Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 585 online users.
» 0 Member(s) | 581 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,121
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,098
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,558
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,264
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,550
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,955
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,340
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,991
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,954
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,221

 
  பாப்பாவும் பார்த்தீபனும்...!
Posted by: sharish - 09-05-2003, 08:45 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

பாப்பாவும் பார்த்தீபனும்...!

(கிட்டத்தட்ட நான்கு வயது சிறுமி ஒருத்தியிடம்
தியாக தீபம் திலீபனைப்பற்றி என்னதெரியும் என கேட்டபோது...
அந்தச் சிறுமி வார்த்தைகளை விழுங்கி விழுங்கி
சொன்ன பதில் என்னை மெய்சிலிர்க்கச் செய்தது
அவள் சொன்ன வார்த்தைகளை கவிதையாக
எழுது என்றது எனது.........)

சுதந்திர வாழ்வுக்காக
எம் இனத்தின்
இலட்சிய வேள்விக்காக
எம் இதய நிலத்திற்காக
இரத்ததானம் வழங்கிய...
ஈரநெஞ்சம் கொண்டவர்
எங்கள் திலீபன் அண்ணா....!

முந்தையர்கள் சொல்லக்கேட்டு
இந்தக்கதை நான் அறிந்தேன்
என் நெஞ்சுவரை வந்தசோகம்
நெருப்பாக எரியக்கண்டேன்
பேச்சிழந்து போனேன் நான்
வண்ணமொழி மறந்தேன் நான்
வாய்திறந்து வாழ்த்திவிட
வாராதாம் ஒரு சொல்லும்...!

உண்ணாமல் உருகிநின்ற உத்தமனை
எண்ணாமல் நாமிருந்தால்-அவர்
கண்ணான கனவெல்லாம்
மண்ணாகிப்போகாதா...???

பசியோடு இருந்தாராம்
பாரதத்தை எதிர்த்தாராம்
பார்போற்ற உயர்ந்தாராம்

இதையெல்லாம்
முந்தையர்கள் சொல்லக்கேட்டு
மூச்சிழந்து போனேன் நான்
நெஞ்சவரை வந்தசோகம்
நெருப்பாக எரியக்கண்டேன்
கண்ணிரெண்டில் வந்தகண்ணீர்
கடலாக மாறக்கண்டேன்
பேச்சிழந்து போனேன் நான்
வண்ணமொழி மறந்தேன் நான்
வாய்திறந்து வாழ்த்திவிட
வாராதாம் ஒரு சொல்லும்...!


த.சரீஷ்
03.09.2003 பாரீஸ்

Print this item

  ஒப்பந்தம்
Posted by: sharish - 09-05-2003, 08:42 AM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

ஒப்பந்தம்

அருகில் இருந்த
என் அமுதசுரபி
கண்களால் கதைபேசிக்கோண்டே
காதல் மழை பொழிய
நானும்....
என்னை மறந்து நின்றேன்...!

திடீரென்று...
என் கைக்கடிகாரத்தைத் திருப்பி
அய்யோ......
ஆறு மணி ஆச்சென்று
என்னிரு கைகளையும்
அன்போடு அழுத்திக்கொண்டு...
புரிந்துணர்வு...
ஒப்பந்தம் ஒன்று செய்தாள்
''மீண்டும் நாம்
நாளை சந்திப்போம்''...!!!

நானும் மறுநாள்
அன்பானவளைக்காண
ஆசையோடு தயாரானேன்...!
மூன்று முறை
முகம் கழுவினேன்
நான்குமுறை
உடை மாற்றிக்கொண்டும்
மனதுக்குத் திருப்பதியில்லாததால்
ஜந்தாவது உடை
அணிந்துகொண்டேன்
கண்ணாடி முன்நின்று
பலதடவை முகம்பார்த்தேன்
பதினாறு தடவை
தலைமுடியை சரிசெய்தேன்
இருபது ஈரோவை
சட்டைப்பைக்குள்
வைத்துக்கொண்டேன்
அடிக்கடி...
கடிகாரம் பார்த்து
அவசரமாக தயாராகி
நண்பனிடம் ஓடிப்போய்
'கார்' இரவல் வாங்கி
காதலுடன்...
நாலுமணிக்கே சென்று
அவளுக்காகக் காத்திருந்தேன்

மணி ஓடுகிறது
ஒப்பந்தம் செய்தவள்
ஓடிவரவில்லை...!?
நான்கரை மணி....
ஜந்து மணி....
ஜந்தரை மணி....
ஆறுமணி....
நேற்று ஆறுமணிக்கு...
நாளை சந்திப்போம் என
ஒப்பந்தம் செய்தவள்
இன்று ஆறுமணியாகியும்
வரவே இல்லை...
கண்மணியாள் வந்து
கண்களுக்கு விருந்து
தரவே இல்லை...!

கால்கள் சோர்வுடன்
திரும்பி நடந்தது...
கனவுகள் சுமந்து
காத்திருந்த இதயம்
என்னைக் கேட்டது....
காதல் பிரச்சனை
என்றாலும்....
மோதல் பிரச்சனை
என்றாலும்......
ஒப்பந்தம் என்றால்...
இப்படித்தானோ..???


த.சரீஷ்
03.09.2003 பாரீஸ்

Print this item

  உண்மையில் என்ன நடக்கின்றது !!
Posted by: Paranee - 09-05-2003, 08:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

உண்மையில் என்ன நடக்கின்றது !!
யாழ் நகரின் பிரதான வீதியில் பட்டப்பகலில் சம்பவம் கத்திகள்
பொல்லுக்கள் சகிதம் இளைஞனை விரட்டிய கும்பல் உயிர் தப்ப அவர்
காவலரணில் தஞ்சம்
யாழ்.பிரதான வீதியில் நேற்று மாலை கத்திகள், பொல்லுகள் சகிதம் கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரைத் தாக்கியுள்ளது. உயிர் தப்புவதற்காக ஓடிய இளைஞரை அந்தக் கும்பல் வீதியில் நீண்ட து}ரம் விரட்டிச் சென்றுள் ளது.அந்த இளைஞன் உயிர் தப்புவ தற்காக யாழ்.சிறைச்சாலைக்கு அண் மையில் இருந்த இராணுவக் காவல ரணில் தஞ்சமடைந்தார்.யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டால் உயிராபத்தை எதிர் நோக்குவார் என்று தெரிவிக்கப்பட் டதையடுத்து யாழ்.நீதிமன்றத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை பிணை யில் விடுவிக்கப்பட்ட டி.ஈ.ஏ.ஜெயக் குமார் என்ற இளைஞரே இவ்வாறு வீதியில் விரட்டப்பட்டு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
இவரை வீதியில் விரட்டிச் சென்ற கும்பலில் 10இற்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட வர்கள் தெரிவித்தனர்.இளைஞன் இராணுவக் காவல ரணில் தஞ்சமடைந்ததை அடுத்து துரத்திவந்த கும்பல் அவரை வெளியே விடுமாறு கோரி காவலரண் முன்பாகக் கூச்சலிட்டுள்ளது.~~அவர்கள் கூச்சலிட்டதைக் கண்ட அந்த இளைஞர் தன்னை அவர்களி டம் ஒப்படைக்கவேண்டாம் என இராணு வத்திடம் கெஞ்சி மன்றாடினார். இராணு வம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி யதால் அந்தக் கும்பல் காவலரணுக் குள் நுழையாமல் பின்வாங்கி நின் றது||- என்றார் சம்பவம் முழுவதையும் நேரில் பார்த்த ஒருவர்.சிறிது நேரத்தில் சம்பவ இடத் துக்கு வந்த பொலீஸார் அங்கு கூடியிருந் தவர்களை கலைந்து போகச் செய் தனர்.அவர்களில் இரு இளைஞர்க ளைக் கடுமையாக எச்சரிக்கை செய் தனர்.
பொலீஸார் சம்பவ இடத்துக்கு வரும் முன்னரே இளைஞர் காவலர ணின் பின்புறமாக வெளியேறி தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட் டது. எனினும் பின்னர் யாழ்.பொலீஸ் நிலையத்துக்கு வந்த அவர் தான் கும் பலால் தாக்கப்பட்டது குறித்து முறைப் பாடு செய்துள்ளார்.யாழ்.நீதிமன்றத்தில் இந்த இளை ஞருக்கு எதிராக ஏற்கனவே சில முறைப்பாடுகள் உள்ளன. இதில் ஒரு முறைப்பாடு தொடர்பாக இவர் யாழ். சிறைச்சாலையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறைச்சாலை அதிகாரிகளால் தான் தாக்கப்பட்டதாக அவர் மனித உரிமை கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருந்தார். அது தொடர் பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.இதற்கிடையில் -
கடந்த திங்கட்கிழமை இரவு கோயில் வீதியில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் அலுவலகத் துக்கும் சமீபமாக இளைஞர் குழு ஒன்று சில வீடுகளைத் தாக்கி சேதப்படுத்தியதில் இந்த இளை ஞரது வீடும் அடங்கியுள்ளது என் பதும் குறிப்பிடத்தக்கது.


www.uthayan.com

Print this item

  HcZ
Posted by: sethu - 09-04-2003, 08:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<img src='http://www.spur.asn.au/TIGERTRAP-TIMES-AUG3-03.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  சீதனம்
Posted by: இனியவன் - 09-04-2003, 01:42 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (49)

நண்பர் ஒருவரது பிரச்சனை. அவரது அக்காவிற்கு திருமணமப் பேச்சு நடைபெற்றுள்ளது. சீதனமாக 30 இலட்சம் ரூபாவும், யாழ்ப்பாணத்தில் (நகரை அண்டிய பிரதேசத்தில்) காணியுடன் சேர்ந்த வீடு சீதனமாகத் தரவேண்டும் என கேட்டுள்ளார்களாம். நண்பர் கஸ்ரப்பட்டு இப்பணத்தை உழைத்த அனுப்புவதா? அல்லது சீதனம் பெறாது வரும் ஒருவருக்கே அக்காவை திருமணம் செய்து வைப்போம் எனக்கூறி தற்போது நடைபெற்ற பேச்சினைக் குழப்புவதா? இங்கே சீதனம் பற்றி ஏற்கனவே பலர் பலவிதமான கருத்துக்களை வைத்துள்ளார்கள். இவரின் பிரச்சனைக்கு ஆரோக்கியமான நல்லதொரு தீர்வினைத் தாருங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  பருவம் - என்றால் என்ன?
Posted by: Chandravathanaa - 09-04-2003, 06:32 AM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

[size=7][b]படித்த கவிதை.
எழுதியவர் யாரெனத் தெரியவில்லை.

[b]பருவம் - என்றால் என்ன?
[b]பருவம் என்றால்
ஆணுக்குச் சிறகுகளும்
பெண்ணுக்கு விலங்குகளும்
உருவாகும் காலம்.

Print this item

  வெகுவிரைவில்.. எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே. . . .
Posted by: Paranee - 09-04-2003, 05:07 AM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

வணக்கம்.
திரு.சோழியன் (இராஜன் முருகவேல்) அவர்களின் <b>"ஐஸ்கிறீம் சிலையே நீ தானோ? " </b>என்ற தொடர்கதைக்கு ஒரு வெற்றிவாகைசூடும் நோக்கில் அவருடைய கதையுடன் மருவிய ஓரு கவிதை இது. . இதுவும் ஒரு நட்பு(காதல்). முற்றுப்பெறாத ஓன்று. .
ஒரு தொடராக யாழ் இணையத்தில் விரைவில். . .

நிலா கண்டவுடன்
நிழல் கண்டவுடன்
நீ வந்ததென்று உள்ளம் துள்ள. .
பாடல் ஓன்று இணையவானொலியில்
ஓலித்துக்கொண்டிருக்க இணையதோட்டத்தில்
நான் மேய்ந்துகொண்டிருக்கின்றேன். .

தொடரும்.........வெகுவிரைவில்.............

Print this item

  General Error
Posted by: yarlmohan - 09-03-2003, 04:55 PM - Forum: களம் பற்றி - Replies (3)

கருத்துக்களை அனுப்பும்போது
Failed sending email :: PHP ::

DEBUG MODE

Line : 246
File : /home/yarlcom/public_html/forum/includes/emailer.php

என்னும் தகவல் வருகின்றது. இது ஏன் வருகின்றது என்று தெரியாதுவிடினும் கருத்தினை மின்னஞ்சலில் பெற இணைந்து கொண்டவர்களுக்கு மின்னஞ்சல் கிடைக்கப்பெறாது என நினைக்கின்றேன். விரைவில் பிழையினை தேடிப் பிடிக்க முயல்கின்றேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  முஸ்லீம் சகோதர்களே..
Posted by: kuruvikal - 09-01-2003, 08:10 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

<span style='font-size:25pt;line-height:100%'>முஸ்லீம் சகோதர்களே....</span>

நீங்கள் தமிழ்மக்களுக்கு எதிராக இன்று ஆயுதம் ஏந்தப் போவதாக செய்திகள் வருகின்றன...ஆனால் நீங்கள் (முஸ்லீம் ஊர்காவல்படை..ஜீகாத் இயக்கம்...முஸ்லீம் குண்டர் படை) கிழக்கில் மற்றும் வடக்கில் குறிப்பாக மன்னார் பகுதிகளில் தமிழ்மக்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அவர்கள் மீது துனபங்களை கடந்த காலங்களில் விளைவித்துள்ளீர்கள்....அதுவும் சிறு சிறு காரணங்களுக்காக தமிழ்மக்களை வருத்தி கொன்றொழித்து காட்டிக்கொடுத்து சிங்கள பேரினவாத ஏகாதபத்தியத்திடம் நற்சான்றிதழ் வாங்க விளைந்தீர்கள்....ஆனால் சிங்களம் அதற்கான நல்ல பரிசில்களை மருதானையில் மாவனல்லையில் புத்தளத்தில் இரத்தினபுரியில் காலியில் கண்டியில் என்று 1990க்குப் பின்னர் மீது எவ்வித காரணங்களும் இன்றி வன்முறையாகக் கொடுத்தபோது உங்கள் சந்தர்ப்பவாத குழப்பகார அரசியல் கூச்சல்கள் குழப்பங்கள் எங்கே போனது...ஏன் நீங்கள் அங்கெல்லாம் இன்னும் தனியலகு கேட்கவில்லை.....?!

நீங்கள் (அப்பாவி முஸ்லீம் சகோதரர்கள் அல்ல சந்தர்பவாத அரசியல் சிறுமைகள்) இன்று தனியலகு தமிழர்களிடம் கேட்பதற்கான காரணம் தமிழ் மக்கள் நாடாத்திய விடுதலைப் போரினால் உங்களிடம் வந்து சேர்ந்த பாராளுமன்றக் கதிரைகளே...தமிழ் மக்கள் தேர்தல்களைப் புறக்கணித்த போது உங்கள் சந்தர்ப்பவாத வன்முறைவாத தலைமைகள் உங்களை தமிழ் மக்களுக்கு எதிராகத் துண்டிவிட்டு தமிழ் மக்களின் போராட்டதுடன் அதன் தார்மீகம் நியாயம் அறிந்து ஐக்கியமாகியிருந்த உங்களை அந்நியப்பட வைத்து தேர்தல்களில் உங்கள் ஏகபோக வாக்குப்பலத்தை பிரயோகித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களால் வரவேண்டிய கதிரைகளை குறைந்த வாக்குப்பலத்துடன் கைப்பற்றி, கிழக்கை முஸ்லீங்களின் மாகாணம் எனக்காட்டி......பலவீன சிங்கள அரசியல் சந்தையில் தங்களை பலமான வியாபாரிகள் ஆக்கி மந்திரிப்பதவிகளை ஆக்கிரமித்து.... சுகபோகம் கண்டதை உங்கள் சந்தர்ப்பவாத தலைமைகள் இழக்க விரும்பாமையே ஆகும்...அதைத் தொடரவிளைவதே மீண்டும் வடக்குக்கிழக்கில் இயல்புநிலை, நீடித்த சமாதானம் வர விரும்பாமைக்கான முக்கிய காரணம் ஆகும்......! ஆனால் இன்று அவர்கள் அதற்காக தமிழ்மக்கள் மீதும் அவர்களின் பிள்ளைகள் மீதும் தவறான கருத்துக்களைப் பரப்பி மேலும் பகைமையை மூட்டி ஆயுதங்கள் மூலம் பிரிவினை கோரும் அளவிற்கு தமது அரசியல் சிறுமையை, தமது மூலத்தைக் காட்ட விளைந்துள்ளனர்....!

இது அப்பாவி முஸ்லீம் சகோதரர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதையே காட்டி நிற்கிறது....காரணம்..அவர்கள் மந்திரிகளாகி அப்பாவி மக்களின் கஷ்டங்களுக்கு என்ன பரிகாரம் கண்டனர்...எத்தனை முஸ்லீம் இளைஞர்களிடம் இதோ வேலை வாங்கித்தருகிறோம் என்று பணம் பெற்றிருப்பர்....ஆனால் செய்தனரா????...தங்களின் உறவுகளுக்கு மட்டும் துறைமுகங்களில் குறைந்த கல்வித்தகமைகளைக் காட்டியே வேலை பெற்றுக் கொடுத்துள்ளனர்...பட்டம் பெற்ற எத்தனை முஸ்லீம் சகோதர சகோதரிகள் வேலை இன்றித் திண்டாடுகின்றனர்.....எத்தனை பேர் அகதிமுகாம்களில் வாடுகின்றனர்...ஏன் அவர்கள் மூட்டிய பகைமைத்தீ கொழுந்து விட்டதன் விளைவே...இன்று தமிழ் மக்களும் சரி போராளிகளும் சரி கடந்த காலத்தவறுகளை மன்னிக்க தயாராக உள்ளனர்...சகோதரர்களிடையே வந்த சச்சரவு போன்று கடந்தவற்றை இருதரப்பும் மறந்து மீண்டும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ்வதே எமது விருப்பம்....தமிழ்மக்கள் சிங்களவர்கள் போன்று உங்களை அடக்கவேண்டிய தேவையில்லை காரணம் அவர்கள் அடக்குமுறையின் வேதனையை அறிந்தவர்கள்...அதனால்தான் முஸ்லீம் மக்களும் வடக்குக்கிழக்கில் சுயநிர்ணயத்துடன் வாழலாம் என அழைத்தனர்...சிங்களம் அப்படி ஒருபோதும் தமிழ் மக்களை அழைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்....! எனவே அப்பாவி முஸ்லீம் சகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்கள் நண்பனாக உங்களுக்கு அடைக்கலம் தந்த உறவினனாக உங்கள் பிள்ளைகள் படித்துப் பட்டம் பெற உதவிய கரங்களாக உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை சமர்ப்பிக்க விரும்புகின்றோம்....உங்களின் மத்தியில் வளர்ந்துவரும் சந்தர்ப்பவாத வன்முறைவாத அரசியல் சக்திகளுக்கும் அவர்களின் பொய்க்கருத்துக்களுக்கும் பொய்ப்பரப்புரைகளுக்கும் இடம் கொடாமல் உங்களை என்றும் அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கும் உங்கள் சகோதரர்களான தமிழ் மக்களுடன் என்றும் சகோதரத்துவம் காக்க விளையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்....!

நன்றி...!
உங்கள் சகோதரன்,நண்பர்கள்
குருவிகள்..!

Print this item

  இடம்பெயர்வும் புலம்பெயர்வும்
Posted by: Mathivathanan - 08-31-2003, 09:21 PM - Forum: புலம் - Replies (24)

நேற்று காயா பழமா வானொலி நிகழ்ச்சியில் ஒரு நேயர் தான் யாழ்ப்பாணம் போய்.. வேப்பமர நிழலில் இருந்து சுகபோகம் அனுபவித்து கிணற்றில் அள்ளிக்குளித்து இளநீர் வெட்டிக்குடித்து தாகம் தணித்து சுவிஸ் திரும்பியதாகவும்.. மற்றும் தனது நண்பன்.. சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டு கொழும்பிலிருந்த தனது தாயையும் தங்கையையும் மாழ்பாணத்தில் பிரச்சனைகள் எதுவுமில்லை அந்தமாதிரி இருக்கிறது.. நீங்கள் அங்கு போயிருங்கள் என்று கூறிவிட்டு திரும்ப சுவிஸ் வந்ததாகவும்.. வானலைகளில் கூறினார்.. இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item