Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 307 online users.
» 0 Member(s) | 305 Guest(s)
Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,209
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,190
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,579
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,276
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,580
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,008
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,400
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,092
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,973
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,234

 
  உதவி தேவை - லினுக்சில் தமிழ்
Posted by: tharma - 02-27-2006, 04:06 AM - Forum: கணினி - Replies (1)

எப்படி லயனக்ஸ் ஒப்பிரற்றிங் (Fedora 4 Linux operating system) சிஸ்டத்தில் தமிழ் எழுத்துருவை தரவிரக்கம்(Download) செய்யலாம் என்று அறியத்தந்தால் மெத்தப்பெரிய உதவியாக இருக்கும்

<span style='font-size:14pt;line-height:100%'>தலைப்பை உதவி தேவை - லினுக்சில் தமிழ் என பெயர் மாற்றியுள்ளேன்.</span>

Print this item

  நட்சத்திரங்கள் என் சொந்தம்
Posted by: Snegethy - 02-27-2006, 03:06 AM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (46)

எல்லாருக்கும் வணக்கம்.கனநாட்களுக்குப்பிறகு யாழ்ப்பக்கம்வாறன்.எல்லாரும் நலமா?என்னை மறக்கேல்ல தானே:-)

[b]<span style='color:darkblue'>நட்சத்திரங்கள் என் சொந்தம்

<img src='http://img508.imageshack.us/img508/7311/star6ut.jpg' border='0' alt='user posted image'>


[size=15]நகைச்சுவைக்கதம்பத்தில் "தேவதையைக் கண்டேன்" படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.

\"என்ன பாபு சைக்கிளுக்கெல்லாம் போர்வை போர்த்து விடுறாய்...ஆ கொசுவர்த்தி வேறயா..முத்தமா...வயித்தெரிச்சலைக் கிளப்பிறாங்களே..\"

\"பின்ன அது உமா வாங்கிக் கொடுத்த சைக்கிள்.\"

அடுத்த காட்சியில் தனுஸ்... நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஏனென்று கேட்டால், அந்தப் பாட்டில்தானே தேவயானியும் சரத்குமாரும் ஓகோ என்று பெரியாட்களானாவையாம்.

நேற்றைய நாள் எனக்கு அந்த நகைச்சுவைக்காட்சில தான் தொடங்கினது.
விருந்தினர்கள் என்னறையில தங்கியிருந்ததால் நான் நேற்று தங்கச்சியின்ர அறையிலதான் தூங்க வேண்டியிருந்தது.கன காலத்துக்குப்பிறகு யன்னலோரமா நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் தூங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறன்.பக்கத்தில அம்மாவேன்ரே அறையில இருந்து நட்சத்திர இரவு வானொலி நிகழ்ச்சி காற்றோடு கலந்து வந்தது.

இப்படி நேற்றைய பொழுதில் நட்சத்திரங்கள் பலமுறை வந்து போனதால் இரவுப்பொழுதிலும் நட்சத்திரங்களுடன் எனக்குண்டான உறவு பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உலா வரத் தொடங்கின.

நானே ஆச்சரியப்படும்படி மூன்று நான்கு வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடந்த மாதிரி கண்ணெதிரே வந்து போயின.

அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். பாலா அங்கிள் பரா அன்ரி சுந்தி மாமா சாந்தன் மாமா இன்னும் சிலர் இரவு கூடியிருந்து எனக்கு அப்ப விளங்காத பெரிய பெரயி கதையெல்லாம் கதைப்பினம்.அம்மா பழங்களரிந்து தருவா கொண்டே குடுத்திட்டு பரா அன்ரின்ர மடியில இருந்து "அப்பிடியென்டாலென்ன ..ஏன் அப்பிடிச் சொன்னவை" இப்பிடி வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருப்பன்.என்ர வாயை மூட அவாவும் ஏதாவது சொல்லிச் சமாளிப்பா.

பரா அன்ரிதான் எனக்கு முதல் முதலாக நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தவா.அங்க பாரு அதில நல்ல வெளிச்சமா தெரியுது அதான் சுக்ரன்..விடிஞ்சாப்பிறகும் இந்த நட்சத்திரம் இருக்கும்...அங்க பார் அதில ஒரு வேட்டைக்காரன் அம்பு விடுற மாதிரி இருக்கு.இங்க பார் விருச்சிகம்..இப்பிடியெல்லாம் சொல்லுவா.

சின்னப்பிள்ளையளிட்ட ஒரு பிடிவாதக்குணம் இருக்கும்.தாங்கள் நினச்சததான் செய்வினம் சொல்லுவினம்.ஒரு இரண்டு வயசுப்பிள்ளைக்கு ஒன்று இரண்டு சொல்லிக்கொடுத்திட்டு அடுத்த நாள் அச்சாக்குட்டியெல்லா ஒன்று இரண்டு சொல்லிக்காட்டுங்கோ என்று கேட்டுப்பாருங்கோ."ஆ.. ஆ.. ஆ.. "என்று காது கேக்காத மாதரி இருப்பினம்...வாற விசரில நீங்கள் திரும்ப ஒன்று இரண்டு சொல்லச் சொல்லிக் கேக்கமாட்டிங்கள்..ஆனா தங்களுக்கு விருப்பமான நேரம் தங்கடபாட்டில சொல்லுப்படும்.."ஒன்ரு ரன்று மூன்ரு..".

அதப்போல நான் பரா அன்ரிக்கு மட்டும்தான் குட்நைற் சொல்லுவனாம்.பரா அன்ரி கொஞ்ச வருசத்தில யாரோ சுட்டுச் செத்திட்டா.நான் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவான்ர ஞாபகம்தான் வரும்.

எல்லாற்ற ஊரிலயும் ஒரு கோயில் கோயிலுக்கு முன்னால ஏதோ ஒரு மரம் இருக்கும்.அப்பிடித்தான் எங்கட ஊரிலயும் ஒரு பிள்ளையார் கோயில்.முன்னால ஒரு பலாமரம்.அங்கதான் ஊராக்ள் இரவு இருந்து விடுப்புக் கதைக்கிறது.நான் அக்கா சுபாசினி சுஜி சிந்து கவி யனா நிமல் டொம்மா இப்பிடி நிறைய பேர்.

எங்கள எல்லாம் விளையாட விட்டுப்போட்டு அங்கால அம்மாக்களின்ர மகாநாடு நடக்கும்.அப்ப பரா அன்ரி எனக்கு காட்டி விட்ட நட்சத்திர உருவங்கள் பற்றியெல்லாம் நான் என்ர குறூப்புக்கு சொல்லிக்கொண்டிருப்பன்.பிறகு அக்கான்ர குறூப் ஒருபக்கம் சின்ன குறூப் ஒருபக்ம் பிரிஞ்சு விளையாடுவம். இதையெல்லாம் நினைச்சா அது ஒரு அழகிய நிலாக்காலம்தான்.

சண்டை நடக்கும்போதும் நாங்கள் ஒரு அஞ்சு குடும்பம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பங்கர் கிண்டினாங்கள்.சண்டை நேரத்தில அந்த பங்கர் தான் எங்களுக்குப் பள்ளிங்கூடம்.விளையாட்டுத்திடல எல்லாம்.திருவலகை திரிபோசா மா சீனி..ஹி ஹி அதான் சாப்பாடு.அங்க யாரும் செல் விழுந்து சாகேல...தப்பித்தவறி விழுந்திருந்தா எல்லாரும் சேர்ந்து செத்திருப்பம்.

வேப்ப மரத்துக்கு கீழ தான் பங்கர்.பங்கருக்குப்போற வழி வீட்டிலதான் தொடங்கும்.வெளில நின்று பார்த்தா பங்கர் இருக்கெண்டே தெரியாது.அப்பிடித்தான் ஒருநாள் பயங்கரச்சண்டை.புக்காரா சகடை எல்லாம் இரைஞ்சுகொண்டு போகுது.செல் கூவிக்கொண்டு போகுது.

அடுத்த நாள் ஒரே அமைதி.பார்த்தா நோட்டீஸ் விட்டிருக்கு.வடமராட்சி சனம் எல்லாம் தென்மராட்சிக்குப் போகவேணுமாம்.ஊராக்களுக்குப் போற எண்ணமே கிடையாது.நாங்கள் ஒரு காலமும் வெளிக்கிட்டதில்லை..இந்தியன் ஆமி வந்தநேரம் கூட நாங்கள் இங்கதானே இருந்தனாங்கள் என்று எல்லாரும் கதை.நாங்கள் எங்கட பாடு.

எங்களுக்கெல்லாம் அப்ப அது ஒரு பம்பல் மாதிரி.ஆக்கள் கூடியிருக்கிறதே ஒரு விளையாட்டு மாதிரி.போறேல்ல என்று முடிவெடுத்த உடனே அம்மாக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டுது.

இந்தியன் ஆமி வந்தநேரம் அக்காக்கு கால்ல செல் பட்டதால அம்மாக்கு பயம்.சரியெண்டு எல்லாரும் சாவகச்சேரிக்குப் போறதெண்டு முடிவாச்சு.இரவு ஒன்றரைக்கு மாமாவோட நானும் அக்காவும் அம்மாவும் அன்ரியும் ஒரு சைக்கிள்ல்.இப்பிடி எல்;லாரும் சேர்ந்து சைக்கிள்ல வெளிக்கிட்டம்.எங்கயோ ஒரு இடத்தில கொஞ்ச நேரம் நின்றிட்டு திரும்ப கொஞ்ச நேரம் சைக்கிள உருட்டிக்கொண்டு போறம்.ஆமிக்காரன்ர பரா லைற் வெளிச்சம் மாறி மாறி வந்துகொண்டு இருந்திச்சு.

சில பேர் கதைச்சுக்கொண்டு வந்தினம். சில பேர் வீட்டில இருக்கிற ஆட்டுக்குட்டி கோழிக்குஞ்சையெல்லாம் நினைச்சுக்கொண்டாக்கும் மௌனமா நடந்தினம். நான் சைக்கிள்ல சொகுசா இருந்துகொண்டு நட்சத்திரங்களோட கதை.

"அம்மா, பரா அன்ரி சொன்ன அந்த வேட்டைக்காரனைக் காணேல்ல."

"ய மூடிக்கொண்டு வாடி.. சும்மா நொய் நொய் எண்டு கொண்டு.. நாளைக்கு உயிரோட இருப்பமோ தெரியேல்ல இப்பத்தான் வேட்டைக்காரனைத் தேடுறா"

நாங்கள் சாவகச்சேரிக்குப் போய் மாமாவீட்டதான் இருந்தனாங்கள். பக்கத்து வீட்டில தயா என்றொரு பெடியன். மனவளர்ச்சி குன்றியதால அவன் செய்யிற வேலையெல்லாம் சிரிப்பா இருக்கும். சாத்திரம் சொல்லுறன் என்று போட்டு திருநீறு எடுத்துகொண்டுவந்து எதிர்பார்க்காத நேரம் தலையில கொட்டிப்போடுவான். சில நேரம் வீட்ட நின்றிட்டு சொல்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு ஓடிடுவான். அங்க இருந்த ஒரு மாதமும் தயாதான் கூட்டு. நாங்கள் திரும்ப ஊhருக்கு வர தயாவையும் வேற எங்கேயோ போட்டினம்.

அங்க இருந்த நேரம் பலா மரத்தில ஏறி பலாப்பழம் புடுங்கியிருக்கிறன்.து எங்கட ஊரில எல்லாம் பலா மரம் இல்லை.

ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ விஞ்ஞானப் புத்தகத்தில நட்சத்திரக்கூட்டங்கள் உருவங்கள்; பற்றி ஒரு பாடம் இருக்கு. அப்ப புத்தகத்தில போட்டிருப்பினம், ஆசிரியர் மாணவர்கள் இரவுவேளையில் ஒன்று கூடி நட்சத்திரங்களைப் பற்றிப் படிக்கிறதென்டு... அக்கா வேற அப்பிடி ஒருநாள் இரவு போனவா. அதால நான் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனான். என்ர வயசு பிள்ளைகள் குடுத்து வைக்கேல்ல போல. ஊரில சண்டையும் ஊரடங்குச்சட்டமும் மாறி மாறி வாறதால இரவு போயிருந்து வான் வெளியில நட்சத்திரங்களையும் வால் நட்சத்திரத்தையும் பார்க்கிற நாள் எங்களுக்கு வரவே இல்லை.

இப்பிடி நட்சத்திரங்களுடனான என் உறவு வெளிநாடு என்று வெளிக்கிட்ட பிறகு நிலவறை வாழ்க்கையில் துண்டிக்கப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு தூங்கச்சென்றதால், நான் மேல சொன்ன ஞாபகங்கள் எல்லாம் வந்து போயின... அந்தக் கொஞ்சநேர சந்தோசம்கூடப் பொறுக்காமல் பனி கொஞ்சம் கொட்டத்தொடங்க நட்சத்திரங்கள் என்னோடு விடைபெறாமலே போய்விட்டன.

ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்...ம்..அந்த நாள் எப்ப வருமோ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--></span>

Print this item

  இலண்டனில் கவிச் சோலைக் கலையரங்கம்.
Posted by: ஈழமகன் - 02-26-2006, 10:24 PM - Forum: நிகழ்வுகள் - Replies (8)

<img src='http://img394.imageshack.us/img394/3339/untitled9xk.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  கூழ்முட்டை கேக்!
Posted by: வினித் - 02-26-2006, 08:49 PM - Forum: நகைச்சுவை - No Replies

<img src='http://img100.imageshack.us/img100/4182/va5ak.jpg' border='0' alt='user posted image'>


நன்றி: தமிழ் ஸ்ருடண்ட்

Print this item

  ஈழத்த்து அன்னை மடியில்
Posted by: anuraj.nl - 02-26-2006, 08:08 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

ஈழத்து அன்னை மடியில்
அழகழாய் பூத்த பூக்கள்
தேசத்து மண்ணைக் காக்க
செங்குருதி குளித்த பூக்கள்
கார்த்திகைப் பூக்களே -எங்கள்
மா வீரர்களே!
கல்லறையில் உறங்கும் எங்கள்
கார்த்திகைத் தீபங்களே!

கையில் பூக்கள் கொண்டு வந்து
கல்லறையில் பணிகின்றோம்
கண்ணீரில் கவிவடித்து
காவியங்கள் பாடுகின்றோம்
கல்லறையில் முகம் புதைத்து
கதறிக் கதறி அழுகின்றோம்
கரிகாலன் பிள்ளைகளே
கண்திறந்து பாருங்களேன்!

உங்களுக்கு மட்டும் தானா
இப்படியோர் மனத்துணிவு
மரணத்தைக் கூட இங்கு
மண்டியிட்டு அழைப்பதற்கு!

உம்மைப் பெற்ற அன்னை முகமோ
இறுதிவரை பார்க்கவும் இல்லை
உம்மைப் பெற்ற அன்னை மடியில்
இறுதி மூச்சும் போனதில்லை
அண்ணன் வழி சென்றவரே
அடிமை விலங்கை அறுத்தவரே
இறுதிவரை அன்னை மண்ணில்
உங்கள் புகழ் வாழும் வாழும்!

Print this item

  காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை
Posted by: வன்னியன் - 02-26-2006, 07:37 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (5)

காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை. கையாடல் செய்தவர் கள நிபந்தனையின்படி அதை கருத்தெழுதிய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்
பண்பாடு தெரியாத மட்டுறுத்துனர் அதை அகற்றிவிட்டுகமுக்கமாக இருக்கின்றார்.
இதுதான் கள பண்பாடா?

Print this item

  நிர்வாகம் எங்கே இருக்கிறது
Posted by: Shankarlaal - 02-26-2006, 07:30 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (2)

<b>அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...</b>

Print this item

  உலக குழந்தை அழகிகள்
Posted by: வெண்ணிலா - 02-26-2006, 06:28 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (12)

<img src='http://img528.imageshack.us/img528/9291/image142jm.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img528.imageshack.us/img528/6212/image152rd.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img528.imageshack.us/img528/9346/image161tw.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img528.imageshack.us/img528/6994/image175zh.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img528.imageshack.us/img528/8795/image184qe.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img152.imageshack.us/img152/1782/image199nx.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img152.imageshack.us/img152/7223/image205tj.jpg' border='0' alt='user posted image'>



<img src='http://img152.imageshack.us/img152/1759/image217fj.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img524.imageshack.us/img524/4982/image220do.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img527.imageshack.us/img527/4845/image131fw.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  ஹாச்ச்ச்...சில் ஆண்கள் தான் முதலிடம்* பெண்களிடம் எதிர்ப்புச்
Posted by: SUNDHAL - 02-26-2006, 06:07 PM - Forum: மருத்துவம் - No Replies

அடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம்.

அதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது. ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.

அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்ற பாக்டீரியா, வைரஸ் சார்ந்த பாதிப்பு வருகிறது. பெண்களுக்கு வருவது அவர்களை விட குறைவு தான். இதற்கு காரணம், பாக்டீரியா, வைரசை எதிர்த்து போராடும் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதே.

நம் உடலில் எதிர்ப்பு சக்தி முக்கியம். எந்த நோய் வந்தாலும், உடல் பலவீனமானாலும், பொதுவாக சிலரை பார்த்து, "என்ன உடலில் எதிர்ப்புச்சக்தியே இல்லையே' என்பது தானே. டாக்டரை பார்த்தால் கூட, "உங்கள் உடலில் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளது. முதலில் நல்ல சத்துள்ள உணவு, உடற்பயிற்சி எல்லாம் செய்யுங்கள். மருந்தும் எழுதித் தருகிறேன்' என்பது தான்.

நிபுணர்கள் ஆய்வு குறித்த ஹெல்த் ஜர்னலில் கூறிய தகவல்கள்: நம் உடலில் மொத்தம் 1200 ஜீன்கள் என்ற மரபுக்கூறுகள் உள்ளன. மரபணுக் கூறுகளான இவை தான், நம் உடலில் எதிர்ப்புச்சக்தியை பராமரிக்கிறது. எதையும் தாங்குவதற்கு நம் உடலில் போதுமான அளவில் சுரப்பிகள், ரசாயன மாற்றங்கள், எனர்ஜிகள் எல்லாம் உள்ளன. அவற்றை தகுந்த அளவில் குறையாமல் பாதுகாப்பது இந்த எதிர்ப்புச்சக்திகள் தான்.

இந்த எதிர்ப்புச்சக்தியை சீராக பராமரித்து வரும் இந்த 1200 மரபணுக்கூறுகளில் ஏதாவது பாதிப்பு வந்தால் தான் ஜலதோஷம், இருமல், ப்ளூ காய்ச்சல் என்று வருகின்றன. பாக்டீரியா, வைரஸ் ஆகியவை ஒருவரின் உடலில் தொற்றுவதற்கு காரணம் அவர் உடல் பலவீனம் தான். பலவீனம் ஆக காரணம் எதிர்ப்புச்சக்தி இல்லாதது தான்.

முப்பது வயதை தாண்டியதும் பெண் களை விட, ஆண்களுக்கு, அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் என்று பல காரணங்களால் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களும் தான் இப்போது ஆண்களை போல செயல்படுகின்றனர் என்றாலும், எதிர்ப்புச்சக்தியை அவர்கள் இழக்க விடுவதில்லை. அதற்கு காரணம், அவர்களின் பழக்க வழக்கம் மாறாமை தான். பெண்களுக்கு பருவம் மாறும் போது வேண்டுமானால், எதிர்ப்புச்சக்தி சற்று குறைய வாய்ப்புண்டு. அப்போது அவர்கள் தங்கள் எதிர்ப்புச்சக்தியை இழக்காமல் இருக்க டாக்டர்கள், மருந்து மாத்திரைகளால் சீராக வைக்கின்றனர்.

எதிர்ப்புச்சக்திகளில் இரண்டு வகை உள்ளன. தொற்று கிருமிகளை அண்ட விடாமல், உடலில் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் "ஆண்டிபாடிஸ்' உற்பத்தியை தொடர்ந்து செய்யும் ஒரு வகை எதிர்ப்புச்சக்தி. அது பெண்களிடம் அதிகம் உள்ளது. அது ஆண்களுக்கு குறைவு தான். அதனால் தான் பாக்டீரியா, வைரஸ், தொற்றுகிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இவ்வாறு நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ThanksBig Grininamalar...

Print this item

  உலகெங்கிலும் உள்ளதொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம்.
Posted by: adsharan - 02-26-2006, 05:21 PM - Forum: கணினி - Replies (16)

உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேச புதிய வழி

நீங்கள் இந்த மென்பொருளை தரையிறக்கம் செய்வதன் மூலம்உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம்.

www.internetcalls.com

Print this item