Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 224 online users.
» 0 Member(s) | 221 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,496
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  படித்ததில் ரசித்தது
Posted by: ரவி - 11-19-2004, 07:53 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (23)

<span style='font-size:25pt;line-height:100%'>படித்ததில் ரசித்தது </span>

சிகரங்களை நோக்கி படைப்பில்
ஓவியா திருஞானம்
<span style='font-size:25pt;line-height:100%'>காதல்!!!!!!. </span>

அவன் அவசரமாய் ரோஜாவை நீட்டி Ôஐ லவ் யூÕ என்றான்.

அவளுக்கு அதிலொன்றும் அதிர்ச்சியில்லை.

நதி வந்து கலப்பதால் கடல் ஒன்றும் கைதட்டிக்கொள்வதில்லை; கண்டனம் தெரிவிப்பதுமில்லை. நீட்டிய ரோஜாவை நிதானமாய் வாங்கிக்கொண்டு Ôநன்றிÕ என்றாள்.

அதிர்ச்சி அவனுக்குத்தான்.

அவள் முகத்தில் ஒரு வெட்க வெயில் அடிக்காதது கண்டுஇ அவன் இருண்டு போனான்.

ÔÔநீ.... நீ... நீயும்தானே? என்று தப்புத் தப்பாய்த் தந்தியடித்தான்.

அவள் சிரித்தாள்; நீளமாய்ச் சிரித்தாள்.

அந்த சப்த அலைகள் அவன்மீது சாட்டை சொடுக்கின.

ÔÔஏன்? ஏன் சிரிக்கிறாய்? நான் சொல்வது உனக்குப் புதிதாய் இருக்கிறதா?ÕÕ

இல்லை! புதியதில்லை! அதுதான் சிரிக்கிறேன்

ÔÔபுரியவில்லை?

ÔÔஎன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன ஆட்களின் வரிசையில்இ நீங்கள் கடைசியில் நிற்கிறீர்கள். ஐ லவ் யூ என்ற வார்த்தை ஒன்றுதான்! வாய்களே வேறு வேறு!ÕÕ.

ÔÔஏன்? காதல் என்ற தத்துவத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையா?

தகராறு தத்துவத்தோடு அல்ல; தலைமுறையோடு!


இந்தத் தலைமுறைக்குக் காதலிக்கத் தெரியவில்லை; காரணம்இ காதலென்றால் என்னவென்றே தெரியவில்லை.

சிகைக்காய் என்பது சீயக்காய் என்று திரிந்தது மாதிரிஇ காதல் என்ற புனிதமான பதமும் பொருள் புரண்டுவிட்டது.

ÔÔகாதல் என்பதன் புரளாத பொருள் யாது?ÕÕ

ÔÔகாதலை வெறும் தத்துவமாகப் பார்க்கிற கூட்டம்இ அதை உள்ளம் சார்ந்ததென்றே உணர்த்துகிறது. காதலை ஒரு தாகமாகப் பார்க்கிற கூட்டம்இ அதை உடல் சார்ந்ததாகவே உணர்கிறது. ஆனால்இ உண்மையில் காதல் என்பது பாச உணர்ச்சியும்இ பாலுணர்ச்சியும் பின்னிப்பின்னி ஜடை போட்டுக்கொள்கிற சம்பவம். பாச உணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு பிராணி போதும்; பாலுணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள் போதும். ஆனால்இ இந்த இரண்டும் எந்தப் புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனவோஇ அந்தப் புள்ளிதான் காதல். இப்போது சொல்லுங்கள்இ நீங்கள் எந்தப் புள்ளியில் நிற்கிறீர்கள்?

Print this item

  ஜெயேந்திரரை ஜெயிலில் சந்தித்த 3 மர்ம மனிதர்கள்
Posted by: ஜீவன் - 11-19-2004, 03:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

http://www.tamiloosai.com/oosai.asp?id=3186&catID=0

ஜீவன்

Print this item

  W32.Sober.I@mm - புதிய வைரஸ்
Posted by: yarlmohan - 11-19-2004, 03:20 PM - Forum: கணினி - Replies (10)

W32.Sober.I@mm எனும் வைரஸ் மின்னஞ்சல் மூலம் பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை இங்கு பார்க்கலாம். http://securityresponse.symantec.com/avcen...sober.i@mm.html

Print this item

  New Entertainment
Posted by: colombo - 11-19-2004, 03:09 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - No Replies

Attahasam Movie Comming Soon
www.desitamil.com
thankyou

Print this item

  உங்கல் கருத்துகள்
Posted by: sethu - 11-19-2004, 01:19 PM - Forum: புலம் - Replies (18)

உங்கல் கருத்துகள் உடன் இங்கு ஆங்கிலத்தில் எளுதுங்கள்.

http://tamilfriends.dk/forside/index.php?o...task=view&id=45

Print this item

  அழிந்துபோகும் ஒரு துரோகியின் கனவு
Posted by: Suji - 11-19-2004, 01:18 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

அழிந்துபோகும் ஒரு துரோகியின் கனவு


கேணல்
ஜ கனா. சிவகுமார் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2004, 10:36 ஈழம் ஸ
சிறீலங்கா சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அக்கறையுள்ளோரால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட விடயமான கருணாவின் அரசியற் பிரவேசம் என்பது தோல்வியைத் தழுவி வருவதாக இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளிற்கான தலைமையதிகாரியாக இருந்த கேணல் ஹரிகரன் அவர்களினால் தெரிவி;க்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் பிரபல்யமான ஆய்வுமையமொன்றிற்கான தனது ஆய்வறிக்கையில் மேற்படி கருத்தை வலியுறுத்தி பல ஆதாரச் சான்றுகளைத் தெரிவித்துள்ள கேணல் ஆர். ஹரிகரன் அவர்கள், கருணா புதுக்கட்சி தொடங்குவதற்கான சாண்றுகள் அரிதாகவே தெரிவதாகவும், கருணா ஈ.பி.டி.பியுடன் இணைந்தே செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்திப்பதைக் காணக்கூடியதாகவும் தெரிவித்துள்ளதோடு,

ஈ.பி.டி.பி தற்போதே இராணுவத்துடன் சேர்ந்து வட-கிழக்கில் இயங்கும் ஒரு ஆயுதக்குழுவென்றும், இவ்வாறான ஆயுதக்குழுக்களிற்கு ஏற்படும் மரணங்கள் ~இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஒருவர் கொல்லப்பட்டார்| என அல்லது |இராணுவத்தின் முகவர் (ஏஐன்ட்) கொல்லப்பட்டார்| என்றுமே இலங்கையில் நோக்கப்படுவதாகவும் கருணாவினை ஆதரிப்போர் மரணங்களும் மேற்கண்டவாறே நோக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதோடு,

கிழக்கிலும் கல்முனை வரையான கரையோரங்களையும், உள்நிலங்களையும் விடுதலைப்புலிகளில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும், தொப்பிக்கல மற்றும் அரலங்கன்வில்ல - மகா ஓயா பகுதிகளிலிருந்தே கருணாவிற்கு ஆதரவானோர் செயற்படுவதாகவும் இவ்வாறான நிலையில் கருணா புதுக்கட்சி தொடங்குவது பற்றியும் அரசியலிற்குள் பிரவேசிப்பது பற்றியும் வெளிவந்துள்ள செய்திகள் கருணா தோல்வியைத் தழுவி வருவதையே காட்டுவதாகவும் கூறியுள்ளதோடு,

கருணா அரசியலிற்குள் பிரவேசிக்கும் தகுதிகளையோ வசீகரத்தையோ கொண்டிருக்கவில்லையென்றும், ஒரு கெரில்லா போராளிக்கான தகுதியே கருணாவிற்கான பிரபல்யத்தைக் கொடுத்திருந்தது என்றும் தெரிவித்துள்ளதோடு, கருணா விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிவதற்காகக் கையாண்ட விடயங்கள் மக்கள் மத்தியில் விலைபோகும் விடயங்களல்ல என்பதையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

பிரதேசவாதத்தை ஏற்படுத்துவது மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவரைப் பற்றிய அவதூற்றுப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று கருணா கையாண்ட இரண்டு விடயங்களும் மக்களிடம் செல்லுபடியாகாத, கருணாவிற்கு பாதகமான விடயங்களாக அமைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ள முன்னைநாள் புலனாய்வுத்துறைத் தலைவரான கேணல். ஆர். ஹரிகரன், விடுதலைப்புலிகளே தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒருங்கிணைத்து அதனை உலகமயப்படுத்தினார்கள் என்பதே யதார்த்தமாக இருக்கிறது என்றும்,

பிரபாகரனி;ன் குரலாக அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் போன்றோர் நாடுகளின் தலைவர்களையும் சர்வதேச இராஐதந்திரிகளையும் சந்தித்து உறவுகளை வலுப்படுத்தியுள்ளது போன்ற நிலையை இதற்கான உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளதோடு,

|இவ்வளவு நாளும் நடைபெற்றது விடுதலைப்போராட்டமேயல்ல| எனக் கருணா கூறுவதும், |பிரபாகரனிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்கவே போராடாப்போவதாக| கருணா கூறுவதும் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது எனவும் தெரிவித்துள்ளதோடு, கிழக்கு மக்களே கருணா தங்களின் போராளியாகப் பார்க்காது, பயத்துடனும் கிலியுடனும் தற்போது பார்ப்பதே இதற்கு உதாரணம் என்றும்,

அத்தோடு ஆயுதங்களை நம்பி இருப்பது மட்டுமே கருணாவுக்கு உள்ள தெரிவு என்றும் அவர் அதைவிடுத்து அரசியல்வாதியாக மாறி மக்களின் ஆதரவை பெறுவது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளதோடு பிரதேசவாதத்தை வைத்து கிழக்கில் தனது அரசியலாசையை கருணா வளர்க்க முயன்றால் அதனை ஆயுதபாணிகளாக இருந்து கொண்டே செய்யலாம் எனவும் இது கருணாவின் ஆசையை இரட்டடிப்புச் சிக்கலாக்கும் விடயம் என்றும் தெரிவித்துள்ளதோடு,

கருணா அரசியல் தலைமையை அடையமுடியாததற்கான காரணமாக தமிழர்களினது ஆதரவைப் பெறமுடியாமை மற்றும் சிறீலங்காவின் பெரும்பாண்மை அரசியற்கட்சிகளினதும் ஒத்துழைப்பை அல்லது நேரடி ஆதரவை பெறமுடியாத நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையிலேயே ஈ.என்.டி.எல்.எப் என்ற தமிழ்மக்களிடம் ஆதரவில்லாத ஒரு அமைப்பின் மூலமாகப் பிரவேசிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளதோடு,

அத்தோடு கிழக்கை எடுத்துக் கொண்டால் முஸ்லீம்களின் ஆதரவைப் பெறுவது கடிணமான விடயம் என்றும் முஸ்லீம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் கூட, சமாதானப் பேச்சுக்களில் தங்களின் பங்கைப் பற்றிய அக்கறை கொண்டுள்ள இந்நேரத்தில் முஸ்லீம் கட்சிகள் எதுவும் கருணாவிற்கான ஆதரவைத் தெரிவித்து புலிகளைப் பகைக்கமாட்டா எனவும்,

நிதிவளத்தைத் தொடர்ச்சியாகப் பெறுதல் மற்றும் அரசியற்கட்சிக்கான படிமுறைகளை வடிவமைக்கும் வல்லமை கருணாவிடம் இல்லையென்றும் ஆயுதங்களைக் கைவிட முடியாத ஒருவராகவே கருணா இருக்க வேண்டிய நிலையை விடுதலைப்புலிகள் அவருக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்நிலையில் கருணா தோல்வியையே நோக்கிச் செல்வதாகவும், கருணாவின் பிரச்சினைக்கும் விடுதலைப்புலிகள் தங்களின் துரோகிகளிற்கு |இறுதிமுடிவு எடுக்கும்| நிலையே சாத்தியப்படலாம் என்று கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாதம் இணையத்திலருந்து வெட்டப்பட்டது. நன்றி தமிழ்நாதம்

Print this item

  காலம் பதில் சொல்லுமுங்கோ
Posted by: ratha - 11-19-2004, 01:17 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

காலம் பதில் சொல்லுமுங்கோ!

நாமும் செய்வோமுங்கோ
நாலும் நலலதே செய்வோமுங்கோ
நாளுமஞ்சும் எழுதாம நல்லதா
நாமும் செய்வோமுங்கோ
எனனத்தைய வெதச்சாலுமுங்கோ
காலமுங்கோ காலம் அதுதானுங்கோ
<span style='font-size:30pt;line-height:100%'>பதில் சொல்லுமுங்கோ!</span>

Print this item

  கோவம்
Posted by: sWEEtmICHe - 11-19-2004, 01:15 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

<img src='http://images.indiaglitz.com/tamil/gallery/Actress/Boomika/boomika_11.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'><b>கோவம்</b>

[size=15]மனசுக்குள் இருக்கும் ஒரு நோய் நீ தான்னு
ஏன் இன்று வந்து என்னை துன் புறத்துகிறாய்...
தூர போய் விடு .....
நான் உறங்கி ரொம்ப நாளாகிவிட்டது
புயல் காற்று போல் அடிதாய் என்னை....
இன்னும்மா உன் தாகம் அடங்கவில்லை?..<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b>இது MCgal(சுவிற்மிச்சி) எழுதிய கவிதை</b></span>

Print this item

  'வாட்டும் நினைவுகள்!!'
Posted by: sWEEtmICHe - 11-19-2004, 12:51 PM - Forum: கவிதை/பாடல் - No Replies

<img src='http://images.indiaglitz.com/tamil/gallery/Actress/Boomika/bhoomika1.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'><b> 'வாட்டும் நினைவுகள்!!' </b>

[size=15]காதல் தரும் இன்பம் இன்று வாடியது
வருமா... உதடு பேசினால்?
கண்ணும் கண்ணும் மோதிய நாட்களெங்கே?
உடைந்துவிட்டது... கண்ணாடியைப்போல்
ஆசை நினைவுகள் என்னை வாட்டுதே... நினைவாலே!!<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b>இது MCgaL(சுவிற்மிச்சி) எழுதிய கவிதை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b> </span>

Print this item

  புலிகளின் குரல் வானொலி இணையத் தளத்திலும்....
Posted by: Nitharsan - 11-19-2004, 06:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (9)

தமிழீழத்தின் தேசியக் குரலாக ஒலித்துவரும், புலிகளின் குரல் வானொலி21.11.2004 அன்று 14 ஆண்டு கால சேவையை நிறைவு செய்து 15ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக தாயக வானலைகளில் சவால்களுக்கு மத்தியில் ஒலித்துவரும் புலிகளின் குரல் வானொலி புதிய ஆண்டில் இணையத் தளத்திலும் வலம் வரவுள்ளது.
www.pulikalinkural.comஎன்ற இணையத்தள முகவரி ஊடாக புலிகளின் குரலை கேட்கலாம் என்பதை மகிழ்வுடன் புலிகளின் குரல் வானொலியினர் அறியத் தருகிறார்கள்.
<img src='http://www.freewebs.com/vannithendralnet/pulikalinkural.jpg' border='0' alt='user posted image'>
Nesamudan Nitharsan-

Print this item