக்ரோசாஃப்ட் ஜப்பானில் நான்கு நாள் வேலை வாரத்தை பரிசோதித்தபோது முந்தைய ஆண்டை காட்டிலும் ஒவ்வொரு ஊழியரிடமும் 40% விற்பனை அதிகரித்தது. எனினும் அதனை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்துவிட்டது. பெருநிறுவனங்களில் பல துறைகள் இருப்பதாலும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நேர மண்டலங்களில் செயல்படுவதாலும் அவை மிகவும் சிக்கலான பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்கிறார் லோவ். ஃபேனின் ஆய்வில் உற்பத்தித்திறன் பெரும்பாலும் தக்கவைப்பது, ஏனென்றால் நிறுவனங்கள் குறைந்த மதிப்புள்ள பணிகளை குறைத்துவிட்டன. தேவையில்லாத மீட்டிங் செல்போன் அழைப்பு அல்லது குறுஞ்செய்தியில் முடிக்கப்பட்டன. மற்றுமொரு தவறான புரிதல் இருப்பதாக கூறுகிறார் லோவ். அது ஊழியர்கள் விடுப்பு எடுத்த நாளுக்கு ஈடு செய்ய கூடுதல் கடினவேலை செய்ய வேண்டும் என்பது தான். "ஐந்து நாள் வேலைகளை நான்கு நாட்களுக்கு சுருக்குவது அல்ல, தேவையற்ற வேலைகளை குறைப்பது தான் முக்கியமானது" என்கிறார். தற்போது ஏஐ மூலம் பல பணிகளும் தானியங்கிமயமாகின்றன. நம்மால் அத்தகைய பணிகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் தெரிவித்தார். ஆரோக்கியத்தில் வேலை ஏற்படுத்தும் பாதிப்பு பட மூலாதாரம், CHARL DAVIDS படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறியது தன் குழுவிற்கு உயிர்நாடியாக உள்ளதாகக் கூறும் சார்ல் டேவிட்ஸ், முடிவுகள் சிறப்பாக இருந்தது என்கிறார். கேப் டவுனில் உள்ள ஸ்டெல்லன்போஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் மையத்தின் இயக்குநரான சார்ல் டேவிட்சுக்கு நான்கு நாள் வாரம் என்பது மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு உயிர்நாடி. அவரின் குழு 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு மனநல உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த மாற்றத்திற்கு முன்பாக பணியாளர்கள் மிகவும் சோர்வாக இருந்ததாகக் கூறுகிறார். "அதிக அளவில் வேலையைத் தவிர்த்துவந்தனர். மக்கள் அடிக்கடி சுகாதார விடுப்பு எடுத்தனர். அவர்கள் சோம்பேறியாக இருந்ததால் அல்ல, அவர்கள் ஆற்றலே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர்" என்றார். தென் ஆப்ரிக்கா உலகின் மிக மன அழுத்தம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் உள்ளது. சார்லின் குழுவில் 56 பேர் உள்ளனர். அவர்கள் அதிர்ச்சியில் உள்ளவர்களை அதிகம் சந்திப்பது, அதிக பணிச்சுமை மற்றும் வளங்கள் பற்றாக்குறை போன்றவற்றால் உணர்வு ரீதியாக மிகவும் சோர்வுற்று இருந்தனர். நிறுவனத் தலைமையின் ஆட்சேபனை மற்றும் தனது சொந்த குழுவின் அவநம்பிக்கை காட்டிலும் அவர் நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சித்தார். "அவர்கள் இது வேலை செய்யாது என நினைத்தார்கள். ஆனால் வேலை செய்தது, அதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தது" எனத் தெரிவித்தார். இந்த முயற்சிக்கு முந்தைய ஆண்டு இவரின் குழு 51 சுகாதார விடுப்பு எடுத்தனர். இந்த முயற்சி அமலில் இருந்த ஆறு மாதத்தில் இது 4 நாட்களாக குறைந்தது. பணியாளர்கள் நல்ல உறக்கம், கூடுதல் உடற்பயிற்சி மற்றும் அவர்களின் பொழுதுபோக்குகளைப் பின் தொடர முடிந்தது. "வார இறுதி நாட்களில் பணி செய்யாமல் அவர்களால் குடும்பத்துடன் செலவிட முடிந்தது" என்கிறார் சார்ல். "அவர்களின் பெரும்பாலானவர்கள் கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி தனியாக வேலை செய்து கூடுதலாக சம்பாதிப்பார்கள் என நான் நினைத்தேன். ஆனால் ஒருவர் மட்டுமே அவ்வாறு செய்தார்" என்றார். ஊழியர்கள் மேம்பட்ட நல்வாழ்வு அவர்களை பணியில் சிறப்பாக்கியது என சார்ல் நம்புகிறார். "அவர்கள் கூடுதல் கவனத்துடனும் அககறையுடனும் இருந்தனர். இது மாணவர்களுக்கு சிறந்த பராமரிப்பு வழங்கக்கூடியதாக மாறியது" அனைவருக்கும் பொருந்தாத ஒற்றை அணுகுமுறை இவ்வகையான மாற்றங்கள் எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை. "ஒருநாட்டின் தொழில்துறை அமைப்பு, அதன் வளர்ச்சி கட்டமும் இதில் முக்கியமாகிறது" என்கிறார் ஃபேன். "ஆப்ரிக்காவில் பல தொழிலாளர்கள் வேளாண்மை, சரங்கம் அல்லது முறைசாரா துறைகளில் உள்ளனர்" என்கிறார் கேரன். "இவர்கள் வேலை நெகிழ்வுத்தன்மை பற்றிய உரையாடலை சிந்திக்கவே முடியாது" என்றும் தெரிவித்தார். குறைந்த திறன் கொண்ட மனிதனால் செய்யப்படும் வேலைகளை மாற்றியமைப்பது கடினமானது. இந்த துறைகளில் உள்ள முதலாளிகள், வேலை நேரத்தை மாற்ற யோசிப்பதை விட பெரும்பாலும் லாபத்தை அதிகரிக்கவே பார்ப்பார்கள்" என்கிறார் லோவ். ஆனால் சில முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஃபேனின் ஆய்வில் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுற்றுலா துறையில் உள்ள நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அதில் சில வெற்றிகளும் உள்ளன. "இவை பல துறைகளில் வேலை செய்ய முடியும். ஆனால் நான்கு நாள் வேலை வாரத்தை நான் ஒரு சர்வரோக நிவாரணி என கூற மாட்டேன்" என்கிறார் அவர். இது அனைவருக்கும் பொருந்தும் ஒற்றைத் தீர்வு கிடையாது என்றும் தெரிவித்தார். இளம் தலைமுறையினர் மாற்றத்தை முன்னெடுத்து வருகின்றனர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள். இந்த மாற்றத்தின் மிகப்பெரிய விசை இளைஞர்களிடமிருந்து வரும் என வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர். 2025-இல் நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய கருத்துகணிப்பில் முதல் முறையாக சம்பளத்தை விட வேலை-வாழ்க்கை சமநிலை தான் மிகவும் முக்கியமானது என்பது தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் பல இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள். "இளம் தலைமுறையிடம் அதிகரித்து வரும் எதிர்ப்பை நாம் பார்க்க முடிகிறது. வேலையின் நோக்கம் மற்றும் வாழ்க்கையிடமிருந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அவர்கள் அடிப்படையிலே வேறான எண்ணங்கள் உள்ளன" என்கிறார் ஃபேன். "கிரேட் ரெசிக்னேஷன் (Great resignation, பேரிடருக்குப் பிறகு கூட்டாக ராஜினாமா செய்வது , கொயட் க்வுட்டிங் (Quiet quitting, வேலையில் என்ன தேவையோ அதை மட்டும் செய்வது) போன்ற இயக்கங்கள் இளம் தொழிலாளர்கள் அவர்களின் அதிருப்தியை பதிவு செய்ய வழிகளைத் தேடி வருவதையும் சோர்வு கலாசாரத்தை நிராகரிப்பதையும் காட்டுகின்றன என்கிறார். காலப்போக்கில் இந்த மாற்றங்கள் வேலையிட விதிமுறைகளை மாற்றி அமைக்கலாம் என்றும் தெரிவித்தார். ஜப்பானில் சில மாற்றங்களைப் பார்ப்பதாகக் கூறுகிறார் ஹிரோஷி ஓனோ. "30% ஜப்பான் ஆண்கள் தற்போது பேறுகால விடுப்பை எடுக்கின்றனர். இது முன்னர் பூஜ்ஜியமாக இருந்தது. இது மக்கள் நல்வாழ்விற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை காட்டுகிறது" என்றார். முதல்முறையாக பணியாளர்கள் உண்மையில் எதிர்க்க தொடங்குகின்றனர் என்பதை ஒப்புக்கொள்ளும் கேரன் வயது குறைய குறைய கூடுதல் மாற்றங்களைக் கேட்கின்றனர் என்றார். அதற்கான உத்வேகம் உருவாகி வருவதாக அவர் நம்புகிறார். "கொரோனா முதல் திருப்புமுனையை வழங்கியது. நான்கு நாள் வாரம் அடுத்த திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz71g1dl7j5o

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

2 months 2 weeks ago

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES/SKYNESHER

படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரம் என்பது உற்பத்தித்திறனை பாதிக்காமல் நல்வாழ்வை மேம்படுத்துவது புதிய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது

கட்டுரை தகவல்

  • சோஃபியா பெட்டிஸா, பிபிசி உலக சேவை

  • 20 ஆகஸ்ட் 2025

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்து, வார இறுதியை கொண்டாடுவோம். அதன் பின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் சோகத்திற்கு தயாராவோம். ஆனால் இந்த நடைமுறை இனியும் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்?

நேட்ஷர் ஹியூமன் பிஹேவியர் இதழில் வெளியான பெரிய அளவிலான ஆய்வு ஒன்று வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் மனிதர்களில் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாகக் கூறுகிறது.

பாஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள 141 நிறுவனங்களில் சோர்வு, வேலை திருப்தி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட நான்கு முக்கிய குறியீடுகளை கண்காணித்தனர்

"ஊழியர்களின் நல்வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம்" என முன்னணி ஆசிரியர் வென் ஃபேன் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நிறுவனங்கள் உற்பத்தித்திறன் மற்றும் வருவாயிலும் லாபம் கண்டன. தற்போது ஆய்வு முடிந்த பிறகு 90 சதவிகிதமானோர் நான்கு நாள் வேலை முறையையே தேர்வு செய்கின்றனர்" என்றார்.

இது குறைந்த வேலைவாரத்தை நல்ல ஆரோக்கியம், மேம்பட்ட வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் ஒட்டுமொத்த மேம்பட்ட வேலை திருப்தியுடன் தொடர்புபடுத்தும் ஆய்வுகளோடு சேர்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று நீண்ட வேலை நேரங்கள் மூளை கட்டமைப்பை மாற்றுவதாக கண்டறிந்துள்ளது, அதன் வரிசையிலே இந்த ஆய்வும் வந்துள்ளது.

எனவே இதன் ஆரோக்கிய நலன்கள் வெளிப்படையான பிறகு எது நம்மைத் தடுக்கிறது என்கிற கேள்வியும் உள்ளது.

அதிகவேலை மரியாதையின் சின்னமா?

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பல கலாச்சாரங்களில் கூடுதல் வேலை என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது

சீனா '996' வேலை கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது. அங்கு தொழிலாளர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை செய்கிறார்கள்.

இந்தியாவில் வளர்ந்து மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊழியர்கள் நீண்ட, ஒழுங்கற்ற நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற இடைவிடாத அழுத்தத்தை அடிக்கடி சந்திக்கின்றனர்.

"சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நீண்ட வேலை நேரம் என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் பேராசிரியர் ஃபேன்.

ஜப்பானில் சம்பளமில்லாத கூடுதல் வேலை நேரம் மிகவும் சகஜமானது. எந்த அளவிற்கு என்றால் கூடுதல் வேலையால் ஏற்படும் மரணத்திற்கு 'கரோஷி' என தனி வார்த்தையே உள்ளது.

"ஜப்பானில் வேலை என்பது வேலை மட்டுமல்ல, அது ஒரு சமூக சடங்கு போல உள்ளது" என்கிறார் ஹிரோஷி ஓனோ. இவர் ஜப்பானில் உள்ள வேலையிட கலாச்சாரம் மற்றும் தொழிலாளர் சந்தைகளின் வல்லுநர் ஆவார்.

"மக்கள் சீக்கிரமாக வந்து, வேலையே இல்லையென்றாலும் தங்களின் உறுதிபாட்டை காண்பிப்பதற்கு என்றே தாமதமாக செல்வார்கள். இது தற்காப்பு கலைகள் போன்று செயல்திறன் சார்ந்தது, அதைச் செய்வதற்கு வழி உள்ளது" எனத் தெரிவிக்கிறார் ஹிரோஷி

இதனை ஜப்பானின் கூட்டு கலாச்சாரம் எனக் கூறிய ஹிரோஷி தொடர்ந்து விளக்குகிறார். " ஜப்பானில் 'வேலையில் சமாளிப்பவர்களுக்கு (ஃப்ரீ ரைடர்ஸ்) எதிராக ஒரு வலுவான களங்கம் உள்ளது. ஒரு வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்தால் மற்றவர்கள் 'அவர் ஏன் இன்று வேலையைத் தவிர்த்துவிட்டார்' என யோசிப்பார்கள்" என்றார்.

இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் சட்டப்பூர்வமான பலன்களான பேறுகால விடுப்பு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.

"ஆண்கள் ஒரு ஆண்டு வரை விடுப்பு எடுக்கலாம், ஆனால் வெகு சிலர் மட்டுமே அவ்வாறு செய்கின்றனர் - விடுப்பு தங்கள் உடன் வேலை செய்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் என நினைப்பார்கள்" எனத் தெரிவித்தார் ஹிரோஷி.

எனினும் இது போன்ற ஆய்வுகள் கூடுதல் வேலை செய்யும் வலுவான பாரம்பரியம் உள்ள இடங்களிலும் பார்வையை மாற்றி வருகிறது என்கிறார் வென் ஃபேன்.

ஐஸ்லாந்தில் 90 சதவிகிதமானோர் தற்போது குறைவான நேரங்களே வேலை செய்கின்றனர் அல்லது அவர்களின் வேலை நாட்களை குறைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர்.

தென் ஆப்ரிக்கா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெய்ன், டொமினிகன் குடியரசு, போட்ஸ்வானா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடைபபெற்று வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சி செய்யத் தொடங்கியது. துபாயிலும் அரசு ஊழியர்களுக்கு இதே போன்றதொரு கோடைக்கால முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியா அக்டோபர் 2025-இல் 67 நிறுவனங்களில் 4.5 நாள் வேலைவாரத்தை பரிசோதிக்க உள்ளது.

வேலை என்பது வாழ்க்கையுடன் தொடர்பில்லாமல் உள்ளது

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாசாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், CITY OF GOLDEN PD

படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறிய பிறகு கொலராடோ காவல்துறை ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது.

"கொரோனாவுக்குப் பிறகு பலரும் தங்களின் வேலையும் வாழ்க்கையும் தொடர்பில்லாமல் இருப்பதாக உணர்கின்றனர். இந்தப் போக்கை உங்களால் திருப்ப முடியும்" என்கிறார் 4 டே வீக் குளோபல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கேரன் லோவ்.

அவரின் அமைப்பு பிரேசில், நமிபியா, ஜெர்மனி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் நிறுவனங்கள் நான்கு நாள் முறையை சோதிக்க உதவுகின்றன.

அவரின் வெற்றிகரமான முயற்சிகளில் ஒன்று கொலராடோவின் கொல்டன் நகர காவல்துறையில் 250 பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டது தான். நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய பிறகு கூடுதல் வேலை நேர செலவுகள் 80% வரை குறைந்துள்ளது, ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது.

"அவசர காலங்களில் வேலை செய்யும், ரோந்து செய்யும் காவல்துறையில் இது வேலை செய்கிறது என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும்" என்கிறார் லோவ்.

"நாங்கள் 2019-இல் இந்த ஆய்வை தொடங்கியபோது ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டின. தற்போது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இதைச் செய்து வருகின்றன. ஆதாரம் உள்ளது, ஆனால் இல்லாத ஒரு விஷயம் புரிதல் தான்" என்றார்.

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், KAREN LOWE

படக்குறிப்பு, நான்கு நாள் வாரம் என்பது தேவையற்றவைகளை குறைப்பது என்கிறார் கேரன் லோவ்

குறைந்த வேலை நாட்கள் என்றால் குறைவான செயல்திறன் ஒரு பொதுவான தவறான புரிதல் இருக்கிறது என்கிறார் லோவ். ஆனால் அதற்கு மாறானது தான் உண்மை என அவர் வாதிடுகிறார்.

2019-இல் மைக்ரோசாஃப்ட் ஜப்பானில் நான்கு நாள் வேலை வாரத்தை பரிசோதித்தபோது முந்தைய ஆண்டை காட்டிலும் ஒவ்வொரு ஊழியரிடமும் 40% விற்பனை அதிகரித்தது. எனினும் அதனை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்துவிட்டது.

பெருநிறுவனங்களில் பல துறைகள் இருப்பதாலும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நேர மண்டலங்களில் செயல்படுவதாலும் அவை மிகவும் சிக்கலான பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்கிறார் லோவ்.

ஃபேனின் ஆய்வில் உற்பத்தித்திறன் பெரும்பாலும் தக்கவைப்பது, ஏனென்றால் நிறுவனங்கள் குறைந்த மதிப்புள்ள பணிகளை குறைத்துவிட்டன. தேவையில்லாத மீட்டிங் செல்போன் அழைப்பு அல்லது குறுஞ்செய்தியில் முடிக்கப்பட்டன.

மற்றுமொரு தவறான புரிதல் இருப்பதாக கூறுகிறார் லோவ். அது ஊழியர்கள் விடுப்பு எடுத்த நாளுக்கு ஈடு செய்ய கூடுதல் கடினவேலை செய்ய வேண்டும் என்பது தான்.

"ஐந்து நாள் வேலைகளை நான்கு நாட்களுக்கு சுருக்குவது அல்ல, தேவையற்ற வேலைகளை குறைப்பது தான் முக்கியமானது" என்கிறார்.

தற்போது ஏஐ மூலம் பல பணிகளும் தானியங்கிமயமாகின்றன. நம்மால் அத்தகைய பணிகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் தெரிவித்தார்.

ஆரோக்கியத்தில் வேலை ஏற்படுத்தும் பாதிப்பு

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், CHARL DAVIDS

படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறியது தன் குழுவிற்கு உயிர்நாடியாக உள்ளதாகக் கூறும் சார்ல் டேவிட்ஸ், முடிவுகள் சிறப்பாக இருந்தது என்கிறார்.

கேப் டவுனில் உள்ள ஸ்டெல்லன்போஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் மையத்தின் இயக்குநரான சார்ல் டேவிட்சுக்கு நான்கு நாள் வாரம் என்பது மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு உயிர்நாடி.

அவரின் குழு 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு மனநல உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த மாற்றத்திற்கு முன்பாக பணியாளர்கள் மிகவும் சோர்வாக இருந்ததாகக் கூறுகிறார்.

"அதிக அளவில் வேலையைத் தவிர்த்துவந்தனர். மக்கள் அடிக்கடி சுகாதார விடுப்பு எடுத்தனர். அவர்கள் சோம்பேறியாக இருந்ததால் அல்ல, அவர்கள் ஆற்றலே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர்" என்றார்.

தென் ஆப்ரிக்கா உலகின் மிக மன அழுத்தம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் உள்ளது.

சார்லின் குழுவில் 56 பேர் உள்ளனர். அவர்கள் அதிர்ச்சியில் உள்ளவர்களை அதிகம் சந்திப்பது, அதிக பணிச்சுமை மற்றும் வளங்கள் பற்றாக்குறை போன்றவற்றால் உணர்வு ரீதியாக மிகவும் சோர்வுற்று இருந்தனர்.

நிறுவனத் தலைமையின் ஆட்சேபனை மற்றும் தனது சொந்த குழுவின் அவநம்பிக்கை காட்டிலும் அவர் நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சித்தார்.

"அவர்கள் இது வேலை செய்யாது என நினைத்தார்கள். ஆனால் வேலை செய்தது, அதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தது" எனத் தெரிவித்தார்.

இந்த முயற்சிக்கு முந்தைய ஆண்டு இவரின் குழு 51 சுகாதார விடுப்பு எடுத்தனர். இந்த முயற்சி அமலில் இருந்த ஆறு மாதத்தில் இது 4 நாட்களாக குறைந்தது.

பணியாளர்கள் நல்ல உறக்கம், கூடுதல் உடற்பயிற்சி மற்றும் அவர்களின் பொழுதுபோக்குகளைப் பின் தொடர முடிந்தது. "வார இறுதி நாட்களில் பணி செய்யாமல் அவர்களால் குடும்பத்துடன் செலவிட முடிந்தது" என்கிறார் சார்ல்.

"அவர்களின் பெரும்பாலானவர்கள் கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி தனியாக வேலை செய்து கூடுதலாக சம்பாதிப்பார்கள் என நான் நினைத்தேன். ஆனால் ஒருவர் மட்டுமே அவ்வாறு செய்தார்" என்றார்.

ஊழியர்கள் மேம்பட்ட நல்வாழ்வு அவர்களை பணியில் சிறப்பாக்கியது என சார்ல் நம்புகிறார்.

"அவர்கள் கூடுதல் கவனத்துடனும் அககறையுடனும் இருந்தனர். இது மாணவர்களுக்கு சிறந்த பராமரிப்பு வழங்கக்கூடியதாக மாறியது"

அனைவருக்கும் பொருந்தாத ஒற்றை அணுகுமுறை

இவ்வகையான மாற்றங்கள் எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை.

"ஒருநாட்டின் தொழில்துறை அமைப்பு, அதன் வளர்ச்சி கட்டமும் இதில் முக்கியமாகிறது" என்கிறார் ஃபேன்.

"ஆப்ரிக்காவில் பல தொழிலாளர்கள் வேளாண்மை, சரங்கம் அல்லது முறைசாரா துறைகளில் உள்ளனர்" என்கிறார் கேரன்.

"இவர்கள் வேலை நெகிழ்வுத்தன்மை பற்றிய உரையாடலை சிந்திக்கவே முடியாது" என்றும் தெரிவித்தார்.

குறைந்த திறன் கொண்ட மனிதனால் செய்யப்படும் வேலைகளை மாற்றியமைப்பது கடினமானது. இந்த துறைகளில் உள்ள முதலாளிகள், வேலை நேரத்தை மாற்ற யோசிப்பதை விட பெரும்பாலும் லாபத்தை அதிகரிக்கவே பார்ப்பார்கள்" என்கிறார் லோவ்.

ஆனால் சில முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

ஃபேனின் ஆய்வில் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுற்றுலா துறையில் உள்ள நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அதில் சில வெற்றிகளும் உள்ளன.

"இவை பல துறைகளில் வேலை செய்ய முடியும். ஆனால் நான்கு நாள் வேலை வாரத்தை நான் ஒரு சர்வரோக நிவாரணி என கூற மாட்டேன்" என்கிறார் அவர். இது அனைவருக்கும் பொருந்தும் ஒற்றைத் தீர்வு கிடையாது என்றும் தெரிவித்தார்.

இளம் தலைமுறையினர் மாற்றத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள்.

இந்த மாற்றத்தின் மிகப்பெரிய விசை இளைஞர்களிடமிருந்து வரும் என வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

2025-இல் நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய கருத்துகணிப்பில் முதல் முறையாக சம்பளத்தை விட வேலை-வாழ்க்கை சமநிலை தான் மிகவும் முக்கியமானது என்பது தெரியவந்துள்ளது.

தென் கொரியாவில் பல இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள்.

"இளம் தலைமுறையிடம் அதிகரித்து வரும் எதிர்ப்பை நாம் பார்க்க முடிகிறது. வேலையின் நோக்கம் மற்றும் வாழ்க்கையிடமிருந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அவர்கள் அடிப்படையிலே வேறான எண்ணங்கள் உள்ளன" என்கிறார் ஃபேன்.

"கிரேட் ரெசிக்னேஷன் (Great resignation, பேரிடருக்குப் பிறகு கூட்டாக ராஜினாமா செய்வது , கொயட் க்வுட்டிங் (Quiet quitting, வேலையில் என்ன தேவையோ அதை மட்டும் செய்வது) போன்ற இயக்கங்கள் இளம் தொழிலாளர்கள் அவர்களின் அதிருப்தியை பதிவு செய்ய வழிகளைத் தேடி வருவதையும் சோர்வு கலாசாரத்தை நிராகரிப்பதையும் காட்டுகின்றன என்கிறார். காலப்போக்கில் இந்த மாற்றங்கள் வேலையிட விதிமுறைகளை மாற்றி அமைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ஜப்பானில் சில மாற்றங்களைப் பார்ப்பதாகக் கூறுகிறார் ஹிரோஷி ஓனோ.

"30% ஜப்பான் ஆண்கள் தற்போது பேறுகால விடுப்பை எடுக்கின்றனர். இது முன்னர் பூஜ்ஜியமாக இருந்தது. இது மக்கள் நல்வாழ்விற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை காட்டுகிறது" என்றார்.

முதல்முறையாக பணியாளர்கள் உண்மையில் எதிர்க்க தொடங்குகின்றனர் என்பதை ஒப்புக்கொள்ளும் கேரன் வயது குறைய குறைய கூடுதல் மாற்றங்களைக் கேட்கின்றனர் என்றார். அதற்கான உத்வேகம் உருவாகி வருவதாக அவர் நம்புகிறார்.

"கொரோனா முதல் திருப்புமுனையை வழங்கியது. நான்கு நாள் வாரம் அடுத்த திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz71g1dl7j5o

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல - மைத்திரிபால

2 months 2 weeks ago
20 AUG, 2025 | 05:45 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் எதிர்காலத்தில் எமக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்பதை பகிரங்கமாகவே கூறுகின்றேன். ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளோடு இறுதியில் இந்தியா எமக்கு பருப்பு வழங்கியது. பருப்பினை வழங்கி ஜே.ஆர்.ஜெயவர்தன தரப்பினரை அச்சுறுத்தி இந்து – லங்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது. இந்து – லங்கா ஒப்பந்தத்தின் பின்னர் என்ன ஆனது? அதனை நடைமுறைப்படுத்துவதற்காக 13ஆவது அரசியமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாகாணசபை சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மாகாணசபைகள் செயற்பாட்டில் இல்லை. 2500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்களுக்கான சம்பளம், வாகனம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை எம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை அல்ல என்பதே உண்மையாகும். தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதாயின் எமது நாட்டுக்குள்ளேயே அதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. ஆனால் இந்து – லங்கா ஒப்பந்தம் காரணமாக இன்று தேசிய ஒற்றுமை எட்ட முடியாத ஒரு இலக்காக மாற்றப்பட்டுள்ளது. வரவு – செலவு திட்டத்தில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கூடியளவு நிதி வீணாக மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலைமை எம்மால் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக எமக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தத்தினால் ஏற்பட்டவையாகும். இவற்றை விட மேலும் பல அநீதிகள் எமக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலமாகவே எனது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டு எனது அரசாங்கம் கலைக்கப்பட்டு கட்சியும் சீரழிக்கப்பட்டது. இது எவ்வாறு இடம்பெற்றது என்பதை நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்திருக்கின்றேன். ஆனால் யாராலும் அதனை வெளியில் கூற முடியாத நிலைமையே காணப்படுகிறது. தற்போது பிரதான சூத்திரதாரியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள். சகல அரசாங்கங்களும், இராணுவத்தினரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள். சூத்திதாரி எங்கிருக்கின்றார் எனக் கூறினாலும், எம்மால் அவர்களுடன் மோத முடியாது. சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர். அவர்களால் போர் இல்லாமல் வாழ முடியாது. அவர்களுக்கு போர் மனநிலை மாத்திரமே இருக்கிறது. உதாரணமாக, நெதன்யாகுவைக் குறிப்பிடலாம். அவர் எப்போதும் யாரையாவது தாக்க முயற்சித்துக் கொண்டே இருப்பார். போருக்குச் செலவிடப்பட்ட பணம் அனைத்தும் உலகின் ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும். 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் சென்றபோது, தெருக்களில் யாசகர்களைப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது, அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். இந்தப் போர் மனநிலைதான் இதற்கு வழிவகுத்தது என்றார். https://www.virakesari.lk/article/222971

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல - மைத்திரிபால

2 months 2 weeks ago

20 AUG, 2025 | 05:45 PM

image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர்,

இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் எதிர்காலத்தில் எமக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்பதை பகிரங்கமாகவே கூறுகின்றேன்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளோடு இறுதியில் இந்தியா எமக்கு பருப்பு வழங்கியது. பருப்பினை வழங்கி ஜே.ஆர்.ஜெயவர்தன தரப்பினரை அச்சுறுத்தி இந்து – லங்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது.

இந்து – லங்கா ஒப்பந்தத்தின் பின்னர் என்ன ஆனது? அதனை நடைமுறைப்படுத்துவதற்காக 13ஆவது அரசியமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாகாணசபை சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மாகாணசபைகள் செயற்பாட்டில் இல்லை. 2500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்களுக்கான சம்பளம், வாகனம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவை எம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை அல்ல என்பதே உண்மையாகும். தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதாயின் எமது நாட்டுக்குள்ளேயே அதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. ஆனால் இந்து – லங்கா ஒப்பந்தம் காரணமாக இன்று தேசிய ஒற்றுமை எட்ட முடியாத ஒரு இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

வரவு – செலவு திட்டத்தில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கூடியளவு நிதி வீணாக மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலைமை எம்மால் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக எமக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தத்தினால் ஏற்பட்டவையாகும்.

இவற்றை விட மேலும் பல அநீதிகள் எமக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலமாகவே எனது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டு எனது அரசாங்கம் கலைக்கப்பட்டு கட்சியும் சீரழிக்கப்பட்டது. இது எவ்வாறு இடம்பெற்றது என்பதை நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால் யாராலும் அதனை வெளியில் கூற முடியாத நிலைமையே காணப்படுகிறது. தற்போது பிரதான சூத்திரதாரியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள்.

சகல அரசாங்கங்களும், இராணுவத்தினரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள். சூத்திதாரி எங்கிருக்கின்றார் எனக் கூறினாலும், எம்மால் அவர்களுடன் மோத முடியாது.

சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர். அவர்களால் போர் இல்லாமல் வாழ முடியாது. அவர்களுக்கு போர் மனநிலை மாத்திரமே இருக்கிறது. உதாரணமாக, நெதன்யாகுவைக் குறிப்பிடலாம். அவர் எப்போதும் யாரையாவது தாக்க முயற்சித்துக் கொண்டே இருப்பார்.

போருக்குச் செலவிடப்பட்ட பணம் அனைத்தும் உலகின் ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும். 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் சென்றபோது, தெருக்களில் யாசகர்களைப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது, அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். இந்தப் போர் மனநிலைதான் இதற்கு வழிவகுத்தது என்றார்.

https://www.virakesari.lk/article/222971