| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 289 online users. » 0 Member(s) | 287 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,218
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,220
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,592
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,276
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,585
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,014
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,407
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,100
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,974
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,235
|
|
|
| இந்திய அரசுடன் மறைமுகமாக விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு ! |
|
Posted by: வினித் - 02-25-2006, 08:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஏதுவானது: அன்ரன் பாலசிங்கம்
[ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2006, 00:15 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கையில் தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பி.பி.சி. தமிழோசை வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் திருப்தி அளிக்கின்றன.
வடக்கு கிழக்கில் அரச ஆதரவில் இயங்கும் துணைப் படைகளின் ஆயுதங்கள் களையப்பட்டு வன்முறைகள் நிறுத்தப்படும் பட்சத்தில் தமிழர் பகுதிகளில் அமைதி நிலை ஏற்படும். இது தொடர்பில் அரசாங்கம் உறுதியளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அரச இராணுவமும் அதன் புலனாய்வுத்துறையினரும், தமிழ் மக்களுக்கெதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தும் போது அதற்குப் பதிலாக தமிழர் பகுதிகளில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கூடிய அதிகாரமும் செல்வாக்கும் விடுதலைப் புலிகளுக்கு உண்டு. ஏனென்று சொன்னால் மக்கள் எழுச்சிப் படைகளோ அல்லது மற்றவரோ விடுதலைப் புலிகளின் ஆணையை மீறி செயல்பட மாட்டார்கள்.
தமிழர் பகுதிகள் முழுவதும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழும் மற்றும் அவர்களின் அதிகார கட்டுப்பாட்டின் கீழும் செயல்படுகிறது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையும். மேலும்இ இந்திய அரசுடன் மறைமுகமாக விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கிறது. இது குறித்து மேலும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் அன்ரன் பாலசிங்கம்.
நன்றி: புதினம்
|
|
|
| பூ ஒன்று புலியாகின்றது |
|
Posted by: RaMa - 02-25-2006, 06:07 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (23)
|
 |
சில்லென்ற மழைத்தூறல் முகத்தில் பட சுய நினைவுக்கு வந்தாள் விது. அன்பான அம்மா கண்டிப்பையே முகத்தில் வைத்திருந்தாலும் பாசத்தை மழையாக பொழியும் அப்பா. குட்டி என்று செல்லமாக நுள்ளியும் கிள்ளியும் விளையாடும் மூன்று அண்ணாமார்கள். பூத்துக்குலுங்கும் மல்லிகை பந்தலின் கீழ் நாற்காலியை இழுத்து போட்டு விட்டு நிலா ஒளியிலே ஆயிரம் ஆயிரம் செல்லங்கள் பொழிந்தவள் இந்த விது. அப்பா சாப்பிடும்போது ஓரு வாய் அம்மா சாப்பிடும்போது இன்னொரு வாய் சோறு அம்மம்மா சாப்பிடும்போது இன்னொரு முறை. ஏன் நாய்க்கு சாப்பாடு போடும் போதும் ஓரு முறை சாப்பிடவேண்டியது தானே? என்ற அண்ணான்மார்களின் நக்கல். இப்படியாக இன்பத்தையே கண்டு பழகியவளுக்கு வாழ்க்கையின் மறு பகுதியில் துன்பம் என்று ஒன்று இருக்கு என்பது அப்போது தெரியவில்லை.
பாடசாலை பருவமும் வந்தது. படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்று சொல்லமுடியாது. ஆனால் ஆசிரியர்களிடம் அடி வேண்டும் சந்தர்ப்பங்கள் குறைவு தான். பருவ வயதையும் அடைந்தும் விட்டாள். நாட்டின் நிலமை காரணமாக ஒவ்வொரு அண்ணண்மாரும் கண்ணீர் மல்க அந்த வீட்டை விட்டு என்ன நாட்டையே விட்டு போனார்கள். ஒரு அதிகாலை பொழுதில் அம்மம்மாவும் இயற்கையை ஏய்தி விட்டார். கடைசியில் எஞ்சியது அப்பாவும் அம்மாவும் அவளும் தான்.
அண்ணன்மார்களின் நக்கல் பேச்சுக்களை கோபத்துடனே ரசித்து வந்தவளுக்கு எல்லாமே வெறுமையாகின. அண்ணன்மார்களும் போன நாட்டில் இருந்து வாரத்துக்கு ஒரு முறை கடிதம் போட்டார்கள். கடிதத்துடனே அழகான படங்கள். காருடன் நின்று ஓரு படம். மாடிப்படிகளில் நின்று இன்னொரு படம். அழகான புற்றரையில் நின்று ஓரு படம் என்று வீட்டிலிருக்கும் அல்பங்கள் நிறைந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் வெகு சீக்கிரம் உங்களையும் இவ்விடம் அழைத்து விடுவோம் என்கின்ற வேதவாக்கியங்கள் வேறை.
அன்புக்கு பதிலாக பணம் வீட்டில் கொட்டத் தொடங்கியது. ஆகா இனி இங்கு படித்து என்ன செய்ய போகின்றேன். விமான நிலையத்தை அடைந்தவுடன் ஆங்கிலம் தானாகவே வந்து நாக்கில் ஒட்டுக்கொள்ளும் என்ற நினைப்பில் படிப்பில் கொஞ்சம் இருந்த ஆர்வத்தையும் இழந்தாள். கனவு உலகத்தில் சஞ்சரிக்க தொடங்கினாள். ஒவ்வொரு உடுப்புக்களும் வாங்கும் போதும் கனடாவிற்கு கொண்டு போக கூடிய உடுப்பாக தான் வாங்குவாள். கனடா போனால் இவர்கள் எல்லாம் எதற்கு என்ற எண்ணத்துடன் நெருங்கி வந்த தோழிகள் எல்லோரையும் விட்டு விலத்தினாள்.
ஓரு அழகான காலை நேரத்தில் பூந்தோட்டத்தில் அழகாக பூத்து குலுங்கியிருந்த ரோஐh பூவைப்பார்த்து தன்னையே மறந்து நின்றாள். காகங்கள் கரைந்து கொண்டு இருக்கையில் வானத்தில் ஒரு இரைச்சல். அந்த இரைச்சல் பேரிரைச்சலாக மாறி ஏதோ ஒரு பெரிய சத்தம் கேட்டது மட்டும் தான் அவளுக்கு தெரிந்தது. சிறு துளி ஒன்று முகத்தில் பட துடித்து எழுந்தாள். எங்குமே புழுதி மண்டலமாக இருந்தது. அழுகைக்குரல் அந்த பகுதியையே அதிர வைத்துக்கொண்டிருந்தது. தனது முகத்தில் பட்ட துளியை தடவி பார்த்தாள். ஐய்யோ என்ன இது இரத்த துளி எல்லோ என்று அதிர்ந்தாள். நினைவு வந்தவளாக அம்மா அப்பா என்று கத்திக்கொண்டே வீட்டுப்பக்கம் ஒடினாள். ம்ம் அம்மா அப்பா சிரித்தபடியே ஒருவர் மேல் ஓருவர் தலைசாய்ந்து படுத்து இருந்தனார் எப்பவும் முகத்தை கடுமையாக வைத்திருக்கும் அப்பா கூட அன்று சிரித்தபடி படுத்திருந்தார். அந்த முற்றத்து மல்லிகை முற்றாக கருகிக் கிடந்தது. ஒடி வந்து பெற்றோரை கட்டி அணைத்து அழுதாள். அழுவதற்கு வார்த்தைகள் தெரியவில்லை. ஆனால் அம்மா அப்பா இனி உயிருடன் இல்லை என்ற உண்மை மட்டும் அவளுக்கு மனதில் உறைத்தது. யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? இவளின் வீட்டில் இருவர் சாவு என்றால் பக்கத்து வீட்டு சாமினி அக்கா வீட்டில் மூவர்.
கடைசி நேர கடமைகளை செய்வதற்கு என்றாலும் ஆண்பிள்ளைகள் வேண்டுமே என்ற ஆதங்கங்கள் எல்லோர் மனதிலும் ஒலிக்கின்றன. பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அறியவே அண்ணாக்களுக்கு ஆறு மாதம் செல்லப்போகின்றது. இதற்குள் கடமைகளை முடிக்க எப்ப வரப்போகின்றார்கள்? இங்கு நான் அம்மாக்கும் அப்பாக்கும் இறுதி கடமைகளை செய்யும்போது அங்கு அண்ணாக்கள் நண்பர்களுடன் படம் பார்த்து சிரிப்பார்களோ? இல்லை நான் இங்கு சிதை முட்டும்போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பார்களோ? என்று நினைத்தவளுக்கு வழிந்த கண்ணீர் துளிகளை அருகில் இருந்த நண்பிகளின் கைகள் மாறி மாறி துடைக்கின்றன. இந்த துயர நேரத்தில் ஆறுதல் கூறி அணைக்க வேண்டிய கைகள் எட்டாத தூரத்தில். சுடலைப் பக்கம் போகதை எதாவது பிடித்து விடும் என்று சொல்லி அவளை பாதுகாத்த அம்மா தன் இறுதி கடமைக்காக தன் மகள் தன்னுடன் அங்கு வருவாள் என்று நினைத்து இருப்பாளா? பெண் பிள்ளைகள் என்றால் இந்த இடத்துக்கு எல்லாம் போகக்கூடாது என்று போக கூடிய இடங்களை படம் கீறி காட்டும் அப்பா தன் மகள் தன்னுடன் காடு வரை வரப்போகின்றாள் என்பதை அறிவாரா? அம்மாக்கும் அப்பாவிற்கும் வித விதமான படங்கள் அனுப்பும் அண்ணண்மார்கள் பெற்றோரின் உடலை சாம்பலாக கூட பார்க்க இயலாமல் இருக்கும் என்பதை அறிந்து இருப்பார்களா? இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? சிங்களவன் நம்மை அடிமைபடுத்தியதாலா? எனது வீடு எனது சொந்தம் என்று நமக்கு நாமே ஓரு வட்டம் போட்டு இருந்தது தான் காரணமா? இன்று உறவுகளை இழந்து தனிமரம் நான் நாளை யாரோ? இதற்கு முடிவே இல்லையா? என்று யோசித்தவள் கண்ணீரை துடைத்தாள். புது உணர்வு முகத்தில் தெரிந்தது. "அண்ணண் பேரை சொல்லு உடன் அணி வகுத்து நில்லு அந்தோ அழிக்க வந்த எதிரி மீது அணல் எடுத்து செல்லு" என்ற பாடல் வரிகள் அவள் மனதில் ஒடிக்கொண்டு இருந்தது.
|
|
|
| குதிரையை சாட்சியாக்கி திருமணம் செய்த ஜோடி |
|
Posted by: SUNDHAL - 02-25-2006, 03:53 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (10)
|
 |
கடவுளையோ, அக்னியையோ, பெரியவர்களையோ சாட்சியாக வைத்து திருமணம் செய்வது வழக்கம்.
ஆனால் வெளிநாட்டு காதல் ஜோடி ஒன்றுக்கு குதிரை சாட்சியாக வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்று நூதன ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையை செயல்படுத்தி காட்டி அவர்கள் அசத்தவும் செய்தனர்.
கேரளாவில் நடந்த இந்த நூதன திருமணம் பற்றிய விவரம் வருமாறு:-
கனடா நாட்டைச் சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் கரோல் இவரது காதலர் டக்ளஸ். இவர்கள் கேரள மாநிலம் கோவளத்துக்கு சுற்றுலா வந்தனர். வந்த இடத்தில் இவர்களுக்கு திருமண ஆசை வந்தது.
இந்து முறைப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேலும் தனக்கு பிடித்த மிருகமான குதிரை சாட்சியாக இருக்க வேண்டும் என கரோல் கூறினார்.
அவர்கள் விருப்பப்படி கோவளம் முள்ளூர் தோட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. குதிரை முன்பு நின்று கரோலின் கழுத்தில் டக்ளஸ் தாலி கட்டினார்.
பின்னர் அதே குதிரையில் ஏறி அந்த ஜோடி கோவிலை வலம் வந்தது. இந்த நூதன திருமணத்தை ஏராளமானோர் கூடி நின்று ரசித்தனர். கைதட்டி ஆரவாரம் செய்ததுடன் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கரோல்-டக்ளஸ் தேனிலவு கேரளாவிலேயே நடக்கிறது.
நூதன திருமணம் முடிந்து கரோல் கூறியதாவது:-
எனக்கு குதிரை மீது அதிக பாசம் உண்டு. எனது வீட்டில் 3 குதிரைகளை வளர்த்து வருகிறேன். அதனால் குதிரையை சாட்சியாக வைத்து திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். அதன்படி திருமணம் செய்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Thanks:Malaimalar..........
|
|
|
| ஒட்டுக்குழுத் துரோகி டக்ளசின் கோர முகம் |
|
Posted by: வினித் - 02-25-2006, 03:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
EPDPஅமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படும் தோழர்களால் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஜ சனிக்கிழமைஇ 25 பெப்ரவரி 2006 ஸ ஜ லக்ஸ்மன் ஸ
ஒட்டுக்குழுத் துரோகி டக்ளசின் கோர முகம்.
மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சு<b>யாட்சி டக்ளஸ் தேவானந்தாவிற்கு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. இது நன்றாகத் தெரிந்தும் இவர் ஏன் நாய் வேடம் போட்டார்? யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?
</b>
மேலும் வாசிக்க:::::::
http://www.nitharsanam.com/?art=15535
|
|
|
| போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள் |
|
Posted by: வினித் - 02-25-2006, 01:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள்
தற்போது நிலவிவரும் சமாதான சூழல் அற்றுப்போய் மீண்டும் போர் மூளலாம் என்பதே பலரதும் ஊகமாக இருக்கின்றது. சிலவேளைகளில் இது சரியானதாகவும் இருக்கலாம். ஆனால், மீண்டும் போர் தொடங்கும் பட்சத்தில் அது எவ்வாறானதாக அமையும் என்பது பற்றியும் புலிகளின் தாக்குதல் இலக்குகள், வியூகங்கள், அதன் உக்கிரத்தன்மை என்பன எவ்வாறு அமையப் போகின்றது என்பது பற்றியுமே இன்று பலரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், புலிகளின் இராணுவ வல்லமையையும் தேசியத் தலைவரின் போரியல் தந்திரோபாயங்களையும், தாக்குதல் உத்திமுறைகளையும் அறிந்து கொள்ளகடந்த காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான போரியல் சரிதங்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகின்றது.
அந்த வகையில், தமிழீழ விடுதலைப்போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமர்களில் சிலவற்றை மீட்டுப் பார்த்தால்,
~1990-09-26 அன்று யாழ். கோட்டை இராணுவ முகாம் புலிகளால் வெற்றிகொள் ளப்பட்டமை,
~1990-11-23 அன்று மாங்குளம் படைமுகாம் தகர்த் தழிக்கப்பட்டமை,
~1991-07-10 அன்று ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாயக்கடல் வெளிச் சமரை மேற்கொண்டமை,
~1993-09-29 அன்று இராணுவத்தினரின் யாழ். தேவி படை நடவடிக்கையை முறியடித்த புலோப்பளை சமர்,
~1993-11-12அன்று பூநகரி கூட்டுப் படைத்தளம் தவளை நடவடிக்கை மூலம் தகர்த்தழிக்கப்பட்டமை,
~1995-07-14 அன்று யாழ். நகரை ஆக்கிரமிக்க திட்டமிட்டு முன்னேறிப் பாய்ந்த படைகளை புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் முறியடித்தமை,
~1996-07-18 அன்று ஓயாத அலைகள் -1 நடவடிக்கை மூலம் முல்லைப் படைத்தளத்தினைத் தாக்கி நிர்மூலமாக்கியமை,
~1997-05-13 அன்று படையினரால் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து சமரிட்டமை,
~1998-09-27 அன்று கிளிநொச்சிப் படைத்தளத்தை ஓயாத அலைகள்- 02 நடவடிக்கை மூலம் மீட்டெடுத்தமை,
~1999-11-02 இல் ஆரம்பித்த ஓயாத அலைகள் - 03,
~2000-04-02 அன்று ஆனையிறவுப் படைத்தளம் தாக்கி அழிக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டமை,
~2001-04-25, 26, 27 ஆகிய நாட்களில் இத்தாவில் பகுதியில் தீச்சுவலைப் படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர் என்பன தமிழர் தேசத்தில் ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைகளை திணறடித்த களங்களில் சில...
இந்தத் தாக்குதல்கள் அனைத்திலும் விடுதலைப்புலிகள் எவ்வாறு வெற்றி கண்டார்கள் என்பதையும் தாக்குதல் வியூகங்கள் எப்படிப்பட்டவை, அவர்களின் இராணுவ தந்திரோபாயங்கள் எவ்வாறானவை என்பன பற்றி உலகப் பிரசித்திபெற்ற இராணுவ ஆய்வாளர்கள் கூட இதுவரை ஆய்வு செய்து முடிவுக்கு வரமுடியாத நிலையில் உள்ளனர்.
1990 ஆம் ஆண்டு மாங்குளம் இராணுவ முகாமைத் தாக்கியழித்ததன் ஊடாக புலிகள் கெரில்லாப் போராளிகள் மட்டுமல்ல மரபுவழி இராணுவமாகவும் மாறிவருகிறார்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது. பின்னர் 1991 ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் நடத்திய ஆகாயக் கடல் வெளிச்சமரின் பின் இலங்கையின் இரண்டு இராணுவங்கள் இருக்கின்றன என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
தொடர்ந்து தமிழீழ வரலாற்றில் பாரிய திருப்புமுனைகளை ஏற்படுத்திய களங்களாகிய ஜெயசிக்குறு சமர்க்களமும் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஓயாத அலைகள் நடவடிக்கைகளும் ஆனையிறவுப் படைத்தள தகர்ப்பும் பலம்வாய்ந்த இராணுவங்களையும் எதிர்க்கும் சக்தி பெற்றவர்கள் புலிகள் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கியது.
இவ்வாறு கெரில்லாத்தாக்குதல் தொடக்கம் மரபு வழிச்சமர் வரை எந்தவொரு களங்களும் புலிகளின் வெற்றிக்கு எவ்வாறு சாதகமாக அமைகின்றது என்பது உலகை வியக்க வைக்கின்ற விடயமே.
புலிகள் ஒவ்வொரு களத்திலும் ஒரேவகையான போர் தந்திரோபாயத்தையும் போர் உத்திகளையும் கையாள்வதில்லை என்பது மட்டும் இராணுவ ஆய்வாளர்களால் உணரப்பட்டுள்ளது.
எவ்வளவு பெருந்தொகையான படைகளைக் குவித்திருந்தாலும் அவர்களைக்குறித்த நேரத்தில் சின்னாபின்னமாக்கும் போர் உத்திமுறை புலிகளிடம் மேலோங்கிக் காணப்படுகின்றமை அவர்களின் வெற்றியின் பொதுவான பின்னணியாக அமைகின்றன.
பொதுவாக மரபு வழிப்போர் நடவடிக்கைகளில் ஆளணிகளிலும் ஆயுத தளபாடங்களிலும் எண்ணிக்கை கூடிய படைத்தரப்பானது சமரில் வெல்லுவது வழமையானது. இந்த இராணுவ தத்துவத்தையே கடந்தகால சந்திரிகா அரசாங்கமானது வடபகுதியில் பரீட்சித்துப் பார்த்தது. பெரும் எண்ணிக்கையில் துருப்புக்களை நகர்த்தி மரபு வழிப்போர்களை வெல்ல முடியும் என்பது சாத்தியமானதொன்றுதான் இதற்கு உதாரணமாக ஐரோப்பாவில் நெப்போலியனின் படையெடுப்புக்களையும் அமெரிக்க உள்நாட்டுப்போரில் வடபிராந்திய இராணுவத்தினர் வெற்றிபெற்றதையும் கொள்ள முடியும். இது உலக இராணுவ அறிவியல் தத்துவமாக இருப்பினும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அதன் தலைவர் உலக இராணுவ போரியல் வரலாறுகளை நன்கு அறிந்திருந்தும் அவற்றை மட்டும் பின்பற்றி களங்களை வழிநடத்துவதில்லை. களநிலைமைகளுக்கேற்ப படை நடத்துகின்ற வல்லமை அவரிடம் மேலோங்கிக் காணப்படுகின்றது.
பொதுவாக ஆளணி எண்ணிக் கையில் மிகுந்த இராணுவத்தினரை செறிவாக ஒரு இலக்கை நோக்கி நகரச்செய்து போரில் வெற்றி கொள்வது என்ற மூலோபாயத்தை பல முன்னணி நாடுகள் கையாண்டு வருகின்றன.
எனவேதான் சிறிலங்காவின் ஆட்சியாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளும் இந்தத் தத்துவத்தை கருத்திற்கொண்டு தமது படை எண்ணிக்கையினை பெருக்கிக் கொண்டு புலிகளை வெல்ல முடியும் என அடிக்கடி கனவு காண்கின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் சந்திரிகா அரசின் நப்பாசையும் அமைந்திருந்தது. ஆனால் அமெரிக்க இராணுவ கட்டளையை மற்றும் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியின் இராணுவ வரலாற்று ஆசிரியருமாக பணிபுரியும் பேராசிரியர் ஆஸர்ஜோன்ஸ் படைவீரர்களின் வெற்றி, தந்திரோபாயம் பற்றி இவ்வாறு கூறுகின்றமை நோக்கத்தக்கது.
அதாவது சமர்க்களங்களில் படையணிகளின் ஆட்தொகையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. இரண்டு சமபலமான இராணுவங்கள் சமர்களில் ஈடுபடும் போது வீரமானது, போரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாகும்.
பதினாறாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஆள் எண்ணிக்கையை விட வீரமே போரின் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருந்திருக்கிறது. இதேபோன்று போர்முனைகளில் படையணிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் இடையூறுகளையும் தீர்த்து வைத்து சமரில் வெற்றி பெற படையை நிர்வகிக்கும் தளபதிகள் தேவையான தீர்மானங்களை எடுப்பதுவும் மிக முக்கியமானதாகும்.
எனினும் சிறிலங்காப் படைகளைப் பொறுத்தவரை எந்தளவு பெருந்தொகையான துருப்புக்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தியபோதும் புலிகளை வெல்லமுடியாது போனது.
மாறாக குறைந்தளவு போராளிகளை மட்டும் நடவடிக்கையில் ஈடுபடுத்தி தேசியத் தலைவரால் எவ்வாறு இப்பெருந்தொகை படைகளை வெற்றிகொள்ள முடிந்தது என்பதை நோக்கினால்; போராளிகளினதும் தளபதிகளினதும் வீரமும் மனஉறுதியும் தலைவரின் படைநகர்த்தும் தந்திரோபாயமுமே காரணம் என விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல். தீபன் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கையில் வெற்றியின் பின்னணி பற்றி கூறும்போது குறிப்பிட்டமை இங்கு நோக்கத்தக்கது.
களத்தில் போரிடும் இராணுவம் வெற்றியை நாடி நிற்பது இயல்பான விடயம். இதற்கு சிறிலங்கா இராணுவம் விதிவிலக்கல்ல. சிறிலங்கா இராணுவம் போரில் வெற்றி நிச்சயம் என்ற அதன் அரசியல் எஜமானத்தின் நம்பிக்கைக்கும் ஆசைக்கும் ஏற்ப வழிநடத்தப்பட்டு வருகின்றது. போரில் இறுதியான இராணுவ வெற்றியைத்தவிர வேறு ஏதாவது விளைவுகள் ஏற்படுமா என்பது பற்றி அரச தரப்பு அரசியல்வாதிகளோ, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளோ சிறிதளவும் சந்தேகம் கொள்வதில்லை. இவர்கள் தமது உறுதியான நம்பிக்கையை மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்வதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போரின் இறுதி வெற்றிக்கு நாள் குறித்து வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்த்துப்போன பின்பும் இந்த நம்பிக்கை தொடர்ந்து நீடித்துவரும். இவ்வாக்குறுதிகள்; யாவும் இவற்றை அள்ளிவழங்கி வந்தவர்களின் அனுபவமின்மையையே காட்டின. வாக்குறுதிகள் பொய்த்துப்போவது ஒருபுறமிருக்க நிபந்தனையற்ற சரணாகதிக்குப் படைகளை கொண்டுவந்துவிடுவதும் உண்டு.
தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புப்படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளானது ஒரு களைப்படைய வைக்கும் யுத்தமாகும். சிறிலங்காவின் படைத்துறை உயர்பீடம் ஓய்வுபெறுதல், இறப்பு, பதவி மாற்றம் போன்றவற்றால் அடிக்கடி மாற்றத்திற்குள்ளாகி வருகின்றது. ஆனால், புலிகள் இயக்கமோ அதன் ஆரம்பத்திலிருந்து இதுவரை தனியொருவராலேயே தலைமை தாங்கி நடத்தப்பட்டு வருகின்றது. இதனால், சிங்களத் தளபதிகளின் போர் அறிவைவிட விடுதலைப் புலிகளின் போர் அறிவுமிகவும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பது மறுக்கமுடியாதது. தமது போர் தந்திரோபாயங்கள், போரிடும் ஆற்றல் அனைத்துக்கும் மேலாக வெற்றி தமக்கே என்ற மனஉறுதி ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருந்தபோதும் அவர் தம்மைப்பற்றியோ போரின் வெற்றிகள் பற்றியோ பெருமிதமாகப் பேசிக்கொள்வதில்லை.
ஒரு நாட்டுக்கு எதிராக போரை மேற்கொண்டு வரும் எவரும் எதிர்ப்பாளர் ஒருவரால் உயிரிழப்பையும், உடல், உடமைச் சேதங்களையும் தாங்கிக்கொள்ள முடியும் என்பதை மரபு ரீதியான இராணுவ வல்லுநர்களால் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
படைப்பிரிவுகளில் உள்ள அணிகளை பெருக்க முடியாது விட்டாலும் நடவடிக்கைகளின் போது ஏற்படும் ஆளணி இழப்புக்களையாவது ஈடு செய்வதற்கு ஆட்களை திரட்டுவது கூட எவ்வளவு கடினமான காரியம் என்பதைத்தான் சிறிலங்காப் படை அதிகாரிகள் தமது சொந்த அனுபவம் மூலம் அறிந்துள்ளார்கள். படையிலிருந்து தப்பியோடியோரை மீண்டும் படையில் சேருமாறும் அவர்கள் கௌரவமான முறையில் தண்டனைகள் ஏதுமின்றி படையில் முன்பு பணியாற்றிய அதே பதவியிலேயே தொடர்ந்தும் அமர்த்தப்படுவார்கள் என்றும் சனாதிபதி சந்திரிகா அவர்களே மன்றாடிக் கேட்டுக் கொண்டதும் நல்ல உதாரணமாகும்.
எனவே, தமது எதிரிகளும் இந்த நிலையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே அவர் நினைத்திருக்கின்றார். ஒவ்வொரு சமரிலும் ஏற்படும்; இழப்புக்களால் புலிகள் நிரந்தரமாகவே பலவீனப்பட்டு வருகின்றனர் என்றே அவர்கள் நம்பியிருக்கின்றனர். புலிகள் இயக்கம் தமது இழப்புக்களை எவ்வாறு ஈடுசெய்கின்றது என்பதையும் அதற்கு மேலாக தனது ஆளணியின் எண்ணிக்கையை தொடர்ந்தும் எவ்வாறு அதிகரித்து வருகின்றது என்பதையும் இவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு தேசியவாத இயக்கத்தின் உள்ளக ஆற்றலானது நாட்டின் மரபு ரீதியான படைத்துறை வல்லுநர்களுக்கு தெரியாதது மட்டுமல்ல, புரிந்துகொள்ள முடியாததும் கூட.
ஒரு அரசாங்கம் ஒரு தேசியவாத இயக்கத்துடன் எவ்வளவுகாலம் போரை நீடிக்கின்றதோ அந்தளவிற்கு அரசாங்கத்திற்கு எதிராகப்போரிடும் தேசியவாதிகளின் பலம் அதிகரிக்கின்றது. ஆனால், அரசுகளில் உள்ளவர்களின் நம்பிக்கையோ இந்த உண்மைக்கு மாறாகவே உள்ளது. இந்தத் தவறு போர் நடைபெறும் அரங்குகளில் மீண்டும் மீண்டும் சிறிலங்கா அரசாங்;கத்திற்கு புலிகளால் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டு வந்திருக்கின்றது.
ஒரு நாட்டுக்கு எதிராக போரில் ஈடுபடும் தேசியவாதிகள் எவரும் எதிர்ப்பாளர்களால் பூண்டோடு அழிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. அப்போர்கள் முடிவுக்கு வந்தாலும் அதை நடத்துவபவர்கள் அழிந்துவிடுவதும் இல்லை. மாறாக, அவர்கள் ஆயுதங்களையும் நிலப்பிரதேசங்களையும் வைத்திருப்பதோடு, சமாதானத்திட்டத்தில் அரசுக்கு சமமான பங்களிகளாக இருப்பார்கள். மேலே குறிப்பிட்டப்பட்ட நாடுகளில் எல்லாம் நடந்தது இதுதான். இஸ்ரேல்- பி.எல்.ஓ.விற்கு இடையிலான காம்டேவிட் வாஷிங்டன் உடன்படிக்கையும் பொஸ்னிய ஹேக்சிக்கோவினால் முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட டெய்ரன் உடன்படிக்கையிலும் உலகின் மிகப் பலம் வாய்ந்த மத்தியஸ்தரான அமெரிக்காவே தலையிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிட முடியும்.
இதைவிட ஹிட்லரின் ரஷ்யப்படையெடுப்பு தோல்வியடைந்தமைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதும் பிரதான விநியோகப்பாதையில் தடங்கல் ஏற்பட்டதே முக்கிய காரணம் என பிரபல இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் பீற்றர் வோன் ஹிரிவெல்ட் தனது பார்ப்பறோசா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளைப் பொறுத்தவரை இவ்வாறான நடவடிக்கையினை வெற்றிகரமாக கையாண்டதும் இதுவரை நடந்த போரில் அவர்கள் வெற்றி கண்டமைக்கு ஒருவகைக் காரணம் எனலாம் இதற்கு தகுந்த உதாரணமாக ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை கிளிநொச்சியில் கரடிப்போக்குப் பகுதியிலும் பரந்தன் பகுதியிலும் தமது அணிகளை நகர்த்தி கிளிநொச்சிப்படைகளுக்கும் ஆனையிறவுப்படைகளுக்குமிடையிலான தொடர்பை துண்டித்த பின் கிளிநொச்சி தளத்தை தாக்கியழித்தமையை குறிப்பிடமுடியும்.
இவை அனைத்தையும் விட இன்று உலகிலேயே கெரில்லா அணித் தலைவர்களில் தலைசிறந்தவராகவும்,
விடுதலைப் புலிகளின் தலைவர் திகழ்கின்றமையானது அவர்களின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் மிக முக்கியமானதொரு காரணியாக அமைகிறது.
எனவே எதிரியானவன் எந்த வகையான போரியல் தந்திரோபாயங்களை கையாண்டாலும் அவற்றை மிக இலகுவாக வெற்றி கொள்ளக்கூடிய பதில் தந்திரோபாயங்களையும் திட்டங்களையும் வகுக்கும் தமிழீழ தேசியத்தலைவரின் படை நகர்த்தல் தாக்குதல் திட்டங்கள் என்பனவற்றிக்கு எந்தவொரு படைகளும் முன்னிற்க முடியாது. அத்தோடு, எந்தவொரு இராணுவ வல்லுநரோ சதாராணமானவர்களோ எதிர்பாhக்கின்ற வகையில் தலைவரின் போர்முனைத் தெரிவுகளோ, போர்க்கள நடவடிக்கைகளோ அமைவதில்லை என்பதையும்; கடந்த கால வரலாறுப் படிகள் எடுத்தியம்புகின்றன.
எனவே, மீண்டுமொருமுறை போர் மூளுமானால் அது எவ்வாறு அமையும் என்பது பற்றியும், அமையப்போகும் களம் எது என்பது பற்றியும் எவரோனும் இலக்கைத் தெரிவுசெய்ய முற்படுவார்களோயானால் நிச்சயமாக அது முட்டாள்தன தெரிவாகவே அமையும். மாறாக இவ்விடயத்தில் அரசு தரப்பு முந்திக்கொள்ளும் நிலை ஏற்படின் அதற்கு தலைவர் வழங்கும் பதிலை எதிர்கொள்ள அவர்களால் முடியுமா? என்ற நிலையும் கேள்விக்குறியே!
நன்றி: ஈழநாதம்
http://www.tamilnaatham.com/
|
|
|
| ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா???? |
|
Posted by: putthan - 02-25-2006, 01:02 PM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா????
என்ன தம்பிமார்களே சின்னபுள்ளத்த்னமாக கருத்தெழுதுகிறீர்கள்?
எட்டாம் வகுப்பு அறிவு என்றாலும் ஒரளவிற்காவது விவஸ்தை இல்லையா????
என்ன தலையங்கத்திற்கு கீழ் என்ன எழுதுவது என்றும் தெரியாதா???
1.சிறிலங்கா கொடி தூக்கல்?
2.கருணாவை ஓப்படைத்தல்?
3.ராஜீவ் கொலையும் சுப்புவின் அலட்டலும்?
4.58 வது அகவையில் முதல்வர்?
இவ் தலைப்புக்கும் விவாதத்திற்கும் பொருத்தம் அற்ற வகையில் கருத்துகளை ஒரு சிலர் திட்டம் இட்டு செய்கிறார்களா?
இவர்கள் உண்மையாக இந்தியர்களா???அல்லது முன்னாள் ஆயுத குழுவினரா????
இப்படியான விடயங்களை நிர்வாக குழுவினர் சீறிலங்கா அரசை போல் கணக்கெடுப்பதில்லை ஏன்? ஏன்?ஏன்?
|
|
|
| கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை |
|
Posted by: kurukaalapoovan - 02-25-2006, 12:22 PM - Forum: புலம்
- Replies (2)
|
 |
கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
24 மனத்தியாலங்கலும் டமிலர் காதுகலில் தேனாக பாய்ந்த எங்கள் கடவுளின் ரிபிசி இக்கு என்ன நடந்தது?
ஒப்பாரி முடிஞ்சு இப்ப ஒலிமயமானஎ எடிர்காலம் தெரியுதாம் :roll:
|
|
|
| அமைச்சரின் மனைவி கட்டுநாயக்காவில் போதையில் மயங்கி வீழ்ந்தார |
|
Posted by: adsharan - 02-25-2006, 07:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
அரசுக்குழு சார்பில் ஜெனீவா பேச்சுகளில் பங்குகொள்ளச் சென்ற அமைச் சர் ஒருவரின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரமுகர்கள் செல்லும் பாதையில் மதுபோதையில் மயங்கி விழுந்துவிட்டார் என்றும்
பின்னர், அமைச்சரும், அவரது மகனும் அவரை கைத்தாங்கலாகக் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றினர் என்றும்
கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது.
இது குறித்து, அந்தப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி வருமாறு:
சம்பவதினம் இரவு 8 மணிக்குப் புறப்படவிருந்த கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான கியு.ஆர்.303 என்ற விமானத்தில் பயணிப்பதற்கு அமைச்சரது குடும்பத்தினர் ஆசனங்களை ஒதுக்கியிருந்தனர்.
பொதுவாக எந்தத் தராதரத்தைச் சேர்ந்த பயணியும் விமானம் புறப்படுவதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னர், விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆனால் அமைச்சரோ தனது குடும்பத்துடன் இரவு 8மணிக்கு அதாவது விமானம் புறப்படும் நேரத்திற்கே விமான நிலையத்தை வந்தடைந்தõர். இதனால், விமானம் புறப்படுவதில் தாமதம் எற்பட்டது.
எவ்வாறாயினும் விமான நிலைய ஊழியர்களின் கடும் முயற்சிகள் காரணமாக அமைச்சரின் குடும்பத்தினர் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
அமைச்சர் குடும்பத்தினரின் இந்த நடவடிக்கையால் விமான நிலைய ஊழியர்கள், மட்டுமன்றி விமானத்திலிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். விமானத்திலிருந்த பயணிகள் விமானநிலைய ஊழியர்களைக் காரசாரமாகத் திட்டித் தீர்த்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் மனைவி அதிகமாக மது அருந்தி நிலத்தில் மயங்கிவிழுந்த சம்பவமானது, அமைச்சருக்கும் அவரது மகனுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தியதுடன் அமைச்சரின் மனைவியின் இந்த நடவடிக்கை குறித்து விமான நிலைய ஊழியர்கள் மட்டுமன்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளும் அருவருக்கும் விதத்தில் தம்முள் பேசிக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக மதுபோதையிலிருந்த அமைச் சரின் மனைவி மயங்கிவிழுந்து, அவர் கைத்தாங்கலாக விமானத்திற்கு அழைத் துச் செல்லப்பட்டமை, விமானம் புறப்படும் நேரத்திற்கே விமான நிலையம் வந்தது மற்றும் விமான நிலையப் பணியாளர்கள் ஓடியாடி அவர்களை அழைத் துச் சென்றது ஆகிய அனைத்தும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் "கமெராவில்' ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று அதில் உள் ளது
http://www.uthayan.com/pages/news/today/20.htm
|
|
|
| யாரிவர்? |
|
Posted by: வர்ணன் - 02-25-2006, 06:39 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
<b>16 வயசில் பல ஆசை வருமே-
இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா?
திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி
வெடிகுண்டை தன் மடியில் - காவி
வீணே தன்னை கொல்ல நினைக்குமா?
எப்படி ஆச்சு?
ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை
ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- !
இப்படி நினைத்தாரே ஒருவர் -!
உன்னால்-என்னால்-எவரால் எண்ணி
பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே!
இப்படி இப்படி -பாருங்களேன்!
எவர் நினைத்திருப்பார் - இந்த
இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று?
ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்-
மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-!
பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர்
அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ?
எப்படி எப்படி - உம் பாட்டன்
வயசுள்ளவருக்கும் - தலைவரென்றானீர்
எப்படி எப்படி?
மூச்சடைத்து கிடந்த இனத்துக்கு - கதவுடைத்து
பிராணவாயு தந்த கரிகாலரே!
எங்கள் தேசத்து பிரவாகமே
பிரபாகரனே-தலைவா-!!
பட்டமும் பதவியும்-பத்து காசும் - வருது - என்றால்
என்னவும் செய்வார் - இந்த எச்சில் இலை தின்போர்!
எதுவும் வேணாம் - இனமே வேண்டும் --
இருப்பவரை பேச விட்டு - நீர் வருஷம் - ஒரு முறை
பேசுகிறீர் - எப்படி உம்மை புரிந்துகொள்ள?
கொஞ்சம் - சக்தி வந்தாலே -
அடுத்தவனை அடிச்சு கொன்று வாழ நினைக்கிறார் -அற்பர்!
எல்லா சக்தியும் இரு தோழில் கொண்டும்
இனத்துக்காய் உம் வாழ்வை தொலைக்கிறீரே!
புரிய முடியவில்லை -!
உதாரணம் உமக்கு நிகர்
யாரும் உலகில் இருந்தால்தானே
ஒப்பிட்டு - உம்மை நாம் அறிந்து கொள்வோம்!
வேலுப்பிள்ளையின் மகவென்று நீர் ஆகலாம்-
இந்த வேதனையில் கிடந்து உழலும்
ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் - நீர்தான் -தாய்!!</b>
|
|
|
|