Yarl Forum
தென்றலின் குறும்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தென்றலின் குறும்பு (/showthread.php?tid=5632)



தென்றலின் குறும்பு - தமிழரசன் - 01-25-2005

தென்றலின் குறும்பு

உயிரை மெதுவாய்
உரசிப் பார்க்கும்
மலரின் மணத்தைத்
திருடப் பார்க்கும்
இலையின் பேச்சை
ஒட்டுக் கேட்கும்
இறகை சிறகை
கோதிவிடும்
திரையை மெள்ள
விலக்கிப் பார்க்கும்
கவிதைத் தாளைத்
தள்ளி விடும்
காதலர் நடுவில்
நுழையப் பார்க்கும்
காதலின் வாசம்
முகரப் பார்க்கும்
களைத்த அனைத்தையும்
தாலாட்டும்
தொட்டிலின் மணியை
ஆட்டிப் பார்க்கும்
குழந்தையின் போர்வையை
விலக்கப் பார்க்கும்
பண்ணிய பணியில்
களைத்துப் போய்
தூங்கும் இமைமேல்
தூங்கிப் போகும்.


- இளைஞன் - 01-25-2005

வணக்கம் தமிழரசன்...
"அழகான" கவிதை
"மெல்லென" வருடிச் செல்லும்
தென்றல் போல
உங்கள கவிதையும் வருடியது!

தொடருங்கள்!....

குறிப்பாக:

"திரையைக் கொஞ்சம்
விலக்கிப் பார்க்கும்"

என்ற வரிகளை வாசித்ததும்

நீங்கள் இன்னொரு வரியினை மனதில் நினைத்துவிட்டு
அது தேவையில்லை என்று விட்டிருப்பீர்கள் என்று
எண்ணினேன்! சரிதானா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 01-25-2005

சோலையில்...
கீற்றுக்கள் புகுந்து
கீதம் பாடும்
அதுவே...
செவிக்குள் புகுந்து
மனதை வருடும்
மனதும் மகிழ
மலரை நோக்கும் - அது
சுகந்தம் தந்து
சுவாசம் காக்கும்
தென்றலின் குறும்பில்
தெம்பு பிறக்கும்...!


- shiyam - 01-25-2005

தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் புலத்திலிருந்து எழுதுபவர் களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே??


- KULAKADDAN - 01-25-2005

[quote=shiyam]தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் [size=18]புலத்திலிருந்து எழுதுபவர் களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே
எங்கயொ உதைக்கிற மாதிரி கிடக்கு............ :wink:


- Niththila - 01-25-2005

KULAKADDAN Wrote:[quote=shiyam]தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் [size=18]புலத்திலிருந்து எழுதுபவர் களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே
எங்கயொ உதைக்கிற மாதிரி கிடக்கு............ :wink:
:roll: :roll: :roll:


- kuruvikal - 01-25-2005

Niththila Wrote:
KULAKADDAN Wrote:[quote=shiyam]தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் [size=18]புலத்திலிருந்து எழுதுபவர்களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே
எங்கயொ உதைக்கிற மாதிரி கிடக்கு............ :wink:
:roll: :roll: :roll:

காதல் வாழ்க்கை இல்லச் சரி...கனவாச்சே பலருக்கு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- tamilini - 01-25-2005

Quote:காதல் வாழ்க்கை இல்லச் சரி...கனவாச்சே பலருக்கு...!
தூக்கம் கலைஞ்சால் அதுவும் கலைஞ்சிட்டு போகப்போது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 01-25-2005

அழகான மிதமான . இதமானா கவிதை தமிழரசன்... வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->