| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 351 online users. » 0 Member(s) | 348 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,161
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,169
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,571
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,270
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,562
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,990
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,391
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,057
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,965
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,230
|
|
|
| மன்மதராசா பாடல் குரலிற்கு சொந்தக்காரி |
|
Posted by: Paranee - 09-27-2003, 08:39 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
மன்மதராசா பாடல் குரலிற்கு சொந்தக்காரி
<img src='http://www.vikatan.com/av/2003/sep/28092003/p2.jpg' border='0' alt='user posted image'>
கொசுறுத்தகவல்
2002 ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஐhனகியம்மா மற்றும் லக்ஸ்மன் சுருதி இசைக்குழுவினருடன் பகாPன் நாட்டில் (நான் வாழும் இந்த பாலைவனமண்ணில்) கலந்து சிறப்பித்த ஒரு பாடகி இவர்தான் என்பது இன்று ஆனந்தவிகடன் பார்க்கும்போதுதான் அறியமுடிகின்றது. அன்று அந்த பெருவிருட்சங்களிற்கு இடையில் இவர் சிறு புல்லாக இருந்தார். அதனால் இவரை நாம் கண்டுகொள்ளவில்லை. இன்று தேடித்திரிகின்றேன்.
நேற்று சிறீநீவாசஸ் சுஜாதாவின் இசைநிகழ்வு நடைபெற்றது. அதில் சுஜாதவின் குரல் என்ன ஒரு இனிமை.
வாழ்த்துக்கள்
|
|
|
| நவராத்திரி |
|
Posted by: Kanani - 09-27-2003, 12:25 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (12)
|
 |
இன்று முதல் 26-09-2003 நவராத்திரி தொடங்குகிறது...
<img src='http://www.neonblue.com/tfs/saras.jpg' border='0' alt='user posted image'>
அலை மகள், மலை மகள், கலை மகள் மூவரையும் வழிபடும் நாட்கள் நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.
9 நாளும் நவ தானியங்களை சுண்டல் செய்து படைப்பர். பாசிப்பருப்பு, கடலை பருப்பு, பச்சை பயறு, கொண்டை கடலை, போன்றவற்றில் நைவேத்தியங்கள் படைக்கப்படும்
நவராத்திரி தினங்களின் போது அபிராமி அந்தாதி சகலகலாவல்லி மாலை என்பன படிக்கப்படும்.
இதன்போது பயறு முளைக்க போடுவார்கள் (நவதானியத்தில் ஒன்று)
யாழ்ப்பாணத்தில்.. சரஸ்வதிபூசைக்கு புத்தகங்கள்.. வாத்தியங்கள் வைப்பார்கள்
கொழும்பில் தமிழ்நாட்டு முறைப்படி கொலுவைப்பதை பார்த்திருக்கிறேன்.
10வது நாள் விஜயதசமி அன்று.. பாடசாலையில்.. ஏடு தொடக்குவார்கள்..
நவராத்திர சம்பந்தமாக மேலும் தகவல் கதைகள் தெரிந்தால் எழுதுங்கள்...தேவாரமும் எழுதுங்கள்
நவராத்தியில் அம்மனை பிரார்த்தித்து நலம் பெறுவோம்.
|
|
|
| அந்த நாளின் நினைவு இன்று.....! |
|
Posted by: shanthy - 09-26-2003, 06:10 AM - Forum: தமிழீழம்
- Replies (3)
|
 |
[size=18]அந்த நாளின் நினைவு இன்று.....!
- சாந்தி ரமேஷ் வவுனியன் -
தீவிழுங்கிச் சாவெழுதும்
சரித்திரம் படைத்திடும்
புலியணியில் படை நடத்தி
பூக்கள் மனதிலும் பூத்தவன்.
காக்கிறோம் என வந்தோரின்
கதைகளெலாம் பொய்யாகி
தமிழர் சாக்கிடங்கில் அடுக்கப்பட
சரித்திரமாய் எழுந்து - எங்கள்
தரித்திரம் துலையவென.....
தானெழுந்து சாவதனை
சந்திக்க நாளெழுதி - தீ
எங்கள் திலீபன்
உண்ணாநோன்பினொடு
உயிர் தேய.....
நல்லைநகர் வீதியிலே
நனைந்து விழிகளெல்லாம்
அழுது வழியனுப்ப
வயிற்றில் தீயேந்தி
வல்லரசின் முகம்நோக்கி
வீரன் திலீபனின்
மரணப்போர்.....
'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்"
கந்தன் சன்னிதியில்
பன்னிருநாள் தவமிருந்து
தன்னையழித்துத் தரணியில்
அகிம்மை எதுவென்றுரைத்து
அணைந்த பிள்ளை
எம் பூமிவிட்டு வானேறி
வருடங்கள் பதினாறாம்.....
நேற்றுப்போல் எல்லாமே.....
நாவடங்கி , மூச்சடங்கி.....
நாமெல்லாம் அழுது நின்ற
அந்த நாளின் நினைவு இன்று.....
அழுவதே எம் விதியென
எழுதியோர் விதியழிய
எழுதுவோம்......,
வீழ்ந்தவர் மீதொரு சத்தியம்
செய்தினி எழுதுவோம்
எங்கள் வீரர் கனவுகள்
வென்றிடும் நாளினி
விடியுது காணுவோம்.
25.09.03.
|
|
|
| ஜோதிட பைத்தியங்களே... |
|
Posted by: சாமி - 09-25-2003, 08:06 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (6)
|
 |
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் நண்பரைப் பார்க்கச் சென்றேன். அங்கு அவர் ஜோதிட நிகழ்ச்சிகளை தயாரித்து அளிப்பவர். நானும் அன்று அவருடன் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தேன். பார்த்ததும் அதிர்ந்து போய் விட்டேன்.
அன்று 25 நாட்களுக்கு தேவையான ராசிபலன்களை எந்த விதக் குறிப்புமின்றி மளமளவென்று பிரபல ஜோதிடர் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க, அது கேமிராவில் பதிவு செய்ய பட்டது.
அந்த நிகழ்ச்சி பற்றி குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் நண்பர், தன் குறிப்புகளைப் பார்த்து ஜோதிடரிடம், "சார், நீங்கள் சிம்மராசிக்கும், மேஷராசிக்கும் ஒரே நிறத்தை தொடர்ந்து மூன்று நாள் கூறி விட்டீர்கள். சரியா?' என்றார்.
அலட்டிக் கொள்ளாமல், "அப்படியா? மறந்து போய் சொல்லிவிட்டேன், வேறு ராசி எண்கள், நிறத்தைக் கூறுகிறேன். திரும்ப படம் பிடித்துக் கொள்ளுங்கள்' என்றார் ஜோதிடர். அதைக் கேட்டு சிலையாகி விட்டேன்.
அரைகுறையாக ஜோதிடர்கள் சொல்லும் ராசி பலன் நிகழ்ச்சியை நம்பி தினமும் அதற்கேற்ப நடந்து கொள்ளும் ஜோதிட பைத்தியங்கள் இது தெரிந்து திருந்த வேண்டும்.
—எஸ்.சுப்ரமணியன்,
குரோம்பேட்டை.
நன்றி: தினமலர்
|
|
|
| இணைய ஊடுருவல் உஷார்!! உஷார்!! |
|
Posted by: சாமி - 09-25-2003, 07:50 PM - Forum: இணையம்
- Replies (2)
|
 |
இணையத்தில் நீங்கள் உலா வரும்போது சில தளங்களை அமைத்தவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் புகுந்து அதில் உள்ள தகவல்களைத் திருடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. நான் என் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பில் வைத்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். அது எந்த அளவிற்கு பாதுகாப்பு என்பதை அறிய கீழ்க்காணும் இணைய தளத்திற்குச் செல்லவும். http://www.staysafeonline.info. இதில் Self Test, என்ற பகுதியில் சென்றால் எந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரை இணைய ஊடுருவலிலிருந்து பாதுகாப்பாக வைத்தி ருக்கிறீர்கள் என்று தெரிய வரும். பின் அந்த தளத்திலேயே Security tips section என்ற பிரிவிற்குச் செல்லுங்கள். இதில் தரப்பட்டுள்ள பாதுகாப்பு குறிப்புகளையும் படியுங்கள். நீங்கள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையோ அவை அனைத்தையும் மேற்கொள்ளுங்கள்.
நன்றி: தினமலர்
|
|
|
| Yahoo குழுக்களுக்கு இந்தியாவில் தடை |
|
Posted by: சாமி - 09-25-2003, 07:45 PM - Forum: இணையம்
- Replies (1)
|
 |
இன்டர்நெட் தொடங்கப்பட்ட காலத்தில் அது யாருக்கும் சொந்தமானது அல்ல என்ற கருத்து பரவலாக இருந்தது. இன்டர்நெட் இணைப்பில் உள்ள ஏழை பணக்காரர் ஆகிய யாவரும் இது தொடர்பாக தகவல்களை சமமாக பெற்றுக்கொள்ளலாம்.
இன்டர்நெட்டின் உடனடி பயனாக இமெயில் இருந்தது. அதன் பின் குரூப் எனப்படும் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதாவது எந்த ஒரு துறையில் ஆர்வம் உள்ளவர்களும் அது தொடர்பான விஷயங்களை விவாதித்துக் கொள்ள இன்டர்நெட்டில் குழுக்களை தொடங்கினர்.
உதாரணமாக ரஜினி ரசிகர்களோ, போன்சாய் மரம் வளர்ப்பவர்களோ, விண்வெளி நிகழ்ச்சிகளுக்காகவோ, அண்டை நாடுகள் தொடர்பாகவோ எத்தனையோ காரணங்களுக்காக அவர்கள் குழுக்களை தொடங்கி அது தொடர்பான உடனடித் தகவல்களை பரிமாறி வந்தனர். இதற்கு முதலில் உதவியது யாஹூ நிறுவனம்தான். முகவரி: http://groups.yahoo.com/groups/ இத்தளத்தில் யார்வேண்டுமானாலும் வேண்டிய குழுக்களை தொடங்கிக் கொள்ளலாம்.
இதில் சாதகமான அம்சங்களும் இருந்தது, பாதகமான அம்சங்களும் இருந்தது. அதாவது கலாசாரத்துக்கு பொருந்தாத சட்டத்துக்குப் புறம்பான விஷயங்கள் கூட விவாதிக்கப்பப்பட்டன பேசப்பட்டன. இங்குள்ள தகவல்கள் எல்லை கடந்தது என்பதால் பாகிஸ்தானை புகழ்பாடுபவர்களும், இந்தியாவின் செயல்களை இழிந்துரைப்பவர்களுக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. மேகலாயாவில் அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு இக்குழுக்கள் பரிந்து பேசியிருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தொலைதொடர்பு துறை வெளியிட்ட அறிக்கை மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைப்படுத்துவதற்கு பதிலாக அரசு இந்த குழுக்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக தடை செய்துள்ளது.
இதனால் சில பயனுள்ள தளங்களை நடத்தியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்தவிவாதக் குழுக்களில் களை எடுப்பதற்கு இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை வேண்டும். யாஹூ குழுத்தளத்துக்கு தற்போது இணைப்பு இல்லை. ஆனால் கூகுள் குரூப் வழக்கம் போல் செயல்படுகிறது. முகவரி: http://groups.google.com
நன்றி : தினமலர்
|
|
|
| எனது பதில் |
|
Posted by: thambythasan - 09-25-2003, 05:06 PM - Forum: புலம்
- Replies (35)
|
 |
http://www.sooriyan.com/etc/21.asp
வணக்கம்
இந்த பதிலுரை கம்பவாரிதி அவர்கள்; எழுதிய
கட்டுரைக்கு வெளிநாட்டில் வாழும் அகதித் தமிழனின் ஒரு பதிலுரை.
அது எதோ தெரியவில்லை இப்போது எல்லாம் ஈழத்து இலக்கியவாதிகளுக்கு வெளிநாட்டு தமிழர்களை குறை கூறி சிற்றின்பம் அடைவதில் பெருமகிழ்வு அடைகின்றார்கள். அவர்கள் தாம் கொண்ட தேசத்துக்காதலினால் வெளிநாட்டு தமிழர்களை அவ்வாறு மதிக்கும்படி சொல்கின்றார்கள்.
கம்பவாரிதி அவர்கள் எழுதிய கட்டுரையில் உண்மைகள் உண்டு தான். அவர் யாதார்த்தை எழுதியிக்கின்றார். வரவேற்கப்படவேண்டியதுதான். இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் சொல்லும் கருத்துக்களில் மறைந்திருக்கும் ஒரு பெரு உண்மையினை சொல்ல மறந்துவிட்டார். இன்று தேசத்தை நோக்கி படையெடுப்பவர்கள் வெளிநாட்டுக்கு வந்தவர்களில் அத்தனை பேர்களிலும் ஒரு 1 வீதத்தினர் மட்டுமே. தங்களுக்கு கிடைக்கும் சிறிய நேரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும், இந்தியாவின் தாஜ் மாகாளையும் தரிசிக்கச் செல்லாமல் ரமில் ஈழம் வருகின்றார்களே எதற்காக? ரிக்கட்டுகள் மலிவாய் கிடைக்கின்றது என கிழக்கும் அமெரிக்க நாடுகளுக்கு செல்லாமல் எதற்காக தங்கள் சொந்த நாட்டுக்கு வருகின்றார்கள்? யார் அவர்களின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து ரமில் ஈழத்துக்கு வரச்சொல்கின்றார்கள்? சிறிது யோசித்துப்பாருங்கள்? தப்பியோடியவர்கள் அப்படியா போன போன நாடுகளின் நீரோட்டத்தில் கலந்திருந்தால் இப்படி ஒரு தேசத்துக்கு யார் தண்ணீர் விட்டிருப்பார்கள்? நீங்கள் சொல்வது போல் வெறும் படம் காட்டுவதற்காக அங்கே வருகின்றார்கள்?
போராட்டச் சு10ழலில் அழிந்து போன இலக்கியத்துக்கு மகுடம் சு}ட்டிக்கொண்டு, தம்மை மனதளவில் தள்ளி வைத்தவர்கள் (அவர்கள் சொந்த நாட்டில் வசித்தாலும் கூட) வெளிநாட்டுக்கு வந்து தள்ளிப்போனவர்களுக்கு சமமானவர்களே!!
எத்தனையோ காரணங்கள் இருந்தும் தாய் மண்ணை நேசிக்கும் இந்த வெளிநாட்டுத் தமிழர்கள் இருக்கும் வரை எம் தமிழரின் வீரம் விலைபேசமுடியாது. உலகநாடுகள் தடை செய்தும் நாம் இப்போதும் தலை நிமிர்வதற்கு யார் காரணம்? யார் எம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவிசெய்யப்போவது? எம்மிடம் எண்ணைக் கிணறுகள் உண்டா?
அமெரிக்கா கொடுத்த ஆயுதமா ஆணையிறவு வெற்றியை ஈட்டி தந்தது??
ஊர் சென்று திரும்பி வருபவர்கள் மற்றவர்களிடும் "எங்கட நாடு நாடு தான்" என்று சொல்லி அவர்களையும் ஊருக்கு அனுப்பி தமிழ் தேசியம் வளர்க்கின்றார்கள். வெளிநாட்டில் பிறந்தாலும் நாட்டை பார்த்தபின்னால் தான் தமிழைப் படிக்க வேண்டும் என்று சொல்லும் எத்தனை குழந்தைகளை உங்களுக்குத்தெரியும்?
வெளிநாட்டு மக்களுக்குள்ளை எம் சொந்த கனவுகளை தொலைத்துவிட்டு ஆசையோடு அங்கே வருபர்களை அங்கு உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக மரியாதைக் கொடுத்து கவனிக்கும் போது அவர்களின் இதயம் நோகின்றது. அங்கே வருபவர்கள் வெளிநாட்டவர்களுக்கு சேவகம் செய்து விட்டு, அந்த பணத்தில் வருகின்றார்கள். அப்படி வருபவர்களிடம் நீங்கள் அடிமைகளா நடக்கும் எண்ணுவது அவர்கள் மகிழ்விக்கவல்ல, அவர்கள் கொண்டு வந்து பணத்திலும் பொருளிலும் ஆசைப்பட்டுத்தான் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.
பிழை இருவரிலும் தான். நாம் மனிதத்தை தொலைத்துவிட்டோம். அன்பால் மற்றவரை நேசிக்கக் கற்றுக்கொள்வோம். ஒருவரையொருவர் புரிந்துகொள்வோம்.
அதை விட்டு கனடாவுக்கு ஒருவரைக் கூப்பிட்டு பேசச்சொல்லும் போது இறந்த கம்பரைப் பற்றி கட்டுக் கட்டாய் அடுக்கு மொழியில் உரையாற்றுவது தேவையில்லை. வருகிறபோது எம் மக்களின் துயரங்களை அவர்களின் இலட்சிய சிந்தனைகளை மேடைகளில் கூறி, மாறாதவர்களையும் தமிழர்களாய் மாற்ற வேண்டும். இறந்த இலக்கியத்தை தமிழரின் தேசம் விடிவு கண்டபின் எடுத்து வைத்து து}சு தட்டலாம் தானே??
நடவடிக்கையில் இறங்குவோம். கதைப்பதனால் குறைகள் பலவற்றை நாம் பட்டியலிடலாம் (இருவர் பக்கத்திலும்)
நன்றி
தம்பிதாசன் - கனடா
|
|
|
| கவிஞர் கந்தையா இராஜமனோகரனின் 3கவிதை நூல்களின் அறிமுகம். |
|
Posted by: shanthy - 09-25-2003, 09:53 AM - Forum: நிகழ்வுகள்
- Replies (1)
|
 |
[size=18]கவிஞர் கந்தையா இராஜமனோகரனின் 3கவிதை நு}ல்களின் அறிமுகம்.
ஐபீசித்தமிழின் இன்னிசைக்குயில் 2003 நிகழ்ச்சியிலே இந்நு}ல்களின் அறிமுகமும் விற்பனையும் நிகழவுள்ளது.
தொடர்ந்து மறுநாள் ஜேர்மன் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் இராஜமனோகரனுடனான கலந்துரையாடல் நடைபெறுகிறது. அங்கும் நு}ல்களைப்பெற்றுக் கொள்ளலாம்.
ஐபீசி நிகழ்விலான அறிமுகம் இடம்பெறும் இடம் -
காலம் 04.10.03. மாலை 3.30 - 9.00.
HELMUT - KRONIG - HALLE
STOBELALLEE
DORTMUND.
கலந்துரையாடல் இடம் -
INTERNATIONAL ZENTRUM
FLASCHMARK AM INNENHAFEN
NIEDER STR - 5
DUISBERG
காலம் - 05.10.03. பகல் 12 மணி.
|
|
|
|