Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 134 online users.
» 0 Member(s) | 131 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,454
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  போரூட்டின் அவசர வேண்டுகோள்
Posted by: Mathuran - 02-06-2006, 07:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தலுக்கு நோர்வே அரச சார்பற்ற நிறுவனம் கண்டனம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமைக்கு நோர்வே அரச சார்பற்ற நிறுவனமான 'போரட்' கண்டனம் தெரிவித்துள்ளது.


போரட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்கள் கடத்தப்பட்டமைக்கு போரட் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

கடத்தப்பட்டோரில் 5 பேர் கிளிநொச்சியில் போரட் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருந்தவர்கள்.

இதுவரை விடுவிக்கப்படாத அனைவரையும் உடனே விடுவிக்குமாறு போரட் அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. இந்தக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சிறிலங்கா காவல்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நோர்வே அகதிகள் சபை மற்றும் சேவ் சில்ரன் அமைப்பினரது திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கான கிளிநொச்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் செவ்வாய்க்கிழமையன்று போராட் அமைப்பு நடத்திய இந்தக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதையடுத்தே அவர்கள் காணாமல் போன செய்திகள் தெரிய வந்தது.

சர்வதேச மற்றும் உள்ளுர் மீளமைப்புப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை போரட் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. ஆழிப்பேரலை, யுத்தம், வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் பணியாற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தாருக்கு அளிக்கப்படுகிற அதே பாதுகாப்பு உள்ளுர் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

விடுவிக்கப்படாத 8 பணியாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறோம். அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்று நோர்வேயில் தற்போது உள்ள போரட் அமைப்பின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி டெர்ரி ஹெக்கென்ஸ் தெரிவித்துள்ளார்.

வன்முறைகள், பழிக்கு பழிவாங்கல்கள் நடைபெற்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மோசமடையச் செய்வதற்கு இத்தகைய குற்றச் செயல்கள் காரணமாக அமைந்துவிடக் கூடாது. ஆகையால் கடத்தப்பட்டோர் தொடர்பாக முன்னுரிமை விசாரணை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கத்தை போரட் கேட்டுக்கொள்கிறது.


நன்றி: புதினம்

Print this item

  குறும்படங்கள் & music videos.
Posted by: Netfriend - 02-06-2006, 03:19 PM - Forum: குறும்படங்கள் - No Replies

http://www.tecmaztars.com
Thanks.

Print this item

  வித்தியாசமான காதல் பொன்மொழிகள்
Posted by: arun - 02-06-2006, 01:08 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (23)

காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.- ஜார்ஜ் ஹெர்பர்ட்

சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.- காத்தரின் ஹெப்பர்ன்

காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங்


ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ்

காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.- ஆம்புரோஸ் பியர்ஸ்


காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.- ஜூல் ரெனா

காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.- ஆல்ஃப்ரெட் டென்னிசன்


காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.- டக்ளஸ் யேட்ஸ்

காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.- யாரோ

கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.- யாரோ

காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது.-யாரோ

-நன்றி வெப்உலகம்

Print this item

  ஆரோக்கியா கோப்பை 2006
Posted by: MUGATHTHAR - 02-06-2006, 10:44 AM - Forum: விளையாட்டு - Replies (3)

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/vishal-500.jpg' border='0' alt='user posted image'>

ஷார்ஜாவில் நடப்பதாக இருந்த தமிழ் தெலுங்கு நடிகர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது
ஆரோக்கியா கோப்பை என பெயரிடப்பட்ட அந்த போட்டி 30 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது

<b>21ஓட்டங்களால் தமிழ் நடிகர் அணி கோப்பையை வென்றது</b>

தமிழ் நடிகர்கள் அணிக்கு நடிகர் <b>அப்பாஸ் கப்டனாகவும் </b>தெலுங்கு நடிகர் அணிக்கு நடிகர் <b>தருண் கப்டனாகவும் </b>இருந்தார்கள். நாணயச் சுழற்சியில் தமிழ் நடிகர்கள் அணி வென்று துடுப்பாட்டத்தை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக நடிகர்கள் <b>ஷாமும் ரமணாவும் </b>களம் இறங்கினார்கள். 2 ஓவருக்கு 8 ஓட்டங்கள் என்ற நிலையில் ஷாம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய <b>ரமணா 108 ஓட்டங்கள் </b>எடுத்து ஆட்டமிழந்தார். <b>விக்ராந்த் 56 ஓட்டங்களுடனும் </b><b>ஜீவா 25 ஓட்டங்களுடனும் ஆர்யா 24 ஓட்டங்களுடனும் </b>ஆட்டமிழந்தனர். 30 ஓவர்களுக்கு ஒரு பந்து இருந்த நிலையில் களம் இறங்கிய சிம்பு அந்த ஒரு பந்திலேயே ஆட்டமிழந்தார்.

30 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு <b>248 ஓட்டங்கள் என்ற நிலையில் தமிழ் நடிகர்கள் அணி ஆட்டத்தை முடித்துக் கொள்ளஇ 249 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது தெலுங்கு நடிகர் அணி.

5 ஆவது ஓவரில் நடிகர் ஷ்ரீகாந்த் திருப்பம் ஏற்படுத்தினார். அவர் வீசிய பந்தில் தெலுங்கு நடிகர் ஜீவி ஆட்டமிழந்தார். தொடர்ந்து விஷால் 3 விக்கெட்டுகளையும் விக்ராந்த் ஆர்யா அப்பாஸ் ஜீவா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். 30 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு [b]227 ஓட்டங்கள் </b>மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது தெலுங்கு நடிகர்கள் அணி.

Print this item

  மட்டு.இராமகிருஷ்ண ஜீவானந்தஜீ மகராஜ் மறைவு
Posted by: மேகநாதன் - 02-06-2006, 08:29 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (16)

<b>சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் எண்பத்தோராவது வயதில் இறையடி</b>

மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர்.

மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவு மேற்கொண்;டார். இதன் போது இவர் சிவசைதன்யா எனும் பெயரையும் பெற்றார் இவர் 1958. 03.01ம் திகதி சுவாமி இராமக் கிருஸ்ணர் குழு பூசை தினத்தன்று சன்னியாசம் பெற்றார்.

அன்று முதல் இவர் சிறிமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் எனும் பெயரையும் பெற்றுக் கொண்டார். இவரது இயற்பெயர் தம்பிப்பிள்ளை ஆகும். இந்தியா இருந்து 1966. 03.17ம் திகதி மட்டக்களப்பிற்கு வந்த இவர் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு உதவியாக இருந்து தனது பணியை மேற்கொண்ட வேளை அவரது மறைவின் பின் 1967.03.17ம் திகதி முதல் மட்டக்களப்பு இராமக்கிரு;ணமிசன் தலைமைபீட பொறுப்பை ஏற்று தனது மறைவு முதல் 2006.02.04ம் திகதி வரை அரும்பணி ஆற்றி வந்தார்.

மட்டக்களப்பு இராமக் கிருஸ்ணமிசனின் கீழ் இயங்கிவரும் மட். கல்லடி சிறுவர் இல்லம், மட்.சாரதா பெண்கள் இல்லம், மட்.காரைதீவு சிறுவர் இல்லங்களை நிருவகித்து வந்தார்.

இதேவேளை கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உப தலைவர் சிறிமத் சுவாமி சம்ரஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் மறைவின் பின் 1990.07.01ம் திகதி முதல் 1991.06.30ம் திகதி வரைப்பட்ட காலத்தில் கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உபதலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

1958.03.01 முதல் தனது மறைவான 2006.02.04ம் திகதி வரை மட்டக்களப்பில் இறைபணி ஆற்றிய இவர் தனது கல்வியினை மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று சன்னியாசம் பெறுவதற்கு இந்தியா செல்வதற்கு முன்பு மட்.ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகவும் கடமை புரிந்து ஆங்கில கல்வியினை வளர்க்கவும் அரும்பாடுபட்டுள்ளார்.

மட். ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை முன்பு ஆனைப்பந்தி ஆலயத்தின் உள் வீதியில் அமைந்து இருந்தது. இறைபணி ஆற்றி வந்த சுவாமி அவர்கள் சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு மக்களுக்கும் உதவி புரிந்து வந்தார். கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இவர் மட்டக்களப்பில் ஆற்றிய பணியும் அளப்பரியதாகும்.

இவரால் சுவாமி விவேகானந்தர் ஓராண்டு விழாவின் நினைவாக நாவற்குடாவில் விவேகானந்தா எனும் ஒரு மாதிரிக் கிராமத்தை அமைத்து வீடு அற்ற மக்களை அங்கு குடியமர்த்தியுள்ளார். அதேவேளை சுனாமியினால் வீடுகளை இழந்த சின்ன உப்போடை, பெரிய உப்போடை, சீலாமுனை, கல்லடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 114 நிரந்தர வீடுகளை மிசன் மூலம் அமைத்து வந்த இவர் ஒரு தொகுதி வீடுகளை கையளித்துள்ளார்.

தனது இறுதி வேலையாக மேற்கொண்ட கல்லடி நீர் வழங்கல் வடிகாலமைப்பு நிலையப் பகுதியில் 70 வீடுகளை அமைக்கும் முயற்சியினை மேற்கொண்டு பூர்த்தியடையும் வேளையில் உயிர் பிரிந்துள்ளார். இதனை கட்டி முடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டார்.

ஆத்மீக நெறியை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு ஆத்மாத்தமான பணியை மேற்கொண்ட இவர் சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமி விபுலானந்தருக்குப் பின் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடாத்தி வந்த வேளையில் அவரின் மறைவிற்கு பின் மூன்றாவது தலைமைப் பொறுப்பினை மறைந்த சிறிமத் சுவாமி ஜீவனானந்த ஜீ மகராஜ் ஏற்று நடாத்தி வந்தார்.

இவரது தகனக் கிரியை நாளை பி.ப 4.00 மணிக்கு மட். சாரதா பெண்கள் இல்லப் பகுதியில் உள்ள வளாகத்தில் இடம் பெறும் தற்போது மட்.கல்லடி மிசனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இவரது பூதவுடழுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>

Print this item

  புரியுமா புதிர்?
Posted by: வர்ணன் - 02-06-2006, 04:53 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (32)

சமீப சில நாட்களாக - அறிமுகம் பகுதியில் வந்து - ஏதோ பேசி போபவர்கள் - பற்றி - யாருக்கும்- ஏதும் தோணுகிறதா?

எனக்கு என்னமோ ஒரு குழுவின் செயற்பாடு-! தேசியத்திற்கு எதிராய் -

அது- ஒன்று கூடி முடிவெடுத்தபின் - ஒவ்வொன்றாய்- அறிமுகம் என்ற பேரில்- உள் நுழைவதாய் நினைக்கிறேன்-!

இதற்கு யாழ்கள நிறுவனர்கள் - பொதுவான பண்பு -என்ற ரீதியில் அவர்களை கொஞ்சம் பேச விட்டபின் அகற்றலாம் -என்று ஏதும் - விதி கொண்டிருக்கலாம்!

என் போன்றவர்களை பொறுத்தவரை -இது போன்றவர்களை முளையிலேயே- கிள்ளி எறிந்து விட வேண்டும் - என்ற யதார்த்தமான கோவமே - விஞ்சி நிக்கிறது -!

நாங்கள் - அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனம்-

நாங்கள் நாங்களாய் இருக்கும் வரைதான் வெல்வோம்!

ஆகவே இங்கே விட்டுக்கொடுப்புக்கும்- விஷ செடிகளின் அரும்புதலுக்கும் இடமாய் இருக்க கூடாது -எந்த சமரசமும் அவர்கள் கூட இருக்க முடியாது என்பதே - என்பதே என் எண்ணம்! 8)

Print this item

  உருளைக்கிழங்கு மீன் குழம்பு
Posted by: ashwana - 02-06-2006, 03:16 AM - Forum: சமையல் - Replies (3)

உருளைக்கிழங்கு மீன் குழம்பு

மீன் அரைக் கிலோ
உருளைக்கிழங்கு அரைக் கிலோ
வெங்காயம் 50 கிராம்
காய்ந்தமிளகாய் 3
மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லிவிதை 2 தேக்கரண்டி
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிது
புளி சிறிய அளவு
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி

மீனைக் கழுவிச் சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அதன்மீது மஞ்சள்தூள், உப்பு கலவையை பூசி வைக்கவும்.
உருளைக்கிழங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி தனியே அரைத்து வைக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக கீறிக் கொள்ளவும்.
காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள், சீரகம் மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் தேங்காய் விழுதினையும், பச்சைமிளகாயையும் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு, நறுக்கிய தக்காளி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வேகவிடவும்.
புளியை சிறிது நீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும் மீன் துண்டங்களைப் போட்டு, புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதித்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

கால அளவு 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு

நன்றி அன்புடன் அஷ்வ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  நகைச்சுவைப் பக்க இணைத்தளம்
Posted by: ashwana - 02-06-2006, 02:55 AM - Forum: நகைச்சுவை - Replies (2)

http://www.geocities.com/tamiljokes/
http://www.geocities.com/Baja/Cliffs/5959/
http://www.koodal.com/jokes/default.asp
http://www.webtamilan.com/joke.htm
http://tamilworld.com/jokes/

எல்லோரும் பார்த்து மகிழவும்.

நன்றி
வணக்கம்
அஷ்வனா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  ஜெனீவா பேச்சு வார்த்தைகளுக்கு புதிய வடிவத்தில் முட்டுக்கட்டை
Posted by: கந்தப்பு - 02-06-2006, 12:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

[size=24]ஜெனீவா பேச்சு வார்த்தைகளுக்கு புதிய வடிவத்தில் முட்டுக்கட்டை
ஜெனீவா பேச்சுகளுக்கு புதிய வடிவில் தடைபோடப்படுகிறதா? இந்தப் பேச்சுகளுக்கு முன்னர், பேச்சுக்கான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையிலும், மோதல்களுக்கான புறச்சூழலே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கருணா குழுவென்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளின் பின்னாலும் அரசும், இராணுவமுமே இருப்பதாக தமிழ்த் தரப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், அரசும் இராணுவமும் இவற்றை மறுத்தாலும் கிழக்கில் நடைபெற்றுவரும் ஒவ்வொரு நிகழ்வும், அரசும் படையினரும் கூறுவது பொய்யென்றே உணர்த்துகின்றன.

எவ்வேளையிலும் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் வெடிக்கலாமென்ற சூழ்நிலையில் நோர்வேயின் தலையீட்டால் பேச்சுகளுக்குச் செல்ல அரசும், புலிகளும் சம்மதித்தன. இந்தப் பேச்சுக்கான புறச் சூழலை ஏற்படுத்துவதற்காக உடனடியாக வன்முறைகள் அனைத்தையும் நிறுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் வடக்கில் அசம்பாவிதங்கள் படிப்படியாகக் குறைவடைய கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் வன்முறைகள் தலைதூக்கியுள்ளன. கருணா குழுவென்ற பெயரில் அங்கு தினமும் பல்வேறு வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

ஜெனீவாப் பேச்சுக்கு அரசும், புலிகளும் சம்மதம் தெரிவித்த மறுநாள், மட்டக்களப்பு - பொலனறுவை எல்லையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வடமுனைக்குள் ஊடுருவியோர் நடத்திய தாக்குதலில் புலிகளின் வடமுனை இராணுவப் பொறுப்பாளர் மேஜர் கபிலன் உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலை கருணா குழுவே நடத்தியதாக படைத்தரப்பு கூறியபோதும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும், கருணா குழுவும் இணைந்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக புலிகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தினர். இந்தத் தாக்குதலுக்கு அரசும், இராணுவத் தரப்பும் மட்டுமல்லாது தெற்கில் அரச மற்றும் சிங்கள ஆங்கில ஊடகங்களும் பெரும் முக்கியத்துவமளித்தன.

போர்நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கல் குறித்தே ஜெனீவாப் பேச்சுகள் நடைபெறவுள்ளன. இதில் மூன்று முக்கிய விடயங்களை, போர்நிறுத்த உடன்பாட்டிலுள்ளது போல் அமுல்படுத்துமாறு புலிகள் கடும் அழுத்தம் கொடுக்கவுள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து படையினர் வாபஸ் பெறப்படவேண்டும், மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும், அரச படைகளுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவை வடக்கு - கிழக்கு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்பவையே அவையாகும்.

இந்த மூன்றையும் அரசோ, படைத்தரப்போ எவ்விதத்திலும் நிறைவேற்றப்போவதில்லையென்பது வெளிப்படை. கடந்த நான்கு வருடமாகியும் இதுவரை போர்நிறுத்த உடன்பாடு அமுல்படுத்தப்படவில்லை. ஐ.தே.க. ஆட்சியில் நடைபெற்ற பேச்சுகளில் உடன்பாடு எட்டப்பட்ட எவையுமே அமுல்படுத்தப்படாததாலேயே அப்போதைய பேச்சுகள் ஐந்து சுற்றுகளுடன் முறிந்து போனது.

இந்தச் சூழ்நிலையில் ஜெனீவா பேச்சுகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. போர்நிறுத்த உடன்பாட்டை இரு தரப்பும் உடனடியாக முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென சர்வதேச சமூகம் மிகக் கடுமையாக அழுத்தம் கொடுத்து வருவதால், இந்த உடன்பாட்டின் அமுலாக்கலுக்கு தடையாக இருப்பவர்கள் யாரென ஜெனீவாப் பேச்சுகள் அம்பலப்படுத்தப் போகின்றன.

அதேநேரம், ஒஸ்லோவில் மட்டுமே பேசுவோமென திரும்பத் திரும்பக் கூறிவந்த விடுதலைப் புலிகள், எதுவித ஆட்சேபனையுமின்றி ஜெனீவாப் பேச்சுகளுக்கு சம்மதம் தெரிவித்ததன் மூலம், அவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றார்களென்றதொரு தோற்றப்பாட்டை அரசுக்கும் படைத்தரப்புக்கும் ஏற்படுத்திவிட்டது. இதனால் அவர்களுடன் வேறுவிதத்தில் சீண்டும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன.

இங்குதான் கருணா குழுவைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கவும் அரசும், படைத்தரப்பும் முயல்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதற்கேற்ப அரச ஊடகங்களும், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் கருணா குழு குறித்த மாயை ஒன்றை ஏற்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஜெனீவா பேச்சுகளுக்கு சம்மதம் தெரிவித்து அனைத்து வன்முறைகளையும் நிறுத்த அரசும், விடுதலைப் புலிகளும் இணங்கியபோது, மட்டக்களப்பு வடமுனையில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித் தாக்கி, தாங்களும் இருக்கின்றோம் எனக் காட்ட கருணா குழு முயன்றது.

படையினரும், புலிகளும் வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்த பின்னர் நடைபெற்ற தாக்குதல் இதுவென்பதால் இந்தத் தாக்குதலுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. இந்த முக்கியத்துவம் மூலம் இந்தத் தாக்குதலை நடத்திய கருணா குழுவுக்கும் முக்கியத்துவமளிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் இடம்பெற்று இரண்டாம் நாள், விடுதலைப் புலிகளுடன் ஒருதலைப் பட்சமாக யுத்தநிறுத்தத்தை அறிவிப்பதாக கருணா தெரிவித்துள்ளதாக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியை அரச மற்றும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கின. கருணா குழுவுக்கு இதன் மூலம் மிகுந்த முக்கியத்துவமளிக்க தென்னிலங்கை முற்படுவது மிகத் தெளிவாகத் தெரிந்தது.

படையினரும், புலிகளும் வன்முறையை கைவிட இணங்கிய மறுநாள் திடீர்த் தாக்குதலொன்றை நடத்திவிட்டு அதன் பின்னர் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்ததன் மூலம், கருணா குழுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசும், படைத்தரப்பும் முயல்வது மிகத் தெளிவானது.

கருணா குழு ஏதோ தனியாக இயங்கி இதுவரை புலிகளுடன் யுத்தம் புரிந்ததுபோன்றும், அது இப்போது புலிகளுடன் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவிப்பது போன்றும் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டதுடன், இந்த அரசியலுக்குப் பின்னால் வேறு நோக்கங்களிருப்பதும் தெளிவாகத் தெரிந்தது.

அதாவது, ஜெனீவா பேச்சுகளில் புலிகளின் அழுத்தம் கடுமையாக இருக்குமென்பதால் அவர்களுக்கு கொளுக்கி போட கருணா குழுவைப் பயன்படுத்த அரசும், படைத்தரப்பும் முயல்வது தெளிவானது.

போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவதற்கு, அரசும் புலிகளும் மட்டும் பேசினால் போதாது, அதற்கப்பால் கிழக்கில் கருணா குழுவும் வலுவாகவுள்ளது. அங்கு நிலைமைகளை மோசமடையச் செய்யக்கூடிய அளவிற்கு அது பலமுள்ளதாயிருப்பதால், போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் அவர்களது உதவியும் தேவையெனக் காட்டும் முயற்சிகள் தற்போது திரைமறைவில் அரங்கேறுகின்றன.

தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களை கருணா குழுவே கடத்தியுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக சகல ஊடகங்களிலும் இதுவே முக்கிய செய்தியாகிவிட்டது. கடத்தப்பட்ட பத்துப் பேரில் இதுவரை மூவர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களும் விடுவிக்கப்படலாமென்பது இதன் மூலம் தெரியவரும் அதேநேரம், பத்துப் பேரையும் ஒன்றாக விடுவிப்பதைவிட ஒவ்வொருநாளும் ஒருவர் அல்லது இருவராக விடுவதன் மூலம், ஜெனீவாப் பேச்சுக்களுக்கு முன் கருணா குழு குறித்த செய்திகளுக்கு தினமும் முக்கியத்துவமளிக்கப்படுகிறது.

கருணா குழுவுக்கு முக்கியமளித்து, போர்நிறுத்த உடன்பாடு அமுலாக்கல் தொடர்பான பேச்சுகளில் அவர்களையும் செருகிவிடுவதன் மூலம் புலிகளுக்கு எரிச்சலூட்டுவதுடன், இதனைப் பயன்படுத்தி எவ்வளவோ செய்துவிடலாமென்ற நப்பாசையும் அரசுக்கிருப்பது தெளிவாகியுள்ளது.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தமிழ்த் தரப்புகளும் கோருவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை ஏற்படுத்த இவர்கள் முயலும் அதேநேரம், கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவே உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென கண்காணிப்புக் குழுவை சர்வதேச சமூகம் கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி கண்காணிப்புக் குழு கேட்கப்பட்டால், அவர்கள் கடத்தல்காரர்களுடன், அதாவது கருணா குழுவுடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவை ஏற்படும். இதைத்தான் கருணா குழுவும் இன்று எதிர்பார்த்துள்ளது.

கருணா குழுவை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளாத கண்காணிப்புக் குழு இதுவரை காலமும் அவர்களுடன் எதுவித தொடர்புகளையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால், புனர்வாழ்வுக் கழகத்தை சேர்ந்தவர்களை விடுவிப்பதாயின் அவர்களுடன் பேசுங்களென சர்வதேச சமூகம் கோரினால் அதனை கண்காணிப்புக் குழு செய்யவேண்டியிருக்கும்.

இதன் மூலம் கருணா குழுவுக்கு மேலும் முக்கியத்துவம் கிடைப்பதுடன் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் போது அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுப்பதற்காக கண்காணிப்புக் குழு தொடர்ந்தும் அவர்களுடன் பேசவேண்டிய தேவையேற்படுமென்பதால் கிழக்கில் சுமுக நிலையை ஏற்படுத்த இராணுவத்துடனும், புலிகளுடனும் மட்டுமல்லாது, கருணா குழுவுடனும் பேசவேண்டுமென்ற தொரு நிலைமையை உருவாக்குவதே இந்த திரைமறைவுத் திட்டங்களாகும்.

இதேநேரம், தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களை கடத்தியதிலும் பெரும் பின்னணி இருப்பதாகவே கருதப்படுகிறது. கடல்கோள் அனர்த்தத்தின்போதும், அதன் பின்னரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றிய பணிகள் உலகளாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் பெற்றன. இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் கொழும்பில், தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளரையும் நேரில் சந்திக்குமளவிற்கு அதன் புகழ் விரிவடைந்துள்ளது.

இது, தென்னிலங்கை அரசியல்வாதிகளிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிராக மிக மோசமான பிரசாரங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இலங்கை அரசால் பொதுக்கட்டமைப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமூடாக உதவிகளை வழங்க பல நாடுகளும் முன்வந்தன.

இதனால் வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இதன் செயற்பாட்டை முடக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு கட்டமே மட்டக்களப்பில் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களின் கடத்தலாகும். இந்த மிரட்டல் மூலம் அதில் பணிபுரிபவர்களை விலகச் செய்வதும் கடத்தலின் நோக்கமாகும்.

இதிலும், இனவாதிகள் கருணா குழுவைப் பயன்படுத்தியுள்ளனர். வெலிக்கந்தையில் இராணுவ சோதனை நிலையத்திற்கு அருகில் இந்தக் கடத்தல்கள் இடம்பெற்றபோதும் இவை பற்றித் தங்களுக்கு எதுவுமே தெரியாதென படையினர் கூறுவது பெரும் ஆச்சரியமளித்துள்ளது.

ஏற்கனவே இந்தப் பகுதியில்தான் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன், கருணா குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டார். பல்வேறு சம்பவங்களும் இந்தப் பகுதியில்தான் இடம்பெற்றன. மட்டக்களப்பிலிருந்து வடக்கே செல்பவர்கள் வெலிக்கந்தை ஊடாகவே செல்லவேண்டுமென்பதால் இவர்களுக்கு இவை வாய்ப்பாகிவிட்டன.

ஜெனீவா பேச்சுகளிலும் அதன் பின்னால் ஏதாவது பேச்சுகள் நடைபெறுமானால் அவற்றிலும் கருணா குழுவுக்கு முக்கியத்துவமளிக்கும் முயற்சிகள் துரிதமடைந்துள்ளன. நிழல் யுத்தம் வடக்கேயும் பரவி, வடக்கு -கிழக்கில் தமிழ் மக்களை மிகமோசமாக அச்சுறுத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வந்த நிலையில் தமிழ்க் குழுக்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் துரிதமடைந்துள்ளன.

வடக்கில் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் ஒருவித தாக்குதல்கள் மூலம் மக்கள் அச்சுறுத்தப்படும் அதேநேரம், கிழக்கில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் வேறுவிதமான தாக்குதல்கள் மூலம் மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இவற்றிலெல்லாம் தமிழ்க் குழுக்களே முக்கிய இடம் வகிக்கின்றன.

தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி போர்நிறுத்த காலத்தில் புலிகளுக்கு எரிச்சலூட்டும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்பதை தற்போது உலகம் அறிந்து வருகிறது. ஆனாலும், சுயநலன்களுக்காக அவர்களும் மௌனம் சாதிப்பதால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களிடமே தள்ளப்பட்டுள்ளது.

ஜெனீவா பேச்சுகளுக்கு நாள் குறிக்கும் நிலையிலும் கிழக்கில் மிகமோசமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இந்த மோசமான புறச் சூழல் ஜெனீவாப் பேச்சுகளுக்கான வாய்ப்பைக் குறைக்கின்றபோதும், போர்நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்தத் தவறுபவர்கள் யார்? அந்த உடன்பாட்டிற்கு குந்தகமாக இருப்பவர்கள் யாரென்பதையெல்லாம் வெளியுலகுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென்பதால் இப்பேச்சுகளில் விடுதலைப் புலிகள் கலந்துகொள்வர். ஆனாலும், அதற்கு முன்னான சூழல்கள் பேச்சுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிடுமோ என்ற சந்தேகத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

- தினக்குரல்

Print this item

  HISTORY OF SRI LANKA &amp; TAMIL EELAM
Posted by: வினித் - 02-05-2006, 11:38 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<img src='http://img480.imageshack.us/img480/3981/leader1a6fw.jpg' border='0' alt='user posted image'>
Leader of the LTTE

<b>General Information about Sri Lanka


Sri Lanka is an tear shaped island located at the southern most tip of India. It is separated from the Indian subcontinent at its narrowest point by 22 miles of sea called Palk Strait. It lies between six and ten degrees north of the Equator, and on the longitude of 79 to 81 degrees east. Its total area is 25,332 square miles comprising Sri Lanka 18,042 and Tamil Eelam 7,290 sq miles. The total population is 17,103,000, according to latest population statistics (1991), consisting of 12,656,000 Sinhalese, 3,113,000 Tamils, 1,214,000 Muslims (mostly Tamil speaking) and others 120,000. </b>




<b><span style='font-size:25pt;line-height:100%'>Discrimination Against Tamils by Sri Lanka</span>

1948 - State Sponsored Settlement of Sinhalese in Tamil Areas Begins.
</b><img src='http://img480.imageshack.us/img480/1898/coloni910ll.jpg' border='0' alt='user posted image'>

Thousands of Sinhalese settlers were moved in traditional Tamil homelands. Tamils were not opposed to individual migration but only to large scale government colonization schemes which change the ethnic composition of an area. Whole villages were emptied and driven out by the Sri Lankan Army and turned into refugees dependent on the government for dry rations. Sinhalese settlers were offered for free the homes and lands of Tamils who used to live in these villages. They were also armed by the government.




<b><span style='font-size:25pt;line-height:100%'>1950 - Over One Million Tamils Lost Their Sri Lankan Citizenship. </span>


"Everyone has the right to a nationality. No one shall be arbitrarily deprived of his nationality..."
Article 15 of the Universal Declaration of Human Rights

<img src='http://img154.imageshack.us/img154/2295/planta113ko.jpg' border='0' alt='user posted image'> [b]Generations of estate Tamils have lived in Sri Lanka for more than a 115 years. In 1948, at independence, the Tamils had 33% of the voting power in the legislature. Upon the disenfranchisement of the estate Tamils (in 1950), however, this proportion dropped to 20%. The Sinhalese obtained more than a 2/3 majority in the Parliament, making it impossible for Tamils to exercise an effective opposition to Sinhalese policies affecting them.</b>


<b><span style='font-size:25pt;line-height:100%'>1956 - 'Sinhala Only' Act Was Introduced.</span>

<img src='http://img154.imageshack.us/img154/1031/protes310xg.jpg' border='0' alt='user posted image'><img src='http://img480.imageshack.us/img480/1673/protes114zt.jpg' border='0' alt='user posted image'>

[b]English was removed from its status as the official language and Sinhala was made the official language of Sri Lanka. All government employees were required to be fluent in Sinhala. Most Tamils who worked for the government lost their jobs. Government administration was offered only in Sinhala, even in areas where 99% of the population was literate in Tamil. The Tamil Federal Party led a group Tamil volunteers and staged a sit down Satyagraha, (peaceful protest) of the kind popularized by Mahatma Gandhi in the days of the Indian freedom struggle, in Colombo. This protest was broken up by armed Sinhalese gangs, while Sinhalese policemen stood by and watched. Some protestors were through into nearby Beira Lake. Riots then broke out through out Sri Lanka where Tamils were assaulted, homes, shops and property burned. Armed Sinhalese settlers in the Northern and Eastern province attacked neighboring Tamil villages. In 1956, 150 Tamils were murdered. The violence continued for two more years. In 1958 another 150-200 Tamils were murdered, thousands more were assaulted and Tamil property looted. Over 25,000 Tamil refugees were relocated to the North. As peaceful protests against discrimination continued in 1961 the Sri Lankan Army attacked hundreds of men and women in Jaffna.






[b]<span style='font-size:25pt;line-height:100%'>1972 - Sri Lanka Denies Access to University Education to Tamils</b>.</span>

<b>"Everyone has the right to education... higher education shall be equally accessible to all on the basis of merit"</b>

Article 26.1 of the Universal Declaration of Human Rights

<b>In 1970 Sri Lanka banned the importing of Tamil films, books, magazines, journals, etc. from Tamil Nadu, India. Sri Lanka also proscribe the Dravida Munnetra Kazhagham and the Tamil Youth League. Culturally, the Tamil people were cut off from Tamil Nadu. Foreign exchange for the long established practice of Tamil students going to India for university education stopped. Equally, examinations for external degrees from the University of London were abolished. Having thus cut off Tamil students from their traditional educational opportunities, Sri Lanka government introduced various restriction on Tamil education. Tamil students were required to gain a higher mark on their entrance exam as their Sinhalese counterparts. The government then brought in district quotas. This effectively based university entrance on race. Less than 15% of university seats were available for Tamils. </b>




<b><span style='font-size:25pt;line-height:100%'>University Admission's Test Pass Marks </span>

<img src='http://img370.imageshack.us/img370/7914/edit2006020525tm.png' border='0' alt='user posted image'>









[b]<span style='font-size:25pt;line-height:100%'>1977 - Tamils Vote for Eelam </span>


Tamils overwhelming voted for the Tamil United Liberation Front and Eelam. The TULF was a coalition of Tamils parties who campaigned on a platform for the establishment of a separate state for Tamils called Eelam.

1979 - Tamil Resistence Met With State Terrorism

[b]"No one shall be subjected to arbitrary arrest, detention or exile"</b>

Article 9 of the Universal Declaration of Human Rights

<b>No one shall be subjected to torture or to cruel, inhuman or degrading treatment or punishment" </b>

Article 5 of the Universal Declaration of Human Rights

"On the 11th of July 1979..





<b><span style='font-size:25pt;line-height:100%'>1981 - Destruction of the Jaffna Public Library</span>


<img src='http://img480.imageshack.us/img480/9159/jaffnalibrarysm0kv.jpg' border='0' alt='user posted image'>
[b]The Remains of the Jaffna Public Library, 2001 A large group of 200 Sinhalese Policewent on rampage on the nights of May 31 to June 2 burning the market area of Jaffna, the office of the Tamil Newspaper, the home of the member of Parliament for Jaffna, the Jaffna Public Library and murder four people. The destruction of the Jaffna Public Library was the incident which appeared to cause the most distress to the people of Jaffna. The 95,000 volumes of the Public Library destroyed by the fire included numerous culturally important and irreplaceable manuscripts. Sparatic violence continued where the Sri Lankan Army and Police would assault, loot, and vandalize Tamils and their property in the North and Eastern Provinces.



[b]<span style='font-size:25pt;line-height:100%'>1983 - Genocide</span>
<img src='http://img154.imageshack.us/img154/7467/tic46a13jk.jpg' border='0' alt='user posted image'><img src='http://img154.imageshack.us/img154/3899/tic36a14uj.jpg' border='0' alt='user posted image'>

The fourth week of July 1983 (23 29) witnessed the worst violence and blood shed in Sri Lanka. During the week, Sri Lankan state orchestrated violence that claimed the lives of more than 3,000 Tamils; over a billion dollars worth of Tamils' property were destroyed. More than a hundred thousand Tamils were made destitute. The government of Sri Lanka itself systematically planned and executed the atrocities against the Tamils. The government provided the rioters with voters' list to identify the homes of the Tamils. Once the Tamil homes were identified the occupants were either hacked or burnt to death, and the properties were plundered. In Colombo, 53 political prisoners were massacred inside a high security prison. None of the perpetrators of these barbaric atrocities were ever brought to Justice.






Militant Groups


[b]From 1948 to 2002 there have been a approximately of 38 militant groups who have at one time or another fought for Tamil Eelam's independence. This number includes the better known groups such as the LTTE - Liberation Tigers of Tamil Eelam,
Some of these groups disbanded or were defeated by the Sri Lankan Army, others consolidated themselves with the Liberation Tigers of Tamil Eelam. Some joined the Sri Lankan Government as armed mercenaries and terrorized the people that they were supposed to be fighting for. Currently only the Liberation Tigers of Tamil Eelam, are actively involved on a military front, in defense of Tamils in Sri Lanka.


<img src='http://img154.imageshack.us/img154/5923/lktamtg5kc.gif' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'> Tamil Eelam flag </b></span>
<b>The Liberation Tigers of Tamil Eelam was formed in 1976 under the name New Tamil Tigers. But they did not actively fight the Sri Lankan army until 1979. This was when the Sinhalese Sri Lankan army's occupation of the Northern and Eastern Provinces and the state terrorism let loose on the people became unbearable. Hostility began to grow and the emotional division between the Sinhalese and the Tamils became more acute. Groups of highly organized young Tamil militants, emerged to confront the government terrorism by bearing arms. The LTTE chose the name ``Tigers`` because Sinhala history has the lion as their national symbol. In the jungle of civil war it is a struggle between the Sinhalese Lion and the Tamil Tiger. The Sinhalese pride in the lion as their nation symbol goes as far as to include the lion as the prominent feature of the Sri Lankan flag.</b>

<img src='http://img154.imageshack.us/img154/873/lk19484mv.gif' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:25pt;line-height:100%'>Sri Lankan flag </b></span>
<b>The Sri Lankan flag has is one of the representations of the Sinhalese national domination of the Tamil people. It is made up of three sections dividing the flag (and the country) by race. The green represents the Muslim population because their religious colour is green. The orange beside the green represents the Tamil population because orange is the Hindu religious colour. The biggest section and their one containing their national symbol is the red representing the Buddhist Sinhalese population. Sri Lanka's policy of racist division is extends all the way from its national flag, which disproportionately represents its people, to the fact that all citizens must carry Identity Cards at all times. These identity card state not only your name, age and picture but also your race. Other documents such as your Birth Certificate must bear your race, that of your parents and grandfather....</b>

நன்றி:
http://www.tamiltigers.net/history/history.html

Print this item