| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 134 online users. » 0 Member(s) | 131 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,454
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| உதவி |
|
Posted by: malu - 02-07-2006, 06:06 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (17)
|
 |
அய்யா யாராவது எனக்கு உதவி செய்யுங்க நான் எப்படி கருத்துக்களுக்கு பதில் எழுதுவது.
அன்புடன்
மாலு
தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - யாழினி
|
|
|
| ஏவாளின் தோட்டமருகே புதிய உலகம் |
|
Posted by: kuruvikal - 02-07-2006, 05:34 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (11)
|
 |
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/06/sci_nat_enl_1139310060/img/1.jpg' border='0' alt='user posted image'>
Berlepsch's six-wired "lost" bird of paradise - சொர்க்கத்தின் பறவை.
Papua 'Eden' என்ற அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவை மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
தகவல் ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/ - படம் பிபிசி.கொம்
|
|
|
| ஆடிய ஆட்டம் என்ன? ரெலோ பொபி மரணம். |
|
Posted by: வினித் - 02-07-2006, 01:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
முன்னாள் ரெலோ பொபி பிரிவின் தலைவர் பொபி மரணம்.
ரொலோ அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான பொபி காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 85, 86 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரொலோ அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டவேளை தாஸ் (தாஸன்)தலைமையிலான குழுவும், பொபி தலைமையிலான குழுவுமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வாழ்ந்துவந்த பொபி சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் நல்லூரைச்சேர்ந்த பொபி, 80 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ரொலோ இயக்கத்தில் இணைந்து, சாவகச்சேரி தாக்குதல் உற்பட பல்வேறு பட்ட தாக்குதல்களிலும் முன்னின்று செயற்பட்டவராவார்.
85 ஆம் அண்டுகாலப்பகுதியில் எற்பட்ட பிளவுகளை அடுத்து ரொலோ அமைப்பின் இராணுவத்துறை தலைவராக இருந்த தாஸ் உற்பட அவரது குழுவினரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் உள்ளே வைத்து பொபியே சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
86 களின் பின்னர் அரசியலில், போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருந்த பொபி, இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து தங்கியிருந்தார். கடுமையான சுகயீனம் காரமாக இவர் இறந்துள்ளதாக தெரியவருகின்றது.
நன்றி: பதிவு
|
|
|
| யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவி |
|
Posted by: மேகநாதன் - 02-07-2006, 12:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர் எஸ்.குமாரவடிவேலை சிபார்சு செய்தது பல்கலை மானியங்கள் ஆணைக்குழு </b>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.குமாரவடிவேலை நியமிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக கடந்த மாத பிற்பகுதியில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி, எஸ்.குமாரவடிவேல், ரட்ணஜீவன் கூல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த மூவரில் ஒருவரை தற்போது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. எனினும், மூவரில் எவராவது ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த நியமனத்தில் அரசியல் தலையீடு அதிகமிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழகங்கள் எதுவித பிரச்சினையுமின்றி சுமுகமாக இயங்கவேண்டுமென்பதே மானியங்கள் ஆணைக்குழுவின் நோக்கமாகும். இதனாலேயே பேராசிரியர் குமார வடிவேலின் பெயரை தெரிவு செய்ததாகவும்
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
|
|
|
| சகல பூசல்களையும் தீர்க்கும் `அருமருந்து' |
|
Posted by: Shankarlaal - 02-07-2006, 10:31 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
<b>வீட்டிலிருந்து உலகம் வரை சகல பூசல்களையும் தீர்க்கும் `அருமருந்து'
சி. வையாபுரி
ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளில் ஒன்றாய் நலிந்து கிடந்த இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது பற்றி நடந்த இங்கிலாந்து பாராளுமன்ற விவாதம் ஒன்றில் பேசிய வான்டர்டன் பிரபு காந்தியைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
காந்தியத்தில் பற்றுக் கொண்டிருந்த அகதா ஆரிசன் என்பார், இங்கிலாந்திலிருந்து காந்திக்குக் கடிதம் மூலம் இதை விபரித்திருந்தார். `என் கருத்திலும் செயலிலும் அசைக்க இயலாத உறுதியுடன் நான் இருக்கின்றபோது, என்னைப்பற்றிப் புகழ்ந்தோ இகழ்ந்தோ யார் எங்கு பேசினால் என்ன?' என்று இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த ஆகஸ்ட் 15 ஆம் நாள் அகதாவுக்கு எழுதிய பதிலில் தெரிவித்துள்ளார் காந்தியடிகள்.
பெருங்குணங்கள் பலவற்றையும் தம்முள் தொகுத்துக் கொண்டு, உயர்ந்த சான்றாண்மையுடன் திகழ்ந்த அவர், நாடு விடுதலை அடைந்த நாளில்கூட நூற்பு வேள்வியில்தான் இருந்தார். பள்ளிப் பாடங்களிலும் பட்டிமன்றங்களிலும் கடவுள் வாழ்த்துகளிலும் உரக்கப் பாடப்படுகிற திருக்குறள் வழியில் மனிதர்களைத் தேடினால், குறளின் மறுபதிப்பாக மகாத்மா காந்தி மட்டுமே, உலகு அறிந்த ஒரே மனிதராய் விளங்குகிறார்.
கடவுள் இல்லை என்கிற கொள்கையில் உறுதியாய் வாழ்ந்த ` கோரா' என்கிற ஆந்திர கோ. ராமச்சந்திர ராவ் காந்தியின் மீது அளவற்ற பற்றுதல் கொண்டிருந்தவர்.
கடவுள் உண்டு என்று வாழ்ந்த காந்திக்கு பல முறை கடிதம் எழுதி, அவரது கடவுள் நம்பிக்கையை விஞ்ஞானபூர்வமாய் விளக்குமாறு கேட்டு வந்தார்.
பல கடிதங்களுக்கும் பதில் கூறாமைக்குக் காரணம், கடவுள் மறுப்புப் பற்றிய கோராவின் கருத்துகளை விமர்சிக்கின்ற அளவுக்குத் தம்மிடம் போதுமான அறிவுத் தெளிவு இல்லாததுதான் என்று சொல்லி, தண்டி யாத்திரைக்குச் செல்லும்போது, தம்மோடு கலந்து கொள்ள வந்தால் இருவரும் விரிவாக விவாதிக்கப் போதுமான நேரம் கிடைக்கும் என்று அவருக்கு எழுதினார். ஆனால் என்ன சொன்னாலும் எத்தனை விளக்கங்கள் வந்தாலும் கடவுள் உண்டு என்று தமது அடிமனத்தில் பதிந்துவிட்ட அந்த நம்பிக்கையை உலகின் எந்த சக்தியாலும், மாற்றிவிட இயலாது என்று தம்முள் உறுதி கொண்டிருந்தார் காந்தியடிகள்.
கோராவும் காந்தி ஆசிரமத்தில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்தது. ஆனால் மக்களுக்கு உணவும் உடையும் கடும் பற்றாக்குறை என்பது உணரப்பட்டது. எல்லோருக்கும் பகிர்மானம் செய்வதை உறுதி செய்வதென்றால் இவ்விரண்டுக்கும் கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்று உடனடித் தேவையானது.
டில்லியிலிருந்த நூல் மற்றும் துணி வியாபாரிகள் காந்தியிடம் இந்தக் கட்டுப்பாடு, அரசு எண்ணுகிற பலனை நிச்சயம் தராது என்று வாதிட்டனர். தானியம் மற்றும் துணிக் கட்டுப்பாடுகள் ( இˆ‡கூகீˆஃ) சுதந்திர நாட்டிற்கு ஒவ்வாத நடவடிக்கை என்றாலும், வியாபாரிகளிடம் நம்பிக்கை வைக்க இயலாத அச்சத்தின் அடையாளமே இந்தச் சட்டம் என்று அரசின் நிலையை ஒப்புக்கொண்ட கையோடு, சாதாரண ஒரு தொழிலாளியைக் காட்டிலும் அதிக வருமானத்தை ஏன் விரும்ப வேண்டும் என்று அவர்களிடமே வினவினார் காந்தி! ஐயத்திற்கு அப்பாற்பட்டதான நடத்தைகள் வியாபாரிகளிடம் வரும்வரை, கட்டுப்பாடுகளைத் தவிர்க்க இயலாது என்றும் கூறி விட்டார்.
அறிவுத்திறம் நிரம்பப் பெறாத சுயநலவாதிகளால், மதக் கலவரம் வெடித்தது. பாதிக்கப்பட்ட இந்து, முஸ்லிம் அகதிகளைப் பராமரிக்கும் ஒரு முகாமில் சேவை செய்து வந்த சுபத்ரா குப்தா தம்மைச் சந்தித்தபோது, அவரோடு சேவையில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடம்பர உடைத் தோற்றத்தைக் கடுமையாக விமர்சித்தார் காந்தி. தோற்றத்திலும் செயலிலும் எளிமையும் உண்மையும் இருந்தாலொழிய, எந்தச் சேவையும் எவரிடத்திலும் பலன் தராது என்று கண்டித்தார்.
தம்மைப் பின்தொடர்வோர், மக்கள் நேசிக்கும்படியான எளிமையும் உழைக்கும் திறமையும் கொண்டவர்களாய், நம்பும்படியான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாய் வாழ்தல் வேண்டும் என்று அவர்தம் இலக்கணத்தை வரையறை செய்து தந்தார்.
ஆண் - பெண் பாகுபாட்டை அவர் ஏற்றதில்லை, ஆயினும் பெண்கள் என்றால் அவர்களுக்கு முன்னுரிமையே பொருத்தமானது என்பது அவரின் முடிவு.
சாதி - மதங்களை அவர் வெறுத்ததில்லை. ஆனால், தீண்டாமை ஒன்றை மட்டும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது தீயை விடவும் கொடியது என்றே சாடி வந்துள்ளார்.
சுதந்திரம் அடைந்த மறுகணமே அனைத்துப் பள்ளி விடுதிகளையும் ஹரிஜனப் பிள்ளைகளுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்று அறுதியிட்டுச் சொன்னார்.
ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனி ஒதுக்கீடுகள் கோருவதையும் அதை ஒரு சட்டமாக்குவதையும் அவர் ஏற்கவில்லை. ஒரு சகோதரனை ஏன் சட்டப்படியும் விலக்கி வைக்க வேண்டும் என்பதுவே அவரது கேள்வியாக இருந்தது. அப்படிப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டம் இல்லாமல் - அனைவருக்கும் அடிப்படைக் கல்வி தரும் கடமை கட்டாயமாக நிறைவேற்றப்பட்டிருக்குமானால், இன்றளவும் தீண்டாமை நீடித்திருக்காது.
காந்தி பற்றி ஒரு வரி சொல் என்று என் பேத்தியைத் கேட்டேன்; அவரது எளிமை என்றாள். பேரனைக் கேட்டேன்; அவர் செய்த தொண்டு என்றான். பக்கத்திலிருந்த இளைஞன் ஒருவனைக் கேட்டேன்; அவர் கடைப்பிடித்த ஒழுக்கம் என்றான். என் மனைவியைக் கேட்டேன்; அவரது புலனடக்கம் என்றாள். மொத்தத்தையும் கூட்டிப் பார்த்தேன். காந்தியம் வீட்டிலிருந்து உலகம் வரையிலும் உள்ள பூசல்களையும் மோதல்களையும் அகற்றும் தீர்வுக்கான ஓர் அருமருந்து என்பதை உணர்ந்தேன்.
(நேற்று திங்கட்கிழமை காந்திஜி நினைவு நாள் ) - தினமணி -</b>
|
|
|
| ஆதிமனிதன் இறந்தது எவ்வாறு? |
|
Posted by: Shankarlaal - 02-07-2006, 10:18 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
<b>ஆதிமனிதன் இறந்தது எவ்வாறு?
பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன் றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்கு மனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப் பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர்.
டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோ தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூகித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக் கொல்லவில்லை. ஒரு பெரிய பறவை தான் வேட்டையாடிக் கொன்றது என்று பத்தாண்டுகளுக்கு முன்பு லீ பெர்ஜர், தமது சக ஆராய்ச்சியாளர் ரோன் கிளர்க்குடன் சேர்ந்து நிரூபித்தார். ஆதிமனிதனின் புதைபடிவுகள் கிடைத்த இடத்தில் இருந்த, சிறிய குரங்குகளின் புதைபடிவுகளில் இருந்து அவை, பறவைகளால் தான் கொல்லப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்ததில், கண் துளைகளுக்குப் பின்னால், ஒரே மாதிரியான துளைகளும், வெட்டுக்களும் தெரிந்தன. இதைப்படித்த பெர்ஜர், டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண் துளைகளுக்குப் பின்னால் வெட்டுக்காயம் ஏற்பட்ட சேதம் தெரிந்தது. ஆகவே, ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது உண்மை என்கிறார்கள்.
தினமலரிலிருந்து</b>
|
|
|
| குடிசை |
|
Posted by: starvijay - 02-07-2006, 10:15 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
<b>குடிசை</b>
என் வீட்டு அலாரம் என்னை எழுப்பியது....ஆம் சூரியன்தான்
என் வீட்டு ஷவரில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது....ஆம் மழைதான்
என் வீட்டு காத்தாடியில் வந்தது தென்றல்....ஆம் காற்றுதான்
இயற்கை என்வீட்டை சூழ்ந்து கொண்டதாலோ என்னவோ
ஒன்று மட்டும் தான் இப்போதைக்கு இல்லை....ஆம் உணவேதான்.
|
|
|
| பப்பாளிப்பழம் |
|
Posted by: starvijay - 02-07-2006, 03:13 AM - Forum: மருத்துவம்
- Replies (12)
|
 |
<img src='http://www.rachelleb.com/images/2004_06_20/papaya.jpg' border='0' alt='user posted image'>
<b>பழ வகைகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் எல்லாம் சிறந்தது பப்பாளிப்பழம் தான் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
இது உடல் ஆரோக்கியத்தை மீட்டு புத்துயிர் அளிப்பதால் இத்தகைய சிறப்புப் பெற்றுள்ளது. பொதுவாக மாம்பழத்தில் அதிக வைட்டமின்கள் உண்டு. இதற்கு அடுத்தபடியாக பப்பாளிப்பழத்தில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன.
அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ- தான் அதிக அளவில் இருக்கிறது. எனவே தான் இதை நைட்ப்ளைண்ட்னஸ் எனப்படும் மாலைக்கண் நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு அவுன்ஸ் பப்பாளி சுமார் 513 மில்லி கிராம் வைட்டமின் ஏ-வைக் கொண்டுள்ளது. அதே போல பி1, 11 மில்லி கிராமும், பி2, 2.72 மில்லி கிராமும், சி, 13 மில்லி கிராமும், இரும்புச்சத்து 0.1 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 0.3 மில்லிகிராமும் அடங்கி உள்ளன.
இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், வசதி படைத்தவர்களால் மட்டுமே பெரும்பாலும் உண்ணப்படும் ஆப்பிள் பழத்தை விட இதில் உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கி உள்ளன.
பப்பாளி ரத்த உற்பத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதால் பெரும்பாலான நோய்கள் வரும் முன்னரே தடுக்கப்படுகின்றன.
மலச்சிக்கலைத் தடுக்கவும், பெண்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், பல் தொடர்பான நோய்களைப் போக்கவும் இது பயன்படுகிறது. நரம்பு மண்டலத்துக்கு உரமேற்றும் தன்மை இதற்கு உண்டு என்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
|
|
| சதி கொன்ற சாவு.'கௌசல்யன்" |
|
Posted by: shanthy - 02-06-2006, 08:17 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
கௌசல்யனின் சாவறிந்த தினம் எழுதப்பட்ட கவிதை. இன்று கௌசல்யனின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு மீளவும் பதிவாகிறது.
சதி கொன்ற சாவு.
'கௌசல்யன்"
சத்தமின்றி இருந்த வீரன்
சத்தமின்றி எங்கள் மனங்களை
வென்று போன சத்தியன்.
மோப்பர்களை மீட்பர்களாய்
நம்பிய பாவம்
எங்கள் மீட்பர்களே
உங்களை நாம் இழந்து போக
அரச மோப்பரே சாட்சியாக.....
கண்காணிப்போர் கண்களில்
உங்கள் சாவு
குழு மோதல் என்பதாக.....
சார்ந்து நின்று நீதி சொல்லும்
பணிசெய்ய வந்த
பிணியரே இவர்களெல்லாம்.
கருணாவின் சதியென்று கதைபூசி
கௌசல்யன், புகழன்,
செந்தோழன், நிதிமாறன்
சாவிதனை விதியென்றா எழுதிவிட....?
இல்லையில்லை,
சதிகொன்று போனதெங்கள்
சந்ததியின் விதிமாற்றி எழுதிப்போன
வீரர்கள் வரிசையிலே
உரமாகிப் போனவர்கள்.
07.02.05.
|
|
|
|