Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 293 online users.
» 0 Member(s) | 290 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,187
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,181
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,576
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,574
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,002
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,079
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,970
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232

 
  ஜேர்மனி சுட்காட் நகரத்தில் தமிழ் பெண்களை துன்புறுத்தும் இளைஞ
Posted by: விது - 03-08-2006, 08:31 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (8)

ஜேர்மனி சுட்காட் நகரத்தில் தமிழ் பெண்களை துன்புறுத்தும் இளைஞர்கள் - ஜேர்மனியிருந்து சக்தி
ஜேர்மன் சுட்காட் நகரத்தில் வாழ்ந்து வரும் தமிழ் பெண்களை ஒரு சில தமிழ் இளைஞர்கள் வலுகட்டாயமாக தங்களுடன் காதல்,மற்றும் கள்ள தொடர்புகளை ஏற்படுத்துமாறு வற்புறுத்தி வருவதாக அறியமுடிகிறது இது பற்றி மேலும் தெரியவருவதாவது,ஜேர்மனியில் சுட்காட் என்னும் நகரபகுதில் தழிழர் அதிகம் வாழுகின்றனர் அங்கு ஓரு சில இளைஞசர்களும் சமுகத்தில் நல்ல பெயர்களுடன் நடமாடும் சில இளைஞசர்களும் குடும்பத்துடன் வாழும் பெண்களினதும் திருமணமாகாமல் படித்துத்கொண்டியிருக்கும் இளம் யுவதிகளினதும் தொலைபேசி இலக்கங்களை இரகசியமான முறைகளில் பெற்று அவர்களுக்கு தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் மிரட்டி வருவதாகவும் காதலி,அல்லது திருமணம் செய் அல்லது கள்ளத்தொடர்பு வைத்து கொள் என துன்றுதியும் வருகிறார்களாம். இது விடயத்தில் இப்படியான தொடர்புகள் வைத்துள்ளவர்கள் பற்றியும் இவ்வாறான இழி செயல்களில் ஈடுபடும் நபர்களின் விபரங்கள் பற்றியும் எமது இனையத்தளத்திற்கு பல மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகள் எம்மிடத்தில் இருந்தாலும் தற்போது தகவல்களை வெளியிட எமது இனையத்தளம் விரும்பவில்லை ஏனவே இவ்வாறான சமுத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவர்கள் தயவு செய்து எமது காலாச்சார பண்புகளை மதித்து நடப்பது எமக்கும் நல்லது எமது இனத்திற்கும் நல்லது நிறுத்தி கொள்ளாத பட்சத்தில் எமது இiயைத்தளத்திற்கு கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகளை தகவல்களை தேவைப்படும் பட்சத்தில் நிதர்சனம் வெளியிடும்

http://www.nitharsanam.com/?art=15737

Print this item

  இலண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
Posted by: ஈழமகன் - 03-08-2006, 05:22 PM - Forum: நிகழ்வுகள் - Replies (13)

<img src='http://img463.imageshack.us/img463/2065/agtas6xg.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்!
Posted by: Bond007 - 03-08-2006, 02:16 PM - Forum: தமிழீழம் - Replies (9)

தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்!

இலங்கை சுதந்திரம் அடைந்த பிற்பாடு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. பின்னர் அது ஆயுதமேந்தி போராடும் ஒரு நிர்பந்ததந்திற்கு தள்ளப்பட்டது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். நான் அது பற்றி இங்கு அலசி ஆராய வரவில்லை. மாறாக இந்த தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க காலம் காலமாக சிங்கள பேரின வாதிகள் எவ்வாறு தமது முனைப்புக்களை எடுந்தியம்பினர் என்பது நமக்கு தெரிந்த ஒரு வரலாறே. தென்னிலங்கையை பொறுத்தவரை அவர்களிடம் ஒரே ஒரு நிலைப்பாடு தான் அன்று முதல் இன்று வரை உள்ளது. அதாவது தமிழ் தேசிய விடுதலையை நசுக்க தமிழ் தேசியத்pறகுள் உள்ளவர்களை பாவிப்பது. தமிழ் மக்களின் வாரலாற்றில் ஒற்றுமை என்பது ஒரு பாதகமான சொல். தமிழ் தேசியத்தில் தோன்றிய எந்த ஒரு ஜனநாயக அமைப்பும் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறு இல்லை. ஒரு தேசிய இனத்தின் விடுதலையை விட தமது சொந்த நலன்களில் அக்கறை கொண்டவர்கள் பொரும்பான்மையாக இந்த அமைப்புகளில் இருந்தமையே இதற்கான முக்கிய காரணி. 1977 தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது ஏகோபித்த அங்கீகாரத்தை தமிழ் தேசிய விடுதலைக்கு வழங்கியிருந்தனர். ஆனால் அன்று அந்த அங்கிகாரத்தை வென்ற தமிழ் தேசிய தலைவர்களே அந்த அங்கீகாரத்தை சிங்கள பேரினவாதிகளிடம் பேரம் பேசி விற்றனர். தமது சொந்த நலனில் அக்கறை கொண்ட தலைவர்களின் இந்த சதி தமிழ் தேசிய விடுதலைப் பேராட்டத்தை பின் தள்ளியதுடன் 60 உயிர்களை குடித்த யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் இருந்தது. மக்கள் தனியாக பிரிந்து செல்ல ஆணை வழங்கிய போதும் அதனை குப்பைக் கூடைக்குள் எறிந்த அந்த லைமை விட்ட தவறை யாருமே மன்னிக்க முடியது. ஆனால் இன்று கால் நு}ற்றாண்டு கழிந்த பின்னரும் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு பலமான நிலையில் இருந்தாலும் கூட அதற்கு எதிரான ஒரு பாரிய நிழல் யுத்தம் ஒன்றை நடாத்த தமிழ் தேசியத்தை சேர்ந்வர்களே முன்னெடுத்து நிற்பது தமிழ் மக்கள் மீதான ஒரு சாபமே.

80களில் வலுப்பெற்ற ஆயுதப் போராட்டம் நலிவடைய காரணமாக இருந்தது இயக்கங்களுக்குள் வந்த மோதல்கள். இந்த மோதல்கள் உருவாக முக்கிய காரணமாயிருந்தது நமது தேசிய விடுதலை மீது அக்கறையற்ற இந்தியாவும் அதன் உளவுத்துறையுமே. இந்திய உளவுத்துறையை பொறுத்தவரை தமிழ் தேசிய விடுதலைப் பேராட்டம் ஒரு பகடைக்காய். இலங்கை அரசை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் ஒரு பகடைக்காய். தமிழ் தேசிய விடுதலைக்குப் போராடிய இயக்கங்களுக்கு வேறு வேறாக பயிற்சி கொடுத்து ஆயுதங்களை வழங்கிய இந்தியா இந்த அமைப்புகளின் ஒற்றுமை விடயத்தில் மிகவும் கவனமாகவே இருந்தது. இந்தியா இராணுவ பயிற்சி அழித்த நான்கு இயக்கங்களும் தமக்குள் எப்போதும் மோதும் ஒரு முறுகல் நிலையை இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. இந்த சதி வலையில் மாட்டாது தப்பிய இரண்டு முக்கிய இயக்கங்கள். ஒன்று விடுதலைப் புலிகள் மற்றது ஈரோஸ். இந்த இரு இயக்தின் தலைவர்களும் இந்த விடயத்தில் தெளிவாகவே இருந்தனர். அது மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் தலைவர் திரு மேதகு பிரபாகரன் அவர்களும் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் உயர்திரு பாலகுமார் அவர்களும் இந்திரா நகரில் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம். இவர்கள் சந்திப்பு இந்த இரு இயக்கங்களின் நட்புறவை வளர்த்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் மேத ஆரம்பித்ததும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்த தனது அமைப்பு புலிகளுடன் இணைத்து தேசிய விடுதலையை பலப்படுத்திய பெருமை உயர்திரு பாலகுமார் அவர்களை சாரும். பாலகுமார் அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு நபாராக இருக்கவில்லை. மிகவும் எளிமையான அந்த மனிதர் தேசிய விடுதலைக்காக இந்த இணைவு அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனால் மற்றைய இயக்கங்களின் தலைமைப் பீடித்தை எடுத்துக்கொண்டால் அவற்றின் தலைமைத்துவம் எப்படி இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சித்தாந்த ரீதியில் தாம் மிகவும் நம்பிக்கையானவர்கள் என்று மார்க்சிச புத்தகங்கை கையில் எடுத்த இயக்கங்கள்இ சித்தாந்த ரீதியிலேயே தமது தலைமைகளை உருவாக்கின. மத்திய குழு ஒன்றை அமைத்து தலைமை முடிவுகள் எடுக்கும் போது அது புூரண ஜனநாகயகமான ஒரு முடிவாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் மத்திய குழு மைத்த அனைத்து தலைவர்களும் தம்மை தலைவர்களாக தக்கவைக்க செய்த அத்தனை திருகுதாளங்களையும் நாம் அறிவோம். இரண்டு தலைவர்கள் தமது இருப்பை காப்பாற்ற சொந்த தோழர்களேயே மண்ணுக்கள் புதைத்தது வரலாறு. 50வருடகால தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வந்து போன தலைமைகள் அனைத்துமே தம்மை தக்க வைப்பதில் காட்டிய ஆர்வத்தை தேசிய விடுதலைப் போராட்டத்தில் காட்டவில்லை. ஆனால் கியுூபாவின் பிடல் கஸ்ரோ போல, வியட்நாமின் ஹோசிமின் போல கொள்கை பற்றை உறியாக கொண்ட ஒரே ஒரு தலைவன் நமக்கு அமைந்ததால் தான் இன்று தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு உன்னதமான நிலையில் இருக்கிறது. இவரை நாம் தேசிய தலைவர் என்று இனியும் அழைக்காது போனால் வரலர்றில் துரோகமிழைத்தவர்களாவார்கள். 77 தேர்தல் வெற்றியை தேசிய வெற்றியாக மாற்றாத தலைமை தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜெனிவாவரை எடுத்துச் சென்றிருக்காது. வடக்கில தமிழீழமே தாரக மந்திரம் என்று முழங்கிய தலைமைகள் தெற்கிற்கு போனதும் கொந்தாய் மாத்தையா என்ற நிலைமை. இவர்களா தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பாரகள்? ஜனநாகய தலைமைகளோ அல்லது சிந்ததாந்த தலைமைகளே தேசிய விடுதலைப் போராட்டத்தை தமது சொந்த இலாபங்களுக்கே பாவித்தனர். உமா மகேஸ்வரன் ஒரு பொலிட்பீரோ வைத்திருந்தார். கூடவே ஒரு மண் வெட்டியும் வைத்திருந்தார். மத்திய குழுவில் தான் எடுக்கும் முடிவை ஆதரிக்காதவர்கள் மண்ணுக்கள் போக தான் அந்த மண்வெட்டி. சித்தாந்த ரீதியாக தம்மை வழர்க்க முற்பட்ட இயக்கங்கள் தமக்குள் முரண்பட்டு இறுதியில் சிதைந்து போயின. இந்திய உளவுத் துறையின் துணையுடன் புலிகளை அழிக்க முயன்ற அமைப்புகள் அழிக்கப்பட்டன.. நமக்கு ஒரு நல்ல தலைமை அதாவது தேசியத் தலைவர் அவர்கள் இல்லாது போயிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும். கற்பனை பண்ணி பாருங்கள். பாரிய எண்ணிக்கையான Nபுhராளிகளை ஆரம்பத்தில் கொண்டிருந்த இயக்கம் இன்று எங்கே? இவர்களை புலிகள் அழித்தாக இன்று நீலக் கண்ணீர் வடிப்பவர்களே தமது சொந்த தோழர்களை வெட்டி புதைத்தார்கள். புலிகளால் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு இயக்கம் புலிகளை அழிக்க திட்டம் தீட்டுகையில் தமக்குள் தாமே மோதி தம்மை நலிவடைந்து போயினர். இந்திய உளவுத்துறையின் அழுத்தம் காரணமாக நலிவடைந்த நிலையில் இருந்த போதும் புலிகளை அழிப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இந்த இயக்களின் உட்புசல்கள்ளே எவ்வளவு து}ரம் இவர்கள் தேசியம் மீது அக்றை கொண்டிருந்தார்கள் என்பதை நமக்கு தௌ;ள தெளிவாக தெரிய வைக்கும். விடுதலைப் புலிகளின் தலைமை அன்று முதல் இன்று வரை தேசிய விடுதலையை தவிர வேறு எதற்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை. இன்று பலாமான ஒரு கட்டமைப்பாக அது மாறியமைக்கான முன்னணி காரணம் அந்த அமைப்பின்; கொள்கைப் பற்றே.

ஆனால் பல உயிர் தியாகங்களின் உரத்தில் வலுப்பெற்றிருக்கம் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயகம், மனத உரிமை என்ற போர்வையில் சில சுயநல விருமபிகள் திசை திருப்ப முனைகிறாரக்ள. யார் இந்த விசமிகள். இவர்களின் வரலாறு என்ன? இவரகள் உண்மையிலேயே மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை மதிப்பவர்களா? அண்மையில் சுவிசில் கைது செய்யப்பட்ட ராமராசன் என்பவர் மனத உரிமை வாதியாம். ஒரு மனித உரிமை வாதியை இரண்டு வாரத்திற்கு மேல் ஒரு ஜனநாயக நாட்டு சிறையில் வைத்திருப்பது ஏன்? தன் சொந்த தோழர்களை வெட்டிப் புதைத்த தலைமையின் கீழ் வளரந்த மண்வெட்டிதான் இந்த வீரையா ராமராசன். பம்பாயில் புளட் அமைப்பின் முக்கிய நபர். இந்த நபர் இன்று சிறையில் ஆனால் இவரை விட மோசமான வரலாறு கெண்டவர்கள் ஜனநாயகம் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்த தொடரில் இந்த நபர்களை பற்றி மட்டும் இல்லாது இவர்களின் பொய்யான பித்தலாட்டமான பிரச்சாரத்திற்கு ஆப்பு வைக்கும் கருத்துகளையும் இங்கு கொண்டுவரவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு பொய்யை 100 தடவைகள் ஆணித்தரமாக அடித்து சொன்னால் அதை உண்மை என்று நம்புபவர்கள் நம்மவர்கள்.

ரீபீசி வானெலி மற்றும் கொசு, புஸ்வானம் இணையத்தளங்கள் இன்று மேற்கொண்டு வரும் பிரச்சாரம் மக்களிட்ம் எடுபடப் போவதில்லை. அனால் இவர்கள் உதிரிகளாக இல்லாது மக்களை குழப்பும் விதத்தில் ஒரு பொய்யை வேறு வேறு செய்தியாக்கி வேறு Nவுறு ஊடகங்கள் வாயிலாக இவர்கள் செய்யும் போது மக்கள் குளம்பத்தான் செய்வார்கள். இந்த குளப்பத்தை இல்லாது செய்வதும் இந்த தொடரின் ஒரு நோக்கமாகும்.

நான் முதலில் கூறியது வரலாறு. அந்த வரலாற்று பின்னணியில் இத் தொடரை தொடர்கிறேன்..

Print this item

  விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய..
Posted by: aathipan - 03-08-2006, 12:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (9)

விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து
துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள்


கொழும்பு, மார்ச்.8-

ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இலங்கை திரும்பிய விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து, கொழும்பு விமான நிலையத்தில், துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

விடுதலைப்புலிகள் போர்

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி, விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துடன்கடந்த 20 ஆண்டுகளாக போர் நடத்தி வந்தனர்.

இதில் 64 ஆயிரம் பேர் இறந்தனர்.

இதைத்தொடர்ந்து, நார்வே சமரசக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேசி, போர் நிறுத்தத்துக்குஏற்பாடு செய்தனர். போர் நிறுத்தத்துக்கும் பிறகு விடுதலைப்புலிகள் அவ்வப்போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஜெனீவாவில் பேச்சு

இந்த நிலையில் ஜெனீவாவில் கடந்த வாரம் இலங்கை அரசு பிரதிநிதிகளுக்கும், விடுதலைப்புலி தலைவர்களுக்கும் இடையே, ஜெனீவா சமரச குழுவினர் முன்னிலையில் பேச்சு நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லைஎன்றாலும், முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

துப்பாக்கிகளின் வரைபடங்கள்

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விடுதலைப்புலி இயக்க தலைவர்கள் நேற்று கொழும்பு விமான நிலையத்துக்கு விமானம் மூலம் வந்து
சேர்ந்தனர்.

அப்போது அவர்கள் கொண்டுவந்த பொருட்களை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்கள் கொண்டுவந்த பொருட்களின் இடையே துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய உயர்ரக கேமிராக்கள், தலையில் அணியக்கூடிய டார்ச் விளக்குகள், மற்றும் பல பொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றியதாக சுங்க இலாகா டைரக்டர் சரத் ஜெயதிலகே கூறினார்.

அதிவேக படகுகள்

இதைத்தொடர்ந்து விடுதலைப்புலி தலைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அதிவேக படகுகளின்உதிரி பாகங்கள், சிறிய ரக விமானங்களின் பாகங்கள், ராக்கெட் இணைக்கப்பட்ட குண்டுகள் ஆகியவற்றை ஏற்கனவே விமான பயணத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது வெளிப்பட்டது.

கடத்திகொண்டு வரப்பட்ட உதிரி பாகங்களை ஒன்றாக சேர்த்து, அதிவேகபோர் படகுகள், சிறிய விமானங்களை விடுதலைப்புலிகள் தயாரித்து இருப்பதும் தெரியவந்தது. விடுதலைப்புலிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தினத்தந்தி

Print this item

  வரதர்-ஈழத்தின் முதற் புதுக்கவிதையை எழுதியவர் (1943)
Posted by: narathar - 03-08-2006, 12:40 PM - Forum: கலைகள்/கலைஞர்கள் - Replies (2)

திசை புதிது இதழ்-1 (2003)


மூத்த எழுத்தாளர் வரதர்

ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர்.

'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை.

தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது.

1943. 06. 13 இல் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர்.

இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது.

தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி' எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது. 1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர்.

மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார்.

1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை 'மறுமலர்ச்சி' 24 இதழ்கள் வெளியாகின. ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது.

1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர்.

1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட 'தேன் மொழி'யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.

இவை தவிர 'வெள்ளி' எனும் சஞ்சிகையும் 'புதினம்' எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின.

வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் 'வரதர் வெளியீடு' ஆக வெளிவந்தன.

'வரதரின் பல குறிப்பு' அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின.

வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம்.

வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர்.

வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு 'சாஹித்திய இரத்தினம்' எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.

http://noolaham.net/library/collection/01/c01.htm

Print this item

  சித்திரை 19 ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷ ¿¡Ç¡¸ À¢Ã¸¼Éõ
Posted by: sri - 03-08-2006, 10:11 AM - Forum: தமிழீழம் - Replies (11)

சித்திரை 19 ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷ ¿¡Ç¡¸ À¢Ã¸¼Éõ


¾¢Â¡¸ò¾¡ö «ý¨É âÀ¾¢ «Å÷¸û ¯ñ½¡§¿¡ýÀ¢ÕóÐ ¯Â¢÷ ¿£ò¾ ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ Ó¾ýӨȡ¸ ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷.
§¿üÚ ¦¸¡ì¸ðÊ¡¨Ä §º¡¨Ä¸ò¾¢ø ¿¨¼¦ÀüÈ ¿¡ðÎô ÀüÈ¡Ç÷¸û ¦¸ÇÃÅ¢ôÒ ¿¢¸úÅ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ Á¡Åð¼ ¾¨Ä¨Áî ¦ºÂĸô ¦À¡ÚôÀ¡Ç÷ «Ó¾ý þó¾ ¾¸Å¨Ä ¦¾Ã¢Å¢ò¾¡÷.

§¾º¢Â Á¡Å£Ã÷ ¿¡Ç¡É ¸¡÷ò¾¢¨¸ 27õ ¿¡û «ýÚ Á¡Å£Ã÷¸û ¿¢¨É× ÜÃôÀÎÅÐ §À¡ýÚ ¾¢Â¡¸îͼ÷ «ý¨É âÀ¾¢Â¢ý 18 ¬ÅÐ ¬ñÎ ¿¢¨É× ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ ¾Á¢Æ£Æõ ±íÌõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û Ó¾øÓ¨È¡¸ ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. þÉ¢ ¬ñÎ §¾¡Úõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û «ý¨È ¿¡û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷ ±ýÚõ «Å÷ ¦¾Ã¢Å¢ò¾¡÷.

ஆதாரம் புதினம்

Print this item

  சர்வதேச மகளிர் தினம்
Posted by: கறுப்பி - 03-08-2006, 09:34 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (18)

சர்வதேச மகளிர் தினம்- பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" -
சில கருத்துக்கள்!


சர்வதேச மகளிர் தினம் (International Women?s Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணு}று ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. அது தொடர்;ந்து நடைபெற்று வருகின்றது.

~சாதாரணப் பெண்கள்| என்று கருதப்படுபவர்கள் சாதனை படைத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதுதான் சர்வதேச மகளிர் தினத்தின் சிறப்பாகும். உலகின் பல்வேறு திசைகளில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தமது உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள்.

அமெரிக்கா உட்பட ஒஸ்ரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்சலாந்து போன்ற பல தேசங்களில் பெண்கள் சம உரிமைக்காக, சம ஊதியத்துக்காக போராடியுள்ளார்கள். 1917 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்த நிலையில் ரஷ்ய பெண்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டம் ரஷ்;ய ஜார்ஜ் மன்னரைப் பதவி துறக்க வைத்ததையும், ரஷ்யப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுத் தந்ததையும் உதாரணமாகக் காட்டலாம்.

இப்படியாகத் தொடர்ந்து நடைபெற்று பெண்கள் போராட்டம் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் பெண்களுக்கு சம உரிமையையும் அடிப்படை மனிதஉரிமைகளையும் இடம்பெறச் செய்வதற்கும் வழி வகுத்தது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி MWM என்று அழைக்கப்பட்ட Militant Women?s Movement என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும் ஆண்களைப் போல் சம ஊதியம், எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற பல கோரிக்கைள் வற்புறுத்தப்பட்டன.

சர்வதேச மகளிர் தினத்தின் ஊடாகப் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்தாக்கங்கள் வலுவாக முன்வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துருவாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அதுமட்டுமல்லாது இக்கருத்துருவாக்கங்களைப் பன்முகப்பார்வைகளினு}டாகவும் கண்டு தர்க்கிக்க விழைகின்றோம். ஆழமானதும், கடினமானதுமான இந்த விடயங்களை இயன்ற வரை எளிமைப்படுத்திச் சொல்ல முயல்கின்றோம்.

முதலில் பெண்ணியத்தின் பல அம்சங்களை கவனிப்போம்.

ஆண்கள் பெற்றிருக்கின்ற சட்டபுூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த முதலாளியப் பெண்ணியம் குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்து மார்க்கசியப் பெண்ணியம் தந்தை வழிச்சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் இவை யாவும் பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது Biological Foundation ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன.

இனிச் சற்று சிக்கலான விடயத்திற்கு வருவோம்.!

பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன?

எந்த ஒரு சொல்லுக்கும் பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியானதாகும். இதன் அடிப்படையில் தான் நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்;கின்ற கோட்பாடாகும். FEMINISM என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நு}ற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நு}ற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது என்பது உண்மைதான் என்றாலும் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. 19 ஆம் நு}ற்றாண்டில்தான்! இந்தக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகி;ன்றன.

முதலாளித்துவதற்;கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்ளை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

ஆனால் Pure Feminists என்று சொல்லக் கூடிய து}ய பெண்ணியவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியம் என்பது 19 ஆம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாடுகளில் பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டி பெண்கள் எழுப்பிய குரலின் ஊடாகத் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக தீர்க்கமாக எழுப்பி வந்த குரலே பெண்ணியத்துக்கு எழுச்சியுூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.

பெண்ணியம் குறித்து இன்னும் சற்று ஆழமான பார்வைகளைக் கவனிப்போம்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை இவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL)வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY)என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

இதுவரை நேரமும் சர்வதேச மகளிர் தினம் குறித்தும் பெண், மற்றும் பெண்ணியம் என்பவை குறித்தும் மேலைத்தேய ஆய்வு முறைகள் ஊடாகச் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். இனி இவை குறித்து எமது தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் ஊடாகச் சில தர்க்கங்களை முன்வைக்க விழைகின்றோம்.

தமிழ் நு}ல்களில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தின் நு}ற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவாக்கங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் பெண் அடிமைத்தனத்தை சான்று பகருகின்றது.

உதாரணமாக தொல்காப்பியர் ஆண் மகனின் இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~பெருமையும் ஊரனும் ஆடுஉ மேன|

(தொல்காப்பியம்-பொருள்-களவு-7)

-என்று உயர்த்திக் கூறுவதை நாம் காணலாம். ஆனால் அதே தொல்காப்பியர் பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~அச்சமும் நாணமும் மடமும் முந்துறல்
நிச்சமும் பெண்பாற் குரிய|

- என்ற கோடு கீறி வரையறை செய்கின்றார். தமிழில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் படி ஆண் மகன் உரமுடையவனாகவும் பெருமைக்குரியவனாகவும் காட்டப்படுகின்றான். ஆனால் பெண்ணோ அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (The Fair Sex) இரக்கம் உடையவளாக (The Gentle sex) மெல்லியவளாக (the softer sex) உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக, செயல்திறன் அற்றவளாக (The weaker sex) உருவகிக்கப்படுகின்றாள்.

சரி இல்லத்தலைவி குறித்து தொல்காப்பியர் என்ன கூறுகின்றார்?

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும்

வல்லிதின் விருந்து புறந்தருதலும்

சுற்றம் ஓம்பலும்

(தொல்காப்பிம்-பொருள்-கற்பு-11)

-என்று இல்லத்தலைவியை தொல்காப்பியர் வரையறுக்கின்றார்.

அதாவது, ~இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும், நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், பெண்மையும், பொறுமையும், மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்துச், சுற்றம் ஓம்புகின்றவளாகவும் இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.

இவை மட்டுமல்ல நேயர்களே,

கணவன் என்பவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம்- விலைமாதர்களிடம்- சென்று வரும்போதும் அவனது மனைவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகத் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். பல நு}ற்றாண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் தொனிப்பதை பின்னர் கவனிப்போம்.

சரி, தொல்காப்பியத்தைத் தவிர பிற தமிழ் இலக்கிய நு}ல்கள் என்ன சொல்கின்றன? உதாரணத்திற்குப் புறநானு}றில் ஒரு பாடலைப் பார்ப்போம். புூதபாண்டியன் என்ற அரசன் இறந்து விடுகின்றான். அப்போது அவனது மனைவியும் நாட்டின் அரசியுமான அவனது மனைவி பெருங்போப்பெண்டு என்பவள் இந்தப் பாடலைப் பாடுகின்றாள். இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட உயரிய அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப்பாடலை ஒரு பெண்ணியப் பார்வையுூடாகப் பார்க்கும்போதுதான் அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலப்படுகின்றன.

~அனல்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட,
காழ் போனல்விளர் நறு நெய் தீண்டாது,
அடையிடைக் கிடந்த கழிப்பிழி பிண்டம்,
வெள்ளாய் சாந்தோடு புளிப்பெய்து,
அட்டவேளை வெந்தை வல்சியாக,
நீ பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்|- (புறநானு}று 246)

இந்தப்பாடலின் கருத்தென்ன?

வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளியைக் கூட்டி சமைத்த வேளை இலை ஆகியவற்றை உண்டும், பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும் கைம்மை நோற்க விரும்பும் பெண்ணல்ல நான்! எனக்கு ஈமத்தீயில் பாய்ந்து இறப்பதே மேலானதாகும்.!

என்பது இப்பாடலின் கருத்தாகும். கணவனை இழந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வழ்வு எவ்வளவு கொடுமையானது, கடுமையானது என்பதை இப்பாடலின் உட்கருத்துச் சொல்கின்றது அல்லவா! தவிரவும் இப்பாடலில் கணவன்- மனைவியின் அன்பு நிலை குறித்து ஒரு வரியிலும் சொல்லப்பட வில்லை.

பெண்கள் இவ்வாறு இறப்பதற்குப் பழைய விதிமுறைகளும் து}ண்டி விடுகின்றன. வட நாட்டு ~காசி காண்டம்| என்கின்ற நு}ல் கீழ்வருமாறு கூறுகின்றது.

கணவனோடு சதி இறங்கி உயிர் நீக்கும் பெண், தனது உடம்பில் உள்ள உரோமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் கோடிக்காலம் இன்பம் அடையும் பேற்றைப் பெறுவாள்| - இவ்வாறு பல மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் பரப்பப்பட்டன.

இதேபோலவே சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும் போது பல சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவனான கோவலன் மாதவியிடம் சென்றபோது அவனது நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவற்றையும் இழந்தபோதும் கண்;ணகி அவனைத் தடுக்கவில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தனது சிலம்பைக் கோவலனிடம் கொடுத்தானது அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவதாக உள்ளது. அதாவது கற்புக்கரசி என்பவள் தனது கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டக்கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக் கொண்டாள் என்றும் ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்;றம் சாட்டத் து}ண்டுகின்றது.

இதேபோல கண்ணகி தனது கணவன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன் வீறு கொண்டு எழுந்து அரசனிடம் சென்று வாதிட்டு நீதியை நிலைநாட்டும் போது இங்கே இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகவும் காணமுடிகின்றது. இருவேறுபட்ட நிலைகளை இங்கே காண்கின்றோம்.

இப்படியாக கற்பு என்ற சொல்லை வைத்து பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது. எமது இனம் கற்பின் பெயரால் கடும் மூடநம்பிக்கைகளை மதம் சார்ந்த சடங்கு நெறிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை இலக்கிய நு}ல்களும் புராண நு}ல்களும் பரப்பின.

கற்பு என்பதற்குப் பலவிதமான பொருட்கள் சொல்லப்பட்டன. கன்னிமையைக் காத்தல், பதிவிரதா தர்மத்தைப் பேணுதல் என்ற கருத்தாக்கங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. சங்கக் காலம் எனக் கருதப்படும் காலத்தில் கற்பு என்பது கணவனுக்கு உண்மையாக நடப்பதாகும். பின்னர் வந்த புராண காலத்தில் கணவனின் அடிமை மனைவியாவாள் என்ற கருத்தாக்கம் கற்பு என்பதன் பெயரால் உருப்பெற்றது. கற்பு என்ற கருத்தாக்கம் பெண்ணை அடக்கி அடிமைப்படுத்தி உடமைப் பொருளாக்கி இருட்டுலகில் தள்ளி விட்டது என்ற நவீனப் பெண்ணியவாதிகள் கடுமையாகச் சாடி வருகின்றார்கள்.

~ஆண்- பெண் இருபாலாரும் சரி சமமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமென்றால் கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும் கொள்கையும் மாற்றப்பட்டு ஆண்- பெண் அனைவருக்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும்| என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

இன்று உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழீழத்தில் பெண் விடுதலை என்பது முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதைப் பெருமையுடன் காணக்கூடியதாக உள்ளது.

தமிழீழச் சுதந்திரப் போராட்டம் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது முக்கியமான காரணமாகும். இன்று தமிழீழப் பெண்ணானவள் தன்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக தனது பெண்ணினத்தின் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடுகின்றாள். இவளது விடுதலைப் போராட்டம் விரிந்து பரந்து இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.

பெண் விடுதலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து ஈண்டு கவனிக்கதக்கதாகும். உலகின் உயரிய சிந்தனாவாதிகளின் சிந்தனைக்கு இணையாக இச்சிந்தனையும் உள்ளதாகவே நாமும் எண்ணுகின்றோம். எமது தேசியத் தலைவர் சிந்தனையாளராக மட்டுமிராது அவற்றை செயற்படுத்தக் கூடிய செயல் வீரனாகவும் திகழ்வது அவரது இச்சிந்தனைக்கு மேலும் அர்த்தமூட்டுவதாகவே அமைகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு கருத்தை இங்கே தருவதில் மகிழ்சி கொள்கின்றோம். பெண்ணின் சம உரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளை அதற்குரிய கௌரவத்தையும் தேசியத் தலைவர் குறிப்பிடுகின்றார்.

பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது!
பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக,
ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக,
இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு,
பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது.
ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.

இக்கட்டுரைக்கு கலாச்சாரத்தின் வன்முறை, பெண்ணியம்- அணுகுமுறைகள், கற்பு -கலாச்சாரம், காலம் தோறும் பெண், புறநானு}று, தொல்காப்பியம், வெள்pச்சம், எரிமலை போன்ற நு}ல்களும் சஞ்சிகைகளும் பயன்பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.


இவ் ஆய்வு 06.03.06 அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல்| வானொலியின் ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.

http://www.tamilnaatham.com/articles/

Print this item

  வணக்கம்!
Posted by: siddu - 03-08-2006, 09:09 AM - Forum: அறிமுகம் - Replies (36)

வணக்கம்
அனைத்து யாழ் கள உறுப்பினர்களுக்கு எனது அவை
அடக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் நீண்ட கால யாழ் கள பார்வையாளராக இருந்து இப்போழுது
உங்கள் பங்காளியாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
வாழ்க தமிழ் தேசியம்! வளர்க தமிழ் தேசியம்!

Print this item

  ஈழமும் சுகாதாரமும்
Posted by: Thinava - 03-08-2006, 01:01 AM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

ஈழமும் சுகாதாரமும்

உடல் நலம் சுகாதாரமாக இருந்தால்
மன பலம் வலுவாக இருக்கும்
நோயானது ஒரு சில நொடியில்
பல வடிவத்தில் எம்மை ஆண்டு
எம் வாழ்க்கைப் பயணத்தை
குறிகிய கட்டத்தில் நிறுத்திவிடும்

சிங்களவன் சில தசாப்த காலங்களாக
பாரம்பரிய தமிழினத்தை பரிதவிக்க வைக்கின்றான்
இரசாயனக் குண்டுகளால் முத்தான ஈழத்தின்
இயற்கைக் காட்சிகளை நாசமாக்கி
அசுத்தமான வாயுக்களை எம்மினம் சுவாசித்து
பலவகை சுவாச நோய்களால் பரிதவிக்கின்றனர்

இயற்கையான காற்றோட்டத்தில் சுதந்திரமாக
சுய தொழிலில் வாழ்ந்த தமிழினம்
செயற்கையான காற்றோட்டத்தில் மூச்சுத்திணறி
செய்வதறியாது தவிக்கின்றது நோய்களால்
திலீபன் நடமாடும் மருத்துவமனை- தன்
சேவையைச் சிறப்பாகச் செய்தாலும்
போதிய தமிழ் மருத்துவர்கள் அல்லா குறை
தமிழீழத்தில் எப்போது நிவர்த்தியாகும்?

புலம் பெயர்ந்து வெளிநாட்டில் சேவை செய்யும்
தமிழின மருத்துவர்கள்.
ஒரு வருடம் அல்லது இரு வருடத்தில் ஒரு சில
வாரங்களை ஈழத்தில் சென்று சேவை ஆற்றினால்
தமிழீழ மக்களிற்கு அது ஒரு வரப்பிரசாதமாகும்.
சேவையாற்றும்-ஆற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு
ஈழத்தமிழ் மக்கள் சார்பாக என் நன்றிகள் !!!

தினவா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கனடா
[img][/img]

Print this item

  78வது ஓஸ்கார் திரைப்பட விழா
Posted by: AJeevan - 03-07-2006, 09:13 PM - Forum: குறும்படங்கள் - Replies (2)

<b>78வது ஓஸ்கார் திரைப்பட விழா பற்றிய தகவல்களுக்கு</b> :-
<img src='http://www.oscarwatch.com/moveabletype/archives/paul0306.jpg' border='0' alt='user posted image'>

http://www.oscars.com/

http://www.oscars.org/

http://www.oscar.com/nominees/list.html

Quote:March 05, 2006
Winners for the 78th Academy Awards
Ebert, Roeper and David Carr and Adam at Oscar Beachouse, and Robert Butler of the Kansas City Star - the only ones who predicted Crash to take Best Pic. Just goes to show you, sometimes the general consensus will let you down. Tom O'Neil almost gets a prize for almost predicting it, as does David Poland who also almost predicted it then retracted it. Brokeback Mountain deserved to win. I'll just leave it at that.

Best Picture: Crash
Best Director: Ang Lee, Brokeback Mountain
Best Original Screenplay: Crash
Best Adapted Screenplay: Brokeback Mountain
Best Actress: Reese Witherspoon, Walk the Line
Best Cinematography: Memoirs of a Geisha
Best Actor: Philip Seymour Hoffman, Capote
Editing: Crash
Foreign Language: Tsotsi
Sound Editing: King Kong
Best Song: It's Hard Out Here for a Pimp
Best Sound Mixing: King Kong
Original Score: Brokeback Mountain
Art Direction: Memoirs of a Geisha
Documentary Feature: March of the Penguins
Documentary Short: A Note of Triumph: The Golden Age
Best Supporting Actress: Rachel Weisz, The Constant Gardener
Makeup: Chronicles of Narnia
Costumes: Memoirs of a Geisha
Animated Short: The Moon and the Son
Live Action Short: Six Shooter
Best Animated Feature: Wallace and Gromit: Curse of the Were-Rabbit
Best Visual Effects: King Kong
Best Supporting Actor: George Clooney, Syriana

Quote:<b>IFP Spirit Awards</b>

The Spirit Awards have traditionally meant that whatever wins there loses at the Oscars - won't be the case this year as Brokeback continues its full steam ahead:

Best Feature: "Brokeback Mountain"
Producers: Diana Ossana and James Schamus

Best Director: Ang Lee, "Brokeback Mountain"

Best Screenplay: Dan Futterman, "Capote"

Best First Feature: "Crash"
Director: Paul Haggis
Producers: Cathy Schulman, Don Cheadle, Bob Yari, Mark R. Harris, Bobby Moresco, Paul Haggis

Best First Screenplay: Duncan Tucker, "Transamerica"

John Cassavetes Award: "Conventioneers"
(For the Best Feature made for under $500,000)
Director: Mora Stephens
Writers: Mora Stephens and Joel Viertel
Producer: Joel Viertel

Best Supporting Female: Amy Adams, "Junebug"

Best Supporting Male: Matt Dillon, "Crash"

Best Female Lead: Felicity Huffman, "Transamerica"

Best Male Lead: Philip Seymour Hoffman, "Capote"

Best Cinematography: Robert Elswit, "Good Night, and Good Luck"

Best Foreign Film: "Paradise Now"
Director: Hany Abu-Assad

Best Documentary: "Enron: The Smartest Guys in the Room"
Director: Alex Gibney

Print this item