Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 287 online users.
» 0 Member(s) | 285 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,320
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,298
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,643
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,075
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,467
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,502
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,040
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  கோயிகள் வழிபடவா?பணம் சம்பாதிக்கவா?
Posted by: Mathan - 12-16-2004, 01:01 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (18)

கோயிகள் வழிபடவா? பணம் சம்பாதிக்கவா?

திருமுருகன் வரையறுக்கப்பட்ட வர்த்தக நிறுவனம்

புலம் பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் உள்ள இந்துக் கோயில்கள் குறித்து நான் சிந்திப்பது உண்டு. அந்த கோயில்கள் அமைக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன?

கோயில்களுக்கு வருகின்ற சனம் மனம் நிறைஞ்சு ஆத்ம சுகம் அடைஞ்சு போக வேணும் எண்ட நோக்கத்திற்காக அவை அமைக்கப் பட்டிருந்தால் உத்தமம். அல்லது ஆகக்குறைந்தது தேசம் விட்டு வந்து திக்கொன்று திசையொன்றாகி போய்விட்ட தமிழர் கூடிச் சந்தித்து ஊர்ப்புதினங்கள் பேச ஒரு இடம் என்ற நோக்கில் அமைக்கப் பட்டிருந்தால் கூட அதுவும் உத்தமமே.

-அதென்ன ஊர்ப்புதினங்கள் என்று கேட்வர்களுக்காக ஒரு சில உதாரணங்களை தரலாம் என்றிருக்கின்றேன்.

உதாரணம் 1 - இஞ்சை உந்த சீலை சிறிலங்காவில எடுத்ததோ, நல்ல வடிவாக்கிடக்கு, உதே மாதிரி ஒரு சீலை நானும் எடுக்க வேணும்.-

உதாரணம் 2 - நேற்று பின்னேரமப்பா உந்த தேவான்ரை மூத்த மகள் வாணப்பில (யேர்மன் வார்த்தை. ரயில்வே ஸ்ரேசன்) நிண்டு ஒரு அரை மணித்தியாலமா ரெலிபோனில ஆரோடையோ சிரிச்சு சிரிச்சு கதைச்சுக் கொண்டு நிண்டவள். தேப்பனிட்டை ஒருக்கா சாடை மாடையாச் சொல்லி வைக்க வேணும்.-

உதாரணம் 3 - என்ன உம்மடை மூத்த மகளுக்கு இன்னும் காட் கிடைக்கேல்லையோ? ஆரும் B காட் உள்ள பொடியனாப் பாத்து கலியாணத்தை கட்டி வையுமன். எனக்கு தெரிஞ்சே ரண்டு மூண்டு பொடியள் இருக்கிறாங்கள்.

ஆனால் வெளிநாடுகளில் கோயில்கள் வர்த்தக நோக்கம் ஒன்றிற்காவகவே அமைக்கப்பட்டிருக்கின்றனவோ என்று தான் நான் நினைக்கிறன். அட கோயில்களும் கோயில்கள் மாதிரி இல்லை. ஏதோ சினிமாவுக்கு செட் போட்ட மாதிரி.

போன வருசம் சுவிஸ் போயிருந்தன். (அப்பாடி நான் சுவிசுக்கும் போயிருக்கிறன் எண்டதை ஒருமாதிரி எல்லாருக்கும் சொல்லிப்போட்டன்.) அப்ப அங்கை ஒரு கோயிலுக்கு என்னை கூட்டிக்கொண்டு போயிருந்தவை. ஏதோ ஒரு குகைக்குள்ளை போற மாதிரி எல்லாம் போய் குடோன் மாதிரி ஒரு பெரிய கட்டடத்தின் ரண்டாவது மாடியில் ஒரு நீள் சதுர அறையில் பிள்ளையார் கூலாக குடியிருந்தார். (ஆகமமாவது விதியாவது). முசுப்பாத்தி என்னவெண்டால் ஐயர் தீபம் காட்டி கற்பூர விளக்கெல்லாம் ஏத்த இருந்தாப் போல Fire Alarm அடிக்க தொடங்கிட்டுது. எனக்கு சரியான சிரிப்பு வந்திட்டுது.

நான் நக்கல் அடிக்க வில்லை. அதுவும் சாமி விடயம் நக்கல் அடிக்க மாட்டன். ஆனால் பாருங்கோ எதுக்கு உப்பிடி கோயில் அமைக்கினம் எண்டு எனக்கு சரியான கேள்வி. ஆரும் சொல்லலாம் நாங்கள் எங்களாலை முடிஞ்சதைத் தானே செய்ய முடியும் எண்டு. ஆனால் நான் பாத்த வரையிலை சுவிஸிலை எத்தினை கோயில் தெரியுமோ? கன்ரோனுக்கு கன்ரோன் கோயில். என்ரை கேள்வி என்னவெண்டால் ஏன் எல்லா கோயிலும் ஒண்டு சேர்ந்து பொதுவான ஒரு இடத்தில ஒரு பெரிய கோயிலைக்கட்டி அங்கை எல்லாச் சாமிமாரையும் வைச்சு பேணக் கூடாது. இங்கைதான் சரியான பதில் வருது.. அது தான் வர்த்தகம். அப்படி ஒருங்கிணைப்பதால் காசு பாக்க முடியாது. ச்சீ என்ன ஒரு வெட்ககேடு

[Image: kovil.jp]

இந்த படத்தில் நான் இணைச்சிருக்கிற கோயில் அவுஸ்ரேலியா சிட்னியில் இருக்கின்ற சிவா விஷ்ணு கோவில் ஆகம விதிப்படி அமைக்கப் பட்டிருக்கின்ற நல்ல விசாலமான கோவில். இந்தியர்களின் அதிகூடிய பங்களிப்போடு அமைக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக நோக்கம் இருக்கக்கூடும். ஆயினும் மூலைக்கொரு குட்டிக் கோவில் கட்டாமல் மிகப்பெரிதாய் அமைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் கோயில்கள் இருக்கக்கூடும் என்று இந்த கோயிலைப் பார்த்த பின்னர் நான் உணரத்தொடங்கினேன்.

இந்தப்படத்தில் நிற்பது நானேயாகினும் ஏதோ என்படத்தையும் இந்த வலைப்பதிவில் எப்படியாவது திணிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை நான் இங்கு இணைக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே புரிந்து கொள்ளாவிட்டாலும் அது பிழையில்லை என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேணும்.

நன்றி - சயந்தன்

Print this item

  ஜே.வி.பி. சமாதானத்திற்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டுள்ளது - க
Posted by: KULAKADDAN - 12-15-2004, 09:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

ஜே.வி.பி. சமாதானத்திற்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டுள்ளது - கொடையாளி நாடுகள் கண்டன அறிக்கை


போர்நிறுத்த ஒப்பந்ததிற்கு எதிராக ஜே.வி.பி.யினர் ஆர்ப்பாட்டம்
இலங்கை சமாதானத்திற்கு எதிரானதும், நோர்வேயின் அனுசரணை முயற்சிகளுக்கு எதிரானதுமான ஒரு நிலைபாட்டை ஜே.வி.பி. கட்சி கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டியும், கண்டனம் தெரிவித்தும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இலங்கை கொடையாளி நாடுகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

நேற்று செவ்வாய்கிழமையன்று இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்திருந்த இக்கொடையாளி நாடுகளின் பிரதிநிதிகள், அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு குறித்து தாங்கள் விசனமடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதி கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி மேற்கொள்ளும் முன்னெடுப்புகளுக்கு தங்களது முழு ஆதரவு உண்டு என்று இக்கொடையாளி நாடுகளின் பிரதிநிதிகள் உறுதி வழங்கியுள்ளனர்.

அரசின் மீதோ அரசின் இடம்பெற்றுள்ளக் கூட்டணிக் கட்சிகள் மீதோ அழுத்தம் தரும் வகையில், இவ்வாறான கடும் தொனியுடன் சர்வதேச சமூகமோ அல்லது வேறு எந்த வெளிநாடுமோ அறிக்கை விடுவது என்பது இதுவே முதல் முறை.

இந்த அறிக்கை தொடர்பான உத்தியோகப்பூர்வ பதில் எதுவும் இதுவரை அரசிடம் இருந்தோ ஜே.வி.பி.யிடம் இருந்தோ இதுவரை வரவில்லை.

பத்திரிகையாளர் கருத்து

சமாதான முன்னெடுப்புகளுக்கு சாதகமான ஒரு சூழல் தென்னிலங்கை அரசியலில் நிலவவில்லை என்பது சர்வதேச கொடையாளி நாடுகள் அறிந்த விடயம்தான். அது குறித்து இந்த நாடுகள் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்த கண்டன அறிக்கை அமைந்துள்ளதென 'வீரகேசரி' பத்திரிகை ஆசிரியர் தேவராஜ் தெரிவித்தார்.

சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்பட்டால்தான் நிதி உதவி கிடைக்கும் என்று கூறி சலிப்படைந்து விட்ட இந்த நாடுகள் இலங்கையின் மீது நேரடியாக அழுத்தம் தரத் துவங்கியுள்ளன என்று தான் கருதுவதாக குறிப்பிட்டார் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் அரசுக்கும் அதில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. கட்சிக்கும் மட்டுமின்றி, தென்னிலங்கையின் அரசியல் சக்திகள் அனைத்திற்குமே இந்த அறிக்கையில் செய்திகள் அடங்கியிருப்பதாகவும்; நேரடியாக இல்லாவிட்டாலும் விடுதலைப் புலிகளுக்குண்டான செய்தியும் கூட இதில் பொதிந்திருப்பதாகவும் தேவராஜ் கருத்து தெரிவித்தார்
from BBC tamil

Print this item

  கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்?
Posted by: Mathan - 12-15-2004, 06:20 PM - Forum: சினிமா - Replies (118)

கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்

வருஷத்திற்கு மூன்று ஹிட் கொடுக்கிற விஜய் 'கம்'மென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய விக்ரம்? இருக்கும் இடம் தெரியாத பரம சாது. சரி, சூர்யா? எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.


முன்னணி ஹீரோக்களே இப்படி கண்ணியம் காக்கும்போது ஆறுநூறு தமிழர்களுக்கு கூட முக பரிட்சயம் இல்லாத ஜெய் ஆகாஷ் போடும் ஆட்டம் லோக்கல் கரகாட்டத்தையே தோற்கடித்துவிடும்.



'அமுதே' என்றொரு படம். பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும் ஐம்பது நாளில் 'பர்ஸ்ட் காப்பி' ரெடி பண்ணும் எழில், இதன் டைரக்டர். ஜெய் ஆகாஷ், உமா என்று சின்னச் சின்ன ஸ்டார்கள் தானே.. நாற்பது நாள்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்பது எழிலின் திட்டம். படத்தின் புரொடியூசர்களும் தடையில்லாமல் பணம் செலவழிக்க தயார். ஆனால் இதற்கு ஒரே தடை... படத்தின் ஹீரோ ஜெய்ஆகாஷ்.





தேவையில்லாதது எல்லாம் குப்பை தொட்டியில் சேர்வது போல, வாரத்திற்கு நாலு படம் 'புக்'காக கால்ஷீட்டை தன் போக்கில் சொதப்புகிறார். யாராவது இது பற்றி கேட்டால், ஒரே படத்தில் நடிக்க நானென்ன படமில்லாமல் இருக்கிறேனா என்று மளிகை கடை லிஸ்ட் ஒன்றை காட்டுகிறார். ஜெய் ஆகாஷ் நடிக்கும் படப்பட்டியல் அது.



ஜெய் ஆகாஷின் இந்த லொள்ளால் 'அமுதே' படம் அமுல் பேபியாக ஆறு மாசத்தில் முடியுமோ.. ஆறு வருடத்தில் முடியுமோ என தட்டுத்தடுமாறி திண்டாடிக்கொண்டிருக்கிறது.



அளவுக்கு மீறினால் அஜீரணம்தான் மிஞ்சும் என்று உண்மையை ஜெய் ஆகாஷுக்கு யாராவது எடுத்துச் சொல்லக்கூடாதா?


Thanx: Cinesouth

Print this item

  உங்களுக்கு காதல் பற்றி என்ன தெரியும்.....??
Posted by: tamilini - 12-15-2004, 04:45 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (42)

உங்களுக்கு காதல் பற்றி என்ன தெரியும்.....?? நிறைய தெரியுமா..?? இங்கு சென்று பரிசோதியுங்கள்...!

http://www.webulagam.com/women/teenage/200...02/lovetest.htm


உங்கள் காதல் வெற்றி பெறுமா...?? காதலிப்பவர் மட்டும்...??

http://www.webulagam.com/women/teenage/200...02/lovetest.htm

இது தான் காதலா...??

http://www.webulagam.com/women/teenage/200.../22_teenage.htm

Print this item

  உதவுங்கள்
Posted by: Suji - 12-15-2004, 02:40 PM - Forum: கணினி - Replies (2)

நான் ஒரு மென்பொருள் பதிவிறக்கம் செய்தேன் அது iso ஆக இருக்கிறது அதை எப்படி பதிவு செய்வது . நான் winiso மென்பொருள் உபயோகித்தேன் முடியவில்லை யாரவது உதவி செய்யுங்கள்

Print this item

  யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம்
Posted by: KULAKADDAN - 12-15-2004, 01:39 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (19)

யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம்
அனைவரும் பத்திாிகையில் பாா்த்திருப்பீா்கள். யாழ் குடாவின் நிலகீழ் நீா் வளம், வரையறைக்குட்பட்டது, அதன் சமநிலை வருடந்தம் பெய்யும் பருவமழையினால் பெணப்படுகிறது.
நன்னீரானது ஒரு குவிவில்லை வடிவில் உவர் நீாின் மேல் மிதந்தபடி காணப்படுகிறது. அளவுக்கதிகமான பாவனை நன்னீா் உவர் நீாி சமநிலையை பாதிப்பதோடு உவர் நீா் மேலெழுந்து நன்னீா் கிணறுகள் உவ÷ நீராக மாற காரணமாகிறது. இதற்கு உ-ம் அாியாலை, தீவு பகுதிகளில் முன்னா் குடிநீருக்கு பயன்படுத்திய கிணறுகள் உவராகியிருப்பது.
விவசாய செயற்பாட்டிற்கும் இந்நீரே பயன் படுத்தப்படுகிறது. பாரம்பாிய நீா் பாசன முறையில் அதிகளவு நீ÷ விரையமாகிறது. அத்துடன் பயிா்களுக்கு இடப்படும் உரம், விசிறப்படும் பீடை நாசினிகள் கழுவிச்செல்லப்பட்டு மீண்டும் நிலகீழ் நீரை அடைந்து மாசக்கமடைய காரணமாகிறது.
எமது மூதாதையா் இந்நீ÷ சமநிலையை பேண பல குளங்களையும், வீணே மழை நீா் கடலை அடையாது நிலத்தினுள் ஊடு புகசெய்ய பலமுறைகளை கையாண்டுள்ளனா். தற்போது யாருக்கும் இதை பற்றிய தெளிவான அறிவொ, கவனமொ இல்லை.
அத்துடன் குழிவகை மலசல கூட கழிவு நீரும் நிலத்தடி நீரை மாசடைய செய்கிறது. மாாி காலத்தில் நீா் மட்டம் மேலெழும் போது இரண்டும் கலக்க முடியும்.
இவ்வாறு கேள்விக்குள்ளாகிவரும் வளத்தை கைத்தொழிலாக்குவது எமது எதி÷கால சந்நதியை பாதிக்கும்
வளங்கள் அருகிவரும் போது பெண்தகு வள முகாமைத்துவம்,பெண்தகு விவசாயம், பெண்தகு அபிவிருத்தி என ஆரம்பிப்பதிலும் தற்போதே அதைபற்றி சிந்திப்பது நன்மை பயக்கும்.
யாழ் குடாவின் உப்போியை நன்நீராக்கும் தொண்டைமானாறு, நாவற்குழி திட்டம், கனகராயன் ஆற்றை உப்பாறுடன் இணைக்கும் திட்டம் என்பவை கவனத்திலெடுக்கபடவேண்டும்.
உலக வங்கி இதற்கு உதவ முன்வந்த போதும், யாழ் பல்கலைகழகத்தின் மேதாவிகளால் வழங்கப்பட்ட துரநோக்கற்ற சூழலியல் தாக்கம் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையால் கிடைக்காது பொனமை துா்அதிஸ்டமே

Print this item

  "ஆசை" கற்பித்த விபரீத ஆசை...!
Posted by: kuruvikal - 12-15-2004, 12:34 PM - Forum: சினிமா - Replies (7)

<b>"ஆசை" பாணியில் ஒரு தற்கொலை</b>

ஆசை படத்தில் வருவது போல பிளாஸ்டிக் பையால் முகத்தை இறுக்க மூடி ஒரு பொறியியல் கல்லூரி மாணவி சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் தொழிற்சாலை வைத்திருக்கிறார். இவரது மகள் ஹேமாவதி. 19 வயதான இவர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இன்று காலை வெகு நேரமாகியும் ஹேமாவதி எழுந்திருக்கவில்லை. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஹேமாவதி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அவரது முகம் பிளாஸ்டிக் பையால் இறுக்க மூடப்பட்டிருந்தது. கதவும் உள்பக்கமாக மூடப்பட்டிருந்ததால் ஹேமாவதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆசை படத்தில் பிரகாஷ் ராஜ் தனது மனைவி ரோஹிணியை இதே பாணியில் மூச்சுத் திணறச் செய்து கொலை செய்வார். அதே பாணியில் ஹேமாவதியும் தற்கொலை செய்து கொண்டிருப்பது மந்தைவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thatstamil.com

Print this item

  அவசர வேண்டுகோள்!
Posted by: vasisutha - 12-15-2004, 07:07 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (18)

உலகத் தமிழர்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்!

தமிழர் தாயகத்தில் பெரு வெள்ளத்தால் அழிவுகளைச் சந்தித்து பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எம் மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க முன்வருமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோளை விடுத்திருக்கின்றது.

கடந்த 4 நாட்;களாக தமிழர் தாயகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்;ட குடும்பங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தம் வசிப்பிடங்களை இழந்து பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் இந்த மக்கள் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு சிறிலங்கா அரசினது புனர் நிவாரண நிர்வாகங்களில் இருந்து எந்தவித உடனடி உதவிகளும் வழங்கப்படவில்லை. தமிழர் தாயகப்பகுதி என்ற காரணத்தினால் சிறிலங்கா அரசினால் அசமந்தம் காட்டப்படுகின்றது. வெள்ளத்தால் அழிவுகளை சந்தித்து அவலப்படும் எமது மக்களுக்கு உடனடியாக அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.

அவலப்படும் எம் உறவுகளுக்கு உதவ புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் முன்வரவேண்டும் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

நிதி, உடைகள் உள்ளிட்ட வகைகளில் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் தத்தமது நாடுகளில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக கிளைகளில் உதவிகளை கையளிக்கலாம் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ள அழிவால் அவலப்படும் எம் உறவுகளுக்கு அவசரமாக உதவ முன்வருமாறு புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

மட்டக்களப்பில் 68 ஆயிரம் பேரும், அம்பாறையில் 40 ஆயிரம் பேரும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய தமிழர் தாயக மாவட்டங்களில் இதே அளவு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதில் தற்போது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது

puthinam.com

Print this item

  நாம் இன்னும் ஓர் கொடிய போரை சந்தித்தால்......உங்கள் கருத்து.
Posted by: ஊமை - 12-15-2004, 01:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழீழ விடுதலைப்புலிகள் ஒருபடி இறங்கிவந்து போர்நிறுத்தம் செய்து போருக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தனர். அதனால் இன்றுவரை சமாதான ஓடம் ஓடிக்கொண்டு உள்ளது. சிங்களத்தின் த்ட்டிக்கழிப்பும் இனவாதமும் சீண்டியிழுப்பும் மீண்டும் ஒரு கொடிய போரை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தமிழீழத்தில் மட்டுமல்ல புலத்திலும் ஏற்பட்டு உள்ளது.
இப்படி ஒரு போர் தொடங்கினால் அது தமிழர்களாகிய எமக்கு தரக்கூடிய நன்மைகள் தீமைகள் போர் வந்தால் ஏற்படப்போகும் கஸ்டங்கள் இழப்புகள். போர் ஒன்று தொடங்கினால் சர்வதேச வல்லரசுகளின் தலையீடுகள் எந்தளவில் இருக்கும்.தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச சின்னேகத்தால் எதிகாலத்தில் விடுதலைப்புலிகளின் கை உலகரங்கில் ஓங்குமா ? என்பன பற்றி ஒவ்வொருவரும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

குறிப்பு: இது எமது தாயகம் சம்பந்தப்பட்டது அதனால் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமான கருத்துகளையே முவையுங்கள்.

Print this item

  Invite SRK again to correct Lanka's image: JVP
Posted by: Vaanampaadi - 12-14-2004, 07:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

PK Balachanddran
Colombo, December 14

The Janatha Vimukthi Peramuna (JVP), a partner in the Sri Lankan government, has said that Sri Lankans should invite the Bollywood icon Shahrukh Khan to the island again, to "erase the bad image" created by the grenade blast at his concert in Colombo last Saturday.

The party said in a press release that Shahrukh Khan was so shaken by the experience in Sri Lanka that he told the BBC that from now onwards, "he would not sleep with his head turned towards Sri Lanka."
"Sri Lankans must invite Shahrukh Khan again to show that they are not extremists and religious diehards. He should be invited after the culprits are caught and punished," the release said.

The JVP blamed "politically disgruntled elements" for the blast, which killed two innocent young people, Dilini Maheshika, a 25-year-old newly married girl, who was a telephone operator in the Taj Samudra Hotel, and Lanka Jayasundara, a 22-year-old press photographer working for one of the media sponsors of the event.

The JVP said that the disgruntled elements, which engineered the bomb attack "had sought to tarnish the image of Sri Lanka and damage good relations between Sri Lanka and India."

The statement identified the LTTE as a party interested in seeing that Sri Lanka and India did not have good relations.

The statement also blamed "some defeated political elements" for the blast and said that these elements had been placating the LTTE.

Clearly, the allusion was to the opposition United National Party (UNP), which had been defeated in the April 2004 parliamentary elections, and which was accused of placating the LTTE while it was in power between December 2001 and April 2004.

Print this item