| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 224 online users. » 0 Member(s) | 221 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,496
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| dvd இல் நல்ல தரம் கிடைக்குமா? |
|
Posted by: sayanthan - 11-21-2004, 12:41 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம்
- Replies (13)
|
 |
வணக்கம். என்னுடைய டிஜிற்றல் கமெராவிலிருந்து வீடியோவினை கணணிக்குள் கொண்டு வரவேண்டுமென்ற ரொம்ப நாள் ஆசையை இன்று நிறைவேற்றினேன். i-ling ஊடாக கணணிக்குள் ஏற்றிய வீடியோ கணணியில் மிகச் சிறந்த தரத்தில் avi format இல் கணணியில் அது இருக்கிறது. இப்போது அதனை cd இல் வெளி கொண்டு வர வேண்டும். என்னிடம் dvd writter கிடையாது. சாதாரணமாக vcd இல் கொண்டு வந்தேன். தரமிழந்து வந்தது அது. கணணிக்குள் சேமித்த தரம் அதில் இல்லை.
dvd writter ஒன்றை காசு கொடுத்து வாங்கி அதனை dvd ஆக்கினால் நல்ல தரம் வருமா? வராதென்றால் சொல்லுங்கப்பா.. வாங்காமல் விடுவதற்கு!
vcd இல் பெட்டி பெட்டியாக வருகிறது..
|
|
|
| போராடும் பூமிக்கெல்லாம் பாலஸ்தீனம் ஒரு பாடம் |
|
Posted by: shanmuhi - 11-20-2004, 11:24 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
<b>போராடும் பூமிக்கெல்லாம் பாலஸ்தீனம் ஒரு பாடம்.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -</b>
போர் வடுதாங்கிய பூமியின்
பொற்காலம் பிறப்பதற்காய்
போராளியானவரே !
உரிமைக்குப் போராடும்
உலக இனத்துக்கெல்லாம்
இலக்கணம் வகுத்த பெருமானே !
சாவுகளின் மத்தியில் நின்று
சரித்திரம் எழுதவந்த சத்தியனே !
காவிகளின் ஆவிகளின்
மூச்சுன் நாசிதொடமுன்னர் - உன்
மூச்சே பாலஸ்தீன விடுதலைதான்.
சமாதான து}தர்களின்
சாணக்கியம் சபையேற - நீ
போர் தந்தோர் வாசலெங்கும்
போய் வந்து கைலாகு கொடுத்து
பாலஸ்தீனர் விடுதலையில் பாசமுடன்தானே
பாரெங்கும் போய் வந்தாய்.
'சமாதானம்"
அழிபடுவோர் தெருவிறங்கி
ஆழ்வோர் வாயுரைக்கும்
உக்கிப்போன வார்த்தையிந்தச் சமாதானம்.
உலகில் விடுதலைக்காய் ஏங்குவோரின்
உறுதிமொழி போராட்டம்.
இது புரியா நிலையில்லை.....
புரியாத மாதிரியாய்....
சுயநலங்கள் செய்த வினை.....
போராடும் பூமியெல்லாம்
ஈடாடும் படியாய்த்தான்
இவர்கள் வருகை.....
புரிந்தோர் மட்டும்
புத்தியுடன் தப்பிவிட
இல்லாது இழுபடுவோர்
நிலை இப்படித்தான்.
பரிசு தந்து கௌரவித்து - உம்
போராடும் பலத்தையெல்லாம்
பலியெடுத்தார் வெற்றிபெற....
போய்விட்டீர் ஐய ,
உம் பயணம் முடிவாகி.....
போராடும் இனமாக பாலஸ்தீனர்
இன்னும் விடுதலையே இல்லாமல்.....
யாருந்தன் வழிநின்று போர் முடித்து
விடுதலையின் பொருளுணர்த்தி
பாலஸ்தீனரை மீட்கப் புதிதாய் எழுவாரோ ?
புரியா விடையாக.....உம் பூமி.....
சதிகாரர் வலைதன்னில் செத்துப் போய்....
விடியலில்லா இனமாக
வல்லவர்கள் வருகைகளில்
விடுதலையின் கனவு காணும்
போராடும் பூமிக்கெல்லாம்
பாலஸ்தீனம் ஒரு பாடம்.
17.11.04
|
|
|
| மிச்சமில்லை |
|
Posted by: ratha - 11-20-2004, 02:49 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
மிச்சமில்லை!
வாழ்வென்று வந்தவரெல்லாம்
வீழ்ந்திடவோ?
வாழ்வின் காலங்களைத்தான் யாரறிவாரோ?
நாமும் வாழ்வோம்.மற்றவரையும் வாழவிடுவோம்!!!
உச்சம் தொடும்வரை அச்சமில்லை...
மிச்சமின்றி கொண்டு போகவோ ஒன்றுமில்லை...போனபின் ஏதும் ..மிச்சமில்லை
|
|
|
| காதல் கண்ணிவெடி....! |
|
Posted by: kuruvikal - 11-20-2004, 01:13 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (20)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/wishes.jpg' border='0' alt='user posted image'>
<b>மனதோடு ஒரு வாசம்
விலக மறுக்கும் வாசம்
தந்தது மலர்...!
தாமதம் ஏன்....
மலரோடு மனம்
வாசத்தால் வந்தது பாசம்....
பாசம் மெய்
பாதை தெளிவு
பயணம் மட்டும்
தனிமையில்.......
கொத்தோடு தந்தது கையோடு
கையோடு கை எப்போது...???!
கேட்டுவிட்டுக் காத்திருந்தேன்
மீண்டும் ஒரு கொத்து....
நன்றி சொல்லி மலர்...!
மனதோடு...
மலர்ந்தது வாடியது
மலருக்கு வண்டோடு வாழ்வாம்
மனதின்றி வாழ்த்தி முடிய
மனசு ஒடிந்தது
கூட மலரும் வீழ்ந்தது
இதயத்தில் முள்ளாய்...!
வலி ஓயாதது
ரணம் மாறாதது
மரணம் கூடத் தீர்வில்லை
மறுபிறவி வரை அது தொடர்வதால்....!
மீண்டும் இப்பிறவியில்...
வாழ்வில் வசந்தம் தேட
வந்த வாசத்தோடு
மனதோடு மலர்
இன்னும் விடையில்லை...
அதே வலி அதே ரணம்
பழையதே தீரவில்லை....!
மீண்டும் துரோகம்.......????!
நினைவே கொல்லுது....
வேண்டாம் எனி
வாழ்வில் ஒரு
காதல் கண்ணிவெடி....!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
| தகவலை தந்திட டென்மார்க் கவலை |
|
Posted by: Jaya - 11-20-2004, 02:18 AM - Forum: புலம்
- Replies (1)
|
 |
அண்மையில் இலங்கை வந்த இரண்டு டென்மார்க்நாட்டுப் பிரசைகள்(தமிழர்கள்) புலிகளால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தியை டென்மார்க்கில் உள்ள ஊடகங்கள் வெளியிட்டதை அறிந்தேன்.
டென்மார்க்கில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் அமைப்பு ஒன்று இப்படியான தகவல்களை தருகின்றது என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகள் தங்களின் சீறல் பற்றியும் கழுகைப்பார்த்து நக்கல் அடிப்பதும் டென்மார்க் அரசிற்கென்ன தெரியவா போகின்றது.
ஆகவே பரமனின் கழுத்தை விட்டு சொந்த மண்ணில் ஓடவேண்டியும் வரும் என்று இந்த நச்சுப்பாம்புகளின் மண்டைகளில் ஏன் ஏறுவதில்லையோ தெரியவில்லை.
இது பற்றி எழுதுங்கள்
அன்புடன் Jaya
|
|
|
| கிழக்கில் தொடங்கியது வடக்கிலும் ...? |
|
Posted by: cannon - 11-19-2004, 10:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (22)
|
 |
Quote:வல்வெட்டித்துறையில் இரு இளைஞர் கொலை, நகரில் பெரும் பதட்டம்
ஜ யாழ் நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2004, 19:26 ஈழம் ஸ
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையி;ல் இன்று மாலை 6.00 மணியளவில் உந்துருளியில் வந்தவர்களால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்னுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லு}ரி மைதானத்தில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது தலைக் கவசம் மற்றும் ஜாக்கட் அணிந்த இருவர் உந்துருளியி;ல் வேகமாக வந்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு ஆதிகோவிலடிப் பக்கமாகத் தப்பியோடித் தலைமறைவாகிவிட்டனர்.
இத்துப்பாக்கிச் சூட்டில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்து 21 வயதுடைய சதாசிவம் குமரன், 21 வயதான இராசேந்திரம் சுரேஸ்குமார் ஆகியோர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இதேவேளை 34 வயதான பொன்னுத்துரை தெய்வேந்திரம் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிதாரிகள் தங்களை அடையாளம் காட்டாதவாறு மழைக் கோட்டு அணிந்திருந்தார்கள் என்றும், தொண்டமானாறு பக்கமாக இருந்து வந்த மேற்படி மோட்டார் சைக்கிள் குறிப்பிட்ட இடத்தில் வேகம் குறைக்கப்பட்ட போது அதில் பின்னாலிருந்தவர் கண்மூடித்தனமான முறையில் துப்பாக்கிப் பிரயோகத்தை செய்ததாக இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து இராணுவமும் பொலிசாரும் வீதித் தடைகளை ஏற்படுத்தி சுற்றி வளைப்பு தேடுதல்களை மேற் கொண்ட போதிலும் எவரும் கைதாகவில்லை.
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் அவரது 50 வது பிறந்த தினத்தை எதிர் வரும் 26ம் திகதி வெகு விமரிசையான முறையில் கொண்டாடுவதற்கு அப் பகுதி மக்கள் தயாராகி வரும் நேரத்தில் இடம் பெற்ற இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறைப் பகுதியில் பெரும் பதட்ட நிலை காணப்படுகின்றது.
நன்றி புதினம்
யுத்த நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட உடனேயே தென் தமிழீழத்தில் ஸ்திரத் தன்மையைக் குலைப்பதற்காக இலங்கைப் படைகள், புலனாய்வுத்துறையினர், தமிழ்த் துரோகக் கும்பல்கள், முஸ்லீம் குழப்பவாதிகள் என்ற பெரும் கூட்டின் கைங்கரியங்கள் தொடக்கிவிடப்பட்டிருந்தன.பின்னர் இக்கூட்டுடன் சேர்ந்த துரோகி கருணாவின் செயற்பாடுகளும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல், மிரட்டல்கள் என எல்லையற்று சென்று கொண்டிருந்தது. இச்சதிக் கூட்டின் செயல்களில் பாதிக்கப்படாதவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் தென் தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக இவர்களின் செயற்பாடுகல் ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சதிக் கூட்டினால் இதைத் திசை திருப்பும் முயற்சிகள் வடக்கில் சில காலங்களாக தொடங்கி இருப்பதற்கான சம்பவங்கள் நடைபெற்று வந்தன. .... மன்னாரில் விடுதலைப் புலிகளின் அலுவலகம் தீக்கிரை, யாழ் நகரில் இளைஞர்கள் மீதான தாக்குதல்கள், வவுனியாவில் ஆட்கடத்தல்கள், இரானுவ வாகனங்களினால் மோதப்பட்டு கொல்லப்படுவது, ... என்று அதிகரித்துப் போனதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் துரோகிகளினால் நடாத்தப்படும் இணையத்தளமொன்றில் துரோகி கருணாவின் செயற்பாடுகள் வடக்கிலுமென்று செய்தி போடப்பட்டதாவது, இவையெல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் எமது அயல் நாடானது தனது புலனாய்வு எனும் பெயரில் பத்துக் கோடி இந்திய ரூபாக்களை ஈ.பிடி.பி மூலம் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சதிச் செயல்களுக்கு ஒதுக்கியதையும் இக்கூட்டுச் சதியினை வளர்ப்பதின் ஓரங்கமே.
இச்சதிக் கூட்டின் செயல்களின் ஒரங்கமே இன்றைய வல்வெட்டித்துறைப் படுகொலை!
இது வடக்கின் ஏனைய பகுதிகளுக்கும் படரத்தான் போகின்றது. இதைத் தொடர அனுமதிக்க வேண்டுமா? இப்படுகொலையானது வடக்கில் எச்சம் சொச்சமாக எஞ்சியிருக்கும் துரோகக் கும்பல்களைக் கொண்டே நடாத்தப்பட்டிருக்க வேண்டுமென்பது வெளிப்படையான உண்மையாகும். ஏற்கனவே சமூகச் சீர்கேடுகளில் ஈடுபட்டுவந்த இக் கும்பல்கள், இன்று ஒருபடி மேல்நோக்கி சென்றுள்ளன. இவர்களை நீண்ட காலத்துக்கு விட்டு வைத்தால் தேசியத்துக்கே சாவு மணியடிப்பதாக முடிந்துவிடும். சர்வதேச அபிப்பிராயம், ஜனநாயகமரபு எல்லாவற்றையும் ஒரு மூலையில் கட்டி வைத்து விட்டு, எம்மினத்தின் இந் நச்சுக் களைகளை உடணடியாக வேரோடு அகற்றப்பட வேண்டும்.
|
|
|
| உதவி...! |
|
Posted by: tamilini - 11-19-2004, 10:08 PM - Forum: கணினி
- Replies (78)
|
 |
நல்ல விதமான தமிழ் எழுத்துருக்கள் எங்கு பெறலாம்..?? யாருக்கும் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கோ புண்ணியமாய் போகும்...!
அதோட பாரதியார் கவிதைகளும் எங்கையாவது இணையத்தில பெறலாம் என்றால் சொல்லுங்கள்...!
|
|
|
|