![]() |
|
பொன்விழா காணும் எங்கள் தலைவர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பொன்விழா காணும் எங்கள் தலைவர் (/showthread.php?tid=6479) |
பொன்விழா காணும் எங்கள் தலைவர் - kavithan - 11-09-2004 <img src='http://kavithan.yarl.net/kavithan_pic/ponvizakaanum_em_thalivar-thumb.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:30pt;line-height:100%'><b>பொன்விழா காணும் எங்கள் தலைவர் திரு வே.பிரபாகரன்</b></span> <span style='font-size:23pt;line-height:100%'> பொன்விழா காணும் பொங்கும் தமிழரின் தலைவா..! தமிழீழ தேசத்தின் விடியலுக்காய் தெய்வ மகன் நீ வல்வையில் பிறந்து சொந்தங்களை துறந்து பாசத்தை மறந்து தன்னிகரற்ற போராட்டத்தை தன்னலம் இன்றி ஏறத்தாழ முப்பத்து மூன்று வருடங்களாக முழுமூச்சாக முன்வைத்த காலை தவளை பாயச்சலாய் முன்னேறி பாய்தலாய் ஓயாத அலைகளாய் ஓய்வின்றி நிகழ்த்தி ஓங்கார வேலானாய் எம் ஒரே தலைவானாய் எல்லோர் மனதிலும் எல்லோர் உருவிலும் எல்லோர் வீட்டிலும் நீ இருக்கிறாய். அன்று விதியை வென்று நீ \"புதிய தமிழ் புலிகளுக்கு\" தலைவனானாய் இன்று சதியை வென்று நீ உலகத்தமிழருக்கே தலைவனாய் மிளிர்கிறாய். போர்க்கள சாதனைகள் பல புரிந்தாய் பல போரியல் தந்திரோபாயங்களை மாற்றி அமைத்தாய் புதிய புதிய உத்திகளை போரில் புகுத்தினாய். பக்கம் பக்காமய் பகட்டுக்கு அறிக்கை விட்டு அப்பாவி மக்களை ஏமாற்றும் பல தலைவர்கள் அரசியல் வாதிகள் ஆழும் கட்சிகள் எதிர் கட்சிகள் உலக நாடுகள் புல்லுருவிகள் என எல்லோருமே உன் ஓர் உரைக்காக தவிப்பார்களே..! அந் நாள்..... எம் மக்கள் உன்னுரை கேட்டு பொங்கி எழுவார்களே..! அந் நாள்.... எல்லையில் நிக்கும் இராணுவமும் ஊரில் உலாவும் இராணுவமும் எப்போது உன்னுரை முழங்கும் எப்போது எமக்கு அடிவிழும் என தம்முயிரை கையில் பிடித்தபடி நடு நடுங்க காத்திருப்பார்களே அந்நாள்.... ஆமாம் ஆண்டுக்கு ஒரு முறை அமைதியாக அடக்கமாக ஆனால் அதிகாரத்தோடு உரை நிகழ்த்தி உலகையே ஒருகணம் உன்னை நோக்கி திரும்பவைக்கும் அந் நாள் உன் பிறந்தநாள் அது தமிழினத்தின் சுதந்திர நாள்.</span> [b]<span style='font-size:30pt;line-height:100%'>தலைவா நீ எட்டபோகும் ஜம்பதாவது அகவைக்காய் இவ் வளரும் கவிஞ்ஞனால் முடிந்த ஒரு கவிதை. எங்கள் தலவராய் என்றும் நீங்கள் இருந்திட ஆசை அவ்வாசை நிறைவேற இறவனை பிரார்த்தித்து உங்களுக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் </span> கவிதன் 08/11/2004 7.20 மாலை http://kavithan.yarl.net/[/quote] - kuruvikal - 11-09-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/praba.jpg' border='0' alt='user posted image'> தமிழீழ தாயின் அருமை மைந்தனே எங்கள் அண்ணனே உன் பெருமை சொல்லி வாய் வீரம் வேண்டாம் எம் வாய் சொல்லாமலே உன் செயல் கண்டு உலகம் அறியும் உன் வீரம் செயலால் அன்றி வாயால் வீரம் அது உன் அகராதியில் இல்லை....! செய் அல்லது செத்துமடி அது போர்க்களத்திற்கல்ல வாழ்வுக்களத்திற்கும் பொருந்தும் அதுவே இளைஞர் எம் தாரக மந்திரம் தரமான மனிதராய் பூமிக்கு அணிகலனாய் வாழ்ந்திட...! எல்லோர் வீட்டிலும் மூத்த அண்ணன் நீ முன்னுதாரணமாய்... எங்கள் சுமை தாங்கும் சுமை தாங்கி நீ உன் கொள்கை சுமப்பதும் அதன் தர்மம் காப்பதும் எம் கடன்...! அகவை ஐம்பதுக்குள் அடியெடுத்து வைக்கும் குழந்தை நீ ஆம்.... உனக்குள் குழந்தையும் உண்டு குறும்பும் உண்டு சினந்தெழும் வேங்கையும் உண்டு அனைத்தும் கொண்டு தமிழர் தலை நிமிர வைத்த தாரகையே நீ விடியலின் தாரகையாய் தரணியில் பல்லாண்டுகள் மிளிர இறை ஆசி வேண்டி அன்புச் சகோதரங்கள் எம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...! - yarlmohan - 11-09-2004 வேறு வேறு பகுதிக்குள் இருந்தாலும் ஒரே விடயம் என்றபடியால் இக்கருத்து பூட்டப்படுகின்றது. வாழ்த்துக்கள் தெரிவிக்கவிரும்புவோர் இங்கே செல்லவும் http://www.yarl.com/forum/viewtopic.php?t=2097 |