| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 559 online users. » 0 Member(s) | 557 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,074
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| Help |
|
Posted by: Vaanampaadi - 12-13-2004, 06:18 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (10)
|
 |
சீர்காழி கோவிந்தராஜன் TMS அவர்களுடைய MP3 பக்திப்பாடல்களை எங்கே இலவசமாக தரையிறக்கம் செய்யலாம் ? அத்தோடு இலங்கை பிப்பிசைப் பாடல்களையும் நான் எங்கிருந்து தரையிறக்க முடியும் தெரிந்தவர்கள் தயவுசெய்து உதவிசெயுங்கள்
|
|
|
| நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது |
|
Posted by: ஊமை - 12-13-2004, 02:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
தினேஸ் இராஜரத்தினம் விடுதலை தொடபர்பாக கையெழுத்திட்ட உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்களுக்கும் / வெளிநாட்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேலதிக விபரங்களுக்கு நீங்கள் கையொப்பமிட்ட பகுதிக்கு சென்று பார்வையிடலாம்.
பிற்குறிப்பு: தினேஸ் இராஜரத்தினத்தை விடுவிக்கும் முயற்சிக்கு இறுதிவரை எதிரான கருத்துக்களை வெளியிட்ட நிதர்சனம் இணையம் அந்த தமிழர் விடுதலையான பின் விடுத்தலையான செய்தியைக்கூட வெளியிட விருப்பமிலாது போனதென்ன? ஏன் அவர்களுக்கும் விடுதலை செய்யப்பட்டவருக்கும் ஏதும் தனிப்பட்ட விரோதம் உண்டோ ?
உலகமே இந்த விடுதலையை குறித்து மகிழ்ச்சி கொண்டாடும் போது ஏன் இந்த நிதர்சனம் இணையம் மெளனம் சாதிக்கிறது ?
|
|
|
| Funny pictures 1 |
|
Posted by: Vaanampaadi - 12-12-2004, 09:28 PM - Forum: நகைச்சுவை
- Replies (4)
|
 |
<img src='http://img39.exs.cx/img39/9427/claimscenter0xi.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img39.exs.cx/img39/5940/church7hb.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img39.exs.cx/img39/5565/copscat8sf.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img39.exs.cx/img39/193/deadend20kk.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img39.exs.cx/img39/4426/dalmcats6rk.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img39.exs.cx/img39/1899/deadsanta3tx.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/6614/deepsc8xz.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/9527/divorce9tt.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/2739/drunken9ru.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/714/cokeandskirl1gf.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/7663/clean7uw.jpg' border='0' alt='user posted image'><img src='http://img96.exs.cx/img96/8946/funny0025ra.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| Funny pictures |
|
Posted by: Vaanampaadi - 12-12-2004, 08:31 PM - Forum: நகைச்சுவை
- Replies (1)
|
 |
<img src='http://img39.exs.cx/img39/8095/0822016ly.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img39.exs.cx/img39/9104/againstthewall9va.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img39.exs.cx/img39/7295/budcat34qr.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| அடக்குமுறைக்குள்ளிருந்து ஒரு குரல் |
|
Posted by: Nada - 12-12-2004, 02:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
நாடும் நடப்பும் - 6
சங்குவேலிச் சாத்தன் 09.12.2004, வியாழக்;கிழமை.
சாத்தனுக்குச் சென்ற வாரமும், இவ்வார ஆரம்பமும், ஒருவித நெருக்குவார காலமாகவே இருந்தது. ஒருபுறத்தில்;, இணயத்தளத்தில் விடயங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுவந்த பிரச்சனைகளும், சுவீடனின் உப்சலா பல்கலைக்கழகப் பேராசிரியர் பீற்றர் ஷார்க்கினது தொடர் விரிவுரைகளைக் கேட்கச் செல்லவேண்டிய நிலையும். மறுபுறத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது மாவீரர் தின உரையில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பாகச் சிங்கள தேச ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் திசை திருப்பல்களும், சிங்கள தேசத்தால் கடைப்பிடிக்க முற்பட்டுவரும் தந்திரோபாயமும்தான் இந்த நிலைக்குக் காரணங்களாகும்.
இணையத்தளத்தில் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், சென்ற வாரம் இணையத்தளத்தின் ஐவெநசநெவ யஉஉநளள இனை ளுரவெநட நிறுவனம் எந்தவித சாதாரண காரணமின்றியும், சட்டவிரோதமாகவும் பல நாட்கள் தொடர்ந்து துண்டித்து வந்தமையானது, சாத்தனுக்குச் சற்றுச் சிந்திக்கவேண்டிய விடயமாகவே இருந்தது
சாத்தன் “நாடும் நடப்பும்” என்பதன்கீழ் பலவற்றைப் பற்றியும் எழுதுபவைகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்பதை அவன் நன்கு அறிவான். அதேநேரத்தில், இந்த இணையத் தளத்தினில் எழுதும் ஏனையவர்களும், சாத்தனைப்போல், தமிழ்த் தேசத்தினதும், அதன் மக்களதும் நன்மைகள், முன்னேற்றம் என்பவை கருதி, உண்மையான விடயங்களை அப்படியே கூறி, கேள்விகளையும் எழுப்பி, மக்களிடையே முன்னேற்றத்திற்கான கருத்துக்களைப் புகுத்தி வருவது, பிற்போக்குவாதிகளுக்கும், கைக்கூலிகளுக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் என்பதில் சாத்தனுக்கு எந்தவித ஐயமும் இல்லை.
அரச அமைப்புகளாயினும் சரி, அரச சார்பற்ற அமைப்புக்களாயினும் சரி, சமூகப் பெரியோர்களாகக் கருதப்பட்டு வருபவர்களாயினும் சரி, மிகப் பெரும்பான்மையினர் சுயநலம்; மிகுந்தவர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், கைக்கூலித் தன்மையுடையவர்களாகவும்தான் உள்ளனர். இது அவர்களது அறியாமையினால் உருவானது. இதனால், யாழ் குடாவிலிருந்து இயக்கப்பட்டுவரும் ஒரு இணையத்தளத்தினில் பல்வேறு விடயங்களும் அம்பலப்படுத்தப்படுவதைத் தடுக்க, இன்று அதிகாரத்தில் இருக்கும், வைக்கப்பட்டுவரும் இவர்கள் சுலபமாக ஈடுபடமுடியும், ஓரளவிற்கு வெற்றிகாணவும் முடியும்.
ஆனால், இந்த இணையத் தளமானது இப்படியான முறியடிப்பு வேலைகளை முறியடிக்கத் தேவையானவற்றைச் செய்து முடித்துள்ள நிலையில், அடுத்த வாரம்முதல் மீண்டும் சாத்தன் ஒவ்வொரு ஞாயிறு நள்ளிரவிலும் உங்களைப் புதிய செய்திகளுடன் சந்திக்கவுள்ளான் என்பதில் சாத்தனுக்குப் பெருமகிழ்ச்சியே.
இந்த இணையத்தளம் இயக்கப்பட்டுவரும் இடமானது, யாழ் நகரிலிருந்து 8 கிலோ மீற்றர்கள்வரை தொலைவிலுள்ள கிராமமாகும். யாழ்; குடாவிற்கான தொலைபேசி வசதிகள் பல வருடங்களுக்கு மேலாகக் கொடுக்கப்பட்டுள்ளபோதும், இந்தக் கிராமப் பகுதிகளுக்கு இன்றுவரை வுநடநிhழநெ உயடிடந இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. அடுத்த சில வருடங்களில் அது நடைபெறும் என்பதற்கும் சாத்தியம் இல்லை. இதனால் உயடிடந இல்லாத சாதனங்களுடாகவே, இணையத்தளத்தினில் விடயங்களை வெளியிடவேண்டியுள்ளது.
இந்தக் கிராமப் புறத்தினில், ஒரு நாளைக்குக் குறைந்தது 5 தடவைகளாவது மின்சார விநியோகம் துண்டிக்கப்படும். ஒவ்வொரு தடைவையும் துண்டிப்பு நிகழ்ந்து 3 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்களின் பின்னர்தான் மீண்டும் மின்சார விநியோகம் கிடைக்கும். சில வேளைகளில் தொலைபேசி மூலம் மின்சார சபையைத் தொடர்பு கொண்டு அறிவிப்பைச் செய்து அரை, ஒரு மணித்தியாலத்தின் பின்னரே விநியோகம் கிடைக்கும். இப்படிப் பல்வேறு பிரச்சனைகள் மத்தியிலும், மனம் தளராது, இந்த இணையத்தளம் இயக்கப்பட்டுவருவது மகிழ்ச்சிக்குரியதே.
மனித வாழ்க்கையில் சவால்கள் எதிர்நோக்கப்படாவிடின், பெறுபேறுகள் இருக்கமுடியாது, பெறுபேறுகளுடான இன்பம் என்பதற்கு இடமிருக்காது.
சாத்தனால் இணையத்தளத்தினருக்கு ஓரிரு இலட்சம் ரூபாய்கள் செலவாகியுள்ளது. கடனாகப் பெற்ற பணத்தைக் கொண்டு, இணையத்தளத்தினர் முறியடிப்பு வேலைகளை முறியடிக்கத்; தம்மை தயார்ப்படுத்தியுள்;ளதைச் சாத்தனால் அறியமுடிந்தது.
யாழ்குடாவில் நகை, காணி என்பவைகளை ஈடாகக் கொடுத்தே வட்டிக்குப் பணம் பெறமுடியும். இவைகள் இல்லாது வங்கிகளில் பணம் பெறுவது முடியாத காரியம். அதிலும், சுதந்திர ஊடகவியலாளர்கள் (குசநந டயnஉந துழரசயெடளைவள); யாழ்ப்பாண வங்கிகளில் கடனாகப் பணம் பெறுவது முடியாத காரியம்! இந்தநிலையில், தனியாரிடமிருந்து நகைகளும், காணியுமில்லாது வட்டிக்குப் பணம் பெற்றுக்கொள்வது, பெரும் சவால் ஒன்றினை வென்ற நிலையை ஏற்படுத்தும். யாழ் குடாவில் நிலைமைகளை நன்குணர்ந்து, நகைகள், காணிகள் கோராது, வட்டிக்குப் பணம் தரும் சிலர் இருப்பதும், தமிழ் சமூகம் எப்படி நிலைத்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள உதவவில்லையா?
இது ஒரு சவால் ஆனால், வட்டியையும், முதலையும் கொடுக்க உழைப்பது மற்றொரு சவால். அதையும் எதிர்கொண்டே உங்களைக் கிழமைக்குக் கிழமை சந்திக்கமுடியும். அது உண்மையில் இன்பமானதில்லையா?
இன்று “அரச சார்பற்ற” நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும், ஊடகங்களும்கூட, உள், வெளிநாட்டு அமைப்புக்களின் நிதி, மற்றும் “உதவி” களைப் பெற்று, உதவியாளர்களின் நலன்களைப் பேணிவருகின்றன. அப்படியிருந்தும், பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் போதும், தமிழ்த் தேசத்தில், அதுவும் யாழ் குடாவில் இருந்து, சுதந்திரமாக இந்த இணையத்தளம் இயங்குவதுபற்றிச் சாத்தனுக்கு ஒருவித பெருமைதான். ஏனெனில், அவனது கட்டுரையும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது!
இந்த மழைக் காலத்தில், பொருட்களின் விலை தினமும் அதிகரித்துவருவதும், காய்கறிகளின் விலைகள் உச்சநிலை அடைந்துள்ள நிலையிலும், சாத்தன் தனது “நாடும் நடப்பும்” கட்டுரைக்குச் சிறிதளவு பணத்தை இணையத்தளத்தினரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நப்பாசையுடன்தான் இருந்தான். ஆனால், அவனது தவிர்க்கடமுடியாத “ஆசை”யும், நடைபெறமாட்டாத காரியமாகிவிட்டது! பல இலட்சம் ரூபாய்களைக் கடனாகப் பெற்று, வட்டியை மாதமும், ஏனைய செலவுகளையும் கொடுத்துவரும் இணையத்தளத்தினரிடமிருந்து, தனது சிறிய கட்டுரைக்குச் சாத்தன் பணம் கேட்பது மனிதாபிமானமற்ற காரியம் என்பது சாத்தனுக்கு நன்கு விளங்கும். அப்படியாயின் என்ன?
சாத்;தன் அதே பழைய சைக்கிளில், அதே குடை, அதே உடைகள் என்பவற்றுடன்தான் திரியவேண்டும், முன்னரைப் போலவேதான் வாழவும்வேண்டும், உங்களுக்குச் செய்திகளையும், ஏனையவைகளையும் கொடுக்கவும்வேண்டும்! தன்னால் இணையத்தளத்தினருக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடியைச் சாத்தனால் அவனது இந்தப் பிறப்பில் ஈடுசெய்யமுடியாது. ஆனால், இணையத்தளத்தினர்கள் சாத்தனில் குறை எதனையும் கண்டதில்லை. முகம் சுழித்ததில்லை. அவர்கள் சாத்தனை மேலும் உச்சாகப்படுத்திக் கட்டுரையினைத் தொடர்ந்து எழுதவே கூறினர். இதனு}டான மன நிறைவு, சாத்தனுக்குத் தென்பாக இருந்துவருகிறது.
இங்குதான் ஒரே சிந்தனையும், ஒரே குறிக்கோளுமுடையவர்களே, தொடர்ந்தும் ஒருமித்து நிலைக்கமுடியும் என்பதைச் சாத்தன் மீண்டும், மீண்டும் உறுதிசெய்யமுடிகிறது.
இப்படியான பிரச்சனைகள் இருந்துவரும்போதும், யாழ் குடாவின் தினசரிகளில் வெளியான சில அறிவித்தல்கள், விளக்க அறிவிப்புக்கள், படங்கள், செய்திகள், ஆய்வுகள் சாத்தனுக்குப் புதிராகவே இருந்தது. இவைகள் எல்லாம் இந்த இணையத்தளத்தினில் சாத்தன் கூறியவைகளின் விளைவுகளாகவே இருந்தன. யாழ் போதனா வைத்தியசாலை றோட், ஏனைய தெருக்களில் கடைகள் நடாத்துவோர் நடை பாதைகளில்; தாவாரங்களை நீட்டிக் கட்டி, பொருட்களைவைத்து வியாபாரம் செய்பவைகள் தடைசெய்யப்பட்டுள்ளாதாகவும், டிசெம்பர் மாதம் முடியுமுன்னர் அவை நிரந்தரமாக அகற்றப்படவேண்டும் எனவும் யாழ் நகர சபை ஆளுனர் அறிவித்தலை விட்டிருப்பதுடன், யாழ் குடாவின் கழிவுகள் அகற்றும் பிரச்சனை பற்றி நீண்ட விளக்க அறிவிப்பினைச் செய்து, கால அவகாசமும் கோரியுள்ளார்.
இந்த அறிவிப்புகளின்படி விடயங்கள் இவ்வருட முடிவுக்கு முன்னர் நடைபெறுகின்றனவா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எதுவிதத்திலும், சட்டங்களுக்கு முரணாக, தெருக்களின் மையத்திலிருந்து குறிப்பிட்ட து}ரத்திற்கு அப்பால் கட்டப்படாது புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிரந்தரக் கட்டடங்களும் அகற்றப்படுகின்றனவா, இல்லையா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தமிழ் மக்கள் காலம் சென்றால் எல்லாவற்றையும் மறந்துவிடுவர் என்ற கருத்தில்தான் இந்த அறிவித்தல்களா என்பது முக்கிய கேள்வியே.
தினசரிகள் யாழ் குடாவின் பகுதிகளில் மழை நீர் தங்கி நிற்பது பற்றியும், தெருக்கள் கிடங்கும், குழிகளுமாக இருப்பது பற்றியும், முன்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும், வேறு பிரச்சனைகள் பற்றியும் சென்ற வாரம் தீவிரமாக எழுதிவந்துள்ளன@ படங்களையும் பிரசுரித்துள்ளன.
இங்கும், இவை சிறிது காலத்திற்குத்தான் நடைபெறுமா, அல்லது தொடர்ந்தும் நடைபெறுமா என்பதையும், பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சென்ற வாரத்தில் இரு நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தது. இவ்வருடத்தில் பெய்;த மழையில் ஆகக் கூடிய அளவு இவ்விரு நாட்களிலும் பெய்த மழைதான்!
நன்றி தமிழ்நாதம்.
தாயகத்திலிருந்து சிரமங்களுக்கு மத்தியில்
வரும் இந்த இணையத்துக்கு உதவிசெய்யாவிட்டாலும் அதனை ஊக்கப்படுத்தவேண்டியது புலம்பெயர் தமிழர்களின் கடமை. இங்கு வானொலிக்கு ஆர்வமாக எழுதும் பலர் இப்படியான விடயங்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர் என்பது மிகவும் வேதனையானது. எத்தனைபேர் முன்வருகின்றாரென காத்திருந்து பார்ப்போம்.
தேசியத்துக்காகவும் சமூகத்துக்காகவும் குரல் கொடுக்கும் இவர்கள் முன் எங்கள் தலைகுனிந்தே காணப்படும்.
இணையத்தை இயக்கும் அந்த உள்ளங்களை இதயபுூர்வமாக வாழ்த்துவோம் முடிந்தவரை உதவுவோம்.
www.tamilsociety.com
|
|
|
| எம்.எஸ்.சுப்புலட்சுமி காலமானார் |
|
Posted by: aathipan - 12-12-2004, 06:35 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (9)
|
 |
சங்கீத இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி காலமானார்
<img src='http://www.spicmacayblr.org/mss.jpg' border='0' alt='user posted image'>
சென்னை: இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நேற்றிரவு சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி (88). வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 30 ஆண்டுகளாகவே சர்க்கரை நோய் இருந்தது. மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென இருதய பாதிப்பு ஏற்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று அவரது நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும், நாடித்துடிப்பும் வெகுவாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. உடனடியாக மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சையளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.40 மணியளவில் அவர் காலமானார்.எம்.எஸ். சுப்புலட்சுமி காலமானதை டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று இரவு அறிவித்தார்.
எம்.எஸ்.: இசை மகுடத்தில் ஓர் ரத்தினம்
இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியிருக்கிறது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம் என்று, புகழ்பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா'வும் வழங்கப்பட்டது.
1940லிருந்து இவர், பொதுவாக இசைத் துறைக்கான இந்தியாவின் உயர் விருதுகள் அனைத்தையும் பெற்றிருந்தார்.
1916 செப்டம்பர் 16ல் மதுரை வீணை இசைக் கலைஞர் சண்முகவடிவுக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலிலே வளர்ந்தார். இவருடைய தாயார் சண்முகவடிவு போல் வடிவாம்பாளும் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிகுந்தவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். சுப்புலட்சுமியின் பாட்டி அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.
இசைக் குடும்பம்: இசைப் பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரியிலும் இவர் பங்கேற்றதுண்டு. செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்யநாத பாகவதர், ராஜமாணிக்கம், பிள்ளை, ராஜரத்தினம், பிள்ளை, பாலக்காடுமணி ஐயர், ஜி.என்.பாலசுப்ரமணியின் போன்ற ஜாம்பவான்கள் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் ரசித்ததும் உண்டு. இவரது தாயாருடன் கச்சேரிக்கு சென்றபோது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல்வளத்தை வாழ்த்தியதும் உண்டு. 5ம் வகுப்பு வரையே இவரது முறையான கல்வி அமைந்தது.
இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசிடமிருந்து கற்றார். அப்துல்கரீம்கான் மற்றும் பாதே குலாம் கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
திருமணம்: 1940ல் திருநீலி மலையில் சுப்புலட்சுமிக்கும் சதாசிவத்துக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுடையே திருமணத்துக்குப் பின் நான்கு ஆண்டுகளில் சதாசிவத்தின் முயற்சியால் உருவான மீரா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் குறிப்பாக "காற்றினிலே வரும் கீதம்' சங்கீத வட்டத்துக்கும் வெளியே இவருடைய புகழைப் பரப்பியது. இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே இவருக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்தது. அதேபோல கேதாரிநாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மிகக்குரல் பரவசப்படுத்தியது.
1944ல் 4 இசை நிகழ்ச்சிகள் நடத்தி ரூ.2 கோடி வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தன் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதியில் மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத் தொண்டு ஆகியவற்றுக்காகச் செலவிடப்பட்டது.
சர்வதேச புகழ்: 1963ல் இவரது புகழ் சர்வதேச அளவிலும் விரிந்தது. எடின்பர்க் சர்வதேச திருவிழாவில் இவரது கச்சேரி நடைபெற்றது. 1966ல் ஐ.நா.வில் ஐ.நா. தினத்தன்று பாடினார்.
1982ல் பிரிட்டனில் உள்ள ராயல் ஆல்பிரட் ஹாலில் ராணி எலிசபெத் முன்பு பாடினார். இது போன்ற நிகழ்ச்சிகள் சுப்புலட்சுமியின் இசைத்திறனை சர்வதேச அரங்குக்கு எடுத்து சென்றன.
ஒரு தொண்டை நிபுணர் இவரது குரல்வளத்தைக் கேட்டுவிட்டு, இவரது குரல் நாண்களின் சீரமைப்பு மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றார்.
பாரம்பரியக் கர்நாடக இசையில் வட இந்தியர்களிடம் கேட்கக் கிட்டாத தனித்தன்மையை இவரிடம் காணமுடியும். ராஜஸ்தான் பஞ்சாப், உ.பி., ம.பி., ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் உள்ள கர்நாடக இசை பிரியர்களிடம் இவரது செல்வாக்கு உயர்ந்தது. கர்நாடக இசையின் வரையறையையும் மதிப்பையும் இந்த 20ம் நுõற்றாண்டில் இவர் மாற்றியவர் என்றால் மிகையன்று.
இவரது கணவர் சதாசிவம் காந்தி, நேரு, ராஜாஜி ஆகியோரிடம் இவரை அறிமுகப்படுத்தி வைத்தார். சதாசிவத்தின் நெருங்கிய தோழராக ராஜாஜி விளங்கினார். "குறை ஒன்றும் இல்லை' என்ற ராஜாஜி கீதத்தை இவர் பாடியது இனிமையானது. இன்றும் அது பெரும்பாலாராலும் ரசிக்கும் படியாக உள்ளது.
ஹரிதும் ஹரோ: ஒரு முறை காந்தியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் காந்திக்குப் பிடித்தமான பஜனான "ஹரி தும் ஹரோ'வைப் பாடும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சதாசிவமோ அக்கடிதத்துக்குப் பதில் அனுப்பியபோது, இந்த குறிப்பிட்ட பஜனை எவ்வாறு பாடுவதென சுப்புலட்சுமிக்குத் தெரியாது. ஆகவே "ஹரி தும் ஹரோ'வை வேறொருவர் பாடட்டும், சுப்புலட்சுமி மற்றொரு பஜன் பாடட்டும் என்று எழுதியிருந்தார். ஆனால் மகாத்மாவின் பதில் கடிதத்தில் "மற்றவர்கள் பாடக் கேட்பதை விட சுப்புலட்சுமி அதை பேசக் கேட்பதையே விரும்புகிறேன்' என்றிருந்தது.
1940ல் முதன்முதலாக இசைவாணிப் பட்டத்தைப் பெற்ற இவர் 1954ல் பத்மபூஷன், 1956ல் ஜனாதிபதி விருது, 1974ல் மகசாசே விருது, 1975ல் பத்மவிபூஷன், 1990ல் இந்திரா விருது, 1996ல் கலாரத்னா, 1997ல் ஸ்வரலயா, 7 டாக்டர் பட்டங்கள் என்று இவருடைய விருது பட்டங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பட்டியல்
1940 எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு "இசை வாணி' கவுரவம் செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் ராஜமாணிக்கம் பிள்ளையால் வழங்கப்பட்டது.
1954 பத்மபூஷன் வழங்கப்பட்டது.
1956 ஜனாதிபதி விருது.
1967 ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் முதல் முதலாக டாக்டர் பட்டத்தை வழங்கியது.
1968 சென்னை மியூசிக அகாடமி "சங்கீத கலாநிதி' கவுரவம் அளித்தது. இதனைப் பெற்ற முதல் பெண்மணி அவர்தான்.
1970 இசை பேரறிஞர் பட்டத்தை சென்னை தமிழ் இசைச்சங்கம் அளித்தது.
1974 மகசாசே விருது.
1975 பத்மவிபூஷன் வழங்கப்பட்டது.
1975 சப்தகிரி சங்கீத வித்வான் மணி கவுரவத்தை, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வர தியாகராஜசுவாமி திருவிழா கமிட்டி அளித்தது.
1980 தனிப்பெரும் கலைஞர்: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கியது.
1981 சர்வதேச இசை கவுன்சில் உறுப்பினர்.
1988 காளிதாஸ் சம்மன் வழங்கப்பட்டது.
1988 உஸ்தாட் ஹபீஸ் அலிகான் விருது.
1990 இந்திய ஒருமைப்பாட்டுக்கான இந்திராகாந்தி விருது.
1991 கோனார்க் சம்மன் விருது வழங்கப்பட்டது.
1995 7வது முறையாக டாக்டர் பட்டம்.
1996 "கலாரத்னா' விருது.
1998 பாரத ரத்னா.
|
|
|
|