02-26-2006, 08:08 PM
ஈழத்து அன்னை மடியில்
அழகழாய் பூத்த பூக்கள்
தேசத்து மண்ணைக் காக்க
செங்குருதி குளித்த பூக்கள்
கார்த்திகைப் பூக்களே -எங்கள்
மா வீரர்களே!
கல்லறையில் உறங்கும் எங்கள்
கார்த்திகைத் தீபங்களே!
கையில் பூக்கள் கொண்டு வந்து
கல்லறையில் பணிகின்றோம்
கண்ணீரில் கவிவடித்து
காவியங்கள் பாடுகின்றோம்
கல்லறையில் முகம் புதைத்து
கதறிக் கதறி அழுகின்றோம்
கரிகாலன் பிள்ளைகளே
கண்திறந்து பாருங்களேன்!
உங்களுக்கு மட்டும் தானா
இப்படியோர் மனத்துணிவு
மரணத்தைக் கூட இங்கு
மண்டியிட்டு அழைப்பதற்கு!
உம்மைப் பெற்ற அன்னை முகமோ
இறுதிவரை பார்க்கவும் இல்லை
உம்மைப் பெற்ற அன்னை மடியில்
இறுதி மூச்சும் போனதில்லை
அண்ணன் வழி சென்றவரே
அடிமை விலங்கை அறுத்தவரே
இறுதிவரை அன்னை மண்ணில்
உங்கள் புகழ் வாழும் வாழும்!
அழகழாய் பூத்த பூக்கள்
தேசத்து மண்ணைக் காக்க
செங்குருதி குளித்த பூக்கள்
கார்த்திகைப் பூக்களே -எங்கள்
மா வீரர்களே!
கல்லறையில் உறங்கும் எங்கள்
கார்த்திகைத் தீபங்களே!
கையில் பூக்கள் கொண்டு வந்து
கல்லறையில் பணிகின்றோம்
கண்ணீரில் கவிவடித்து
காவியங்கள் பாடுகின்றோம்
கல்லறையில் முகம் புதைத்து
கதறிக் கதறி அழுகின்றோம்
கரிகாலன் பிள்ளைகளே
கண்திறந்து பாருங்களேன்!
உங்களுக்கு மட்டும் தானா
இப்படியோர் மனத்துணிவு
மரணத்தைக் கூட இங்கு
மண்டியிட்டு அழைப்பதற்கு!
உம்மைப் பெற்ற அன்னை முகமோ
இறுதிவரை பார்க்கவும் இல்லை
உம்மைப் பெற்ற அன்னை மடியில்
இறுதி மூச்சும் போனதில்லை
அண்ணன் வழி சென்றவரே
அடிமை விலங்கை அறுத்தவரே
இறுதிவரை அன்னை மண்ணில்
உங்கள் புகழ் வாழும் வாழும்!
-
!

