Yarl Forum
கை பிடித்த போது..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கை பிடித்த போது..... (/showthread.php?tid=732)



கை பிடித்த போது..... - தாரணி - 02-24-2006

<b>கை பிடித்த போது.....</b>


என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது
கன்னியவனை கண்ணுற்ற போது
என் இலக்கிய உலகம்
இனிய கதவு திறந்தது
இனியவன் இமை திறந்த போது
மண்ணில் விண்ணுலகம்
பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது
தாய் மொழியைத் தலைக்கேற்றியது
தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது
காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது
என்னவனைக் கை பிடித்த போது!
நன்றி

<img src='http://img161.imageshack.us/img161/1489/heart5cl.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img205.imageshack.us/img205/5876/love7zc.jpg' border='0' alt='user posted image'>


- RaMa - 02-25-2006

தாரணி நீங்கள் எழுதிய சம்பவங்கள் யாவும் நிஐமாக நடக்குமா?
அழகான கவிதையை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.


- Nitharsan - 02-25-2006

தாரணி உங்கள் கவிதை நன்றாக உள்ளது. ஆனாலும் கவிதை சொல்லும் கருத்தோடு எனக்கு முரண்பாடு இருக்கின்றது. கவிதை என்பது ஒருவருக்கு இருக்கும் திறமையில் இருந்து வருவது. அதற்க்கும் காதலுக்கும் என்ன தொடர்ப்பு? புரியவில்லை அப்படி பார்த்தால் காதலிக்காத எவரும் கவிதை எழுத முடியாதா? மன்னிக்க இவன் என்டா கவிதையை இப்பிடி சொல்லுறான் என்று யோசிக்காதீங்கள்....கவிதை நன்று..... என்பதில் இரு கருத்திலில்லை


- MUGATHTHAR - 02-25-2006

உண்மைக்கருத்தை அனுபவித்து எழுதினமாதிரி தெரிகிறது தாரணி...........வாழ்த்துக்கள்

Rama Wrote:நீங்கள் எழுதிய சம்பவங்கள் யாவும் நிஐமாக நடக்குமா?

ஏன் சந்தேகமா.????....காதலிச்சு பாருங்கோ தெரியும் ஆனா என்ன கலியாணத்துக்குப் பிறகு எல்லாம் தலைகீழாக் தெரியும் பரவாயில்லையா................???


- ப்ரியசகி - 02-26-2006

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->உண்மைக்கருத்தை அனுபவித்து எழுதினமாதிரி தெரிகிறது தாரணி...........வாழ்த்துக்கள்

<!--QuoteBegin-Rama+--><div class='quotetop'>QUOTE(Rama)<!--QuoteEBegin-->நீங்கள் எழுதிய சம்பவங்கள் யாவும் நிஐமாக நடக்குமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>ஏன் சந்தேகமா.????....காதலிச்சு பாருங்கோ தெரியும் ஆனா என்ன கலியாணத்துக்குப் பிறகு எல்லாம் தலைகீழாக் தெரியும் பரவாயில்லையா................??</b>?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

மு.அங்கிள்.....சிலவேளை கண்ணாடியை மாறி போட்டிருப்பீங்க..சரியா பாருங்கோ :wink:


- ப்ரியசகி - 02-26-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கை பிடித்த போது.....  


என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது  
கன்னியவனை கண்ணுற்ற போது  
என் இலக்கிய உலகம்  
இனிய கதவு திறந்தது  
இனியவன் இமை திறந்த போது  
மண்ணில் விண்ணுலகம்  
பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது  
தாய் மொழியைத் தலைக்கேற்றியது  
தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது  
காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது  
என்னவனைக் கை பிடித்த போது!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கவிதை அழகாக இருக்கிறது..தாரணி..எல்லோராலும் இக் கவிதை எழுத முடியாது!!!!!

"கன்னியவன்" என்பதென்ன.."கன்னி"எனும் பெண்பாலுக்கு ஆண்பாலா? :roll: தெரியவில்லை..அதனால் தான் கேட்கிறேன்..


- வெண்ணிலா - 02-26-2006

அசத்திட்டீங்க போங்க. ம்ம் மேலும் கவிதை எழுத வாழ்த்துக்கள்


- தாரணி - 02-28-2006

நன்றி என்னைப் பாரட்டியதற்கு!


- Snegethy - 02-28-2006

நல்ல கவி தாரணி!
சகி..(கன்னி+அவனை =கன்னியவனை)