![]() |
|
தொடர் கவிதை - கருத்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தொடர் கவிதை - கருத்துக்கள் (/showthread.php?tid=626) Pages:
1
2
|
- Selvamuthu - 03-05-2006 வணக்கம் ரமா, கள உறவுகளே. இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள். ஆனால் ஒன்று இல்லை இரண்டு: (1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள். (2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள். கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன். தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும். நன்றி - வர்ணன் - 03-05-2006 <b>தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்</b>. ஆசிரியரின் கருத்து சரியானதே! ரமா அவசரத்தில் எழுதி இருக்கலாம் அதனால் சில பிழைகள் ஆச்சோ தெரியல -! 8) இருந்தாலும் எனக்கும் குட்டுறீங்க போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> -இப்பிடி <b>"கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்." </b> தவறுதான் - திருத்தி & திருந்தி கொள்கிறோம் :roll: - சுடர் - 03-05-2006 என்ன சிநேகிதி இடையில வந்து திருத்திக்கொண்டிருக்கிறீங்க அடுத்த தடவை சேர்த்து எழுதலாமே
- Selvamuthu - 03-05-2006 வர்ணன் வணக்கம் நான் யாருக்கும் குட்ட வரவில்லை. களத்திலே நான் அடிக்கடி கூறும் கருத்தைத்தான் இங்கேயும் குறிப்பிட்டேன். தவறுகள் எதனையும் "முளையிலே கிள்ளுவது" நல்லதுதானே! - Snegethy - 03-05-2006 சொறி சுடர்....நான் கவிதை எழுதப் படித்துக்கொண்டிருக்கிறேன். - RaMa - 03-05-2006 Selvamuthu Wrote:. உங்கள் கருத்துக்களை எற்றுக்கொள்கின்றோம். அறியமால் விடும் பிழைகளை சுட்டி காட்டுங்கள் ஆசிரியாரே. எனது பிழையை திருத்தி விட்டேன். இனி தொடர்வோம். - சுடர் - 03-05-2006 Snegethy Wrote:சொறி சுடர்....நான் கவிதை எழுதப் படித்துக்கொண்டிருக்கிறேன். அப்ப நாங்க என்னவாம் இப்பதான் கவிதைல ஆனா ஆவண்ணாவே அழிச்சு அழிச்சு எழுதுறம் :oops: :oops: - Snegethy - 03-05-2006 சுடர் Wrote:Snegethy Wrote:சொறி சுடர்....நான் கவிதை எழுதப் படித்துக்கொண்டிருக்கிறேன். :oops: :oops: நானும் தான். - Snegethy - 03-05-2006 ஆஆஆ ஒரு நிமிடத்துக்குள்ள சுடர் பதிந்துவிட்டாரே....... - வர்ணன் - 03-05-2006 hock: hock: மன்னிக்கவும் சுடர்- நான் - எழுதி கொண்டு இருக்கேக்க நீங்க அனுப்பிட்டிங்க அதுதான் நடந்தது :roll: - சுடர் - 03-05-2006 varnan Wrote: பரவாயில்லை வர்ணன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அனைவரும் யோசித்து எழுதுவதற்கு நேரம் எடுக்கும் போது இவ்வாறான தவறுகள் நடப்பது வழமை. அதை பொறுத்துக் கொண்டு முன்னோக்கிசெல்வது நம்கையில்தான் தங்கியிருக்கிறது. ஒரு விடயத்திற்கு இருவரும் எழுதியாகிவிட்டது என்று தயக்கமடையாது தொடர்ந்து செல்லலாம். என்ன இரண்டு தரம் எழுதும் போது இன்னும் எங்களைப் புடம் போடலாம் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-05-2006 நல்ல முயற்சி நன்றாக இருக்கிறது சின்ன விண்ணப்பம்.. கவிதைகளை இந்த தலைப்பில் எழுதிக்கொண்டு.. கருத்துக்களை தனியாக எழுதலாமே.. கவிதைகளை தொடராக படிப்பதற்கு இலகுவாக நன்றாக இருக்கும். :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 03-05-2006 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆகா..நன்றாக போகிறதே..தொடர்..கவிதை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் செல்வமுத்து அங்கிள் சொன்ன ஒரு விடயத்தை நானும் திருப்பி சொல்ல நினைக்கிறேன்(தவறெனில் மன்னிக்கவும்) கவிகளை 10 வரிக்குள் எழுதினால்..சின்ன சின்ன கவிகளாக தொடர அழகாக இருக்கும். அத்தோடு...அடுத்து எழுத இருப்பவருக்கும்..கொஞ்சம் சுலபமாக இருக்கு மல்லவா? :roll: :roll: அப்போ கவி இதுவரை எழுதாதவரும் குட்டி குட்டியாக தொடர முயற்சிக்க இலகுவாக இருக்கும்.. என்ன நினைக்கின்றீர்கள்..:roll: அத்தோடு தமிழ் அக்கா சொன்னதும் நல்ல ஐடியா தான்
கவிதைத் தொடர்-கருத்துக்ககள் - Snegethy - 03-05-2006 நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம். Re: கவிதைத் தொடர்-கருத்துக்ககள் - ப்ரியசகி - 03-05-2006 Snegethy Wrote:நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம். ஆகட்டுமுங்க..அப்பிடியே செஞ்சுடுறோம் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Selvamuthu - 03-05-2006 ரமாவின் ஆரம்ப கவிதையும் அடுத்தடுத்து இருந்த வேறு சில கவிதைகளையும் இங்கே காணவில்லையே! எங்கே போய்விட்டன என்றுபார்த்தேன். அப்போதுதான் அவை தொடர் கவிதைப் பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டதாக அறிந்தேன். நன்றி - அனிதா - 03-05-2006 http://www.yarl.com/forum/viewtopic.php?t=9921 இந்த லிங் ல பாருங்க அனித்தா நன்றி - Selvamuthu - 03-05-2006 அனித்தா நன்றி நான் அதனை எழுதிமுடித்து அனுப்பிய பின்னர்தான் களப்பிரிவிற்குள் சென்று பார்த்தேன். உங்கள் உதவிக்கு எனது நன்றி. - sankeeth - 03-05-2006 ஆசிரியரே! இந்த முயற்சி நல்ல முயற்சி. சகி சொன்ன மாதிரி கருத்தை ஓரிடத்திலும் கவியை ஓரிடத்திலும் எழுதலாமே? - வர்ணன் - 03-06-2006 எனது தனிப்பட்ட கருத்துதான் -! தொடர்ந்து உற்சாகமாக கவிதை எழுதினாலும் சரி பிழைகளை சுட்டி காட்டவும்-வழி நடத்தவும் - சிலர் இருக்கணும்! இல்லைனா நாங்க எழுதினதுதான் - கவிதை என்று எமக்குள் ஒரு வட்டம் போட்டு - சரி பிழை - கவிதை வரைமுறை தெரியாம - எல்லாமே வீணாய்போயிடும்-! ஆகவே கவி ஆற்றலும் - தமிழ் ஆற்றலுமுள்ள இளைஞன் - தமிழினி- ஆசிரியர்- போன்றவர்கள் - ஒரு கடமையாய் நினைத்து -வழி நடத்தணும்- உதவி செய்யணும் - எல்லாரையும் ஊக்கபடுத்தணும் - என்று நினைக்கிறேன் -! வெளியிலிருந்து வெறும் வாசகர்களாய் இருப்பவர்களுக்கும் - உங்கள் நெறிபடுத்தலை பார்த்து கவிதை விடயத்தில் முயற்சி செய்தால்- முகம் தெரியாத உறவுகளின் நன்றிகளும் - உங்களை சாரும்! ஒரு தகவல் துணையாகவும் இருக்கும் - பலருக்கு-! ஒவ்வொருவர் கவிதையின்மீதான உங்கள் - கருத்துக்கள் அவசியம்-! அப்போதான் நிறைய விடயங்களை -கவி எழுத - கன்னிமுயற்சி செய்பவர்கள் - அறிந்து கொள்வார்கள்-! கவிதை எழுதி ஏற்கனவே பழக்க பட்டவர்கள்- தாம் விட்ட பிழைகளை தெரிந்து கொள்வார்கள்! 8) |