Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 458 online users.
» 0 Member(s) | 456 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,068
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  பொன்விழா காணும் எங்கள் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted by: kavithan - 11-09-2004, 03:52 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (25)

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/ponvizakaanum_em_thalivar-thumb.jpg' border='0' alt='user posted image'>



<span style='font-size:30pt;line-height:100%'><b>பொன்விழா காணும் எங்கள் தலைவர் திரு வே.பிரபாகரன்</b></span>

<span style='font-size:23pt;line-height:100%'>
பொன்விழா காணும்
பொங்கும் தமிழரின்
தலைவா..!
தமிழீழ
தேசத்தின் விடியலுக்காய்
தெய்வ மகன்
நீ
வல்வையில் பிறந்து
சொந்தங்களை துறந்து
பாசத்தை மறந்து
தன்னிகரற்ற போராட்டத்தை
தன்னலம் இன்றி
ஏறத்தாழ
முப்பத்து மூன்று வருடங்களாக
முழுமூச்சாக
முன்வைத்த காலை
தவளை பாயச்சலாய்
முன்னேறி பாய்தலாய்
ஓயாத அலைகளாய்
ஓய்வின்றி நிகழ்த்தி
ஓங்கார வேலானாய்
எம் ஒரே தலைவானாய்
எல்லோர் மனதிலும்
எல்லோர் உருவிலும்
எல்லோர் வீட்டிலும்
நீ இருக்கிறாய்.

அன்று
விதியை வென்று
நீ
\"புதிய தமிழ் புலிகளுக்கு\"
தலைவனானாய்
இன்று
சதியை வென்று
நீ
உலகத்தமிழருக்கே
தலைவனாய் மிளிர்கிறாய்.

போர்க்கள சாதனைகள்
பல புரிந்தாய்
பல போரியல்
தந்திரோபாயங்களை
மாற்றி அமைத்தாய்
புதிய புதிய
உத்திகளை
போரில் புகுத்தினாய்.

பக்கம் பக்காமய்
பகட்டுக்கு அறிக்கை விட்டு
அப்பாவி மக்களை
ஏமாற்றும் பல தலைவர்கள்
அரசியல் வாதிகள்
ஆழும் கட்சிகள்
எதிர் கட்சிகள்
உலக நாடுகள்
புல்லுருவிகள்
என எல்லோருமே
உன் ஓர்
உரைக்காக
தவிப்பார்களே..!
அந் நாள்.....

எம் மக்கள்
உன்னுரை கேட்டு
பொங்கி எழுவார்களே..!
அந் நாள்....

எல்லையில்
நிக்கும் இராணுவமும்
ஊரில்
உலாவும் இராணுவமும்
எப்போது உன்னுரை
முழங்கும்
எப்போது எமக்கு
அடிவிழும் என
தம்முயிரை
கையில் பிடித்தபடி
நடு நடுங்க
காத்திருப்பார்களே
அந்நாள்....

ஆமாம்
ஆண்டுக்கு ஒரு முறை
அமைதியாக
அடக்கமாக
ஆனால்
அதிகாரத்தோடு
உரை நிகழ்த்தி
உலகையே
ஒருகணம்
உன்னை நோக்கி திரும்பவைக்கும்
அந் நாள்
உன் பிறந்தநாள்
அது
தமிழினத்தின்
சுதந்திர நாள்.</span>


[b]<span style='font-size:30pt;line-height:100%'>தலைவா நீ எட்டபோகும் ஜம்பதாவது அகவைக்காய்
இவ் வளரும் கவிஞ்ஞனால் முடிந்த ஒரு கவிதை.
எங்கள் தலவராய்
என்றும் நீங்கள் இருந்திட ஆசை
அவ்வாசை நிறைவேற இறவனை பிரார்த்தித்து
உங்களுக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் </span>


கவிதன்
08/11/2004
7.20 மாலை


http://kavithan.yarl.net/

Print this item

  பொன்விழா காணும் எங்கள் தலைவர்
Posted by: kavithan - 11-09-2004, 03:48 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/ponvizakaanum_em_thalivar-thumb.jpg' border='0' alt='user posted image'>



<span style='font-size:30pt;line-height:100%'><b>பொன்விழா காணும் எங்கள் தலைவர் திரு வே.பிரபாகரன்</b></span>

<span style='font-size:23pt;line-height:100%'>
பொன்விழா காணும்
பொங்கும் தமிழரின்
தலைவா..!
தமிழீழ
தேசத்தின் விடியலுக்காய்
தெய்வ மகன்
நீ
வல்வையில் பிறந்து
சொந்தங்களை துறந்து
பாசத்தை மறந்து
தன்னிகரற்ற போராட்டத்தை
தன்னலம் இன்றி
ஏறத்தாழ
முப்பத்து மூன்று வருடங்களாக
முழுமூச்சாக
முன்வைத்த காலை
தவளை பாயச்சலாய்
முன்னேறி பாய்தலாய்
ஓயாத அலைகளாய்
ஓய்வின்றி நிகழ்த்தி
ஓங்கார வேலானாய்
எம் ஒரே தலைவானாய்
எல்லோர் மனதிலும்
எல்லோர் உருவிலும்
எல்லோர் வீட்டிலும்
நீ இருக்கிறாய்.

அன்று
விதியை வென்று
நீ
\"புதிய தமிழ் புலிகளுக்கு\"
தலைவனானாய்
இன்று
சதியை வென்று
நீ
உலகத்தமிழருக்கே
தலைவனாய் மிளிர்கிறாய்.

போர்க்கள சாதனைகள்
பல புரிந்தாய்
பல போரியல்
தந்திரோபாயங்களை
மாற்றி அமைத்தாய்
புதிய புதிய
உத்திகளை
போரில் புகுத்தினாய்.

பக்கம் பக்காமய்
பகட்டுக்கு அறிக்கை விட்டு
அப்பாவி மக்களை
ஏமாற்றும் பல தலைவர்கள்
அரசியல் வாதிகள்
ஆழும் கட்சிகள்
எதிர் கட்சிகள்
உலக நாடுகள்
புல்லுருவிகள்
என எல்லோருமே
உன் ஓர்
உரைக்காக
தவிப்பார்களே..!
அந் நாள்.....

எம் மக்கள்
உன்னுரை கேட்டு
பொங்கி எழுவார்களே..!
அந் நாள்....

எல்லையில்
நிக்கும் இராணுவமும்
ஊரில்
உலாவும் இராணுவமும்
எப்போது உன்னுரை
முழங்கும்
எப்போது எமக்கு
அடிவிழும் என
தம்முயிரை
கையில் பிடித்தபடி
நடு நடுங்க
காத்திருப்பார்களே
அந்நாள்....

ஆமாம்
ஆண்டுக்கு ஒரு முறை
அமைதியாக
அடக்கமாக
ஆனால்
அதிகாரத்தோடு
உரை நிகழ்த்தி
உலகையே
ஒருகணம்
உன்னை நோக்கி திரும்பவைக்கும்
அந் நாள்
உன் பிறந்தநாள்
அது
தமிழினத்தின்
சுதந்திர நாள்.</span>


[b]<span style='font-size:30pt;line-height:100%'>தலைவா நீ எட்டபோகும் ஜம்பதாவது அகவைக்காய்
இவ் வளரும் கவிஞ்ஞனால் முடிந்த ஒரு கவிதை.
எங்கள் தலவராய்
என்றும் நீங்கள் இருந்திட ஆசை
அவ்வாசை நிறைவேற இறவனை பிரார்த்தித்து
உங்களுக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் </span>


கவிதன்
08/11/2004
7.20 மாலை


http://kavithan.yarl.net/[/quote]

Print this item

  அழகான மலரே..!
Posted by: kavithan - 11-09-2004, 02:27 AM - Forum: கவிதை/பாடல் - Replies (70)

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/rose4awp6-thumb.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:30pt;line-height:100%'><b>அழகான மலரே..!</b></span>

<span style='font-size:25pt;line-height:100%'>அடுக்கடுக்காய்
இதழ் கொண்டு
அழகழகாய்
உன்னை
வடிவமைத்த
அந்த சிற்பி
யாரோ?

அழகான
இரு இதழ்கள்
கொண்ட
பெண்கள்
உன்னை
நேசிப்பதன்
மாயம்
ஏதோ?


தினம்தினம்
காலையில்
தினசரியாய்
நீ
மலர்ந்திடும்
நோக்கம்
என்னவோ?

யாரும்
நெருங்க முடியாத
இடத்தில் எல்லாம்
நீ மட்டும்
அமர்ந்திருந்து
அழகாய்
புன்னகைப்பது
எப்படியோ?


அன்புக்கு
பரிசாய்
தூதாய்
அழகாய்
மிளிரும் உன்னை
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
ஆனால் ஒன்று
அழகான
பெண்களின்
கூந்தலில்
இருந்து கொண்டு
நீ என்னை பார்த்து
செய்கின்ற
குறும்பு சிரிப்பு......!.
இருக்கே......!
அது ...!
அது..!
உன்னை..!
உன்னை..!
என்னை
கொல்லுதே...!
அட,
பொறாமையில்லை
உன்னழகு.</span>


கவிதன்
07/11/2004

http://www.kavithan.yarl.net

Print this item

  நிபந்தனைகளைப் படிக்காது உறுப்பினராய் சேர்ந்தவர்களுக்கு...
Posted by: Nitharsan - 11-09-2004, 02:04 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (4)

பல உறுப்பிணர்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு தமது சொந்த நலன்களில் அக்கறைப்படுவதாய் எண்ணுகின்றேன். களம் என்பது பொதுவான விடையம் இதில் யாரும் வரலாம் எதையும் எழுதலாம் என்று எண்ணிக் கொண்டு குள்ள நரி வேலை செய்யும் சில் உறுப்பினர்கள் முன்னேச்சரிக்கையின்றி நீக்கப்பட வேண்டு மென்று தாழ்வ மோகனண்ணாவை கேட்டு நிற்க்கிறேன்.
நிபந்தனைகளைப் படிக்காது உறுப்பினராய் சேர்ந்தவர்களுக்கும்.... நிபந்தனைகளை மறந்தவர்களுக்கும்..நிபந்தனைகள்:

Mohan Wrote:கவனிக்க: நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கின்றேன் என்பதற்கு இங்கு அடியில் இருக்கும் \"By checking this box, you declare having taken knowledge of the terms, and agree with them\" புள்ளடி இடல் வேண்டும்.

1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.
3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.
5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும்.
6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு அது பற்றித் தெரிவிக்கலாம்.
8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.
.

உறுப்பினர்களே!
தேவையற்ற தனிப்பட்ட பிரச்சினைகளுக்காய் களம் பயன்படுத்தப்படுவதாக நான உணர்கின்றேன். குறிப்பிட்ட ஒருசிலர் தமது பெயரினை பிரபல்யப்படுத்த அல்லது திட்டமிட்டு கள விதிமுறைகளை மீறிவருகின்றனர். இவர்களது வேலையற்ற வேலையால் களத்தின் பக்கங்களும் பொறுப்பாளரின் நேரமுமெ வீணாக்கப்படுகிறது....எனவே சிந்தித்து கருத்துக்களை எழுதுங்கள்.....

மோகனண்ண:
தயவு செய்து இதில் கவனமெடுங்கள் நல்விடையங்களை பற்றி மட்டும் நாம் பேசலாம் குடும்ப பிரச்சினைகள், நிறுவனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை இன்று தமிழர்கள் அதிகம் கருத்தாடும் யாழ் கருத்துக்களத்தில் வேண்டாம் ஓர் உண்மை உறுப்பினராய் உணர்வுள்ள தமிழனாய் கூறுகின்றேன்
-நேசமுடன் நிதர்சன்-

Print this item

  உலகச் செய்திச்சரம்...!
Posted by: kuruvikal - 11-09-2004, 12:56 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40502000/jpg/_40502009_new203dead.jpg' border='0' alt='user posted image'>

Anjanette Rossi (38 ) and her daughter Louella (9)

நேற்றைய தினம் பிரித்தானியாவில் புகையிரதக் கடவையில் அதிவேக புகையிரதமும் காரும் மோதிக்கொண்டதில் இத்தாயும் சிறுமியும் உள்ளிட்ட காரில் இருந்தவர்கள் உள்ளடங்கலாக 7 பேர் உயிரிழந்ததுடன் அதுவேக புகைவண்டியும் தடம்புரண்டதில் பலர் காயமடைந்தனர்...! இது பிரித்தானியாவில் நடந்த புகையிரத விபத்துக்களில் முக்கியமான சிலவற்றுள் ஒன்றாக கருதப்பட்டு விபத்துப் பற்றிய விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன...!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40500000/jpg/_40500289_crash_ap_story203.jpg' border='0' alt='user posted image'>

தடம் புரண்ட புகையிரதப் பெட்டிகள்...!


------------------------------

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40501000/jpg/_40501783_dig-in-ap203i.jpg' border='0' alt='user posted image'>

ஈராக்கில் முன்னர் அமெரிக்கப்படைகள் பிடித்து வைத்திருந்து தீவிரவாதிகளின் தொடர்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கிய Falluja ( in central Iraq) நோக்கி மீண்டும் 20 ஆயிரம் அமெரிக்க துருப்பினரும் அமெரிக்கப் பயிற்சி பெற்ற ஈராக்கிய படையினரும் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி அப்பிரதேசத்தை மீளக் கைப்பற்ற இராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்....!

தகவல் : bbc.com

Print this item

  ஏன் தீபாவளி....?
Posted by: kuruvikal - 11-08-2004, 10:21 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (37)

<img src='http://thatstamil.com/images25/diwali/diwali-350.jpg' border='0' alt='user posted image'>

தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்துவிட்டது!

தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்கிறோம்.

இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் "சந்திர தரிசனம் " என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும்.

<b>சந்திர தரிசனம்</b>

"சந்திர தரிசனம்" என்றால் என்ன?

ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது.

ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்காஸ்நானம்" என்று கூறுகிறார்கள்.

<b>கதை, கதைகள்</b>

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம் நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கதையை தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள்.

நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் சொல்லும் ஜெனரல் கதை 'நரகாசுர வதம்'.

பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.

எப்படிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார்.

பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார். இதனால் கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாங்க.

நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.

பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க. அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக.... தீபத்திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

வட நாட்டில்..

ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர்சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.

மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள்.

குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்.

சீக்கியர்களின் தீபாவளி

சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுகிற..... தீபாவளிக்கு சொல்கிற காரணம் வேற. சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்கிறார்கள்.

அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான் தீபாவளி என்று சொல்வாரும் உண்டு. மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்போரும் உண்டு !

சிங்கப்பூர் செய்த சிறப்பு

துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சொல்வதும் உண்டு. சொல்லப்படுகிற அனைத்துக் கதைகளிலும் உள்ள ஒரே ஒற்றுமை விஷ்ணுவின் அவதாரம் இருப்பதுதான் !

தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் அதற்கு செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் மட்டும்தான்.

thatstamil.com

<img src='http://thatstamil.com/images25/diwali/lakshmi250.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  ஊமை விழி....!
Posted by: kuruvikal - 11-08-2004, 05:57 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

ஓசையின்றி எழுதிய
ஓராயிரம் சரித்திரங்கள்
ஓயாமல் படம்பிடித்த
ஒழிவுமறைவில்லாக் காட்சிகள்
ஓங்கிய ராஜ்சியங்கள்
ஓரிரவுள் சரித்த வரலாறுகள்
ஒருவனுக்குள் ஒருத்தியை
ஒருத்திக்குள் ஒருவனை
ஓங்க வைத்து தொலைத்த நிம்மதிகள்
ஓயாமல் அடுக்கலாம் என் சாதனைகள்....!
ஓங்கும் வீரம்
ஓரிருவருக்குள் என்னோடு
ஓசையின்றி ஒருத்தன்
ஓரமாயிருந்து மனமாள
ஒடுங்கிடுவேன் அவன் முன்...!
ஒய்காரம் காட்டி
ஓரங்கட்டும் கன்னியோடும் என்னுறவு
ஓயாமல் போராடி
ஓங்கும் கள வீரனும் என்னுறவு
ஓர் நிலை நின்று
ஓங்கும் மாணவனும் எந்தோழன்
ஓர் நிலை இன்றி
ஓடி அலையும் காமனும் என்னோடு...!
ஓய்வின்றி உழைக்கும் ஒருவனுக்கு
ஓர் வைத்தியன்
ஓடி உழைத்து
ஓயாமல் குடித்தழிக்கும்
ஒருவன் உண்மை சொல்வேன்
ஒழிக்க நினைக்கும் ஒரு மனதை
ஓர் நொடியில் கண்டுணரும் உளவாளி நான்...!
ஓயாமல் தொடரும் என்சேவை
ஒருநாள் ஒருவன் ஆட்டம் முடிப்பேன்
ஓயாமல் நான் போடும் நர்த்தனம் நிறுத்தி
ஒருவேளை என்னுதவி
ஒரு தவறானால்
ஓயாமல் கலங்கிடுவேன்
ஒருத்தி அதையே
ஒரு தயவுதேடித் தப்பாக்கிக் கொள்கிறாள்
ஓ.... அங்கு நான்
ஊமை விழி
அவள் அநியாயம் சொல்ல முடியா
ஊமை....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/eye.gif' border='0' alt='user posted image'>

நன்றி : http://kuruvikal.yarl.net/

Print this item

  நண்ப÷களே இது தேவைதானா
Posted by: Suji - 11-08-2004, 02:39 PM - Forum: புலம் - Replies (19)

சேதுவின்ர பெயரை யாரோ கெடுக்கின்ற முயற்சி கெல்மெட்டிலை கனபோின்ரை தொல்லை தாங்கமுடியவில்லை
அது சாி இங்கு வரும்போதும் கெல்மெட்டிலை தானே வந்தவை.தயவு செய்து இந்தக்களத்தை தனிப்பட்ட நப÷களை தாக்குவதற்கு பயன்படுத்தாதீ÷கள். அது யாழ் இணையத்திற்கு அவமதிப்பு ஆகும். பொறுப்பாள÷கள் உசா÷. மோகன் தயவுசெய்து களத்தின் சட்டங்களை கொஞ்சம் இறுக்கமாக்குங்கள்.
தங்களின் குடும்ப பிரச்சனைகளுக்கும் களத்தில் தாக்குதல் நடத்த ஆரம்பிக்குமுன் யாழ்கருத்துக்களத்தை காப்பாற்றுங்கள்
நண்ப÷களே இது தேவைதானா? உங்களின் உடமையை நீங்களே காப்பாற்றவேண்டும். தரப்பட்ட சுதந்திரத்தை பறிகொடுக்கின்றமை அவசியம்தானா?
யாருக்காகவும் நான் வக்காலத்து வாங்கவில்லை. மோகன்தான் பதில் சொல்லவேண்டும்.

Print this item

  சேதுபுத்திரன்
Posted by: Bond007 - 11-08-2004, 12:28 PM - Forum: அறிமுகம் - Replies (26)

வணக்கம். என்டை பெயர் சேதுபுத்திரன்! நான் ஒரு ஊடகவியாளன். நான் இப்ப ஒரு 5 வரியமா குப்பை கொட்டுறன். என்னை பற்றி சொல்லுறதென்னடால் கனக்க ஒண்டு மில்லை. சரியா எலுத்துப்பிழை விடுவன், அதாலை நான் என்ன பெயரிலை வந்தாலும் கண்டு பிடிச்சிருவினம் இந்த முறை என்றை மைனிசியை விட்டு டைப்பண்ணிறன். நான் கன வானொலியிலை குப்பை கொட்டினனனான். முதலிலை ரீபிசி வானொலி, அதின்றை பணிப்பாளர் முந்தி ரண்டு பேரும், அதுதூன் ராமராசன், மற்றது எஸ்பி ஜெயம் இரண்டும் என்றை கூட்டாளியல். செய்தி எழுதிக் குடுக்கிறது, நேயர் நேரத்திற்கு கடிதம் எழுதுறது, அதுகள் தான் முந்தி என்றை வேலைஇ சாப்பாடு படுக்கை எல்லாம் பணிப்பாளர் ராமராசன் வீடட்டிழை தான். அங்கை சங்கரி அண்ணi வந்து போறவர் தானே ஒரு மாதிரி சினேகிதம் பிடிச்சிட்டன். பிறகு விசா சரி வரேல்லை அப்ப பணிப்பாளர' ஒரு ஐடியா தந'தார். அதாவது சுயமாக விரும்பி சிறீ லங்கா போனால் காசு தருவினம் எண்டு! நானும் உடனை அப்பிளை பண்ணி போட்டு ஊருக்கு சொன்னன் உடனை நல்ல சீதன்த்தோடை பெம்மிளை பார்க்கச் சொல்லி, அவையும் நல்ல சீதனத்துடன் நான் வசிக்கிற நாட்nலை (இப்ப) ஒரு பெண்ண பாரக்க பிறகென்ன எல்லாம் தமிழ் படம் மாதிரி முடிஞ்சுது. என்றை திருமணத்திற்கு தலைமை தாங்ஙகினது சங்கரியார் தான்.

பிறகு, விசா கிடைக்க நானும் நோர்வேக்கு வந்தன். ஈஙசை நிலைமை வேறைஈ லண்டனிலை புலி யென்டு சொன்னால் அவ்வளவு எடுபடாது, ஆனால் நேர்வைடீயிலை புலியென்டால்தான் மதிப்பு! உடனை பிளேற்றை மாத்தி சங'கமத்திலை சங்கமமானனன். அங்கையிருந்து ஒரே ஜல்றா பேட்டன். வந்தான் ஒருதன், வைச்சான் ஆப்பு எனக்கு நான் சும்மா விடுவனே, இஞ:சை கனபேரிலை வந்து நானே கருத்தெழுதி நானே பதிலும் எழுதினன்.. கடவுளே எனக்கு விசர் ஏதும் பிடிக்க முந்தி ஆரும் ஒரு வானொலியிலை தயவு செய்து என்னை சேருங்கோ! ஒரு உத்தரவாதம் நான் போடுற ஜல்ரா உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பும். மீதி விரைவில. எனக்காக ஒரு உளவுபகுதியை ஒதுக்கி தந்தியள் எண்டால் பல உன்மைகளை புட்று புடறு வைப்பன்.

டும் டும் டுமீல் புஸ் புஸ்..

Print this item

  விருந்துக்கு வந்த வீரப்பனை மயங்க வைத்துப் பிடித்தஅதிரடிப்படை
Posted by: ஜீவன் - 11-08-2004, 07:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக மாநில அதிரடிப்படைகளுக்கு ஒரு பெருத்த தலைவலியாக இருந்துவந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அத்தியாயம் கடந்த 18_ந் தேதியன்று முடிவுக்கு வந்தது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தமிழக அதிரடிப்படையின் தந்திரவலையில் வகையாகச் சிக்கிக்கொண்ட வீரப்பனை அவனது கூட்டாளிகளுடன் அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர் என்றும், அதிரடிப்படையினருடன் வீரப்பன் தரப்பினர் நடத்திய மோதலின்போது, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அதிரடிப்படையின் தலைவர் விஜயகுமார் தெரிவித்திருந்தார். ஆனால், வீரப்பனும் அவனது சகாக்களும் கொல்லப்பட்டது பாப்பாரப்பட்டி அருகே நடந்த மோதலில் அல்ல என்று இப்போது பரவலாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

மேலும்:- http://www.tamiloosai.com/oosai.asp?id=3045&catID=0

ஜீவன்

Print this item