Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 58 online users.
» 0 Member(s) | 55 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,331
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  கடலம்மா சொல்லம்மா...
Posted by: kuruvikal - 01-26-2005, 12:28 PM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

<img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'>

<b>கடலம்மா கடலம்மா
கருணை கொண்ட தாயம்மா
அலை மடி மீது தாலாட்டி
அமுதூட்டிச் சீராட்டி
வளர்த்திட்ட சேயும் நானம்மா...!

முடிவில்லாப் பயணங்கள்
உன் மடிமீது நாம் செய்தோம்
அளவில்லாப் பொறுமை தந்து
அருள்பவளும் நீயம்மா...!
ஆதிக்க வெறியர்கள்
அடுக்கடுக்காய் குண்டுதள்ள
உன் வயிற்றில் அவை தாங்கிக்
காத்தவளும் நீயம்மா..!

அமைதியின் கோலமாய்
சீரான அலை கொண்டு
கரையோடு மோதுபவளே
அழிவில்லா அழகு தந்து
அகம் மகிழ அழைப்பவளே
அழிவுக்கு வகை செய்ய
ஆர்ப்பரித்ததுவும் ஏனம்மா...!

இன்று....
கணமும் எங்கள்
தொண்டைக்குழிக்குள் சிக்குமந்த
ஏக்கத்தின் முதலாய் நீயம்மா...!
உறவுகளின் உயிர் குடித்த
பூதத்தின் விளை நிலமாய்
ஆகினையே ஏனம்மா...?!

மடி தாங்கிய மகவுகளின்
மகத்தான் உயிர் குடித்து
சாதிக்க நினைத்ததுவும் எதுவம்மா..??!
வஞ்சகமென்று நாமறிந்து
உனக்காய் எதுவும் செய்தறியோம்
எம் நெஞ்சங்கள் சிதைத்துமே
வெறியர் போல் நீயும்
மகிழ்ந்தனையே ஏனம்மா...!

அன்புக்குரியவளாய் நீயிருந்து
அடைகாத்த குஞ்சுகளை
பத்து நிமிட நேரத்துள்
பரிதவிக்கப் பறித்தெடுத்து
பாதையெங்கும் தூவினையே
எதற்காய் அந்தப் பாதகம்
நீ செய்தாய் சொல்லம்மா...!

காலத்திலும் உன் கருணை
நாம் மறந்து நின்றதில்லை
கொள் கருணை நீயிழந்து
காவு கொண்டனையே
எந்தனையே உன்னோடு
ஏன் என்று சொல்லம்மா...!

நினைவுத் தீபங்கள் ஏற்றியெம்
சோகங்கள் சொல்கிறோம்
நீயுமங்கு மெளனமாவதும் ஏனம்மா...!
கரையோடு மோதியுன்
சினம் தனிக்க வேண்டுகின்றோம்
உயிர் பறிக்கும் பாதகம்
மறந்திடவும் இறைஞ்சுகின்றோம்...!

மெளனமாய் நீ கொண்ட
வெறி தானும் அடங்கியதுவோ... ???!
மீண்டும் அந்தத் துயரங்கள்
வாங்கும் சக்தி எமக்கில்லை
நினைவுகளே வாழ்வுகளாய்
நிஜமிழந்து தவிக்கின்றோம்
மீண்டும் எம் நிம்மதிக்கு
என்ன செய்வாய்...??!
உன் மடியே துணையென்று நாடுகின்றோம்...!</b>

கடற்கோள் பறித்தெடுத்த உறவுகளின் நினைவாக...தருவது - http://kuruvikal.yarl.net/

Print this item

  புதினம் இணையத்தளம்
Posted by: Vaanampaadi - 01-26-2005, 09:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

புதினம் இணையத்தளம் மீண்டும் தமது சேவையை நாளை ஆரம்பிக்கும்.
26.1.2005
புதினம் இணையத்தளத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை திடீரென எதிர்பாராத அளவு அதிகரித்ததனால் ஏற்பட்ட தொழில்நுட்ப இடையூறு காரணமாக கடந்த சில நாட்களாக தமது சேவையை வழங்க முடியாது இருந்த புதினம் இணையத்தளம்ää மீண்டும் தமது சேவையை நாளை (27.01.05) ஆரம்பிக்க இருக்கிறது என புதினம் இணையத்தளத்தினர் அறிவித்துள்ளனர்.

தகவல்: தமிழ் ஓசை

Print this item

  பட்ட மரமும் பட்சியும் [ கவிதன் ]
Posted by: kavithan - 01-26-2005, 07:15 AM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

<img src='http://www.yarl.com/forum/files/paddamaramum_padsiyum.png' border='0' alt='user posted image'>


<span style='font-size:21pt;line-height:100%'>பறந்து சென்ற பட்சியே..!
பாதி வழியில்
உன் களைப்பாற - நீ
என் கிளையில் அமர்ந்து
ஓய்வெடுப்பதில் மகிழ்ச்சி.
உன்னை கதிரவனின்
கதிர்களில் இருந்து
காப்பாற முடிய வில்லை
என என் மனம் வருந்துகிறது.
பட்ட மரம் நான்.
ஒருவருக்கும் பயன் படாத
பிணமாகி விட்டேனே.

மரமே
நீ பட்ட மரம்..!
ஆனால்,
பயன் உள்ள மரம்.

உன் சாவுக்கு காரணம் நீ அல்ல.
அந்த பாவி மனிதர்கள்
ஆம்.. அவர்கள் செய்யும் அட்டகாசங்கள்.
ஆளுக்கு ஆள்,
நாளுக்கு நாள்,
உங்கள் இனங்களை
வெட்டி சாய்க்கிறார்கள்.

கொட்டில் போட்டார்கள்
கட்டில் செய்தார்கள்
தொட்டில் செய்தார்கள்,
இன்று..! கடதாசி செய்கிறார்கள்,
உங்களை கொன்று.

காய்ந்து போன உங்கள்
தாகம் தீர்க்க யாரும் இல்லை
காடு காடாய் வெட்டு வதற்கு
கருவிகளுடன் கள்ளர் கூட்டம்.

நீங்கள் தெய்வ பிறப்பு,
உங்களுக்கு என்று
எந்த ஆசைகளையும் வைத்து கொள்வதில்லை.
நீரையும் நிலத்தையும்
வளியையும் ஒளியையும்
ஆகாரமாயும் ஆதாரமாயும் கொண்டு
வானுயர வளர்கிறீர்கள்
வளங்களை அள்ளி கொடுக்கிறீர்கள்.
பழங்களை உலுப்பி கொட்டுகிறீர்கள்
பூக்களை சொரிகிறீர்கள்.
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
புகலிடம் கொடுக்கிறீர்கள்
போதாக்குறைக்கு
மனிதர்களுக்கு நிழலும் கொடுக்கிறீர்கள்
ஆனால்
நன்றி கெட்ட மனிதர்கள்
உங்களை கொன்று
தாங்கள் நலமோடு
வாழத்துடிக்கிறார்கள்.

நீங்கள் பட்டமரமாக இருந்தால் என்ன
பச்சைமரமாக இருந்தால் என்ன
அந்த மனிதர்களுக்கு தேவை
உங்கள் உடல்கள்.

நீங்கள் எங்களுக்கு செய்யும்
உதவிகளை நாம் என்றும் மறவோம்.
என்னை இளைப்பாற நீ
அளித்த இடமே எனக்கு போதுமானது.
கதிரவன் இவர்களிலும் கண்ணியமானவன்.
இவர்களிடம் நீ கவனமாக இருந்து கொள்
பட்ட மரம் என தூரவிலகி போகார்கள்
கிடைத்த வரைக்கும் இலாபம் என
விறகாகவோ, பலகையாகவோ
ஆக்கிட துடிப்பார்கள்.
பாசம் இருப்பது போல் நடிப்பார்கள்
அடுத்த நாள் பகல் வரும் முன்னே அறுப்பார்கள்,
அரசாங்கத்துக்கு தெரியாமல்.

மனிதர்கள்,
கணவன் இறந்தால் மனைவிக்கு
\"பட்டமரம்\"
என பட்டம் சூட்டி விடுவார்கள்.
என்ன அதிசயம் ..! என்ன கொடுமை ..!
பாருங்கள்..
நீங்கள் இறந்ததால் பட்ட மரம் என்கிறார்கள்
ஆனால்,
அவள் இறக்காமலே பட்ட மரம் ஆகிறாள்.

இவ்வளவு நேரமும் இளைப்பாற இடமும்,
பேசச்சு துணையும் தந்த உனக்கு நன்றிகள்.
நான் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது
விடைபெறுகின்றேன், மீண்டும் இவ்வழியால் வந்தால்
உன்னோடு உரையாடுகிறேன்... நீ .. நீயாக இருந்தால்.


நன்றி .. பட்சியே..!
எங்களை பற்றி
நீ ஆற்றிய பேச்சு
என்மனதை கவர்ந்து விட்டது.

நான் பூமியில்
நிலையாக நிற்கும் வரை
உன் பேச்சை கேட்பதற்காய்
உன் நட்பை தொடர்பதற்காய்
உன் நினைவோடு,
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.


நன்றி மரமே..!
நீங்கள் இறந்தும் வாழ்கிறீர்கள்
மனிதர்கள் பிறந்தே வாழவில்லை. </span>


http://kavithan.yarl.net/
கவிதன்
25/01/2005
9.41 இரவு.

Print this item

  300 பேர் மரணம்
Posted by: Mathuran - 01-26-2005, 03:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

கடவுளை??? தரிசிப்பதற்காய் முண்டி அடித்த மாந்தர்கள் நடுவில் சிக்குண்டு, முன்னூறு அப்பாவி பொதுமக்கள் இந்தியாவின் மராட்டிய மாகாணத்தில் மரணம், நானூறு பொதுமக்கள் படுகாயம்.

Print this item

  COMPUTER TRO
Posted by: DV THAMILAN - 01-26-2005, 02:07 AM - Forum: கணினி - Replies (3)

எனக்கு ஓரு பெரிய உதவி வேண்டும்........ எனது கனனி PCI DEVICE LISTING..... என்று சொல்லி விட்டு ...அதே இடத்திலேயே நிற்கிறது............. நான் எப்படி இந்த பிழையை திருத்துவது........

உங்களுடைய பதிலை மிக விரைவில் எதிர்பார்க்கிறேன்........

உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றிகள்................

Print this item

  §ÀÐÕ¾¡Ä ¸¡Ä Á¨Ä¢ø...
Posted by: Danklas - 01-25-2005, 10:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

þÄí¨¸Â¢ø §ÀÐÕ¾¡Ä¸¡Ä Á¨Ä¢ý ¯îº¢Â¢ø «¦ÁÃ¢ì¸ À¨¼Â¢É÷ ´Õ È¡¼÷ ¸ñ¸É¢ôÒ ¿¢¨ÄÂò¨¾ «¨Áì¸ ¯ûÇÉáõ..

ÅÕí¸Äò¾¢ø ÍÉ¡Á¢ ÅÕŨ¾ ¸ñÎÀ¢Êì¸Å¡?? «ó¾ È¡¼÷ ¸ñ¸É¢ôÒ ¿¢¨ÄÂõ.. :wink: :wink:

þôÀʧ ŢðΦ¸¡ñΧÀ¡È¡û ºó¾¢Ã¢ì¸¡.. ¿¡ý¦º¡øÄ¢Ôõ §¸ì¸¢È¡û þø¨Ä ¸¨¼º¢Â¡ ¸Š¼À¼ô§À¡È¡û ¸ñʧǡ.. ¸¼º¢Â¢Ä ÒÄ¢¸Ä¢ñ¼ ¸¡Ä¢Ä ¾¡ý ŢƧÀ¡È¡û.. Cry

Print this item

  ⺢¢ý ÒÄÉ¡ö× «Ãº¢Âø..
Posted by: selvanNL - 01-25-2005, 09:42 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<b>⺢¢ý ÒÄÉ¡ö× «Ãº¢ÂÄ¢ø "þóкÓò¾¢ÃòÐìÌû ENTER THE DRAGEN".. ÍÉ¡Á¢Â¢ý À¢ý ¯Ä¸¿¡Î¸û ¯¾Å¢ ±ýÈ Å¨¸Â¢ø «Å÷¸Ç¢ý "þÄí¨¸Â¢ø" «Ãº¢Âø ¸¡ö¿¸÷ò¾ø¸¨Ç ÀüÈ¢. þ¨¾ «È¢Â¡¾Å÷¸û ¸ð¼¡Âõ «È¢óЦ¸¡ûÇ ¸¢§Æ ¾ÃôÀðÊÕìÌõ þ¨½Âò¾¢ý Ó¸Åâ §Áø ¦º¡Îì¸×õ..</b>

<b>þ¾¢ø À¡¸õ 1,2 ¯ûÇÉ Á¢Ì¾¢ ¦ÅÌÅ¢¨ÃÅ¢ø..</b>
http://www.tamilnatham.com/Rishie.htm

<b>þÄí¨¸¨Â ¾í¸ÇÐ ¸ðÎôÀ¡ðÊø ¨Åò¾¢Õì¸ §À¡ðÊ §À¡Îõ «¦ÁÃ¢ì¸ þó¾¢Â¡..</b>




தலைப்பு சுருக்கப்பட்டுள்ளது - இராவணன்

Print this item

  பெருமாளுக்கு பிடியாணை? காமாட்சி மயக்கம்!
Posted by: Vaanampaadi - 01-25-2005, 07:37 PM - Forum: நகைச்சுவை - No Replies

பெருமாளுக்கு பிடியாணை? காமாட்சி மயக்கம்!
23.1.2005

நக்கீரன்

இடம் - காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் கருவறை

காலம் - உச்சிப் பொழுது

பாத்திரங்கள் - காஞ்சி வரதராசர் காஞ்சி காமாட்சி.

(திரை விலகுகிறது)

(புகழ்பெற்ற காஞ்சி வரதராசப் பெருமாள் நாடியில் கைவைத்துக் கொண்டு ஒரே சோகமாக இருக்கிறார்.
அப்போது பக்கத்துக் கோயிலில் குடியிருக்கும் காஞ்சி காமாட்சி அம்மன் ஓசைப்படாமல் அடிமேல் அடியெடுத்து திருக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுளைகிறார்.
வரதராசப் பெருமாள் இருந்த கோலத்தைப் பார்த்து சற்றே திடுக்கிட்டு....)

காமாட்சி -'தேவரீர்! இது என்ன கோலம்? எப்போதும் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் இன்று இப்படி நாடிக்கு கைகொடுத்துக் கொண்டு கப்பல் தாண்டவன் மாதிரி ஒரே சோகமாக இருக்கிறீர்களே? அப்படி என்னதான் தலைபோகிற விடயம் நடந்து விட்டது?

பெருமாள் - ஏன் கேட்கமாட்டாய்? நான் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு இருப்பது உனக்குத் தெரியதா?

காமாட்சி - எனக்கு எப்படித் தெரியும்? சொன்னால்தானே தெரியும்!

பெருமாள் - அப்ப நீ அன்றாடம் செய்தித்தாள்களை படிப்பதில்லையா?

காமாட்சி - ஐயோ! நான் இப்போதெல்லாம் செய்தித்தாள்களை கையால் கூடத் தொடுவதில்லை. செய்தித்தாளை விரித்தால் அங்கே கொலை இங்கே கொலை என்று ஒரே கொலைச் செய்திகள்! எனக்கு பயமாக இருக்கிறது!

பெருமாள் - என்னுடைய சன்னிதி வளாகத்தில் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலில் அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை அப்புவின் கூலிப்படையால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டதைத்தானே சொல்கிறாய்?

காமாட்சி - ஆமாம். அதற்குப் பின்னர் அரசியல்வாதி ஆலடி அருணாவை ஒரு கூலிப்படை வீதியில் வைத்து வீச்சரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. அப்புறம் ஆளும்கட்சி எம்எல்ஏ சுதர்சனம் என்பவரை வடநாட்டு கொள்ளையர் வீடு புகுந்து சுட்டுக் கொன்று போட்டான்கள். அதுசரி மேலாளர் சங்கரராமனை அப்புவின் கூலிப்படை வெட்டிக் கொன்றாலும் காஞ்சி காமகோடிபீட ஜெயேந்திரர் சரஸ்வதி சங்கராச்சாரியார் சொல்லித்தான் கொன்றதாக அரச சாட்சியாக மாறிய ஒப்பந்தகாரர் இரவி சுப்பிரமணியம் சொல்கிறானே? ஜெயேந்திரர் சொல்லி விஜேய்ந்திரர் தம்பி இரகு 50 இலட்சம் கொடுக்கப்பட்டதாக அதே இரவி சுப்பிரமணியம் வாக்கு மூலம் கொடுத்துள்ளானே?

பெருமாள் - மெல்லப் பேசு. இப்போதுதான் செய்தித்தாள் எதுவும் படிப்பதில்லை என்றாய் ......................இந்த சங்கராச்சாரியார்களால் எங்களது மானம் மட்டுமல்ல மொத்தமாக இந்து மதத்தின் மானமும் காற்றில் போய்விட்டது. இந்தப் பெரியார் அண்ணாத்துரை போன்றவர்களால் ஏற்கனவே இந்தக் காவிச் சட்டைக்கு மதிப்பில்லாமல் இருந்தது. இப்போது மிச்சசொச்சமாக இருந்த மதிப்பும் போய்விட்டது!

காமாட்சி - இதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா? நீங்களே ஒவ்வொரு அவதாரம் எடுத்த போதெல்லாம் நரகாசுரன்ää இரணியன்ää இராவணன்ää மாபலி என்று கொன்று இருக்கிறீர்களே? உங்கள் பக்தர்கள் உங்கள் முன்மாதிரியை அடியொட்டி நடக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!

பெருமாள் - நீ நினைக்கிறது போதும். நான் அரக்கார்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றினேன்! இது நிலத்தேவர்களே இன்னொரு நிலத் தேவரை அடியாட்களை வைத்து செய்த கொலையாச்சே? சரி சரி எதற்கு வீண் தர்க்கம். இனி நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவோம். நேற்று காலை சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் என் சன்னிதிக்கு வந்தான். பூசை செய்ய தேங்காய்ää வெற்றிலைபாக்குää பழங்கள்ää மாலை ஆகியவற்றோடு பயபக்தியோடு வருகிறான் என்று பார்த்தால் பூசைத் தட்டின் நடுவே குற்றப் பத்திரிகைக் கட்டு!

'பெருமாளே உன் சன்னதியில் கொலை நடந்துள்ளது. அதனால் தான் குற்றப்பத்திரிகையை உன் காலடியில் வைக்கிறேன். சத்தியத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடக்கும் போட்டி இது. உண்மையில் தப்பு நடந்திருந்தால் அவர்களை தண்டித்துவிடு. தவறு செய்யாவிட்டால் விடுதலை செய்துவிடு. உன் சன்னதியில் நடந்த கொலைக்கு நீதான் கண்கண்ட சாட்சி. இதற்கு நீயே தீர்ப்பு எழுதிவிடு' என்று மனமுருக வேண்டினான். பின்னர் தாயார் சன்னதியிலும் இதே டயலக் பேசி வேண்டுதல் செய்து கொண்டான்.

காமாட்சி - எனக்கும்தான் வழக்கில் இருந்து தப்ப நாள் முழுதும் தியானம்ää பூசை. அபிசேகம்ää யாகம் செய்கிறார்கள். அதற்கெல்லாம் நான் ஏமாந்து விடுவேனா என்ன? தினை விதைத்தவன் தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான். அதுதான் தெய்வ நீதி!

பெருமாள் - நானும் உன் கட்சிதான். ஆனால் இன்று காலை வெளிவந்த செய்தித்தாளில் இந்தக் கருணாநிதிää முன்னாள் முதல்வர்ää கிண்டலும் கேலியுமாக ஒரு அறிக்கை விட்டு என் மானத்தை வாங்கி இருக்கிறான்! அந்த அறிக்கையில் எக்கச்சக்கமான கேள்விகள்! சங்கரராமன் கொலைக்கு நான்தான் ஐ விட்னஸ் என்கிறான். 'இந்த வழக்கில் துப்பு துலக்கி சமர்ப்பித்த ஆவணங்களைக்கூட நம்பாமல்ää சாட்சிகளின் வாக்குமூலத்தை நம்பாமல் ஆண்டவன் காலடியில் குற்றப்பத்திரிகையை வைத்து நீ தண்டித்துவிடு என்று ஒரு எஸ்.பி வேண்டுகிறார். நேரில் பார்த்த சாட்சி என்றால் வரதராஜ பெருமாளுக்கு சம்மன் வருமா? ' என்று ஒரே கிண்டல்!

காமாட்சி - அப்படியா?

பெருமாள் - என்ன அப்படியா? என்று கேட்கிறாய். இந்தா இந்தச் செய்தித்தாளைப் படித்துப்பார்த்துவிட்டு அப்புறம் பேசு!

(பெருமாள் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை பிரசுரமான தினகரன் செய்தித்தாளை எடுத்துக் கொடுக்கிறார். காமாட்சி கவனமாகப் படிக்கிறார்)



நேரில் பார்த்த சாட்சி என்றால் வரதராஜ பெருமாளுக்கு சம்மன் வருமா?

கருணாநிதி கேள்வி



காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சி என்றால் வரதராஜ பெருமாளுக்கு சம்மன் வருமா? என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கருமமே கண்ணாக இருந்து காஞ்சி சங்கரராமன் கொலை தொடர்பாக இரண்டு சங்கராச்சாரியார்கள் உள்பட 25 பேர் மீது குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு தொடரக் கைது செய்துää அதிர்ச்சி தரக்கூடிய பல செய்திகளை அம்பலத்திற்குக் கொண்டு வந்த காஞ்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார்ää இந்த பிரபலமான வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை நல்லநாள் பார்த்துää நல்ல நேரத்தில் தாக்கல் செய்யவேண்டுமென்பதில் மிகக்குறியாக இருந்துää பக்ரீத் விடுமுறை நாளாக இருந்தாலுங்கூடää அன்றைக்கு ஒரு சிறப்பு நேர்வாக நீதிமன்றத்தில் நீதிபதியிடம் வழங்கியுள்ளார். என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும்ää நாளிதழ்களிலும் விரிவாக முக்கியத்துவம் அளிக்கப்பெற்று வெளிவந்துள்ளது..

மத உணர்வுää அரசியல் மாயம் இவற்றைப் பின்னணியாக கொண்டுää மதச்சார்புடைய சில கட்சிகள் இந்த வழக்கு பற்றிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாலுங்கூட அந்த உணர்வுகளுக்கு அணுவளவும் இந்த அரசும் அன்னியமானதல்ல என்பதை நிலைநாட்டும் வண்ணம்ää குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிகழ்ச்சியும் அதனைத் தாக்கல் செய்த காவல்துறை கண்காணிப்பாளர் அதிகாரி பிரேம்குமார் செவ்வியும் அமைந்துள்ளது என்றே ஐதீகத்திலும்ää வைதீகத்திலும் அழுத்தமான நம்பிக்கை வைத்தோர் ஆறுதல் பெறுவார்கள்.

நல்ல நாள்ää நல்லநேரம் பார்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸ் அதிகாரிää நீதிமன்றம் செல்வதற்கு முன்புää வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்றுää அந்த குற்றப்பத்திரிகைக் கட்டினைப் பெருமாள் சன்னதியில் வைத்து ப10ஜை செய்துவிட்டுத்தான் எடுத்துப் போயிருக்கிறார் என்பது சங்கரமடத்தில் உள்ளவர்களின் பக்தி அனுசாரத்திற்கு அவர் ஒன்றும் சளைத்தவரல்ல என்பதை சவால்விட்டு சொல்வதாக அமைந்துள்ளது என்றே பக்த சிரோன்மணிகளால் பாராட்டப்படும்.

அது மட்டுமல்லää குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டதையொட்டி அந்த அதிகாh பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டிதான் மிக மிக முக்கியமானது.

நடிகைகள்ää கதாசிரியைகள் உள்ளிட்ட 40 பெண்களையும் சேர்த்து அரசு தரப்பு சாட்சிகள் 370பேர் என்று பட்டியலிடப்பட்டு அந்தச் சாட்சிகள்ää எந்தெந்த விஷயம் பற்றி சாட்சியமளிப்பார்கள் என்பதையும் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் விவரமாக நிருபர்களிடம் சொல்லியிருக்கிறார். அது ஏடுகளில் விரிவாக வெளியிடப்பட்டிருக்கிறது.

வழக்கு சம்பந்தமான ஒவ்வொரு குற்றப்பிரிவு பற்றியும் மூன்றாண்டு சிறைமுதல் தூக்கு வரையில் தண்டனை கிடைக்கும் என்பதையும் செவ்வியில் தெரிவித்துள்ள அதிகாரி பிரேம்குமார்ää இந்த வழக்கில் வரதராஜபெருமாள்தான் முக்கியமான சாட்சி என்றும் நேரில் பார்த்த சாட்சி என்றும் இந்த வழக்கே வரதராஜபெருமாளுக்கும் சங்கர மடத்துக்குமிடையே நடப்பதுதான் என்றும் தெளிவுபடக் கூறியுள்ளார்.

இந்தப் பேட்டி சங்கரமடத்தையும் மீறிய பக்திரசம் சொட்டுவதாக இருந்தாலும் ஒரு சாதாரண பாமரனுக்கு ஏற்படுகிற சந்தேகத்திற்கு என்ன பதில் கிடைக்குமென்று தெரியவில்லை.

பட்டியலிடப்பட்டுள்ள 370 சாட்சிகள் சம்மன் அனுப்பப்பெற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்களேயானால்ää போலீஸ் அதிகாh பிரேம்குமாரால் முக்கியமான சாட்சி என்றும்ää நேரில் பார்த்த ' ஐவிட்னஸ்' என்றும் கூறப்பட்டுள்ள வரதராஜப்பெருமாளின் சாட்சியத்தை அலட்சியப்படுத்த முடியுமா?

சங்கரராமன் கொல்லப்பட்ட காட்சியை நேரில் பார்த்ததாக வரதராஜப்பெருமாள் சொல்லும்போதுää அப்படியொரு கொலை உமக்கு நேராக நடைபெறும் போதுää அதைத் தடுக்க வேண்டுமென்ற எண்ணம் உமக்கு ஏற்படவில்லையா? அப்படி ஏற்பட்டதா? சங்கரராமனும் உமது பக்தர்தானே? அவர் சாவைத்தடுத்து நிறுத்தியிருக்கக்கூடாதா? தடுத்தீரா? தடுக்கவில்லையென்றால அதற்குரிய காரணம் என்ன? என்ற குறுக்கு கேள்விக்களுக்கெல்லாம் வரதராஜப்பெருமாள் முக்கிய சாட்சியாக நின்று பதில் சொல்ல வேண்டியிருக்குமே!

இதையெல்லாம் யோசிக்காமலா பெருமாள் முன்னே குற்றப்பத்திரிகையை வைத்துää அர்ச்சனைää ப10ஜைகள் செய்துää அவரையும் முக்கிய சாட்சியென்று அதுவும் கண்ணால்கண்ட என்று சொல்லியிருப்பார்கள?

எனவே இந்த வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க வரதராசருக்கு வருமா சம்மன் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஏதுமில்லை.

(செய்தியைப் படித்து முடித்ததும் காமாட்சி மூர்ச்சை ஆகி விழப் போகிறார். விழப்போன அவரை பாய்ந்து சென்று பெருமாள் கைத்தாங்கலாக பிடித்துக் கொள்கிறார்) (திரை விழுகிறது)

Print this item

  வெளிநாட்டுப் பெண்ணொருவர் இராணுவத்தால் கடத்தல்.
Posted by: Vaanampaadi - 01-25-2005, 02:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

திருமலையில் வெளிநாட்டுப் பெண்ணொருவர் இராணுவத்தால் கடத்தல்.
செவ்வாய்கிழமை 25 சனவரி 2005 (லீமா)
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக மருத்துவ உபகரணங்களுடனும்ää மருந்துகளுடனும் வருகை தந்து திருமலையில் சேவையாற்றிய செக்கோ சிலாவாக்கியப் பெண்ணொருவர் இலங்கை இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்றைய தினம் தனியார் மருத்துவமனையொன்றின் முன்பாக இந்தப் பெண்மனி நின்றபோது 9395 என்ற இலக்கம் கொண்ட இராணுவ ட்றக் வண்டியில் இந்ததப் பெண் பலாத்காரமாக ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தினர் வாகனத்தில் ஏற்றிய போதுää இதனைக் கண்ணுற்ற பொதுமக்கள் இராணுவத்தினரிடம் நியாயம் கேட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொடுக்கவா இவர்கள் திருமலைக்கு வந்திருக்கின்றார்கள் என இலங்கை அரச ஆக்கிரமிப்புப் படையினர் கேட்டுள்ளனர்.

இராணுவ ட்றக் வண்டியில் இரண்டு அமெரிக்கப் படையினரும் இருந்ததாகவும் அறியமுடிகிறது. இராணுவத்தினரால் ஏற்றிச் செல்லப்பட்டவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லையென்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Source : http://www.nitharsanam.com/?art=8278

Print this item

  போரளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை கேணல் பானு மறுத்துள்ளார்
Posted by: Vaanampaadi - 01-25-2005, 02:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

செய்திகள்
செவ்வாய்க்கிழமை 25.01.05 - 7:05 மணி தமிழீழம்
விடுதலைப் புலிப் போரளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை கேணல் பானு அவர்கள் மறுத்துள்ளார்.

மட்டக்களப்பின் பனிச்சங்கேணி எனும் இடத்தில் நான்கு விடுதலைப் புலிப் போராளிகளை கருனா குழுவினர் சுட்டுக் கொன்றதாக கனடாவில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ் வானொலி ஒன்று செய்தி வெளியிட்டதை விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார்.இப்படியான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் பானு அவர்கள் குறிப்பிட்டார்.மட்டக்களப்பு பனிச்சங்கேணி பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை நோக்கி கருனா குழுவினை சேர்ந்தவர் ஆர்.பி.ஜி தாக்குதல் மேற்கொண்டதாகவும் விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கியதில் கருனா குழுவைச் சார்ந்தவர் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் அதற்குப் பின்னர் அங்கு எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Source : Pathivu

Print this item