| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 500 online users. » 0 Member(s) | 497 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,301
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,630
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| காந்தீய தேசத்தில்... இப்படியும் மனிதர்கள்..! |
|
Posted by: kuruvikal - 07-05-2004, 01:47 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (14)
|
 |
மதுரையில் எச்சில் இலைக்காக ஒரு கொலை
மதுரை:
திருமண மண்டபத்தில் எச்சில் இலை பொறுக்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் பன்றிகளை வளர்த்து வருகிறார்.
பன்றிகளுக்கு உணவு போடுவதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் போடப்பட்ட எச்சில் இலைகளை பொறுக்கிக் கொண்டிருந்தார் பார்த்திபன். அப்போது அங்கு வந்த கடச்சனேந்தலைச் சேர்ந்த பன்றி வளர்ப்பாளர் நாகராஜ் என்பவர், பார்த்திபன் எச்சில் இலையை எடுப்பதைக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டதால் நாகராஜ் சென்று விட்டார். ஆனால் சிறிது நேரத்தில் தனது ஆட்களோடு அங்கு வந்த நாகராஜ், எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டிருந்த பார்த்திபனை கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.
படுகாயமடைந்த பார்த்திபன் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
எச்சில் இலைக்காக வாலிபர் படுகொலை செய்யப்பட்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
thatstamil.com
|
|
|
| கண்ணா காணாயோ...??! |
|
Posted by: kuruvikal - 07-05-2004, 12:27 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/nice_view.jpg' border='0' alt='user posted image'>
அன்னைக்கு நிகர்த்தவளே
என்றும் என் பாதம் சுமப்பவளே
உன் இயற்கோலம் கண்டு
உன் மைந்தனிவன் பூரிக்கின்றான்
இருந்தும்.....
உன் பசுமைத் துகில் உரிக்க
கங்கணம்கட்டி நிற்கும்
துட்சாதணர்கள் கண்டு
கோகிலக் கண்ணனை அழைத்தேன்
அவனோ பாராமுகமாய் இருக்கிறானே
ஓ....அங்கும்
ஊழலும் சுயநலமும் மலிந்துவிட்டதோ...????!
அடேய் கண்ணா.....
நீயும் வஞ்சகனானாயோ...!!!
பூமித்தாயின்
துகில் உரிப்பை இன்னும் சகித்திருக்கிறாயே....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
|
|
|
| தமிழீழ நீதித்துறையின் வளர்ச்சி.... |
|
Posted by: kuruvikal - 07-03-2004, 12:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (19)
|
 |
தமிழீழ நீதிமன்றத்தில் 24,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளது: தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளர்
தமிழீழ நீதிமன்றங்களினால் இதுவரையில் 24,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளதாக தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளர் இளையதம்பி பரராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி நீதித்துறைத் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்ட நீதித்துறைப் பொறுப்பாளர், தமிழீழ நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகின்ற சட்டங்கள் விடுதலைப் புலிகளினால் இயற்றப்பட்டுள்ள அதேவேளை, இச்சட்டங்கள் பீனல் கோர்ட் சட்டங்களை ஒத்தவை என்றும் தெரிவித்தார்.
சிங்கள மக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது, மொழிபெயர்ப்புச் சேவை இந்த நீதிமன்றங்களில் இருந்து வருவதாகவும், இந்த நீதிமன்றங்களில் வாதிடும் நீதியாளர்கள் நாளொன்றுக்கு ஆகக்கூடிய தொகையாக 200 ரூபாவை மட்டுமே அறவிடலாம் எனவும் நீதித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
puthinam.com
|
|
|
| என்னைத் தெரியுமா ??????? |
|
Posted by: kavithan - 07-03-2004, 08:31 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (171)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>என்னைத் தெரியுமா :?: </b></span>
<b>இது ஒரூ வித்தியாசமான போட்டி.இதில் பிரபலங்களின் சிறிய வயதுப் படங்கள் பிரசுரிக்கப்படும் அதனை வைத்து நீங்கள் அவர்கள் யார் எனச் சொல்ல வேண்டும். இது தான் போட்டி . ஒவ்வொரு வார இறுதியிலும் புதிய புதய படங்கள் இணைக்கப்படும் அதன் போது முதல் புகைப்படங்களுக்கான விடைகளும் இணைக்கப்படும். எனவே நீங்களே உங்கள் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம். ஒருவருக்கும் விடை தெரியாவிட்டால் சிறிய உதவிகள் என்னிடம் கேட்டு பதில் சொல்லவும் முனையலாம். எனக்கு அவரைப் பற்றி தெரிந்தால் கூறுவேன்.
இது உங்கள் அனைவரையும் கவரும் என்று தான் நினைக்கின்றேன் . எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம் உங்கள் ஆதரவை.
இப் புகைப்படங்கள் ஒரு இணையத்தளத்தில்இருந்து தான் எடுக்கப்பட்டன. அவர்களுக்கு எனது நன்றிகள். நான் அவ்விணையம் எது என்று கூறவில்லை அதைக் கூறினால் இது சுவாரசியமாக இருக்காது.</b>
நீங்கள் பெயரை மட்டும் கூறினால் போதும் புகைப்டங்கள் இடவேண்டும் என்ற அவசியம் இல்லை.
<b>உதாரணம் ஒன்று</b>
<b>வினாவுக்கான புகைப்படம்</b>
<img src='http://www.yarl.com/forum/files/1_134.jpg' border='0' alt='user posted image'>
<b>விடை</b>
<img src='http://www.yarl.com/forum/files/1_151.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| கரும்புலிகள் தினம் - சாவே எம் வாழ்வு....! |
|
Posted by: kuruvikal - 07-01-2004, 03:12 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (22)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/tiger_wallpaper.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழத் தேசத் தாயின்
கருவறை காத்து நிற்கும்
கரும்புலிகள் நினைவாக ஓர் கவி.......
(கரும்புலிகள் தினம் ஆடித்திங்கள் 5ம் நாள் (யூலை 5))
விடுதலைத் தீ
விடுவதாக இல்லை
விடுதலை வாங்கும் வரை....!
விடைகொடோம்
விதையாய் விழினும்
விடாயாய் தொடரும் எம்
வீறு கொண்ட இலட்சியம்....!
விசும்பு வரை சென்றும்
வீழ்வோம் வெற்றி முழக்கத்துடன்
வீரக் கரும்புலிகளாய்
வீர தேசம்
விடுதலை பெறும் வரை...!
அதுவரை
சாவே எம் வாழ்வு....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
|
|
|
| சாய்பாபா ரகசியம்? |
|
Posted by: Mathan - 06-30-2004, 02:55 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (15)
|
 |
சாய்பாபா ரகசியம்?
இந்தியாவின் மிகப் பிரபல சாமியார் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை சூழ்ந்துள்ள பாலியல் சர்ச்சைகள் குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சியின் வானொலி வடிவம்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பெற்றவர் ஸ்ரீ சத்ய சாயிபாபா.
இந்த பக்தர்களுக்கு இவர் மண்ணில் மனித உருவில் வாழும் கடவுள். ஆனால் பிபிசி நடத்திய ஒரு புலனாய்வு சாய்பாபாவுக்கு கருநிழல் படிந்த ஒரு மறுபக்கம் இருப்பதாக தெரிவிக்கிறது.
<b>பாதிக்கப்பட்டவனின் தாய்
சாய்பாபா என் மகனை தன்னோட செக்ஸ் வக்கிரத்துக்காக பயன்படுத்திக்கொண்டார்.
மரீஸா ரஹ்ம்</b>
தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் புட்டபர்த்தி என்னும் இடத்தில் உள்ள இவரது தலைமை ஆசிரமத்திற்கு அரசியல்வாதிகள் உள்ளிட்டு பலதரப்பட்ட உயர்மட்ட பிரமுகர்கள் வந்து பாபாவை தரிசித்துச் செல்வது வழக்கம்.
இவரது பக்தர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் பரவி இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து தரிசனத்துக்காக வந்த ஒரு விடலைப் பையனிடம் பாபா, பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டதாக அவனது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டு பற்றி பிபிசி தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சியின் வானொலி வடிவம் இந்த தமிழோசை பெட்டகம்.
http://www.bbc.co.uk/tamil/040620_saibaba.ram
|
|
|
|