Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 58 online users.
» 0 Member(s) | 55 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,331
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  திரு ஏ. சீ. தாசீசியஸின் நேரடி சுனாமி அனுபவம்
Posted by: yarl - 01-27-2005, 01:23 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (6)

வடமராட்சி கிழக்கு - தாளையடியில் - இடுப்பளவுக்கு வந்துவிட்ட நீரில் தத்தளித்து நூலிழையில் உயிர் தப்பி மீண்ட திரு ஏ. சீ. தாசீசியஸின் நேரடி சுனாமி அனுபவம்


"கொலை-அலை தாக்க

உறவு-அலை காக்க!

காக்க! காக்க!!"


http://www.tamilkudil.com/tamilkudil/tam/

Print this item

  சுனாமி
Posted by: KaviPriyan - 01-26-2005, 11:53 PM - Forum: அறிமுகம் - Replies (2)

<img src='http://home.no/tsunamiineelam/images/stsunami.jpg' border='0' alt='user posted image'>
சுடர்ஒளி பத்திரிகையில் இடம்பெற்ற கட்டுரை உங்கள் அறிவிற்கு.... உங்களிடம் இருந்தால்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

வாசிக்க சுனாமி இணையத்தை பார்க்கவும்....
<span style='font-size:30pt;line-height:100%'>www.tsunamiineelam.com</span>

நன்றி
[b]<span style='font-size:30pt;line-height:100%'>கவிப்ரியன்</span>

Print this item

  கடலே கடலே
Posted by: shiyam - 01-26-2005, 06:42 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

கடலே கடலே
எம்கடலே பதில் சொல்
உன் செல்வத்தை நாம்
அள்ளி சேர்த்தாலா
எம் செல்வத்தையெல்லாம்
அள்ளிச் சென்றாய்
உன்கரையில் விழையாடி
சிப்பிபொறுக்கிய சிறுவர்கள்
உடல்களையல்லவா
பொறுக்கிகொண்டிருக்கிறேம்
தீர்ந்ததா உன்பசி
காணும் கரைதோறும்
காதலர் கூட்டங்கள்
கூடிமகிழந்த குழந்தைகள்
பேசி பொழுது போக்கும்
பெரியவர்கள் ஏன்
சில கிராமங்களையே
காணவில்லை
பிள்ளை உடலை
அடையாளம் காட்ட
பெற்றவரை தேடினோம்
பெற்றவரையும் காணவில்லை
போதும் தாயே போதும்
இனியும் அழுததும் போதும்
இழப்பு எமக்கு புதிதில்லை
மெத்தமாய் புதைத்த குழியில்
மீதமாய் எம்சோகங்கழையும்
புதைத்து
புதிதாய் மீண்டும் எழுவோம்
கடலே கடலே
மீன்பிடிக்க மீண்டும் வருவோம்.......

சுனாமி அனர்த்தத்தில் இறந்த எம்உறவுகளிற்கு சமர்ப்பணம்

Print this item

  மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி
Posted by: Vaanampaadi - 01-26-2005, 06:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (11)

மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார்.

புதன்கிழமை 26 சனவரி 2005 குமரப்பா

லண்டனில் பூசாரியின் மனைவிக்கும் கைசாதகம் பார்க்கும் சாத்திரியார் ஒருவருக்கும் ஏற்பட்ட காதலால் தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்த கோவில் பூசாரி மீண்டும் நீதிமன்றின் உதவியுடன் மனைவியின் கரம் பிடித்துக்கொண்டுள்ளார். லண்டனில் பிரபல தமிழ்க் கோவிலொன்றில் கடமையாற்றும் கோவில் பூசாரியின் மனைவியே அங்கு கைச்சாத்திரம் சொல்லும் சாத்திரியாருடன் தலைமறைவானதும் ää உடனடியாகக் கோவில் பூசாரியால் காவல்துறையினருக்கு முறையிடபட்டதைத் தொடர்ந்து உடனடியாகப் பொலிசாரின் உதவியுடன் மீண்டும் சட்டப்படியான கணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைச்சாத்திரிக்கும் தனக்கும் ஏற்பட்ட காதலே இந்த விபரீத சம்பவத்திற்குக் காரணம் என்று சம்பவத்துடன் தொடர்புடைய பெண்மணி தெரிவித்துள்ளதாகப் பொலிசாருக்குக் கொடுக்கப்பட்ட முறைப்பாடுகள் தெரிவிக்கின்றது.

Source : http://www.nitharsanam.com/?art=8339

Print this item

  மரத்தினால் வடிவமைக்கப்பட்ட ..
Posted by: Vaanampaadi - 01-26-2005, 05:59 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (5)

மரத்தினால் வடிவமைக்கப்பட்ட புத்த புனித ஸ்தலத்தின் பேழை ஒன்று தாய்லாந்து கரையோரப்பகுதியில் இருந்து சுனாமியால் அடித்து செல்லப்பட்டு இன்று காலை மட்டக்களப்பில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாகரை பகுதியை வந்தடைந்துள்ளது.........

<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ThaI-2_35994_435.jpg' border='0' alt='user posted image'>

Thai shrine drifts to Vakarai

[TamilNet, January 26, 2005 13:23 GMT]
A Southeast Asian Buddhist shrine made of wood that had drifted in the sea was found on the Vakarai beach Wednesday. Crowds from the Tsunami devastated village flocked to see the curious floating shrine. The decorated structure was borne by the tide through the estuary of the Vakarai lagoon and beached in the early hours of the morning Wednesday.

Vakarai is 64 kilometres north of Batticaloa.

The shrine appears to have drifted across the Bay of Bengal from the Thai coast following the Boxing Day Tsunami.

The statue in the shrine is missing.

Print this item

  Light a Candle at Tamilskinfo.dk
Posted by: Kishaan - 01-26-2005, 05:30 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - No Replies

உங்கள் மெழுகு திரிகளை ஏற்றி நீங்களும் உங்கள் உள்ளத்து உணர்வுகளை தெரிவியுங்கள்.
<img src='http://www.tamilskinfo.dk/images/stories//news/2005/january/forside-advert.jpg' border='0' alt='user posted image'>
http://www.tamilskinfo.dk/tsunami_light_a_candle/

Print this item

  சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு
Posted by: yarlmohan - 01-26-2005, 04:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு
செய்தியும், படங்களும்

http://www.yarl.com/news/2005/01/26/000808.php

http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=28

Print this item

  Microsoft இன் ஏகபோகத்திற்கெதிராக 497 மில்லியன் யூரோ தண்டம்
Posted by: Mathan - 01-26-2005, 03:22 PM - Forum: கணினி - Replies (4)

Microsoft இன் ஏகபோகத்திற்கெதிராக 497 மில்லியன் யூரோ தண்டம்



வின்டோஸ் பல்லூடக இயக்கி (Windows Media Player) தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய சர்ச்சைகள் ஏற்கனவே தெரிந்தவிடயம்.

இப்பொழுது புதிய செய்தி என்னவெண்ன்றால், இவ்வளவு காலமும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கெதிராக அப்பீல் செய்யும் உரிமையை பயன்படுத்தப்போவதாக அறிக்கை விட்ட மைக்ரோசொப்ட், அப்பீல் எதுவும் செய்யாமல் பின்வாங்கியிருப்பதுதான்.

இந் நீதிமன்ற ஆணைக்கெதிராக அப்பீல் செய்வதில்லையென மைக்ரோ சொப்ட் முடிவெடுத்துள்ளது. இனி மைக்ரோசொப்ட், தனது இயக்குதளமான வின்டோஸ் இனை, Windows Media Player சேர்க்கப்படாத நிலையிலேயே பொதி செய்து வழங்க வேண்டியிருக்கும்.

இவ்வாணையை செயற்படுத்துவதற்கான காலக்கெடு கடந்த மார்கழியோடு முடிவுக்கு வந்துவிட்டது.

எதிர்வரும் வாரங்களில் வின்டோசின் பல்லூடக இயக்கி நீக்கப்பட்ட நிலையிலான புதிய பதிப்பு வெளிவரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40130000/jpg/_40130992_microsoft-box203ap.jpg' border='0' alt='user posted image'>

இச்சர்ச்சையின் பின்னணி, மென்பொருள் ஜாம்பவானான மைக்ரோசொப்ட், தனது ஏகபோகத்தை மென்பொருள் சந்தையில் நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதுதான். தனது இயக்குதளத்தோடு தனசு சொந்தபல்லூடக இயக்கியை பொதி செய்து வழங்குவதன்
மூலம் முறை கேடான வழியில், தனது போட்டிச் செயலிகளான Real Player, Quicktime Player போன்றவற்றை ஓரங்கட்ட மைக்ரோசொப்ட் முயற்சிக்கிறது.

இன்றைய தனி நபர் கணினிகளில், பத்துக்கணினிகளுக்கு ஒன்பது கணினிகள் வின்டோஸ் இயக்குதளத்தையே பயன்படுத்துகின்றன.
இச்சந்தை நிலையினை, தனது போட்டி நிறுவனங்களை தோற்கடிப்பதற்கு மைக்ரோசொப்ட் துஷ்பிரயோகம் செய்திருக்கிறது என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் வாதம்.

இக்குற்றத்திற்கு தண்டமாக , வியாபாரப் போட்டி வழக்குகளின் வராற்றிலேயே மிக அதிக தொகையான 497 மில்லியன் யூரோ இதற்கான தண்டமாக பங்குனி 2004 இல்
விதிக்கப்பட்டது. வின்டோசினை நிரலவிழ்ப்பு செய்யவேண்டு மென்ற ஆணையும் மேலதிகமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போட்டி நிறுவனங்கள், போட்டிச் செயலிகளை வடிவமைப்பதினை இலகுபடுத்தும் வகையில், தனது வின்டோஸ் மென்பொருளின் ஆணைமூலம் பற்றிய தகவல்களை வெளியிடவேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தான் ஏற்கனவே, வின்டோஸ் மேசைச்சூழலோடு சிறப்பானமுறையில் பணியாற்றும் மென்பொருட்களை வடிவமைப்பதற்கான தகவல்களை வழங்குவதற்கென
சிறப்பான வலைத்தளம் ஒன்றினை உருவாக்கியிருப்பதாக மைக்ரோசொப்ட் கூறுகிறது.

இவ்வ்ழக்கினை, வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான சந்தைபிடிக்கும்
போட்டாபோட்டியின் விளைவுகளில் ஒன்றாகத்தான் பார்க்கமுடியுமே தவிர, தொடுக்கப்பட்ட வழக்கு, சமூக விழிப்ப்ணர்வோடு, மக்கள் நிலை நின்றுதான் தொடுக்கப்பட்டது என்று நம்புவதற்கில்லை.

அரசியலிலும் சரி , வர்த்தகத்திலும்சரி, அமரிக்க ஏகாதிபத்தியத்துக்கு
சவாலாக ஐரோப்பிய ஒன்றியம் மாற்றுச்சக்தியாக உருவெடுத்துவருவது தெளிவாகவே அவதானிக்கக்கூடிய விடயம்தான்.

மாற்று என்பது ஒரு பேட்டை ரவுடிக்கு பதிலாக இன்னொரு பேட்டை ரவுடி என்றளவிதான் இருக்கிறதேதவிர வேறொன்றுமில்லை.

எவ்வாறெனினும் ஏகபோகமும், ஏகாதிபத்தியமும் ஒழிக்கப்படுவது மக்களுக்கு நன்மைபயக்கும். சைபர் அரசியலின் வரலாற்றில் இவ்வழக்கு மிக்கியத்துவமுள்ளதாய்ப் படுகிறது. சைபர் அரசியலின் மக்கள்நிலை முனைப்புகளின்பால் நாமெல்லோரும் புரட்சிகரமாக
திரும்பவேண்டிய காலமும் நெருங்கிவருகிறது.


(செய்தி ஆதாரம் BBC செய்தித்தளம்)

Thanx: mauran

Print this item

  வடக்குகிழக்கை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள் அவசியம்!
Posted by: Vaanampaadi - 01-26-2005, 02:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வடக்குகிழக்கை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள் அவசியம்!

(Kesari) (26.1.2005)
சுனாமி பேரலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்குää கிழக்கு பகுதிகளை மீளக்கட்டியெழுப்ப 1321 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. ஒன்றரை வருட காலத்துக்குள் வடக்குää கிழக்கு புனர்நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் அதுவே எமது இலக்காகும். எமது தமிழர் தாயகப் பகுதிகளைக் கட்டியெழுப்ப சர்வதேச சமூகத்தின் உதவியையே நாம் பெரிதும் எதிர்பார்த்துள்ளோம் என்று புலிகளின் திட்டமிடல் செயலகப் பணி பொறுப்பாளர் தூயவன் "கேசரி'க்குத் தெரிவித்தார். நிவாரண மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளில் அரசாங்கம் எம்முடன் இணைந்து செயலாற்ற விரும்பினால்ää அதற்கு நாம் தயாராகவேயுள்ளோம். எனினும்ää அரச தரப்புடன் இணைந்து செயற்படுவதால் பல தடைகள் ஏற்படும். கடந்த கால அனுபவங்கள் இதனை பறை சாற்றுகின்றன எவ்வாறெனினும். மக்களுக்காக வரும் அத்தனை உதவிகளும் பூரணமாக அவர்களைச் சென்றடைய வழிசெய்ய வேண்டுமென்பதில் தலைவர் உறுதியாகவுள்ளார் என்றும் அவர் சொன்னார்.


எமது திட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி என்ற பேதமில்லை. முழு வடக்குää கிழக்குப் பிரதேசங்களையும் கட்டியெழுப்புவதே எமது இலக்காகும். நாம் வடகிழக்கில் செயலணிக் குழுக்களை ஏற்படுத்திய ஆரம்பத்தில் நிலவிய நடைமுறைச் சிக்கல்களை தவிர்ப்பதற்காக சகல தரப்பினருடனும் பேசி எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கிய விசேட பேட்டியிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.

கேள்வி: சுனாமி அனர்த்தத்தின் பின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்திக்கான செயலகத்தின் பலன்கள் எவ்வாறுள்ளன?

பதில்: வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பான கொள்கை வகுப்புக்களையும் அது தொடர்பான மூல உபாயங்களை வரைவது தான் எங்களுடைய முக்கிய பணியாகவுள்ளது. சகல சர்வதேச நிறுவனங்களும் எங்களை ஒரு பங்காளி நிறுவனமாக ஏற்றுக் கொள்கின்றன. உதவி செய்கின்றன.சுனாமி அனர்த்தத்துக்குப் பின்னர் வடகிழக்கை மீளவும் கட்டியெழுப்புவதற்கான சில கொள்கை வகுப்புக்களிலும்ää எவ்வாறு இதனைக் கொண்டு நடத்த வேண்டும் என்பதிலும் நாம் ஒரு தெளிவான பார்வையில் இருக்கின்றோம். குறிப்பாக யுத்தத்துக்கு முன்னர் மறுக்கப்பட்ட அபிவிருத்தி வாய்ப்புகளுக்கூடாக அடைந்திருக்கும் நிலை என்னவாக இருக்குமோ அந்த நிலையை நோக்கி நகர்வதே எமது இலக்காக அமைந்துள்ளது.சுனாமிக்கு முன்பிருந்த நிலையை தனிய ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இங்கு மாற்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்று நாம் கருதவில்லை. ஆகவேää யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் வந்த அபிவிருத்தி வாய்ப்புக்கள் தடையின்றி கிடைத்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்குமோ அந்த நிலைக்கான இலக்கை நோக்கித் தான் நாம் செல்கின்றோம்.இதில் முதல்கட்டமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து நலன்புரி முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கான ஒழுங்கு படுத்தல்களை செய்தோம். இவ்வேளையில் நாம் அனைவரையும் ஒருங்கமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஏனென்றால் இங்கு இரட்டிப்புத்தன்மை வரக் கூடாதுää சரியான முறையில் விநியோகம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே நாம் இப்பணியில் ஈடுபட்டோம்.சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட அன்று இரவே நாம் சகல சர்வதேச தொண்டர் அமைப்புக்களையும் அழைத்து முல்லைத்தீவிலும்ää கிளிநொச்சியிலும் செயலணிக் குழுவினை ஏற்படுத்தி ஒருங்கிணைத்தோம். அரச தரப்புää புலிகளின் தரப்புää சர்வதேச அமைப்புக்களின் பிரதி நிதிகளை உள்ளடக்கி ஒருங்கிணைப்பை திட்டமிடல் செயலகத்தினூடாக செய்தோம்.அடுத்தடுத்த நாட்களில் செயலணிக் குழுக்களை ஏனைய மாவட்டங்களிலும் ஏற்படுத்தினோம். குறிப்பாக 28ஆம் திகதி மட்டக்களப்பிலும்ää 29ஆம் திகதி திருகோணமலையிலும் செயலணிக் குழுக்களை ஏற்படுத்தினோம். அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் மாத இறுதிக்குள் செயலணிக் குழுக்களை ஏற்படுத்தினோம். சுனாமி அனர்த்தப் பணிகளை நாம் 3 கட்டங்களாகப் பிரித்திருந்தோம். குறிப்பாக சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதில் தலைவர் பெரும் அக்கறை கொண்டிருந்தார். நாம் ஏற்கனவே பேரழிவை சந்தித்த மக்கள் சுனாமியின் அனர்த்தத்தால் அடுத்த ஒரு பேரழிவை சந்தித்துள்ளோம். இந்த அனர்த்தத்தினூடாக தொற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. இதனால்ää தலைவர் எமக்கு தெளிவாக வலியுறுத்தலை தெரிவித்திருந்தார். அதாவது மீளவும் நாம் உயிரிழப்புக்களை சந்திக்கக் கூடாது. அதற்கேற்ற வகையில் நாம் அதற்கான செயற்பாட்டை முன்னெடுத்தோம்.தமிழ் உறவுகளின் உடனடி உதவிகள்

கேள்வி: இந்தப் பணிக்கு வெளிநாடுகளின் உதவி கிடைத்ததா?

பதில்: சம்பவத்தை கேள்விப்பட்டதுடன் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் உடனடியாக தங்களது வேலைகளை விட்டு விட்டு இங்கு வந்தனர். வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். இதனைவிட சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் இம்முறை நல்ல ஒத்துழைப்பை வழங்கியிருந்தன. ஆரம்ப கட்டத்தில் அரச தரப்பினால் எங்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கவில்லை. சரியான ஒழுங்குபடுத்தல்கள் இருக்கவில்லை. ஆனால்ää அரச தரப்பின் தற்போதைய உதவி கூட எவ்வளவு தூரத்துக்கு மக்களுக்கு போதுமானது என்பதில் எமக்கு கேள்விக் குறியிருக்கிறது. ஆகவே நாம் சகலரையும் ஒன்றிணைத்து எமது சமூகத்தின் தேவையை சரியான முறையில் ஒழுங்குபடுத்தி செய்வதற்கான செயற்றிட்டத்தையே திட்டமிடல் செயலகத்தினூடாக செய்துள்ளோம்.கேள்வி: மூன்று கட்டமாக திட்டத்தை வகுத்துள்ளதாக கூறினீர்கள் அவை எவை?பதில்: முதலாம் கட்ட நடவடிக்கை மக்களைக் கொண்டு வந்து அவர்களைப் பராமரிப்பதுவும்ää அதே நேரத்தில் கரையோரத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது மற்றும் மக்களின் உடனடியான தேவைகளை பூர்த்தி செய்வதுää புள்ளி விபரங்களைப் பெறுவதாகவே அமைந்திருந்தது. குறிப்பாக புள்ளி விபரங்கள் எடுக்கும் போது அரச தரப்பால் உறுதிப்படுத்தப்பட்ட புள்ளி விபரங்களை நாம் எடுத்தோம். கச்சேரி மட்டங்களில் எடுத்தோம். ஏனென்றால் நாளைக்கு பிழையான ஒரு அபிப்பிராயம் வரக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தோம்.தற்போது 2 ஆம் கட்டப் பணி நடைபெற்று வருகின்றது. மக்கள் தங்கியுள்ள பாடசாலைகளை நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இன்று எமது பிரதானமான சொத்து கல்வியாகும். இளம் சமுதாயத்தின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாடசாலைகளில் உள்ள மக்களை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டியுள்ளது. அத்துடன்ää அந்தப் பிள்ளைகளின் மனங்களிலும் உடனடியாக மாற்றத்தினை செய்ய வேண்டியுள்ளது.உறவினர்களை தாய்ää தந்தையை இழந்த இப் பிள்ளைகளின் மனதில் நாம் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதனால்ää மக்களை தற்காலிகமாக குடியேற்ற செயற்றிட்டங்களை அமைத்துள்ளோம். உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தற்காலிகமாக மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்காலிக குடியிருப்புக்களை அமைக்க படங்குகளை வழங்கும் போது கூட நாம் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் கூடாரங்கள் எமது சு10ழலுக்கு ஏற்ற மாதிரி காணப்படவில்லை. இதனால்ää மக்கள் கிடுகுகளினாலான கொட்டகைகளையும் எதிர்பார்க்கின்றனர். மூன்றாம் கட்டமாக நிலையான அபிவிருத்திக்கான திட்டமிடலையும் நாம் செய்து வருகின்றோம். குறிப்பிட்ட நாட்களுக்குள் வந்த எமது வெளிநாட்டில் உள்ள புத்தி ஜீவிகள்ää உள்ளூர் புத்தி ஜீவிகள்ää பல்கலைக்கழகத்தினர் ஆகியோரை இணைத்து பாதிக்கப்பட்ட பகுதியினை மீளக் கட்டியெழுப்புவதற்கான கணிப்பீட்டை செய்துள்ளோம். மாத இறுதியில் அதனை நாம் மேற்கொள்வோம். அதில் சகல இனங்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த உள்ளோம். அதிலும் முக்கியமாக தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் இணைத்துள்ளோம். அவர்களும் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர்.மூன்றாம் கட்டத்துக்கான அடிப்படை நியமங்கள்

கேள்வி: மூன்றாம் கட்டப் பணியில் மீள்கட்டுமானம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது அடிப்படை நியமங்கள் உள்ளதா? அதற்கான திட்டம் இருக்கின்றதா?

பதில்: மூன்றாம் கட்டப் பணிக்கான ஏற்பாடுகளை செய்யும் போது அதற்கான சில அடிப்படை நியமங்களை நாம் வகுத்துள்ளோம். அதாவது ஒரு வீடென்றால் அதனை அமைக்க ஆகக் குறைந்த நியமம் ஒன்றை கடற்கரையோரத்தில் இருந்து எத்தனை மீற்றர் தூரத்தில் அமைக்க வேண்டும் என்பவை தொடர்பாக நாம் நியமங்களை தீர்மானித்துள்ளோம்.ஸ்ரீலங்கா அரசாங்கம் கடற்கரையில் இருந்து 300 மீற்றர் தூரத்திலேயே வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது. பின்னர் 200ää 100 மீற்றர் என தூரத்தை குறைத்து வருகின்றனர். ஆனால்ää நாங்கள் மிகத் தெளிவான அணுகுமுறையை மக்கள் மத்தியில் கடைப்பிடித்தோம். நாங்கள் மக்களுக்கு இவ்விடயம் குறித்து தெளிவு படுத்தினோம். உயிர் இழப்பை எப்படியிருந்தால் தவிர்த்திருக்கலாம் என்பது குறித்து விளக்கிக் கூறினோம்.வடமராட்சி கிழக்குää முல்லைத்தீவுப் பகுதிகளில் 400 மீற்றருக்கப்பால் வந்திருப்பதற்கு மக்கள் சம்மதித்துள்ளனர். அதேவேளை கரையோரப் பகுதியில் உள்ள அவர்களது காணிகளை எந்த சந்தர்ப்பத்திலும் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த மாட்டோம். அக்காணிக்குள் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கை அதாவது சுற்றுச் சு10ழல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம். தென்னைää பனைää சவுக்கு போன்றவற்றை அவர்களிடம் வழங்கி அவர்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தையும் அவர்கள் பெற முடியும். அத்துடன்ää காற்றுச் சு10ழலையும் பாதுகாக்க முடியும் என்பது எமது திட்டமாகும். மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் 100 மீற்றர் கூட பின் செல்வது கடினமாகும். அப்படியான இடங்களில் மாற்று திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இந்தியாவில் தமிழ் நாட்டில் 7 கிராமங்கள் சுனாமியில் இருந்து தப்பித்துள்ளது. ஏனென்றால் தூண்டில் விளைவு என்கின்ற அமைப்பை கடலில் நிறுவியிருந்தமையால் அக்கிராமங்கள் காப்பாற்றப்பட்டன.எமது பகுதியிலும் மரங்கள் கூடுதலாக நின்ற பகுதிகளில் தாக்கம் குறைவாகவே உள்ளது. இப்படியான தடுப்பு சுவர்கள்ää தூண்டில் வளைகளை ஏற்படுத்துவது குறித்தும் நாம் கரிசனை காட்டி வருகின்றோம்.கட்டிடங்களை இப்பகுதியில் அமைப்பதிலும் புதிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

சு10ழல் பாதுகாப்பு

கேள்வி: சு10ழல் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கமுள்ளதா?

பதில்: சு10ழல் பாதுகாப்பு தொடர்பில் தலைவர் தீர்க்கமான கொள்கையைக் கொண்டுள்ளார். யுத்த நடவடிக்கை காலத்தில் கூட காடுகள் அழிக்கக் கூடாது என தலைவர் கூறியிருந்தார். இம்முறை வீடமைப்பு திட்டத்தில் அஸ்பெஸ்டர் சீற் பயன்பாட்டை நாம் முற்றாக தவிர்க்கவுள்ளோம். அதற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த சகல சர்வதேச நாடுகளிலும் அஸ்பெஸ்டர் சீற் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் தான் மிக மோசமாக பயன்படுத்தப்படுகின்றது.இங்கு பொலித்தீனை தடை செய்திருந்தோம். தற்போது அதற்குப் பதிலாக மாற்றீடான பொருளை நாம் கண்டு பிடித்துள்ளோம். நாம் மண்ணுக்குள் தாட்டால் அழிந்து போகும் பொலித்தீனைக் கண்டு பிடித்துள்ளோம்.

கேள்வி: சுனாமியினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதிகளை மீளக் கட்டியெழுப்பும் 3ஆம் கட்ட திட்டத்திற்கு காலவரை எதுவும் வைத்துள்ளீர்களா?

பதில்: ஆம். குறிப்பிட்ட காலத்தை வைத்து விரைவாக முடிக்க வேண்டும் என எண்ணுகின்றோம். எங்கள் இலக்கு அடுத்த ஒன்றரை வருடத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதேயாகும். எங்கள் பகுதியைக் கட்டியெழுப்ப சர்வதேசத்தின் உதவியைத் தான் நாம் பெரிதாக எதிர்பார்க்கின்றோம்.வடகிழக்கை மீளக் கட்டியெழுப்ப 1.321 மில். அமெ. டொலர் தேவை.

கேள்வி: சுனாமியால் பாதிக்கப்பட்ட வடகிழக்கை கட்டியெழுப்ப எவ்வளவு நிதி தேவை என மதிப்பிட்டுள்ளீர்களா?

பதில்: 1321 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை என மதிப்பிட்டுள்ளோம்.கேள்வி: உங்கள் திட்டத்துக்கு சர்வதேச உதவி தான் தேவை என்கின்றீர்கள். அரசாங்கம் உங்கள் திட்டத்துக்கு உதவாதா?

பதில்: அரசின் உதவி என்கின்ற போது வரையறையை ஏற்படுத்தி செய்வதற்கான ஆயத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களைப் பொறுத்த வரை அரச தரப்பு முன் வந்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயாராக உள்ளோம். செயலணிக் குழுவை ஏற்படுத்தியதை வெளிப்படை உணர்வுடன் பணியாற்றுவதற்காகவேயாகும். அரச கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதனால் பல தடைகள் ஏற்படும். கடந்த காலத்தில் இத்தகைய அனுபவம் எமக்குள்ளது. மக்களுக்கு வருகின்ற அவ்வளவு உதவிகளும் அப்படியே சென்றடைய வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவுள்ளார்.

கேள்வி: உங்களது திட்டம் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியிலும் நடைமுறைப்படுத்தப்படுமா?

பதில்: எமது திட்டம் ஒட்டுமொத்தமான வடகிழக்குக்கானதாகும். நாம் வடக்கில் செயலணிக் குழுக்களை ஏற்படுத்திய போது ஆரம்பத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தோம். அரசாங்கத்தால் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டு இராணுவத்திடம் அப்பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. இதனால்ää நடைமுறைச் சிக்கலை சந்தித்தோம். ஆனாலும்ää மீண்டும் அனைவருடனும் பேசி எமது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றோம்.

Print this item

  தொழிலாளியை சிங்கத்துக்கு இரையாக்கிய முதலாளி
Posted by: Vaanampaadi - 01-26-2005, 01:54 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

தொழிலாளியை சிங்கத்துக்கு இரையாக்கிய முதலாளி

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த விவசாய பண்ணை உரிமையாளர் மார்க் ஸ்காட். வெள்ளை இனத்தை சேர்ந்தவர். இவருக்கும் இவரது பண்ணையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி நெல்சன் சிசெல். சம்பளம் தொடர்பாகவும் வேறு சில காரணங்களாலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மார்க் ஸ்கட் அந்த தொழிலாளியை கட்டி வைத்து அடித்து உதைத்தார். துப்பாக்கியாலும் அடித்தார். அவரும் வேறு 2 தொழிலாளிகளும் சேர்ந்து நெல்சன் சிசேலை கயிற்றால் கட்டி அங்குள்ள ஒரு உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்ட பகுதியில் தூக்கி வீசினார்கள்.

5 சிங்கங்கள் நெல்சனை கடித்து குதறி தின்றுவிட்டன. இதையொட்டி மார்ஸ்காட் மற்றும் 2 தொழிலாளர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நடக்கும் கோர்ட்டுக்கு வெளியே ஏராளமானவர்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Print this item