| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 504 online users. » 0 Member(s) | 502 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,159
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,164
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,569
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,266
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,560
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,986
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,387
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,053
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,964
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,229
|
|
|
| மொட்டைக்கு தடை |
|
Posted by: yarl - 09-23-2003, 10:03 AM - Forum: நகைச்சுவை
- Replies (3)
|
 |
நன்றி திண்ணை சஞ்சிகை
மொட்டை போட தடை - ஜெயலலிதா திடீர் உத்தரவு
தினகப்ஸா சிறப்பிதழ் - வழங்குபவர் சொதப்பப்பா
அழகைக் கெடுக்கிறது மொட்டை - போட வருகிறது தடை
இன்று காலை கண்விழித்த ஜெயலலிதா தன் மாளிகையில் பணிபுரியும் ஒருவர் சமயபுரத்தில் மொட்டை போட்டுக்கொண்டு வந்திருந்ததை கண்டு பெரும் கோபம் கொண்டதாக நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து தகவல் வந்தது.
அதனால், இன்று காலை முதல்வேலையாக எல்லா தமிழகக் கோவில்களிலும், மொட்டை போடும் வழக்கத்தை நிறுத்த தமிழக போலீசுக்கு ஆணை பிறப்பித்தார். இந்த அவசரச் சட்டத்தின் படி, கோவில்களில் மொட்டை போடும் வழக்கம் உடனடியாய் நிறுத்தப் படும் என்று தெரிகிறது. இதனால் நாவிதர்கள் சங்கம் பெரும் கோபம் கொண்டிருப்பதாய் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஜெயலலிதா நன்றாக இருக்கவேண்டும் என்று கோவில்களில் மொட்டை போடும் எம்எல்ஏக்கள் இதில் விலக்கு என்றும் சட்டம் திருத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகாத செய்தி வட்டாரங்களிலிருந்து செய்தி வந்திருக்கிறது.
***
தமிழக மக்களை மொட்டையடிக்கும் உரிமையை தி மு க விட்டுக் கொடுக்காது : கருணாநிதி கர்ஜனை
இன்று வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பது :
"உடன் பிறப்பே! தமிழக மக்களை மொட்டையடிக்கும் உரிமையை தி மு க என்றுமே கைவிடாது. தமிழ் மக்களின் தலையில் கை வைத்த ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை அரியணையிலிருந்து இறக்க உங்கள் முடியை அல்ல, முடிவில்லாத பணக் குவியலை வழங்குங்கள் " இவ்வாறு கருணாநிதியின் அறிக்கை கூறியது.
***
பெரியார் வழியில் ஆட்சி செய்யும் ஜெயலலிதா : கி வீரமஇணி பாராட்டு
இன்று எடைக்கு எடை பழைய பேப்பர் வாங்கும் விழாவில் பேசிய வீரமணி ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசியதாய் நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
"கண் மூடப் பழக்கமெல்லாம் மண் மூடிப்போகவேண்டும் என்று தந்தை பெரியார் விருப்பத்தை நிறைவேற்றும் வீராங்கனை ஜெயலலிதாவின் இந்தச் சட்டம் பெரியாரின் விருப்பத்தை அடியொற்றி இயற்றப் பட்டது. அய்யா அவர்களின் கனவு நிறைவேறும் காலம் வந்து விட்டது. மூடப் பழக்கங்களில் சகதியிலே முக்கி முக்கிக் குளிக்கும் மக்களைக் கரையேற்ற வந்த கலங்கரை விளக்கம் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு முன்பு சமூகநீதிக் காவலர் என்று பட்டம் வழங்கினோ. இஇனிமேல் மொட்டையை முறித்த மூதாட்டி என்ற பட்டம் வழங்குவோம். "
இவ்வாறு வீரமணி பேசியதாய் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
******
மொட்டை போட்டதற்காக சோ கைது
போலீஸ்காரர்கள் நேற்று சோவின் வீட்டைத் தட்டி மொட்டை போட்டதற்காக அவரை கைது செய்தார்கள் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மொட்டை எனக்கு கடவுளே போட்ட மொட்டை. நானாகப் போட்ட மொட்டை இல்லை என்று சோ அவர்கள் கூறியதைக் கேட்ட போலீஸ்காரர்கள், "இதே காரணத்தைத்தான் எல்லா மொட்டைகளும் கூறுகிறார்கள்" என்று பதில் கூறினார்கள் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்னுடைய மொட்டைக்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியாது, அந்தக் கடவுளுக்கும் தெரியாது, குருமூர்த்திக்குத் தான் தெரியும். இந்திய பாரம்பரியத்தில் மொட்டையின் இடம் பற்றி பத்து வாரத்துக்கு ஒரு தொடர் குருமூர்த்தி எழுதுவார். அத பின் என்னைக் கைது செய்யுங்கள் என்று சோ கேட்டுக் கொண்டதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
சிறைகள் நிரம்பி வழிகின்றன : மொட்டையா? சொட்டையா?
மொட்டையா , வழுக்கையா என்று தீர்மானிக்கமுடியாதபடி பலபேருடைய தலை இருப்பதால் காவல் துறையினர் பலரையும் சிறையில் நிரப்பி வருகின்றனர். மொட்டையல்ல சொட்டையே என்று தலை வழுக்கையர்கள் எப்போதும் பையில் மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று காவல் துறை உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு மருத்துவ மனைகளில் பெரும் வரிசை நிற்பதால், அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் எல்லாம் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைத்திருப்பதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
*******
மொட்டை தடுப்புக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஆதரவு.
மொட்டை போடுவது எந்த வேதத்திலும் , உபநிடதத்திலும் கோரப்படவில்லை என்று தாம் அத்தாட்சி கூறுவதாக காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் ஒரு உயிர் உள்ளது என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. இதனால், மொட்டை போடும்போது அந்த செல்களுக்கு வலிக்கும் என்றும் நவீன விஞ்ஞானம் கூறுகிறது என்று காஞ்சி சங்கராச்சாரியார் தெரிவித்தார். ஆகையால், அஹிம்சையை ஆதாரமாகக் கொண்ட நம் தேசம் மொட்டை போடுவதை உடனே தடுக்க வேண்டும் என்று தான் பிரார்த்தித்து வந்ததாக கூறினார். "என்னோட பக்தி உண்மையா இருந்தா, மொட்டை போடரதை தடை செய்ய ஒரு நல்ல தலைவரை அனுப்பி வையுண்ணு வேண்டிண்டேன். அதான் பகவானாப் பாத்து இந்த முதலமைச்சரை அனுப்பியிருக்கர்." என்று உரைத்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மொட்டை தடுப்புக்கு இராமகோபாலன் ஆதரவு
மொட்டை தடுப்புக்கு ஆதரவாக இராமகோபாலன் பத்திரிக்கையாளர்களிடம் இன்று பேசினார். முஸ்லீம்கள்தான் முடிவெட்டும் தொழிலில் இருக்கிறார்கள். அவர்களது தொழிலை நசுக்குவது ஒவ்வொரு இந்துவின் கடமை. ஆகவே மொட்டை தடுப்புக்கு என் ஆதரவு என்று கூறினார்.
இது கோவிலில் மொட்டை போடுவது பற்றியது என்றும், கோவிலில் மொட்டை போடுபவர்கள் எல்லோரும் இந்துக்களே என்றும் பத்திரிக்கையாளர்கள் ஞாபகப்படுத்தினார்கள்.
நீ கருணாநிதிகிட்ட போய் கேளேன். கடவுளே கருணாநிதிக்கு மொட்டை போட்டுட்டார். கருணாநிதியைத் தூக்கி ஜெயில்ல போடணும் என்று இராமகோபாலன் கூறினார்.
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்று பத்திரிக்கையாளர்கள் மீண்டும் கேட்டார்கள்.
மொட்டை போடுண்ணு கடவுள் கேட்டாரா. ஆட்டை வெட்டு கோழி வெட்டுன்னு கடவுள் கேட்டாரா என்று இராம கோபாலன் கூறினார்.
பாலாபிஷேகம் பண்ணனும்னு மட்டும் கடவுள் கேட்டாரா என்று ஒரு நிருபர் கேட்டார். நீ இந்து எதிர்ப்பாளன், முஸ்லீம்களின் அடிவருடி என்று அந்த நிருபரைத் திட்ட்விட்டு , இராம கோபாலன் கோபத்துடன் எழுந்து அத்துடன் பேட்டியை முடித்துக்கொண்டார் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
கோவிலில் மொட்டை போடுவதை மட்டும் தடை செய்யக்கூடாது மழிக்கும் தொழிலையே தடை செய்தால் நான் ஒப்புக்கொள்வேன் - கருணாநிதி அறிக்கை.
பசுவதைமட்டுமல்ல, எல்லா மிருகவதைகளையும் தடை செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரியிருந்தது போலவே , இப்போது கோவில்களில் மட்டுமல்ல, சலூன் களிலும் மொட்டையைத் தடை செய்ய வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்திருப்பதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. உடன் பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி கீழ்க்கண்டவாறு எழுதியதாய் நம்பத் தகாத வட்டராங்கள் தெரிவித்தது இது.
"மொட்டை போடுவதை தடுக்க சட்டம் போட்டிருக்கிறார்கள் கெடுமதியினர். மொட்டை போடுவதை தடுப்பது நல்லதுதான். ஆனால், இன்று பாரபட்சமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. மொட்டை போடுவது கோவில்களிலே மட்டுமல்ல, குளக்கரைகளில் நடக்கிறது. ஆற்றங்கரைகளில் நடக்கிறது. கடைவீதிகளில் நடக்கிரது. கோவில்களில் போடும் மொட்டையை மட்டுமல்ல , எல்லா இடங்களில் போடும் மொட்டையையும் தடை செய்தால் நாம் வரவேற்கலாம்." என்று கருணாநிதியின் அறிக்கையில் இடம் பெற்றதாக இன்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
சவரத்தொழில் இன்று முதல் தடை- ஜெயலலிதா உத்தரவு
மொட்டை போடுவதை மட்டும் தடை செய்தால் அதனை ஆதரிக்க மாட்டேன் என்று கருணாநிதி கூறியதாலும், சவரத்தொழில் முழுக்க தடை செய்தால் தான் ஆதரிபேன் என்றும் கூறியதாலும், இன்று ஜெயலலிதா சவரத்தொழில் மொத்தத்தையும் தடை செய்தார்.
ஏராளமான சவரத்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இப்படியெல்லாம் நடக்கும்போது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஜெயலலிதா ஒழிக என்றுதான் கத்திச் செல்வார்கள். இந்த முறை வித்தியாசமாக "எங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த கருணாநிதி ஒழிக" என்று கோஷம் எழுப்பியவாறு சென்றதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைக்குச் சென்ற ஒரு சவரத்தொழிலாளியை நிறுத்தி பத்திரிக்கையாளர் பேட்டி கண்டபோது, "அந்தம்மாவுக்குத்தான் புத்தி பேதலிச்சிருக்குன்னு தெரியுமே. இந்தாளு ஏன் எங்க தொழிலை கை காட்டி உடணும். அந்தம்மா ஒருதரம் ஒழியணும்னா இந்தாளு ரெண்டுதரம் ஒழியணும்" என்று வீராவேசமாகப் பேட்டி தந்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
சவரத்தொழில் தடை செய்தால் போதுமா? சவரம் செய்ய உதவும் பிளேடு கத்தி போன்றவற்றை தடை செய்யவேண்டாமா - கருணாநிதி கேள்வி.
சவரத்தொழிலை தடை செய்துவிட்டதை கண்டித்து கருணாநிதி இன்று சன் டிவியில் பேசியபோது சவரத்தொழில் செய்ய உதவும் பிளேடு போன்றவற்றையும் தடை செய்யவேண்டியதுதானே என்று கேட்டார். அன்றே அண்ணா சொன்னார். "கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு" என்று உரைத்திட்டார் அண்ணா. கத்தியை தீட்டுவதற்கு அண்ணா பெரும் எதிரி என்பது இதன் மூலம் விளங்கும். புத்தியைத் தீட்டவும் வழியில்லாதவர்கள் இன்று கத்தியை தீட்டி விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் அண்ணாவழியில் செல்லவில்லை என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் வேண்டும். என்று அவர் கூறியதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
பிளேடு கத்தி சவரத்தொழில் உபகரணங்கள் தடை - ஜெயலலிதா உத்தரவு
ஏற்கெனவே சவரத்தொழிலாளிகள் சிறைபட்டதனால் நசிந்து கொண்டிருந்த பிளேடு சவர உபகரணங்கள் விற்பனை இன்று அடியோடு சரிந்தது. இந்தக்கடையில் பிளேடு சவரத்தொழில் உபகரணங்கள் விற்கப்படாது என்று அனைத்து தமிழ்நாடு கடைகளும் அட்டை தொங்கவிட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக அம்மாவின் மகத்துவத்தை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக இருந்தது என்று அதிமுகவின் தலைமை நாளேடு தெரிவித்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
திண்ணையில் இந்தவாரம் திடுக்கிடும் கவிதை ஒன்று வெளியானதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
அமோக விளைச்சல்
***
இன்று
தமிழகத்தில் விளையும்
ஒரே பயிர்
மயிர்
|
|
|
| சம்பலோ சம்பல் |
|
Posted by: yarl - 09-23-2003, 09:11 AM - Forum: மருத்துவம்
- Replies (57)
|
 |
சம்பலோ சம்பல்
தினகரன் பத்திரிகையிலிருந்து
..
தேங்காய் சட்டினி சாப்பிட்டால் இருதய நோய் வரும்
மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சிவகடாட்சம் விளக்கம்
சென்னை, செப். 22- தேங்காய் சட்டினி சாப்பிட்டால் இருதய நோய் வரும் என்ற கேள்விக்கு மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சிவகடாட்சம் விளக்கம் அளித்தார்.
உலக இருதய நாள் கருத்தரங்கை டாக்டர் சிவகடாட்சம் நடத்தினார். அதில் பேசிய டாக்டர்கள், எறh, பீசா, தேங்காய் சட்டினி சாப்பிட்டால் இருதய நோய் வரும் என்று கூறினார்கள்.
கருத்தரங்கு
உலக இருதய நாள் தினத்தையொட்டி பிரபல இருதய நிபுணர் டாக்டர் சிவ கடாட்சம் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று கருத் தரங்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் சரத்குமார் எம்.பி. கலந்துகொண்டு உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தி பேசினார்.
டாக்டர் சிவகடாட்சம் பேசும்போது, Bமுறையான நடைபயிற்சி, உணவு கட்டுப்பாடு, சீரான எடை போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு தேவை. இவைகளின் மூலமே மாரடைப்பை வராமல் கட்டுப்படுத்தலாம். அதிக அளவில் டென்ஷன் கொள்வதும் இருதய நோய்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந் தால் 2020ம் ஆண்டில் இருதயநோய் என்பது ஒரு தொற்றுநோய் போல் ஆகிவிடும் நிலை ஏற்படும். தாயின் கருவரையில் இருக் கும்போதே இன்றைய தினம் குழந்தைகளுக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முறைப்படி டாக்டர்களின் ஆலோசனை பெறவேண்டியது மிக முக்கியம் என்றhர்.
மேலும் டாக்டர்கள் உல்லாஸ், மூர்த்தி, விஜய் சங்கர், வெங்கட், சவுந்திரராஜன், சசிகரண், நாகராஜன், பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கில் உரையாற்றினார்கள்.
அவர்கள் கூறியதாவது„-
கொழுப்பு சத்தை உடலில் அதிகம் சேர்ப்பது கூடாது. ஆண்களுக்கு வயிற்று பாகத் தில் கொழுப்பு சத்து இருப்பது ஆபத்தானது. பெண்களுக்கு இடுப்புக்கு கீழே கொழுப்பு சத்து இருப்பதில் தவறு இல்லை. அhpசி உணவைவிட கோதுமை உணவு மிகவும் நல்லது. பால், நெய், முட்டை, போன்றவற்றிலும் கொழுப்பு சத்து இருக்கிறது. காய்கறிகள், கனிகள் சாப்பிடலாம். எறhவை விட மீன் வகையில் கொழுப்பு சத்து குறைவு. எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயில் அதிக கொழுப்பு சத்து உள்ளது. இரண்டு இட்லிக்கு ஒரு தேங் காய் அளவு சட்டினி சாப்பிடுவது உடலுக்கு கேடுதான். அதனால் இருதய நோய் வரும். மற்ற எந்த எண்ணெய் களையும் விட கடலை எண்ணெய், நல்லெண் ணெய் நல்லது. இந்த எண்ணெயெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. அதனை மீண்டும் பயன்படுத்த வேண்டும். பீசா, நொறுக்கு தீனி தின்றபடி கம்ப்யூட்டர் கேம், டி.வி. பார்ப்பதில் இன் றைய இளைஞர்கள் முடங்கி விடுவதால் அவர்களுக்கு உடற்பயிற்சியே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் அவர்கள் சிறு வயதிலேயே இருதயநோய்க்கு ஆளாகின்றனர். இதை தவிர்ப்பது மிகவும் அவசியம். மது குடிப்பது, சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் அதனால் இருதயத்துக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புத்தகம் வெளியீடு
டாக்டர் சிவகடாட்சம் எழுதிய ஹhர்ட் அட்டாக் முன்னும் பின்னும்என்ற புத்த கத்தை சரத்குமார் முன்னிலையில் எழுத்தாளர் அனுராதா ரமணன் வெளியிட்டார். சாந்தகுமாhp சிவ கடாச்சம் உடல் ஆரோக்கியம் காக்க வேண்டியதின் அவசியத்தை கவிதையாக பாடினார். நடிகர் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு பேசும்போது, எதற்கும் வருத் தப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே இருதய நோய் வராது என்று குறிப்பிட்டார்.
|
|
|
| நூல் அறிமுகம் |
|
Posted by: இளைஞன் - 09-22-2003, 11:07 PM - Forum: நூற்றோட்டம்
- Replies (7)
|
 |
நூல் அறிமுகம் - ஒரு ஒன்றுகூடல்
12.10.2003
<b>ஊடறு : </b>
2002 இல் வெளிவந்த தொகுப்பு. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்,
கட்டுரை கவிதை சிறுகதை விமர்சனம் ஓவியம் என தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
<b>தொகுப்பாளர்கள் : றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), நிருபா(ஜேர்மனி) </b>
<b>மட்டக்களப்புத் தமிழகம் :</b>
பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்களால் 1964 இல் எழுதப்பட்டு வெளிவந்த இந் நூல் இப்போ எக்ஸில் வெளியீடாக இரண்டாம் பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் தனித்தன்மையை பண்பாடு, கலை வடிவங்கள், கவி மற்றும் நாட்டுப்பாடல்கள், பேச்சுவழக்குகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கை சார்ந்த விடயங்கள்... என பல தளங்களிலும் பேசும் நூலாக -அதாவது ஓர் ஆய்வுநூலாக- எழுதப்பட்டுள்ளது.
இவ் இரு நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டு அவை தொடர்பானதும் தொடர்பாகவுமான திறந்த கலந்துரையாடலாக இவ் ஒன்றுகூடல் அமைவுறும்.
அத்தோடு அரசியல், இலக்கியம், தலித்தியம், பெண்ணியம்... போன்ற விடயங்களில் பேசப்படும் நூல்களாக அண்மையில் வெளிவந்த நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
இச் சந்தர்ப்பத்தை உங்களுக்கானதாக அமைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் பங்குபற்றல் இதுபோன்ற நிகழ்ச்சிகளை உற்சாகப்படுத்துதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் என்ற புரிதலுடன்...
இந் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
<b>நிகழ்ச்சி நடைபெறும் இடம் : </b>
VOLKSHAUS
Stauffacherstrasse 60
8004 Zurich
Switzerland
12.10.2003 ஞாயிற்றுக்கிழமை
13.30 இலிருந்து 20.00 வரை
தொடர்புகளுக்கு: ரவி, ranr@bluewin.ch
|
|
|
| இனிமை@இளமை.கொம் |
|
Posted by: இளைஞன் - 09-22-2003, 09:33 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (19)
|
 |
வணக்கம் நண்பர்களே...
என்ன தலைப்பைப் பார்த்துவிட்டு புதுசா இருக்கென்று யோசித்து உள்ளே வந்தீர்களா? ம்...புதுசுதான் ஆனால் பழசு. புரியவில்லையா? சரி விடயத்துக்குள் செல்வோம்.
இந்த சுரதா அண்ணா அவர்கள் ஒரு "உருமாற்றி"(Converter)ஐக் கண்டுபிடித்தாலும் பிடித்தார், நமது யாழ் நண்பர்கள் இணையத்தின் எல்லாப் பக்கமும் உலவி, தாங்கள் மேய்ந்ததை எல்லாம் உருமாற்றியல போட்டு உருமாற்றி யாழில கொண்டு வந்து கக்குகினம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . அவர்கள் இப்பிடி வேற பக்கத்தில போய் மேய்ஞ்சிட்டு, அத இஞ்ச கொண்டு வந்து போட எனக்கு கவலையா இருக்கு. என்ன நமது நிலத்தில ஒண்டும் விளையேலயா? நம்மால் ஒன்றும் உற்பத்தி செய்ய முடியேலயா என்று!!!
அதான் இந்த இளைஞனின் இளமையைக் கொஞ்சம் கவர்ச்சியாக் காட்டுவம் என்று இதனை எழுதுகிறேன்:
இளைஞர்களைப் பொறுத்த வரையில் ஆண்கள் பெண்களைக் கவர்வதிலும், பெண்கள் ஆண்களைக் கவர்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுவது வழக்கம். அதேநேரம் தம்மைக் கவருபவர்களை (ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும்) வர்ணிப்பது என்பது காலம் காலமாக இருந்துவரும் இளைஞர் வழக்கம்.
பெண்ணடிமைத்தனத்தை உள்நுழைக்காமல், இயல்பாக அவர்களின் குணங்களையும், உடலமைப்பையும், செயற்பாடுகளையும் வைத்து ஏதாவதொன்றைக் கொண்டு வர்ணிப்பது என்பது அன்று தொட்டு இன்று வரை நிலவுகின்ற ஒன்று.
இடையில் சிறு துணுக்கு ஒன்று:
குழந்தைகள் - முதல் விஞ்ஞானிகள், மிகச் சிறந்த ஆய்வாளர்கள்.
இளைஞர்கள் - முதல் புலவர்கள், மிகச் சிறந்த கற்பனையாளர்கள்.
அந்த வகையில்யாழில் மேயும், பழசுகள் தமது அனுபவங்களையும், இளசுகள் தமது அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொள்வோமா?
சரி... முதலில் நான் தொடங்கிறன்:
ஒரு ஊரில ஒரு இளைஞன் இருந்தானாம். ஐயோ........அப்பிடியில்ல.
சரி... நான் பகுதி நேரமாக Mc Donalds வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வேலை செய்கிறேன். அநேகமாக இரவு வேலைதான். இரவு என்றால் 5:30 இலிருந்து அதிகாலை 3:00 மட்டும். இரண்டு வருடங்களிற்கும் மேலாக வேலை செய்வதால் அங்கு வேலை செய்பவர்கள் எல்லோருடனும் நல்ல பழக்கம். மற்றது இன்னொரு முக்கியமான விசயம். நான் குசினிப் பக்கும் போறேல. என்ர வேலை முன்பக்கம். அதான் சாப்பாட்ட எடுத்துக் கொடுத்திட்டு காசு வாங்கிற வேலை. அப்ப இளமையா, புதுமையா, அழகா பெட்டையள் வந்தால் ரசிக்கிறதுக்கும், வழிவதற்கும் (ஜொள்ளு விடுவதற்கும்) வசதியா இருக்கட்டும் என்றுதான் முன்னுக்கு நிக்கிறனான். நான்தான் இப்பிடியெண்டால், குசினிக்குள்ள நிக்கிறவங்கள் எட்டி எட்டிப் பார்ப்பாங்கள். பெட்டையள் வந்தால் எனக்கு தலைக்குள்ள ஏதோ கலர் கலரா சுத்தும். கொஞ்சம் இது (அதான் அது) காட்டோணும் எண்டிறதுக்காக வேகமா வேலை செய்யிறது. இவங்கள் குசினிக்குள்ள நிக்கிறவங்கள் "டே மெதுவா வேலை செய்யடா" என்று கத்துவாங்கள்.
இப்பிடிக் கொஞ்சநாள் போக ஒரு முடிவுக்கு வந்தன். உந்த சிவன் ஒருக்கா ஒ-ளவையாரிட்ட லொள்ளு விடேக்க "ஒன்று இரண்டு மூன்று என தன்னை வரிசைப்படுத்திப்பாடுமாறு" சொன்னார் அல்லவா. அதப்போல Mc Donalds சாப்பாடுகளைக் கொண்டு பெண்களை வரிசைப்படுத்தினால், அல்லது வகுத்தால் அல்லது வர்ணித்தால் எப்பிடி இருக்குமெண்ட யோசிச்சன். அதன்படி நான் வரிசைப்படுத்தியது இப்படித்தான்:
Mc Nuggets (கோழி இறைச்சியில் செய்த சின்னச் சின்னப் பொரியல்): இதுகள் ஆகலும் சின்னனுகள். 16 வயதுக்குள்.
Cheeseburger/Hamburger (அதான் சின்னனா இருக்கிற போர்கர்): இதுகளும் சின்னப் பெட்டையள். வயது கூடவா இருந்தாலும் சின்ன உருவம், சாதாரண அழகு.
Bigmac (இது தான் பெரிய பேர்கர். மொத்தமா இருக்கும்): இவர்கள் குண்டா இருக்கிற பெட்டையள். அதான் கிரண் எண்டு சொல்லி ஒரு அக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நடிப்பா, அவா மாதிரி.
BigXtra (இது Bigmac ஐ விடப் பெரியது. தற்பொழுதில்லை.): இவர்கள் ஆகலும் குண்டா இருக்கிற பெட்டையள்.
Mc Chicken (இது மெல்லியதாக (அளவான) பேர்கர். கோழி இறைச்சியில் செய்த பெரியலோடு உள்ளது): இவர்கள் மிக அழகான உடலமைப்பை உடையவர்கள். அழகோ அழகு.
ம்..இதுதான் எனது வரிசைப்படுத்தல். இதனைத் தேவாரமாக மனனம் செய்து Mc Donalds இல் வேலைசெய்பவர்கள் தினம் தோறும் உச்சரிக்கிறார்கள்.
சரி...இனி நீங்கள் சொல்லுங்கோ...
நான் ஒரு Mc Chicken சாப்பிட்டு வாறன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| IN THE NAME OF BUDDHA |
|
Posted by: AJeevan - 09-22-2003, 09:16 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>IN THE NAME OF BUDDHA
</span>
<img src='http://www.inthenameofbuddha.com/images/gal/5b.jpg' border='0' alt='user posted image'>
பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிரிழப்பு நிகழ்ந்த சிறீலங்காவின் பிரச்சனைகளை ஆராயக் கிழம்பிச் சென்ற சில மலையாளி இளைஞர்கள் அண்மையில் சிறீலங்கா அரசு மற்றும் புத்த மத நம்பிக்கையாளர்களின் கண்காணிப்புக்குள்ளாயினர். ராஜேஸ் டச்ரிவர் சாய்ஜார்ஜ் ஷண்முகதாஸ்
ஆகிய இளைஞர்கள் இன்றைக்கு சிறீலங்காவில் விவாதத்துக்குரியவர்களாக இருக்கிறரர்கள். சிறீலங்காவின் உள்நாட்டுப் போர் பின்னணியில் இவர்கள் தயாரித்த திரைப்படம் சிறீலங்கா அரசை மட்டுமின்றி இந்திய அரசையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
[b]இன்த நேம் ஒவ் புத்தா</b> என்ற படத்தின் வாயிலாக ராஜேஸ் மற்றும் அவரது குழுவினரும் மேற்கொண்டிருக்கிறார்கள்.
அனிதா பிரதாப் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் உலகத்திற்கு தெரியப்படுத்திய சிறீ லங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பெரிய திரையிலும் காட்டினார்கள் என்பதுதான் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியவர்களின் முக்கிய சாதனையாகும்.
சிறீ லங்காவின் அரசியல் , மதம், மனித உரிமைமீறல்கள் , போர், பெண்கள் குழந்தைகள் மீதான அக்கிரமங்கள் , சிறீ லங்கா இரானுவத்தினர் மற்றும் இந்திய அமைதிப்படை (IPKF) யினரின் கற்பழிப்புகள் , கொலைகள், தற்கொலைப் படையினரின் கொடுரம் போன்றவையெல்லாம் படத்தில் அலசப்படுகிறது. போரிலிருந்தும் அது உருவாக்கும் கெடுதிகளிலிருந்தும் விடுதலை கோரும் இந்தப் படம் சிறீ லங்காவின் அமைதிப் பேச்சுக்கும் ஊக்கமளிப்பதாகும். கடந்த ஆண்டு ஒஸ்லோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இத் திரைப்படம் மிகவும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கதாகும். 2002 டிசம்பர் 19ம் நாள் லண்டனில் திரையிடப்பட்டது. தமிழ் படமாக இருப்பினும் ஆங்கில சப் டைட்டில்களுடன் வெளியான புத்தா அங்கும் கவனத்தை ஈர்த்தது.
சொந்த உயிரைப் பலி கொடுத்து பல பேருடைய உயிரைப் பறிக்கும் தற்கொலைப் படைகளின் கொடுரமும் , இந்தியப் படைகளும் சிறீ லங்கா படைகளும் மேற் கொண்ட அக்கிரமங்களும் ராஜேஸின் இந்தப் படத்துக்கு பின்னணியாக இருந்தன.இந்தியாவிலும் சிறீ லங்காவிலும் சிலருக்கு இது கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். புத்த மதத்தைக் குறிப்பிடும் சில காட்சிகள் இருந்ததினால் புத்த மத நம்பிக்கையாளர்களும் இந்த படத்திற்கு எதிராக திரும்பியிருக்கிறர்கள். சிறீ லங்காவில் சில மாவட்டங்களில் இருக்கும் சில புத்த மத நம்பிக்கையாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக் காட்டியதால் அரசும் இந்தப் படத்தை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது.
அதே பொழுது இந்திய இராஐதந்திர வட்டாரங்களிலும் இந்தப் படம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. சிறீ லங்காவுக்குச் சென்ற இந்திய அமைதிப் படையைப் பற்றிய குறிப்பிடுதல்களும் சர்ச்சைக்கு காரணமாயின. அங்கு கற்பழிப்புகள் உள்ளிட்ட கொடுஞ்செயல்களில் இந்திய அமைதிப் படைக்கும் பங்கிருப்பதாகக் காட்டும் காட்சிகளும் படத்தில் இருக்கின்றன.
கேளரம்-தமிழ்நாடு போன்ற இடங்களில்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. இருப்பினும் இத்தகைய ஒரு கதையை பின்னணியாகக் கொண்ட படத்தைப் பற்றி முன்னதாகவே தெரிந்து கொள்ள இந்திய உளவுத் துறைகள் தவறியதுதான் அரசுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இந்தப் படத்தின் பெருமைக்குரிய சாதனைக்குரிய இளைஞர் ராஜேஸ் டச்ரிவர் , படத்தின் திரைக் கதை ஆசிரியரும் இயக்குனரும் ஆவார். டச்ரிவர் என்றால் தொடுநதி என்று பொருள்படும். ராஜேஸ் டச்ரிவர், சாய்ஜார்ஜ், ஷண்முகதாஸ் ,ஆகியோரும் முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்று விட்டனர்.
சாய்ஜார்ஜ் பழைய மலையாள திரைப்பட தயாரிப்பாளர் கே.எ…். ஆன்டணியின் புதல்வராவார். தொடுபுழாவைச் சேர்ந்த ராஜேஸ் டச்ரிவர் School of Dramaவிலிருந்து டிசைன் அண்டு டைரக்ஷன் விருது பெற்ற பின் இயக்குனராகியிருக்கிறார். 30 மேற்பட்ட நாடகங்களை இயக்கிய இவர் ஏராளமான தெலுங்கு பாலிவுட் படங்களுக்கு அசோசியேட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இன் த நேம் ஒவ் புத்தா வாயிலாக முதன் முதலாக இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
ஷிஜி, சோனியா, ஜோதிலால், அமித், ஜயசூர்யா, புஷ்ப கல்யாணி, பமேலா ,சிறீஜா, கல்யாணி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். உதவி இயக்குனர்களாக ஷெரிராய் பாஸ்கர் கோலிஸில்ஸ் பணியாற்றியருக்கின்றனர். படத்தின் இசையை ராஜா மணியும் கேமராவை ராஜரத்தினமும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையாள மனோரமா நாளிதழ் ஞாயிறு இணைப்பு <b>சிறீ</b>யிலிருந்து
தமிழாக்கம் .வி.கே.பாலகிருஷ்ணன்
நன்றி: நிழல்
<img src='http://www.inthenameofbuddha.com/images/festivals.gif' border='0' alt='user posted image'>
http://www.inthenameofbuddha.com/
|
|
|
| ஆண் - பெண் - நட்பு - காதல் |
|
Posted by: இளைஞன் - 09-22-2003, 07:13 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (20)
|
 |
வணக்கம் நண்பர்களே...
நட்பு, காதல் - இந்த இரண்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பல சூழ்நிலைகளில், பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ஒன்று. ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் உள்ள நட்பும், ஒரு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பும், <b>ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள நட்பிலிருந்து வேறுபடுகிறதா? </b>இந்த விடயத்தில், அதிகம் ஆண்களே குழப்பம் அடைகிறார்கள். பெண்களைப் பொறுத்தமட்டில் இல்லை என்று சொல்வதைவிடக் குறைவாகவே இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான நட்பு பல நேரத்தில் சில காலங்களின் பின் காதலாக மாறுகின்ற சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. நட்பு என்பது எல்லாத் தரப்பினரிடையேயும் இருக்கிறது. அது வேறு விடயம். ஆனால் <b>ஆண் பெண் நட்புக்கும், ஆண்பெண் காதலுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? காமமா?</b>
சரி அதைவிடுத்துக் கொஞ்சம் சமூகத்துக்குள் வருவோம். அதாவது ஆண் பெண் இடையிலான உறவை உடனே காதல் என்று எடுத்துக் கொள்கின்ற போக்கு நம் சமூகத்திடை அதிகம் உள்ளது. இதன் காரணம் என்ன?
அதையும் விடுத்து இணையத்துக்குள் வருவோம். முகம் தெரியாமல், எந்த விபரமும் தெரியாமல் சாற்களின் மூலம் அல்லது மின்னஞ்சல்களின் மூலம் பல ஆண்களும் பெண்களும் பழகுகிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணுடன் அதிகமாகப் பழகத் தொடங்கியதும், உடனே காதல் என்ற புரிதலை ஏற்படுத்துகின்றார்கள் ஆண்கள். அதேபோல் ஒரு பெண்ணும். இதன் காரணம்தான் என்ன?
எனவே இவற்றின் அடிபஇபடைகளை வைத்துப் பார்க்கும் பொழுது, காதலுக்கும் நட்புக்குமான தூரம் நீண்டதாக இருக்கு முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது.
இதுபற்றிய உங்கள் கருத்துக்கள், உங்கள் அனுபவங்கள், இந்தக் குழப்பங்களில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களிற்கான உங்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
பி.கு.: இந்தக் கருத்தாடலின் போது, சமூகத்தில் பெண்ணின் நிலை பற்றியும் பேச வேண்டிய அவசியம் ஏற்படலாம். இருந்தாலும் அதனைத் தொட்டுச் செல்லுங்கள், தொடராதீர்கள். பெண்கள் பிரச்சினையைப் பற்றிக் கருத்தாட சமுதாயம் என்னும் பிரிவு உள்ளது. இந்தக் கருத்தாடல் இளைஞர்களை மையமாகக் கொண்டு அமையவேண்டும் என்பது எனது அவா.
நன்றி
|
|
|
| Top 10 Tamil Movies |
|
Posted by: yarl - 09-22-2003, 04:52 PM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
தமிழ் சினிமா 'பாக்ஸ் ஆபிஸ்'
இந்த வாரம் வசூலில் முன்னணியில் உள்ள தமிழ்ப் படங்கள் குறித்த ஒரு பார்வை:
* வெளியாகி இன்றுடன் (செப் 19) 50வது நாளை எட்டிவிட்ட நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் படம் 'காக்க.. காக்க..' தான். ஏ மற்றும் பி சென்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டுள்ளது இந்தப் படம்.
ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரப்பும், வேகமுமாக படம் நகர்வதும், சூர்யாவின் மிக அட்டகாசமான நடிப்பும், சுறுசுறுப்பான கதையும், ஆர்.டி. பாஸ்கரின் ஹாலிவுட் தர படப் பிடிப்பும், ஹாரிஸ் ஜெயராஜ் தாமரைக் கூட்டணியின் அருமையான பாடல்களும் சேர்ந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன.
இப்போதைக்கு ரிபீட் ஆடியன்ஸ் அதிகம் உள்ள படம் காக்க காக்க தான். தயாரிப்பாளர் தாணுவின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படம் இது தானாம். படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ஏகப்பட்ட ஆபர்கள் குவிந்து வருகின்றன. ஆனால், நான் இயக்கும் அடுத்த தமிழப் படமும் தாணுவில் தயாரிப்பில் தான் இருக்கும் என்கிறார்.
* இதற்கு அடுத்த நிலையில் இருப்பது தனுஷ் சாயா சிங் நடித்த 'திருடா திருடி'. இதற்கு முன் வந்த தனுஷின் 'ஏ' ரகப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம் இது. இதனால் இந்தப் படம் ஓடுமா என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால், எல்லோருடைய சந்தேகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது இந்தப் படம். வசூலில் காக்க.. காக்கவுக்கு அடுத்த இடத்தில் நிற்கிறது. மன்மத ராசா.. மன்மத ராசா.. பாடலுக்கு தனுஷ் சாயா போட்டுள்ள ஆட்டம் படத்தில் பெரிய பிளஸ் பாயிண்ட்.
* வசூலில் மூன்றாவது இடத்தில் இருப்பது 'பாய்ஸ்'. முதல் இரு வாரங்கள் முழுமையாக அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டிருந்ததால் பேய் வசூல் என்றார்கள். இப்போது சாதாரண வசூல் என்ற நிலையை இந்தப் படம் அடைந்துவிட்டது.
படத்துக்கு பெண்கள் கூட்டம் வராதது பெரிய குறை. படத்தை ஓட்டிக் கொண்டிருப்பது பள்ளி கல்லூரி இளவட்டங்கள் தான். ஆனால், தெலுங்கில் படம் நல்லபடியாக ஓடுவதால் ஓரளவுக்கு போட்ட பணத்தை தேற்றிவிடுவாராம் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்.
ஆனால், தமிழில் எப்படிப் பார்த்தாலும் நஷ்டம் தானாம். காதல் கொண்டேன், ஜெயம் போன்ற படங்கள் வந்து நெடு நாட்களாகிவிட்டதால் இப்போது தான் தட்டுத்தடுமாறி இந்த இடத்தைப் பிடித்துள்ளது பாய்ஸ். காட்சிகளை வெட்டி, ஆபாசத்தைக் குறைத்து 'அஜால் குஜால்' வேலை எல்லாம் செய்து பார்த்தும் படத்துக்கு கூட்டத்தை இழுக்க முடியவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், ஷங்கர்!
* நான்காவது இடத்தில் இருக்கும் படம் 'காதல் கொண்டேன்'. ஒரே ஹீரோவின் இரு படங்கள் பாக்ஸ் ஆபிசில் முதல் 5 இடங்களில் இருப்பது தமிழில் மிக அரிய சமாச்சாரம். இந்த லக் தனுசுக்கு அடித்துள்ளது. அவரது அண்ணன் இயக்கி, அப்பா தயாரித்த 'காதல் கொணடேன்' நான்காவது இடத்தில் உள்ளது.
டைரக்ஷன், கதை, பாடல்கள், தனுசின் நடிப்பு ஆகியவற்றால் இந்தப் படம் நல்ல வசூலை அள்ளிக் கொடுத்து கஸ்தூரிராஜாவுக்கு மீண்டும் மறுவாழ்வு தந்துள்ளது.
* அடுத்த நிலையில் உள்ள படம் 'ஜெயம்'. புதுமுகங்களைக் கொண்ட இந்தப் படம் ஆச்சரியமான வெற்றியைப் பெற்றுள்ளது. திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட எடிட்டர் மோகன் தனது மகனை நடிக்க வைத்து எடுத்த படம் இது. அழகிய காதல் கதையுடன், நல்ல இசையுடன் வந்து வசூலிலும் வென்றுவிட்டது இந்தப் படம்.
சிலம்பரசன் நடித்த குப்பை படமான 'அலை' முதல் வாரத்திலேயே படுத்துவிட்டது. சிம்பு திரிஷா நடித்த இந்தப் படத்துக்கு ரொம்ப அதிகமாகவே பில்ட்அப் கொடுத்தார்கள். ஆனால், மகா மட்டமான கதை, சிலம்பரசனின் மட்ட ரக நடிப்புடனும் வெளியான இந்தப் படம் பெரும் தோல்வி அடைந்துவிட்டது.
காதல் கொண்டேன், ஜெயம் படங்களை ஒட்டி வெளியான விஜய்காந்தின் தென்னவன், இப்போது வெளியான ஜூனியர் சிவாஜி (சிவாஜியின் பேரன்) 'சக்ஸஸ்' போன்றவையும் பெரும் தோல்வி கண்டுள்ளன. ஜூனியர் சிவாஜி தனது தாத்தாவின் பெயரை நன்றாகவே கெடுத்துள்ளார்.
ஹீரோ யார், ஹீரோயின் யார் என்றெல்லாம் பார்க்காமல் நல்ல கதைகள் மட்டுமே வெல்லும் மிக ஆரோக்கியமான கால கட்டத்தில் தமிழ் சினிமா காலடி எடுத்து வைத்துள்ளது.
காட்சிக்கு காட்சி 5 பக்க வசனம், பறந்து பறந்து அடிப்பது, பெரிய சைஸ் விக்கும் ஒட்டுப் பல்லும் வைத்துக் கொண்டு மகள் வயது ஹீரோயினை விரட்டிக் கொண்டு மரத்தை சுற்றி ஓடுவது, கிராபிக்ஸ் மிரட்டல்கள் என குப்பை மேட்டில் இருந்த சினிமாவை புரபஷனலாக மாற்றிக் காட்டியிருக்கிறார்கள் இளம் இயக்குனர்கள்.
கதைக்கோ, காசு கொடுத்து படம் பார்ப்பவனின் உழைப்புக்கோ மரியாதை தராமல் எப்படி நடித்தாலும் சூப்பர் ஹிட் என்ற நிலையில் இருந்த பெரிய ஹீரோக்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், குழம்பிப் போய் மிச்சம் இருக்கும் முடியையும் பிய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தமிழ் சினிமா அடைந்துள்ள பெரும் பாக்கியம் தானே?
thatstamil.com
|
|
|
| தமிழீழப் புலிகளும் இந்தியப் பொடாவும் |
|
Posted by: kuruvikal - 09-22-2003, 04:52 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (21)
|
 |
<img src='http://thatstamil.com/images13/kannappan-250.jpg' border='0' alt='user posted image'>
மத்திய அமைச்சர் கண்ணப்பன்
கண்ணப்பன் மீது பாய்கிறது பொடா: வாஜ்பாய்க்கு ஜெயலலிதா அதிரடி கடிதம்
மத்திய அமைச்சர் கண்ணப்பன் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருவதால், அவர் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பன் சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதை கைவிட மாட்டேன். இதனால் பொடா சட்டம் பாய்ந்தாலும் கவலையில்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அவரை பொடாவில் கைது செய்யவும், அதற்குத் தேவையான ஆதரங்களைத் திரட்டவும் போலீசாருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் அவரைக் கைது செய்ய வசதியாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறைக்கு தமிழக உள்துறையில் இருந்து சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய்கே முதல்வர் ஜெயலலிதா நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மத்திய அமைச்சர் எம்.கண்ணப்பன் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். மத்திய அமைச்சர் ஒருவரே இப்படிப் பேசி வருவது கடுமையான கண்டனத்துக்குரியது. எனவே, கண்ணப்பனை உடனடியாக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
கடந்த 16ம் தேதி நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாக பேசியுள்ளார் கண்ணப்பன். மேலும், புலிகளுக்கு ஆதரவாக 26 முறை பேசியுள்ளதாகவும் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக கண்ணப்பன் தொடர்ந்து பேசி வருவது நல்லதல்ல. அவரது செயல் பொடா சட்டத்தின் 18வது, 21வது பிரிவுகளின் கீழ் பெரும் தேச விரோதக் குற்றமாகும். அவரை மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து மத்திய அரசு நீக்காவிட்டாலும் அவர் மீது பொடா சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டத்தை மதிக்கும் மாநில அரசாகும். இதனால் இந்த அமைச்சரைக் கைது செய்வதே சரி என தமிழகம் நினைக்கிறது. மத்திய அமைச்சர் பதவியில் இருப்பதால் தன்னை யாரும் ஏதும் செய்துவிட முடியாது என நினைத்துக் கொண்டு தான் கண்ணப்பன் இவ்வாறு புலிகளை ஆதரித்து பகிரங்கமாகப் பேசி வருகிறார்.
உங்கள் தலைமையில் உள்ள அரசில் பதவி வகிக்கும் அமைச்சர் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசி, அரசியல் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கி வருவதை நீங்கள் தடுத்தாக வேண்டும். புலிகளை ஆதரித்தன் மூலம் அமைச்சராக இருக்கும் தகுதியையே அவர் இழந்துவிட்டார்.
இதனால் அவரை உடனே பதவியை விட்டு நீக்கி, நாட்டின் சட்டத்தை நிலை நிறுத்த உதவுமாறு பிரதமர் வாஜ்பாயைக் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் காரணங்களுக்காக கண்ணப்பனை பிரதமர் பதவி நீக்கம் செய்ய மறுத்தால், அதை தமிழக அரசு பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்காது. உரிய நடவடிக்கை எடுத்து கண்ணப்பனைக் கைது செய்யும்.
சட்டவிரோத செயலில் ஈடுபடும் மத்திய அமைச்சரை மாநில அரசு கைது செய்வதை எந்த சட்டம் தடுக்காது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
News directly copied from thatstamil.com...our thanks them.
|
|
|
| தகவல் தாருங்கள் |
|
Posted by: Paranee - 09-22-2003, 09:57 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம்
- Replies (25)
|
 |
வணக்கம்
நல்ல மனதுடனும் கொள்ளை ஆசையுடனும் அன்பு நண்பர் அஐPவன் அண்ணா எனக்கு அவருடைய குறும்படத்தொகுப்படங்கிய DVD அனுப்பி இருந்தார். எனது விருப்பின் பெயரில் அவர் அதை அனுப்பியிருந்தார். எனினும் எனக்கு அதை பார்க்கமுடியவில்லை. அத -R எப்படி நான் பாவிப்பது. எனது கணனியிலோ அல்லது DVD PLAYER இட்டு நோக்கினும் காணமுடியவில்லை.
நட்புடன் பரணீதரன்
|
|
|
| Barefooted Sujeewa wins silver |
|
Posted by: Mathivathanan - 09-22-2003, 08:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
[size=14]Barefooted Sujeewa wins silver
Sri Lanka wins first medal in the 15th Asian championships
AFP- Saturday- Sri Lanka's barefoot runner Sujeewa Nilmini Jayasena made her country proud by winning the sliver medal with a timing of 34:46.99 in the women's 10,000 meters event at the Asian athletics championships Saturday. This was Sri Lanka's first medal in the event and the athlete's first medal at the Asian level. The gold medal was won by Versatile Chinese distance runner Sun Yingjie. Aruna Devi of India settled for the bronze clocking 37:23.28.
Fresh from a bronze medal finish at the Paris world championships last month, 24 year-old Sun a Beijing native blew the race apart at the 2,000m mark, lapping the eventual second-place finisher with 2,800m to go en route to a 32min 37.04sec result.
"My time here was not that good because of the poor quality of the opposition," said the petite runner, who also runs the marathon and the 5,000m discipline, as well as being a threat in the 20km walk.
Record-breaking Huang Qiuyan began the rout by winning the women's triple jump crown.
Her 14.39m effort erased the five year-old Asian championship record of 14.11m set by compatriot Ren Ruiping, as well improving on Huang's Busan Asian Games standard of 14.28m.
Still, it fell short of Huang's personal best of 14.72m, which is the standing Asian record.
"I did okay, but I would have been happier if I broke the Asian record," she told AFP.
http://www.island.lk/2003/09/22/sports01.html
|
|
|
|