Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 350 online users.
» 0 Member(s) | 347 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,435
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,642
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,239
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,477
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,054
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,247

 
  கண்ணீரில் நீந்துமெங்கள் தேசம் கழுவி
Posted by: Thaya Jibbrahn - 02-22-2005, 12:53 AM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

கண்ணீரில் நீந்துமெங்கள் தேசம் கழுவி
செந்நீராய் ஓடுமினி பகைவர் குருதி.

அந்நாளில் கொடிநாட்டி அடித்த கொட்டம்
இந்நாளில் வந்ததவர் தலைக்கே நட்டம்.

மலைமுகட்டு நீர்வெள்ளம் பள்ளம் நோக்கி
குமுகுமுக்கப் பாய்ந்ததுபோல்- புலிகள் சேனை

செந்தணலாய் செருக்களத்தில் வந்தே பாய்ந்தார்
செல்கிறது பகைவெள்ளம் கடலில் பாய.

ஐந்தாண்டு முன்னாலே படை நடத்தி
இழிபகைவர் யாழ்மண்ணில் காலை வைத்தார்.

அன்னவர்கள் அந்தன்று இரண்டுவழி சொன்னார்
தமிழ்மாந்தர்க் கினியுய்வு இல்லை யென்றே.

சயனைட்டை உள்ளெடுத்தால் மரணம்ää இல்லை
கடலில்தான் பாயவேண்டும் புலிகள் என்றார்.

இன்றவர்கள் படைகளுக்கே அந்தச் சோகம்.
ஐயோஅப் பகைகழுத்தில் சயனைட் இல்லை.

முக்காலில் உலவுகின்றான்ää விலங்கைப் போலும்
மூர்க்கனவன் மந்திரியாய் ஆனான். மேலும்

மூவுலகும் பொய்ச்செய்தி திரிக்க வெண்ணும்
மூடரவர் சிந்தனையை என்ன சொல்ல.?

உயிர்பிழைக்க நாம்கொடுத்த காலம் தன்னில்
ஓடாத பகைவனவன் சிரங்கள் கொய்தே

பூந்தொட்டி யாய்ஆக்கி நாளை நல்ல
மலர்ச்செடிகள் இட்டுஅதில் நாம் வளர்ப்போம்.

செம்மணியில் சிறுக்கர்களின் செயலுக் கெல்லாம்
செருக்களத்தில் கணக்கெடுத்து சிர மறுப்போம்.

போரென்று சொல்லியினி பகைவர் வந்தால்
அவர்காலை யுடைத்தெங்கள் அடுப் பெரிப்போம்.

அப்போரில் எம்வீரர் மண்ணில் வீழ்ந்தால்
மாவீரர் என்றெங்கள் மண்ணில் விதைப்போம்.

பாதகர்கள் என்றெம்மை உலகம் பேசின்
பேசட்டும் நாமெங்கள் வேலை முடிப்போம்.

மாவீரர் கனவையெங்கள் நெஞ்சில் வைப்போம்
அவர்பாதை தனிலெங்கள் காலை வைப்போம்.

புத்தாயிரக் கார்த்திகைத் திங்கள் ஒன்றில்
புகுந்திடுவார் புலிவீரர் எங்கள் மண்ணில்.

மேகத்தில் மலர்ச்செடிகள் இல்லை ஆனால்
மழைபொழிந்து அவர்வீரம் வாழ்த்தும் மேகம்.

தாகமது தமிழீழம் ஒன்றே என்னும்
தாரகத்து மந்திரமே மூச்சாய் ஆகும்.


- தயா ஜிப்ரான் -
<span style='font-size:16pt;line-height:100%'>(2000 ம் ஆண்டின் சமர்ப்பொழுதில் எழுதப்பட்டது)</span>

Print this item

  ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரப்பு
Posted by: Vaanampaadi - 02-21-2005, 07:18 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரப்பு

ஆஸ்திரேலியாவில் Melbourne அனைத்துலக விமான நிலையத்தில் காத்திருந்த 15-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்தில் காத்திருந்த அப்பயணிகளுக்கு திடீரென்று மயக்கம், மூச்சுதிணறல்,
வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

இச்சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லையென மூத்த அதிகாரியான Brooke Lord தெரிவித்தார். இரசாயன வாயுக்கசிவால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வணக்கம்மலேசியா

Print this item

  வானம்பாடியின் உலகம்
Posted by: Vaanampaadi - 02-21-2005, 07:16 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (18)

சூரிய சக்தி கார்
<img src='http://www.jayatvnews.org/news-photos/solar-web.jpg' border='0' alt='user posted image'>

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சையத் சஜ்ஜாத் அகமது என்பவர் சூரிய சக்தியினால் இயங்கும் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிருத்வி - 2005 என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு புதிய கண்டுபிடிப்பு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. சையத் சஜ்ஜாத் அகமது என்பவர் வடிவமைத்துள்ள சூரிய சக்தியினால் இயங்கும் கார் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தக் காரை இயக்க, கிலோ மீட்டருக்கு 20 பைசா செலவாகும் என்று சையத் அகமது தெரிவித்துள்ளார். மின்சாரம் மற்றும் சூரிய ஒளியினால் இயங்கும் இந்தக் காரின் விலை 25 ஆயிரம் ரூபாய் என்றும் அவர் கூறியுள்ளார்.

Jaya news

Print this item

  இலங்கையில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி
Posted by: Vaanampaadi - 02-21-2005, 06:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

பிப்ரவரி 21, 2005

இலங்கையில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

கொழும்பு:

கொழும்புக்கு அருகே நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாயினர். 30 பேர் காயமடைந்தனர்.


அமெரிக்க முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோர் இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மாலத்தீவுகளுக்குக் கிளம்பிய நிலையில் எம்பிலித்தியா என்ற இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியொருவரின் வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது அந்த நபர் கையெறி குண்டை நீதிமன்றத்துக்குள் வீசியதாகத் தெரிகிறது.

இந்த குண்டு வெடித்துச் சிதறியதில் நீதிமன்றத்தில் இருந்த சிறை அதிகாரி, ஒரு பெண் மற்றும் இன்னொரு நபர் பலியாயினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் எம்பிலிதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பையடுத்து ஏற்பட்ட குழப்பத்தால் நீதிமன்றத்தில் இருந்து 12க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பல பகுதிகளை புஷ், கிளின்டன் ஆகியோர் கடந்த இரு தினங்களாகப் பார்வையிட்டனர். இதனால் அவர்கள் பயணித்த பகுதிகள் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டது.

அவர்கள் மாலத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், நீதிமன்றத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.


Thatstamil

Print this item

  யாழ் இந்துவின் கருத்துகளம்
Posted by: Mathan - 02-21-2005, 03:57 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (4)

<span style='font-size:21pt;line-height:100%'>யாழ் இந்துவின் பழைய மாணவர்களுக்காக அதனுடன் தொடர்புடைய விடயங்களை கருத்தாடுவதற்கால கருத்துகளம் ஒன்று இயங்குகின்றது, இணைய முகவரி இதோ ........</span>

http://www.jaffnahindu.org/php/forum/index.php?c=1

<img src='http://www.jaffnahindu.org/php/forum/templates/subSilver/images/logo_phpBB.gif' border='0' alt='user posted image'>

Print this item

  இணைய இணைப்பை பங்கிடுவது எவ்வாறு ?
Posted by: VERNON - 02-21-2005, 03:31 PM - Forum: கணினி - Replies (10)

இணைய இணைப்பு 1024Ko (DSL) எவ்வாறு 8 கணனிகளுக்கு 128Ko வீதம் பங்கிடலாம்.

Windows 2000Server (with out ActivreD) and 8 Client Windows 2000
ஒவ்வொரு கணனியும் ஆகக் கூடிய அளவாக 128 Ko பயன்படுத்த வேண்டும்

இதனை எவ்வாறு செய்யலாம் ?


முன்னர் நான் கேட்ட வினாவிற்கு விடைபகன்ற அனைவருக்கும் நன்றி
உங்கள் உதவியுடன் குறிப்பாக இராகவா அவர்கன் வழங்கிய ஆலோசனையுடன் என் நோக்கம் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது
அனைவருக்கும் நன்றிகள்

நன்றியுடன்
VERNON

Print this item

  மீண்டும் ஒரு தடவை
Posted by: eelapirean - 02-21-2005, 01:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

மீண்டும் ஒரு தடவை BBC SINGALA இல் UN SANCTIONS ON LTTE என்ற கேள்விக்கு NO என்று பதிலளிக்கவும்.

Print this item

  ஜீ-மெயில் இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்
Posted by: kavithan - 02-21-2005, 01:28 AM - Forum: இணையம் - Replies (1)

இந்த பக்கத்துக்கு சென்று உங்கள் யி-மெயில் கணக்கை தொடங்குங்கள்


<b>புதிய ஜீ-மெயில் பதிவு செய்ய இதனை அழுத்துங்கள்</b>

Print this item

  ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள்
Posted by: Vaanampaadi - 02-21-2005, 12:38 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (21)

குஜராத் கோவிலில் சாமியார்கள் லீலை: ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள்

தபோய், பிப். 20-

குஜராத் மாநிலம் தபோய் என்ற இடத்தில் வட்தால் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்த், தேவ்வல்லப் ஆகிய 2 பேர் சாமியார்களாக இருந்த னர்.

இவர்கள் கோவிலுக்கு வரும் பெண்களை மயக்கி செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவ தாக புகார்கள் எழுந்தது. ஆனால் இந்த புகாரை கோவில் நிர்வாகம் மறுத்தது.

இதை ஆதாரத்துடன் நிரூபிக்க புகார் கூறியவர்கள் முடிவு செய்தனர். அதற்கான தருணம் பார்த்து காத்து இருந்தனர்.

இந்த நிலையில் ஒரு நாள் கோவிலை ஒட்டியுள்ள தனி அறையில் சாமியார்கள் சந்த், தேவ்வல்லப் ஆகிய 2 பேரும் ரூபல் என்ற பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருந்தனர். இதை மறைந்து இருந்து எதிர்தரப்பு வீடியோ எடுத்தது.

அந்த பெண்ணுடன் சாமியார்கள் உல்லாசம் அனுபவித்த காட்சிகள் உடனடியாக குஜராத்தில் உள்ள பத்திரிகையில் வெளியானது.

தங்களது லீலைகள் வெளியுலகுக்கு தெரிய வந்ததும் சாமியார்கள் சந்த், தேவ் வல்லப் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அகமதாபாத் மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷ னர் வன்ஜாரா தலைமையிலான தனிப்படை போலீ சார் சாமியார்களை தேடி வருகிறார்கள்.போலீசார் நடத்திய விசா ரணையில் தலைமறைவான 2 சாமியார்களுடன் பக்தி ஸ்வரூப் என்ற சாமியார் தொடர்பு கொண்டு இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெண் புரோக்கர்களான மன்சுக்பகத், தக்கர்ஷி படேல், கர்சன்படேல் ஆகி யோரும் கைது செய்யப்பட் டுள்ளனர்.

பிடிபட்ட சாமியார் பக்திஸ்வரூப்பின் அறையில் இருந்து ஆபாச புத்தகங்கள், ஊக்க மருந்துகள், காண்டம்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாமியார் பக்தி ஸ்வரூப்பிடம் நடத்தப்படட விசா ரணையில் போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எங்களிடம் உறவு கொண்டால் உங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கும் என்று கோவிலுக்கு வரும் பெண்களிடம் சாமியார்கள் ஆசை வார்த்தை கூறுவார்கள்.

சாமியார்களின் பேச்சை நம்பும் பெண்கள் அவர்களின் வலையில் வீழ்ந்துள்ளனர். அந்த பெண்களை சாமியார்கள் கற்பழித்து சின்னா பின்னப்படுத்தி உள்ளனர்.

பின்னர் தாங்கள் சாமியார்களால் கற்பழிக்கப்பட்ட விவரம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி இந்த உண்மைகளை பெண்கள் தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துள்ளனர். ஒரு சாமியார் கைதாகி இருக்கும் போதே இவ்வளவு உண்மைகள் வெளியாகி இருக்கிறது. இன்னும் தலைமறைவாகி இருக்கும் சாமியார்கள் பிடிபட்டால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வரும் என அகமதாபாத் போலீசார் கூறு கிறார்கள்.

Print this item

  தஸ்லிமா நஸ்ரீனுக்கு இந்திய குடியுரிமை?
Posted by: Vaanampaadi - 02-21-2005, 12:30 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

பிப்ரவரி 20, 2005

தஸ்லிமா நஸ்ரீனுக்கு இந்திய குடியுரிமை?

கொல்கத்தா:

பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் நிரந்தரமாக வசிக்க குடியுரிமை கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.


வங்கதேசத்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரீன், இஸ்லாம் குறித்து எழுதிய ஒரு நூலுக்கு அந் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவருக்கு சில தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்தன.

இதனால் கடந்த 1994ல் அவர் வங்க தேசத்திலிருந்து வெளியேறினார். தற்போது சுற்றுலா விசாவில் இந்தியாவில் தங்கியுள்ள இவர், நிரந்தர குடியுரிமை கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.

இவரது விண்ணப்பத்தை பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறியுள்ளார்.

என்னுடைய கோரிக்கையை இந்திய அரசு பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். முழு குடியுரிமை கிடைக்காவிட்டாலும் ஐந்து வருடங்களுக்காவது இந்தியாவில் தங்க அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் இவர்.

Print this item