| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 388 online users. » 0 Member(s) | 386 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,189
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,182
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,577
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,575
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,003
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,081
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,970
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232
|
|
|
| கட்டாரில் நடந்தது என்ன? |
|
Posted by: வினித் - 03-05-2006, 03:18 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'>கட்டாரில் நடந்தது என்ன?</span>
நாடு திரும்பும் கருணா ஆதரவாளர்கள் புலிகளுடன் மீண்டும் இணைவு!
"கருணா குழு உறுப்பினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல், கட்டாரில் சம்பவம்" என்ற தலைப்புடன் அண்மையில் வெளிவந்த சில சிங்களப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. கருணா குழுவைச் சேர்ந்தவரான `குருவி' எனப்படுபவர் கட்டாரில் வைத்துக் குத்திக் கொல்லப்பட்டது தொடர்பாகவே சிங்கள ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன. கருணா குழு தொடர்பான மோதல்கள் கடல் கடந்து கட்டார் வரையில் சென்றுவிட்டது. வேலை தேடி வெளிநாடு செல்பவர்கள் மத்தியிலும் மோதல்கள் உருவாகிவிட்டன என்ற ஒரு பீதியை ஏற்படுத்துவதாகவும், இந்தச் செய்திகள் அமைந்திருந்தன. இத்தாக்குதல் தொடர்பாக கட்டாரில் தொழில்புரியும் தமிழ் இளைஞர்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தமது பிள்ளைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் கட்டாருக்கு அனுப்பி வைத்த பெற்றோர் மீண்டும் பீதியுடன் வாழும் நிலையை இந்தச் செய்திகள் உருவாகிவிட்டன.
கட்டாரில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்ற போதிலும் சிங்களப் பத்திரிகைகள் வழமைபோல செய்திகளைத் திரிபுபடுத்தி, தமது தேவைக்கேற்றவகையில் வெளியிட்டிருக்கின்றன என்பதை இது தொடர்பாக எமக்குக் கிடைத்துள்ள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. திட்டமிட்ட முறையில் புனையப்பட்ட செய்திகளாகவே இவை உள்ளன. இந்த நிலையில், கட்டாரில் என்ன நடந்தது? அதன் பின்னணி என்ன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
மட்டக்களப்பில் கருணா பிரச்சினை உருவாகிய பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து பெருந்தொகையான இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடி கட்டாருக்குச் சென்றார்கள் என்பது உண்மை. கருணாவுடன் இணைந்து செயற்பட்டுவந்த பலர் தமது எதிர்காலம் தொடர்பான அச்சத்துடன் கட்டாருக்குச் சென்றுள்ளார்கள். இவர்களது பெற்றோர் மட்டுநகரிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா வரையில் செலுத்தி தமது பிள்ளைகளை பாதுகாப்பாக கட்டாருக்கு அனுப்பி வைத்தார்கள். இந்தக் காலகட்டத்தில் மட்டக்களப்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று அவசரமாக கட்டாரில் வேலைக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தமை இவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது. நல்ல வேலை, நல்ல சம்பளம் என்ற எதிர்பார்ப்புடன் அவசரமாக இவர்கள் கட்டார் புறப்பட்ட போதிலும், அங்கு அவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது.
கட்டார் சென்ற இளைஞர்களுக்கு சுத்திகரிப்பு வேலைகளே காத்திருந்தன. விமான நிலையம், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் என்பவற்றில் மிகவும் கடினமான சுத்திகரிப்பு வேலைகளைச் செய்த இவர்களுக்கு ஊதியமும் ஒழுங்கான முறையில் வழங்கப்படவில்லை. வழங்கப்படும் ஊதியமும் மிகவும் குறைவானதாகவே இருந்தது. பல இளைஞர்களுக்கு மாதக் கணக்கில் வேதனம் வழங்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகின்றது. கடுமையான வேலை, குறைந்தளவு ஊதியம் என்பவற்றுடன் கடின வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து கொண்டிருந்த இவர்களுக்கு இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவும் முடியாத நிலையே காணப்பட்டது. அதேவேளையில், இவர்களில் பெரும்பாலானவர்கள் கருணாவுடன் இணைந்து இயங்கியவர்கள் என்ற முறையில், மீண்டும் மட்டக்களப்பு திரும்புவதற்கும் அஞ்சினார்கள்.
இது தொடர்பான தகவல்கள் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த போது, கட்டாரில் பொறுப்பாளராகச் செயற்பட்ட மதனுக்கு முக்கிய வேலை ஒன்று ஒப்படைக்கப்பட்டது. கருணாவுடனிருந்த போராளிகளுக்கு நிலைமைகளை தெளிவுபடுத்திய மதன், அவர்களை மீண்டும் மட்டக்களப்புக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது முயற்சி பெருமளவுக்குப் பலனளித்தமையால், கருணாவுடன் செயற்பட்ட பலர் கட்டாரிலிருந்து நாடு திரும்பி விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட தொடங்கியுள்ளனர். பல நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வாறு திரும்பியுள்ளதாக மட்டக்களப்புச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
கருணாவின் காலத்தில் அம்பாறை மாவட்டத் தளபதியாகவிருந்த ஸ்ரான்லி மற்றும் கருணாவின் விசேட பாதுகாப்புப் படைக்குப் பொறுப்பாக இருந்த மணிவண்ணன் ஆகியோர் மதனைத் தொடர்ந்து கட்டாரில் இந்தப் பொறுப்பை முன்னெடுத்துள்ளார்கள். ஸ்ரான்லியின் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் கட்டாரில் மாவீரர் தினக் கொண்டாட்டங்களும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் விழாவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. இதன் மூலம் கருணாவுடன் செயற்பட்டு வந்த பல இளைஞர்கள் மீண்டும் தாயகம் திரும்பி புலிகளுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்திருக்கின்றார்கள். இப்போது ஸ்ரான்லி மற்றும் மணிவண்ணன் ஆகியோரும் மட்டக்களப்பு திரும்பி விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இருந்த போதிலும், குருவி எனப்படுபவர் மட்டும் நாடு திரும்பவோ, புலிகளுடன் மீண்டும் இணைந்து செயற்படவோ விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால், இவரது கொலையில் விடுதலைப் புலிகள் எவ்வகையிலும் சம்பந்தப்படவில்லை என கட்டாரிலிருந்து திரும்பிய இளைஞர் ஒருவர் தெரிவிக்கின்றார். இவரது கொலை மர்மமாகவே இடம்பெற்றது. இது எவ்வாறு நடைபெற்றது என்றோ இதற்கு யார் பொறுப்பு என்றோ திட்டவட்டமாகத் தெரியவில்லை. இந்த நிலையில் புலிகள் தான் இதனைச் செய்திருக்கலாம் என சிங்கள ஊடகங்கள் வழமைபோல் கதைகளைப் பரப்பத் தொடங்கியிருக்கின்றன. இந்தக் கொலைக்கு யார் பொறுப்பு என்பதை அறிவதற்காக கட்டார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். அந்த நிலையில் இது தொடர்பாக கருத்துகளை வெளிப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது!
http://www.thinakural.com/New%20web%20site.../Article-15.htm
|
|
|
| தொடர் கவிதை - கருத்துக்கள் |
|
Posted by: Selvamuthu - 03-05-2006, 06:56 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (29)
|
 |
வணக்கம் ரமா, கள உறவுகளே.
இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள்.
ஆனால் ஒன்று இல்லை இரண்டு:
(1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள்.
(2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள்.
கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்.
தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்.
நன்றி
|
|
|
| மகிந்தவை விழிபிதுங்க வைத்திருக்கும் புலிகளின் ஜெனீவாஆவணங்கள் |
|
Posted by: adsharan - 03-05-2006, 02:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஜெனீவா பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசாங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்ட ஆவணங்களைப் படித்துப் பார்த்த சிறிலங்கா மகிந்த ராஜபக்ச அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தை கடந்த வியாழக்கிழமை மகிந்த ராஜபக்ச கூட்டியுள்ளார். அதில் ஜெனீவா பேச்சுக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கையளிக்கப்பட்ட ஆவணங்களையும் மகிந்த ஆராய்ந்துள்ளார்.
இந்த ஆவணங்களை உரிய அதிகாரிகள் படித்துப்பார்த்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தமக்குத் தெரிவிக்குமாறும் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்கள், பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள், அதி உயர் பாதுகாப்பு வலயத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் விவரங்கள், மீன்பிடித் தடைகள் ஆகியன தொடர்பான ஆவணங்களை விடுதலைப் புலிகள் கையளித்திருந்தனர்.
"சிறிலங்கா அரச படைகளும் துணை இராணுவக் குழுக்களும்" என்ற விடுதலைப் புலிகளின் 37 பக்க ஆவணமானது சிறிலங்கா அரச தலைவரையும் படைத் தளபதிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், கருணா, ஜிகாத் குழுக்கள் பற்றி அந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதக்குழுக்களை யார் இயக்குகிறார்கள், அந்தக் குழுக்களின் தலைவர்களினது செல்லிடப்பேசி எண்கள், இந்தக் குழுக்களை இயக்குகிற இராணுவத் தளபதிகள், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் பெயர்கள், துணை இராணுவக் குழுக்களின் முகாம்கள் ஆகியவை அந்த ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த துணை இராணுவக் குழுக்களினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இடம்பெற்றிருந்தவர்கள் பெயரும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கருணா குழுவினருக்காக கொழும்பு தனியார் வர்த்தக வங்கிகள் இரண்டில் தமிழ் வர்த்தகர்கள் இருவர் பெருந்தொகை பணத்தை வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளமையும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த இரு தமிழ் வர்த்தகர்களும் அச்சுறுத்தலின் பேரில் இந்த தொகையை செலுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணா குழுவுக்கும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கும் இடையேயான உறவுகளை விளக்கும் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளின் கட்டுரைகளும் அந்த ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் மகிந்த ராஜபக்ச அரச தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் அரச படைகளால் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பான 73 பக்க அறிக்கையையும் விடுதலைப் புலிகள் கையளித்துள்ளனர்.
இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகளானது தென்னிலங்கை நிர்வாக அமைப்புகளுக்குள் விடுதலைப் புலிகள் செல்வாக்கு செலுத்தி தரவுகளைப் பெற்றுள்ளமையையும் புலிகளின் புலனாய்வுத் துறையின் வலுவையும் பகிரங்கப்படுத்துவதாக இருந்ததாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
www.eelampage.com
|
|
|
| இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது |
|
Posted by: AJeevan - 03-04-2006, 10:45 PM - Forum: தமிழீழம்
- Replies (6)
|
 |
<b>இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/10/20041029104858time_clock203.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் உள்ளூர் நேரத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 30 நிமிடங்கள் குறைத்து மீண்டும் 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அதனை மாற்றவுள்ளார்.
இந்த புதிய நேரமாற்றம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தமிழ்- சிங்கள புத்தாண்டுடன் அமுலுக்கு வரும்.
மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோரிடம் இருந்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்தே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
1996இல் தனது முதலாவது ஆட்சிக்காலத்தில், நாட்டின் நேரத்தை 1 மணித்தியாலங்கள் முன்நோக்கி நகர்த்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அதனை மீண்டும் அரை மணி நேரம் பின்நோக்கி நகர்த்தினார்.
தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தான் பதவியேற்று சில மாதங்களுக்குள் அதனை மீண்டும் அதன் முன்னைய நிலைக்கு மாற்றியுள்ளார்.
ஆனால் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் அன்றுமுதல் இன்று வரை நேரத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அதே நேரத்தையே பேணி வருகின்றனர்.
இந்த புதிய நேர மாற்றத்தின் மூலம் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதல் இந்தியாவிலும், இலங்கையிலும் ஒரே நேரம் அமுலில் இருக்கும்.
-BBC tamil
|
|
|
| கருணாநிதியின் கபட அரசியல் |
|
Posted by: sathiri - 03-04-2006, 04:35 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
தேர்தல் திருவிழா - கருணாநிதியின் கபட அரசியல்
<img src='http://img312.imageshack.us/img312/972/sathiri1bq.jpg' border='0' alt='user posted image'>
இதோ தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தல் திருவிழா. வழமை போ; கிடைக்குமிடத்திலெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள் வாண வேடிக்கைகள் பேரங்கள் பேச்சுகள் அறிக்கைககள். வீர வசனங்கள் வசை பாடல்கள் என்று ஒரு தேர்தலுக்கேயுரிய அத்தனை அம்சங்களுடனும் இந்த தேர்தலும் அதன் நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த தேர்தல் இறுதி நாட்களிற்கிடையில் யார் யார் என்ன வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் யார் யார் எந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்கள் யார் கட்சி தாவுகிறார்கள் என்பது எல்லாம் எமது சிறிய அறிவக்கு எட்டாத விடயம் அதை விடுவோம் காரணம் அதை எந்த ஆய்வாளர்களாலேயொ அல்லது சாத்திரம் பார்ப்பவர்களாலேயோ கூட கணிக்கமுடியாத விடயம்.
இந்த தேர்தலில் கூட்டாகவும் தனியாகவும் பல தமிழ் நாட்டு கட்சிகளும் முக்கியமாக எட்டு பெரிய கட்சிகள் சந்திக்கின்றன. அந்த கட்சிகளின் முக்கிய விடயங்களாக பதின் நான்கு விடயங்கள் முன்வைக்க படுகின்றது.
அந்த பதின் நான்கு விடயங்களில் ஈழதமிழர் மற்றும் புலிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பும் இந்த பதின் நான்கு விடயத்தில் அடங்குகிறது. அது வழமையா நடக்கிறதுதானே இதிலென்ன புதினம் வழமையானதுதானே எண்று நீங்கள் யோசிப்பதும் புரிகிறது
தமிழ் நாட்டில் எதிரும் புதிருமான இரண்டு பெரிய கட்சிகளான அ.தி.மு.க. வும் தி.மு. க இரண்டுமே ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின்னர் தமிழக தேர்தலில் இம்முறை ஈழ ஆதரவு சங்கை ஊத தொடங்கிருக்கிறார்கள். இவர்கள் எப்படித்தான் ஏற்ற இறக்கத்துடனும் இராகத்துடன் ஊதினாலும் எமக்கு கேட்பது வெறும் கூகூகூகூ தான்.
இதில் தனது வீட்டுக்கு மேலால் புலிகளின் விமானம் பறக்கிறது தன்னை கொல்ல பேகிறார்கள் என்று கூக்குரலிட்ட ஜெயலலிதா ஒருவர். மற்றையது தனக்காகவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும்என்னென்ன தகிடுதனங்கள் காலை வாருதல் முதுகில் குத்தல் நம்பவைத்து களுத்தறுத்தல் என்று என்னென்ன சூழ்ச்சிகள் எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் அசர தந்திரம் என்கிற பெயரில் செய்து இன்று அரசியல் சாக்கியன் என்கிற பெயருடன் நிற்கும் கருணாநிதி.
இவர்களது ஈழதமிழர் மற்றும் புலிகள் மீதான பாசம் ஒன்றும் அவகள் அடிமனதிலிருந்து வந்ததல்ல அதற்கு காரணம் இன்று புலிகளின் பலமும் அதற்கு உறுதுணையாய் நிற்கும் ஈழ மற்றும் உலக தமிழர்களின் உண்மையான ஆதரவுமேயாகும்.இதிலே ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி வேகத்தால் தலைவரானவர். கருணாநிதியோ ஆரம்பகாலத்திலிருந்தே தனது கட்சிக்குள் திட்டமிட்டு காய் நகர்த்தி தனது தகிடுதனத்தால் தலைவரானவர்.ஈழதமிழர் மற்றும் புலிகள் விடயத்தில் ஜெயலலிதா நேரடியாக பகிரங்மாக எதிர்த்த ஒருவர் கருணாநிதியோ வழைமையான வழுவல் போக்கில் நம்முன்னே புன்னகைத்தபடி பலதடைவை முதுகில் குத்திய குள்ளநரி.அதை அவர் ஈழபோராட்ட கால ஆரம் பதிலிருந்தே அதை செவ்வனே செய்து வந்த ஒருவர். அதில் பலவற்றை பக்கம் பக்கமாய் எழுதலாம்.
உதாரணத்திற்கு சில இலங்கைக்கும் இந்தியாவிற்கும் சட்டபடி எந்தவித நாடுகடத்தல் ஒப்பந்தமும் இன்றி ஈழவிடுதலை போராட்டத்தில் ஆரம்பகாலத்து போராளிகளில் ஒருவரான குட்டிமணியை 1973ம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டு கோளிற்கு இணங்க தஞ்சாவூரில் கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிட்டார். பல அண்டுகளின் பின்னர். நீலன் திரு செல்வத்தின் கொலையுடன் சம்பந்த பட்டவர் என இலங்கையரசால் தேடப்பட்டவர் தமிழ்நாட்டில் சட்டப்படி அங்கு எந்த வித பிரச்னையும் இன்றி இருந்தபோது சி.பி.ஜ யினால் கைது செய்யபட்டு அவரை நாடு கடத்த கருணாநிதியிடம் ஒப்புதல் கோரபட்டபோது சட்டத்திற்கு புறம்பாக நாடு கடத்தும் அனுமதியை கொடுத்தார். ஆனால் தமிழ் நாட்டில் வங்கி கொள்ளையிலும் மற்றும் ஒரு கொலையுடனும் நேரடியாக சம்பத்தபட்டு இந்திய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கபட்ட டக்ளஸ் தேவானந்தாவோ இவர் ஆட்சியின்போது தமிழ் நாட்டில் போய் நட்சத்திர விடுதியில் படுத்திருந்து பத்திரிகைக்கு பேட்டியும் கொடுத்துவிட்டு வருகிறார்.
எப்போதுமே நக்கலும் நளினமாகவுமே பேசிபழக்கபட்ட கருணாநி எமது மக்களின் பாரிய பேரழிவுகளும் போராட்டமும் கூட அவருக்கு நக்கலாய் தெரிந்திருக்கவேண்டும் அதனால் ஒரு பத்திரிகை பேட்டியின் போது சொன்னார் தமிழீழம் கிடைத்தால் சந்தோசம் ஆனால் புலிகளை ஆதரிக்கமாட்டேன் என்றார். அதற்கு தேனிசை செல்லப்பா பாரீசில் நடந்த ஒரு நிகழ்சியின் போது அவரது பாணியிலேயே பதிலடி குடுத்தார். கருணா நிதியின் மகள் கனி மொழிக்கு பிள்ளை பிறந்தால் சந்தோசம் ஆனால் திருமணம் செய்வது கருணாநிதிக்கு பிடிக்காது என்று.
அதைவிட இந்த தேர்தலில் ஈழ அதரவு கட்சிகளான ம.தி.மு.க.வும் பா.ம.க. வும் கருணாநிதியுடன் கை கோர்த்து நிக்கும் போது ஏன் கருணா நிதிக்கு எதிராக இப்படியொரு கட்டுரை என்று படிப்பவர்கள் யோசிக்கலாம்
அந்த இரு கட்சிகளும் ஈழதமிழருக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சியான விடயமே அவர்கள் கருணாநிதியுடன் கூட்டு வைத்திருப்பது அவர்களது எதிரகால அரசியல் ஆதாயங்களிற்காகவே தவிர அன்பினால் அல்ல. அதற்கு உதாரணமாக அண்மையில் ஒரு கூட்டத்தில் வை.கோ அவர்கள் கூறிய பாம்பின் நிழலில் பாதுகாப்பு தேடிய தவளை கதையோ போதுமானது.எம்மை பொறுத்தவரை கருணாநிதியின் நக்கல் மொழியில் சொலவதானால் இந்த தேர்தலில் ஜெயலலிதா வெல்ல வேண்டுமென்பதல்ல எமது விருப்பம் ஆனால் கருணாநிதி தோற்க வேண்டும். நேரடியாக சொல்ல போனால் தழுவி கொண்டே குழி பறிக்கும் கரணாநிதியை விட நேரே எதிர்க்கும் ஜெயலலிதாவே மேல்
http://www.orupaper.com/issue42/pages_K__34.pdf
|
|
|
| உதவி தேவை - இயற்றியவர் யார்? |
|
Posted by: AJeevan - 03-04-2006, 03:32 PM - Forum: தமிழீழம்
- Replies (4)
|
 |
Quote:பிரபாகரன்
நினைப்பது நடக்கும் - அவன்
புலிப்படை
நெருப்பாற்றைக் கடக்கும்
இப் பாடலை தேனிசை செல்லப்பா பாடியுள்ளார்.
<b>இப் பாடலை இயற்றியவர் யார்?</b>
தெரிந்தால் உடனே சொல்லுங்கள்.............
நன்றி
|
|
|
| ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! |
|
Posted by: வினித் - 03-04-2006, 03:22 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
[b][size=18]ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்!
இலங்கையின்அமைதி
ஆயுதத்தினாலே[/color]
பாலஸ்தீனத்தின்அவதி
ஆயுதக்குறைவினாலே![/color]
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல
அமைதிக்கும் தான்!
இந்தியபாகிஸ்தானின் அமைதி
அணுகுண்டினாலே[/color]
திபெத் சீன அவதி
அணுகுண்டின்மையினாலே[/color]
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல
அமைதிக்கும் தான்!
நன்றி: குழலி பக்கங்கள்!
|
|
|
| ஈழத் தமிழர் த நிலைப்பாட்டில் எதுவித சமரசமும் எப்போதும் இல்லை |
|
Posted by: வினித் - 03-04-2006, 01:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டில் எதுவித சமரசமும் எப்போதும் இல்லை: வைகோ
[சனிக்கிழமை, 4 மார்ச் 2006, 17:23 ஈழம்] [புதினம் நிருபர்]
ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டில் எப்போதும் எதுவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. அணியில் வைகோவின் ம.தி.மு.க. இன்று சனிக்கிழமை இணைந்தது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குச் சென்ற வைகோ இது தொடர்பான பேச்சுக்களை நடத்தினார்.
அதன் பின்னர் ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைகோ கூறியதாவது:
பொடா சட்டத்தை நாங்கள் பங்கேற்றிருந்த மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் அமுல்படுத்தியது. அதைச் செயற்படுத்தியதுதான் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. பொடாவை அமுல்படுத்திய அரசாங்கத்தில் எமது அமைச்சர்களும் இருந்தனர். அப்போது அவர்கள் பதவி விலக முன்வந்தனர். ஆனாலும் அரசாங்கத்திலே நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஆகையால் பொடா சட்டத்தின் கீழ் எம்மை கைது செய்த விவகாரம் பெரிதானது அல்ல. கடந்த காலங்களை மறக்கிறோம்.
ஈழத் தமிழர் பிரச்சனைக்காகக் குரல் கொடுப்பது என்பது எமது கட்சியின் தலையாயக் கொள்கை. ஈழத்தில் விடுதலைக்குப் போராடுகிற ஒரே இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். அவர்களை ஆதரிப்பதிலோ ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பிலான எமது நிலைப்பாட்டிலே எப்போதும் எதுவித சமரசத்துக்கும் இடமே இல்லை என்றார் வைகோ.
மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இதுவரை வைகோவின் ம.தி.மு.க. இருந்து வந்தது.
மறுலமர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி அமைப்பானது 35 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது. ஆகையால் 35 மாவட்டத்துக்கும் ஒரு பிரதிநிதியாக தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பகிர்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 35 தொகுதிகள் கேட்கப்பட்டது. ஆனால் 16 தொகுதிகளில் தொடங்கி மிக அதிகபட்சமாக 22 தொகுதிகள் வரைதான் தர முடியும் என்று தி.மு.க.தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
தி.மு.க. தரப்பு அளிக்க முன்வந்த 22 தொகுதிகளிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறக் கூடிய தொகுதிகள் 6 மட்டுமே இருந்தமையால் அக்கட்சியினர் வருத்தமடைந்தனர்.
அதே நேரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கோருகிற 35 தொகுதிகளையும் அளிக்க ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. முன்வந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் ஏற்பட்டு வந்த பரபரப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்குச் சென்ற வைகோ தொகுதிப் பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
வைகோவின் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகளைப் பகிர்ந்தளிக்கும் ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் வைகோவும் கைச்சாத்திட்டனர். இதை இருவரும் கூட்டாக ஊடகவியலாளர்களிடம் அறிவித்தனர்.
கடந்த காலங்களில் ஈழத் தமிழர் தொடர்பில் கடும் போக்கை வெளிப்படுத்தி வந்த ஜெயலலிதாவும் அண்மைக்காலத்தில் ஆதரவுப் போக்கை வெளிப்படுத்தியிருந்தார்.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்தின் போது அவரை ஜெயலலிதா வரவேற்க மறுத்து திருப்பியனுப்பியிருந்தார். அதேபோல் ஈழத் தமிழ் அகதிகளின் வருகை தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியிருந்த ஜெயலலிதா, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் உதவுவதையும் கடுமையாக எதிர்த்திருந்தார்.
இந்தச் சூழலில் ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரத்துக் குரல் கொடுத்து வரும் வைகோ மற்றும் தொல். திருமாவளவன் ஆகியோரும் ஜெயலலிதாவின் அண்ணா தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
puthinam.com
|
|
|
|