| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 407 online users. » 0 Member(s) | 404 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,640
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,496
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| kavithai |
|
Posted by: shiyam - 11-17-2004, 01:36 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (20)
|
 |
உன்
கோவணம்
அவிழ்க்கபட்டதா
அவன்
கைகளை
வெட்டு
கெஞ்சிவாங்கி
கோவணம்
கட்டாதே
அம்மணமாகவே
போராடு
( காசிஅண்ணனின் நறுக்குகளில் இருந்து) தொடரும்....<b></b>
|
|
|
| Bushku valthukal |
|
Posted by: thaiman.ch - 11-17-2004, 11:44 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (5)
|
 |
சுவிசில் இருந்து வெளியாகும் ஒரு இலவசப்பத்திரிகையில் வெளியான செய்தியை படித்த பிறகு இதை எழுதுகிறேன்.
வணக்கம் ஜயா,
நீங்க பெரிய தொழில் அதிபர் என்டு எல்லாரும் சொல்றாங்க. நீங்க புஷ்க்கு வாழ்த்து தெரிவிச்சது நல்ல விஷயம். ஆனா அதுக்கு இவ்வளவு செலவு செய்திருக்றீங்ளே இது உங்களுக்கே கொஞ்சம் கேவலமா இல்ல? இன்டைக்கும் உங்கட நாடு வறுமைக்கோட்டின் கீழ் தான் ஜயா இருக்கு. நீங்க அத மறந்திருக்கலாம் ஆனா உங்கட நாட்டில உள்ள ஆயிரக்கணக்கில வறுமையில தவிக்கிற மக்கள் உங்கட கண்ணுக்கு தெரியாமல் போனது எனக்கு மன வேதனையா இருக்கு. புஷ் தேர்தல்ல வென்டா உங்கட நாட்டை பொருளாதார உச்சத்திற்கே கொண்டுபோகவாய்யா போறார்? உங்கட நாட்டுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்யலாம் அவங்க தாற அந்த பணம் உங்கட என்டு ஒரு தொழிலதிபரான உங்களுக்கு விளங்கவில்லையா? அவங்க உங்களுக்கு விற்கிற ஆயுதத்தின்ற லாபத்தில வாற ஒரு வீதத்தை அவங்க உங்களுக்கு நிதியா தாறாங்க. உங்கட இத்துப்போன மண்டைக்கு விளங்கிற மாதிரி சொல்லனும் என்டா, உங்கட பேர்சை அடிச்சு உங்களுக்கே நன்கொடை வழங்கிற மாதிரி.
நீங்க பண்ணின இந்த விளம்பரத்தின்ற செலவு, உங்கட நாட்டில வாழுற ஒரு சராசரி மனிதன்ற வருடாந்த வருமானத்தின் பத்து மடங்கு என்டு சொல்றாங்க. உங்கட நாட்டுக்கு இருக்கிற கடனை எப்படி அடைக்க போறம் என்டு உங்கட அரசாங்கம் மண்டைய போட்டு பிச்சுக்கொண்டிருக்கு. நீங்க என்னடா என்டா இன்னும் நடக்காத ஒரு விஷயத்துக்காக இவ்வளா செலவு பண்ணி இருக்றீங்களே. எவன்ற நாட்டுக்காக இவ்வளவு செலவு பண்ணுற நீங்க, ஏன் ஜயா உங்கட நாட்டுக்காக பண்றீங்க இல்லை? உங்கட நாடை விட உங்களுக்கு புஷ் முக்கியமா போய்டாரா?
உங்கள மாத்த முடியா என்டு எனக்கு நல்லா தெரியும். ஆனா இனி உங்கள மாதரி ஆக்கள் உருவாகக்கூடாது என்டு ஆசைப்படுறேன் ஜயா!
புஷ் ஆட்சிக்கு வந்த உங்களுக்கும், உங்கட நாட்டு பொருளாதாரத்துக்கும் என்ன பண்ண போறார் என்டு பொறுத்திருந்து தான் பாக்கனும்.
ஒரு வேளை புஷ் ஆட்சிக்கு வந்தா, அவர் ஆட்சிக்கு வாறதுக்கு நிங்க விளம்பரம் பண்ணி பணத்தை உங்கட நாட்டுக்கு நிதியா கூட வழங்கினாலும் வழங்குவார்.
உங்ட நாட்ட சேர்ந்த ஓராள ஈராக்கில கடத்தி வச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன். அவங்களை விடுதலை பண்ணச்சொல்லி ஈராக் பத்திரிகைகள்ள கொஞ்சம் விளம்பரம் பண்ணுவீங்களாய்யா?
|
|
|
| புலிகளுக்கு 2 வார கெடு ! |
|
Posted by: yarl - 11-17-2004, 11:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (22)
|
 |
அமைதி பேச்சு: புலிகளுக்கு சந்திரிகா 2 வார கெடு !
கொழும்பு:
இந்த மாத இறுதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவது குறித்து விடுதலைப் புலிகள் பதில் தர வேண்டும் என இலங்கை அதிபர் சந்திரிகா கெடு விதித்துள்ளார்.
இலங்கை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
பேச்சுவார்த்தைகளை ஏதாவது காரணம் சொல்லி புலிகள் தவிர்த்து வருகின்றனர். பிரச்சனையை பேசித் தீர்க்க முடியும் என அரசு நம்புகிறது. அவர்களுடன் அதிகாரப் பகிர்வுக்கும் தயார். பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தங்களது நிலையை அடிக்கடி மாற்றி வரும் புலிகள், பேச்சுவார்த்தைக்கு வராமல் தவிர்க்கின்றனர். எனது பதவிக் காலம் விரைவில் முடியப் போவதால், என்னுடன் பேசிப் பயனில்லை என புலிகள் கூறியுள்ளனர்.
அவர்கள் பேசுவது அரசாங்கத்துடன், தனிப்பட்ட நபரிடம் அல்ல.
இதனால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து இம் மாத இறுதிக்குள் (இரண்டு வாரத்தில்) புலிகள் தங்களது முடிவை தெரிவிக்க வேண்டும் என்றார் சந்திரிகா.
இந்தக் கெடுவை புலிகள் ஏற்காவிட்டால், என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து சந்திரிகா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
thatstamil.com
|
|
|
| Kadavul!!! |
|
Posted by: thaiman.ch - 11-17-2004, 10:42 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (21)
|
 |
எல்லா கடவுள் பக்கதா்களிற்கும் வணக்கம்.
கடவுள் இருக்கா இல்லையா என்பதை அதற்காக நாம் செய்கிற முட்டாள் தனாமான விடயங்களை நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கின்றது. இன்று வெளிநாடுகளில் கோயில் என்பது ஒரு வியாபார மையமாக மாறிவிட்டது. இதை யாராலும் மறுக்க முடியாது. சென்ற வருடம் சுவிசில் சுரிச் மாநிலத்தில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் நிா்வாகத்தினா்க்கும் பூசாரிக்கும் நடைபெற்ற தகராறு கைகலப்பில் முடிவடைந்தது. இது அனைத்தும் கோயிலிற்குள் நடைபெற்றது. இவ÷களா உண்மையான மத பக்கதா்கள்?
மதா, பிதா, குரு, தெய்வம் என்று எமது இந்து மதம் தானே வரிசைப்படுத்திக் காட்டுகிறது. மதா என்றால் எமது தாய். தாயும், தாய் நாடும் எனது பாா்வையில் ஒன்றே! முதலாவது இடத்தில் இருக்கும் தாயிற்கும், தாய் நாட்டிற்கும் பணி செய்வதில் எவா் இறைவனைக் காண்கிறாரோ அவரே உண்மையான மத பக்கதா். தெய்வம் என்பதை எமது இந்து மதம் நான்காவது இடத்தில் தானே வைத்துப்பாா்கிறது. இதற்கு முன் வரும் மதா, பிதா, குரு என்பனவற்றை நாங்கள் மறந்து விடுகிறோம்.
உலகயே காப்பவா் கடவுள் என்றால் ஏன் அந்த கடவுளை ஆலயங்களிற்குள் பூட்டி வைக்க வேண்டும்? திருட்டு போய்விடும் என்ற பயமா? உககையே காக்கின்ற கடவுளிற்கு தன்னை காக்க தெரியவில்லையா? தன்னையே காக்க முடியாத கடவுளா எங்களை காக்க போகிறாா்?
சரி அப்படியே இந்த கடவுள் தான் எம்மை படைத்தவா் என்று பாா்த்தால் அவா் ஏன் எங்களிற்கு கை, கால், அறிவு என்று வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் தர வேண்டும்? நாங்களாக சிந்தித்து, எங்களுடைய வாழ்க்கையை நாங்களே அமைப்ததற்காக இருக்கலாம் அல்லவா? ஆனால் நாங்கள் என்ன பண்ணுகிறோம்? மறுபடியும் போய் கடவுளிடமே நிற்கிறோம்.
எமது மதம் மாமிசம் சாப்பிடுவதை கண்டிக்கிறது. அப்படியானால் சிவபெருமான் எதற்காக புலித்தோலை அணிந்திருக்கிறாா்? இந்துக்களின் தேவார புத்தகத்திலயே உள்ளது புலித்தோலை தசைக்கரைத்தவனே என்று. சிவபெருமான் மிருகங்களை கொல்லாமா?
ஒரு ஆலய பூசகரிடம் போல் நீங்கள் இயேசுவையோ, அல்லாவையோ நம்புகிறீா்களா என்றால் அவா் இல்லை என்று தான் சொல்லுவாா். எமது மதம் வேறு எந்த மதமும் இருப்பதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவன் எந்த மதமுமே இல்லை என்று சொன்னால் அது தவறு?
மதத்தால் மனிதா்கள் அடித்து கொண்டு சாகாத வரைக்கும் எம் மதமும் சம்மதமே! இன்று எங்கே மனிதா்கள் மதத்தால் அமைதியாக வாழ்கிறாா்கள்?
வெளிநாட்டுகளில் இடம் வாங்கி கோயில்கள் அமைக்கும் அடி முட்டாள்களிற்கு என் அறிவிப்பு. நீங்கள் அமைக்கின்ற இந்த கோயில்களை உங்களிற்கு பிறகு தொடா்ந்து நடத்துவதற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல! நீங்கள் உண்மையிலயே எமது மதத்தை நேசித்தால் தாயகத்தில் இன்றும் எத்தனையோ ஆலயங்கள் போரினால் பாதிக்கப்பட்டு புனரமைக்க வேண்டியுள்ளது. அதை நீங்கள் செய்யுங்கள் நாங்களும் தோள் கொடுப்போம்.
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே!
|
|
|
| அடிக்கடி வரும் மின்னஞ்சல் உங்களுக்கு சோர்வைத்தருகிறதா? |
|
Posted by: Nada - 11-16-2004, 07:58 PM - Forum: கணினி
- Replies (7)
|
 |
அடிக்கடி வரும் மின்னஞ்சல் உங்களுக்கு சோர்வைத்தருகிறதா? அவைகளை பார்க்கும்போது உங்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறதா? அப்படியானால் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களும் மற்றவைக்கும் அதே பிரச்சனையை ஏற்படுத்துமல்லவா?
உங்கள் மின்னஞ்சல்களை விரும்பத்தக்கதாக மாற்றுவதற்கு பின்னணிப்படங்கள் அனிமேசன்கள் ஒலி முதலியவற்றை சுலபமாக இணைத்து அனுப்ப விரும்புகிறீர்களா?
உங்கள் வேலையை சுலபமாக்குவதற்கு incredimail மின்னஞ்சல் உதவிசெய்கிறது இதை பதிவிறக்கம் செய்து கணனியில் பதிவுசெய்தால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிமுதலியவற்றை தானாகப்பெற்று செய்துவிடுகிறது.
www.incredimail
|
|
|
| "கரங் கொடுப்போம்" |
|
Posted by: Nellaiyan - 11-16-2004, 04:11 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (2)
|
 |
ஈழத் தமிழ்த் தேசியத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் திட்டமிட்ட முறையில் பேரினவாதிகளால் அழிக்கப்பட்டு வருகின்றது. இப்படி அருகிவரும் கலைகளில் ஈழத்து பழமை வாய்ந்த வடமோடி நாடகக் கூத்துமொன்றாகும். ஈழத்துக் கிராமியக் கலைகளின் கானகமாக திகழும் தென் தமிழீழத்தில் இன்று அருகி அழிந்துவரும் இவ்வடமோடிக் கூத்தானது போர், பொருளாதாரம் போன்ற பல காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளித் தினத்தன்று ரி.ரி.என் தொலைக்காட்சியில், இன்னும் இந்தக் கலை அழிந்துவிடக் கூடாது என்று தனது வாழ்வையே அர்ப்பணித்துள்ள திருமதி சிவகாமி முருகமூர்த்தி என்ற சகோதரியின் பேட்டி ஒலிபரப்பப்பட்ட்து. தனது கணவரால் ஆடப்பட்டு வந்த இக்கலையை, அவரின் இளப்பிற்குப் பின் தனது இரு மகன்களோடு, தனது சிறு வருமானத்தையுமே இக்கலையை வளர்ப்பதற்காக உழைப்பதானது "நமது மண்ணைக் காக்க கையில் ஆயுதம் ஏந்திய போராளியின் உணர்வுகளுக்கு சமமானது".
புலத்தில் எம்மவர்கள் இந்திய சினிமா மோகத்தில், அவர்களது தரமான படைப்புகள் என்றால் வரவேற்போம், ஊக்குவிப்போம் அதை விடுத்து தரமற்ற குப்பை, கூழாங்களுக்குக் கூட கோடிக்கணக்கில் முதலிட்டு, எம் பணத்தை விரயமாக்குகிறார்கள் என்பதைவிட கலை, கலாச்சார, சமூக சீரளிவுகளையும் ஊக்குவிக்கிறார்கள். ஆனால் எம்மவர்களின் கலைகளை ஊக்குவிக்க இவர்கள் செய்தது என்ன?
70துகளில் கொடிகட்டிப் பறந்த, இன்றும் நம்மவர்களால் வரவேற்கப்படும் ஈழத்துப் பொப்பிசை! எமது பழப்பெரும் நாடகக் கலைகள்(காத்தன் கூத்து, வடமோடிக் கூத்து, ...)! தெருக்கூத்துக்கள்! ....... இல்லை ஈழத்து விடுதலை எழுச்சி கீதங்கள்! ஏதாவது ஒன்றின் வளர்ச்சிக்கேதும் உதவீனீர்களா?
தயவு செய்து இந்திய தமிழ் சீரளிவுக் குப்பைகளுக்கு கொட்டப்படும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியையேனும் திருமதி சிவகாமி முருகமூர்த்தி போன்றோருக்கு கைகொடுத்து உதவுங்கள்.
|
|
|
|