| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 410 online users. » 0 Member(s) | 408 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,189
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,182
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,577
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,575
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,003
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,081
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,970
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232
|
|
|
| ²Á¡üȢ ¸¡¾Äý |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-06-2006, 03:56 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
காதல் ஏமாற்றும் கள்ளூர்த் தண்டனையும்
கள்ளூர், பூக்கள் நிறைந்த வயல்களையும், கரும்பு செழித்த தோட்டங்களையும் கொண்ட தொல் புகழ் மிக்க எழிலார்ந்த சங்கச் சிற்றூர். இங்கே தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைச் சந்தித்தான். கண்கள் பேசின; காதல் பிறந்தது; களவு வளர்ந்தது. அழகிய நெற்றியினையுடைய அந்த இளையாளின் அணி நலம் கவர்ந்துண்டான் தலைவன். ஆசை தீர்ந்தது. மோகம் முடிந்தது. திருமணம் கேட்ட பெண்ணிடமும் சுற்றத்திடமும் தனக்கு அவளைத் தெரியவே தெரியாது என்று சாதித்து சத்தியம் செய்தான், அறநெறியில்லா அந்தக் கொடுமையாளன். வழக்கு, மன்றத்திற்கு வர, அவையத்துச் சான்றோர் விசாரிக்கத் தொடங்கினர். தலைவனும் தலைவியும் சந்தித்துப் பழகியதையும், நெருங்கிய நிலையில் உறவு கொண்டதையும் கண்டவர் அனைவரும் சான்றாளராயினர். பொய்கள் கரைந்தன. உண்மை ஞாயிறு உதயமானது. தலைவனின் காதல் ஏமாற்று அம்பலமானது. அவையச் சான்றோர் தண்டனை பணித்தனர். தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையொன்றில் மோசடிக் காதலனை இறுகப் பிணைத்தனர். சுண்ணாம்பு நீற்றினை அவன் தலையில் ஊற்றினர். பொய்க்கும் ஏமாற்றுக்கும் கிடைத்த தண்டனை பொருத்தமானதே என்று ஊரவை நின்ற மக்கள் அனைவரும் ஆரவாரித்து மகிழ்ந்தனர்.
மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், மருதப் பாடலொன்றின் வழி சங்க காலத்துக் காதல் மோசடியை நம் கவனத்திற்குக் கொணர்கிறார்.
"தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியேன் என்ற
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்(து) ஆர்ப்பினும் பெரிதே" (அகம் 256)
தகவல் : வரலாறு தொகுதி-1, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சி.
|
|
|
| பகுத்தறிவு வழியில் நடப்பதற்கு சுயசிந்தனை அவசியமாகும் |
|
Posted by: இளைஞன் - 03-06-2006, 02:01 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (1)
|
 |
<i>கடவுள் இருக்கின்றார் என்ற நிலைப்பாட்டுக்கு தான் உடன்பாடானவனல்ல என்று வலியுறுத்திக் கூறும் பகுத்தறிவு வாதியான வேலனை வீரசிங்கம் அதற்காக கடவுள் கொள்கையுடையவர்களுக்கு விரோதியல்ல எனவும் தெரிவிக்கின்றார்.
பகுத்தறிவுப் பாதையிலும் மனித நேயத்துடனும் ஒரு நீண்ட பயணத்தை தொடர்ந்து வரும் பிரவுண்ஸன் இன்டஸ்ரீஸ் என்ற தொழில் நிறுவனத்தை நடத்தி வந்த வேலணை வீரசிங்கத்துடன் ஒரு காலைப் பொழுதுச் சந்திப்பை சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டேன். சுமார் இரண்டு மணிநேரம் அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
மனிதநேயத்துடன் எவரது மனமும் புண்படாத வகையில் நடந்து கொள்ளும் ஒரு மானுட நேயனுடனான சந்திப்பை ஏற்படுத்திக் கொண்ட மன உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் ஒரு இஸ்லாமியனாக இருந்த போதிலும் எனது மன உணர்வுகளுக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படாத விதத்தில் தனது பகுத்தறிவுக் கொள்கை நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
இனி வேலணை வீரசிங்கத்தின் தனது பகுத்தறிவு நிலைப்பாடுகளை அவர் மூலமாகவே நோக்குவோம்.</i>
1955 ஆம் ஆண்டில் பகுத்தறிவு இயக்கத்தை ஆரம்பித்தேன். அக்காலகட்டத்தில் மறைந்த நண்பரும் பத்திரிகையாளருமான எஸ்.டி.சிவநாயகமும் எம்மோடு சேர்ந்து செயற்பட்டார். பிற்பட்ட காலத்தில் அவர் சாயி பக்தனாக மாறினார். எனினும், எம்முடனான அவரது தொடர்பு நீடித்து வந்தது. அத்துடன் என்னோடு வேறு பலரும் இணைந்து இயங்கினர்.
என்னைப் பொறுத்த மட்டில் கடவுள் நம்பிக்கையை விட சுயமாக சிந்தித்து முன்னேற முடியுமென்ற உறுதியான நம்பிக்கையுடன் செயற்படுவதில் வெற்றியும் கண்டவன் நான். சுயமான சிந்தனை வெற்றி பெற வேண்டுமானால் மனக் கட்டுப்பாடு மிக முக்கியமானதாகும்.
இலங்கையில் ஆபிரகாம் கோவூர், தமிழகத்தில் ஈவேரா பெரியார், வீரமணி போன்றோரின் தொடர்பு, கலைஞர் மு.கருணாநிதியின் நட்பும் பகுத்தறிவுக் கொள்கையும் தான் நான் மேலோங்குவதற்குக் காரணமாக அமைந்தன.
மனிதனது பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவதில் கடவுள் நம்பிக்கை முட்டுக்கட்டையாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். மனோதத்துவ ரீதியில் பரிகாரம் தேடிக் கொள்ள முடியும் என்ற கோவூரின் நிலைப்பாடு சரியானதாகவே நம்புகிறேன். மனத் தூய்மையுடனும் உண்மையுடனும் செயற்பட்டால் எதிலும் வெற்றி கொள்ளலாம். கொடுத்த வாக்குறுதி உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். சந்தர்ப்பத்துக்கேற்ற விதத்தில் அவை மாறக் கூடாது.
மற்றவர்களின் குறைகளைத் தேடுவதை தவிர்த்து, நாம் நேர்மையுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு வழியில் நடப்பதென்பது கஷ்டமானதொரு காரியம்தான். அதற்கு சுயமான சிந்தனை மிக முக்கியமான தொன்றாகும். உலகில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிவுக் கொள்கையுடையவர்களாகவே காணப்படுகின்றனர். இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் குடும்பம் கூட பகுத்தறிவுக் கொள்கையை கடைப்பிடித்தவர்கள்தான்.
தமிழ் மக்கள் மத்தியில் மூடக் கொள்கைகள் இன்றும் கூட தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன. சாஸ்திர முறைப்படி எண் சோதிடம் பார்த்தல், அர்த்தம் புரியாத வகையில் பெயர் சூட்டப்படுவது தமிழுக்கே பொருத்தமற்ற விதத்தில் பெயர்களை வைத்தல் போன்றவை தொடர்ந்த வண்ணமே உள்ளன. சாஸ்திரம், சோதிடத்தை நம்புகிறார்கள் தன்னம்பிக்கையில் தயக்கம் கொள்கின்றனர். மனிதனது வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை பிரதானமானது என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
இந்தியாவில் பெரியாரின் திராவிடர் கழகம் மட்டும்தான் பகுத்தறிவுக் கொள்கை இயக்கம் என்று சொல்ல முடியாது. அங்கு பகுத்தறிவு இயக்கங்கள் நிறையவே இருந்தன. இன்றும் இருக்கவே செய்கின்றன. கலைஞர் கருணாநிதி கூட பகுத்தறிவு வாதியாகவே காணப்படுகிறார். ஆனால், காலப்போக்கில் அவரது அரசியல் காரணமாக அக்கொள்கையில் தளர்வு ஏற்பட்டது. தமிழக அசியல் மாற்றத்துக்கு அமைய பிற்பட்ட காலத்தில் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கை மாற்றம் அவரிடம் ஏற்பட்டது.
மனிதர்களிடத்தில் நட்பு வளர்க்கப்பட வேண்டும். நாம் பலவிதமான போக்குகளைக் கொண்டோருடன் பழக நேரிடுகின்றது. அவர்களுடன் ஒத்துப் போகப் பழகிக் கொள்வதும் கூட பகுத்தறிவுக் கொள்கையில் ஒரு அம்சமாகும். கடவுள் கொள்கை உடையவர்களுக்கு நான் விரோதியில்லை. ஆனால், கடவுள் இருக்கின்றார் என்ற கொள்கைக்கு நான் உடன்பாடில்லாதவன்.
எனது ஆசைகளைப்பற்றி மட்டும் நான் சிந்திக்க முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்திலிருந்து நாம் பிரிந்து நிற்க முடியாது. சமூக மட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் சுதந்திரம் இருக்க வேண்டும். விட்டுக் கொடுப்புடன் செயற்படுவது மிக முக்கியமானதாகும். இதுவும் பகுத்தறிவுக் கொள்கையின் மற்றொரு அம்சமாகும்.
சித்தர், விவேகானந்தர், இயேசு நாதர், நபிகள் நாயகம் போன்றோரின் போதனைகளின்படி மனித சமுதாயம் செயற்படவோ, முழுமையாக சிந்திக்கவோ தவறியதன் காரணமாகவே உலகில் மதவெறி தாண்டவமாடுகின்றது. மானிடநேயத்துடன் எமது எண்ணங்கள் அமையுமானால் இந்த மாதிரி வெறித் தனங்கள் ஒரு போதும் ஏற்படப் போவதில்லை.
பௌத்தம் கூட கடவுள் கொள்கையை மறுக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது இன்று போதை போன்றாகியுள்ளது. இது தான் மனித அழிவுகளுக்கு மூலப் பொருளாகிக் கூட அமைந்து காணப்படுகிறது.
இந்து சமயம் கூட இன்று வர்த்தகப் பொருளாக மாறிப் போயுள்ளது. மதத்தின் பெயரால் உலகம் வர்த்தக மயமாக்கப்பட்டுள்ளது. வழிபாடுகள் சந்தைப் பொருளாகி மாற்றம் கண்டுள்ளன. குருமார் சமயத்தை காட்டி பணம் பண்ணுவதிலேயே கரிசனை காட்டி வருவதாகவே நோக்க முடிகிறது. இன்னொரு விதமாகப் பார்க்கம் போது மனித சமுதாயம் மூட நம்பிக்கை எனும் இருளுக்குள் சிக்குண்டு போயுள்ளது.
மனிதன் வாழ்வதற்கு பொருளாதாரம் தேவைதான். ஆனால், அது தான் வாழ்க்கையாகிவிடக் கூடாது. தேடிய பொருளை முடக்கி வைப்பதல்ல மனித வாழ்க்கை, செலவு செய்யப்பட வேண்டும். நண்பர்கள், உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இல்லாதோர்களுக்கு உதவும் மனப்பக்குவம் வளர்ந்தோங்க வேண்டும்.
பகுத்தறிவு என்பது மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பது தான். மனச்சாட்சியை கொன்று விட்டு மனிதனால் மனிதனாக வாழவே முடியாது. பகுத்தறிவுக்குள் சமயம் புகுந்துவிட முடியாது. புகுந்து விடவும் கூடாது. இரண்டும் ஒன்றாகிவிட முடியாது. பகுத்தறிவாளன் ஒரு போதும் மனித நேயத்துக்கு அப்பால் சென்று சிந்திக்க முற்பட மாட்டான்.
அரசியல் இயக்கங்கள், அமைப்புகள் சாதி ரீதியாக உருவாவதற்கு காரணம் அந்த மக்களின் ஆதரவைப் பெற்று தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவே ஆகும்.
பொது நலம் என்பது முதலில் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் சுயமாக சிந்திக்கத் தொடங்கினால் எல்லா வீடுகளும் நன்றாக மாறக் கூடிய சூழ்நிலை தோன்றிவிடும்.
எல்லாமே கடவுள் துணை என்று மௌட்டீக சிந்தனை வயப்பட்டு சும்மா இருந்து விட்டால் எதுவுமே நடக்கப் போவதில்லை. ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்க முன்வர வேண்டும். 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறியவன் நான். எனது அறிவை தனித்தவனாக இருந்து வாசிப்பதன் மூலம் பெற்றுக் கொண்டேன். இதன் வழியாக மொழி அறிவையும் தொழில் அறிவையும் பெற்றுக் கொண்டேன். சுயமான சிந்தனையூடாக பொருளாதர ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்டேன். எல்லோரும் நலமாக வாழ வேண்டுமென்ற எண்ணத்தில் எனது ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிட்டேன். இன்றும் அவ்வாறே செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நானும் மனிதனாக இருப்பதால் ஓய்வு தேவைப்படுகிறது. சிறிது காலமாவது ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறேன். எனது சுய சிந்தனையுடனான பகுத்தறிவுக் கொள்கையில் எதிர்காலத்தையும் செலவிட உறுதி பூண்டிருக்கிறேன்.
எனது மனைவி, மக்கள் எவருடைய விடயத்திலும் நான் ஆதிக்கம் செலுத்தவில்லை. அவர்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயற்பட பூரணமாக சந்தர்ப்பமளித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் எனது பகுத்தறிவுக் கொள்கைக்குத் தடையாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆதரவும் ஒத்தாசையும் முழுமையாகவே வழங்கி வருகின்றனர்" என்று அவர் மனம் திறந்து பேசினார்.
<i>ஈவேரா.பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் ஆபிரகாம் கோவூர், கந்த முருகேசனார் போன்றவர்களின் வழியில் வீரசிங்கத்தின் பகுத்தறிவுச் சிந்தனை செயற்பாடுகள் அமைந்துள்ளன.
திராவிட கழக செயலாளர் வீரமணியுடனும் அவரது தோழர்களுடனும் மிக நெருக்கமாக உறவு கொண்டிருந்த வீரசிங்கம் 1982 இல் பெரியார் நூற்றாண்டு விழாவை கொழும்பில் பெருவிழா எடுத்துக் கொண்டாடினார்.
தன்னோடு இணைந்து செயற்பட்டவர்கள் கொழும்பிலும் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் இருந்ததாகத் தெரிவித்த வீரசிங்கம் இவர்களில் கம்பளை தாசன், ஏ.எஸ்.மணவைத்தம்பி, பிறைட்டன் செல்வராஜ், "தினக்குரல்" நிறுவனர் எஸ்.பி.சாமி போன்றோரை நன்றியுணர்வுடன் நினைவுபடுத்தினார்.
மன உறுதியும் கொள்கை பிடிப்பும் கொண்ட மானுடநேயம் நிறைந்த ஒரு மனிதன் இன்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பதை எண்ணுகின்ற போது உண்மையிலேயே மனம் நிறைவடைகிறது.
வேலணை என்ற தமிழ் மண்ணில் பிறந்து தனது தாய்நாட்டிலும் வெளி உலகிலும் புகழைத் தேடிக் கொண்டிருக்கும் வீரசிங்கம் ஐயாவின் சேவை மானுட சமுதாயத்துக்கும் இன்னுமின்னும் கிட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.</i>
<b>-எம்.ஏ.எம்.நிலாம்-
நன்றி: தினக்குரல்</b>
|
|
|
| தொல் திருமாவள்வன் சங்கதிக்கு வழங்கிய நேர்காணல் |
|
Posted by: Mathuran - 03-06-2006, 01:34 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>தொல் திருமாவள்வன் சங்கதிக்கு வழங்கிய நேர்காணல்</b>
கேள்வி: <b>திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார் என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே?</b>
திருமாவளவன்: கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிருந்தே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அப்போது தி.மு.க. கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது என்றாலும், அ.தி.மு.க. அணி பக்கம் தாவாமல் தலித் மற்றும் இசுலாமியர்களை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி" என்னும் மாற்று அணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. அதன் பின்னர் பா.ம.க.வுடன் கைகோர்த்து. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கக் களத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தது.
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலரையும் ஒருங்கிணைத்து ஈழத்தமிழர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் போராடியது. தமிழ்ப் பாதுகாப்பு மாநாட்டுக்கென ஊர்திப் பயணங்களை தொடங்கி வைப்பதற்கு, தி.மு.க. கூட்டணியைச் சார்ந்த தலைவர்களான கலைஞர், வைகோ, நல்லகண்ணு ஆகியோரை அழைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளே முன்மொழிந்தது. அதன்படி அழைக்கப்பட்டு அவர்கள் அதில் பங்கேற்றனர்.
இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ், தமிழர் என்னும் தமிழ்த் தேசிய அரசியல் களத்திலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான சனநாயக உரிமைக் களங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தன்மையோடு இயங்கிவந்தது.
குறிப்பாக. பா.ம.க.வுடன் ஏற்பட்ட நல்லுறவைப் பயன்படுத்தி பா.ம.க நிறுவனர் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி இராமதாசு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில். தி.மு.க. கூட்டணியை விடுதலைச் சிறுத்தைகள் நெருங்கி வந்தது. ஆனாலும் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள். விடுதலைச் சிறுத்தைகளோடு நல்லிணக்கமான அணுகுமுறையை கையாள விரும்பியதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையிலோ அல்லது தி.மு.கவை பற்றியோ கடுமையான விமர்சனங்கள் எதுவும் விடுதலைச் சிறுத்தைகள் செய்திடவில்லை என்றாலும், விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒரு தோழமையான உறவை வைத்துக்கொள்வதில் தி.மு.க. நாட்டம் கொள்ளவில்லை.
இந்நிலையில்தான். பா.ம.க நிறுவனர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள் கடந்த ஓராண்டு காலமாகவே தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறவேண்டும் என்று வெளிப்படையாக கூறிவந்தார். அதற்கு தி.மு.க தலைவரிடம் இருந்து இணக்கமான பதிலேதும் இல்லை. செய்தியாளர்கள் அதுபற்றி நேரடியாக கேட்டபோதெல்லாம் பா.ம.க நிறுவனரின் கருத்தை வரவேற்க கூடிய வகையில் ஒரு போதும் கலைஞர் விடையளிக்கவில்லை.
கடந்த பிப்ரவரி 4ஆம் நாளன்று அ.தி.முக. பொதுக்குழு கூடிய பிறகு தேர்தல் அரசியல் மேலும் சூடு பறக்கத் தொடங்கியது. தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.முக. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளியேறி அ.தி.மு.க கூட்டணியில் சேரப்போவதாக வலுவான வதந்திகள் கிளம்பின. அப்போது எந்த அணியிலும் இடம் பெறாத விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க அணிப்பக்கம் போகலாம் என்கிற வதந்தியும் பரவியது.
தி.மு.க அணியிலேயே இருக்கின்ற கட்சிகள் வெளியேறுவது என்பதில் சிக்கல்கள் இருக்கலாம். அவ்வாறான சிக்கல் ஏதும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இல்லை. ஆனாலும்;. பா.ம.கவுடனான நட்புறவு, தமிழ்ப்பாதுகாப்பு இயக்கப் பணிகள் ஆகியவற்றுக்காக பா.ம.கவுடன் இணைந்தே இருக்க வேண்டுமென்கிற தேவையை விடுதலைச் சிறுத்தைகள் உணர்ந்திருந்தது. அந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே அ.தி.மு.க பக்கம் செல்ல முடியும்; என்கிற வாய்ப்பையும் விடுதலைச் சிறுத்தைகள் பயன்படுத்த முனையவில்லை. தி.மு.க அணியில் இடம் கிடைக்கும் என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் ஏங்கிக் காத்திருந்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை திட்டமிட்டே உருவாக்கினர்.
இந்நிலையில்தான் கலைஞர் செய்தியாளர்களிடம் பேசும் போது. 'தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்த்துக் கொள்ள ஆசை தான்; ஆனால், இடமில்லை" என்றதுடன். 'வேண்டுமானால். பா.ம.க தமக்கு ஒதுக்கப்படுகிற இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள் ஒதுக்கீடு, செய்துகொள்ளட்டும்" என்று கூறினார். ஆக விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூட்டணியில் இடமில்லை என்பதை அவருக்கே உரிய நடையில் உறுதிப்படுத்தினார்.
அதன் மூலம், கூட்டணிக்கட்சிகளுள் ஒரு கட்சியாக இணைத்துக் கொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தகுதி இல்லை என்பதையே கலைஞர் மறைமுகமாக வெளிப்படுத்தியதாக உணரமுடிகிறது. அத்துடன். பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே அணியில் இருப்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோரும் வன்னிய சமுதாயத்தினரும் அரசியல் hPதியாக ஒருங்கிணைவதை கலைஞர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது. இவ்வாறான நிலையில்தான் விடுதலைச்சிறுத்தைகள் 'மாற்றுஅணி" என்கிற முயற்சியில் இறங்கியது.
பா.ம.கவும் விடுதலைச்சிறுத்தைகளும் தி.மு.க அணியில் ஒருங்கிணைய வாய்ப்பில்லை என்கிற நிலையில்தான். சமூக ஒற்றுமையை கருதி பா.ம.க தலைமையில் தி.மு.க. அ.தி.மு.கவுக்கு மாற்றாக தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பு களையெல்லாம் ஒருங்கிணைத்து மாற்று அணியை உருவாக்கிட மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வெளிப்படையான அழைப்பை விடுத்தது. உடனடியாக. மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள். 'மாற்று அணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று மறுதலித்து விட்டார்.
கடந்த சனவரி 11, பிப்ரவரி 15 ஆகிய நாட்களில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் மையக்குழுவில். 'தி.மு.க கூட்டணியே வேண்டாம்" என்று முடிவெடுத்த நிலையிலும், பா.ம.கவின் உறவுக்காக, வரவுக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருந்தது. சனவரி 15ல் இருந்து பிப்ரவரி 27 வரை 46 நாட்கள் பா.ம.க வுக்காக காத்திருந்த பின்னரே அ.தி.மு.கவின் அழைப்பை ஏற்று கடந்த 27.2.2006 அன்று விடுதலைச்சிறுத்தைகள் அ.தி.மு.கவுடன் கை கோர்த்தது.
'விடுதலைச்சிறுத்தைகள் தி.மு.கவிடம் கெஞ்சுகிறது, பா.ம.கவின் தயவுக்கு காத்திருக்கிறது" போன்ற விமர்சனங்களையல்லாம் தாங்கிக் கொண்டு. 'கூட்டணியில் இடமில்லை பா.ம.க.வின் தொகுதிகளில் உள் ஒதுக்கீடு" என்கிற கலைஞரின் கேலி. கிண்டலையும் பொறுத்துக் கொண்டு. அ.தி.மு.க கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பதைபதைப்பே இல்லாமல் பா.ம.கவின் உறவுக்காக, தமிழுக்காக இத்தனை நாள் அமைதியாக காத்திருந்தும் கூட 'திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார்" என்று மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள் ஏன் சொல்கிறார் என்று புரியவில்லை.
கூட்டணித் தலைவருக்குப் பிடிக்காமல், கொல்லைப்புறம் வழியாக கூட்டணியில் நுழைவது என்பது, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்படும் சவாலாக அமையாதா? 'கூட்டணியில் இடமில்லை; உள்ஒதுக்கீடு தரட்டும்" என்று கூறிய கலைஞருக்குப் பதிலளிக்காமல் அமைதிகாத்த மருத்துவர், காலம் கடந்த எமது நிலைப்பாட்டை எப்படி அவசரம் என்கிறார்?
கேள்வி:<b> அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்ததும் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தீர்களாமே?</b>
திருமாவளவன்: கடந்த 28.2.2006 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாம்குரோவ் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தோம். அந்த விடுதி நட்சத்திர தகுதி உடையதல்ல என்பது நாட்டுக்கே தெரியும். மேலும் அந்த விடுதியில் இதற்கு முன் கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறோம்.
பொடா எதிர்ப்பு முன்னணி உருவாக்குவதற்கான கலந்துரையாடல் கூட்டம், பாப்பாப் பட்டி. கீரிப்பட்டி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் என்று அங்கு எத்தனையோ முறை செய்தியாளர்களைச் சந்தித்து இருக்கிறோம். விடுதலைச்சிறுத்தைகளின் அலுவலகம் மிகச் சிறிய இடம். அது, முக்கியமான பிரச்சனைகளின் போது ஏராளமான செய்தியாளர்கள் பங்கேற்பதற்கு வசதியாக இருக்காது. அதனால் அலுவலகத்திற்கு பதில் அந்த விடுதியில் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி கொண்ட கும்பல், இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிரான அவது}றுகளை பரப்புவதையே குறியாக கொண்டு செயல்படுகின்றனர். இதிலிருந்தே விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் மக்களுக்கான அமைப்புகளை தமிழகத்தைச் சார்ந்த ஊடகங்கள் எப்படி மதிப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
கேள்வி: <b>அ.தி.மு.க கூட்டணியில் இணைந்ததனால் ஈழத்தமிழர்கள், விடுதலைப் புலிகள் தொடர்பாக இனி உங்களால் பேச முடியாது என்கிறார்களே?</b>
திருமாவளவன்: தேர்தல் கூட்டணி உடன்பாடு என்பது அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒரு இடைக்கால உறவேயாகும். ஒவ்வொரு கட்சிக்கும் வௌ;வேறு கொள்கைளும் திட்டங்களும் உண்டென்றாலும் தேர்தல் களத்தில் அவரவர் வலிமைக்கேற்ப அதிகாரத்தைப் பகிர்ந்துக்கொள்வதற்காக ஒரு உடன்பாட்டுக்கு வருவதென்பது தவிர்க்க முடியாத நிலையாகும்.
தேர்தல் கூட்டணியில் ஒன்று சேர்வதனால். ஒருவர் கொள்கையில் இன்னொருவர் தலையிடவேண்டும் என்கிற தேவை எழுவதில்லை. அது ஒரு நிபந்தனையாகவும் இருக்க முடியாது. அந்த வகையில் அ.தி.மு.க கொள்கைகளில் விடுதலைச் சிறுத்தைகளோ, அல்லது விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளில் அ.தி.மு.கவோ ஒரு போதும் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. கூட்டணியின் வெற்றிக்கு ஏதுவான கருத்துக்களை பேசவேண்டும் என்பது மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான முதன்மையான கட்டுப்பாடாக இருக்க முடியும்.
ஈழத்தமிழர் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் எவ்வளவு உறுதிமிக்க ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்பது அ.தி.மு.கவுக்கு மிக நன்றாகவே தெரியும். தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்ட நிலையிலும் கடந்த பிப்ரவரி 14ம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு நடத்தியது. தேர்தல் நேரமாயிற்றே என்று விடுதலைச் சிறுத்தைகள் தயங்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் இத்தகைய ஈடுபாட்டை அறிந்த நிலையில்தான் அ.தி.மு.க எமக்கு அழைப்புவிடுத்தது. அப்படியென்றால், ஈழத்தமிழர் விவகாரங்களில் அ.தி.மு.கவுக்கு மிகப்பெரிய அளவில் முரண்பாடு இல்லை என்றுதானே பொருளாக முடியும்? அண்மையில் கூட ஈழத்திலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தை வந்து சேர்ந்த போது. '1983ம் ஆண்டு சிங்களர்கள் நடத்திய இணவெறியாட்டத்தை இது நினைவுப்படுத்துகிறது" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்து தொவித்தார். அத்துடன். 'சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழகத்திற்கு வந்தால். கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் விடுத்த அறிவிப்பு, மற்றும் பிற தமிழர் தேசிய அமைப்புகள் விடுத்த கண்டனம் ஆகியவற்றை மதிக்கிற வகையில், மகிந்த ராஜபக்சேவை வரவேற்கப் போவதில்லையென்று தெரிவித்து அவரது தமிழக வருகையை முதல்வர் தடுத்து நிறுத்தினார். எனவே, அ.தி.மு.க ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலையில் இல்லை என்பதை இவற்றின் மூலம் அறிய முடிகிறது.
இந்நிலையில், கூட்டணி வெற்றிக்கு ஊறு ஏற்படாத வரையில் விடுதலைச்சிறுத்தைகளின் நடவடிக்கைகளில் அ.தி.மு.க தலையிட வாய்ப்பே இல்லை. என்றாலும் விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலுக்காக தம்முடைய நிலைப்பாடுகளையும் கொள்கை கோட்பாடுகளையும் ஒரு போதும் மாற்றிக் கொள்ளாது.
கேள்வி: <b>இனிவரும் காலத்தில் பா.ம.கவுடனான உறவு மற்றும் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் நடவடிக்கைகள் பற்றி?</b>
பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தல் நேரத்தில் வௌ;வேறு அணிகளில் இருந்தாலும், தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் மலர்ந்த நட்புறவு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் இடையே உருவான நல்லிணக்கம் அடிமட்டத்தில் உழைக்கும் மக்களிடையே சமூக ஒற்றுமை, மற்றும் சமுக அமைதிக்கு அடித்தளத்தை அமைத்துள்ளது. ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் வழங்கியுள்ள நிலையில், தேர்தல் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள இந்த அணி மாற்றங்கள் எத்தகைய பாதிப்பையும் உருவாக்காது என்று நம்புகிறோம். பா.ம.கவும் விடுதலைச்சிறுத்தைகளும் தனித்தனியே களம் கண்டாலும், இருவரும் அதிகார வலிமைப் பெற்றவர்களாய் மறுபடியும் கைகோர்க்கும் போது, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மேலும் கூடுதலான வலிமையைப் பெறும். ஆகவே, பா.ம.கவின் உறவோ தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் நடவடிக்கைகளோ எந்த சூழலிலும் முடங்கிபோகாது. என்றார்.
<b>நன்றி சங்கதி இணையத்தளம்</b>
|
|
|
| வணக்கம் |
|
Posted by: Johnson - 03-06-2006, 12:39 PM - Forum: அறிமுகம்
- Replies (21)
|
 |
வணக்கம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| À×¼÷ Å¡º¨É Á¢¾ìÌõ ¿Ê¸÷ ºí¸õ |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-06-2006, 11:43 AM - Forum: கலைகள்/கலைஞர்கள்
- No Replies
|
 |
[size=18]<b>பவுடர் வாசனை மிதக்கும் நடிகர் சங்கம்
[b]கி.பார்த்திபராஜா</b>
நாடக நடிகர்களுக்கென சங்கம் உண்டு. பெரும்பாலான சங்கங்கள் பதாகையில் தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் திருப்பெயரைத் தாங்கியே நிற்கின்றன. நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடக அமைப்பாளர்களுக்காகவும் (ஏஜெண்ட்) சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரு இடம்.
சங்கம் களைகட்டுவது மாலை 6 மணிக்குமேல்தான். நடிகர் நடிகைகளின் வருகை, பேச்சுச் சப்தம், வெற்றிலைநெடி, பவுடர் வாசனை... இத்யாதிகளுடன் ‘சித்தி’ என குழுஉக் குறியால் வழங்கப்படும் மதுவின் நெடியும். ஒரேநாளில் ஏழெட்டு ஊர்களில் நாடகங்கள் இருக்கும். அந்நாடகங்களில் பங்கேற்போர் சங்கத்திற்கு வந்து கூடி, பிறகே நாடகம் நடக்கும் ஊர்களுக்குப் பயணப்படுவார்கள். ஒவ்வொரு நாடகத்திற்கான நடிகர்களும் குழுவாகக் கூடிய பிறகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் புறப்படுவார்கள்.
ஸ்பெஷல் நாடக அமைப்பு என்றால் என்ன என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பாத்திரமேற்கும் நடிகர், அதுவரை தான் சந்தித்தேயிராத நடிகருடன் இணைந்து நடிக்க முடிவது இந்த ஸ்பெஷல் நாடக அமைப்பில்தான். நடிகர் சங்கத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நோட்டுப்புத்தகம் இருக்கும். நாடகத்திற்கு புக் பண்ண வருபவர்கள் நடிகர் சங்கப் பணியாளருடைய உதவியோடு, தான் விரும்பும் நடிகர் நடிகைகளுடைய குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்வார்கள். இன்ன நடிகருக்கு இன்ன நடிகையை ஜோடியாகப் போட்டால்தான் நாடகம் நன்றாக இருக்குமென்பது நாடகம் புக் பண்ண வருபவரின் மனக்கணக்காக இருக்கும். பபூனுக்கு பொன்னமராவதி ஆறுமுகம்; டான்ஸ்க்கு திண்டுக்கல் பத்மா; முருகனுக்கு புதுக்கோட்டை ஸ்ரீராம்; வள்ளிக்கு புதுக்கோட்டை சித்ரா; நாரதருக்கு வரிச்சியூர் பழனியப்பன்; அரிச்சந்திரனுக்கு இடைச்சியூரணி முருகேசன்; சந்திரமதிக்கு திண்டுக்கல் சோலைவள்ளி... இப்படி கேட்டுக் கேட்டு பதிவு செய்தல் உண்டு. ஊராரே இவ்வாறு குறிப்பாகக் கேட்டு ஒப்பந்தம் செய்யும் நடிகர் தன்னை “குறிப்பு” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வது உண்டு. இது தவிர நாடக ஏஜெண்டுகள் தாமே தேர்ந்தெடுத்து ஒப்பந்தம் செய்வதும் நடைமுறை வழக்கில் இருக்கிறது. இவர்களுடைய நாடகத் தேதி, இடம் முதலானவற்றைப் பதிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் நடிகர் சங்கத்திற்கு இருக்கிறது. ஒப்பந்தம் செய்த பிறகு அதை மறுக்க நடிகர்களுக்கு அதிகாரம் கிடையாது.
ஒப்பந்தம் செய்த நாளில் ஒப்பந்தம் செய்த நடிகர்களோடு சென்று நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடவேண்டும். தவறுகிற நடிகர்களின் மீது சங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது. தேதி ஊர் முதலான தகவல்களை நடிகர் நடிகைகளும் தங்களிடமுள்ள குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்கின்றனர்.
நாடக மேடையில் நடிகர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகள், ஏஜெண்டுகளுக்கும் நடிகர்களுக்குமிடையே ஏற்படும் பணத்தகராறுகள் முதலானவற்றில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் பொறுப்பினைச் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. பிரச்சினைகளோ ஒவ்வொன்றும் ஒருவிதம்.
வள்ளிதிருமணம் நாடகம். ராஜபார்ட் மிகவும் இளவயது நடிகர்; கத்துக்குட்டி. ஸ்திரீபார்ட் மூத்த நடிகை. இளவயது நடிகர் மூத்த நடிகையை அக்கா என்றுதான் அழைப்பார். மேடையில் இருவரும் முருகனும் வள்ளியுமாக வந்து காதல் புரிய வேண்டும். மானைத் தேடிவரும் முருகனோடு வள்ளி முரண்படுவாள்; கோபிப்பாள்; சண்டையிடுவாள். இறுதியில் மோதல் காதலாகித் திருமணத்தில் முடியவேண்டும்.
இப்போது மோதல் கட்டம். வேடனாக வந்திருக்கும் முருகன் தன்னுடைய குலப்பெருமை பேசுவான். வள்ளியோ சளைக்காது தன் குறக்குலப் பெருமை பேசுவாள். வசனங்கள் அவரவர் பேசிக் கொள்வதுதானே... பேசுகிறார்கள். பேச்சிடையே முருகன் சொல்கிறான்: என் தந்தை யார் தெரியுமா? என் தந்தை அக்காளை ஏறியவன். இதைச் சொல்லும் முறைமையில் மறைபொருளாக ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறான். என் தந்தை - சிவன் -காளை வாகனத்திலே அமர்ந்து காட்சி தருபவன் என்பது அது. ஆனாலும் நகைச்சுவைக்காக இருபொருள் தொனிக்கும்படி இதை அழுத்திச் சொல்கிறான். முகத்திலே கட்டுக்கொள்ளாத சிரிப்பு. பார்வையாளர்களும் சிரிக்கின்றனர். முதுபெரும் நடிகையான ஸ்தரீபார்ட்டுக்கு முகம் சிவக்கிறது. ‘யாரிடம் என்ன வார்த்தை பேசுகிறான் இந்த கத்துக்குட்டி நடிகன்? கொஞ்சங்கூட மரியாதையில்லாமல். ஆபாசமான வார்த்தையை என்னிடம் எப்படிப் பேசலாம்?’ முகத்துத் தசைகள் துடிக்க ஆவேசத்துடன் பார்க்கிறார் முருகனாக நடிக்கும் கத்துக்குட்டி நடிகரை. வசைமாரி பொழியத் தொடங்குகிறது. ‘யாரு கிட்ட அக்காளை ஏறுனவன்னு சொல்ற... நீ உன் ஆத்தாளை ஏறு... அம்மாவை ஏறு... அதையெல்லாம் ஏங்கிட்ட வந்து ஏண்டா பேசுற... த்தூ... எச்சிப் பொறுக்கி நாயே... மரியாதை தந்து மரியாதை வாங்கு... சபை நாகரீகம் தெரிஞ்சு பேசு... இல்லன்னா அறுத்துத் தொங்கப் போட்டுருவேன் நாக்கை... செருப்பால அடிப்பேன்...’
திகைத்துப்போகிறார் கத்துக்குட்டி நடிகர். பாராட்டுக் கிடைக்குமென்று எதிர்பார்த்துப் பேசியவார்த்தை வசவுக்கு வழிவகுத்துவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. எந்த முருகப் பெருமானும் வள்ளியிடம் இவ்வளவு மோசமாக வாங்கிக் கட்டிக் கொண்டிருந்திருக்கமாட்டார். மூத்த நடிகையின் வசவுகள் நின்றபாடில்லை. ஊர்ப் பெரியவர்கள் பிரச்னையில் தலையிட்டுச் சமாதானம் செய்கின்றனர்.
‘சரி விடும்மா... ஏதோ சின்னப்பையன் தெரியாமப் பேசிட்டான்... அனுபவமுள்ள நடிகை நீதான் அவனை மன்னிக்கணும்... சரி விடு...விடு...” ஊரார் சொல்வதால் சம்மதிக்கிறார் நடிகை. நாடகம் மீண்டும் தொடருகிறது. மீண்டும் மோதல்; காதல். காதல் காட்சிகளில் கத்துக்குட்டி ராஜபார்ட் நடிகரிடம் உற்சாகம் இல்லை; சோபை இழந்து காட்சி தருகிறார்.
நாடகம் முடிவுற்றது. சங்கத்திற்கு திரும்பிய ஸ்திரீபார்ட் நடிகை. சங்கத்திலிருக்கும் தன் குறிப்பேட்டை எடுத்து முகப்பில் எழுதுகிறார் ‘குறிப்பிட்ட அந்த நடிகருடன் யாரும் எனக்கு நாடக ஒப்பந்தம் செய்யவேண்டாம்’. பல நடிகர்களுடைய குறிப்பேட்டில் இதுபோன்ற வாசகங்களைப் பார்க்கலாம். இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டுச் சங்கம் சமாதானம் செய்துவைக்கும்.
இசைநாடக உலகம் புனைவுகளால் ஜீவித்துக் கிடக்கும் உலகம். இசை நாடக நடிகர்கள் புனைவில் வாழும் மனிதர்கள். இவர்களது புனைவின் வசீகரம் நாடகம் பார்க்கும் சாதாரண எளிய மக்களையும் தொற்றிக் கொள்கிறது. புனைவுவெளி மனிதர்களான இசை நாடகக் கலைஞர்களின் இயல்பு வாழ்க்கையும்கூட புனைவு மயக்கத்திற்குள் புதைந்து கிடக்கிறது.
காரைக்குடி நாடக நடிகர்-அமைப்பாளர் சங்கம் ஒரு குறுகிய இடுகலான தெருவில் அமைந்திருந்தது. அதை நாடகத்தில் பபூன் காமிக்குகள் ‘மூத்திர சந்து’ என்று கிண்டலாக குறிப்பது உண்டு. நடிகர் சங்கத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒவ்வொரு முறையும் நாலைந்துபேர் சிறுநீர் கழிக்கும் காட்சியைத் தரிசிக்க நேரிட்டுவிடும். மூத்திர வாசனையைக் கடந்து நடிகர் சங்கத்திற்குள் நுழைந்துவிட்டால்போதும், பவுடர் வாசனைகள் மூக்கைத் துளைக்கும். சங்கத்திற்குத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் யாவரும் உண்டு. சங்க வேலைகளைக் கவனித்துக் கொள்ள முழுநேர பணியாளர் ஒருவரும் உண்டு. சங்கத்தின் ஒரு பகுதியிலேயே ஒரு ஸ்திரீபார்ட் நடிகை, தன் உறவுக்காரப் பெண்ணுடனும் வயதான தாயுடனும் வசித்து வந்தார். உறவுக்காரப் பெண் டான்ஸ்காமிக் பாத்திரமேற்று நடிக்கும் பெண் நடிகை.
காரைக்குடி நாடக நடிகர் அமைப்பாளர் சங்கம் நாடக ஆய்வை மேற்கொள்ளச் சென்ற ஆய்வாளனாகிய எனக்குப் பல உதவிகளைச் செய்தது. ஒவ்வொரு நாளும் நடிகர் கூடுகிற மாலைப்பொழுதில் சங்கத்திற்குப் போய்விடுவேன். சங்கப் பணியாளரின் உதவியோடு ஒவ்வொரு இரவும் ஒரு குழுவோடு பயணப்படுவேன். அன்றைய இரவு எந்த நாடகத்திற்குப் போவது என்பதைப் பல விதங்களில் முடிவு செய்வேன். நாடகத்தின் அடிப்படையில், ராஜபார்ட்டின் அடிப்படையில், ஸ்திரீபார்ட் அல்லது பபூன்காமிக் அடிப்படையில் என பல அடிப்படைகளில், ஒவ்வொரு நடிகரின் நடிப்பையும் ஏதாவது ஒரு நாடகத்திலாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம். சங்கப்பணியாளர் பலமுறை இதில் எனக்கு உதவியிருக்கிறார். ‘நீங்க இளையராஜா நாடகம் பாத்துட்டீங்களா?’ என்பார். ‘ரொம்ப நாளைக்கு அப்புறம் இளையராஜா இந்தப் பகுதிக்கு நடிக்க வர்றார். நீங்க அவசியம் பார்க்கணும்’ என்று அனுப்பிவைப்பார்.
நடிகர் சங்கத்தில் பல நடிகர்-நடிகைகளைச் சந்தித்து விரிவாகப் பேசுவேன். அவர்களுடைய தொழில், நடிப்பு, அனுபவம், சொந்த வாழ்க்கை எனப் பேச்சு நீளும். சங்கத்திலேயே தங்கியிருந்த டான்ஸ் காமிக் நடிகை அவ்வப்போது வந்து பேசுவார். திருமணமான ஒருசில ஆண்டுகளிலேயே கணவரைப் பிரிந்து வாழ்பவர். கைக்குழந்தையுடன் தன் பெரியம்மாவாகிய ஸ்திரீபார்ட் நடிகையுடன் நடிகர் சங்கக் கட்டிடத்திலேயே வசிக்கிறார். அவருக்கு வரும் வாய்ப்புகள் மற்ற டான்ஸ் காமிக்குகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. எனவே மிகுதியான நேரம் நடிகர் சங்கத்திலேயே இருப்பார். அவரும் சங்க உதவியாளரும்தான் நாடக குழூஉக் குறிகளைத் தொகுக்க எனக்கு உதவியவர்கள். நான் தொடர்ந்து ஒருமாத காலம் நடிகர் சங்கத்திற்குச் சென்று வந்த பிறகு - ஒரு நாளில் அவருக்கு நாடக வாய்ப்பு வந்தது.
‘நாளைக்கு இவங்க நடிக்கிற நாடகம் ஒன்னு இருக்கு சார்... நீங்க போய்ப் பார்த்துட்டு வந்திடுங்க...’ என்றார் உதவியாளர். சரி என்றேன். நடிகையோ அவருடைய நாடகம் பார்க்க என்னை வரவேண்டாம் என்றார். ‘எதற்கு வேண்டாம் என்கிறீர்கள்?’ என்றேன். ‘சார்...நீங்க என்கிட்ட ரொம்ப மரியாதையா பேசுறீங்க... எங்க கலைவாழ்க்கையை மதிக்கிறீங்க... நீங்க நான் நடிக்கிறத பாத்தா எங்க மேல நீங்க வச்சிருக்கிற மரியாதை போயிடும்... பபூன் காமிக்கோட நடிக்கிறப்போ ரெட்டை அர்த்தத்தில் பேச வேண்டியிருக்கும்; பாட வேண்டியிருக்கும்... அதனால அதை நீங்க பார்க்க வேண்டாம்...’ என்றார். நான் பல நாடகங்களை ஏற்கனவே பார்த்திருந்தேன். எனவே அது இக்கலை வடிவத்தின் ஒரு பகுதி என்ற அளவில் நான் புரிந்து கொண்டிருந்தேன். எனவே நாடகத்தில் அவர்களின் பங்கேற்பை அவர்களின் தனிப்பட்ட குணநலன்களோடு, தனிப்பட்ட வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்ற தெளிவுடன் இருந்தேன். இதை அந்நடிகையிடம் தெரிவித்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுபோன்ற பல நாடக நிகழ்வுகளைப் பார்த்து வருகிறேன்; அது எனது ஆய்வுக்கு அவசியம் என்பதை எடுத்துச் சொல்லியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
மறுநாள் மாலை நாடகங்களுக்குரிய ஊர்களுக்குச் செல்ல எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட டான்ஸ்காமிக் நடிகை மறைந்து மறைந்து சென்று அவருக்குரிய வாகனத்தில் அமர்ந்துவிட்டார். ‘சார்... வண்டி புறப்படட்டும். டூவீலர்ல போய்... கூட்டத்துல உட்கார்ந்து நாடகம் பாத்துட்டு வந்துடுவோம் நாம... ரொம்பத்தான் திமிர் புடிக்கிறா அந்தப் பொண்ணு...’ என்றார் சங்க உதவியாளர். மறுத்துவிட்டேன் நான். இயல்பு வாழ்க்கையும் நாடக வாழ்க்கையும் ஒன்றே என்று நினைக்கிற மரியாதைக்குரிய அந்நடிகையின் காலடி மண்ணுக்கு வணக்கம் செலுத்துகிறேன். வேறொரு குழுவோடு வேறொரு நாடகம் பார்க்க வேறொரு ஊருக்குப் பயணப்படுகிறேன்.
விநாயகர் திருமணம்:
இசைநாடக உலகம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைவுற்று வருகிறது என்பது ஒரு ஆண்டில் நிகழ்த்தப்படும் நாடக நிகழ்வுகளின் எண்ணிக்கை அடிப்படையில் சொல்லப்படுகிற கருத்து அல்ல. மாறாக அதன் உள்ளடக்கம் வீரியமிழந்து வருகிறது என்னும் பொருளில் சொல்லப்படுகிறது. இசை நாடகம் தன் கலைத்தன்மையில் காலூன்றி நவீனத்தை எதிர்கொள்ளவில்லை. அது நவீன மாறுதலுக்கேற்பத் தன்னை புனருத்தாரணம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு சினிமாவின் தொங்குசதையாக மாறி வருகிறது. எனவே இசைநாடகம் ‘பாட்டுக் கச்சேரியாக - அதுவும் சினிமாப் பாட்டுக் கச்சேரியாக’ மாறி வருவதனைப் பற்றிய கவலையுணர்வு அக்கலைஞர்களுக்கே இருக்கிறது. அது மட்டுமல்ல... ஒரு சில நாடகங்களைத் தவிர பிற நாடகங்களை நிகழ்த்தக்கூடிய கலைஞர்கள் குறைந்து வருகின்றனர். தவத்திரு சங்கரதாச சுவாமிகள் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். ஆனால் வள்ளிதிருமணம், அரிச்சந்திர மயான காண்டம் இரண்டையும் விட்டால் வேறு நாடகங்கள் நிகழ்த்தப்படுவது அரிதாகிவிட்டது. பாமாவிஜயம், தூக்குத்தூக்கி, கோவிலன் கதை, வீரபாண்டியக் கட்டபொம்மன், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி போன்ற நாடகங்களை நடிப்பதற்கான நடிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
சென்னையில் தமிழகக் கலைகளின் சங்கம விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கத்தி தெருக்கூத்து, தெற்கத்தி தெருக்கூத்து, இசை நாடகம் முதலானவற்றை நிகழ்த்துவதாக ஏற்பாடு. இசை நாடகத்திற்கு ஏற்பாடு செய்ய மதுரை புறப்பட்டார் நண்பர் ஒருவர். நந்தன் கதை நாடகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். மதுரை சுண்ணாம்புக்காரத் தெருவில் இருக்கும் நாடக நடிகர் சங்கத்தின் முகவரியைப் பெற்றுக் கொண்டார். “நந்தனார் கதை தெரிந்த ஒருசில பழைய நடிகர்கள் இருக்கலாம். ஆனால் நாடகத்தை நிகழ்த்துவதற்குத் தேவையான அனைத்துக் கலைஞர்களும் கிடைப்பது அரிதே” என்றேன். நண்பர் நம்பிக்கையோடு புறப்பட்டுப்போனார்.
நந்தனார் கதை நாடகத்திற்கு புக் செய்துவிட்டேன் என்று நண்பர் சொன்னபோது ஆச்சரியமாகிவிட்டது நமக்கு. நடிகர்கள் இருக்கிறார்கள்; நாம்தான் ஒழுங்காகத் தேடிப்பார்க்கவில்லை என்று வெட்கமாகிப் போய்விட்டது. நந்தனார் கதையைப் பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருந்தோம்.
நாடகத்தன்று நடிகர்கள் வந்திறங்கிய பிறகு நாடக ஏஜெண்ட்டோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார் நண்பர். ‘நந்தனாருக்கு ஆள் கிடைக்கல சார்... இப்போ சீஸன் வேற... யாருமே கெடைக்கல வள்ளிதிருமணம் ஏற்பாடு பண்றதே பெரிய பாடாப் போயிருச்சி...’ என்றார் ஏஜெண்ட். வேற வழி? நடக்கட்டும் நாடகம் என்றார் நண்பர்.
ஒப்பனை அறைக்குள் எட்டிப் பார்த்தேன். கலைஞர்கள் ஒப்பனையில் மும்முரமாய் இருந்தார்கள். உடல் பருமனான ஒருவர் ஒப்பனையிட்டுக் கொண்டிருந்தார்; பபூன் காமிக்காக இருக்கலாம். மதுரையில் குண்டுசேகர் என்று ஒரு பபூன் காமிக் உண்டு. வயிறைக் குலுக்கியபடி அவர் ஆடும் ஆட்டத்தைக் கண்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அப்படி இவரும் ஒரு பபூனாக இருக்கலாம் என்று தோன்றியது. பருத்த நடிகர் இடும் ஒப்பனையோ என் கருத்தை மறுத்தது. ராஜபார்ட்டுக்கான ஒப்பனை அவரில் படருவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். கழுகாசல முருக ஒப்பனையோடு எழுந்து நின்றார் நடிகர். அவருடைய உடல்வாகுக்கு வெகுநேரம் மேடையில் நிற்பதே சிரமம் என்பதனை, எழுந்து நிற்பதற்கான அவரது முஸ்தீபுகளே உணர்த்திவிட்டது. நாடக சீஸனில் ஆள் கிடைக்காததால் ஒரு பழம் ‘பெரும்’ நடிகரை அழைத்து வந்து விட்டார்கள் போலிருக்கிறது ராஜபார்ட் நடிகரை அணுகிப் பேசிக் கொண்டிருந்தேன். அந்த விழா தமிழகக் கலை வடிவங்களைப் பற்றிய ஒரு பொதுவான புரிதலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா என்பதனை எடுத்துச் சொன்னேன். எனவே சினிமாப் பாடல்களைத் தவிர்த்து விடுங்கள். முழுக்க முழுக்க தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் நாடகப் பாடல்களை மட்டுமே பாடுங்கள்; அப்பொழுதுதான் இசை நாடக வடிவத்தின் உயரிய தன்மை-செவ்வியல் தன்மை-வெளிப்படும் என்றேன். ராஜபார்ட் தலையாட்டினார்.
நாடகம் தொடங்கிவிட்டது. ராஜபார்ட் அரங்கில் பிரவேசிக்க வேண்டிய தருணம். நடிகரும் தயார். எல்லோரையும் வணங்கியபடி அசைந்தாடி குறுநடை நடந்து மெல்ல அரங்கில் பிரவேசித்தார் நடிகர். அவரைக் கண்டதுமே அரங்கில் குபீர் சிரிப்பு. ராஜபார்ட்டுக்கோ வெட்கமாகிப் போய்விட்டது. தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. ஒலி வாங்கி முன்னால் வந்து நின்றார். ‘மறைந்த திரையுலக இசை மாமேதை... என் குருநாதர்... டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் பாதத்தைத் தொட்டு வணங்கி... ஆரம்பிக்கின்றேன் என் பணியை. என் குருநாதரின் பாடலைப் பாடுகிறேன்...’ என்றார். என் முகத்தில் ஈயாடவில்லை. ராஜபார்ட் தொடங்கினார் தன்பணியை. ஆறு பாட்டு... டி.ஆர். மகாலிங்கம் பாட்டு.
ஒரு வழியாய் நாடகம் முடிந்தது. நண்பர் ஒருவரிடம் நாடகம் எப்படி இருந்தது என்று கேட்டேன். ‘விநாயகர் திருமணம்’ நன்றாகவே இருந்தது என்றார். ‘அட என்னப்பா... விடிய விடியக் கதை கேட்டு... சீதைக்கு ராமன் சித்தப்பன்றியே... நடந்தது வள்ளி திருமணம் நாடகமப்பா...’ என்றேன். நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். ‘நடந்தது வள்ளி திருமணம்தான். ஆனால் வள்ளியை நடக்க முடியாத விநாயகரல்லவா வந்து திருமணம் செஞ்சுக்கிட்டார்?’ என்றார்.
¿ýÈ¢- ÒÐÅ¢¨º
|
|
|
| ±ŠÅ¢¬÷ ¸ðΨÃ- þ¨ÉôÒ |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-06-2006, 11:16 AM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- No Replies
|
 |
<b>வால்ட்டெர் பெஞ்சமின்: வரலாற்றில் ஒரு தேவதூதன்</b>
[b]எஸ். வி. ராஜதுரை
பெர்லின் நகரத்தைச் சார்ந்த ஒரு யூத பூர்ஷ்வாக் குடும்பத்தில் 1892 இல் பிறந்த வால்ட்டெர் பெஞ்சமின் (நல்டெர் பெஞமின்) மிகக் கூர்மையான இலக்கிய விமர்சகர்; பண்பாடு குறித்த சமூகவியலாளர். மட்டுமின்றி மூலச் சிறப்புமிக்க மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர். உலகப்புகழ் பெற்ற மார்க்ஸிய நாடக மேதை பெர்டோல்ட் ப்ரெஹ்ட், பிராங்க்பர்ட் சிந்தனையாளர் தியோடோர் அடோர்னோ, யூத அனுபூதிவாதத்தின் (ஜெநிஷ் ம்ய்ச்டிcஇச்ம்) வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற கெர்ஷோம் ஸ்சோலம் போன்றோரின் நண்பர். ஜெர்மனியில் வெய்மர் குடியரசின் ஆட்சிக்காலத்தில்தான் பெஞ்சமினின் வாழ்க்கையின் பெரும் பகுதி கழிந்தது. 1919முதல்1933 வரை நீடித்த வெய்மர் குடியரசில்தான் பொதுவுடைமைப் புரட்சியாளர்களின் கனவுகள் கலைக்கப்பட்டன. புரட்சி ஒடுக்கப்பட்டது. மாபெரும் புரட்சியாளர்கள் ரோஸா லுக்ஸம்பெர்க், கார்ல் லீப்னெஹ்ட் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது கொலைக்கு சமூக- ஜனநாயக இயக்கத்திலிருந்த வலதுசாரிப் பிரிவுதான் காரணம். வெய்மர் குடியரசுக்குள் வளர்ந்துவந்த சமூக, அரசியல், பொருளாதார முரண்பாடுகள் 1933ல் நாஜிகள் ஆட்சிக்கு வர வழிகோலின. எனினும் வெய்மர் குடியரசு வளமான பண்பாட்டுச் சூழலையும் சாதனையாளர்களையும் உருவாக்கியிருந்தது. இவர்களில் அறிவியல் அறிஞர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன், எழுத்தாளர் தாமஸ் மான், நாடக மேதை பெர்டோல்ட் ப்ரெஹ்ட், இறையியலாளர் பால் டில்லிக், ஓவியர்கள் ஜார்ஜ் க்ரோஸ், வாஸிலி காண்டின்ஸ்கி, தத்துவ அறிஞர் எர்னெஸ்ட் காஸ்ஸிரெ, இசை மேதை ப்ரூனோ வால்டெர், பிராங்க்பர்ட் பள்ளிச் சிந்தனையாளர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
முதல் உலகப்போருக்கு முன் ஜெர்மனி முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற ஜெர்மானிய இளைஞர் இயக்கத்தில் உற்சாகத்துடன் சேர்ந்து தனது ஆற்றல்களைச் செலவிட்டார் பெஞ்சமின். பெருநகரங்களில் இளம் பெண்களும்கூட இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். தங்கள் பிள்ளைகள் படிப்பு முடிந்ததும் தங்களைப் போலவே வர்த்தகம், தொழிலுற்பத்தி, வங்கித் தொழில், மருத்துவம், சட்டம், இராணுவம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள் என்னும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த மேட்டுக்குடிப் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக, இந்த இளைஞர்களோ, கிராமப் புறங்களில்தான் உண்மையான, அசலான அர்த்தப்பூர்வமான வாழ்க்கை இருப்பதாகக் கருதினர். ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களாகக் கிராமப் புறங்களுக்குச் சென்று, இயற்கையுடன் ஒன்றி வாழ விரும்பினர். மலைகளில் ஏறுவது, ஓடைகளில் குளிப்பது, வைக்கோல் போர்கள்மீது படுத்துறங்குவது, கிதார் வாசிப்பது, கிராமியப்பாடல்கள் பாடுவது, ‘எளிய வாழ்க்கை’வாழ்வது எனத் தமது நேரத்தைச் செலவிட்டனர். நிறுவனமயமாக்கப்பட்ட கலாச்சாரத்திற்கு எதிராக 1960களில் அமெரிக்காவில் தோன்றிய பீட்னிக், ஹிப்பி இயக்கங்களைப் போன்ற எதிர்க் கலாச்சார முயற்சிகளை இந்த இயக்கம் நமக்கு நினைவுபடுத்தினாலும் ஜெர்மானிய பாசிசத்திற்கு இளைஞர்களை ஆயத்தம் செய்வதற்கான பள்ளிகளாகவும் இந்த கிராமப்புறப் பயணங்கள் அமைந்தன.
பெஞ்சமின் இந்த இயக்கத்தில் என்னதான் உற்சாகத்துடன் செயல் பட்டாலும், யூதன் என்னும் வகையில் அங்கு அவர் ‘பிறத்தியானாகவே’ கருதப்படுவதை உணராமலில்லை. எனினும் அந்த இயக்கத்தின் கவர்ச்சிகரமான ‘குரு’வாக விளங்கியவரும் நீய்ட்ஷ்சேவைப் பின்பற்றியவருமான குஸ்தாவ் வைனெகென் என்பாருடன் ஏற்பட்ட நெருக்கமான பழக்கத்தின் காரணமாக இந்த இயக்கத்தின் பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வந்தார். அவருடைய எழுத்துக்கள் ‘எல்லைமீறி’ச் சென்றதற்காக பலமுறை கண்டனத்துக்குள்ளாயின.
முதல் உலகப்போர் தொடங்கியதும் தனக்கும் அந்த இளைஞர் இயக்கத்திற்கும் அரசின் ஆதரவைப் பெறுவதற்காக இளைஞர்களைத் தேச பக்திச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தினார் வைனெகென். அதேசமயம் பெஞ்சமின் போன்ற அர்ப்பணிப்பு மிகுந்த சீடர்களை இழந்தார். அந்த ‘இளைஞர் இயக்கம்’உலகத்தைப் புத்தாக்கம் செய்யும் என்னும் பெஞ்சமினின் கனவு- இவ்வாறாகக் கலைந்துபோனது. கண்பார்வைக் கோளாறு காரணமாகக் கட்டாய இராணுவ சேவையில் சேரும் நிர்ப்பந்தம் பெஞ்சமினுக்கு இருக்கவில்லை. ஆனால் பெர்லின் சுதந்திர மாணவர் சங்கத்தில் அவரோடு பணியாற்றி வந்தவரும் அவரது மிக நெருக்கமான நண்பரும் இளங்கவிஞருமான பிரிட்ஜ் ஹெய்ன்ஸ்லெ, இராணுவத்தில் சேர்ந்த ஒரு வாரத்திற்குப் பின் தனது காதலி ரிக்கா செலிக்ஸனுடன் தற்கொலை செய்துகொண்டார். மாணவர் சங்க விடுதியின் சமையலறையிலிருந்த சமையல் வாயுக் குழாயைத் திறந்து வைத்துவிட்டுத் தங்களை அந்த அறையில் வைத்துப் பூட்டிக்கொண்டனர். அந்த நச்சுவாயு அவர்களிருவரையும் கொன்றது. தனது இறுதிநாள்வரை இந்த சோகத்திலிருந்து விடுபட முடியாமல் இருந்தார் பெஞ்சமின். அவரது சகமாணவர்கள் பலர் அந்தத் தற்கொலையைப் போற்றத்தக்க ஒரு நிகழ்வாகக் கருதினர். மாணவர் சங்கத்தைச் சேர்ந்த பலர், ஹெய்ன்ஸ்லெவின் தம்பி வொல்பும் ரிக்காவின் தங்கை ட்ராட்டும் இதே போலத் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என வற்புறுத்தியதாகத் தோன்றுகிறது. ட்ராட் 1915லும் வொல்ப் 1923லும் தற்கொலை செய்துகொண்டனர். அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் இப்படித்தான் தற்கொலையில் ஒன்றிணைந்தன. இந்தத் தற்கொலைகளின் தாக்கம் பெஞ்சமினின் ஆழ்மனத்தில் புதைந்திருந்தது என்றும் அவரது தற்கொலை முடிவுக்கும்கூடக் காரணமாக இருந்தது என்றும் சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பெஞ்சமின் தனது வாழ்க்கையில் பல ஏமாற்றங்களைச் சந்தித்தார். பல்கலைக்கழகத் துறையன்றில் பணியாற்றும்படி அழைக்கப்பட்டார். ஆனால் அவரை நன்கு புரிந்து கொண்டிருந்த பேராசிரியரொருவர் திடீரென்று பதவி விலகியதாலும் அவருக்குப் பதிலாக வந்தவருக்கு பெஞ்சமினைப் பிடிக்காததாலும் பல்கலைக்கழக வேலை கிடைக்காமல் போயிற்று. தேசிய ஏடொன்றின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதை நடத்தத் தொடங்குவதற்கு முன்பே பத்திரிகை நிறுத்தப்பட்டுவிட்டது. நன்கு விற்பனையாகக்கூடிய வகையில் தனது புத்தகமொன்றை வெளியிட ஒரு பதிப்பாளருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால் புத்தகம் அச்சில் இருக்கும்போதே பதிப்பாளர் முன்பு ஏற்பட்ட நஷ்டங்களால் ஓட்டாண்டியாகிவிட்டார். அறிவுக்கூர்மை கொண்டிருந்ததால் பலராலும் விரும்பப்பட்டார். ஆனால் யூதராகப் பிறந்ததன் காரணமாகச் சிலரால் வெறுக்கப்பட்டார். குறுகிய தேசிய மனப் பான்மையிலிருந்து விடுபட்டவராக இருந்ததால் தேசியவாதிகளின் நேசத்தை அவரால் பெற முடியவில்லை.
கம்யூனிசப் புரட்சியின் சகபயணியாக இருக்க விரும்பிய அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருக்கவில்லை. அதுமட்டுமல்ல. கம்யூனிஸ்ட் கட்சியால் விரும்பப் படாதவராகவும் இருந்தார். ஏனெனில் அவரது சிந்தனைகள் இறுக்கமான வாய்ப்பாடுகளுக்குள் அடங்குவனவாக இருக்கவில்லை. அவை, அவர் எதைச் சிந்திக்கிறார், எதைச் சொல்லப் போகிறார் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்லிவிட முடியாத, கட்டுப்படுத்த முடியாத, இளிவரலும் புதிர்களும் நிரம்பிய சிந்தனை. எனினும் அவர் முற்றாகத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார் என்று கூற முடியாது. எழுதுவதை அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை. அவரது எழுத்துகளைப் பலரும் நாடிச் சென்றனர். நவீனகாலத் தொடர்பு சாதனங்களிலொன்றான வானொலியின் ஆற்றலை நன்கு புரிந்து கொண்டிருந்த அவர், நூற்றுக்கும் மேற்பட்ட ஒலிபரப்புகளைச் செய்து தனக்கான ஆயிரக்கணக்கான நேயர்களைப் பெற்றிருந்தார். நாஜிகள் ஆட்சிக்கு வந்த பிறகே அவரது வானொலி ஒலிபரப்புகள் முடிவுக்கு வந்தன.
பெஞ்சமினின் ஆளுமையில் இரு பரிமாணங்கள் இருந்தன: கரை புரண்டோடும் உற்சாக வெள்ளம், செயல் துடிப்பு, பொதுவாழ்வில் ஈடுபாடு, இனிமையும் பெருந்தன்மையும் பிறரோடு ஒன்றிப்போதலும் ஒருபுறம்; எல்லாரிடமிருந்தும் ஒதுங்கி வாழ்தலும் அவநம்பிக்கையுணர்ச்சியும் மறுபுறம். பாறை போல் உறுதியானவராய், கம்பீரமாக நிற்கும் மனிதர் ஒருபுறம்; அடுத்தகணமே கண்ணாடிச் சிதிலங்களாக உடைந்துபோவது மறுபுறம். அவரது சொந்த வாழ்க்கையையும் அறிவு வளர்ச்சியையும் வடிவமைப்பதில் அறிவிலும் அழகிலும் மிகக் கவர்ச்சிகரமான பெண்கள் சிலர் பங்கேற்றிருக்கின்றனர். அவரது மனைவி டோரா கெல்னர் (இவர் பெஞ்சமனிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தனியாகப் போய்விட்டவர். எனினும் பெஞ்சமின் நாஜிகளிடமிருந்து தப்பித்துச் செல்லவேண்டும் என்பதற்காகப் பல உதவிகளைச் செய்ய முன்வந்தவர்) மர்மக்கதைகள் எழுதி வந்தவர்; பெண்ணியப் பத்திரிகையன்றின் ஆசிரியர்; அவரது காதலியும் கம்யூனிஸ்டுமான ஆஸ்யா லாஸிஸ்; உளவியலாளரும் பாலியல் ஆராய்ச்சியறிஞருமான சார்லட் வொல்ப்; மார்ட்டின் ஹைடெக்கரின் மாணவியும் தத்துவவாதியுமான ஹன்னா அரெண்ட், புகைப்படக் கலைஞர் ஜீஸெல் ப்ரௌன்ட் எனப் பலர்.
பெஞ்சமினுக்குக் கிடைத்த பேறுகளிலொன்று, பெர்டோல்ட் ப்ரெஹ்ட்டுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு. ஜெர்மனியின் புகழ் பெற்ற கவிஞரும் நாடகாசிரியருமான ப்ரெஹ்ட், மார்க்ஸியத் தத்துவத்தையட்டிய தனது புரட்சிகர நாடகவியல் கோட்பாடுகளைக் கொண்டு கலைக்கான புதிய பரிமாணங்களை வழங்க முன்வந்தார். நாடகம், மக்களுக்கு அவர்கள் வாழும் சமுதாயத்தைப் பற்றிய ஒரு பிரதிபிம்பமாகச் செயல்படுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. யதார்த்தத்தை, உள்ளது உள்ளபடியே பிரதிபலிப்பதுதான் நாடகத்தின் இலக்கு என்பதை மறுதலித்தார். நாடகத்தைப் பார்ப்பவர்களின் உணர்வு நாடக நிகழ்வுகளில் கரைந்துவிடாமலும் நாடகப் பாத்திரங்களுடன் ஒன்றிப்போய்விடாமலும் இருக்கும் வண்ணம் அவர்களது விமர்சனப் பார்வையைத் தூண்ட வல்லதாக, அந்த விமர்சனத்துக்கு ஈடுகொடுப்பதாக இருக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு.
ஒரு கலா நிகழ்வில் பரந்துபட்ட மக்களும் பங்கேற்று அந்த நிகழ்வின் தன்மையைத் தீர்மானிக்க வேண்டும், தனிப்பட்ட ஆசிரியனின் ஆதிக்கம் -பூர்ஷ்வாத் தனிமனிதனின் ஆதிக்கம் மறுதலிக்கப்பட வேண்டும் என்று ப்ரெஹ்ட் கூறினார். ஒரு புரட்சிகர எதிர் காலத்தை நோக்கியிருந்த ப்ரெஹ்ட்டின் பார்வை, பழமையின் முரண்களில் சிக்கியிருந்த பெஞ்சமின்மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. மாற்றமடைந்து கொண்டிருந்த சமுதாயத்திலிருந்த புரட்சிகர சாத்தியப்பாடுகளின்பால் அவரது சிந்தனையைத் திருப்பியது. தனது கலைக்குள்ள அர்த்தத்தை உத்திரவாதம் செய்பவை உழைக்கும் மக்களின் புரட்சிகர உணர்வுகளும் வேட்கைகளுமே என்று ப்ரெஹ்ட் கூறி வந்ததும் பெஞ்சமினுக்கு உடன்பாடானதாகவே இருந்தது. பின்னாளில், நாஜிகள் தங்களது கட்சிப் பேரணிகள், அரசியல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கலைநிகழ்ச்சிகள் போல ஆக்குவதற்குப் புகைப்படம், திரைப்படம் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியபோது, அதாவது அரசியலை அழகியல்மயமாக்கியபோது, அதற்கு எதிராக பெஞ்சமின் உருவாக்கிய முழக்கமான ‘ அழகியலை அரசியல் மயமாக்குவோம்’ என்பதில் ப்ரெஹ்ட்டின் தாக்கம் இருப்பதைக் காணலாம்.
வெய்மர் பண்பாட்டுச்சூழலில் தனது இளமைக்காலத்தைக் கழித்த பெஞ்சமின், ஜெர்மானிய ரொமாண்டிக் இயக்கத்தைப்1 பற்றிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். ஐரோப்பிய இலக்கியத்தில் - குறிப்பாக பிரெஞ்சு இலக்கியத்தில் -ஆழ்ந்த பற்றுடையவராக இருந்தார். விசாலமான படிப்பும் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் மிகக் கூர்மையான இரசனையுணர்வும் கொண்டிருந்த அவர் ஐரோப்பாவின் நவீனஇலக்கிய முயற்சிகளை உற்சாகத்துடன் வரவேற்றார். அவரது முக்கியமான இலக்கியக் கட்டுரைகள் மார்ஸெல் ப்ரொளஸ்ட் (மர்cஎல் ப்ரொஉச்ட்), ப்ரன்ஸ் காப்கா (fரன்ழ் கfக), பொதலேர் (பௌடெலைரெ) ஆகிய நவீன இலக்கியவாதிகளின் படைப்புகளைப் பற்றிய மதிப்பீடுகளாகும். காலம் இதுவரை காணாத மாற்றங்களை 19 ஆம் நூற்றாண்டின் கடைசித் தசாப்தங்களும் தனது சம காலமும் கண்டு விட்டதாகவும் தொன்மையின் சிதறல்களே தனது காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எஞ்சியிருப்பதாகவும் கருதிய பெஞ்சமின், கடந்த காலத்தின் சிதைவுகளை, அதன் சுவடுகளை ஆதங்கத்தோடும் ஆன்மீக சோகத்தோடும் இலக்கிய நயத்தோடும் தமது எழுத்துக்களில் பதிவு செய்த கவிஞர் பொதலேர், நாவலாசிரியர் ப்ரொளஸ்ட் ஆகியோர் மீது சிறப்புக் கவனம் செலுத்தினார்.
ஜெர்மானிய ரொமாண்டிச இயக்கத்தில் கலை விமர்சனம் தொடர்பாகக் காணப்படும் கருத்துகள் பற்றி எழுதத் தொடங்கிய அவர், படிப்படியாக மார்க்ஸியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். பொதுவுடைமை இயக்கத்தின் அனுதாபியாக இருந்த அவர், 1927_28 ஆம் ஆண்டுகளை சோவியத் யூனியனில் செலவிட்டார். எனினும் அவர் ஜெர்மானியப் பொதுவுடைமைக் கட்சியில் ஒருபோதும் சேரவில்லை. ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சிக்கு வந்த பிறகு, 1933 இல் அவர் புலம் பெயர வேண்டியதாயிற்று. பிராங்க் பர்ட் பள்ளியினர் கொடுத்துவந்த சிறு உதவித்தொகையைக் கொண்டு பிரான்சில் வாழ்க்கையையோட்டி வந்த அவரது படைப்புகளிற் சில, குறிப்பாக ‘இயந்திரங்கள் மூலம் பிரதிகள் தயாரிக்கப்படும் யுகத்தில் கலைப்படைப்பு’(அர்ட் இன் தெ அகெ ஒf மெசனிcஅல் ரெப்ரொடுcடிஒன்)- ப்ராங்க்பர்ட் சிந்தனைப் பள்ளியினர் நடத்திவந்த சமூக ஆராய்ச்சி ஏட்டில் வெளி வந்தன. மேற்சொன்ன கட்டுரை அதைப் பிரசுரித்தவர்களால் மட்டுமின்றி சோவியத் ஆதரவு மார்க்ஸியவாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது அல்லது உதாசீனம் செய்யப்பட்டது.
விவாகரத்து செய்யப்பட்ட அவரது முன்னாள் மனைவி டோரா கெல்னர் அவரை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்காக எத்தனையோ முயற்சிகள் செய்தார். ஆனால் பாரிஸில் தேசிய நூலகத்தில் தான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளில் மூழ்கியிருந்த பெஞ்சமினுக்கு பிரான்சை விட்டுப் போக மனமிருக்கவில்லை. பிரான்ஸை நாஜிகள் ஆக்கிரமித்த பிறகு, இனியும் காலம் கடத்தமுடியாது என்னும் முடிவுக்கு வந்த அவர், மார்ஸெ நகருக்குச் சென்று அங்கு பின்னாளில் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர்தர் கீஸ்லரைச் சந்தித்தார். பின்னர் பிராங்க்பர்ட் சமூக ஆராய்ச்சி நிறுவன அறிஞர் மாக்ஸ் ஹோர்க்ஹைமரின் உதவியால் அமெரிக்காவிற்குச் செல்வதற்கான நுழைவுச்சீட்டைப் (விச) பெற்றார்.
நாஜிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த பிரான்சிலிருந்து ஸ்பெயினுக்குத் தப்பிச் சென்றால்தான் அந்த நுழைவுச் சீட்டைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. எனவே 1940 செப்டம்பரில் அகதிகள் சிலரோடு சேர்ந்து பிரான்ஸ்- ஸ்பெயின் எல்லையில் உள்ள பைரென் மலைகளைக் கடந்து போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பனுக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இருதயக் கோளாறினால் அவதிப்பட்ட அவருக்கு மலை ஏறுவது மிகவும் சிரமமாக இருந்தது. மூச்சுத் திணறியது. அவரும் சகபயணிகளும் போர்ட்போ என்னும் ஸ்பானியக் கிராமத்தில் இரவுநேரத்தில் உள்ளூர்க் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர் (அச்சமயம் ஸ்பெயினும்கூட இராணுவத் தளபதியும் பாசிஸ்ட்டுமான ஜெனெரல் ப்ராங்கோவின் ஆட்சியில் இருந்தது). அவர்களது பயணம் தொடர்பான ஆவணங்களைத் தர மறுத்த காவல்துறையினர் மறுநாள் காலை அவர்களை பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்போவதாக மிரட்டினர். அவர்களைக் கெஞ்சிக் கேட்டோ, கையூட்டு கொடுத்தோ தப்பித்துவிடலாம் என்று மற்ற பயணிகள் காத்திருந்தனர். ஆனால் தான் பிரான்சுக்குத் திருப்பியனுப்பப்பட்டால் அங்கிருந்து நாஜி சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்படும் அபாயம் இருப்பதாகக் கருதினார் பெஞ்சமின்.
போதை மருந்து உட்கொள்ளும் வழக்கம் அவரிடமிருந்தது உண்மைதான். ஏராளமான மார்பின் மாத்திரைகளைக் கைவசம் வத்திருந்தார் என்றும் அளவுக்கு அதிகமாக அவற்றை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. என்ன காரணத்தினாலோ அடுத்த நாள் உள்ளூர் காவல்துறையினர் மற்றவர்கள் அங்கிருந்து தொடர்ந்து பயணம் செய்ய அனுமதி தந்துவிட்டனர். 1994 ல் ஸ்பெயினில் பிராங்கோவின் இராணுவ சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக ஆட்சி திரும்பியதும் போர்ட்போ மக்கள் பெஞ்சமினின் நினைவிடம் ஒன்றை அமைத்தனர். அதில் 1940 ல் அவர் ஆக்கிய கடைசிப் படைப்பான ‘ வரலாறு பற்றிய தத்துவம் மீதான ஆய்வுரைகள்’ (தெசெச் ஒன் தெ ப்கிலொசொப்க்ய் ஒf கிச்டொர்ய்) என்பதிலுள்ள சில வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
புரட்சிகரக் கோட்பாடுகள் பற்றி நமது யுகத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான ஆவணங்களிலொன்றான இந்த ஆய்வுரைக் தொகுப்பை எழுதிய பெஞ்சமின் தான் வாழ்ந்த காலத்தில் மிகச்சிறிய வட்டாரத்தினருக்கு மட்டுமே அறிமுகமாயிருந்தார். ஆனால் 1960களுக்குப் பிறகோ ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்கள், அறிவாளிகள்மீது பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ள மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட அவரது கட்டுரைகளிற் சில முதன்முதலாக ‘அறிவு விளக்கங்கள்’ (ல்லுமினடிஒன்ச்) என்னும் தலைப்பில் 1968 ல் வெளியிடப்பட்டன2.
நவீன மார்க்ஸியச் சிந்தனையின் வரலாற்றில் தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றுள்ள பெஞ்சமின், வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தை ஒப்புக்கொள்கிறவர்கள் பெரிதும் பகிர்ந்து கொள்ளும் ‘முன்னேற்றம்’ (ப்ரொக்ரெச்ச்) என்னும் கருத்துநிலையுடன் (இடெஅலொக்ய்) அடிப்படையான முறிவை ஏற்படுத்திக் கொண்டார். எனவே அவரது மார்க்ஸியம், அவரது காலத்தில், ஏன் இப்பொழுதும்கூட மேலோங்கியுள்ள ‘அதிகாரபூர்வமான’மார்க்ஸிய விளக்கங்கள் பலவற்றிலிருந்தும் கூர்மையாக வேறுபடுகின்ற ஒரு விமர்சனத் தன்மையைக் கொண்டுள்ளது. மானுட நாகரிகம் பற்றி ஜெர்மானிய ரொமாண்டிச இயக்கம் முன்வைத்த விமர்சனங்களிலும் யூத தீர்க்கதரிசன மரபிலும் தான் கண்டறிந்த நுழை புலங்களை பெஞ்சமின் தனது மார்க்ஸியப் புரட்சிகரக் கோட்பாட்டில் ஒன்றிணைத்தார். 1915ல் அவர் எழுதிய ‘மாணவரின் வாழ்க்கை’என்னும் கட்டுரையிலேயே இதைப் பார்க்கலாம். இக் கருத்துதான் பின்னாளில் ‘வரலாறு பற்றிய கருத்தின் மீதான ஆய்வுரை 18 -அ என்னும் வடிவம் எடுத்தது:
வரலாற்றுவாதம் (கிச்டொரிcஇச்ம்) வரலாற்றின் பல்வேறு தருணங்களுக்கிடையில் காரண-காரியத் தொடர்பை நிறுவுவதில் திருப்தியடைகிறது. எந்த ஒரு உண்மையும், அது காரணமாக இருப்பதாலேயே, வரலாற்றுரீதியானதாக இருப்பதில்லை. அக் குறிப்பிட்ட உண்மையானது, அது நிகழ்ந்து முடிந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே, அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகளினூடாகத் தான் வரலாற்றுத் தன்மை பெறுகிறது. இந்தக் கருத்தைத் தனது சிந்தனையின் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளும் வரலாற்றாசிரியன், ஜெபமாலையை உருட்டுவதுபோல நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக விளக்குவதில்லை. மாறாக, தனது சகாப்தமும் அதற்கு முந்திய குறிப்பிட்ட மற்றொரு சகாப்தமும் இணைந்த ஒரு நிலையையே அவன் தரிசிக்கிறான். இவ்வாறு அவன் நிகழ் காலத்தைத் தனது சகாப்தமாக மட்டும் காணாமல் மீட்பரின் காலத்தின் (மெச்சிஅனிc டிமெ) துகள்கள் பொதிந்த ஒரு அனுபூதிக் காலமாகவும் (ம்ய்ச்டிcஅல் டிமெ) காண்கிறான்.3
1921 ஆம் ஆண்டில் பெஞ்சமின் எழுதிய ‘வன்முறை குறித்த விமர்சன ஆய்வு’ என்னும் கட்டுரையில்தான் கம்யூனிசம் தொடர்பான அவரது முதல் குறிப்புகள் காணப்படுவதாக ஆராய்ச்சியறிஞர்கள் கூறுகின்றனர். பூர்ஷ்வா நாடாளுமன்றங்கள் பற்றி கம்யூனிஸ்டுகளும் அராஜக -சிண்டிகலிஸ்டுகளும் செய்யும் விமர்சனம் ‘நாசகரமான, ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் நியாயமானது, போற்றத்தக்கது’என்று எழுதினார். கம்யூனிசத்தையும் அராஜக- சிண்டிகலிசத்தையும்4 ஒன்றோடொன்று இணைத்துப் பார்த்ததுதான் தனித்தன்மை வாய்ந்த அவரது மார்க்ஸியச் சிந்தனை உருவாவதற்கான முதல் கட்டம் எனக் கூறலாம். 1923ல் வெளிவந்த ஜார்ஜ் லூகாச்சின் (கெஒர்கெ லுகcச்) ‘வரலாறும் வர்க்க உணர்வும்’ (கிச்டொர்ய் அன்ட் cலச்ச் cஒன்ச்cஇஒஉச்னெச்ச்) என்னும் தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பை 1924ஆம் ஆண்டுக்குப் பிறகு படித்தார். பின்னர், இத்தாலிய நகரமான காப்ரியில் (cஅப்ரி) அவர் தங்கியிருந்த நாட்களில் சோவியத் லாட்வியாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் போராளியும் திரைப்படக் கலைஞருமான ஆஸ்யா லாஸிஸீடன் அவருக்கேற்பட்ட நட்பும் காதலும் கலந்த தொடர்பின் மூலமாக கம்யூனிசம் நடைமுறையில் கட்டப்படுவது குறித்த தகவல்களை அறிந்து கொண்டார்.
ஜார்ஜ் லூகாச்சின் கட்டுரைகளும் ஆஸ்யா லாஸின் நட்பும்தான் மார்க்ஸியத்தை பெஞ்சமினின் உலகக் கண்ணோட்டத்தின் மையக்கூறாக்கின. உயிரோட்டமுள்ளதும் காலத்துக்குகந்துமான ஒருசில நூல்களில் ஜார்ஜ் லூகாச்சின் கட்டுரைத் தொகுப்புமொன்று எனக் கருதிய பெஞ்சமின் மூன்றாவது அகிலத்தில் சோவியத் மார்க்ஸியவாதியான டெபோரின் (டெபொரின்)5 தலைமையில் அந்தக் கட்டுரைத் தொகுப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதலே அக்கட்டுரைகளின் ஆழமான தத்துவ உள்ளடக்கம், புரட்சிக்கான வழிகாட்டியாக விளங்கும் அதனுடைய வீச்சு ஆகியவற்றுக்கான சான்றாக விளங்குகிறது என்றும் நடைமுறை, கோட்பாடு ஆகியவற்றின் ஒற்றுமையைத் தனது தத்துவக் கட்டுரைகளின் மையக்கூறாக ஆக்கியதன் மூலம் மற்றெல்லாத் தத்துவங்களுக்கும் இல்லாத அனுகூலத்தை லூகாச் பெற்றுவிட்டார் என்றும் கருதினார். அச்சமயம் சோவியத் யூனியனின்பால் ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருந்த அவர், சோவியத் மார்க்ஸியத்திற்குக் கட்டுப்படாத, சுயேச்சையான மார்க்ஸியச் சிந்தனையை வளர்க்கத் தொடங்கினார்.
1923-_26 ஆம் ஆண்டுகளில் அவரது சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் ‘ஒரு வழித் தெரு’ (ஒனெ நய் ச்ட்ரேட்) என்னும் கட்டுரைத் தொகுப்பில் வெளிப்படுவதைப் பல்வேறு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1923_௨6ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட அக்கட்டுரைகள் 1928ல் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டன. 1923ல் எழுதப்பட்ட முதல் கையழுத்துப் பிரதியில் “துன்பப்பட்டு அவமானத்துக்குள்ளாகும் மனிதன் வெறுப்பு என்னும் பின்நோக்கிய பாதையில் செல்லாமல், மீட்சியை வேண்டுதல் என்னும் முன்நோக்கிய பாதையில் செல்லவேண்டும்” என எழுதினார். ஆனால் திருத்தப்பட்டுப் பிரசுரமான வடிவத்தில் ‘சோகம் என்னும் பின்நோக்கிய பாதையில் செல்லாமல் கலகம் என்னும் முன்நோக்கிய பாதையில் செல்லவேண்டும்’ என மாற்றியிருந்தார். பூர்ஷ்வா வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல அதற்கடுத்த நூற்றாண்டிலும், முதலாளியப் பொருளாதாரமும் தொழில்நுட்பமும் ஏற்படுத்தக்கூடிய நாசகார விளைவுகளைப் பற்றிய முன்னெச்சரிக்கை விடுத்தார்:
‘(முதலாளிய) பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியில் பணவீக்கமும் நச்சு வாயுவும் தோன்றும் தருணம் -கிட்டத்தட்டக் கணக்கிட்டுச் சொல்லப்படக்கூடிய தருணம்- ஏற்படுவதற்கு முன்பு பூர்ஷ்வா வர்க்கம் முழுமையாக ஒழித்துக் கட்டப்படாவிட்டால், நாம் அனைத்தையும் இழந்து விடுவோம். தீப்பொறியானது வெடி மருந்தைப் பற்றுவதற்கு முன், நெருப்புத்திரியைத் துண்டித்து விட வேண்டும்’. பாட்டாளி வர்க்கத்தால் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியுமா என்னும் கேள்விக்கு பெஞ்சமின் தந்த விடை இதுதான்: மூவாயிரமாண்டுகால பண்பாட்டு வளர்ச்சி நிலைக்குமா அழியுமா என்பது இந்தக் கேள்விக்கான பதிலில் அடங்கியுள்ளது. ‘சோசலிசமா அல்லது காட்டுமிராண்டி நிலையா?’ என்பதுதான் மனித குலத்திற்கு முன் உள்ள கேள்வி என ஜெர்மானியப் புரட்சிகர வீராங்கனை ரோஸா லுக்ஸம்பெர்க் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய கேள்வியை ஒத்ததுதான் பெஞ்சமினின் கூற்று.
புராதனப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து படிப்படியாக, அடுத்தடுத்து வரும் கட்டங்களினூடாகப் பொதுவுடைமை சமுதாயம் உருவாகும், பாட்டாளிவர்க்கப் புரட்சி என்பது பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இயல்பாக, தவிர்க்கவியலாதபடி ஏற்படும் என்னும் கொச்சையான, பரிணாமவாத மார்க்ஸிய விளக்கத்திற்கு மாறாக, பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பது இயல்பான, பரிணாம வளர்ச்சியில் ஏற்படுத்தப்படும் உடைப்பு, பேரழிவை ஏற்படுத்தும் உடைப்பு எனக் கருதினார் பெஞ்சமின். பரிணாமவாதக் கொச்சை மார்க்ஸியம், மானுடம் தொடர்ந்து இடையறாமல் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்னும் அதீதமான நம்பிக்கைவாதத்தைக் கொண்டிருப்பதாகக் கருதிய அவர், அதற்கு நேர்மாறான மார்க்ஸியத்தை, புரட்சிகர அவநம்பிக்கைவாதம் கலந்த மார்க்ஸியத்தை முன்வைத்தார்.
கோட்பாட்டளவில் மார்க்ஸியத்தையும் அராஜகவாதத்தையும் ஒன்றிணைக்கும் மற்றொரு முயற்சியாக 1929-ல் ‘சர்ரியலிசம்’பற்றி அவர் எழுதிய கட்டுரையில் ‘வரம்பற்ற நம்பிக்கையை ஐ.ஜி.பார்பென் (ஈG Fஅர்பென்) நிறுவனத்தின்மீதும், அமைதியான முறையில் பூரணப்படுத்தப்படும் லுப்ட்வாப் (லுfட்நffஎ) நிறுவனத்தின் மீதும் மட்டும்தான் வைக்க முடியும்’என்றார். பெஞ்சமின் நினைத்துப் பார்த்ததைவிட மிகக்கொடிய நோக்கங்களுக்காக - அவரது மறைவுக்குப் பிறகு - இந்த இரண்டு தொழில் நிறுவனங்களும் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின. நாஜிகளின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கும் யூத இன அழிப்பு வேலைகளுக்குமான கொடிய கருவிகளை இந்தத் தொழில்நிறுவனங்கள் உற்பத்தி செய்தன. இரசாயனப் பொருட் களின் உற்பத்திக்காக ஐ.ஜி.பார்பென் நிறுவனம் நாஜிகளின் சித்ரவதை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த யூதர்களிடமிருந்து கட்டாய உழைப்பைக் கறந்தது.
எனினும், 1933_௩4 ஆம் ஆண்டுகளில், சோவியத் யூனியன்மீது அவருக்கேற்பட்டிருந்த அனுதாபம், சோவியத் மார்க்ஸியத்தின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக, ‘உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி’, ‘முன்னேற்றம்’ போன்ற கருத்துகளை அவராலும் முழுமையாகக் கைவிட முடியவில்லை. தொழில் நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சி குறித்த உடன்பாட்டு வகையான கருத்துகளையும் கொண்டிருந்தார். சோவியத் யூனியனில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ஐந்தாண்டுத் திட்டங்கள்’உற்பத்தி உறவுகளுக்கல்ல, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்குமே முதன்மையும் அழுத்தமும் கொடுத்த ஒரு மார்க்ஸிய விளக்கத்தைக் கோட்பாட்டு அடிப்படையாகக் கொண்டிருந்தன.
‘இயந்திரங்கள் மூலம் பிரதிகள் செய்யப்படும் யுகத்தில் கலை’ என்னும் அவரது புகழ்பெற்ற கட்டுரையிலும்கூட தொழில்நுட்ப முன்னேற்றம், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி குறித்து உற்சாகிக்கும் பார்வை இருக்கிறது. எனினும் இங்கும்கூட பழமை அழிந்துவிட்டதை அவர் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. தனது காலச்சூழலில், இருக்கக்கூடிய நிலைமைகள், நிலவுகின்ற உற்பத்தி முறையின்கீழ் கலையின் மாறிவரும் தன்மை, அதன் பயன்பாடு ஆகியவற்றைத்தான் முதன்மைப்படுத்துகிறார். ‘கலையை சாத்தியப் படுத்தும் கற்பனா வளம்; ‘அது கூறும் ‘சாசுவதமான உண்மைகள், ‘கலைக்கே உரிய மந்திர ஆற்றல்’என்பன பற்றிய விளக்கங்களைக் கூறும் கலைக்கோட்பாடுகள் அரசியலை அழகியல்மயமாக்கும் நாஜிகளுக்கே பயன்படும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். ஊர்வலங்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்கள் முதலியனவற்றை மாபெரும் சடங்குகளாக, வழிபாட்டு நிகழ்ச்சிகளாக மாற்ற முற்பட்ட நாஜிகள் வெகு மக்களைத் தமது கருத்துநிலை மேலாண்மைக்கு அடிமைப் படுத்தியிருந்தனர். மக்களின் விடுதலை, உரிமைகள் ஆகியவற் றுக்குப் பதிலாக, யூதர்கள் மீது வெறுப்பூட்டி அவர்களைப் பொது எதிரியாகச் சித்திரித்து ஜெர்மானிய வெகுமக்களிடையே ஒரு போலி ஒற்றுமையை, போலி சமத்துவத்தை உருவாக்கினர்; உற்பத்தி உறவுகள் இன்னும் ஆதிக்க உறவுகளாகவே இருப்பதால்தான் மக்கள் பசி, பிணியால் அவதிப்படுகின்றனர் என்பதை மூடிமறைக்கவே அரசியலை மக்களை ஈர்க்கும் கவர்ச்சிக்கலையாக மாற்றினர்.
திரைப்படம், வானொலி போன்ற சாதனங்களைக் கொண்டு மக்களின் சிந்தனையாற்றலைத் தட்டியெழுப்புவதற்குப் பதிலாக, புதிய கடவுள்களை உருவாக்கினர். காமிரா லென்ஸின் முன் அனைவரும் சமம் என்றாகிய பிறகும், புதிய போலித் தலைவர்களைத் தங்கள் திரைப்படங்களில் காட்டினர். பொது இடங்களில் நாஜிகள் கூட்டிய பெருங்கூட்டங்கள் ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் போலவே அமைந்திருந்தன. கூட்டத்தினர் முன் பேசவந்த நாஜித் தலைவர்கள், காமிராவுக்கு முன் நடிக்கும் நடிகர்களைப் போலவே நடந்து கொண்டனர். இரசிகர்களின் கவனத்தைத் திருப்புவதில் திரைப்படத்திற்குரிய ஆற்றல் (டிச்ட்ரcடிஒன்), அது சாத்தியப்படுத்தும் கூட்டு இரசனை, மின்னி மறையும் பிம்பங்கள் ஆகியன பாசிஸ்ட்டுகளுக்குப் பெருமளவில் பயன்பட்டன. வெகுமக்களின் அரசியல் பேதமையையும் மந்தத்தனத்தையும் கொலை வெறியையும் ஊக்குவிக்கவே புதிய கலையான திரைப்படம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் கலைப்படைப்பின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம், புதிய கலையான திரைப்படத்தின் சாத்தியப்பாடுகள் ஆகியவற்றை பாட்டாளி வர்க்கப் புரட்சியுடன் தொடர்புபடுத்திப் பேசும் பெஞ்சமின் கலையை அரசியல்படுத்தும் தேவையை வலியுறுத்தினார்.
இந்தப் பின்னணியில்தான் ‘இயந்திரங்கள் மூலம் பிரதி செய்யப்படக்கூடிய கலைகள்’ பற்றிய பெஞ்சமினின் ஆய்வு அமைந்திருந்தது. பெருந்திரளான உற்பத்தி- நுகர்வு, நவீனத் தொழில்நுட்பம் ஆகியன கலைப்படைப்புக்குள்ள தகுதியின் மீது ஏற்படுத்தும் விளைவுகள், தற்கால வெகுசனக் கலை வடிவங்கள் அல்லது வெகுசனப் பண்பாட்டின்மீது அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியனவற்றை பெஞ்சமின் மதிப்பிடுகிறார்:
கலைப்படைப்பு முதலில் மதச்சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றின் ஒருபகுதியாக இருந்தது. அதன் காரணமாக அது ஒரு ‘ஒளிப்பிரபையைப்’ (ஔர) பெற்றிருந்தது. இந்த ஒளிப்பிரபையே கலைப்படைப்பிற்கு ஒரு அலாதியான தன்மையை, பண்புநலத்தை, காலத்திலும் இடத்திலும் தனித்தன்மையைக் கொடுத்தது. சமயச் சடங்குகளின் ஒரு மையமான இடத்தைக் கலை பெற்றிருந்தது. இந்தச் சடங்குகளும் வழிபாடு
|
|
|
| ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் |
|
Posted by: Snegethy - 03-06-2006, 08:43 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (5)
|
 |
ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன்
By டிசே தமிழன்
எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. ஆனால் எழுதாமல் இருக்கவும் முடியாது மனது அவதிப்படுகிறது. சில தினங்களுக்கு முன், ரொரண்டோவில் ஒரு இளந்தமிழ்த்தாய் (30 வயதளவில் இருக்கும்) தனது இருபிள்ளைகளை குளிக்கும் தொட்டியில் மூழ்கவைத்து சாகடித்து தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கையில், அவர் மட்டும் காப்பாற்றப்பட்டு கொலையாளியாக (first degree murder) அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்தக் கொலையின் பின்னாலுள்ள 'கதைகள்', 'துப்பத் துலக்கும் புள்ளிகள்'இன்னபிறவற்றை அறிவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்களாய் இருப்பதால், ஒரு பிள்ளையைப் பெறுகின்ற தாயிற்கு, குழந்தை பிறக்கமுன்னரும், பிறந்தபின்னரும் வருகின்ற மனவழுத்தமும் ஒரு காரணமாயிருக்கலாம் என்று இந்தச் செய்தியை தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது அறிய நேர்ந்தது.
இதற்கு முன்பாகவும் இப்படிக் குழந்தைகள் பெறுகின்ற தாயாருக்கு ஏற்படும் அழுத்தத்தினால் தற்கொலைகள், குழந்தைகளைக் கொல்லுதல் நடந்திருப்பதை அறிந்திருக்கின்றேன். மேலும், எமது சமூகம் போன்ற ஒரு மூடிய சமுகத்திற்கு இவ்வாறான விசயங்களுக்காய் ஆலோசனைகள் பெறுவதோ, கலந்துரையாடல்கள் செய்வதோ என்பதோ அவ்வளவு இலகுவில் வாய்த்து விடுவதுமில்லை. அப்படி ஆலோசனைகள் கேட்டால், தங்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் அதிகம் மேலோங்கி இருக்கலாம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்திலிருந்து விலகியே இருக்கின்றேன். அவ்வாறு இருந்தால் தங்களை 'னடீயர்களாக'மற்ற சமூகத்தினர் அடையாளங்கண்டு கொள்வார்கள் என்று சிலர் நினைக்கும் ‘பெருமிதத்தால்’ அல்ல. எங்கள் சமூகத்தில் நடக்கும் பல அக்கிர அட்டூழியங்களைக் கேள்விப்படும்போது அதற்கு எதிராய் ஒரு சிறு சலனத்தையும் ஏற்படுத்தமுடியாத என் கையாலகாத நிலையில் வரும் சலிப்பே முக்கிய காரணம் (அதன் காரணமாகவே இதுவரை எந்த தமிழ் வானொலியோ அல்லது தொலைக்காட்சியோ வைத்திருக்கவில்லை).
எங்கள் சமூகத்தில் பெண்கள் மீதான் வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்களும் அளவில்லாது நடந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாய் இந்தப்பிரச்சினைகளின்போது குற்றஞ்செய்கின்றவர்கள் தப்பிப்பதற்கு உபயோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை, ‘என்ன சாட்சி இருக்கிறது?. அதைக் கொண்டுவா முதலில்’ என்பார்கள். நிச்சயம் பாதிக்கப்பட்டவர்கள், இன்னொருமுறை அதை நினைவுக்கு திருப்பிவர விருப்பமாட்டார்கள் என்பதோடு, அப்படி வெளிப்படையாகப் பேசும்போது இந்தச் ‘சமூகம்’ தங்களைப் பற்றிய பார்வைகளை எப்படி மாற்றிக்கொள்ளும் என்ற பயமும் அதிக சந்தர்ப்பங்களில் முதன்மைபெறுகிறது. இன்னுமே கைம்பெண்களை, விவாகரத்துச் செய்தபெண்களை இயல்பாய் ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் சிறு வயதில் பாலியல் வல்லுறவாக்கப்பட்டதை, பதின்மங்களில் பாலியல் ரீதியில் சுரண்டப்பட்டுக்கொண்டிருப்பதை எப்படி வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்கள்?
அண்மையில் ஒரு நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, தனது தோழியொருவர் நித்திரைக்குளிசைகளை எடுத்து தற்கொலைக்கு முயன்றார் என்றார். என்ன நடந்தது என்று தான் தோண்டிக் கேட்டபோது, அந்தப் பெண், தனது ஒன்றுவிட்ட தங்கையின் நிமிர்த்தம் தற்கொலை செய்ய முயன்றிருக்கின்றார் என்று அறிய நேர்ந்ததாம். இந்தப் பெண்ணை ஒரு வருடத்தின் முன் (சித்தப்பாவோ அல்லது பெரியப்பா முறையான) ஒருவர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியிருக்கின்றார். அந்தப் பெண்ணைச் சிதைத்தது காணாது என்று அந்த ‘ஆண்’ தனது சொந்த மகள் மீதும் அதே சுரண்டலைச் செய்துகொண்டிருக்கும்போது, தனது தங்கைக்கும் தனக்கு நடந்ததுபோன்று நிகழ்கின்றதே தன்னால் எதுவும் செய்யமுடியாது இருக்கிறதே என்ற மனவழுத்தத்தில் இந்தப்பெண் தற்கொலை செய்ய முயன்றிருக்கின்றார். தனக்கு என்னவெல்லாம் அந்த ‘ஆண்’ செய்தார் என்று அந்தப்பெண் விபரித்தபோது, இப்படி எந்தப்பெண்ணுக்கும் நிகழக்கூடாது என்று மட்டுந்தான் தன்னால் யோசிக்கமுடிந்தது என்று எனது நண்பர் எனக்குக் கூறியிருந்தார்.
பெண்களின் மீதான இப்படியான சுரண்டல்கள் குறித்து விரிவான தளத்தில் விவாதங்களோ, கதையாடல்களோ எங்கள் சமூகத்தில் ஆரம்பிக்கப்படாது இருக்கிறது என்பது எவ்வளவு அவலமானது. அண்மையில் யாழில் தர்சினி என்ற பெண்ணை இராணுவம் பாலியல் வல்லுறவாக்கியபோது, ‘கவிதை’ என்று ஒன்றை நான் எழுதியபோது, ஒரு தோழி கூறினார், ‘நீ இன்னொரு இராணுவத்தின் வல்லுறவைப் பெரியவிடயமாய் எழுதுகின்றாய், எங்களைப் போன்ற பெணகள் எங்கள் சமூகத்தின் அண்ணா, மச்சான், அப்பா என்ற ‘உறவுகளாலேயே’ தினமும் சுரணடலுக்குள்ளாகி வருகின்றார்கள் என்பதை நீ அறிவாயா?’ என்றார்.
பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளைப் பெண்களைத் தவிர வேறு எவராலும் சரியான விதத்தில் அடையாளப்படுத்த முடியாது. பாதிக்கப்படும் பெண்கள் அது குறித்துப் பேசுவதின் மனவழுத்தத்தைப் புரிந்துகொண்டாலும் பிற பெண்களாவது பேச முன்வரவேண்டும். ஆனால் அப்படிப் பேசவரும் பெண்களை நோக்கி நாம பிரச்ச்சினைகளில் விரிவையும் ஆழத்தைப் பற்றி அக்கறையில்லாது, நாம் முதலில் கேட்கின்ற/யோசிக்கின்ற கேள்விகளும், ‘இது உனக்கு நடந்ததா?’ என்பதுமாதிரி இருப்பதுதான் இன்னும் மிகவும் அபத்தமானது. சாதாரண விடயங்களை எழுதவருகின்ற பெண்களையே எத்தனையோ விதத்தில் நமது ஆதிக்கத்தைச் செலுத்தி அவர்களைத் துரத்துவதில், அவர்களில் குரல்களை மெளனமாக்குவதில்தானே நாம் அக்கறை கொள்கின்றோம். வலைப்பதிவுகளில் கூட இவை நிகழ்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கவில்லையா என்ன?
பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளை பதிவு செய்ய முயல்கின்றவர்கள் என்றளவில் கறுப்பி, பத்மா (தேன்துளி), பொடிச்சி, நிரூபா போன்றவர்களைக் குறிப்பிடவேண்டும். கறுப்பியின் சில கருத்துக்களோடு முரண்பாடு இருந்தாலும், எதற்கும் பயப்பிடாமல் பல விடயங்களை -முக்கியமாய்- புலம்பெயர் வாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார். பத்மாவின் துறைசார்ந்த அக்கறையும் தேர்வும் இவை குறித்த விடயங்களில் இருப்பதால் பெண்களின் பிரச்சினைகளை நேரில் கண்டு எழுதியது மட்டுமில்லாது, தனது நோக்கில் தீர்வுகளையும் முன்வைக்கின்றார். அதேபோன்று பொடிச்சி, இதுவரை நாம் பீடங்களில் அமர்த்தி ‘அழகு’ பார்த்துக்கொண்டிருந்த இலக்கியமேதாவிகளை பெண்களின் பார்வையில் கேள்விப்படுத்துகின்றார். அவர் கடைசியாக எழுதிய ஒரு பதிவு -சற்று நீண்டதாக இருந்தாலும்- மிக முக்கியமானது. நிரூபாவின் கதைகளில் பல குழந்தைகள் மீது நமது சமூகம் நடத்துகின்ற வன்முறையைப் பற்றிக்கூறுகின்றன. ‘சுணைக்கிது’ என்கின்ற அவரது அணமைய வெளியீடான தொகுப்புக்கூட குழந்தைகள் மீதான வன்முறையை உள்ளடக்கிய கதைகளைத்தான் அதிகம் அடக்கியிருக்கின்றது என்று கேள்விப்படுகின்றேன்.
சென்ற வருடம், பெணகள் சந்திப்பு மலர் பற்றிய ஒரு கலந்துரையாடலில், இவ்வாறான சம்பவங்கள் பற்றி நிறைய எழுதப்பட்டு நமது தமிழ் வெகுசன் மீடியாக்களின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் அப்படி வெளிவருகின்றபோது, பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் குழ்ந்தைகள் மீது அக்கறையுள்ளவர்கள் இன்னும் கவனத்துடன், பாதுகாப்புடன் பிள்ளைகளை வளர்க்கமுடியும் என்றும் கூறப்பட்டது. எனக்கு ஜீனியர் விகடன் இன்ன்பிற ‘வெகுசன’ ஊடகங்களில் இந்தமாதிரிச் சம்பவங்கள் வரும்போது ஏற்படும் கோபத்தையும் குறிப்பிடவேண்டும். இவ்வாறான ஊடகங்களுக்கு அந்தச் சம்பவங்களின் கோரத்தை விட அதை எப்படி ஒருவித ‘கிளுகிளுப்புடன்’ வாசகர்களுக்கு வழங்குவது என்பதில்தான் கவனம் இருக்கும் (தமிழ்ப்படங்களில் rape காட்சிகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, அந்தப்பெண்ணை ‘அந்தக்காட்சியில்’ கிளுகிளுப்பாய்’ காட்டுவதற்கு கொஞ்சமும் சளைத்தவையல்ல, பத்திரிக்கைகளும்). பாலியல் என்பது மறுக்கப்படவேண்டிய விடயமல்ல. ஆனால் பாலியல் இச்சைக்கும் இவ்வாறான பலவந்தங்களுக்கும் இடையில் வேறுபாடு காணமுடியாத அளவில் நமது ஊடகங்களும் இருப்பதுதான் இன்னும் கோரமானது.
நான் மேலே கூறிய தற்கொலை செய்ய முயன்ற பெண்ணின் தாயாருக்கு இன்னும் ஏன் தனது மகள் தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியாது. இப்படித்தான் பல விடயங்கள் மூடிமறைக்கப்படுகின்றன. அந்தப்பெண் எனது நண்பருடன் பலவருடங்களாய் தோழமையாய் இருந்தாலும், தன்னைத் தனது தோழியும் ‘தவறாகப் பார்த்துவிடுவார்’ என்று எண்ணத்தில் இந்த விடயத்தை இவ்வளவு காலமும் பகிராமல் இருந்திருக்கின்றார். எனது நண்பரும், ‘நீ எதுவும் பிழை செய்யவில்லை இதற்காய் வருந்திக்கொண்டிருப்பதில் எந்தப் பலனுமில்லை. வாழ்க்கையின் நல்ல விடயங்களை நோக்கி நகர்வதுதான் உத்தம்ம’ என்று கூறியிருக்கின்றார். எப்படி இராணுவத்தால், சாதாரண ஆணால் பாலியல் வல்லுறவாக்கப்பட்டாலும், அது பெண்களின் ‘மிகப்பெரும் தவறாக’ நமது சமூகம் பெண்களின் சிந்தனைகளை ‘அழகாக’ வடிவமைத்து வைத்திருக்கின்றது. வியப்பு என்னவென்றால், திருமணம் போன்றவற்றிற்கு முன், ‘விலைமாதரோடு’, ‘இன்னொரு பெண்ணோடு’ உறவு வைத்திருந்த ஆண்கள் பற்றி நாம் எதையும் கதைப்பதுமில்லை, கவலைபபடுவதுமில்லை. இப்படியான சம்பவங்களோடு போய் திருமணஞ் செய்கின்ற எந்த ஆணும் ‘தனது பழைய நிலையை’ நினைத்து வருந்தியதாய், மன்னிப்புக்கேட்டதாய் எங்கேயும் வாசித்தாயும் (எனக்கு) நினைவில்லை.
ரொரண்டோவில் பத்து வருடங்களுக்கு முன்பு பத்துப் பேரைக்கொலையும், பதின்நான்கு பேரை பாலியல் வல்லுறவாக்கியது என்று ஒரு வெள்ளையரைப் பற்றி வழக்குப் பற்றி அணமையில் பேசப்பட்டபோது, அவர் தான் இன்னும் பத்துக்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாய் நீதிமன்றத்தில் அறிவித்தபோதும், பாதிக்கப்பட்ட எந்தப் பெண்களும் சாட்சி கூறுவதற்கு வரவில்லை. அதுகுறித்து ஒரு உளவியல் நிபுணர், ‘இந்த நபரால பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த சம்பவத்தை மறந்து வாழ்வில் நகர்ந்துகொண்டிருக்கலாம். எனவே அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர விரும்பாததால் சாட்சி கூற வரவிருமபியிருக்கமாட்டார்கள்’ என்று கூறியது நினைவில் கொள்ளத்தக்கது.
தனிப்பட்டவளவில் எதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு. சில வருடங்களுக்கு முன், இங்குள்ள மூத்தகுடிமகன் (First Nation) ஒருவரை ஒரு ஊர்வலத்தில் அநியாயமாய் கொன்ற ஒரு பொலிஸ் உயரதிகாரி ஒரு வீதி விபத்தில் சென்றவாரம் கொல்லப்பட்டபோதும் இதையே நினைத்திருந்தேன் (அவருடைய வழக்கு இன்னும் சில வாரங்க்களில் நீதிமன்றத்துக்கு வர இருந்தது). அப்படித்தான் நமது சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு அநியாயங்களை அறியும்போது இதை -வினை விதைத்தவன் வினை அறுப்பான்- என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன்.
இந்தத்தருணம், எழுத்து என்னை -எல்லாவற்றிலுமிருந்தும்- ஆற்றும் என்று நினைத்துக்கொண்டிருந்ததை இரண்டாவது முறையாகத் தவறு என்பதைப் பொய்ப்பிக்கின்றது. எல்லாவற்றையும் மீறி இந்தக்கணத்தில் (ஒரு மகளையே தகப்பன் பாலியல் சுரண்டல் செய்வதை அறிந்துகொண்டும் எதுவுமே செய்யவியலாத நிலையில்) ஒரு ஆணாய் இருப்பதில் மிகவும் வெட்கப்படுகின்றேன்.
[url]
]http://elanko.net/pathivu/?p=123[/url]
|
|
|
| Sri Lankan maid jumps out of limousine |
|
Posted by: Vaanampaadi - 03-06-2006, 12:47 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
[March 03, 2006]
<b>
Sri Lankan maid jumps out of limousine</b>
(Gulf News Via Thomson Dialog NewsEdge)Riyadh: In a horrific incident, a Sri Lankan maid servant tried to commit suicide by jumping out of a limousine in which she was travelling.
The maid, who sustained multiple injuries and fractures, was hospitalised following the incident that took place on King Fahd Road at 10am on Wednesday in Riyadh city.
The mentally disturbed young woman, another victim of torture and beating by a Saudi family, was seen weeping all through her travel to seek asylum at the Sri Lankan embassy in the capital city. Police started investigations into the incident.
Rana, another woman who was travelling in the limousine together with the maid servant, narrated the incident thus: "For more than a year I used to go to office and come back in a limousine driven by a Pakistani national.
"On Thursday, while I was getting into the limousine, I was surprised to see a woman sitting in the car and weeping. The limousine driver told me that she wanted to go to the Sri Lankan embassy. That time, I insisted he should take me first to my work place and then to the embassy.
"On the way, I tried to console her and understand her problems. I failed in my effort as the newly-recruited maid didn't know Arabic. What I understood from her gestures was that she was beaten and harassed by the family members of her sponsor,'' the woman said.
"While she was narrating her story, all of a sudden she opened the door and jumped out of the speeding limousine. She fell in the middle of the road amidst several vehicles," Rana said. Police from the Suleimaniya district rushed to the scene and started an investigation into the incident.
Meanwhile, sources at the Sri Lankan embassy told Gulf News that it had sent an official to the police station to collect details of the incident and procedures of the investigation.
It is noteworthy that Saudi labour rules stipulate stringent punitive measures against sponsors or employers who are found guilty of harassing their workers especially housemaids.
Ahmad Al Zamil, undersecretary for the affairs of labourers at the Ministry of Labour, said that such treatment is contradictory to both the Islamic Sharia and the labour laws of the country as well. "The maid servant is entitled to get all her legitimate rights and allowances, and those found guilty will be punished and will be barred from hiring any more maids in future," he said.
The story of an Indonesian housemaid named Noor Mayani was in the limelight for a long time in Saudi Arabia after it grabbed newspaper headlines in May last year. The maid had been subjected to continuous torture and beating for a whole month at the house of a Saudi citizen. Saudi authorities took strict punitive actions against the culprits in her case.
http://www.tmcnet.com/usubmit/-sri-lankan-.../03/1426807.htm
|
|
|
| விடைபெறக் காத்திருக்கிறேன்! |
|
Posted by: Vaanampaadi - 03-05-2006, 10:47 PM - Forum: புலம்
- Replies (173)
|
 |
விடைபெறக் காத்திருக்கிறேன்! - புஷ்பராஜா
<img src='http://img96.imageshack.us/img96/8438/pusparaja3rw.jpg' border='0' alt='user posted image'>
நன்றி: ஆனந்த விகடன்
எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும் இளம்பெண்களும் முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை. இதோ இன்னும் மூன்று மாதம்தான் எனக்கு ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அதற்காக நான் பயப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. அதற்கு இன்னும் எட்டு மாதம் நான் வாழ்ந்தாக வேண்டும். உயிர் வாழ்தலின் இறுதி முயற்சியாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்கிறார் புஷ்பராஜா. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தைத் துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவர். இப்போது அரசியல் தஞ்சமடைந்து பிரான்ஸில் வசிக்கிறார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டிதான் என் சொந்த ஊர். எழுபதுகளின் துவக்கத் தில் சிங்களப் பேரினவாதத்தின் அடக்கு முறைகளை எதிர்கொள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை நோக்கித் திரும்பிய காலம். சிங்கள ஆதிக்கத்தை எதிர்க்க அஹிம்சை உதவாது ஆயுதம் தான் உதவும் என்று முடிவெடுத்து அதுவரை நான் இருந்த தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகி தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பை நானும் சிவக்குமாரன் சத்யசீலன் போன்ற சில நண்பர்களும் சேர்ந்து துவக்கினோம்.
ஈழ விடுதலையில் ஆயுதப் போராட் டத்தை முதன்முதலாகத் துவக்கி வைத்தது மாணவர் பேரவைதான். பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினராகவும் போராளியாகவும் இருந்தேன். அதே காலகட்டத்தில் ஈரோஸ் டெலோ .என்.டி.எல்.எஃப் தமிழ் புதிய புலிகள் என ஏழெட்டு அமைப்புகள் ஈழத்தில் முளைத்தன.
காக்கைகளுக்கு முன்பே நாங்கள் விழித்தெழுவோம். எமது மக்களின் உண்மையான விடுதலைக்கு எதிரியாக இருந்த சிங்களவர்களைத் தேடி அலை வோம். போர்ப் பயிற்சிக்காக பல்வேறு குழுக்களும் பாலஸ்தீனத்துக்கும் இந்தியாவுக்கும் போயின. எல்லோருக்கும் ஆயுதம் கிடைத்தது. தமிழகத்திலும் வட இந்தியாவிலும் எங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. வேதாரண்யத்தில் எங்களைக் கொண்டுவிடவும் அழைத்துப்போகவும் படகுப் போக்கு வரத்து குறிப்பிட்ட நாட்களில் இருந்தது. எல்லோரும் ஈழ விடுதலைக்காகப் போராடினோம். எனினும் நாங்களும் மற்ற ஆயுதக் குழுக்களும் விடுதலை பற்றிய தத்துவக் கோட்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தோம். இது சகோதரக் கொலையில் கொண்டு போய் எங்களை நிறுத்தியது.எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. வேறு வேறு குழுக்கள் வேறு வேறு தத்துவங்களைக் கொண்டு இருந்தன. ஆனால் அடிப்படைக் கொள்கை ஒன்றுதான்... அது தமிழ் ஈழம் அடைவது!
எண்பதுகளில் தொடங்கி இன்று வரை ஈழத்தில் சகோதர யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 6000 பேர். சுடப்பட்டும் மின்சாரக் கம்பங்களில் தொங்கவிடப் பட்டும் கொலை செய்யப்பட்ட இந்தப் போராளிகளெல்லாம் யார்? சிங்களர்களா? இலங்கை ராணுவத்தினரா? இல்லை சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகத் தங்களின் வீட்டைஇ சொந்தங் களைத் துறந்து ஆயுதம் தரித்தவர்கள்!
ஈழத்துக் கவிஞர் சிவசேகரத்தின் கவிதை ஒன்று...
துரோகி எனத் தீர்த்து
முன்னொரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றஞ் சாட்டியவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனைச்
சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச்
சுட்டது
சும்மா இருந்தவனையுஞ்
சுட்டது.....
இப்படி ஒரு சூழலில்தான் நானும் கொலை செய்யப்படுவேன் என்று பயந்தேன். ஒன்று என் எதிரிகளால். இன்னொன்று ஆயுதம் தரித்த என் நண்பர்களால். இது கொலைகாரங்க பூமி ஆயிடுச்சு. நாம இனிமே இங்கே இருக்க வேண்டாம். வேற எங்காவது போயிடலாம் என்று என் காதலி சொன்னாங்க. அதற்கு அடுத்த நாள் அதாவது 82ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டோம். என் உடன்பிறந்தவர்கள் ஒன்பது பேர். அழகான கூடு மாதிரி இருந்தது வீடு. அந்தக் கூட்டை நானேதான் கலைத்துவிட்டு என் மனைவியோடு பிரான்ஸக்கு வந்தேன். இதோ 24 ஆண்டுகளாகிவிட்டன.
உலகத்தின் எந்த மூலையில் சுற்றி அலைந் தாலும் தாயகக் கனவு என்னை அலைக் கழித்துக்கொண்டேதான் இருந்தது. தேவைக்கு அதிகமாகக் காசிருந்தால் குடிப்பேன். போதை நிறைய விஷயங்களை மனந்திறந்து பேசவும் கூடிக் கதைக்கவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. கிடைக்கிற வேலையெல்லாம் செய்தோம். ஈழத்தின் சாதீய சமூகம் எந்தெந்தத் தொழிலை எல்லாம் செய்யக் கூடாத தொழிலாக விலக்கி வைத்ததோ அதையெல்லாம் செய்தோம்.
தாய் மண்ணைத் தொலைத்து புதிய சூழலில் புதிய உறவுகளை நாங்கள் தேடிக்கொண்டோம். என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை இப்படித்தான் அந்நிய மண்ணில் கழிக்க நேர்ந்தது என்று உலர்ந்த உதட்டை ஈரப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசுகிறார் புஷ்பராஜா.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று எனக்குக் கடுமையான வயிற்று வலி. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு நாள் கழித்து மீண்டும் மிகக் கடுமை யான வலி வயிற்றைப் பிடுங்கி எடுக்க பிரான்ஸில் உள்ள மருத்துவமனைக்குப் போனேன். டாக்டர் என்னைச் சோதித்துவிட்டு உங்களுக்கு வேண்டியவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்று கேட்டார். எனக்கு என் நிலைமை புரிந்துவிட்டது. பின்பு உங்கள் கல்லீரல் புற்றுநோயால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார். என் மனைவியும் குழந்தைகளும் கதறி அழுதார்கள். என் முப்பத்தைந்து வயதில் என் அம்மாவும் அப்பாவும் இறந்தபோதுகூட நான் என் தாய் நாட்டுக்குப் போனது கிடையாது. போக வேண்டும் என்ற எண்ணம்கூட வந்தது கிடையாது. மயிலிட்டி இப்போது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என் எண்ணம் முழுக்க வேறொன்றில் இருந்தது.
ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்று நூலை எழுதும் முயற்சி அது. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற நூலை எழுதியிருக் கிறேன். அடுத்ததாக இன்னும் இரண்டு நூல்களை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஒன்று ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு. இன்னொன்று சிங்கள ஆட்சியாளர்கள் காலங்காலமாகத் தமிழர்களின் உரிமை களை எப்படியெல்லாம் காலில் போட்டு மிதித்தார்கள்... தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் எப்படி சிங்கள ஆட்சிக்குத் துணை போனார்கள் என்பதை எழுத ஆசைப்பட்டேன். அதற்குக் குறைந்த பட்சம் இன்னும் எட்டு மாதங்களாவது நான் உயிரோடு இருக்க வேண்டும்.
இங்கேஇ சென்னையில் ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். அங்கே என்னைப் போல் கேன்சர் நோயாளிகள் நிறைய பேரைப் பார்த்தேன். சின்ன குழந்தைகள் இளம்பெண்கள் என ஏராளமானோர் வெளியில் தங்களுக்கான தீர்ப்பைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்தார்கள். அங்கிருந்த சிலரிடம் பேசியபோது நான் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.
நான் மருத்துவரீதியாக இப்போது சில முயற்சிகளை எடுத்திருக்கிறேன். அது வெற்றி பெறுமாஇ தோல்வியுறுமா... தெரியவில்லை. நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. என் வீட்டார் கடவுளை நம்புகிறார்கள். இதுதான் உலகம் இப்படித்தான் வாழ்க்கை என்று விவரம் தெரியத் துவங்கிய காலத்தி லிருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பெரியாரிஸ்ட்!
தேதியை நிச்சயித்தபடி வரும் மரணத்தில் சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டு துரிதமாக முடிக்கலாம். எழுத விரும்புவதை எழுதலாம். சந்திக்க விரும்பும் நண்பர்களைச் சந்தித்து அளவளாவி மகிழலாம். ஆனால் என்ன ஒன்று... இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கப் போகிறோம் என்பதால் ஆசை கட்டுக்கடங்காமல் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை ஆசைகளும் இவ்வளவு நாள் எங்கே இருந்தன என்று தெரியவில்லை. இறுதித் தேர்வை எழுதும் மாணவன் போல் என்னை உணர்கிறேன்.
எழுதலாம் என்று அமர்ந்தால் சோர்வாக இருக்கிறது. ஆனாலும் நான் விடாப்பிடியாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கை ஊக்கம் தருகிறதென்றால் மருந்துகள் வாட்டி வதைக்கின்றன. நோயாளியாக இருக்கிறோம் என்கிற உணர்வே ஒரு படபடப்பை ஏற்படுத்துகிறது. எனக்கு ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி நடந்திருக்கிறது. இப்போது மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதற்கு என் உடம்பு ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை.
ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரைஇ இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு ஆக்ரமிக்க முயலும். எப்போதும் அந்நிய சக்திகளைவிட ஈழப் பிரச்னையில் இந்தியா நேர்மையுடனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தலையிடுவதைத்தான் போராளிகள் விரும்புவார்கள். என் விருப்பமும் அதுதான்! என்கிறார் புஷ்பராஜா.
கடைசியாக புஷ்பராஜாவுக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முயற்சியையும் அவர் உடம்பு தாங்காது என்பதால் மருத்துவர்கள் கைவிட்டு அவரது கடைசி நாட்களை சொந்த மண்ணிலேயே சென்று கழிக்கும்படி சொல்லிவிட்டார்கள்.
எனக்கேது சொந்த மண்? நான் எங்கே செல்ல முடியும்? நாளை அமையவிருக்கும் தமிழ் ஈழத்தைக் காண நான் உயிரோடிருக்க மாட்டேன். நான் பிறந்த மண்ணே... நான் வாழ முடியாத மண்ணே... ஒரே ஒரு கேள்வி உன்னிடம்... வெடி மருந்து வீச்சமில்லாத உன் தெருக்களில் எம் பிள்ளைகள் நடக்கின்ற நாள் என்று வரும் எம் மண்ணே?
|
|
|
| சுவிஸ் எங்கும் கடும் பனி காரணமாக பாதிப்பு |
|
Posted by: AJeevan - 03-05-2006, 04:34 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (2)
|
 |
<img src='http://www.swissinfo.org/xobix_media/images/keystone/2006/keyimg20060305_6524015_1.jpg' border='0' alt='user posted image'>
சுவிஸ் எங்கும் கடும் பனி காரணமாக பாதிப்பு ஏற்பட்டு
பல பாதைகள் மூடப்பட்டு போக்கு வரத்துகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இது தொடரும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
<img src='http://is.blick.ch/img/gen/d/v/HBdvH9wQ_Pxgen_r_304xA.jpg' border='0' alt='user posted image'>
ஆபத்துகள் தவிர்ந்த நேரங்களில் தனியார் வாகனங்களை பாவிக்க வேண்டாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு:
http://www.swissinfo.org/sen/swissinfo.htm...y=1141565986000
|
|
|
|