| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 287 online users. » 0 Member(s) | 285 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,320
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,298
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,643
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,075
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,467
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,502
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,040
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| அன்பின் கிரீடம்...! |
|
Posted by: kuruvikal - 12-14-2004, 07:39 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (57)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/crown.jpg' border='0' alt='user posted image'>
அது ஒரு உலகம்
அங்கு...
அன்பின் அடையாளம்
அன்னை
பண்பின் அடையாளம்
தந்தை
பாசத்தின் அடையாளம்
உடன் பிறந்த உறவுகள்
நேசத்தின் அடையாளம்
சூழ இரு சுற்றம்
இத்தனையும் குறைவிலா
வாழ்வு வாழ்ந்திட...
கருணையது
மனிதனைச் சிறப்பிக்க
அன்பது கோலோஞ்ச
இறை எனும்
ஞானம் வழிகாட்ட
மனிதன் அறிவு வளர்த்து
பகுத்தாய்ந்து
மானுடம் கொண்டு
மாண்புடன் வாழ்ந்தான்....!
இன்று அந்த உலகில்...
அன்னைக்குரியவள்
அன்பு தொலைத்து
அலையும் விலங்கானாள்
பண்புக்குரியவன்
பாவியாகி பரிதவிக்கிறான்
பாசத்து உறவுகள்
பஞ்சமா பாதகங்கள் புரிய
சூழ இரு சுற்றம்
குற்றம் இரு சுற்றமாச்சு....!
கருணை சுருக்கில் தொங்க
அன்பு அடைக்கப்பட்டு
கொடுங்கோலாட்சி நடக்குது...
இறை ஞானம் மறந்து
மனித ஆணவம்
விஸ்வரூபம் எடுக்குது...
மெஞ்ஞானம் போய்
அஞ்ஞானம் வளருது....
அறிவுக்கு வேலை போய்
ஆயுதத்துக்கு வேலை கொடுத்தாச்சு....
ஆக்கம் போய் அழிவு
விளைவாச்சு....!
இவை கண்டு
அன்பின் முதல்வன்
அனுப்பி வைத்தான்
தன் புதல்வன்...!
மானிலத்தில்
அன்பு ஆட்சி செய்ய...
மானுடம் மரிக்காது
மனித மனங்கள் கொண்ட
மாசறுத்து மனுநீதி வளர்த்து
மனிதனை மாண்பு கொண்டு
சிறப்பிக்க....!
ஆனால்....
பாவத்தின் விதி வலைக்குள்
சிக்கிவிட்ட மானிடன்
அன்பின் அர்த்தம் புரியா
விலங்கினும் கொடிய மிருகமாய்....
அன்பின் தூதனை
முட்கிரீடமிட்டு
குருதியால் பூஜித்தான்...!
அதன் பலனாய்
இன்றும் இதயத்துள் அன்பின்றி
முட்களைச் சுமக்கிறான்
அன்பு அர்த்தமற்றதாய்
அவனை அழிக்கிறது....
பாவ வலைக்குள்
மீளமுடியாச் சிக்கலில்
அவன் ஆயுள் முடியும் வரை....!
மனிதா..
உனக்கொரு ஆறுதல் வார்த்தை....
காதில் விழுந்தால் பற்றிக் கொள்
கவலை விடு...
பாவத்தின் வலைக்குள்
சிக்கலுக்குள்
நீ பரிதவிப்பது உணரின்
இன்னும் இருக்கு
மீட்சிக்கு வழி
உணர்ந்து கொள்....!
அன்புக்கு அன்று
நீ முட்கிரீடமிட்டாய்
இன்று
அன்பு முட்கிரீடமாய்
உனக்கு...!
நீ செய்த
பாவத்தின் விளைவு களைந்து
அன்பை அரவணைக்க வேண்டின்
அணிந்து கொள்
இக் கிரீடம்...!
முள்ளானாலும்
உன் இதயம் கிழித்தாயினும்
மீண்டும் உன்னுள்
அன்பு மலர வைக்கும்....!
நன்றி.. http://kuruvikal.yarl.net/
|
|
|
| ஒற்றை தலைவலி |
|
Posted by: Mathan - 12-14-2004, 05:45 PM - Forum: மருத்துவம்
- Replies (34)
|
 |
ஒற்றை தலைவலி (Migrain) குறித்து தமிழில் வந்த கட்டுரை ஒன்றை சிலகாலத்திற்கு முன்பு யாழ் இணையத்தில் படித்தேன். அதை இப்போது பார்க்க முடியவில்லை. அது குறித்து யாருக்காவது தெரியுமா?
|
|
|
| ஆயிரம் மொழிகளில் ஒரு மொழி...! |
|
Posted by: kuruvikal - 12-14-2004, 01:23 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (2)
|
 |
<b>இந்தியாவில் 3,372 மொழிகள்: 5வது இடத்தில் தமிழ்</b>
இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் 216 மொழிகளை 10,000க்கும் குறைவானவர்களே பேசுகின்றனர் என ராஜ்யசபாவில் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 1991ம் ஆண்டு சென்சசின் அடிப்படையில் 1,576 மொழிகள் வகுப்புவாரியாக அணி பிரிக்கப்பட்டுள்ளதாகவும், 1,796 மொழிகள் இந்தப் பட்டியலுக்குள் இன்னும் கொண்டு வரப்படவில்லை.
இவற்றில் 18 மொழிகள் அதிகாரப்பூர்வ அரசு மொழிகள். மீதமுள்ள மொழிகள் வெறும் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. இவற்றில் பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை என்றார்.
இந்திய மொழிகள்: ஒரு அலசல்
இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி விளங்குகிறது. இந்த மொழியைப் பேசுபவர்கள் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 41 சதவீதம் பேர்.
48 வகை இந்தி:
இந்தி மொழி 48 விதமாக பேசப்படுகிறது. இப்படிப் பேசுபவர்கள் அனைவரையும் கணக்கில் வைத்துதான் இந்தி பேசுபவர்களின் மொத்த எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நவீன இந்தி மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 285 பேர்தான்.
அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது பெங்காலி. (6 கோடியே 95 லட்சத்து 95 ஆயிரத்து 738), மூன்றாவது இடத்தில் தெலுங்கு (6 கோடியே 60 லட்சத்து 17 ஆயிரத்து 615) உள்ளது.
நான்காவது இடத்தில் மராத்தி (6 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 681) உள்ளது.
தமிழுக்கு 5வது இடம்:
செம்மொழி தமிழ் 5வது பெரிய மொழியாக உள்ளது. நாட்டில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 368 பேர் ஆகும். இருப்பினும் தமிழ் மொழியை மொத்தம் 4 வடிவங்களில் பேசுவதாக கணக்கிட்டுள்ளனர்.
தமிழ், கைகடி, யருகுலா அல்லது யருகாலா மற்றும் பிற வடிவங்களை ஒரே இனமாக சேர்த்து மொத்தம் 4 வடிவங்களாக தமிழை வகைப்படுத்தியுள்ளனர். இதில் தமிழ் என்பது தற்போது புழக்கத்தில் உள்ள நவீனத் தமிழாகும். மற்ற வடிவங்கள் மலைவாசிகள், ஆதி தமிழர்கள் பேசுவது.
தற்போதைய நவீனத் தமிழைப் பேசுபவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 28 லட்சத்து 86 ஆயிரத்து 931 பேர். கைகடி வகை தமிழைப் பேசுபவர்கள் 21,848 பேர். யருகுலா அல்லது யருகாலா தமிழைப் பேசுபவர்கள் 63,133 பேர் ஆவர்.
மற்ற வடிவங்களைப் பேசுபவர்கள் 34,456 பேர். இந்தியாவில் தமிழ் பேசுபவர்களின் சதவீதம் 6.32 ஆகும்.
புதுவையில்தான் அதிக தமிழ் :
தமிழகத்தை விட குட்டி மாநிலமான புதுவையில்தான் தமிழ் பேசுபவர்கள் சதவீதம் அதிகம் உள்ளது என்பது சுவாரஸ்யமான ஒரு தகவல்.
புதுவையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 89.2 சதவீதம். தமிழகத்தில் இந்த சதவீதம் 86.7 ஆகும். குட்டித் தீவான அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தமிழ் பேசுபவர்கள் 19.1 சதவீத அளவில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் 2.1 சதவீதம் பேர் தமிழர்கள். வடக்கில் உள்ள சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 0.8 சதவீதம் பேர் தமிழர்கள். லட்சத் தீவுகளில் 0.5 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். கர்நாடகத்தில் தமிழ் பேசுபவர்கள் 4வது இடத்தில் உள்ளனர். (உண்மையான தமிழர்களின் எண்ணிக்கையை கர்நாடக அரசு எப்போதும் சரியாகத் தந்ததில்லை).
மற்றொரு பழமையான, செம்மொழியாக கருதப்படும் சமஸ்கிருதத்தை மொத்தமே 49,736 பேர்தான் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 0.01 சதவீதம் ஆகும்.
மொழி "மாறி" மாநிலங்கள்:
இந்தியாவின் சில மாநிலங்களில் அந்த மாநிலங்களின் மு¬க்கிய மொழிகளை விட பிற மொழி பேசுபவர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக உள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழி நேபாளி ஆகும். 63 சதவீத சிக்கிம் மக்கள் நேபாளிதான் பேசுகிறார்கள்.
திரிபுராவில் அம் மாநில மொழியான திரிபுரியை விட பெங்காலிதான் பெரும்பான்மையான மொழியாக உள்ளது. இங்கு 68.9 சதவீதம் பேர் பெங்காலி பேசுகிறார்கள். திரிபுரி பேசுபவர்கள் வெறும் 23.5 சதவீதம் மட்டுமே.
பஞ்சாப் மாநிலத் தலைநகராகவும், தனி யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் சண்டிகரில் பஞ்சாபியை விட இந்திதான் பெரும்பான்மையினர் மொழியாக உள்ளது. 61.1 சதவீதம் பேர் இங்கு இந்தி பேசுகிறார்கள். பஞ்சாபி பேசுவோர் 34.7 சதவீதம்தான்.
தட்ஸ்தமிழ்.கொம் - thatstamil.com
|
|
|
| அராபத்தின் மரணம் தரும் படிப்பினை ??? |
|
Posted by: Mathan - 12-14-2004, 04:56 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (2)
|
 |
பாலஸ்தீனம்: அராபத்தின் மரணம் தரும் படிப்பினை
உலக மக்களில் பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்ற விடுதலைப் போராட்டங்கள் என்பன உலகில் சிலவே. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகில் ஆயிரக்கணக்கான இடங்களில் அவ்வப்பகுதி மக்கள் தமது விடுதலைக்கான போராட்டங்களை நடத்திவந்தபோதிலும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டமும்தான் உலகில் பரவலான மக்கள் ஆதரவைப் பெற்றவ. இவற்றிற்கு ஆதரவாகத்தான் உலகமெங்கும் பெருமளவில் மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், இவற்றில் இனவெறியின் பிடியிலிருந்து விடுதலையான தென்னாப்பிரிக்கா இன்று கறுப்பர்களால்தான் ஆளப்படுகிறது. அவர்களால் தந்தை என்று போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் காலத்திலேயே இவை நடந்தேறிவிட்டன. ஆனால்.... அராபத்...?!
நாடற்றவர்களாக்கப்பட்ட யூதர்களுக்கு ஒரு நாடு உருவாக்கும் முயற்சியில், உலகெங்கும் பரவியிருந்த யூதர்களின் ஒருங்கிணைந்த திட்டத்தில் உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். ஆனால், கொடுமை என்னவென்றால், இதன்விளைவாக பாலஸ்தீனத்து மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். தமது தாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய பாலஸ்தீன மக்களுக்கு உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் ஆதரவளித்தன. குறிப்பாக, அரபு நாடுகள் பெருமளவில் நிதியுதவி அளித்தன. பல்வேறு நாடுகளிலும் இவர்களுக்கு ஆயுதப்பயிற்சிகள், ஆயுத உதவிகள் அளிக்கப்பட்டன.
இந்திராகாந்தியின் காலத்திலேயே இந்தியாவில் பாலஸ்தீன விடுதல இயக்கத்திற்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. அராபத்திற்கு விமான வசதிகள்கூட செய்கொடுக்கப்பட்டன. பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பது தனி இயக்கமல்ல; பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் பல்வேறு போராளிகள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பேயாகும். அதற்கும் அராபத்தே தலைமை தாங்கினார்.
இதன்பின்னர் ஒரு கட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளினூடாகச் சிக்கல்களைத் தீர்ப்பது என்ற அடிப்படையில் சர்வதேச நாடுகளின் தலையீட்டின்பேரில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இராணுவரீதியிலான போராட்டத்திற்குத் தலைமைதாங்கிய அராபத்தே இதற்கும் தலைமை தாங்கினார். மிகக் கவனமாகவே அவர் பேச்சுவார்த்தையில் நடந்துகொண்டபோதிலும் சோவியத் ஒன்றியம் என்ற பின்புல சக்தி வீழ்ந்தது பெரும் சிக்கலாக இருந்தது. அதன்பின்னரான பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் அராபத்தின்மீது திணிக்கப்பட்டன என்றே தோன்றுகிறது. பிற போராளி குழுக்கள் இப்பேச்சுவார்த்தையை எதிர்த்தபோதிலும் அமெரிக்க வல்லாண்மை, அதன் கையாளான இஸ்ரேலின் நிலை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அராபத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இக்கட்டத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இராணுவரீதியிலும் பலவீனமடைந்தது. பேச்சுவார்த்தையில் தாம் திட்டமிட்டதைவிட மிகவும் குறைவான பரப்பளவில் பாலஸ்தீன நாட்டை உருவாக்கிக்கொள்ள அராபத் சம்மதிக்கநேர்ந்தது. இதற்கும் ஒப்புக்கொண்ட நிலையில், அதைக்கூட செயல்படுத்த இஸ்ரேல் அனுமதிக்கவில்ல. அமைதி உடன்பாடு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனால் பிற பாலஸ்தீன போராளி குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டன. இதையே காரணமாகக் காட்டி இஸ்ரேல் வழக்கம்போல பாலஸ்தீனம் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டதுடன், கடந்த 3 ஆண்டு காலமாக யாசர் அராபத்தை அவரை தலைமையகத்தைவிட்டு வெளியேற இயலாதவாறு முடக்கியது. அவர் நோய்வாய்ப்பட்ட போதிலும்கூட வெளியேற அனுமதிக்கவில்ல. இறுதியாக வேறுவழியின்றி பாரிஸிலுள்ள இராணுவ மருத்துவமனக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே மரணமடைந்துவிட்டார் யாசர் அராபத்.
அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்திய நார்வேயும் சரி, அமெரிக்காவும் சரி, அராபத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசை அளிக்க பரிந்துரைத்த எந்தவொரு நாடும் சரி இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மயிரையும் ஆட்டவில்லை.
விட்டுக்கொடுத்தல்களினால் அராபத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது. பாலஸ்தீன மக்களுக்கு...?
அமைதிப் பேச்சுவார்த்தைகளில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகியுள்ளது இந்நிகழ்வு. வியட்னாமும்கூட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் தனது படைவலுவைக் குறைக்காமலேயே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது படை பலத்தோடேயே பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. ஆனால், யாசர் அராபத் இத்தகைய நிலையில் இல்லாமல் தனது படைவலுவை இழந்தார். இதுவே எதைக்கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளும் மனநிலைக்கு அவரைத் தள்ளியது.
அப்போதே அரசியல்ரீதியாக அராபத் கொல்லப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
நீண்டகாலமாக போராட்ட களத்தில் நிற்கும் இயக்கங்கள அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நீண்டகாலம் களம் காணவிடாது அமைதியின் பிடிக்குள் வைத்துக்கொண்டால் அவர்களின் போராட்ட மனநிலை "சாந்தப்பட்டுவிடும்" என்பதே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு களம் அமைத்துக்கொடுப்பவர்களின் எண்ணம் என்றால் மிகையில்லை. எந்நிலையிலும் விட்டுக்கொடுக்காது போராடினால் மட்டுமே விடுதலை நிச்சயம் என்பதே பாலஸ்தீனமும், தென்னாப்பிரிக்காவும் வியட்நாமும் தரும் பாடமாகும்.
நன்றி -அசுரன்
|
|
|
| புலிகள் ஆதரவாளராக நடிக்கிறார்களா? |
|
Posted by: Mathan - 12-14-2004, 03:47 AM - Forum: புலம்
- Replies (34)
|
 |
புலிகள் ஆதரவாளராக நடிக்கிறார்களா?
குரல் தரவல்ல அதிகாரிகள்
ஏலவே எழுத நினைத்திருந்த விடயம் இது. சேயோன் கூட அவ்வப்போது புறுபுறுத்துக் கொண்டிருந்தான் இது பற்றி.
புலம் பெயர் நாடுகளில் தங்களைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக காட்டிக் கொள்கிறவர்களுக்கு தங்களது புகழ் குறித்த உள்நோக்கம் இருக்கிறதா?
ஆம் என்கிறான் சேயோன். இப்போது நானும் கொஞ்சமாய் தலையாட்டுகிறேன் அதற்கு உதாரணங்களை பார்த்த பின்பு!
முதலில் புலம் பெயர்ந்த ஈழத் தழிழர்கள் அனைவருமே யுத்தத்தின் கோரத்தால் மன வலியோடு மண்ணை விட்டுப் போகவில்லை என்பதைச் சொல்ல வேண்டும்.
முக்கால் வாசிப் பேர் தமது தனிப்பட்ட வாழ்வின் தர மேம்பாட்டுக்காய் சென்றவர்கள். அதில் வெற்றியும் கண்டவர்கள். பின்னர் தமது உறவுகளை ஒவ்வொன்றாக அழைக்க அவர்களுக்கும் வெளிநாடுகளின் அதிகரித்த வாழ்க்கைத் தரத்தை மனதார ஏற்றுக்கொண்டு அடுத்தவர்களை அழைத்துக் கொண்டவர்கள். இதுவே உண்மை!
இவ்வாறு சென்றவர்களின் பொருளாதாரம் விடுதலைப் போரிற்கு மிக்க பக்க பலமாய் அமைந்ததென்பதையும் யாரும் மறுக்க முடியாது!
நிற்க,(இருந்தாலும் பரவாயில்லை)
அண்மைக்காலமாக என் வயதொத்த பல வெளிநாட்டு இளைஞர்கள் என்னோடு பேசும் போதும் எங்காவது எழுதும் போதும் நடந்து கொள்கிற முறையைப் பார்க்கின்ற போது இதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
அவுஸ்ரேலியா வந்த ஆரம்பத்தில் என்னோடு கொழும்பில் படித்த என் வயதொத்த இளைஞன் கனடாவில் இருந்து எனக்கு சொன்னார்!
'உங்கை ஆராவது இயக்கத்துக்கு எதிரா கதைச்சாலோ எழுதினாலோ அவங்களிலை ஒரு நோட்டம் வை. எங்களுக்கு அந்த தகவல்கள் வேணும்."
அவருக்கு நான் சொன்ன பதில்!
'நீ எல்லாம் ஊரிலை இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் போது வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே கிடந்த ஆளெல்லோ.. "
எங்களுக்கு அந்த தகவல்கள் வேணும் என்ற அந்த வார்த்தைகள் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?
தானும் ஒரு புலி என்று உணர்த்துகிறாரா?
தனக்கும் புலிகளுக்கும் இடையில் உயர் மட்டத் தொடர்பேதும் இருப்பது போல காட்டிக் கொள்ள ஆசைப் படுகிறாரா?
அவ்வாறாயின் அவர் தனது தனிப்புகழ் தொடர்பாக கவனமெடுக்கிறாரா?
நண்பன் சேயோன் அவருக்கு அருகிலேயே இருப்பவன். இப்பொழுதெல்லாம் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் கனேடிய பொறுப்பாளர் என்றும் ஒட்டாவா பொறுப்பாளர் என்றும் தான் குறிப்பிடுகிறான்.
புலம் பெயர்ந்த பின்னர் எப்படி ஒரு இரவில் இவர்களால் புலிகளின் குரல் தர வல்ல அதிகாரிகள் ஆகிவிட முடிகிறது?
புலத்தில் சண்டை நடக்காது என்ற தைரியமா?
இன்னுமொருவரை மிக அண்மையில் அறிந்து கொண்டேன். அவரது கருத்துக்களை படித்தறிந்த பின்னர் அவரைச் சுவிஸ் பொறுப்பாளர் ஆக்கலாம் என்று சேயோன் சொல்லியிருக்கிறான்.
அந்த இளைஞருக்கு ஈழப் பிரச்சனையில் தனது தர்க்க ரீதியான வாதத் திறமையை முழுமையாக காட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் போலும். வெறும் கற்றுக்குட்டித் தனமான அவரது கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப் படக் கூடிய அளவிற்கு வளர்ச்சியற்றிருந்தன.
அவர் எழுதுகிறார்!
கருணா போன்ற ஒருவரை வளர்த்து விட்டது தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் தானாம். புலத் தமிழர்கள் இல்லையாம்
புலிகள் தவிர்ந்த மாற்று இயக்கங்களை செயற்பட தாயக தமிழர்கள் அனுமதித்திருக்கிறார்களாம். புலத் தமிழர்கள் அப்படி அனுமதிக்க மாட்டார்களாம்
சுவிஸில் துரோகிகள் எவரும் இல்லையாம் என்றவர் இன்னும் ஒரு படி மேலே போய் அப்படி யாராவது இருந்திருந்தால் அவர்களை உயிருடன் விட்டு வைத்திருக்க மாட்டோம் என்கிறார்.
எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. வடிவேலு பாணியில் சின்னப் புள்ளைத் தனமால்ல இருக்கு என்று சொல்ல வேண்டியது தான்.
உச்சக் கட்டம் இது தான்.
வேறொருவர், சுவிஸ் காரருக்கு எதிரான கருத்தொன்றை முன்வைக்க இவர் எழுதினார் பாருங்க ஒரு வரி!
'இதை நான் சேர்க்க வேண்டிய இடத்திலை சேர்க்கிறன்."
அந்த சேர்க்க வேண்டிய இடம் எது என்பது உங்களுக்கு தெரியும். அந்தக் கருத்தின் மூலம் தனக்கும் அந்த சேர்க்க வேண்டிய இடத்திற்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதை நபர் உணர்த்த விரும்புகிறாரா? அப்படி விரும்பின் அதற்கான காரணம் என்ன? இதற்கு சேயோன் சொல்கிற பதில்
புகழ்!
சுவிஸ் நண்பர் மேலும் தொடர்கிறார். தான் தாயகத்தில் இருந்திருந்தால் இன்று மாவீரர் ஆகி விட்டிருப்பாராம்.
இங்கே பூச்சுத்தத் தொடங்கும் போது தான் எனக்கு கோபம் வருகிறது. இந்த கோபம் எனக்கு சிறு வயதிலேயே வந்தது. காசியானந்தன் எழுதிய ஒரு பாடல் வரிகள் புலத்திலிருந்து பாடுவது போல இருக்கும். அதில் நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல்லை என்கிற ஒரு வரி வரும்.
அவர்களை யார் வர வேண்டாம் என்றது என்று அப்பவே யோசித்திருக்கிறேன். (உண்மையிலேயே காசியானந்தனின் கடவுச் சீட்டினை இந்திய அரசு பறிமுதல் செய்து வைத்திருப்பதாய் யாரோ சொன்னார்கள்.)
தாயகத்தில் இருந்திருந்தால் மாவீரர் ஆகி விட்டிருப்பேன் என்றால் இன்னமும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை என்று தான் நான் சொல்லுவேன்.
ஒன்றை உரத்துச் சொல்ல ஆசைப் படுகிறேன். தேசத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பதனிலும் பார்க்க நான் உட்பட எங்களுக்கு எமது தனி வாழ்வின் மேம்பாடு முன்னிலையில் நின்றதனால் நாம் வெளிநாடுகளுக்கு வந்து விட்டோம். அதுவே உண்மை.
வந்துட்டோமில்ல! அப்புறம் என்ன? அங்கையிருந்தால் போராளியாகி இருப்பேன்.. மாவீரர் ஆகியிருப்பேன் என்கிற கதைச் சுத்தல்கள்!
இந்தச் சமாதானத்திற்கான காலத்தை அரசு புலிகளை பலவீனப்படுத்த பயன் படுத்துகிறது. புலிகளை இறுக்கமான ஒரு சர்வதேச வலைக்குள் சிக்க வைத்த அதன் கைகளை கட்டி விட முயல்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
உண்மைதான்!
எனது பார்வை இதனை புலத் தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது தான்! அநேகம் பேர் புலிகள் மீண்டும் யுத்தத்தை தொடங்குவதே இத் தடைகளை தாண்டுவதற்கான சரியான வழி என்கிறார்கள். அதுவே சரியானதுமாய் இருக்கலாம்.
யுத்தத்தின் நேரடி பாதக விளைவுகள் எதனையும் அனுபவிக்காத (சாதக விளைவுகள் பல.. பலரை அந்தந்த நாட்டுப் பிரஜைகள் ஆக்கியது யுத்தம் தான்.) ஒரு தேசத்திலிருந்து கொண்டு எப்படி இவர்களால் யுத்தத்தை தொடங்கு என்று கேட்க முடியும்?
சிறு வயதுகளில் தந்தை தாயுடன் வெளிநாடுகளுக்குப் போய் இன்று இளம் வயதை அடைந்து விட்டவர்களும் யுத்தத்தை தொடங்கினால்த் தான் எங்களுக்கு என்று ஒரு தனி நாடு வரும் என்கிறார்கள். தனி நாடு வந்த பின்னர் விடுமுறைக்குச் சென்று வர எண்ணியுள்ளார்களோ என்னவோ?
யுத்தம் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கின்றவர்கள் அந்த யுத்தத்தின் விளைவுகளை நேரடியாக சந்திக்கப் போகின்ற மக்கள் தான்.
மழை ஒழுகும் ஓலைக் குடிசை வாழ்வென்றால் என்ன என்று தெரியாதவர்கள், காதைக் கிழிக்கும் குண்டுகள் ஓசையை மறந்து விட்டவர்கள் அல்லது அப்பா அம்மா சொல்லிக் கேட்டவர்கள், பாம்புகளும் யானைகளும் நிறைந்த காடு சார்ந்த வாழ்க்கை முறையின் சிரமங்கள் தெரியாதவர்கள் யுத்தத்தை தொடங்கு என்று சொல்கின்ற போது அவர்களின் குற்ற உணர்ச்சி அவர்களை குத்திக் கிழிக்க வில்லையா?
சக்கரவர்த்தியின் (கனடா) ஒரு கவிதை எனக்கு மிகவும் கவர்ந்தது. அதன் மிகச்சரியான வடிவங்கள் என் நினைவில் இல்லை. இருப்பினும் அதன் சாராம்சம் இது தான்.
என் இதயம் யாருக்காக
இரத்தம் சிந்தி
கண்ணீர் வடிக்கிறதோ
அவர்கள் உங்களுக்காகவும்
வெடித்துக் கொள்கிறார்கள்
என்பது தான் என்
மிகப் பெரிய சோகம்.
நன்றி - சயந்தன்
|
|
|
| புதிய வானொலி |
|
Posted by: Rajan - 12-13-2004, 09:25 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
*** புதிய வானொலி
பற்றிய செய்திகளை ஏன் தணிக்கை செய்கிறிர்கள்?? ****
|
|
|
| இலங்கை அகதிகளின் சோகம் |
|
Posted by: vasisutha - 12-13-2004, 06:10 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
<img src='http://www.kumudam.com/reporter/161204/pg7t.jpg' border='0' alt='user posted image'>
ஏமாற்றிப் பணம் பிடுங்கத்தான் எத்தனையெத்தனை இரக்கமற்ற வழிகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் சிலர்!
லேட்டஸ்ட்டாக இலங்கை அகதிகளைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறது ஒரு 'அகாபுகா' கும்பல்.இந்தக் கும்பலை நம்பி, தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பலாம் என்ற ஆசையில் வரும் அகதிகள், கடைசியில் தங்கள் பணத்தையும் உடைமைகளையும் இழந்து போலீஸில் மாட்டும் அவல நிலைக்கு ஆளாகிறார்கள்.
இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால், இலங்கை அகதிகளை அழைத்துவரும் 'அகாபுகா' கும்பல்தான் கடைசியில் போலீஸிடமும் போட்டுக் கொடுக்கும் வேலையையும் செய்கிறது.
கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
ராமேஸ்வரம் கடல் வழியாக, திருட்டுத்தனமாக இலங்கைக்குப் பயணம் செய்யும் அகதிகளின் எண்ணிக்கையும், அப்படி பயணம் செய்யும் அகதிகளை போலீஸ் பிடிக்கும் சம்பவங்களும் சமீபகாலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளன.
கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே இருநூறுக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் போலீஸாரால் பிடிக்கப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த முகாம்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இருபத்துநான்காம் தேதியன்று கூட, பார்த்திபனூர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு பகுதி செக்போஸ்ட்டிலும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக இருபத்திரண்டு அகதிகள் பிடிபட்டனர்.
போலீஸ் விசாரணையில், அந்த அகதிகள் அனைவருமே ஈரோட்டில் உள்ள அரச்சலூர் அகதிகள் முகாமிலிருந்து வந்தவர்கள் என்பதும், ராமேஸ்வரம் புரோக்கர் ஒருவர் வாயிலாகத்தான் கள்ளத்தோணி மூலமாக இலங்கைக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. தவிர, இலங்கைக்குச் செல்வதற்குக் கட்டணமாக மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவரிடமும் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இருபத்திரண்டு பேருக்குமாகச் சேர்த்து எண்பதாயிரம் ரூபாய் கல்லா கட்டியிருக்கிறார் அந்த புரோக்கர்.
போலீஸ் சும்மாவிடவில்லை. சம்பந்தப்பட்ட புரோக்கரைப்பிடித்து விசாரித்திருக்கிறது. அந்த விசாரணையில்தான் அகதிகள் முகாம்கள் இருக்கும் எல்லா ஊர்களிலும் இப்படியான புரோக்கர்கள் இருப்பதும், அகதிகளை இலங்கைக்குத் திருட்டுத்தனமாக அனுப்பி வைப்பதை ஒரு தொழிலாகவே அந்த புரோக்கர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற விஷயமும் தெரியவந்திருக்கிறது.
தொழில் என்றால் சாதாரணத் தொழிலில்லை. லட்சக்கணக்கில் பணம் புரளும் தொழிலாகவே மாறியிருக்கிறது. இப்படி பணம் புரள்வதாலேயே பொறாமை ஏற்பட்டு சக புரோக்கர்கள் அழைத்துச் செல்லும் அகதிகள் பற்றிய விவரங்களை மற்ற புரோக்கர்களே போலீஸில் போட்டுக் கொடுத்து விடுகிறார்கள். இதன் விளைவாக ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் சமீபகாலமாக அகதிகள் பிடிபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த விவகாரம் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்வதற்காக, நமக்குத் தெரிந்த ராமேஸ்வரம் போலீஸ் அதிகாரியிடம் பேசினோம்.
மனிதர் ஏகப்பட்ட விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி, திருச்சி, ஈரோடு பகுதிகளிலுள்ள முகாம்களிலிருந்துதான் அகதிகள் புறப்பட்டு ராமேஸ்வரத்துக்கு வர்றாங்க. அவங்களை அழைச்சுட்டுப் போறதா சொல்ற ஏஜெண்டுகள், ராமேஸ்வரத்திலிருந்து சிலோன் ரொம்பப் பக்கம். ரெண்டே மணி நேரத்துல போயிடலாம். ஒரு பிரச்னையும் இருக்காதுனு சொல்லித்தான் கூட்டி வர்றாங்க. இப்போ இருக்கிற அகதிகள் எல்லாமே பதினஞ்சு இருபது வருஷங்களுக்கு முன்னாடி தமிழ் நாட்டுக்குள்ளே வந்தவங்க. அப்போ, சின்ன வயசுப் பசங்களா இருந்தவங்கதான், இப்போ முப்பது முப்பத்தஞ்சு வயசுக்காரங்களா இருக்காங்க. அப்படிப்பட்ட ஆண்களும், பெண்களும்தான் இப்படி திருட்டுத்தனமா புறப்பட்டுப் போறாங்க. சின்னஞ்சிறுசா தமிழ் நாட்டுக்குள்ளே இதே ராமேஸ்வரம் கடல் வழியா வந்தவங்களுக்கு, இப்போ பாதுகாப்புக் கெடுபிடிகளோட ராமேஸ்வரம் கடல் பகுதி இருக்கிற விஷயம் எப்படித் தெரியும்? அப்படித் தெரிஞ்சா புரோக்கர் பேச்சை நம்பி இப்படி குடும்பம் குடும்பமா கிளம்பி வருவாங்களா? என்ற அந்த போலீஸ் அதிகாரி தொடர்ந்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றுக்குத் தாவினார்.
அகதிகள் கள்ளத்தோணி மூலமா அவங்க சொந்த நாட்டுக்குப் போறதும், எங்ககிட்டே பிடிபடுறதுமா இருக்காங்களே.. அப்படி பிடிபடுறவங்கள்ல ஒரு ஆள் கூட மண்டபம் முகாம் அகதி கிடையாது தெரியுமா? இந்த முகாம் அகதிகளுக்கு ராமேஸ்வரம் கடலைப் பத்தியும், பாதுகாப்புகள் பற்றியும் நல்லாவே தெரியும். இத்தனைக்கும் மற்ற அகதிகள் முகாம்களை ஒப்பிடும்போது இலங்கைக்கு ரொம்பப் பக்கமா இருக்கறது மண்டபம் அகதிகள் முகாம் தான்.
இன்னொரு விஷயம்.. மண்டபம் முகாமில் உள்ள அகதிகள்தான் முறையான வழியில் இலங்கைக்குப் போறாங்க. தங்களுடைய நாட்டுக்குப் போக விருப்பம் தெரிவிச்சு அப்ளிகேஷன் போட்டு, அதிகாரிகளுடைய விசாரணைகளுக்குப் பதில் சொல்லி, தயாரா இருக்கணும். அவங்களுடைய அப்ளிகேஷனை ஐ.நா. சபையோட அகதிகள் ஹை கமிஷன் அதிகாரிகள் பரிசீலனை பண்ணி ஓ.கே. பண்ணின பிறகுதான் அகதிகள் தங்கள் நாட்டுக்குச் செல்ல விமானமே ஏற முடியும். இந்த முறையில்தான் மண்டபம் அகதிகள் இலங்கைக்குப் போறாங்க. கடந்த வாரம்கூட இருபத்தேழு அகதிகள் திருச்சியிலேருந்து விமானம் மூலமா இலங்கைக்குப் போயிருக்காங்க என்றவர், கடைசியாக இவ்வளவு கெடுபிடித் தொல்லைகளுக்குப் பயந்துதான் அகதிகள் திருட்டுத்தனமா போக ஆசைப்பட்டு கடைசியில் மோசம் போறாங்க என்றார்.
ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரை ஒத்தக்கல், ராமகிருஷ்ணாபுரம், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளிலிருந்துதான் அகதிகள் கள்ளத்தோணி மூலமாகப் பயணமாகிறார்கள்.
தனுஷ்கோடிவரை நீண்டு கிடக்கும் சவுக்குக் காட்டுக்குள்ளும், கருவேலம்புதருக்குள்ளும் அகதிகளைப் பதுக்கி வைக்கும் ஏஜெண்டுகள், இரவு பதினொரு மணிக்கு மேல் அருகிலேயே இருக்கும் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அங்கே தயாராக நிற்கும் தோணிகளில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள்.
அதற்குள்ளாகத் தகவல் கிடைத்து ஸ்பாட்டுக்கு விரைந்து வரும் போலீஸோ, அல்லது கடலோரக் காவல்படையோ அகதிகளைச் சுற்றி வளைத்துப் பிடித்து விடுகிறது. அகதிகளை தண்டிக்கவோ சிறையில் அடைக்கவோ கூடாதென்பதால், அவர்களிடம் விசாரணை மட்டும் செய்துவிட்டு, அவர்கள் தங்கியிருந்த முகாம்களுக்கே மீண்டும் அனுப்பி வைத்துவிடுகிறது போலீஸ்.
தாங்கள் அழைத்து வந்த அகதிகள் போலீஸில் மாட்டிவிட்டால் ஏஜெண்டுகள் அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. தவிர, அகதிகளிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவதுமில்லை. சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணத்தை அப்படியே ஏஜெண்டிடம் அள்ளிக் கொடுத்து ஏமாந்துவிட்டு, சொந்த நாட்டுக்கும் போக முடியாமல் மீண்டும் முகாம்களிலேயே அடைக்கோழிகளாக அடைந்துகொள்கிறார்கள் இந்த அப்பாவி அகதிகள்.
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அகதிகள் பிடிபடுவதென்பது சாதாரணச் செய்தியாகிவிட்டது. ஆனால், அந்த அகதிகளுக்குள் இருக்கும் வேதனையும் சோகமும் நிச்சயமாக சாதாரண விஷயமல்ல, என்பதே உண்மை.
kumudam.com
|
|
|
| new 2 this forum |
|
Posted by: godson - 12-13-2004, 11:51 AM - Forum: அறிமுகம்
- Replies (6)
|
 |
hi guys hw r u doing all? it's me Godson frm UK
i'm 20 yrs old 15 yrs i'm living in UK i can read Tamil i can't write very well tamil but i ll wtire littile bit
is that ok 2 u guys? if any problem let me know guys.
thanks
|
|
|
|