Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 387 online users.
» 0 Member(s) | 385 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
Yesterday, 09:07 AM
» Replies: 28
» Views: 10,249
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,596
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,027
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,112
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236

 
  சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் தெருக்கூத்து.
Posted by: ஜெயதேவன் - 02-20-2006, 05:42 PM - Forum: நிகழ்வுகள் - Replies (16)

ஜெனிவாவில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருக்கும் வேளையில் லண்டன் நகரில் நேற்று (19.02.2006) தமிழ் மக்களால் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து லண்டனில் வீதி வேடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். சமாதானம் ஜனநாயகம் என்ற சொற்பதத்தை அசிங்கப்படுத்தும் விதத்தில் அதற்கு எந்த விதத்திலும் பொருந்தாதவர்கள் இந்த தெரு வேடிக்கையில் ஈடுபட்டனர். சமூகவிரோதிகளின் செயலை பி.பி.சி தமிழ் சேவை செய்தியாக்கியதன் ஊடாக சமூகவிரோதிகளின் ஊடுருவல் அதற்குள் இருக்கின்றமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு தனது உடம்பை வருத்தி உழைக்காத பணத்தில் கோவில்கட்டி அதற்கு ஈழம் என்ற பெயரை போட்டு ஈழத்தை கோவில் வியாபாரமாக்கி அதற்கும் அப்பால் ஈழம் என்ற பெயரைக் கேட்டு கோவிலுக்கு வரும் தமிழ் மக்களிடம் நீங்கள் உண்டன உண்டியல் போடுங்கோ இது ஈழத்திற்குதான் போகிறது என்று தமிழ் மக்களிடம் பணம் கறந்து, ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு, திருட்டுத்தனங்களில் ஈடுபடும் உண்டியல் திருடன் ஈழபதீஸ்வரன் தலைமையிலும், காத்தான்குடியில் 15 வயது தமிழ் சிறுமியை கற்பளித்த கொலை செய்து பொலிசாரால் தேடப்பட்டவரும், மட்டக்களப்பில் முதன் முதலாக தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளை அறுத்து தமிழர் கலாச்சாரத்திற்கு உலை வச்சவரும், சுவிஸ்நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஐரோப்பாவில் ஆட்கடத்தல் சட்டரீதியற்ற அகதிகளை பிரித்தானியாவிற்கு அனுப்பும் வியாபாரம், போலி வங்கி அட்டை வியாபாரம் நிக்வறொட்டி வங்கி கொள்ளை உட்பட பல பிரபலமான மோசடியை தனது தலையாய தொழிலாக கொண்டியங்கும் திருடனும் ஈஆ.என்.டி.எல்.எவ் கும்பலின் சர்வதேச பொறுப்பாளரும் கருணா குழுவின் லண்டன் பொறுப்பாளருமான றாமறாஜன் மற்றும் ஒசாமா குழுவினை மட்டகளப்பில் வழிநடாத்தும் முஸ்லீம் இனத்தவரும் இதனை முன்னின்று நடாத்தினார்களாம். இதற்கு பெண்ணியம் பேசுவதாக கூறிக்கொண்டு பெண்ணியம் பேசும் ஆண்களினால் சப்பி துப்பப்பட்ட பெண்களும் கலந்து சிறப்பித்தனராம்.. மட்டக்களப்பு மக்களின் பெயரில் பிரதேசவாத யுத்தத்தினை ஆரம்பித்து இறுதியில் கல்விமான்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என்று 963 பொதுமக்களையும், 253 போராளிகளையும் இந்த சமாதான காலத்தில் கொலை செய்து சமாதானத்திற்கு உலை வைத்தவர்கள் சமாதானம் வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம் என்று ஒருவர் வேடிக்கையாக கூறினார். 9 வயது சிறுவனுக்கு துப்பாக்கி கொடுத்து புலியை சுட்டு வா என்று அனுப்பும் ஒட்டு படையினரும் 14 வயது சிறுவனிடம் 15ஆயிரம் ருபாய் பேரம் பேசி புலிகளுக்கு கைக்குண்டு எறிந்து வா என்று அனுப்பும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் சிறுவரை படையிலை சேர்க்காதே என்று ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம். இனவாதிகளின் பணத்தில் அவர்களின் மாத பிச்சை காசில் அவர்களின் மாத வருமானத்தில் அவர்களின் ஏவல் பிசாசுகளாக தொழில்படும் ஒட்டுக் குழுவினரும் அவர்களை தமது பணிப்பாளர்களாக பதவி செய்து அதன் ஊடாக அரிசியல் விபச்சாரம் செய்யும் ஒட்டுக் குழுவினரும் இனி இனவாதிகளின்; பருப்பு அவியாது என்று கோசம் எழுப்பினார்களாம். வேண்டாம் யுத்தம் என்று கூறிய இவர்கள் சமாதானகாலத்திற்கு உலைவைக்கும் விதமாக தீவகச் சேனையிலும,; அரச இராணுவ முகாங்களின் மலசலகூடங்களுக்குள்ளும் மறைந்திருந்து சமாதான விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் ஊடாக இவர்கள் லண்டன் தெருவில் இருந்து கூக்குரல் இடும் விடயங்களுக்கு தீர்வு கண்டு விடமுடியாது.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: Confusedmile2:

http://www.nitharsanam.com/?art=15399

Print this item

  அமைதி
Posted by: Thulasi_ca - 02-20-2006, 03:20 PM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

<img src='http://www.thamilsky.com/forum/dove.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு
Posted by: Luckyluke - 02-20-2006, 02:41 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (186)

நீங்கள் பாட்டுக்கு எங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் அளவுக்கு கேவலமாகப் பேசுவீர்கள்.... எங்கள் தலைவர்களை குள்ளநரி என்றெல்லாம் விமர்சிப்பீர்கள்.... அதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டால் தான் நாங்கள் தமிழினம்.... இல்லையென்றால் துரோகி அப்படித்தானே?

Print this item

  வணக்கம் ஈழத்தமிழ் ரசிகர்களே
Posted by: வடிவேலு - 02-20-2006, 01:26 PM - Forum: அறிமுகம் - Replies (82)

ஹாய் ஹாய் நான் வேலு மிஸ்டர் வடிவேலு

நம்ம ஈழத்து ரசிகர்களை சந்திக்க

என்ன உங்கள் நாட்டில் ஒருகோடி தமிழ் ரசிகர்கள் இருப்பர்களா? எனக்கு யார் எனது ரசிகர்மன்ற தலைவர்?

Print this item

  இன்னும் என்னை நம்பவில்லையா?
Posted by: jcdinesh - 02-20-2006, 12:07 PM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

<img src='http://img137.imageshack.us/img137/7327/deepadcopyjpghgfygu0pn.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  நான் `முன்னாள் ஜனாதிபதி' அல்ல ஜனாதிபதி என்றே அழையுங்கள்
Posted by: வினித் - 02-20-2006, 11:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (14)

<span style='font-size:25pt;line-height:100%'><b>\"நான் `முன்னாள் ஜனாதிபதி' அல்ல ஜனாதிபதி என்றே அழையுங்கள்</b>"</span>

சந்திரிகா கூறுகிறார்`முன்னாள் ஜனாதிபதி' என்றல்ல ஜனாதிபதியென்றே தன்னை அழைக்க வேண்டுமென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வாரம் ஹொரகொல்ல வளவில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களின் கூட்டத்தில் மிக காரசாரமாகத் தெரிவித்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உலகில் எங்கும் இதுபோன்ற நடைமுறை இல்லையென்றும் பதிலளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களை ஹொரகொல்லவிற்கு அழைத்து அங்கு உரையாற்றும் போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

என்னை, ஜனாதிபதியென்றே அழைக்க வேண்டும் `முன்னாள்' என்ற வார்த்தையைப் பிரயோகிக்கக்கூடாது. தற்போது என்னை யாரும் மதிப்பதில்லை. இவ்வாறு நடந்துகொள்வது பிழையானது எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, இதற்கு பதிலளிக்கையில்;

ஜனாதிபதி பதவி பறிபோன பின் முன்னாள் என்று தான் அழைப்பது உலக நியதி. அதனை மாற்ற முடியாது எனத் தெரிவிக்க, உலகம் தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியும். வாயைப் பொத்திக் கொண்டிருங்களென சந்திரிகா கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

பதவிக்காலம் முடிந்து வெளியேறியதும் வாழ்த்துக் கூற ஒருவரும் வரவில்லை. ஆனால், டி.பி. விஜேதுங்க வெளியேறிய போது `கியூ'வில் போனார்கள் எனவும் சந்திரிகா தெரிவிக்க அக்கூட்டத்திலிருந்த எம்.பி.யொருவர் எழுந்து, நீங்கள் இன்னமும் ஓய்வுபெறவில்லையே, ஓய்வு பெற்ற பின்னரே வாழ்த்துக் கூற வேண்டுமெனக் கூற, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் சிரித்துவிட்டனர்.

என் கட்சிக்காரர்கள் என்னை கைவிட்டுவிட்டார்கள். மகிந்தவுக்கு தொலைபேசி அழைப்பெடுத்தால் என்னை நேரடியாக அவருக்கு எடுக்கச் சொல்கிறார் எனத் தெரிவித்த சந்திரிகா, தற்போது எனக்கு லசந்த விக்கிரமதுங்காக்கள் தான் உதவி செய்கிறார்கள்.

அவர்கள் எனது சிறந்த நண்பர்கள் என்று இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் சந்திரிகா வசைபாடிக் கொண்டிருக்க, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுந்துசெல்ல முற்பட்டனர்.

இதையடுத்து, உடனடியாக தனது பேச்சை முடித்துக்கொண்ட சந்திரிகா, கலந்துகொண்டவர்களுக்கு தனது கைகளினாலே உணவு பரிமாறியுமுள்ளார்.

http://www.thinakural.com/New%20web%20site...ry/20/index.htm

Print this item

  புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?
Posted by: இவோன் - 02-20-2006, 10:55 AM - Forum: புலம் - Replies (165)

சாரு நிவேதிதா என அறியப்பட்ட எழுத்தாளர் அண்மையில் இனிய உதயம் என்னும் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை அளித்திருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியும் சாருவின் பதிலும்

<b>நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று வெளிநாடு சென்று வந்தீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழப்பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் தாயகம் திரும்பும் மனநிலையில் இருக்கிறார்களா?</b>

திரும்பும் மனநிலையில் அவர்கள் இல்லை.ஐரோப்பிய கனேடிய வாழ்க்கை தரும் செளகரியங்கள் ஈழத்தில் கிடைக்காது. வாழ்க்கை செளகரியம் மட்டுமல்ல! அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பா மற்றும் கனடாவில் அரசியல் ஜனநாயகம் பெண்ணுரிமை போன்ற அருமையான சூழல் நிலவுகிறது. ஈழத்திலோ தமிழகத்திலோ அவையெல்லாம் இன்னும் ஏட்டளவில் கூட வரவில்லை. மட்டுமல்லாமல் Diaspora என்று கூறப்படும் புலம் பெயர்தல் நடந்த பல சமூகங்களிலும் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்லுதல் என்ற நிகழ்வே நடைபெறவில்லை. பல நூற்றாண்டுகளாக துருக்கியில் வாழ்ந்து வந்த இரண்டு லட்சம் கிரேக்கர்கள் 1921ம் ஆண்டில் தாங்கள் பார்த்தேயிராத தாய் நாடான கிரேக்கத்திற்கு திரும்பிய போது அவர்களை கிரேக்க சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் அவர்கள் தங்கள் தாயகத்தில் அகதிகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் தற்போது வேறு நாட்டில் பிறந்து வளர்கின்றார்கள். அவர்களால் தங்கள் நாட்டிற்கு சுற்றுலா சென்று வர முடியுமே தவிர நிரந்தரமாக அங்கே வாழ முடியாது. இது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச்சோகம். ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து உருக வேண்டிய வரலாற்றுச்சுமை

Print this item

  பங்களாதேஷ் போயிருக்கும் இலங்கையணி
Posted by: MUGATHTHAR - 02-20-2006, 05:36 AM - Forum: விளையாட்டு - Replies (6)

<b>பங்களாதேஷ் போயிருக்கும் இலங்கையணி</b>

அடுத்தடுத்து பல தோல்விகளை பெற்று கிரிக்கெட் ரசிகர் மத்தியில் ஒரு இளக்காரமான அணியாக மாறியிருக்கும் இலங்கையணி புதிய உற்சாகத்தை பெறும் விதத்தில் பங்களாதேஷ் போயிருக்கிறது என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணுகிறார்கள் ஆனால் இப்போ பங்களாதேஷ் அணிக்கு பயிச்சியாளராக இருப்பவர் முன்னர் இலங்கையணி உலகக் கோப்பையை எடுப்பதுக்கு காரணமாக இருந்த இலங்கையின் பழைய பயிற்சியாளர் வோட் மூர். இலங்கையின் முன்னணி ஆட்டக்காரரின் நெளிவு சுழிவுகள் அவருக்கு தெரிந்திருக்கும் அந்த வகையில் இலங்கைக்கு இந்த போட்டிகளும் பெரும் சோதனைக்குரியதுதான்
அதற்காக அவரால் பயிற்றிவிக்கபட்ட <b>சமிந்தா வாஸ் அதபத்து முரளி</b>(ஒருநாள் போட்டியில் மாத்திரம்) இந்த போட்டிகளில் பங்குபற்றாமல் புதியவர்களை விட்டிருக்கிறது இலங்கையணி இது எந்த அளவில் சாத்தியம் எண்டு இருந்து பாப்போம்
3 ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்குகொள்ள இருக்கும் இலங்கையணிக்கு தலைவராக <b>மகில ஜெயவர்தனாவும் </b>உபதலைவராக <b>சங்கக்காராவும்</b> நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் முதலாவது ஒருநாள் போட்டி இன்று Bogra பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது
<b>One-Day</b>

<i><b>*Mahela Jayawardene +Kumar Sangakkara Upul Tharanga
Sanath Jayasuriya Jehan Mubarak Tillakaratne Dilshan
Chamara Kapugedera Farveez Maharoof Hasantha Fernando Dammika
Prasad Dilhara Fernando Ruchira Perera Akalanka
Ganegama Malinga Bandara Kaushal Lokuarachchi</b></i>

Print this item

  அந்த நாள் வராதோ??
Posted by: Eelam Angel - 02-20-2006, 03:42 AM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

<img src='http://www.webindia123.com/GOA/images/farmer%20in%20paddy%20field.jpg' border='0' alt='user posted image'>


<b>அந்த நாள் வராதோ??

உற்சாகமூட்டும் காலைப்
பொழுதினிலே
வீசும் தென்றல் காற்றினிலே
பச்சைப் பசுமையான
வயலினிலே,
ஆடி அசையும் நெற்
கதிர்களையும்,
பெண்கள் வைக்கோல்
சுமப்பதையும்
ஆண்கள் மூட்டை
தூக்குவதையும்
விவசாயி ஆவைச் செல்லமாக தட்டுகையில்
அவற்றின் கால்கள் சேற்றிலே[/ப்]
பதிவதையும்
மெய் மறந்து கண் குளிரப் பார்த்த
அந்த நாள் இனி எப்போது
வருமோ?</b>

Print this item

  வீரம் வெல்லும் வேளையிது
Posted by: Thaya Jibbrahn - 02-19-2006, 06:48 PM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

வீரம் வெல்லும் வேளையிது
ஈழம் பெறும் காலமிது
சுற்றப் பகை நாமழித்து
முடிசூடும் நேரமிது (வீரம்)


வெற்றிதரப் பிறந்து வரும் புத்தாண்டடா
வெல்லும் வழி சொல்லுகின்ற தமிழ் ஆண்டடா


(வேறு)
அண்ணன் ஆணைக்கே தாள் பணிந்தோம்
வெல்லும் நாளுக்கே வாழ்த்துரைப்போம்


வாழ்வென்றால் இது வாழ்வுமில்லை
போரென்றால் இது போருமில்லை
வாழ்வும் சாவும் எமக்கொன்றே
மானம் தானெங்கள் வரலாறே

வெல்வோம் நாமெங்கள் தாய்மண்ணே
ஆள்வோம் தமிழர்கள் எங்கள் மண்ணே




போரென்றால் புலிவீரம் பேசும்
பேச்சென்றால் தமிழ் மானம் பேசும்
ஏய்த்து மாய்த்த காலம் போச்சே
எங்கள் தலைவரின் காலம் ஆச்சே

அண்ணன் இடுவான் ஆணையொன்றே
ஆணை முடிப்போம் பகையை வென்றே



<span style='font-size:14pt;line-height:100%'>சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்விற்காக எழுதப்பட்டது.</span>

Print this item