| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 246 online users. » 0 Member(s) | 243 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அஞ்சலி நிகழ்வுக்கு அதிரடிப்படை தடை |
|
Posted by: Vaanampaadi - 01-25-2005, 02:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<img src='http://www.pathivu.com/img/startsite/news.gif' border='0' alt='user posted image'>
செய்திகள்
செவ்வாய்க்கிழமை 25.01.05 - 13:24 மணி தமிழீழம்
சுனாமியால் உயிரிழந்தோரின் அஞ்சலி நிகழ்வுக்கு அதிரடிப்படை தடை
அம்பாறை விநாயபுர நலன்புரி நிலையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்விற்கு விசேட அதிரடிப்படையினர் தடை விதித்துள்ளனர். சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் 31 ஆம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்வுக்கு ஆரம்ப ஆயத்தங்கள் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற அதிரடிப்படையினர் அந்நிகழ்வு இடம்பெறவிடாது தடுத்துள்ளனர்.
படைஉயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றே நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும் என அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்களுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மக்கள் அதிரடிப்படையினரைத் திட்டித் தீர்த்தனர். பெண்களையும் குழ்தைகளையும் பல உறவுகளையும் இழந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட அனுமதி இல்லையா என கூச்சல் குரல் எழுப்பினர்.
Source: Pathivu
|
|
|
| பிரபாவின் படத்தை ஜே.வி.பியினர் அடித்து நொறுக்கினர் |
|
Posted by: Vaanampaadi - 01-25-2005, 01:26 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
பிரபாவின் படத்தை ஜே.வி.பியினர்
காரைதீவில் அடித்து நொறுக்கினர்
மக்கள் ஆத்திரமடைந்ததால் முறுகல் நிலை
காரைதீவு தமிழ்ப்பாடசாலையில் மாட்டப் பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை ஜே.வி.பி யினர் அடித்து நொறுக்கினர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முறு கல் நிலை ஏற்பட்டது. பாடசாலை அதிபர் பெரும் பிரயத்தனத்துடன் ஜே.வி.பியினரை பாடசாலை வளவில் இருந்து வெளியேற்றி நிலைமையைச் சுமுகமாக்கினார்.
இச்சம்பவம் நேற்றுப் பகல் காரைதீவில் இடம்பெற்றது.•
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட காரை தீவு தமிழ் வித்தியாலயத்தைச் சுத்தம் செய்வ தாகக் கூறிக்கொண்டு சுமார் 20 ஜே.வி.பி. தொண்டர்கள் பாடசாலைக்குள் வந்துள்ளனர்.
இவர்கள் பாடசாலையைத் துப்புரவு செய்து கொண்டிருக்கும்போது அங்கே காணப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை எடுத்து ஆத்திரத்துடன் அடித்து உடைத்து நொறுக் கியுள்ளனர்.
ஜே.வி.பியினரின் நடவடிக்கையினால் ஆத்திரமடைந்த மாணவர்களும் பொதுமக்க ளும் ஜே.வி.பியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு சாராருக்கும் இடையில் முறு கல் அதிகரித்து மோதல் ஏற்படும் நிலையேற் பட்டது.
நிலைமையை அவதானித்த பாடசாலை அதிபர், உடனடியாகத் தலையிட்டு மமநிவாரணப் பணியும் வேண்டாம் குழப்பமும் வேண்டாம் இடத்தைக் காலிசெய்யுங்கள்டுடு என்று ஜே.வியி னரை பாடசாலையிலிருந்து வெளியேற்றி விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் பெரும் மோதல் ஒன்று தவிர்க்கப் பட்டது.
Source : Uthayan
|
|
|
| வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு |
|
Posted by: Vaanampaadi - 01-25-2005, 01:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு வெள்ளவத்தை 33வது ஒழுங்கைமுகப்பில் காலிவீதியில் நேற்றிரவு 9.45 மணியளவில் காளிக்கொடி ஜெகதீஸ்வரன் (ஜெகன்) வயது 32 சுடப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட இவர் வவுனியாவில் திருமணம் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை பொலிஸ்நிலையத்திற்கு சமீபமாக சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள சைவக்கடை ஒன்றின் முன்பாகவே இச்சூட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டின்போது படுகாயமடைந்த இவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
|
|
| வெளிநாட்டு வினோதங்கள் |
|
Posted by: Vaanampaadi - 01-25-2005, 01:08 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
வெளிநாட்டு வினோதங்கள்
கோடை விடுமுறையில் வீட்டு பாடமா? கோர்ட்டில் மாணவர் வழக்கு
கோடை விடுமுறையில் வீட்டு பாடம் எழுதி வரச்சொன்ன பள்ளிக்கூடம் மீது கோர்ட்டில் மாணவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் விட்னால் மாவட்டம் மில்வாகே நகரில் நடந்துள்ளது. லார்சன் என்ற அந்த 17 வயது மாணவனுக்கு உயர்நிலைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஏராளமான வீட்டுப்பாடம் எழுதி வரச் சொன் னார்கள்.
இதை எதிர்த்து அந்த மாணவரும், மாணவரின் தந்தையும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கில் "கோடை விடுமுறை நாட்களில் வீட்டுப்பாடம் எழுதி வரச்சொல்ல ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை.
180 நாட்கள் பள்ளிக்கூடம் நடைபெறுகிறது. இதைத்தவிர மற்ற நாட்களில் மாணவர்களை ஆசிரியர்கள் வீட்டு பாடம் எழுதி வரச்சொல்லக்கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
*****
பாரசூட்டில் குதித்த 8 மாத கர்ப்பிணிக்கு தரை இறங்கியதும் குழந்தை பிறந்தது
பாரசூட்டில் குதித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடுவானில் பிரசவவலி ஏற்பட்டது. வலியைத் தாங்கிக் கொண்டு அந்தப்பெண் குதித்ததும் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அந்தப்பெண்ணின் பெயர் மரிஜா உசோவா. ரஷியாவைச் சேர்ந்தவர் திருமணம் ஆனவர்.
திருமணத்துக்கு முன்பு இருந்தே வானத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் தரையில் குதித்து சாகசங்கள் செய்வதில் ஆர்வம் உண்டு.
இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு பாரசூட் மூலம் குதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. டாக்டர்கள் தடுத்தும் கேளாமல் அவர் விமானத்தில் பறந்து பாரசூட்டில் குதித்தார்.
முன் கூட்டியே அங்கே காத்திருந்த டாக்டர்களிடம் பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாக கூறினார். அருகில் உள்ள மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
"பாரசூட்டில் குதிக்கும் போது ஏற்படும் இன்ப அதிர்ச்சியை என் வயிற்றில் உள்ள குழந்தையும் உணர வேண்டும் என்று நினைத்தேன் அதற்காகத்தான் பாரசூட்டில் இருந்து குதித்தேன்" என்றார் மரிஜா.
*****
மதுபான விடுதிகளில் புகைபிடிக்கத் தடை
இங்கிலாந்தில் பல்வேறு நகரங்களில் 650 மதுபான விடுதிகளை நடத்திவரும் நிறுவனம் `வெதர்ஸ்பூன்'. அடுத்த ஆண்டு மே மாதம் முதல் மதுபான விடுதிகளில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்படும் என்று இந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் முதல் 60 விடுதிகளில் புகைபிடிக்கத் தடை வரும் என்றும் அது அறிவித்து உள்ளது.
புகை பிடிப்பதை கைவிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மதுபான விடுதிகளில் நிறையப்பேர் புகைபிடிப்பதால் பலர் அங்கு வரத் தயங்குகிறார்கள் என்று அந்த நிறுவனத் தலைவர் டிம்மார்ட்டின் கூறி இருக்கிறார்.
Source : Dailythanthi
|
|
|
| முதல்வர் ஜெ.பங்களாவில் கொள்ளை: |
|
Posted by: Vaanampaadi - 01-25-2005, 12:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
<img src='http://www.dinakaran.com/daily/2005/Jan/25/others/C125_jjaaaaa.jpg' border='0' alt='user posted image'>
கொள்ளையடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பையனுர் பண்ணை வீட்டை படத்தில் காணலாம்
மாமல்லபுரம், ஜன. 25- ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் இடம் பெற்ற ஜெயலலிதாவின் பையனு}ர் பண்ணை வீட்டில் கதவை உடைத்து விலை உயர்ந்த பொருள்களை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
மாமல்லபுரம் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் இசை அமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான பையனு}ர் பங்களாவையும், சிறிதாவூரில் ஒரு பங்களாவையும் முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா ஆகியோர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி வாங்கினர். அரசியல் ரீதியாக ஜெ.வுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் பையனு}ர் பங்களாவுக்கு ஜெயலலிதா வந்து முக்கிய முடிவுகள் எடுத்து செல்வது வழக்கம்.
மேலும் ஜெ-சசி இருவரும் இப்பங்களாவுக்கு ரகசியமாக வந்து ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். எனவே இது ராசியான இடமாக கருதப்பட்டது. 96 தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால் இப்பங்களா ராசியில்லாத பங்களாவாக மாறியது. ஜெயலலிதா மீதுள்ள ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கிலும் இந்த பங்களா இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக பங்களா கேட்பாரற்று கிடந்தது. பெயருக்கு ஒரு காவலாளி மட்டும் நியமிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஒழுங்காக சம்பளம் தரப்படாததால் ஏனோ தானோ என இருந்த தாக கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சிலர் அந்த பங்களாவினுள் இரவு நேரத்திலோ, அதிகாலையிலோ புகுந்து பங்களா கதவு பூட்டை உடைத்து அங்கிருந்த ஏ.சி மிஷின், டி.வி., சி.டி.க்கள், பிளேயர், பிரிட்ஜ; உள்பட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதனால் அப்பங்களாவின் வரவேற்பு அறை அலங்கோலமாக காட்சி அளித்தது. கொள்ளை போன ரொக்கம், பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது தெரியவில்லை. கொள்ளை போன பொருட்கள், பணம் பற்றிய விவரம் சரிபார்க்கப்படுவதாக பரபரப்பாக கூறப்படுகிறது.
கொள்ளை பற்றிய தகவல் அறிந்ததும் ஜெயலலிதாவும், சசிகலாவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுதாவூர் பங்களா சீரமைப்பு பணியை பார்க்க வந்த சசிகலா பையனு}ர் பங்களாவையும் பார்த்து செல்ல முடிவெடுத்து அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சசிகலா தற்போது பையனு}ர் பங்களாவை ஒப்பந்த அடிப்படையில் சீரமைப்பு செய்யும் நிர்வாகி சோலையிடம் இதை தெரிவித்து போலீசில் புகார் செய்ய கூறியுள்ளார்.
அவரது புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் பையனு}ர் கிராமத்திற்கு சென்று 20 பேரை பிடித்து விசாரணை செய்து வருகிறhர்கள். இதை அறிந்த ஊராட்சி தலைவர் சேகர், காவல் நிலையம் சென்று, எதற்காக அப்பாவி களை பிடித்து வந்தீர்கள். உண்மை குற்றவாளிகளை தேடி கண்டுபிடியுங்கள் என கூறி 12 பேரை விடுவித்து அழைத்து சென்றுள்ளார். இருப்பினும் பையனு}ரை சேர்ந்த காண்டீபன், குமார் உள்பட 7 பேரை பிடித்து ரக சியமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரபரப்பு
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவிலேயே மர்ம ஆசாமிகள் புகுந்து கொள்ளை அடித்து சென்று இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முதல்வர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் போலீசாரும் கலக்கம் அடைந் துள்ளனர். ஒரு பக்கம் கிராம மக்கள் உண்மை குற்றவாளிகளை பிடிக்க கோரி வருகின்றனர். மற்றெhரு பக்கம் சசிகலா, நான் சொல்லும் வரை யாரையும் விடக்கூடாது என போலீசாருக்கு கட்டளையிட்டு உள்ளதாக தெரிகிறது.
கொள்ளை நடந்த பையனு}ர் பங்களாவுக்கு முன்பு அரசு நடுநிலைப் பள்ளி இருந்தது. தற்போது உயர்நிலைப் பள்ளியாக மாறியது. ஆரம்பத்தில் ஜெ. -சசி காரில் வரும்போது இந்த பள்ளி வழியாகத் தான் வரவேண்டும். இது ஜெ- சசிக்கு தொந்தரவாக இருந்தது. இதனால், கிராம மக்களிடம் பேசி இந்த பள்ளியை வேறு இடத்தில் நல்ல கட்டிட வசதிகளுடன் கட்டி தருகிறேன். உயர்நிலைப் பள்ளியாக மாற்றி தருகிறேன் என வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை நிறைவேற்றhமலே இருந்துவிட்டார்.
இப்பள்ளி வளாகத்தில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வாலிபால் விளையாடுவார்கள். எனவே அவர்கள்தான் ஆள் இல்லாததை நோட்டம் பார்த்து பங்களாவில் புகுந்து திருடி சென்றிருக்கலாம் என கருதி அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறhர்கள்.
சுனாமி வந்த அன்றும் இங்கு கொள்ளை நடந்து உள்ளது. ஆனால் நேற்று நடந்த கொள்ளைதான் வெளியே தெரிந்து உள்ளது. இதில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள வி.சி.டியை திருடி வெறும் ரூ.3 ஆயிரத்துக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டு , அதை போலீசார் மீட்டு உள்ளனர்.
Source : Dinakaran
|
|
|
| தேசிய துக்கதினம் - 26.01.05 |
|
Posted by: msuresh - 01-25-2005, 11:28 AM - Forum: அறிமுகம்
- Replies (1)
|
 |
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போரினால் மிகுந்த துன்பங்களையும் அழிவுகளையும் சொல்லொணாத இடர்களையும் சந்தித்த எமது மக்கள் வாழ்க்கையின் அனுகூலங்கள் அனைத்தையும் இழந்தனர். தற்போது நிலவிவரும் போர் நிறுத்த காலத்தில் எமது மக்கள் கடற்கரையோரங்களில் குடியேறி தமது வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை மேற்கொண்டு வாழ்வியல் அனுகூலங்கiளை ஓரளவு உள்வாங்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கடந்த 26.12.2004 அன்று சற்றும் எதிர்பாராத விதமாக பொங்கி எழுந்த நிலவதிர்வுப் பேரலைகள் இலங்கைத்தீவு உட்பட தென்னாசியப் பிராந்தியத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கைத் தீவில் எமது தாயகப் பகுதிகளில் வாழும் எமது மக்கள் அதிகமான அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இந்த இயற்கையின் கோரத் தாண்டவத்தால் இடம்பெயர்ந்த எமது மக்கள் தமது உறவுகளையும் வாழ்விடங்களையும் இழந்து பிரிந்த தமது உறவுகளின் சோகத்துடன் மனது பேதலித்த நிலையில் மீண்டும் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் இருந்து வருகிறார்கள்.
இப்பேரனர்த்தம் காரணமாக தமிழர் தாயகத்திலும் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 26.01.05 நாள் தேசிய துக்கதினமாக தமிழீழ விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்படுகிறது. இந்நாளில் தமது அன்புக்குரியவர்களையும் உறவுகளையும் இழந்து துடிக்கும் எமது உறவுகளின் சோகத்தில் பங்குகொள்வோம்.
மூர்க்கமாக எழுந்த கடலலைகளில் சிக்கி எமது உறவுகள் உயிர்நீர்த்த அந்தக் கணத்தில் தமிழர் தேசத்திலும் புலம்பெர்ந்து தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவுச்சுடரேற்றி இழந்துபோன உறவுகளை நினைவில் நிறுத்துவோம்.
இடம்: அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் Nedre Rommen3,0988Oslo
காலம்: 26.01.05 புதன்கிழமை மாலை 7.00 மணி
நினைவுச்சுடரேற்றி இழந்துபோன உறவுகளை நினைவில் நிறுத்தும் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
|
|
|
| ஒரு Kg சீனி ரூபா 40 |
|
Posted by: lakpora - 01-25-2005, 08:46 AM - Forum: நகைச்சுவை
- No Replies
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>கேட்டதும்................
சூழல் :- ஒரு பாடசாலையில ஒரு வகுப்பில </b></span>
[b]ஆசிரியான்:-
தம்பி குணா விடையளியும் பார்க்க இந்தக் கேள்விக்கு
ஒரு Kg சீனி ரூபா 40.00 , நான் தம்பியிடம் ரூபா 100.00 ஐத் தந்து இரண்டு Kg சீனி வாங்கி வரச்சொன்னால்................
[b]குணா :-
டீச்சர் உங்கட மோட்டார் சைக்கில தந்தால் தான் போவேன் !
[b]ஆசிரியான்:-
சரி , மோட்டார் சைக்கில தந்து வாங்கிவரச்சொன்னால் எத்தன Kg சீனியும் எவ்வளவு காசும் மீதியாகக் கொண்டுவந்து தருவாய் ?
[b]குணா :-
காசும் தீந்து சீனியும் இரண்டு Kg வுக்கு குரைவாகவே கொண்டுவருவன் !
[b]ஆசிரியான்:-
தம்பி ஒரு Kg சீனி ரூபா 40.00 [அப்போ] இரண்டு Kg சீனி ரூபா 80.00 நான் தம்பியிடம் ரூபா 100.00 ஐத் தந்தால் ரூபா 20.00 ஐப் பாக்கியாக கொண்டுவருவர வேண்டுமே !
[b]குணா :-
டீச்சர் இரண்டு Kg சீனியும் ரூபா 20.00 உம் கிடைக்கும் தான் ஆனா நான் சீனி வாங்ககிடடு வரும் வழியில ரகு அன்னாக்கிட்ட ரூபா 20.க்கும் சுட சுட வடை வாங்கிக்கிட்டு சாப்பிட்ட வன்னமே வருவதனால, அந்த வடையுடைய உறைப்பு நாக்கை சுடும்போது சீனியினாலயும் நான் திண்டால் எப்படி ரூபா 20.00 ஐப் பாக்கியாகவும் சீனி 2 Kgவும் கொண்டுவர முடியும் :?:
[b]ஆசிரியான்:- :? :?: :!:
|
|
|
|