| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 462 online users. » 0 Member(s) | 460 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| kamal |
|
Posted by: stalin - 02-25-2005, 11:38 PM - Forum: சினிமா
- Replies (37)
|
 |
சினிமாவை சினிமாவாக காட்ட முயலும் கமலை ஊக்குவிக்க வேண்டும் தமிழ்நாட்டு தமிழர்கள் நாளந்தம் காப்பி சர்டிபிகட் ஆபிஸ் காலேஜ் என்று ஆங்கிலம் கலந்து பேசபவர்கள் ஒரு மும்பாய் எகஸ்பிரஸ் என்ற படத்துக்குகாக கமலை எதிர்ப்பது வேதனைக்குரியது கமலின் புரட்சி சினிமா பயணம் தொடர வாழ்த்துவோம்
|
|
|
| இது சரிதானா? |
|
Posted by: Mathan - 02-25-2005, 11:29 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (8)
|
 |
இது சரிதானா?
ஐரோப்பியக் கலாச்சாரம் ஒரு தீண்டத்தகாத விடயம் எனக் கருதும் ஐரோப்பியத் தமிழர்கள், ஐரோப்பியாவில் தமது பிள்ளைகள் சிகரெட் புகைத்தாலோ அல்லது மது அருந்தினாலோ அல்லது காதலித்தாலோ....
ஐரோப்பியாவுக்கு வந்ததால்தான், தமது பிள்ளைகள் இப்படியான பழக்கங்களைப் பழகிக் கெட்டலைகிறார்கள். என்று சொல்லித் தலையிலடித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் இப்படித் தலையிலடித்துக் கொள்ளும் பெற்றோராகிய இவர்கள், முக்கியமாகத் தந்தையர் ஊரிலேயே தமது பருவ வயதில் சிகரெட் புகைக்கத் தொடங்கி, மது அருந்தத் தொடங்கி இன்னும் அதை இங்கு ஐரோப்பியாவிலும் தொடர்கிறார்கள்.
அத்தோடு ஐரோப்பியாவில் வாழ்வதால்தான் தமது பிள்ளைகள் காதல் என்னும் மாயவலையில் சிக்கி மாய்கிறார்கள் என்று சொல்லி ஐரோப்பியக் கலாச்சாரத்தைத் திட்டும் இவர்களில் அனேகமானோர் ஊரில் காதல் செய்யாமல் இருக்கவில்லை.
சிகரெட், மது, காதல் இவைகள் மூன்றுமே ஊரிலும் இளைஞர்களை விட்டு வைக்காத போது ( இதை அநுபவரீதியாக உணர்ந்திருந்தும், தெரிந்திருந்தும்)
எம்மவர்கள் அர்த்தமற்ற முறையில் ஐரோப்பியக் கலாச்சாரத்தைச் சாடுகிறார்களே!
இது சரிதானா?
நன்றி - சந்திரவதனா
|
|
|
| அனுமதிக்க வேண்டும்! |
|
Posted by: cannon - 02-25-2005, 11:28 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (8)
|
 |
களப்பொறுப்பாளர், மற்றும் கள மேற்பார்வையாளர்களுக்கு,
கருத்துக்களமென்பது எமது கருத்துக்களை சுதந்திரமாக எழுதுமொரு ஊடகம். இதில் சிலர் எழுதுவதுகளில் சில தவறுகள் இருக்கலாம், உண்மைகள் இல்லாதிருக்கலாம் ஆனால் அக்கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்க எவருக்கும் இக்களத்தில் உரிமையுள்ளது. அதற்காக கருத்துக்களை முற்றாக தடைசெய்யக் கூடாது. நாகரிகமான முறையில் மற்றவர்களை கண்டிக்கும் உரிமை எல்லோருக்கும் வேண்டும். களம் சூடான விவாதங்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் கருத்துக்களின் நாகரீக எல்லைகளை தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்களே!
|
|
|
| சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி..................... |
|
Posted by: வியாசன் - 02-25-2005, 08:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (16)
|
 |
இளவரசர் சார்ள்சைச் சந்தித்து உரையாட விடுதலைப்புலிகள் விருப்பம்
இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் அவர்களின் குறுகியகால இலங்கைப் பயணத்தில் சுணாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான மட்டக்களப்பும் அடங்குவதாகவும் இவருடன்; கலந்துரையாட புலிகள் விருப்பமாக இருப்பதாகவும் அறிய வருகின்றது.
இதுகுறித்து புலிகளின் சமாதானச் செயலகத்தின் செயலாளர் எஸ். புலித்தேவன் அவர்கள்; றாய்ற்றருக்கு வெள்ளியன்று கருத்துத் தெரிவிக்கையில்:
சாள்ஸ் அவர்களை முழுமனதுடன் வரவேற்பதுடன் அவருடன் கலந்துரையாடுதையும் விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ் சமூகமும் விரும்புகின்றது. அரசாங்கத்தினாலும் வெளிநாட்டு பிரமுகர்களாலும் புறக்கணிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களின் நிலைமைகளை தெரியப்படுத்துவது முக்கியமானதொன்றாகவும் கருதுகின்றது.
பிரித்தானிய பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர் நிவாரணப்பங்கீட்டில் சிறீலங்கா அரசின் பாரபட்சம் குறித்தும் மேலும் தெளிவுபடுத்தவுள்ளனர்.
இலங்கையிலுள்ள இங்கிலாந்து தூதரகத்தின் கூற்றின்படி சாள்ஸ் அவர்கள் தனியாகவே மேற்படி பயணத்தை குறிப்பட்ட இடங்களுக்கு மேற்கொள்ள இருப்பதாகவும் இதனை அடுத்து அவுஸ்திரேலிவுக்கான சுற்றுப்பயணம் தொடருவதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் செயலாளர் கொபி அனான் அவர்களின் வடக்கு கிழக்குக்கான பயணத்தையடுத்து விடுதலைப் புலிகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும்ää சார்ள்ஸ் அவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளின் கோர அழிவைப் பார்வையிட வருகை தந்தால் அது தமிழ் மக்களுக்கு மிகவும் ஆறதல் தரும் விடயமாக அமையுமென்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்துக் கருத்துக்கூறிய பெயர் குறிப்பிட விரும்பாத அரச பிரதிநிதியொருவர் விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்கு இளவரசர் சாள்ஸ் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
புதினம் இணையத்திலிருந்து சடப்பட்டது நன்றி புதினம்
|
|
|
| இராவணன்கள் சிறையெடுக்கப் படுகின்றார்கள். -தயா ஜிப்ரான் - |
|
Posted by: Thaya Jibbrahn - 02-25-2005, 07:46 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (39)
|
 |
பெற்றோரே !
முன்னோர்கள் உங்களுக்கு
ராமாயணம்
சொன்னதெல்லாம்
வெறும் கதைக்குத் தானா!
பத்துதலை
கொண்டதால் மட்டும்
இராவணனை
இராட்சதன் என்றீர்கள்!
உங்கள்
மிதிலையின் சீதைகள்
மயக்கும்
மாயமான்கள் ஆனதை
எப்போதறீவீர்கள்???
இப்போதெல்லாம்
இராவணன்கள்
சிறையெடுக்கப் படுகின்றார்கள்.
பத்தாந்தலை வீணைக்கு
மயங்கிய
நவீன சீதைகளால்.
ஏய்!
மூடக் கம்பனே!
நெருப்புக்கும் கற்புக்கும்
எப்படி
சம்பந்தம் வைத்தாய்?
எந்த
நெருப்பும் எங்கள்
சீதைகளைத் தொடவில்லை.
நெருப்பல்லவா
தனக்குத் தானே
சுடு போட்டுக்கொள்கின்றது.
பெய்யெனச் சொல்லாமலே
மழையும்
பொழிகிறது.
பழமொழிகள் எல்லாமே
பழையமொழிகள் தானா?
உங்கள்
பொன்மொழியும் பழமொழியும்
எங்களுக்கு
பொய்மொழிகளாய் தானே
தெரிகின்றன.
பெற்றோரே!
இன்னும்
உங்கள் தங்கக் கூண்டுகள்
திறபடா விட்டால்
பாவம்
உங்கள் சீதைகள்
சிறையுடைக்கும் அவசரத்தில்
தங்கள்
திசைகளையும் அல்லவா
இழந்துவிட போகிறார்கள்.
விலங்குடைக்கும்
வேகத்தில்
துகில்களையல்லவா
உரிந்துவிடப் போகின்றார்கள்.
தவறு!!!
புரிபவனுக்கு சொந்தமானதல்ல.
அவனின்
சுழ்நிலைக்கே பந்தமானது.
என்ன செய்வதாய்
உத்தேசம் ?
இன்னும் உங்களின்
பஞ்சாங்கப் பரண்விட்டு
இறங்கிவர சம்மதமில்லையெனின்
உங்களுக்காக
இரங்கற்பா பாடுவதன்றி
வேறுவழி
தோன்றவில்லை.
பழமை பழையதென்று
புத்தாறில் குதிப்பதெனில்
ஆற்றுக்குள்
உங்கள் அஸ்தியை மட்டுமல்ல
உங்களையே
கரைப்பதுதான் புத்திசாலித்தனம்.
-தயா ஜிப்ரான் -
|
|
|
| இக்கணத்தில் நான் - தயா ஜிப்ரான்- |
|
Posted by: Thaya Jibbrahn - 02-25-2005, 07:38 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
என்
மொத்த பலவீனங்களையும் திரட்டி
மௌனம் எனும்
கோட்டையெழுப்பினேன்.
பலவீனங்களை கண்டறிந்து
கோட்டையை
தாக்கினர்ய்
கைப்பற்றினாய்.
எந்த
எதிர்தாக்குதலும் இன்றி
பணிந்துபோனது
எனது
மௌனங்களின் அரசாட்சி.
பாதுகாப்பு வேலிகள்
சிதிலமாகி
சின்னாபின்னமாய் கிடக்கிறது
என்
அரண்மனை.
என்ன செய்வதாய்
உத்தேசம். ????
என்
மனக்கோட்டையில்
நீயும் வாழ்வதாயில்லை
வாழ்ந்த என்னை
விடுவதாயுமில்லை.
உன்னிடம்
பணிந்து போனதைக்காட்டிலும்
போரிட்டு மரணித்திருப்பின்
மகிழ்ந்திருப்பேன்
இக்கணத்தில் நான்.
- தயா ஜிப்ரான்-
|
|
|
|