![]() |
|
ஆடிய ஆட்டம் என்ன? ரெலோ பொபி மரணம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஆடிய ஆட்டம் என்ன? ரெலோ பொபி மரணம். (/showthread.php?tid=987) |
ஆடிய ஆட்டம் என்ன? ரெலோ பொபி மரணம். - வினித் - 02-07-2006 முன்னாள் ரெலோ பொபி பிரிவின் தலைவர் பொபி மரணம். ரொலோ அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான பொபி காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 85, 86 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரொலோ அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டவேளை தாஸ் (தாஸன்)தலைமையிலான குழுவும், பொபி தலைமையிலான குழுவுமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வாழ்ந்துவந்த பொபி சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் நல்லூரைச்சேர்ந்த பொபி, 80 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ரொலோ இயக்கத்தில் இணைந்து, சாவகச்சேரி தாக்குதல் உற்பட பல்வேறு பட்ட தாக்குதல்களிலும் முன்னின்று செயற்பட்டவராவார். 85 ஆம் அண்டுகாலப்பகுதியில் எற்பட்ட பிளவுகளை அடுத்து ரொலோ அமைப்பின் இராணுவத்துறை தலைவராக இருந்த தாஸ் உற்பட அவரது குழுவினரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் உள்ளே வைத்து பொபியே சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 86 களின் பின்னர் அரசியலில், போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருந்த பொபி, இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து தங்கியிருந்தார். கடுமையான சுகயீனம் காரமாக இவர் இறந்துள்ளதாக தெரியவருகின்றது. நன்றி: பதிவு - மேகநாதன் - 02-08-2006 தலைப்பை "நாகரிகமுடையதாய்" மாத்தலாமே...? ஏனென்றால்,இவ்வாறு பல்வேறு தளங்களிலும் "ஆட்டம் போட்டு" கொட்டம் அடித்து மக்களைத் தமது "தொடர்புகள்" காரணமாக (எ-கா:- ஊடகத்துறை) "ஆட்டிப்படைத்த" பல்வேறு "துரோக" வரலாற்றுப் பின்னணி கொண்டவர்களுக்கு "கவுரவ விருதுகள்" வழங்கப்பட்டுளதை நினைத்துப் பார்த்தால்....இத்தகைய தலைப்புக்களின் "தன்மை" புரியும்... - MUGATHTHAR - 02-08-2006 Quote:86 களின் பின்னர் அரசியலில் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருந்த பொபி சில இணையத் தளங்கள் அவர் மறைமுகமா ஓட்டுப்படைகளுக்கு துணைபோனதாக சொல்லுகிறது எதுதான் உண்மையோ..........????. ஆனால் இவரின் பெயர் பெரிதாக அடிபடவில்லையே.......... Re: ஆடிய ஆட்டம் என்ன? ரெலோ பொபி மரணம். - Thala - 02-08-2006 வினித் Wrote:86 களின் பின்னர் அரசியலில், போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருந்த பொபி, இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து தங்கியிருந்தார். கடுமையான சுகயீனம் காரமாக இவர் இறந்துள்ளதாக தெரியவருகின்றது. சுகயீனம் எண்று மட்டும் போட்டிருக்கிறார்களே இது சரியா...??? என்ன சுகயீனம் எண்று போட வேண்டாமா. உதாரணமாய் எயிட்ஸ் இப்பிடி.......... இல்லை இப்ப வசம்பண்ணா வந்து கேப்பார் பதில் சொல்லணும் இல்ல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|