Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 292 online users.
» 0 Member(s) | 290 Guest(s)
Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,218
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,220
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,592
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,276
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,585
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,014
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,407
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,100
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,974
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,235

 
  ஜெனிவா பேச்சு மேசையில் தூங்கிவிழுந்தார்
Posted by: Shankarlaal - 02-26-2006, 01:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

<b>ஜெனீவா பேச்சு மேசையில் தூங்கி விழுந்த அரசாங்கக் குழு உறுப்பினர்- தட்டி எழுப்பிய பேரியல் அஸ்ரப் </b>
[ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2006, 17:31 ஈழம்] [ம.சேரமான்]
ஜெனீவா பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கக் குழு உறுப்பினர் ஒருவர் தூங்கி விழ அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவரை தட்டி எழுப்பியுள்ளார்.


ஜெனீவா பேச்சு மேசையில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு:

- யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வது பற்றி பேசினால் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்பு செய்வோம் என்று ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த எச்சரிக்கை தொடர்பில் ஜெனீவாவிலிருந்து சிறிலங்கா அரசாங்கக் குழுவினர் மகிந்தவை தொடர்பு கொண்டனர்.

"விடுதலைப் புலிகள் வெளிநடப்பு செய்வதானால் செய்யட்டும். நமது நிலைப்பாடு என்ன என்பதை சர்வதேச சமூகத்துக்கு நாம் சொல்வோம். உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிக்கொள்ளாதீர்கள்" என்று மகிந்த உத்தரவிட்டுள்ளார்.

- கொழும்பில் உள்ள மகிந்தவின் தொடர்பகத்திலிருந்து ஜெனீவா பேச்சுக் குழுவினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர், "நிமல் சிறிபால டி சில்வா எப்படி இருக்கிறார்? இப்போது பேச்சு மேசையிலும் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் ஜெனீவா பேச்சுக் குழுவில் இடம்பெற்றிருந்த அரசாங்கக் குழு உறுப்பினர் ஒருவர் பேச்சு மேசையிலே நல்ல உறக்கத்தில் இருந்ததாகவும் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவரை தட்டி எழுப்பிய போது நோர்வேத்தரப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற அறையில் அனைவரும் சிரித்துள்ளனர்.

- துணை இராணுவக் குழுக்கள் தொடர்பில் ஜெனீவாவில் 2 ஆம் நாள் பேச்சுக்களின் போது நீண்ட விளக்கம் அளித்த பாலசிங்கம், டக்ளஸ் தேவானந்தா ஒரு அரசியல் கட்சியாக இயங்கினால் நாம் அவர்களைத் தாக்க மாட்டோம். துணை இராணுவக் குழுவினராக அவர்கள் செயற்படுகிறார்கள். அதேபோல் புளொட்டிலிருந்து பிரிந்து பரந்தன் ராஜனைக் கொண்டு இந்திய றோவினால் ஈ.என்.டி.எல்.எவ். உருவாக்கப்பட்டது. பரந்தன் ராஜனை இந்திய றோ இப்போதும் பாதுகாத்து வருகிறது. இந்தியாவின் பெங்களுரில் பரந்தன் ராஜன் உள்ளார். ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினரை பொலன்னறுவை பிரதேசத்துக்கு அனுப்பி படுகொலைகளை அவர் செய்து வருகிறார். ஈ.என்.டி.எல்.எஃப்., ஈ.பி.டி.பி, கருணா ஆகியோர் இணைந்து ஒரு குழுவாக இப்போது இயங்குகின்றனர். ஈ.பி.டி.பி. குழுவினரும் கருணா குழுவினரும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.

- சிறார் படை சேர்ப்பு விவகாரத்தின் போது பேசிய பாலசிங்கம் அமெரிக்காவினரும் 16 வயதுக்குக் கீழே உள்ள சிறார்களை படையில் சேர்த்தனர்தான். இங்கிலாந்து நாட்டவரும் சிறார்களைப் படையில் சேர்த்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைகிற போது ஒருவரின் வயது 18 தான் என்று கூறினார்.

- ஜெனீவாவில் பேசிய சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, தன் சுயசரிதையை வாசித்துள்ளார். தான் யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்த போது இளநிலை காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர்தான் இந்த மேசையில் அமர்ந்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் என்றும் கூறினார். மிக நீண்ட நேரம் 20,30 ஆண்டுகால சம்பவங்களை பட்டியலிட்டுப் பேசிக் கொண்டே இருந்ததை எரிக் சொல்ஹெய்முக்கு பாலசிங்கம் சுட்டிக்காட்டி நீண்ட நேரம் அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

சந்திரா பெர்னாண்டோவின் நீண்ட அறிக்கைக்குப் பதிலளித்த பாலசிங்கம், இது காவல்நிலையம் அல்ல என்பது முதலில் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கைது நடவடிக்கைகள் பற்றி எங்களுக்கும் தெரியும். யுத்தம் நடக்கின்ற போது கொல்லுவது எங்கள் பணி என்றும் பாலசிங்கம் தெரிவித்திருக்கிறார்.

http://www.eelampage.com/

Print this item

  ஆயுதங்களை கைவிட கருணா மறுப்பு
Posted by: Shankarlaal - 02-26-2006, 01:47 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>INTERVIEW - Renegade Sri Lanka rebels refuse to give up arms</b>
Sun Feb 26, 2006 5:19 PM IST

By Simon Gardner

COLOMBO (Reuters) - Breakaway rebels in Sri Lanka vowed on Sunday to resist any attempt to disarm them -- defying a government pledge seen vital to avoid a return to war.

The government vowed on Thursday to ensure no armed group other than government security forces carries arms or conducts armed operations, and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) want to see the state act before new talks due in April.

But V. Muralitharan, alias Colonel Karuna, who now lives in hiding and was formerly seen as shadowy Tiger leader Velupillai Prabhakaran's deputy, told Reuters on Sunday his group refuses to lay down arms and will end a unilateral ceasefire and fight the LTTE if attacked.

"Without mincing our words we wish to tell (Prabhakaran) quite categorically that we have our resolve and moral right to hold onto our arms," Karuna told Reuters in a rare email interview.

"No one can impose their will on us to take them from us, which we use only for defensive purposes.

"Our people ... have entrusted us to defend them from the LTTE. Our people will not like us to become submissive and just hand over our weapons to satisfy the LTTE brutes."

The Tigers accuse the military of helping paramilitaries to mount attacks within their territory mainly in the island's east, and singled out Karuna's group at talks in Switzerland last week as one that they want disarmed if the truce is to keep holding.

They have warned that the government risks a return to a two-decade civil war that killed more than 64,000 people unless they stick by the terms of the ceasefire and rein in armed groups.

RENEGADES DEFIANT

Karuna wants to see the government pledge to disarm applied to Tiger rebels who are blamed for carrying out a series of deadly attacks in December and January on the military in the government-held northern enclave of Jaffna.

"We are waiting to see how the sarong-clad Vanni Tigers ... who are terrorising our people and the army in the north are going to be disarmed in the Jaffna peninsula following the Geneva decision," Karuna said.

"Any provocation or attack by the LTTE would lead to officially ending our unilateral ceasefire."

While Karuna's group says it is based both in military and rebel-held areas, President Mahinda Rajapakse's government says it has not come across such a group, estimated to number just a few hundred people. Analysts suspect the government is at least turning a blind eye.

Karuna split from the Tigers, disbanding many of his estimated 6,000 loyal fighters, in early 2004 after accusing the Tigers' northern leadership of discriminating against Tamils in the east.

He has since launched a political group, Tamileela Makkal Viduthalai Puligal (TMVP), and plans eventually to join the political mainstream. But for now, his group is focused on keeping the Tigers in check and will only disarm when they do.

"So long as the LTTE is allowed to hold onto their arms, the north and east cannot ever be transformed into democratic rule," Karuna said.

"We, as a politico-military movement too will ensure to use every means to change the present status quo to liberate our people if the LTTE fails to respect the wishes of our people to enter the democratic mainstream soon."

Reuters

Print this item

  ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டன் திருப்பி அனுப்பவுள்ளது
Posted by: Shankarlaal - 02-26-2006, 07:45 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<b>ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டன் திருப்பி அனுப்பவுள்ளது</b>
லண்டனிலிருந்து எஸ்.நாதன்

பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்னர் தஞ்சம்கோரிய ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டு வருகிறார்கள். நாளொன்றுக்கு இருவர் அல்லது மூவர் என்ற எண்ணிக்கையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போதும் பலர் பல இலட்சம் ரூபாவை செலவு செய்து பிரிட்டன் செல்கிறார்கள். அவர்கள் அங்கு தஞ்சம் கோருவதற்கு முன்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தஞ்சம் கோரி சென்றவர்கள் கடவுச்சீட்டுகளை குடிவரவு அதிகாரிக்கு காட்ட வேண்டும் என்பது அவசியமானதாக இருக்கவில்லை. ஆனால், தற்போது தஞ்சம் கோருபவர்கள் தங்களது கடவுச்சீட்டை கட்டாயம் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாமலும், ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை தெரிவிக்காதவர்களும் புதிய சட்டவிதிகளுக்கு அமைவாக ஆகக்கூடியதாக 12 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். பிரிட்டன் மட்டுமே இவ்வாறு இறுக்கமான நடைமுறைகளை தற்போது கையாள்கிறது. 2005 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான ஆணையாளரின் வருடாந்த சர்வதேச அகதிகள் பற்றிய மதிப்பீட்டின்படி இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு மில்லியன் பேர் சுமார் 60 நாடுகளில் வாழ்கின்றனர். இவர்களில் 99 வீதமானோர் தமிழர்களே. ஐரோப்பிய நாடுகளில் முக்கியமாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளான டென்மார்க், சுவிற் சர்லாந்து போன்றவற்றுடன் பிரிட்டனிலும் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் தஞ்சம் கோரினர். இவற்றில் பிரிட்டன் தவிர்ந்த ஏனைய நாட்டு அதிகாரிகள் தஞ்சம் புகுந்த தமிழர்க ளில் 25முதல் 95வீதம்
http://www.virakesari.lk/

Print this item

  &quot;Baby 81&quot; அல்லது பேபி அபிலாஷ் விடயம் முழுவதும் உண்மையல்ல
Posted by: Shankarlaal - 02-26-2006, 07:22 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

Sun, 26 February 2006 11:17:29

<b>Over Exposed</b>


Foreign exposure backfires on Sri Lanka's 'baby 81'

Sri Lanka's celebrated tsunami survivor, "Baby 81", was reunited with his parents after a highly publicised court drama, but almost a year later the family says the explosion of media attention has backfired on them.

Murugpillai Jeyarajah, 31, a barber from Sri Lanka's eastern coast, says the international publicity generated by the story is proving counter productive and they are being overlooked for aid at home.

The long-running saga captivated a global audience from the start, but mainly because it appears to have been sexed up.

International television networks reported nine mothers were battling for a two-month old boy who survived the tsunami. Some said that mothers were threatening to commit suicide.

Amid the competing claims the real parents had to wait weeks and undergo a DNA test before they could claim their offspring back.

The "heart-wrenching" story earned the parents a visit to New York and an appearance on the Good Morning America program of the US TV network ABC.

"We thought we could stay on in America, but in less than two weeks after our TV show in March we were asked to return," Jeyarajah told AFP in a telephone interview from his temporary home in the island's east.

"They (TV network) did not give us any money. All we got was 25,000 rupees (250 dollars) the Sri Lankans in New York collected and gave us. Abilash got a lot of soft toys. Thats all."

He said he regretted going to New York because after his return many villagers as well as local and foreign charities operating in his home area ignored them for tsunami aid believing they had got help from the US.

"I thought going to America would be a turning point in my life, but what has happened is that because of our American trip I have lost other sources of help.

"I don't get the help the others (in my village) get. So I regret my trip to America. All I got was publicity and nothing else."

He said he and his wife, Junita, 26, were "thoroughly frustrated" when they were told to go back to Sri Lanka where they had no home, no job and no prospects of earning a living while bringing up Abilash.

He was called "Baby 81" because his bedhead ticket was 81 when he was admitted to hospital by a neighbour who found him under a heap of rubbish after the tsunami swept the coastal region and left a trail of destruction.

"When we asked the hospital why we couldn't have the baby straight away, we were told that the media was reporting that several others were also claiming the child," Jeyarajah said.

The police, local child care officers and even the UNICEF representative in the area maintained that only the Jeyarajahs were claiming the child and that there were no others as claimed in international media reports.

However, the press hype forced a judge to order a DNA test which proved that the only couple claiming the child were indeed his biological parents. No one else turned up for a test or even lodged a claim for the baby.

To date, the media organisations which initially grabbed international headlines with the story of nine mothers have not given the names of any other claimant of Baby 81 other than Junita Jeyarajah, the real mother.

"No one else went to the police or the courts asking for the child," Jeyarajah said. "I don't know where the reporters found the nine mothers."

The US embassy here too jumped in on the "Baby 81" bandwagon and took the unusual step of issuing a statement when the couple was granted a visa by short circuiting the normal procedure.

"We're delighted to be able to grant baby Abilash and his parents the visas," US Consul General Marc Williams in a statement said at the time. "Millions of Americans will soon know about this wonderful story of reunion in the midst of so much tragedy after the tsunami."

The plight of Jeyarajahs is actually getting worse.

Jeyarajah said they have not received even a temporary shelter from the state after their home was washed away in the December 26 tsunami that killed some 31,000 people across Sri Lanka. They are staying with their parents who live in a house unaffected by the tsunami.

Jeyarajah supports his wife and child by working as a barber, though he earns less than 100 dollars a month.

"We are really finding it difficult to live. People think we have money because went to America, but we don't," he said. "We live in fear. There could be another tsunami." - AFP


-Amal Jayasinghe: win98win@gmail.com

Print this item

  இலங்கை தமிழர் ஒருவரின் உடல் உரிமைகோரப்படாமல் உள்ளது
Posted by: Shankarlaal - 02-26-2006, 06:40 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (3)

<b>Sri Lankan expat`s body lying unclaimed: Embassy</b>

Web posted at: 2/26/2006 2:56:40
Source ::: The Peninsula

Doha: The mortal remains of Sri Lankan national, I Manavakaran (29), who died in suspicious circumstances in Doha a few days ago, have not yet been claimed by his friends or relatives, A G Abeyasekera, Second Secretary at the Sri Lankan embassy, said here yesterday.

Manavakaran, who had arrived in Doha some weeks ago was battling for survival following an alleged life-threatening incident, since February 6 at the Hamad General Hospital.

He passed away on February 13, despite efforts to save his life. Speaking to The Peninsula, Abeyasekera said, the embassy's efforts to contact the deceased's friends and relatives in Sri Lanka to send the body for last rites, had so far been futile. Nobody has come forward to claim the body," he saidd. Manavakaran, he revealed, worked with a reputed, local cleaning company.

An Asian news portal, www.asiantribune.com, however described the victim as Manoharan who hailed from Sittandy, Batticaloa, in northern Sri Lanka.

It claimed that three Sri Lankan citizens were being interogated in connection with Manoharan's death, allegedly caused after he was assaulted on his head while asleep in his room in Industrial Area, with an iron crowbar, by three assailants.

The company, it was learnt, has a large complement of Sri Lankan staff, mainly employed as semi-skilled or unskilled cleaners. The firm provides cleaning services to homes and offices.

The diplomat said that Qatari law enforcement authorities were investigating the circumstances that led to Manavakaran's death.

"As of this date, we cannot confirm or deny that any particular person or party was involved since police investigations continue," Abeysekera, added.

http://www.thepeninsulaqatar.com/

Print this item

  www.உறுமல்.கொம்
Posted by: kuloth - 02-26-2006, 03:56 AM - Forum: தளமுகவரிகள் - Replies (1)

வெகு விரைவில் <b><span style='font-size:25pt;line-height:100%'>www.உறுமல்.கொம் </b></span> . அருச்சுனாவின் அடுத்ததளம்

Print this item

  கண்களின் காட்சிகள் தெரியாதோ?
Posted by: sOliyAn - 02-26-2006, 03:12 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (3)

<img src='http://www.tamilnaatham.com/photos/20060221/SWISS/slides/3.jpg' border='0' alt='user posted image'>
நன்றி: தமிழ்நாதம்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  இடியப்பம் தயாரிக்கும் முறை
Posted by: தாரணி - 02-26-2006, 02:38 AM - Forum: சமையல் - Replies (4)

எனக்கு எப்படி இடியப்பம் தயாரிக்கும் முறையை சொல்லித் தருவீங்களா? ( தெரிந்தவர்கள் ) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி

[size=7]தலைப்பை பெயர்மாற்றியுள்ளேன் - மதன்

Print this item

  சுஜித்ஜீ- தமிழ் புலம்பெயர் வானில் ஒரு புதிய நட்சத்திரம்
Posted by: narathar - 02-26-2006, 12:40 AM - Forum: புலம் - Replies (2)

சுஜித்ஜீ- தமிழ் புலம்பெயர் வானில் ஒரு புதிய நட்சத்திரம்

2)சுஜித்(ஜி)


இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றார். முதலாவது ஆல்பம், Singles, இரண்டாவது ஆல்பமான சிலோன் (Ceylon) இந்த வருடம் நடுப்பகுதில் வர இருக்கிறது. தானே பாடல்கள எழுதி, பாடவும் செய்கின்ற சுஜித்தின் பாடல்கள், ராப் பாடல்களிலும், தமிழ் ரீமிக்ஸ்களிலும் கரைந்துபோகின்ற என்னைப் போன்றவர்களுக்கு பிடிக்காமற்போகாதுதானே. அநேக ராப் பாடல்களில் (கானாப் பாடல்களைப் போல) ஒருவித எள்ளல் தொனி இருக்கும் (specially Eminem's lyrics). அதையும் சுஜித் முயற்சித்துப் பார்த்திருப்பது நன்றாக இருக்கிறது. 'அன்புக் காதலி'யும், 'பயணமும்' மிகவும் பிடித்த பாடல்கள். 'ஒரு சில பெண்களின்...' பாடலில், ஒரு ஆணின் பார்வை வலிந்து தெரிந்தாலும் beatம் பாடல் வரிகளும் இணைந்து போகின்றதால், திரும்பத் திரும்பக் கேட்கமுடிகிறது.

உண்மையில் எத்தனையோ சீரழிவுகள் நிரம்பிக் கிடக்கும் நமது சமூகம் போன்ற ஒன்றில் தீவிரமாய் சில விசயங்களைப் பேசுவதை விட, நக்கலடித்து எழுதுவதுதான் நிரம்பப் பேரை சென்று அடையும் என்ற தனிப்பட்ட எண்ணம் என்னளவில் உண்டு. இந்த ஆல்பத்தில் (Singles) தான் வாழும் இலண்டன் தமிழ்ச் சமூகத்தையும், தன்னையும் நையாண்டி செய்து பாடப்பட்ட பாடல் ('கொஞ்சம் கொஞ்சம் நில்') இரசித்துக் கேட்கக்கூடியது. இரண்டாவது ஆல்பத்தில் சேர்க்கப்படவிருக்கும் Buyakka பாடலை (நட்பின் நிமிர்த்தம்) முழுதாய்க் கேட்க சந்தர்ப்பம் வாய்த்தபோது, மிகவும் பிடித்திருந்தது (அதற்கு தனிப்பட்ட ஒரு காரணமும் இருந்தது என்க :-)). இதன் Memo version ஐ இங்கே சென்றும் கேட்டுப் பார்க்கலாம்

இதுவரை ரீமிக்ஸ் செய்து பாடல்களை இசைத்தட்டுக்களாய் வெளியிட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் சுஜீத்தைப் போல அடுத்த கட்டங்களுக்கு நகர முயற்சிப்பது நமது தமிழ் அடையாளங்களை புலம்பெயர்ந்த தேசங்களில் நிலை நிறுத்த ஏதேனும் ஒருவகையில் உதவி புரியலாம் (I beleive it's the time to change these tamil guys from DJs (or MCs) to Rappers. Also If it is expensive to release whole album at the beginning, they may release single CDs like black guys releasing mix tapes. So they can know who are the audience for them and can get sponsors). இவ்வாறு தன்பாட்டில் பாடல்களை எழுதி, பாடவும் செய்கின்ற ஒருவரைக் கண்டபோது, இவர் வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. நினைத்ததைப் போல எழுத்து, விவாதங்கள் என்ற வேறு தளங்களிலும் சுஜீத் ஈடுபாடுடையவர் என்றறிய முடிந்தது. ஆனால் தனது இசை சம்பந்தமான விடயங்கள், பிற விடயங்களோடு கலந்து வாசிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்னொரு புனைபெயரில் அவற்றில் இருக்கின்றார். எப்படி எனினும் அவர் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பது நல்ல விடயந்தானே. நாமும் வாழ்த்துவோம்.

http://sl2uk.com/content/sujeethg.shtml

http://www.sujeethg.com/html/

posted by டிசே தமிழன்
http://djthamilan.blogspot.com/2006/02/blo...og-post_22.html

Print this item

  யுத்தம் வராது நம் நாடு நமக்குக் கிடைக்காது, கேணல் ஜெயம்
Posted by: அருவி - 02-25-2006, 10:51 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>யுத்தம் வராமல் நம் நாடு நமக்குக் கிடைக்காது என்று சுவிஸில் தற்போது நடைபெற்று வரும் விடுதலை வாசல் நிகழ்வில் கட்டளைத் தளபதி கேணல் ஜெயம் தெரிவித்தார்.</b>


விடுதலையின் வாசலில் நிகழ்வில் கேணல் ஜெயம் ஆற்றிய உரை:

எங்களுடைய விடுதலைப் போராட்டம் இன்று விடுதலையின் வாசலில் வந்து நிற்கின்றது என்பதை எல்லோருடைய நாவும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நிச்சயமாக அதை நாங்கள் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். இனி வரப்போகும் காலம் அதற்கான பதிலை நிச்சயமாகச் சொல்லும்.

எனவே இந்த மண்ணில் உங்களுடைய உறவுகளின் விடுதலைக்காக உணர்வுகளைக் காட்டி நிற்கும் உங்களுக்கு எங்கள் தமிழ் மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

<img src='http://img142.imageshack.us/img142/8506/296530152979299430212972301429.jpg' border='0' alt='user posted image'>

புதிதாக ஆட்சிப்பீடம் ஏறியுள்ள சிங்கள அரசாங்கத்தின் முகத்திரையை உலகுக்குக் காட்டுவதற்கு உலகின் முக்கிய இடமான ஜெனீவாவுக்கு வந்திருந்தோம்.

எங்கள் மக்களுக்கு எமது தலைவரின் போராளிகளின் மக்களின் செய்தியை கூற வேண்டியவனாக நிற்கிறேன்.

நாங்கள் சண்டைக் களங்களில் சண்டை தொடர்பாகவே கதைத்துப் பழக்கப்பட்டவர்கள். சண்டைக்காக வாருங்கள் என்று மக்களை அழைத்து பழக்கப்பட்டவர்கள்.

உங்கள் முன் பேச அழைத்த போது எந்த விடயத்தைச் சொல்வது என்பது எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது.

போராளிகளுடன் கதைக்கிற போது போராளிகளிடம் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் கதைப்போம். அந்த வகையிலே கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எங்களுடைய விடுதலைப் போராட்டம் தடைகளைத் தாண்டி விடுதலையின் வாசலுக்கு வந்து நிற்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒவ்வொரு தடை ஏற்பட்ட போதும் குழப்பங்களும் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

நம்முடைய நோக்கம், நாம் செல்ல வேண்டிய இடம் தெளிவாக இருந்தால் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது குறித்து சிந்திக்க வேண்டியதிலை என்று தலைவர் சொல்வார்.

இலட்சியத்துக்காக, விடுதலைக்காக எங்களை முழுமையாக நாங்கள் அர்ப்பணித்திருக்கிறோம்.

அதனால் பிரச்சனைகள் தொடர்பாக கவலையில்லாமல் விடுதலைக்காக முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.

இன்று தமிழர்கள் முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறார்கள். இன்று தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிற சுதந்திர வேட்கை- வெறி தங்களுடைய தமிழ் மண்ணில் வாழ்வதற்கானது.

<img src='http://img142.imageshack.us/img142/156/29653010297530212975299030216y.jpg' border='0' alt='user posted image'>

எந்த கலக்கமும் இல்லாமல் தயக்கமும் இல்லாமல் நாம் போராட வேண்டும்.

பேச்சுவார்த்தை மூலமாக நம் பிரச்சனை தீருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உயிரிழப்புகளின்றி இந்தப் பிரச்சனை தீர வேண்டும் என்கிற அற்ப ஆசை பலருக்கும் உண்டு.

ஆனால் எங்கள் எதிரியானவன் தெளிவான நிலையில் இருக்கிறான். கடந்த தேர்தலில் சிங்களவர்கள் தங்களுடைய சரியான தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தங்களுடைய தேசம் என்ற உணர்வில் அவர்கள் தங்களது தலைவரைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.

அந்த சிங்களத் தலைவர் இன்று சர்வதேச சமூகத்தின் முன்பாக இனவாதியாக காட்டிக்கொள்ளமுடியாதிருப்பதால் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த அவர் நாடகமாடத்தான் வேண்டும். ஆனால் அவர் இப்படியான நாடகமாட அவர் கூட்டு சேர்ந்துள்ள இனவாதக் கட்சிகள் எத்தனை காலம் அனுமதிக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த இனவாதக் கட்சிகள் எல்லாம் இருக்கவேண்டும். அவர்கள் இருந்தால்தான் எங்கள் தேவையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

நாம் கடந்துவந்த பாதையை சரியாகப் பாருங்கள். நம் தலைவர் எப்படியாக வழிகாட்டினர் என்று பாருங்கள்.

இன்று கூட தாயகத்தில் யுத்தச் சூழலுக்கு மத்தியில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

யுத்தத்தை எதிர்கொள்ள ஆயத்தமான நிலையிலேயே போராளிகள் உள்ளனர். ஒவ்வொரு கட்டமாக விடயம் சார்ந்து போராளிகள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

இனிவரும் யுத்தத்தை எதிர்கொள்ள எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆயத்தமாக இருக்கிறோம்.

யுத்தத்தினூடாக எங்கள் விடுதலையை வென்றெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

விடுதலையை நாம் வென்றெடுக்க வேண்டுமாக இருந்தால் நாம் எந்த மண்ணில் இருந்தாலும் ஒட்டுமொத்த உணர்வுகளும் பங்களிப்புகளும் அதற்கு முக்கியமானதாகும்.

சில நாட்கள் மட்டுமே இங்கு நிற்கின்ற எனக்கு இந்தக் குளிருக்குள் வாழ பிடிக்கவில்லை.

ஆனால் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான குளிரில் கூட வாழ்ந்து உங்களையும் வளர்த்துக் கொண்டதோடு இந்த விடுதலைப் போராட்டத்தையும் வளர்ப்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருகிறீர்கள் என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த நாட்டைப் பார்க்கும் போது எங்களுக்கு ஒரு நாடு இல்லாத ஏக்கம்-வருத்தம் ஏற்படுகிறது.

ஜெயசிக்குறு சமர் எங்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம். ஆனால் அந்த யுத்தத்தை எதிர்கொள்ள எமக்கு அப்போது போதிய ஆயுத பலம் இல்லை.

ஆரம்ப யுத்தத்தில் சிறு சிறு ஆயுதங்களை வைத்து ஒரு சில குண்டுகளை பாவித்து தற்காப்பு யுத்தமாக எதிர்கொண்டோம்.

பின்னர் அந்த யுத்தத்தின் போக்கு விளங்கியது. அதை வைத்துக் கொண்டு தீர்க்கதரிசனமான முடிவுகளை எடுத்து போராளிகளை தேவையான இடத்தில் நிறுத்தி சண்டை பிடிக்கும் வழிகாட்டுதல்களை தலைவர் செய்து வந்தார்.

ஆனால் எதிரியானவன் முன்னேறிக் கொண்டே வந்த போது சில மாதக் கணக்கான அந்த சண்டை நீடித்த போது ஆட்பற்றாக்குறை ஏற்பட்டது எமக்கு. ஆயுத தளவாட பற்றாக்குறை இருந்த காரணத்தால் பின்னுக்கு நகர வேண்டியது இருந்தது.

அந்த பின் நகர்வுகளுக்கு தலைவரும் அனுமதித்தார். "எதிரி அகலக்கால் வைத்துக் கொண்டு வருகிறான். அதுவே நமக்கு சாதகமாக அமையும்" என்றார் தலைவர். "நீங்கள் ஓடிவர வேண்டாம். எதிரியானவனுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டு வாருங்கள்" என்றார் தலைவர்.

வவுனியாவிலிருந்து வந்த இராணுவம் கிளிநொச்சியுடன் சேர்ந்துவிட்டால் எமது போராட்டம் என்ன ஆவது என்ற கேள்வி எமக்குள் இருந்தது.

ஆனால் தேவையான இடத்தில் தேவையான தாக்குதல்களைச் செய்ய தலைவர் அனுமதித்தார். பின்வாங்கி வருவதற்கும் அவர் அனுமதித்தார். எங்களது இராணுவ நகர்வு அப்படியாகத்தான் இருந்தது.

அப்போது ஓமந்தையில் இராணுவம் நிலை எடுத்துவிட்டான். அப்பகுதியிலாவது தாக்குதல் நடத்த கட்டளை பிறப்பிக்குமாறு தலைவருடன் கதைத்தோம். அதற்கான வேவுத் தரவுகளை எடுத்துக் கொண்டு தலைவரிடம் கொடுத்தோம். ஆனால் தலைவரோ இப்ப அது தேவையில்லை என்று தரவுகளை மூலையில் போட்டுவிட்டார்.

தொடர்ந்து காலம் நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று எதிரியின் தாக்குதல் உக்கிரமாக இருந்தது. இழப்புகள் பெரிய அளவில் ஏற்பட்டது.

திடீரென்று தலைவர் என்னை அழைத்து முன்னர் நாங்கள் கொடுத்த தரவுகள் அப்படியே இருக்கிறதா என்று பார் என்று உத்தரவிட்டார்.

அப்போதும் தலைவரது திட்டம் என்ன என்று எங்களுக்குத் தெரியாது. சண்டைக்கான திட்டங்களையும் அதற்கான ஒழுங்குகளையும் மேற்கொள்ள ஒவ்வொருவருக்கும் கட்டளையிட்டார்.

அந்தக் கட்டளைக்கமைவாக 1999 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் நாள் ஒட்டுசுட்டானில் சண்டையைத் தொடங்கினோம்.

அந்த சண்டையைத் தொடங்கும்போது கூட சண்டையை தொடர்வதற்கான திட்டத்தைச் சொல்லவில்லை தலைவர். தொடர்ச்சியான சண்டைக்காக போராளிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அன்று பிற்பகல் ஒட்டுசுட்டான் பிடிபட்டது. தொடர்ந்து சண்டை நடந்தது.

இராணுவத்தின் பிரதான ஆட்டிலறி மையம், கட்டளை மையம் கனகராயன்குளத்தில் இருந்தது.

அப்போது கனகராயன்குளத்துக்கு போராளிகளை அனுப்புகிற ஒழுங்கு செய்யச் சொன்னார். அதற்கு கரும்புலிகள் அணியை அனுப்பி வைத்தோம். தலைவருக்கு மட்டுமே அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியும். வேறு எவருக்கும் தெரியாது. ராஜூ அண்ணாவுக்கு மட்டுமே தலைவரின் அந்தத் திட்டம் தெரியும்.

கனகராயன்குளத் தாக்குதலுக்கான ஒழுங்குகளை ராஜூ அண்ணை செய்து கொண்டிருந்தார். அப்போது தலைவரிடம் சென்று செல்லடிக்க அனுமதி கேட்டார். ஆனால் தலைவர் அனுமதி தரவில்லை. இப்போது ஒன்றும் நீ செல்லடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நெடுங்கேணி பிடிபட்டது. அதன் பின்னர் மாங்குளம் பிடிபடும் போது ராஜூ அண்ணையை கூப்பிட்டு கனகராயன்குளம் மீது இப்போது செல்லடி என்று தாக்குதலை நடத்த உத்தரவிட்டார்.

நாங்கள் ஆட்டிலறியைக் கொண்டு தாக்கத் தொடங்கிய உடன் கனகராயன்குளம் கட்டளை மையம் வெடித்துச் சிதறியது.

இப்படியாக தலைவர் தனக்குள் சில தீர்க்கதரிசனமான உணர்வுகளுடன் திட்டங்களை வைத்திருக்கிறார். ஓயாத அலைகள் மூன்றின் தொடக்கம் அப்படித்தான் இருந்தது.

தலைவரின் எண்ணத்துக்குள் தமிழீழத்தை எப்படி அடைவது என்ற திட்டம் இருக்கிறது. அது நடைமுறைப்படுத்தும் போதுதான் அவர் கூறுவார்.

ஆகையால் அவரது தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

அடுத்த யுத்தம் வரக்கூடாது என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் யுத்தம் வராமல் நம் நாடு நமக்குக் கிடைக்காது.

இப்போது சமாதான காலம்தானே... சண்டை வந்த பிறகு பார்க்கலாம் என்று நினைத்தால் அது வரலாற்றுத் தவறு.

கடந்த காலங்களில் நாம் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறோமே அதைப் பாடமாக எடுத்து அந்தத் தவறுகளை செய்யாமல் இருப்போம்.

நாம் யாழ். நகரை மீட்கும் வாசலில் நின்றிருந்தோம். எங்களால் தொடர்ந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆளணி, ஆயுத தளவாடத் தேவை குறிப்பாக ஆட்டிலறி செல்களின் பற்றாக்குறைதான் எம்மை யாழ். நகருக்குள் நுழைய விடமால் செய்துவிட்டது.

எங்களுடைய யுத்த வளர்ச்சி எங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது.

கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஓடிய ஒரு காலம் இருக்கிறது. இன்று அந்தத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவு அனைவரிடத்திலும் உண்டு.

நீண்டகாலத்துக்குள் நிறைய விடயங்களை அனுப வரீதியாக கற்றுக்கொண்டிருக்கிறோம்.

இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்ய தொடங்கிய போது பல பேருக்கு கேள்வி இருந்தது. எங்களுக்கும் இருந்தது. ஆமி வருகிறான் என்றால் நிறைய தூரம் ஓடி பாதுகாக்கும் நிலைதான் இருந்தது.

ஆனால் எமது படிப்படியான வளர்ச்சியில் இந்திய இராணுவத்தின் பலம் மற்றும் பலவீனத்தை கற்றுக் கொண்டு தேடி தேடிச் சென்று அழிக்கிற காலம் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையூடாக இந்திய இராணுவம் பின்வாங்கியது. அந்தப் பேச்சுவார்த்தையை இந்திய இராணுவம் பயன்படுத்தியிருக்காவிட்டால் பெரிய விலையை கொடுத்திருக்க வேண்டும்.

அதனால்தான் இன்றும் அவர்கள் நம் போராட்டத்தில் தலையிட யோசிக்கிறார்கள்.

ஓயாத அலைகள் மூன்றின் போது எல்லைப் படையாக மக்கள் பயிற்சி எடுத்தனர். நாங்கள் அந்த மக்களுக்கு வழிகாட்டினோம். குடும்பத்தைக் கூட பார்க்காமல் நெருக்கடியான யுத்த களத்தில் நின்று தங்களை அர்ப்பணித்திருக்கிறார்க்ள்.

255 எல்லைப் படை வீரர்கள் அந்தக் களத்தில் தங்களை அர்ப்பணித்து மண்ணைப் பாதுகாத்தனர்.

அந்த எழுச்சி இன்றும் அந்த மண்ணில் நேரடியாக காணக் கூடியதாக் இருந்தது.

அண்மையை நிழல் யுத்தத்தில் மக்கள் எழுச்சியைப் பார்த்த சர்வதேச சமூகம் பல விடயங்களை இப்போது ஆய்வுக்குட்படுத்திக் கொண்டிருக்கிறது.

பேச்சுவார்த்தையூடாக நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு பல திட்டங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றை எங்களுடைய தலைவர் அரசியல் காய் நகர்த்தல் ஊடாக சாமாளித்துள்ளார். அதை வியப்பாக சர்வதேசம் பார்க்கிறது.

நீண்டகாலமாக சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் வாழ்ந்த மக்களுக்கு ஒரு தேவை ஏற்பட்டு எழுச்சி ஏற்பட்ட போது அந்த இராணுவத்துக்கு எதிராக மிக ஆக்ரோசமாக போராடினார்கள். அதைக் கண்டு உலகம் திகைத்து போனது.

ஆகையால்தான் தமிழ் மக்களின் தாயகப் பற்று, விடுதலை உணர்வு, புலம்பெயர் தமிழர்களின் பலம், தமிழர் தலைமைப்பீடத்தின் இராணுவ ஆற்றல் ஆகியவற்றை சர்வதேச சமூகம் இன்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.

நாம் பலமானவர்களாக இருந்தால்தான் எப்போதும் நம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்று தலைவர் கூறுவார்.

நாம் மிக மிக பலமானவர்களாக் இந்த உலகம் முன் நின்றால் எங்கள் மீதான் பல குற்றச் சாட்டுகளும் மறைந்து போகும்.

அத்தகைய பலத்தை உருவாக்குவதற்கான வளம் உங்களிடமிருக்கிறது. அதை உணர்ந்து நீங்கள் செயற்பட வேண்டு என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

எங்கள் தாய் மண்ணில் எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் போராளிகள் ஒவ்வொருவரும் விழிப்புடன், தலைவர் என்ன செய்ய சொல்வாரோ அதைச் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் மணலாறாக இருந்தாலும் எந்த சண்டைக் களமாக இருந்தாலும் அடுத்த கட்டளைக்காக எதிர்பார்த்து முன் நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவருடைய கடமை என்ன என்பதை உணர்ந்து நமது அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செயற்பாட்டுக்கு உங்களுடைய பங்களிப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் கருணாவின் உதவியை வைத்துக் கொண்டு எங்கள் கையை ஓங்க விடாமல் செய்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பு இராணுவத்துக்கு உள்ளது.

ஒவ்வொரு சண்டையையும் இப்படித்தான் செய்யப் போகிறோம் என்று சொல்லிவிட்டு சண்டை பிடிப்பவர் அல்ல எங்கள் தலைவர்.

எந்த சந்தர்ப்பம் வருகிறதோ அந்தச் சம்பவங்களின் போதுதான் எதைச் செய்ய வேண்டும் என்று தலைவர் தீர்மானிப்பார். அதுதான் தலைவரது வெற்றியின் ரகசியம்.

தலைவருக்கு மேடைப் பேச்சில் விருப்பமில்லாதது போல் எங்களுக்கும் மேடையில் பேசக் கூடிய தன்மை இல்லை.

தொடக்கம் தொட்டே சண்டை, போராட்டத்தினூடே வளர்ந்தவர்கள். நாங்கள் செயற்பாடு ரீதியாக மக்களுக்குச் செய்து காட்டி இருக்கிறோம்.

ஆகவே, நமக்கு நம் நாடு தேவை. நாம் அந்த நாட்டை அடையும் வாசலில் இருக்கிறோம்.

அந்த வாசலைத் திறந்து நாட்டை மீட்டெடுக்கும் முழு ஆதரவையும் அதற்கான பொருளாதார வளத்தையும் நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும் என்றார் கேணல் ஜெயம்.


தகவல் புதினத்தில் இருந்து

Print this item