| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 246 online users. » 0 Member(s) | 243 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| தென்றலின் குறும்பு |
|
Posted by: தமிழரசன் - 01-25-2005, 07:39 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
தென்றலின் குறும்பு
உயிரை மெதுவாய்
உரசிப் பார்க்கும்
மலரின் மணத்தைத்
திருடப் பார்க்கும்
இலையின் பேச்சை
ஒட்டுக் கேட்கும்
இறகை சிறகை
கோதிவிடும்
திரையை மெள்ள
விலக்கிப் பார்க்கும்
கவிதைத் தாளைத்
தள்ளி விடும்
காதலர் நடுவில்
நுழையப் பார்க்கும்
காதலின் வாசம்
முகரப் பார்க்கும்
களைத்த அனைத்தையும்
தாலாட்டும்
தொட்டிலின் மணியை
ஆட்டிப் பார்க்கும்
குழந்தையின் போர்வையை
விலக்கப் பார்க்கும்
பண்ணிய பணியில்
களைத்துப் போய்
தூங்கும் இமைமேல்
தூங்கிப் போகும்.
|
|
|
| புதிய வைரஸ் உஷார். |
|
Posted by: வியாசன் - 01-24-2005, 11:08 PM - Forum: கணினி
- Replies (18)
|
 |
புதிய வைரஸ் ஒன்று தற்போது கணனிகைள தாக்குகின்றதாம். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களைவிட மிகவும் மோசமாதாம். இந்த வைரஸ் காட்டிஸ்கின் செக்டர் பகுதிளை தாக்கும் திறன்கொண்டதாம்.. வாழ்த்துப் படங்களுடன் அதிகமாக பரவுகின்றதாம்.
A card for you அல்லது A Virtual Card for you என்று உங்களுக்குவரம் தகவல்களை தவிர்த்தல் பாதுகாப்பனது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி இணையத்திலிருந்து உங்கள் பாதுகாப்புக்காக சுடப்பட்டது
|
|
|
| எவ்வளவு நேரம கணணி இயங்கியது ?? |
|
Posted by: aathipan - 01-24-2005, 09:35 PM - Forum: கணினி
- No Replies
|
 |
ஒரு சிலர் கணக்குப் பார்த்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வார்கள். ஒரு சிலரோ 20 மணி நேரம் தொடர்ந்து கம்ப்யூட்டரை ஓட விடுவார்கள். சரி எவ்வளவு நேரம் இறுதியாகக் கம்ப்யூட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது என்று தெரியவேண்டுமா? அதாவது கடைசியாக சிஸ்டத்தை ஆன் செய்ததிலிருந்து இப்போது வரை எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண் டிருந்தது எனத் தெரிய வேண்டுமா? விண்டோஸ் 98 தொகுப்பு வைத்திருப்பவர்கள் Start/Programs/Accessories/System Tools என்ற வரிசையில் தேர்வு செய்தபின் அதில் "System Information" என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அதில் "Uptime" என்ற கட்டத்திற்கு அடுத்தபடியாக உங்கள் கம்ப்யூட்டர் இறுதியாகத் தொடங்கி எத்தனை மணி, நிமிடம், வினாடி இயங்கிக்கொண்டிருக் கிறது எனத் தெரியவரும்.
|
|
|
| ரயில் விபத்தை தடுக்க புதிய கண்டுபிடிப்பு |
|
Posted by: aathipan - 01-24-2005, 09:29 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
ரயில் விபத்தை தடுக்க புதிய கண்டுபிடிப்பு
கோவா: இந்தியாவில் ரயில் விபத்துக்களை 100 சதவீதம் தடுக்கும் நோக்கத்தில் "ரக்ஷா கவசம்' என்ற பெயரில் புதிய கருவி ஒன்றை இந்திய ரயில்வே கண்டுபிடித்துள்ளது. முதற்கட்டமாக இந்தக் கருவி கொங்கன் ரயில் பாதையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ரயில் விபத்து என்றாலே மக்கள் மொத்தம் மொத்தமாக உயிரிழக்கும் சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்து வந்தன. இனி அதுபோன்ற துயரங்கள் நடக்காத வகையிலும், ரயில் விபத்துக்களை முற்றிலுமாக தடுக்கும் வகையிலும் "ஏ.சி.டி.,' என்ற புதிய கருவியை இந்தியாவின் கொங்கன் ரயில்வே தயாரித்து சாதனை படைத்துள்ளது. "ஆண்டி கொலிஷன் டிவைஸ்' எனப்படும் இக்கருவிக்கு உலகம் முழுவதும் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. "ரக்ஷா கவசம்' என்றழைக்கப்படும் இக்கருவி அனைத்து ரகமான ரயில் விபத்துக்களையும் தடுக்கும் சக்தி படைத்தது. ரயில் ஓட்டுனருக்கு தோழனாக இருக்கும் இந்தக் கருவி மூன்று கிலோ மீட்டர் வரை ரயில் பாதையை பார்க்கும் திறன் படைத்தது. ரயில் பாதையில் வேறு ஏதேனும் ரயில் வந்து கொண்டிருந்தால் எளிதாக கண்டுபிடித்து விடும். வளைவுகளில் திரும்பும்போது விபத்து ஏற்படாத வகையில் வேகத்தை தானாகவே குறைத்துக் கொள்ளும். அபாயகரமான இறக்கங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பும். ரயில் பாதையில் வேறு ஏதாவது ரயில் விபத்து நேர்ந்து கவிழ்ந்து கிடந்தாலும் அதனைக் கண்டறிந்து வேகத்தைக் குறைக்கும் திறன் படைத்தது.
ரயில்வே "கேட்' திறந்து கிடந்தாலும் கண்டறிந்து வேகத்தை குறைத்துக் கொள்வதுடன் ரயில் ஓட்டுனரையும் எச்சரிக்கும் திறன் படைத்தது. இதுபோன்ற பல்வேறு அம்சங்களுடன் "மைக்ரோபிராசசர்' உதவியுடன் இக்கருவியை கொங்கன் ரயில்வே தயாரித்துள்ளது.
இக்கருவியை காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கருவி குறித்து தெரிந்து கொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரயில்வே நிர்வாகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. முதல் கட்டமாக இந்த கருவி கொங்கன் ரயில்வேயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்பிறகு நாடு முழுவதும் உள்ள நீண்ட ரயில் பாதைகளில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னைஜோலார்பேட்டைஈரோடுபாலக்காடுஷொரனுõர்எர்ணாகுளம் பாதையில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட உள்ளது
நன்றி தினமலர்
|
|
|
| ஜெயிலில் இருந்தே சாதித்த பெண்மணி |
|
Posted by: Vaanampaadi - 01-24-2005, 07:41 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.spiegel.de/img/0,1020,181677,00.jpg' border='0' alt='user posted image'>
ஜெயிலில் இருந்தே சாதித்த பெண்மணி
உலகில் உள்ள முக்கிய பெண்களில் இவரும் ஒருவர். பர்மா நாட்டின் தலைவர்களில் ஒருவரான ஆங் சானின் இரண்டு வயது மகள் சூ கி. ஜப்பானின் பிடியிலிருந்து அப்போதுதான் ஒரு வழியாகத் தப்பித்திருந்த பர்மா, பிரிட்டனிடம் அடிமையாகிப் போயிருந்த நேரம் அது. ஆங் சான் போன்ற உள்ளுர்த் தலைவர்களின் போராட்ட முயற்சிகளின் காரணமாக, பர்மாவுக்கும் சீக்கிரமே சுதந்திரம் கிடைத்துவிடக் கூடும் என்ற பேச்சும் பரவியிருந்தது.சில நாட்களிலேயே ஆங் சான் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்! அந்தப் பிஞ்சு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டாள் குட்டிப்பெண் சூ கி.அதன்பின் அடுத்த வருடமே பர்மாவுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்றாலும், பர்மாவில் ராணுவ ஆட்சிதான் வந்தது.
கணவர் படுகொலை செய்யப்பட்ட அதே பர்மாவில் தன் மகளுக்குப் போதிய பாதுகாப்பில்லை என்ற நினைப்பு சூ கி-யின் அம்மா மனசில் இருந்து கொண்டிருந்ததால் குழந்தையை அந்த வயதிலேயே தனியாக லண்டனுக்கு அனுப்பி அங்கே படிக்க வைத்திருக்கிறார். அப்பாவின் அரசியல் அறிவு ரத்தத்தில் ஊறி இருந்ததால், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முக்கிய பாடங்களாக சூ கி எடுத்துப் படித்தது கூட தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றைதான்! படிப்பிலும் கெட்டி, பரம்பரையிலும் அரசியல் போன்ற காரணங்களினால் சூ கி-க்கு நியூயார்க்கிலிருக்கும் ஐ.நா.சபையின் செயலக ஆலோசனைக் குழு ஒன்றில் உதவிச் செயலாளர் பணி கிடைத்தது.
வேலை கிடைத்த பின் சூ கி. தான் காதலித்த மைக்கேல் ஆரிஸைத் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் பர்மாவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது காரணம் சூ கி திருமணம் செய்து கொண்டது ஓர் அந்நிய நாட்டவரை! அந்தத் திருமணம்தான் மக்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அதன் பிறகு சூ கியின் வாழ்க்கையை திசை திருப்பும் விஷயங்கள் அப்போதுதான் நடந்தன. அவரது சொந்த நாடான பர்மா சுதந்திரத்துக்கு அப்புறமும் ராணுவ ஆட்சியில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்த நாட்டு மக்கள். நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்! உன் தாய்நாட்டின் கதியை நேரில் வந்து பார் பெண்ணே! என்று தங்கள் அபிமானத் தலைவரின் மகளுக்கு மிக உரிமையோடு கடிதங்கள் மேல் கடிதங்கள் போட்டார்கள்.இந்த நிலையில் ரங்கூனியிலிருந்த சூ கியின் அம்மாவின் உடல்நிலை வேறு மோசமடைய, உடனடியாக பூட்டானிலிருந்து புறப்பட்டுச் சென்றார் சூ கி.
அதற்குள், 26 ஆண்டுகள் பர்மாவை ஆண்ட நெவின் பதவியிறக்கப்பட்டார். இனி பர்மாவின் அரசியலமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அறிவித்தது அரசு. மக்கள் வேறெதை விரும்புவார்கள்... ஜனநாயகத்தைத்தானே? ஆனால் ராணுவம் இதற்கு ஒப்புகொள்ளவில்லை. தங்கள் ஆட்சியே நடக்கவேண்டும் எனத் தீர்மானித்தது. நெவின்னுக்குப் பிறகு பதவியேற்ற தளபதி ஷா நவுங் பலாத்காரத்தைப் பயன்படுத்தினார். அதனால் பர்மாவில் மாணவர்கள் போராட்டம் உச்சமடைந்திருந்தது. மக்களாட்சி வேண்டுமென்று போரிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் ராணுவத்தால் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள்!
பார்த்துக் கொண்டிருந்த சூ கியால் சும்மா இருக்க முடியவில்லை. தாய் மண்ணுக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனசு பரபரத்தது தன்னை மறந்தார்... தன் குடும்பம் மறந்தார்... சூ கி பல்வேறு ஜனநாயக ஆர்வக் குழுக்களை இணைத்தார். பதினைந்து வருடங்களுக்கு முன்பு அந்த நவம்பர் 4-ம் தேதி ஜனநாயக தேசிய அணி உருவானது. அதன் செயலாளராக எல்லோராலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சூ கி.
இதற்கிடையில் சூ கியின் தாயார் இறப்பு. தாயாரின் இறுதி ஊர்வலத்திற்கு திரண்ல் அந்த பிரமாண்டமான ஊர்வலம் தங்களது ஆட்சிக்கு விடப்பட்ட சவால் என்று கருதியது. உடனே சூ கியை வீட்டுக் காவலில் அடைத்தது ராணுவம்! அவரது கட்சியைக் சேர்ந்தவர்களையும் கொத்துக் கொத்தாக சிறைக்குள் அடைத்தார்கள்.வீட்டுச் சிறையிலிருந்து என்னையும் அவர்கள் இருக்கும் சிறையிலேயே அடையுங்கள்... என்றபடி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் சூ கி.
உலகையே விலுக்கென்று திரும்பிப் பார்க்க வைத்து விட்டது அவரது போராட்டம்! அந்தப் பெண்ணின் உறுதியையும் தியாகத்தையும் பாராட்டும் வகையில் மனித உரிமைக்காக வழங்கப்படும் சகரோவ பரிசை சூ கி-க்கு வழங்கியது ஐரோப்பிய பாராளுமன்றம். இதனால் இன்னும் கொதிப்படைந்தது ராணுவ அரசு. ஐந்து வருடங்களுக்கு எந்த விசாரணையும் இல்லாமலேயே சூ கியைக் கைது செய்து காவலில் வைக்கலாம் என்று சட்டத்தையே மாற்றியது.
ஆனால்...இப்படி சட்டம் மாற்றப்பட்ட அதே ஆண்டில் சூ கிக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது. அதன் பின் சூ கி கட்சித் தலைமைத் தேர்தலில் நின்றார். கட்சி அவரை மீண்டும் பொதுச் செயலாளராக்கி மகிழ்ந்தது. இதைத் தொடர்ந்து ராணுவ அரசு பலவித அடாவடிச் செயல்களில் ஈடுபட்டது. புத்தாண்டு தினத்தன்று சூ கிக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்காக குழுமியிருந்த பெரும் கூட்டத்தில் பாம்புகளை வீசியெறிந்து கூட்டத்தின் ஒரு பகுதியைக் கலைத்தது.
மறுபடி இரண்டு வருடங்களிலேயே மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சூ கி. இதற்கு நடுவே சூ கியின் தனி வாழ்வில் மேலும் சில சோகங்கள். நான்கு வருடங்களாக அவரைச் சந்திக்காதிருந்த அவர் கணவருக்கு ப்ராஸ்டேட் புற்று நோய் வந்து சிரமப்பட்டார். சூ கி பர்மாவை விட்டு வெளியேறலாம். ஆனால் மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னது அரசு. போகாதே சூ கி... நீ போய்விட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் வரும் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று ஒருபக்கம் கதறினார்கள் மக்கள். கணவரை பர்மாவுக்கு அழைத்து வரலாம் என்றால் அவருக்கு விஸா வழங்க மறுத்தது அரசு. ஆக, இறுதிவரை நோய் வாய்ப்பட்ட கணவனைப் பார்க்க முடியாமலே போனது சூ கிக்கு. அடுத்த ஒரே வருடத்தில் சூ கியின் கணவர் லண்டனில் இறந்தார்.
அதன்பிறகு சூ கியின் வீட்டுக் காவலை அவ்வப்போது விலக்கிக் கொண்டாலும் ரங்கூனை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று நிபந்தனையிட்டது அரசு. உலகமே உங்களை கவனிக்கிறது என்று அந்த அரசை பில் கிளிண்டன் கூட எச்சரித்துப் பார்த்தார். ஆனால் உடனடிப் பலன் இல்லை. தொடர்ந்து பல நாடுகளும் ஐ.நா.வும் கண்டிக்க, கடைசியாக மூன்று வருடங்களுக்கு முன்பிருந்து தனது தாக்குதல்களை நிறுத்திக் கொண்டது ராணுவ அரசு.
அதற்காக சூ கியின் தொல்லைகள் தீர்ந்துவிட்டது என்று அர்த்தமில்லை மறைமுகமாக உறவினர்கள் மூலம் தொல்லைகளைத் தர ஆரம்பித்திருக்கிறது. போராட்டம் தான் வாழ்க்கை என்றாகி விட்டது சூ கிக்கு. ஆனால் வாழ்க்கையே போர்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் என்ற வரிகளுக்கு உதாரணமாகத் திகழும் சூ கி. இன்றளவும் பர்மாவில் ஜனநாயகம் மலர வேண்டுமென்று போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.பர்மா இப்போது தன் பெயரை மியான்மர் என்று மாற்றிக் கொண்டுவிட்டது. அதன் தலைநகரின் பெயரும் ரங்கூன் என்பதிலிருந்து யாங்கூனாக மாறிவிட்டது. ஆனால் ஆட்சியின் தன்மை தான் மாறவில்லை. சூ கியின் வாழ்நாளுக்குள் அது மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது பலருக்கும். இதைவிட வேறென்ன சாதனை வேண்டும்.
நன்றி: மலேஷியநண்பன்
|
|
|
| அன்பே உன்னை நாடிய போது... |
|
Posted by: kuruvikal - 01-24-2005, 07:19 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (17)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/help.jpg' border='0' alt='user posted image'>
<b>அன்பே உன்னை அரவணைக்க
அழகாய் மனதோடு பூட்டி வைத்தேன்
ஆர்ப்பரிக்கும் ஆழி கூடக் கொள்ளிடா
அலைகளாய் நினைவலைகள் அடுக்கி வைத்தேன்
அடுத்தவர் கண்படா உன்னிலை
எனக்குள் கட்டிவைத்தேன்
சிப்பிக்குள் முத்தாய் நீ ஜொலிக்க
நானும் ஜொலிப்பத்தாய் உணர்வு கொண்டேன்
மாசற்ற மனதோடு கூடிவிட்டதாய்
உன்னை எனதாக்கி மகிழ்ந்து கொண்டேன்
அந்திநேர தென்றலாய் நீவர
தென்னங்கீற்றாய் நானிருந்து தெம்மாங்கு பாடிச்
சுகந்தம் பெறுவதாய் நானுணர்ந்தேன்...!
மொத்தத்தில் அன்பே உன்னை ஆசானாக்கி
ஆசை ஆசையாய் பாடங்கள் படிக்கலானேன்
வாழ்க்கையெனும் சாதனைக் களத்தில்
நினைந்ததையெல்லாம் பெற்றிட
உந்துணை பலமாகும் என்றெண்ணி
உச்சி வானம் வரை சுதந்திரமாய் சிறகடிக்கலானேன்...!
ஆனால்... அன்றொரு கணம்....
அன்புக்கு என்ன விலை என்று
நீ கேட்க நான் மிரண்டேன்
அத்தனையும் தகர்ந்து தள்ளாடினேன்
இன்று...
அன்புக்கு யாசிக்கும்
யாசகனாய் பூமியில் சரிகிறேன்...!
அன்னை மடி மட்டும் மீண்டும்
தனதாக்கித் தாங்கிக் கொள்கிறது...! </b>
நன்றி - http://kuruvikal.yarl.net/
|
|
|
| ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள் |
|
Posted by: Mathan - 01-24-2005, 07:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள். - செங்குட்டுவன்.
யாழ்ப்பாணத்தில் படைத்தரப்பினர் அப்பக்கடையொன்றை நடத்திவருவது தெரிந்ததே. இந்த அப்பக்கடை சில மாதங்களின் முன்பு பொதுமக்களால் அடித்து நெருக்கப்பட்டதும் பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டு தற்போது சுடச் சுட அப்பம் (HOT HOT HOPPER) என்ற விளம்பரப்பலகை நிறுத்தப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.
எப்பொழுதும் எவரையாவது சுட்டே பழக்கப்பட்ட ஆமிக்காரர்கள் இப்பொழுது சமாதான காலத்தில் சுடுவதற்க்கு அதாவது துப்பாக்கியால் சுடுவதற்கு வாய்ப்பு குறைந்து போய் விட்டதால் அப்பம் சுட வெளிக்கிட்டு விட்டார்கள்.
HOT HOT HOPPER என்று எழுதுவதற்கு பதிலாக SHOOT SHOOT HOPPERஎன்று எழுதியிருந்தால் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் ஒரு ஓய்வு பெற்ற அரசஊழியர். அதுவும் சரிதான்?!
பெயர்தான் அப்பக்கடையேயொழிய அது உண்மையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவல் சேகரிப்பு மையம்தான். அதுமட்டுமல்ல அங்கிருந்தே சமூக விரோத சக்திகளும் தேசவிரோதக்குழுக்களைச் சேர்ந்தவர்களும் இராணுவ மற்றும் ஏனைய படைத்தரப்பு அபிலாi~களை நிறைவேற்ற கலாசார சீரமிவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது உண்மைதான்.
மக்களோடு மக்கள் போல் அங்கு அப்பம் சாப்பிட வருபவர்கள் போல் இருக்கும். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அங்கிருந்த வண்ணம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வாந்திகளை கட்டவிழ்த்து விடுவதுடன் தேசவிரோதச் சக்திகளை அவர்களின் பலவீனங்களை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் உளவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் அப்பம் வாங்கச் சென்ற சிறுவன் ஒருவன் மீது அங்கிருந்த சிவில் உடைதாரி ஒருவர் பாலியல் துபிரயோகம் மேற்கொள்ள முயன்றதாக தெரிகிறது. அவ்வேளை பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வழியால் வரவே அந்தச் சிறுவன் தப்பி ஓடியிருக்கிறான்.
இப்போது இதுபோன்ற அப்பக்கடைகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் பரவலாக அமைக்கத் தொடங்கியுள்ளனராம். மீசாலையில் இப்படியொரு முயற்சிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிகிறது.
அப்பக் கடையை நோக்கி அப்பாவிமக்கள் அதிகம் வர அப்பக்கடையில் வெளிப்புறத்தில் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்து இலவசமாக திரைப்படங்களை காட்டவும் திட்டமுட்டுள்ளதாம்?
இது தொடர்பாக அப்பகுதியில் வாழும் வயதான அம்மாவிடம் கேட்டபோது?.!
ஓமோம்?.அவை ஆக்களைச் சுட்டு சுட்டு களைச்சுப்போய் அப்பம் சுட வெளிக்கிட்டினம்... வெட்கங்கெட்டு நக்கிப் பிழைக்கிறதுகள் தான் அங்கைபோய் சாப்பிடும்?! என்றார் சினத்துடன்.
Eelanaatham
|
|
|
| திடீர் சந்திப்பு |
|
Posted by: Vaanampaadi - 01-24-2005, 07:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்ஹிஸன் இன்று ராணுவ உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு பறந்து சென்று தமிழ்செல்வனை சந்தித்துள்ளார்..........
இச்சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடை பெற்றதாக கூறிய புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.....
Monday January 24, 7:59 PM
Norwegian envoy holds surprise talks with Tamil rebels on tsunami aid
A top Norwegian envoy held surprise talks Monday with a Tamil Tiger rebel leader on setting up a new way to distribute tsunami aid that would give the guerrillas more oversight of aid headed for territory they control.
Norwegian Deputy Foreign Minister Vidar Helgesen flew by military helicopter to the rebel-held northern town of Kilinochchi for an unexpected meeting with S.P. Thamilselvan, the rebels' top political leader, government and rebel officials said on condition of anonymity.
The meeting came a day after Helgesen held similar talks with government officials aimed at setting up a joint body between the government and rebels to ensure an equitable distribution of aid in guerrilla-held areas.
Participating in a joint body would give the rebels a recognized role in aid disbursement. The government has so far insisted that all international aid go through its hands to ensure greater efficiency.
Rebel spokesman Daya Master said Monday's meeting lasted two hours, but he had no details about the "common mechanism" under discussion to coordinate aid deliveries.
Other officials said talks also were under way about who would manage a fund channeling the aid. The World Bank was the most likely option.
Peter Harrold, the World Bank chief in Colombo, said he was waiting to hear whether his organization would have a role. "We have certainly stated our willingness to do so," he told The Associated Press.
Most international donors are reluctant to give funds directly to the Liberation Tigers of Tamileelam, which is banned as a terrorist group in five countries, including the United States and India.
The intention to create a joint body to oversee aid was announced after Norway's Foreign Minister Jan Petersen met reclusive rebel chief Velupillai Prabhakaran on Saturday.
If an agreement is reached, it would mark the first time that the government and Tamil Tigers worked together on a political level since peace talks broke down two years ago.
Since the tsunami, local task forces comprised of representatives from the government, the rebels and international aid agencies have coordinated relief on the ground.
The rebels have repeatedly accused the government of failing to give a fair share of supplies to northern and eastern parts of the island nation under rebel control. The government denies the allegations.
On Tuesday, representatives from Norway, Japan, the United States and the European Union were scheduled to meet in Brussels, Belgium to discuss how tsunami relief can help Sri Lanka's moribund peace process.
Norway brokered a cease-fire between the parties in 2002, halting a 19-year war that left about 65,000 people dead.
Helgesen canceled a planned trip to the tsunami-hit east coast to attend Monday's meeting, and was expected to head home later in the day. Hans Brattskar, Norway's ambassador in Colombo, was to continue the discussions.
Meanwhile, the rebels released a statement calling for Tamils on the island and those living overseas to light lamps in "a day of national mourning" for tsunami victims on Wednesday _ one month after the disaster.
At least 31,000 Sri Lankans were killed in the Dec. 26 tsunami, with some estimates ranging beyond 38,000. About 1 million were displaced.
Associated Press
|
|
|
|