ம்ம்..நல்ல முறைகள் வசம்பண்ணா அன்ட் மதன்..இது என்ன ரொட்டியை கடையில் வாங்கி வந்து மைக்குரோவேவில் வைச்சு எடுத்து சாப்பிடுவது போல சொல்கிறீர்கள்.. :roll: ஓகே..அதுவும் ஒரு முறை..நான் நினைக்கிறேன் பெரும்பாலான பெண்கள்..இடியப்பம் செய்ய கஷ்டப்படுவது போல் தாரணி அக்காவும் கஷ்டப்படுறாங்க போல..அதைத்தான் கேட்கிறாங்க..இல்லையா..? :roll:
எனக்கு தெரிந்ததை சொல்றேன். :roll:
இடியப்பத்திற்கு மாவை..புட்டுக்கு குழைப்பது போல தான் குழைப்பார்கள். பட் கொஞ்சம் வித்யாசம்.
மா (அரிசி மா, அன்ட் அவித்த கோதுமை மா) இரண்டையும் அரைக்கு அரை வாசி எடுக்கணும்.
நன்றாக சேர்த்து விட்டு..கொஞ்ச உப்பு அளவா போடணும். அப்புறம் தண்ணியை கொதிக்க வைத்து..கொதிக்க கொதிக்க ஊற்றாமல்..கொஞ்சம் ஆற விட்டு கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி..குழைக்கணும்..மா சட்டியில் ஒட்டாமல் இருக்கும் பருவம் வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஊற்றி கிண்டணும். அப்புறம்..இடியப்ப உரலில போட்டு..தட்டில பிழியணும்.
அப்புறம் அடுப்பில தண்ணியை கொதிக்க வைத்து இடியப்பத்தை வடிவா அடுக்கி..அவித்து எடுத்து..கறியோட சாப்பிடலாம்.
எனக்கு தெரிந்தது தாரணி அக்கா..பிழை ஏதும் இருந்தால் நம்ம அக்காமார்கள் வருவார்கள் இன்னும் ஐடியா தருவார்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்னை கேட்டால்..இடியப்பம் பிடிக்காதவர்கள் தான் வீட்டில் வேண்டும்..இல்லை என்றால் ஒரு நாள் செய்து பிடிக்காமலே பண்ணி விடணும்..ஏன் என்றால்..இடியப்பம் பிழிந்து முடிய கை நோகுற நோ இருக்கே.. அப்பப்பா.. தாங்க ஏலாது..
..
....
..!