| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 285 online users. » 0 Member(s) | 282 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,220
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,224
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,594
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,278
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,592
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,021
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,412
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,107
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,977
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236
|
|
|
| மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் |
|
Posted by: adsharan - 02-24-2006, 09:08 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
காய்ச்சல் மற்றும் வாந்தி உபாதைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி யின் 50 மாணவிகள் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதனால் மானிப்பாய் பகுதியில் பதற்ற மானதும் அதே பரபரப்பானதுமான சூழ் நிலை நிலவியது
அதேவேளை, காய்ச்சல் மேலும் பரவு வதைத் தடுக்கும் நோக்குடன் கல்லூரியை இன்றுமுதல் தற்காலிகமாக மூடுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலையிடி, வாந்தி போன்ற உபா தைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகள் அம்புலன்ஸ் மூலம் கூட்டிவரப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டனர்.
திடீரென ஏற்பட்ட இந்த நிலைமை குறித்து கல்லூரி அதிபர் திருமதி ஜெயவீரசிங்கத்தி டம் கேட்டபோது அவர் கூறியதாவது:
எமது கல்லூரியில் கடந்த வெள்ளிக் கிழமை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி இடம்பெற்றது அதன்பின்னர் கடந்த சில தினங்களாக பல மாணவிகள் காய்ச்சல், தலையிடி, வாந்தி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி நோயால் பலர் வயது வேறுபாடின்றி தரம் ஒன்று முதல் உயர்தர வகுப்பு வரையான மாணவிகளை பீடித்துள்ளன. நேற்றுக் காலை வழமைபோல் நடைபெற்ற இறைபிரார்த்தனை யின்போது ஒருசில மாணவிகள் மயக்கமடைந் தனர். அதனைவிட வகுப்பில் அநேகமான மாணவிகள் சோர்வடைந்து காணப்பட்டனர். இந்த ஒருவகைக் காய்ச்சல் குணம் குறி காணப் பட்டதால் அவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்கென மானிப்பாய் சுகாதார வைத் திய அதிகாரியிடம் தொடர்புகொண்டோம்.
பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பரிசோதகர்கள் பலர் கல்லூரிக்கு வருகை தந்தனர் அவர்கள் பாதிக்கப்பட்ட 36 மாண விகளை அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
ஏனைய 40 மாணவிகள் கல்லூரி மண்ட பத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வைத்தி சாலைக்குக் கொண்டுசென்ற மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் அது ஒருவித வைரஸ் காய்ச் சல் என்றும் கூறப்பட்டது.
இதன் பின்னர் கல்லூரியில் தடுத்துவைக் கப்பட்டிருந்த மாணவிகள் வீடுசெல்ல அனு மதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் சிகிச் சைக்குட்படுத்தப்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றார்.
பீதிகொள்ளத் தேவையில்லை
மாணவிகள் நோய்வாய்ப்பட்டது தொடர் பாக மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோத கர் எஸ்.எல்.ஜெபராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததா வது:
இது ஒரு வைரஸ்தொற்றினால் ஏற்பட்டி ருக்கும் காய்ச்சல் என்று மருத்துவ அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து எந்த வித பீதியும் கொள்ளத்தேவையில் என்று அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதி மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ் வரன் கருத்துத்தெரிவிக்கையில்:
இந்தக் காய்ச்சல் தொடர்பாக எவரும் பீதி கொள்ளத் தேவையில்லை. இது ஒரு சாதாரண காய்ச் சலே. இது தொடர்பான தடுப்பு நடவடிக் கைகளை சுகாதாரப் பிரிவினர் மேற் கொண் டுள்ளனர். இது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவித் துள்ளோம் என்றார்.
http://www.uthayan.com/pages/news/today/20.htm
|
|
|
| அரசுக்கு நேர்ந்த அவலம் |
|
Posted by: வினித் - 02-24-2006, 02:35 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
அரசுக்கு நேர்ந்த அவலம்
ஜெனீவாப் பேச்சுகளில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் தான் வைத்த வலையில் தானே விழும் அவலம் இலங்கை அரசுத் தரப்புக்கு நேர்ந்திருக்கின்றது.
அரசுப் பிரதிநிதிகளோடு விடுதலைப் புலிகள் சரிக்குச் சரி சமதையாக - சம அந்தஸ்தில் - அமர்ந்திருந்து பேசுவதும், வாதிடுவதும் சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளின் முன்னால் தனக்கு பேரிழுக்குத் தரும் விடயமென்றுகருதிய அரசுத்தரப்பு, அந்தப் பேச்சுகள் பற்றிய உள்வீட்டு விடயங்கள் அம்பலமாகாமல் அமுக்கி வாசிக்கச் செய்வதன் மூலம் விவரங்களை மூடிமறைத்து சமாளிக்கத் திட்ட மிட்டது. அதற்காக செய்தியாளர்களுக்கு முழுக் கதவடைப்பு நடவ டிக்கை வனையப்பட்டது. முன்னைய அமைதிப் பேச்சுகள் போலல் லாமல் இந்த அமைதிப்பேச்சுகள் பற்றிய விடயங்களை பேச்சு முடிவடையும் வரை ஊடகவியலாளர்களுக்கு வெளியிடுவதில்லை என்ற தீர்மானம் இந்த அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது.
ஆனால், இந்தத் தீர்மானத்தை முதலில் மீறியதே இலங்கை அரசுத்தரப்புத்தான். பேச்சுகளில் கலந்துகொள்ள ஜெனீவா வந்திருந்த இருதரப்புப் பிரதிநிதிகள் குழுவும் ஊடகவியலாளர்கள் நெருங்கமுடியாதவாறு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நகரிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள சாட்டோ டி பொய்ஸி அரண்மனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அரசுத் தரப்பு பிரதிநிதிகள் குழுவில் ஒருவரான அமைச்சர் ரோஹித போகொல்லாகம மட்டும், பேச்சு நடைபெறும் புதன்கிழமை தினத் துக்கு முதல்நாள் மாலை அந்த அரண்மனையிலிருந்து பிய்த்துக் கொண்டு ஜெனீவா நகருக்கு வந்தார். திடீரென ஊடகவியலாள ரைக் கூட்டி ஒரு செய்தியாளர் மாநாடு நடத்தினார்.
அப்போது, யுத்த நிறுத்த உடன்பாட்டை திருத்தியமைத்தல் பற்றியே அடுத்த நாள் ஆரம்பமாகும் பேச்சுகளின்போது கலந்துரையாடப்படும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டை திட்டவட்டமாகப் பகிரங்கப்படுத்திப் பிரகடனப்படுத்தவும் அவர் தவறவில்லை.
செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற பொது உடன்பாட்டை அரசுத்தரப்பு மீறிய நிலையில் பேச்சுகள் புதனன்று தொடங்கின. அந்தத் தவறுக்கான விளைவை அரசுத் தரப்பு பேச்சின் ஆரம்பக் கட்டத்திலேயே வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டியதாயிற்று.
முதல் நாள் ஆரம்பப் பேச்சில் புலிகளின் பிரதிநிதிகள் சார்பில் அதன் பேச்சுக் குழுத்தலைவர் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் நிகழ்த்திய அங்குரார்ப்பண உரையின் பிரதியைப் பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர்கள் சில கணங்களில் அதைப் பகிரங்கமாக உலாவரச் செய்துவிட்டனர். ஆழமான கருத்துகள் அடங்கியிருந்த அந்த உரை, யுத்தநிறுத்த ஒப்பந்தம் முழு அளவில் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படுவதே மாற்றமுடியாத ஒரே நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்பதைக் காரிய, காரணங்களோடு விளக்கமாக வற்புறுத்தியது.
மதியுரைஞர் பாலாவின் அங்குரார்ப்பண உரை ஊடகங்களுக்குக் கிடைத்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட அரசுத் தரப்பு அதற்குப் பதில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கறுவிக்கொண்டு தனக்குத் தானே குழிபறித்துக்கொண்டமைதான் வேடிக்கையான நிகழ்வு. பாலாவின் அங்குரார்ப்பண உரை வெளியானதால் அதற்குப் பதிலடியாக தனது தரப்பு பேச்சுக் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அங்குரார்ப்பண உரையைப் பகிரங்கப்படுத்தத் தீர்மானித்தது அரசுத்தரப்பு. அந்த உரையின் உள்ளடக்கம், பேச்சுமேசையில் முதல் நாள் காலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை பற்றியெல்லாம் கருத்திலெடுக்காமல் பழிக்குப் பழி - அறிக்கைக்கு அறிக்கை- உரைக்கு உரை - என்ற அடிப்படையில் நடந்து தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொண்டது அது.
அப்படி என்னதான் இந்த அங்குரார்ப்பண உரை வெளியானதால் நேர்ந்துவிட்டது? அதை அறிவதற்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அந்த உரையின் அடிப்படை அம்சங்களை நாம் கவனிக்கவேண்டும்.
""அரசும் புலிகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை அரசுத்தரப்பால் ஏற்றுக்கொள்ளமுடியாதது. அது இலங்கையின் அரசமைப்புக்கு முரணானது. இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கத்தக்கது. இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது. ஆகவே, அந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும்'' இதுதான் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அந்த உரையின் சாராம்சம். இதைப் பகிரங்கப்படுத்தித்தான் தனக்குத்தானே மண்வாரிக்கொண்டது இலங்கை அரசுத்தரப்பு.
மேற்படி ஒப்பந்தம் அரசமைப்புக்கு உட்பட்டதே என்பதை, ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பொதுக்கட்டமைப்புக்கு எதிரான வழக்கில் தான் வழங்கிய தீர்ப்பின் நடுவே இலங்கை உயர்நீதி மன்றம் தெளிவாகத் தெரிவித்திருந்தது. அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து வியாக்கியானம் செய்து தீர்ப்பளிக்கும் ஏக அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கே உண்டு. அந்த நீதிமன்றம் மேற்படி அரசு - புலிகள் யுத்த நிறுத்தத்துக்கு வழிவகுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசமைப்புக்கு இணக்கமானதே என்று தனது தீர்ப்பில் கூறியிருக்க, அதற்கு முரண்பட்டு அந்த ஒப்பந்தம் அரசமைப்புக்கு மாறானது என்று அரசுப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அறிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி அதனை அரச சமாதானச் செயலகத்தின் இணையத்தளம் ஊடாகத் தனது உரையாகப் பகிரங்கப்படுத்தியும் இருக்கிறார்.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக - மாறாக- இவ்வாறு பகிரங்கமாக விமர்சனம் முன்வைப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் விடயமாகக் கொள்ளப்பட முடியாததா என்று ஆராய்வது ஒருபுறமிருக்க, இவ்வாறு கருத்து வெளியிட்டு, அதைப் பகிரங்கப்படுத்திய அரசுத்தரப்பு, கடைசியாக ஜெனீவாப் பேச்சில் என்ன செய்திருக்கிறது?
தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தனது நாட்டின் அரசமைப்புக்கு முரணானது என்றும், தனது நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை, தேசியப் பாதுகாப்பு என்பனவற்றுக்கு ஆபத்து விளைவிக்கத்தக்கது என்றும், முதல்நாள் பேச்சின் ஆரம்பத்திலேயே தான் வலியுறுத்தி, பின்னர் அதைப் பகிரங்கப்படுத்திவிட்டு, அடுத்த கணம் முதல் அந்த ஒப்பந்தத்தை வரிக்குவரி- ஷரத்துக்கு ஷரத்து அப்படியே செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து அமர்ந் திருந்து விரிவாகப் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறது.
ஆக இப்போது, தனது நாட்டின் அரசமைப்புக்கு மாறாக தனது நாட்டின் ஐக்கியம், இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, தேசியப் பாதுகாப்பு என்பனவற்றிற்குப் பங்கம் விளைவிக்கும் - ஒரு நடவடிக் கையை அரசின் மூத்த அமைச்சர்கள் நால்வர், பொலீஸ்மா அதிபர், கடற்படைத் தளபதி ஆகியோர் உட்பட அரச உயர்மட்டத்தினர் அடங்கிய குழுவினர் ஜெனீவாப் பேச்சுகளில் மேற்கொண்டுள்ள னர் என்பதை அரசே ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைமை எழுந்திருக்கிறது.
பாலாவின் அங்குரார்ப்பண உரை பகிரங்கப்படுத்தப்பட்டதற்குப் பதில் நடவடிக்கை என்று சீறி, தனது தரப்புப் பேச்சுக் குழுத்தலைவரின் ஆரம்ப உரையைப் பகிரங்கப்படுத்திய இலங்கை அர சுத்தரப்பு, அந்த உரையை அம்பலப்படுத்திவிட்டு, அதற்கு முரணான விதத்தில் ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்துப்பேச இணங்கி, தன்னைத்தானே சிறுமைப்படுத்திக்கொள்ள நேர்ந்திருக்கிறது. ஜெனீவாவில் அரசுக்கு நேர்ந்த அவலம் இது.
http://www.uthayan.com/editor.html
|
|
|
| ஜெனீவா பேச்சுவார்த்தை: உங்கள் கருத்து |
|
Posted by: spyder12uk - 02-24-2006, 01:52 AM - Forum: புலம்
- No Replies
|
 |
இலங்கையில் பலவீனமடைந்துள்ள போர்நிறுத்ததை மீண்டும் மதித்துக் கடைப்பிடிக்கும் முகமாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தவும், எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் சந்தித்துப் பேசவும், இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணங்கியுள்ளதாக 23ஆம் தேதி நிறைவுற்ற ஜெனீவா பேச்சுக்களின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்த உங்களது கருத்துகளை எங்களிடம் தெரியப்படுத்துங்கள்.
நேயர்களே, இந்தப் பக்கத்திலும் 'எம்மைத் தொடர்புகொள்ள' பக்கத்திலும் இடம்பெற்றுள்ள படிவத்திலோ, அல்லது bbctamil@xlweb.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கோ உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள். தேர்வுசெய்யப்படும் கருத்துக்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து பிரசுரிக்கப்படும்.
வரவேற்கிறோம் உங்கள் மேலான கருத்துகளை
http://www.bbc.co.uk/tamil/highlights/stor...alksforum.shtml
http://www.bbc.co.uk/tamil/highlights/stor...alksforum.shtml
|
|
|
| தமிழீழ பொறியியற் கட்டுமான செயலகம். |
|
Posted by: Mathuran - 02-23-2006, 10:52 PM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
<b>தமிழீழ பொறியியற் கட்டுமான செயலகம்.</b>
<img src='http://img423.imageshack.us/img423/9979/cesotsankathi5ap.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img423.imageshack.us/img423/3555/cesotsankathi118pn.jpg' border='0' alt='user posted image'>
நன்றி சங்கதி இணையம்
|
|
|
| ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! |
|
Posted by: வினித் - 02-23-2006, 09:11 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (16)
|
 |
ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்!
ராஜீவ்காந்தி கொலையைப் பற்றி இந்தியாவில் உள்ள பைத்தியக்கார அரசியல்வாதி என குறிப்பிடப்படும் சுப்பிரமணியசுவாமி "விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும் என்ற தலைப்பில் தனது அலட்டல்களை புத்தகவடிவில் கொண்டு வந்துள்ளார்.
புத்தகத்தின் அரைப்பகுதி வரை சுய புராணம் பாடியுள்ள சுவாமி ஏதோ ராஜீவ்காந்தி தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியை காங்கிரசுக்கு வந்து சேருமாறு கெஞ்சி மன்றாடியதாவும், ஆனால் தான் ஜனதா கட்சியையும் கொள்கையையும் விட்டு விலகாதவன் என்று புலம்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் தான் அமைச்சராக இருந்த நேரத்தில் தான் ஒருவர்தான் நம்பிக்கையான நியாயமான அரசியல்வாதி என்றும், யஷ்வந்த்சிங், கமால் மொரார்க்கா, அர்ஜுன்சிங் போன்ற மற்றைய அமைச்சர்கள் மீது கூவத்து சாக்கடையை அள்ளி வீசியுள்ளார்.
இப் புத்தகத்தில் சுவாமி கேட்கும் வினாக்கள்:
- ராஜீவ்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது திருப்பத்தூர் வந்தே தீரவேண்டும் என்று சிலர் முயன்றனர். அவர் அங்கு வருவதை அந்த நேரத்தில் தோழமைக் கட்சியான ஜெயலலிதாவும், காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் விரும்பவில்லை. இப்படியிருக்க ராஜீவ்காந்தியை வரவழைத்தது யார்?
- திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய குழுவின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு சில விடயங்கள் தெரியும். ஆனால் இதுவரையில் மௌனமாக இருக்கிறார். ஏன்?
- மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருபெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி இதுவரையில் வாயை திறக்கவில்லை. ஏன்?
-ராஜீவை தமிழகம் வரவழைக்க வற்புறுத்தியவர்களில் முக்கியமானவர் மணிசங்கர் அய்யர். கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் மணிசங்கர் அய்யர் விசாரிக்கப்படவில்லை. ஏன்? இவர் குற்றம் சாட்டுவது இஸ்ரேலின் மொஸாட் அமைப்பையே. ஏன் இவருடைய குற்றச்சாட்டு இந்திய உளவுத்துறையால் கருத்தில் எடுக்கப்படவில்லை?
- உடலில் பொருத்தப்பட்ட குண்டுகளுடன் வந்த தாணுதான் கொலையாளி என்றால், முன்பின் தெரியாத தாணு எப்படி பொலிஸ் பாதுகாப்பின்றி மாலையிட அனுமதிக்கப்பட்டார்?
- வேதாரண்யம் சண்முகத்தின் தற்கொலையின் மர்மம் ஏன் ஆராயப்படவில்லை?
- ராஜீவ்காந்தி கொலையை விசாரிக்க லண்டன் போயிருந்த உளவுப்பிரிவு அதிகாரியின் பெட்டி காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பெட்டியில் என்ன இருந்தது?
இவ்வாறு கேள்விகளை எழுப்புகின்ற சுவாமி வேறு சிலரின் மீதும் குற்றம் சாட்டுகிறார். ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகளுடன் காங்கிரஸின் பதவி ஆசை பிடித்த அர்ஜுன்சிங் தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். அதே போல் ராம்ஜெத்மாலினி மீதும் தன் குற்றச்சாட்டுக்களை தொடுத்துள்ளார். இவர்கள் எல்லாம் ராஜீவ்காந்தி கொலையில் பலனடைந்தவர்கள் என்று கூறி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகாமாக தன் குற்றச்சாட்டுக்களை வலியுறுத்துகிறார்.
இப்படியெல்லாம் கேள்விகளையும் எழுப்பி பலரை குற்றமும் சாட்டுகின்ற சுவாமி ஈழப்பிரச்சனைக்கும் சில தீர்வுகளை முன்வைக்கின்றார்.
1. இலங்கைக்கு இந்திய முறைக் கூட்டாட்சியை கொண்டு வருவது ( அதாவது தமிழர்கள் வாழும் பகுதியை தனி மாநிலமாக்கி பெடரல் முறையை வலுப்படுத்துவது என நினைக்கிறேன்)
2. இலங்கையை பிரித்து ஈழம் என்று தனி நாட்டை உருவாக்குவது
3. இலங்கையை இந்தியாவுடன் இணைப்பது ( இதை வாசிப்பவர்கள் தயவு செய்து சிரிக்க வேண்டாம். சுவாமி நியமாகவே இந்த யோசனையை முன் வைக்கின்றார். ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இந்த சுவாமி மண்டைக் குழப்பத்தில் அல்லது மது போதையில் எழுதினாரா என்று தெரியவில்லை)
இந்த மூன்று வழிகளில் இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறார். இது இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும், இந்தியாவிலும் பிரிவினைவாதத்திற்கு வழி கோலும் என்பது அவரது கருத்து. முதலாவது தீர்வு ஈழத் தமிழரின் மிகக் குறைந்து பட்ச கோரிக்கை என்றும் காலம் கடக்க கடக்க இது நடை பெறுவதில் மிக குறைந்த சாத்தியங்களே உள்ளது என்றும் கூறுகின்றார். மேலும் புலிகளை ஒழிக்காமல் முதலாவது தீர்வு நடைமுறைக்கு வந்தால் அது இரண்டாவதிற்குதான் வழி வகுக்கும் என்பது சுவாமியின் வாதம். ஆகவே மூன்றாவது தீர்வைத்தான் இந்தியர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார்.
இந்தத் தீர்வுகளுக்கு அப்பால் ராஜீவ்காந்தியின் கொலைக்கு காரணமானவர்கள் என இந்திய நீதிமன்றங்களினால் தீர்மானிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரை இந்தியாவிற்கு கொண்டு வந்து உரிய தண்டனை கொடுத்தே தீர வேண்டும் என்றும், அவ்வாறு இதுவரை நடைபெறாதது இந்தியாவுக்கு உள்ள பெருத்த அவமானம் என்றும் குமுறுகிறார். புலிகள் சுதந்திரப் போராளிகள் அல்ல, அவர்கள் போதை மருந்து கடத்தல்காரர்கள் என்று புத்தகம் முழுவதும் சுவாமி குறிப்பிடுகின்றார்.
இந்த புத்தகம் சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள சில பெயர் குறிப்பிடமுடியாத நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழு, அவர்களும் சில கேள்விகளை எழுப்பினார்கள்.
- திருபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தியை தவிர ஒரு காங்கிரஸ்காரன் கூட கொல்லப்படவில்லையே. இதில் உள்ள மர்மம் என்ன?
- சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது ஏன்? தணுவின் உடல் மட்டும் ஏன் சாட்சிக்காக சென்னயில் வைக்கப்பட்டிருந்தது?
- திருபெரும்புதூர் உள்ள+ர் காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை கடத்தினார்கள். இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரெயில்வே தொழிலாளி. ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படி கோடிஸ்வரரானார்?
இந்த தமிழக நண்பர்களின் கேள்விகளையும் சுவாமியின் கேள்விகளையும் பார்க்கும் பொழுது, மொத்தத்தில் ராஜீவ்காந்தி கொலை ஒரு உள்வீட்டுச் சதியே என்பது புரிகிறது.
.வன்னியிலிருந்து புலோலியூரான்
http://www.webeelam.com/
|
|
|
| விடுதலைப் புலிகளுடன் மாவோய்ட் அமைப்பினருக்கு தொடர்பு இல்லை: |
|
Posted by: நர்மதா - 02-23-2006, 06:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
விடுதலைப் புலிகளுடன் மாவோய்ட் அமைப்பினருக்கு தொடர்பு இல்லை: இந்திய அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் ராய்ப்பூரில் மாவோயிட் ஆயுதக் குழுவினர் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளர் ஏ.கே. மித்ரா கூறியதாவது:
மாவோயிட் ஆயுதக் குழுவினரது பிரச்சனை என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. அது பயங்கரவாதம் மற்றும் மாநிலங்களிடையேயான பிரச்சனையும் ஆகும். சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கு மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஆயுதக் குழுவினர் வைத்திருந்த 650 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அம்மாநிலத்தில் மாவோயிட் ஆயுதக் குழுவினரது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அனைத்துப் பாதுகாப்புப் படையணிகளும் குவிக்கப்பட்டுள்ளன என்றார் மித்ரா.
Puthinam.com
|
|
|
|