Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 241 online users.
» 0 Member(s) | 238 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  BBC யும் தமிழில் யூனிகோட் முறையில் இணையத்தில்...
Posted by: yarl - 06-29-2004, 10:48 PM - Forum: இணையம் - Replies (3)

வாழ்க வளர்க

http://www.bbc.co.uk/tamil/

Print this item

  கருணாவை கைது செய்ய இராணுவ உதவி?
Posted by: Mathan - 06-29-2004, 08:51 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (44)

கருணாவை கைது செய்ய புலிகள் இராணுவ உதவியை கோரலாம் என்று இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

LTTE to seek Armys assistance to arrest Karuna?

Alladin Hussein in Colombo, June 29, 2004, 10.59 p.m.. The LTTE, which is continuing to hunt down its rebel leader Karuna, may seek the assistance of the Sri Lanka Army for this task, unconfirmed reports claim. The LTTE might ask for the Armys assistance to arrest Karuna, sources claimed. This report comes in the midst of conflicting stories that the Military is giving protection to the LTTE rebel leader.

Meanwhile, LTTE Political Wing Leader S.P. Thamilselvam told the Sri Lanka Monitoring Mission yesterday that his organization had received sufficient evidence that the Sri Lanka Military is giving protection to Karuna. And noted that this was a big black mark to the ceasefire agreement.

Print this item

  மலரே... உன்னால் நான்....
Posted by: kuruvikal - 06-29-2004, 09:24 AM - Forum: கவிதை/பாடல் - Replies (19)

<img src='http://kuruvikal.yarl.net/archives/flower1.jpg' border='0' alt='user posted image'>

மலரே
வசந்தத்தின் பரிசே
வாடி விழுந்த உன்னை
மீண்டும் நிலையாய் மலர வைத்து
வாசம் வீச வைக்க
நேசம் கொண்டேன்...!

மலரே சொல்
உன் மென்மைக்குள்
ஏன் இத்தனை சோக ரணங்கள்
அத்தனையும்
கண்ணீராய் கொட்டியது
உன் சோகத்தின் வேதனை
அறிந்த பொழுது....!

ஏன் எனக்கு இப்படி ஒரு மனது
சோதனைக்குள் வேதனையாய்
வாழ்வைக் காணும் உன்னை
நிலையாய் நேசிக்கவா....???!
உன்னை நேசிப்பதால் - நான்
புனிதன் ஆகுவேன் என்றில்லை
மாறாய்
என்றும் நான் புனிதன் தான்
மனத்தால் உடலால்...!
மீண்டும் நீ
புண்படக் கூடாது என்பதற்காய் போலும்....!


நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

  கனடா தேர்தல் நிலவரம்
Posted by: kavithan - 06-29-2004, 07:01 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

கனடாவில் இன்று நடைபெற்ற தேர்தலில் ஆழும் கட்சியான லிபரலே வெற்றி பெற்றுள்ளது.


Overall Election Results
<b>Party............ Elected ..........Leading ................Total..........Vote Share</b>
LIB..............128 .................... 7.......................135 ...............37.20%
CON.............85........................9........................94..................29.46%
BQ ..............53........................2........................55................12.69%
NDP .............18.......................5 .......................23 ............... 15.23%
NA .............1..........................0 ........................1 .................0 .06%
OTH .............0......................... 0.........................0 .................5.36%
Last Update: June 28, 11:46:18 PM EDT 308 seats



கனடாவின் பிரதமமந்திரி வெற்றிக்களிப்பில்
<img src='http://cnews.canoe.ca/CNEWS/Politics/CanadaVotes/2004/06/28/martin06.jpg' border='0' alt='user posted image'>

http://www.cbc.ca/canadavotes/index.html

http://www.cbc.ca/canadavotes/electionnight/index.html

Print this item

  english2unicode விசைப்பலகை மாதிரி
Posted by: kirubans - 06-28-2004, 11:05 PM - Forum: கணினி - Replies (4)

யாராவது english2unicode விசைப்பலகை மாதிரிப்படம் வைத்திருந்தால் அனுப்பவும். சில தமிழ் எழுத்துக்களைத் தேடிக்களைத்து விட்டேன்.

Print this item

  என்னை பற்றி...!
Posted by: kuruvikal - 06-28-2004, 05:34 PM - Forum: கவிதை/பாடல் - Replies (12)

<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/dranor.gif' border='0' alt='user posted image'>

<b>என்னை பற்றி</b>

என் பெயரோ தமிழினி!
பிறந்ததோ {யாழ் நகரில்} ஓரு சிறு கிராமத்தில்.
உறவினர் என்று யாரும் இலர்.
நண்பர் என சிலர் உலர்.

பிடித்தது வறுமையில் சிரிப்பு
வெறுப்பது துரோகங்கள்.
நம்புவது என்னை மட்டும்
நினைப்பது நல்லவயை
நடப்பவை நினைக்காதவை

கற்றது எழுத படிக்க
கற்க நினைப்பது உலகை.
மகிழ்வது கனவில்
வாழ்வது கற்பனையில்
மறக்க நினைப்பது சோக வரலாறு
மறக்க முடியாதது தோல்விகளை
நடக்க முடியாதது முயற்சி செய்யாதவை
சாதிக்க இருப்பது ரகசியம்.

விரும்பும் இடம் என் தாய் நிலம்.
வாழ்வில் சந்திக்க விரும்புவது என்னை போல் இன்னொருவரை
வேண்டுவதெல்லாம்
சுதந்திரமாய் என் தாய் நிலத்தில் மரணம்.

http://www.tamilini.blogspot.com/

----------------------------------

ஏன் தமிழினி யாழ் கள உறவுகள் நாம் உங்கள் உறவுகள் தானே பிறகேன் உறவுகள் இல்லை என்றீர்கள்....???!

உங்களுக்குள்ளும் ஏதோ ஒரு சோகம் புதைந்திருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது... நீங்கள் தேடும் உங்களைப் போன்றவர் கிடைத்து நீங்கள் உங்கள் சோகங்கள் கலைத்து என்றும் மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழ்ந்திருக்க இறைவனை வேண்டுகின்றோம்...!

உங்களையே நம்பும் உங்கள் குணம் நீங்கள் உறுதியாய் இருப்பீர்கள் என்பதையும்... உங்கள் பலம் பலவீனத்தை எடை போட்டுக் கொண்டு உங்களை நீங்களே நன்கு வழிநடத்துவீர்கள் என்பதையும் பறைசாற்றுகிறது...எனவே சோகங்கள் மறந்து... வாழும் வயதில் தீமைகள் தழுவாது நன்மைகளோடு வாழ என்றும் விளைந்திருங்கள்....!

நீங்கள் ஒருதடவை குருவிகளைப் பார்த்துக் கேட்டீர்கள் ஏன் வாழ்க்கை வெறுத்துப் போனவர் போல் பேசுகிறீர்கள் என்று....அதன் பொருள் இன்று அறிந்தோம்...! நாம் எம்முள் பலரையும் காண வேண்டும் என்று வாழ நினைப்பவர்கள்.... மற்றவர்களின் உணர்வுகளின் ஓட்டம் அறிந்து அவர்களோடு அவர்களின் மகிழ்விற்காய், நல்ல மனமாற்றத்திற்காய் நல்ல மனித உறவுகளாய் வாழ விரும்புபவர்கள்....அதற்காய் இலட்சியம் வகுத்தவர்கள்....!ஆனால் எம் நிலை உணரும் மனிதர்கள் மிக சொற்பம் என்பதே இக்குறுகிய வாழ்நாளில் கண்ட உண்மை....! Idea

Print this item

  கானக்குயில் 2004
Posted by: ganesh - 06-27-2004, 03:25 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (6)

கானக்குயில் 2004 அருணுக்கு வாழ்த்துகள்

Print this item

  அறிவில் சிறந்தவர் யாரிங்கே?
Posted by: வெண்ணிலா - 06-27-2004, 09:22 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (180)

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்பது கேள்விகளுக்கும் விடைகள் "அகர" வரிசைப்படி அமைந்திருக்கும். அறிவுள்ளங்களே சரியாக பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். <b>( ம - மை)</b>1)தனது வாழ்நாளில் ஒருமுறைகூட விமானத்தில் பயணம் செய்யாத தலைவர்..................
2)"அமெரிக்கக் காந்தி" என்ற புகழுக்குரியவர்............................
3)"பால் பாய்ண்ட் பென்" (Ball Point Pen) இதைக் கண்டுபிடித்தவர்..................
4)மதுரையின் பெண் தெய்வம்.....................
5)ஹிட்லரின் சம காலத்தில் இத்தாலி நாட்டை ஆண்டவர்....................
6)வாழைப்பழத்தின் விஞ்ஞானப் பெயர்............................
7)ஆங்கில வழி கல்விக் கொள்கையைக் கொண்டுவந்தவர்..................
8)இந்தியாவில் கால்பந்து ஆட்டத்துக்குப் பெயர் போன மாநிலம்..................
9)காச நோய் உண்டாகக் காரணமான கிருமி...............[/b][/color]

Print this item

  சிந்திக்க சில வரிகள்.
Posted by: tamilini - 06-26-2004, 11:24 AM - Forum: தமிழும் நயமும் - Replies (22)

காசி ஆனந்தனின் நறுக்குகள்.

முரண்

இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
~நாயே! பன்றியே! குரங்கே!,

நாற்காலி
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

உலகமைதி
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி

ஞானம்
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.


அடி
கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்...
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய நீ.

பாடம்
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.


காலம்
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.


கடற்கரை
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரிய,டத்து மாடிகள்
இங்கேயே நோயோடும் நொடியோடும்
ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்

வெறி
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்...எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

இருள்
பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்...
எங்கேவெளிச்சம்?


வீரம்
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாலிக்கு தாஜ்மஹால்

தொடரும்........
நன்றி lankasri.com

Print this item

  வடிவேலுவுக்கு அடி உதை
Posted by: vasisutha - 06-26-2004, 04:16 AM - Forum: சினிமா - Replies (33)

<b>நடிகர் வடிவேலுவுக்கு அடி உதை </b>

பிரசாந்த் நடிக்கும் ஆயுதம் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 25) ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு வில்லன் நடிகர் நம்பிராஜன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். இவர் அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே உள்பட 70க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்தவர்.

அப்பொழுது அங்கு வந்த வடிவேலு நம்பிராஜனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு மேக்கப் அறைக்குள் சென்றார். சிறிது நேரம் வெளியே காத்திருந்த நம்பிராஜன் திடீரென்று உள்ளே சென்றார். உள்ளே சென்ற சில நிமிடங்களில் காரசாரமான சத்தம் கேட்டது. உடனே படக்குழுவினர் ஓடிவர, நம்பிராஜன் வடிவேலுவை அடித்து உதைத்துக் கொண்டிருந்தார். வடிவேலுவும் திருப்பி தாக்கினார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் தலையிட்டு நம்பிராஜனை விலக்கினர்.

நம்பிராஜன் பிறகு நேராக கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று வடிவேலு மீது புகார் கொடுத்தார். அதன் பின் நிருபர்களிடம் நம்பிராஜன் நான் வில்லன் நடிகராக இருந்தாலும் நன்றாக காமெடி டிராக் எழுதுவேன். அதை வடிவேலுவிடம் சொல்லுவேன். அது அவருக்கு பிடித்திருந்தால் டைரக்டரிடம் சொல்லி அந்தப் படத்தில் இடம் பெறச் செய்து விடுவார். இதற்காக எனக்கு ஒரு படத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் சமீபகாலமாக நான் சொல்லும் காமெடி டிராக்கை கேட்டு விட்டு அது ஒண்ணும் பெரிசா இல்லையே.. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அதே டிராக்கை தானே யோசித்ததாக இயக்குனர்களிடம் சொல்லி படத்தில் வைத்துவிடுவார். எனக்குக் கிடைக்க வேண்டிய அந்த தொகையை அவரே வாங்கிக் கொள்வார்.

ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பதற்காகத்தான் மேக்கப் அறைக்குள் போனேன். ஆனால் ரொம்பவும் தெனாவட்டாக பதில் சொன்னார். என்னால் வளர்ந்த ஒரு காமெடியன் என் காமெடி டிராக்கை திருடிக்கொண்டு என்னையே அலட்சியமாக பேசியதால் திடீரென்று எனக்கு வெறி வந்தது. அதனால் வடிவேலுவைப் போட்டு அடித்து உதைத்துவிட்டேன். இனி மேலும் என் காமெடியை பயன்படுத்தினால் அவரை சும்மாவிடமாட்டேன் என்றார் நம்பிராஜன்

Print this item