![]() |
|
யாரிவர்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: யாரிவர்? (/showthread.php?tid=716) |
யாரிவர்? - வர்ணன் - 02-25-2006 <b>16 வயசில் பல ஆசை வருமே- இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா? திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி வெடிகுண்டை தன் மடியில் - காவி வீணே தன்னை கொல்ல நினைக்குமா? எப்படி ஆச்சு? ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- ! இப்படி நினைத்தாரே ஒருவர் -! உன்னால்-என்னால்-எவரால் எண்ணி பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே! இப்படி இப்படி -பாருங்களேன்! எவர் நினைத்திருப்பார் - இந்த இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று? ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்- மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-! பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர் அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ? எப்படி எப்படி - உம் பாட்டன் வயசுள்ளவருக்கும் - தலைவரென்றானீர் எப்படி எப்படி? மூச்சடைத்து கிடந்த இனத்துக்கு - கதவுடைத்து பிராணவாயு தந்த கரிகாலரே! எங்கள் தேசத்து பிரவாகமே பிரபாகரனே-தலைவா-!! பட்டமும் பதவியும்-பத்து காசும் - வருது - என்றால் என்னவும் செய்வார் - இந்த எச்சில் இலை தின்போர்! எதுவும் வேணாம் - இனமே வேண்டும் -- இருப்பவரை பேச விட்டு - நீர் வருஷம் - ஒரு முறை பேசுகிறீர் - எப்படி உம்மை புரிந்துகொள்ள? கொஞ்சம் - சக்தி வந்தாலே - அடுத்தவனை அடிச்சு கொன்று வாழ நினைக்கிறார் -அற்பர்! எல்லா சக்தியும் இரு தோழில் கொண்டும் இனத்துக்காய் உம் வாழ்வை தொலைக்கிறீரே! புரிய முடியவில்லை -! உதாரணம் உமக்கு நிகர் யாரும் உலகில் இருந்தால்தானே ஒப்பிட்டு - உம்மை நாம் அறிந்து கொள்வோம்! வேலுப்பிள்ளையின் மகவென்று நீர் ஆகலாம்- இந்த வேதனையில் கிடந்து உழலும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் - நீர்தான் -தாய்!!</b> - Nitharsan - 02-25-2006 அருமையான கவிதை வர்னன். தலைவரின் உறுதியையும் அவர் கொள்ளைக் பற்றையும் கண்முன்னே கொண்டு வந்தீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.... - அருவி - 02-25-2006 தலைவரினைப்பற்றி நிதர்சனமான கவிதையை அருமையாகத் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வர்ணன். - iniyaval - 02-25-2006 கவிதை நன்றாக உள்ளது வர்ணன். வாழ்த்துக்கள். - sankeeth - 02-25-2006 கவிதை நன்று வர்ணண். தலைவரின் மகத்துவத்தை இனிமையாய் கூறியுள்ளீர்கள். - Rasikai - 02-25-2006 தலைவரைப்பற்றிய கவி நன்றாகவுள்ளது வாழ்த்துக்கள். - karu - 02-25-2006 வீரம் விளைந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய ஆண்மைக் குமரனடா - பெரும் ஆபத்தையே பனியாக மதித்திடும் ஆதித்ய சோதியடா சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய சிந்தனையாளனடா - எங்கள் செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற செல்வக் குமரனடா இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட எங்கள் தலைவனடா - தமிழ் விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும் விதியை மறுத்தவன் டா செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச் செதுக்கிய சிற்பியடா - ரத்தம் சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச் சீறிடும் வேங்கையடா. குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து குதறிட வைத்தவன் டா - அட எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற-எம் ஈழத்தலைமகன் டா துட்டகெமுனு தொடக்கிவைத்திட்ட துயரை ஒழித்தவன் டா - நாம் பட்டது போதுமென்றார்த்து எதிரியில் பாய்ந்த புலியவன் டா ஆயிரமாயிரம் வேங்கைகள் சேர்த்து அணிநடை செய்தவன் டா - உயிர் மாய்வதெம் மண்ணினுக்காய் என வாழும் மறவர் தலைவனடா பேய்களுலாவிடு காடதுவாக்கிய பேரின வாதிகளின்-தலை சாய எம் மண்ணினில் வீர பராக்ரம சாகசம் செய்பவன் டா எத்தனை கோடி துயர் வந்தபோதும் இடிந்து விடாதவன் டா - தன்னை மொய்த்த பகைதனை ஈயெனவோர் பெரு மூச்சிற் கலைப்பவன் டா இத்தரை மீதிற் கரந்தடி வித்தையில் ஈடிணையற்றவன் டா - எங்கள் சொத்தென தாயக ஈழமண் தன்னிற் சுதந்திரம் கேட்பவன் டா சேய்கள் பல்லாயிரம் சேர்ந்தனர் - சூழ் பெருந் தீமையழியுமடா - அவர் வாய்மையில் வீர வழிமுறையில்-தமிழ் மாண்பு சிறந்ததடா ஆயதங்கையில் அறவழி நெஞ்சிலென்(று) ஆர்க்கும் புலிகளினால் - துயர் போயின போயின என்று தமிழ் மகள் துள்ளி நிமிர்வாளடா யுகசாரதியின் கவிதைகளிலிருந்து - வர்ணன் - 02-26-2006 நன்றி நிதர்ஷன் - அருவி- சங்கீத்-இனியவள்-ரசிகை 8) - RaMa - 02-26-2006 வர்ணன் தலைவரைப்பற்றிய கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள். - விது - 02-26-2006 அருமை அருமை... - malu - 02-26-2006 வர்ணன் உங்கள் கவிதை நான் எழுதிய கடிதத்தை ஒட்டியிருக்கிறது.வாழ்த்துக்கள் அன்புடன் மாலு - malu - 02-26-2006 வர்ணன் உங்கள் கவிதை நான் எழுதிய கடிதத்தை ஒட்டியிருக்கிறது.வாழ்த்துக்கள் அன்புடன் மாலு - Jenany - 02-27-2006 தலைவரை பற்றி எழுதிய கவிதை அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள் வர்ணன். - mathavan - 02-27-2006 கவி நன்றாக உள்ளது வர்ணன். வாழ்த்துக்கள் |