| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 536 online users. » 0 Member(s) | 534 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| சுனாமி அனர்த்த தரவுகள் மாயமாக மறைவு |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 12:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சுனாமி அனர்த்த தரவுகள் மாயமாக மறைவு
25 02 2005
சுனாமியின் பின்னர் முதல் ஒரு மாதத்தில் தயாரிக்கப்பட்ட சேத விவரங்கள் அடங்கிய முக்கியமான அரசாங்க தரவுகள் காணாமல் போயுள்ளதாக கொழும்பு செய்தியொன்று தெரிவிக்கின்றது. தேசிய நடவடிக்கைகளுக்கான மையம் என்ற அண்மையில் மூடப்பட்ட அரசாங்க பணிப்பகம் திரட்டிய தரவுகளில் சுனாமி சேதம் பலியானோர் வெளிநாட்டு உதவி பற்றிய முக்கிய விவரங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய நடவடிக்கைகளுக்கான மையத்தின் தலைவராக இருந்த தாரா டி மெல் பதவி விலகியதுடன் அவருக்கு கல்வித் துறையில் பதவி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த மையம் மூடப்பட்டு அதன் பொறுப்புக்கள் தேச நிருமான பணிக்குழு என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
செய்திகோவை
|
|
|
| சுனாமி நிவாரண பொருட்களை ஏனையோருக்கு திருப்பி விட்டிருப்பதாக. |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 12:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சுனாமி நிவாரண பொருட்களை ஏனையோருக்கு திருப்பி விட்டிருப்பதாக ஒப்புக்கொள்கிறார் சமூக சேவைகள் அமைச்சர்
25 02 2005
சுனாமி அனுதாபத்தில் சர்வதேச நாடுகளிடம் இருந்து வந்த நிவாரண உதவி பொருட்கள் சிறீலங்காவின் தென் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்படாதவர்களுக்கு திருப்பப்படுகின்றன என்பதை சிறீலங்காவின் சமூகசேவைகள் அமைச்சர் திருமதி சுமேதா ஜயசேன ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் சுனாமி நிவாரணத்துக்கு வந்த உதவி பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன என்றும் அதனால் பால்மா புட்டியிலடைத்த மீன் தண்ணீர் போத்தல் என்பவற்றை வயோதிபர் சிறுவர் வலம்குறைந்தோர் இல்லங்களுக்கு அனுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே உணவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன அவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும்மேலதிக உணவுகளை ஏனையோருக்கு வழங்காது விட்டால் அவை வீணாகிப் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு 94ஆயிரம் மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றார்கள். மேலும் 407ஆயிரம் பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள். இப்போது தேவைப்படுவது அவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதே என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சுனாமி நிவாரண பொருட்களை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கையாடுவது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை கிடைக்காது தடுப்பது கொழும்பு துறைமுகத்தில் 150 கொள்கலன்களில் நிவாரண பொருட்கள் முடக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றிய செய்திகள் உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
செய்திகோவை
|
|
|
| இசை அமைப்பாளர் ஜோஸ்வா இன்று சிறையில் அடைப்பு |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 11:13 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
இசை அமைப்பாளர் ஜோஸ்வா இன்று சிறையில் அடைப்பு பல பெண்களை ஏமாற்றியதாக புகார்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/26/flash/C1114_petty.jpg' border='0' alt='user posted image'>
ஜோஸ்வா - நடாஷா
சென்னை, பிப். 26- பல பெண்களை ஏமாற்றியதாக இசையமைப்பாளர் ஜோஸ்வா இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
…காதல் திரைப்படத்துக்கு இசை அமைத்தவர் ஜோஸ்வாஸ்ரீதர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவரது இசைக்குழுவில் …கீ போர்டு வாசித்து வந்த நடாஷா என்ற இளம்பெண்ணுடன் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவியான நடாஷாவை இசை அமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டதாக பெங்களூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை நடாஷாவின் தாயார் எல்பிரா செய்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவரும் சென்னையில் இருந்ததால் பெங்களூர் போலீசார் இதுகுறித்து சென்னை நகர போலீசாருக்கு தெரிவித்தனர்.
போலீஸ் கமிஷனர் ஆர்.நட்ராஜ் இசைஅமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரையும், நடாஷாவையும் உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாப்பூர் சரக துணைகமிஷனர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு தனிப்படையும், அண்ணாநகர் சரக துணைகமிஷனர் கருணாநிதி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜோஸ்வா ஸ்ரீதர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீனுக்காக ஒரு மனு தாக்கல் செய்தார். சென்னை ஐகோர்ட்டு ஜோஸ்வாஸ்ரீதர், நடாஷா ஆகியோர் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் 14 நாட்களுக்குள் பெங்களூர் கோர்ட்டில் அவர்கள் ஆஜராகி முன்ஜாமீன் பெறலாம் என்று கூறியிருந்தது.
ஆனால் இருவரும் பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவர்களை சென்னை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது போலீசாருக்கு தெரிந்தது.
இதனை தொடர்ந்து மயிலாப்பூர் சரக துணைகமிஷனர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீசார் அவர் களை பிடித்தனர். இன்று காலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ஜோஸ்வா ஸ்ரீதர் பல பெண்களை ஏமாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஜோஸ்வாஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர். நடாஷாவை மீட்டு கமிஷனர் ஆர்.நட்ராஜ; முன்னிலையில் அவரது தாயாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தினகரன்
|
|
|
| தமிழினம் பொறுமையின் விளிம்பில் நிற்பதை உலகிற்கு உணர்த்துவோம் |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 11:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தமிழினம் பொறுமையின் விளிம்பில்
நிற்பதை உலகிற்கு உணர்த்துவோம்
3ஆண்டு நிறைவையயாட்டி பத்மினி சிதம்பரநாதன் அறிக்கை
தொடர்ந்து ஏமாற்றங்களைச் சந்தித்து வரும் தமிழ் இனம் பொறுமையின் விளிம் பில் நிற்கின்றது என்ற செய்தியை சர்வ தேச சமூகத்துக்கு உரத்துச் சொல்லவேண் டிய நேரம் வந்துவிட்டது.
- இப்படித் தெரிவித்திருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத் மினி சிதம்பரநாதன்.
அரசு - புலிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மூன்று ஆண்டு கள் பூர்த்தியடைந்ததையயாட்டி விடுத்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:-
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டு 3 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப் பட்டதால் மக்களுக்கு ஓர் ஆறுதல் கிடைத் திருக்கின்றது. ஆனால், தீர்வு கிடைக்க வில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை இன் னும் மீட்கப்படவில்லை. உழைப்புக்கான அவர்களின் வளம் பொருந்திய நிலங்கள் மீட்கப்படாது உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்திடம் உள்ளன.
உழைப்புக்கான அவர்களின் கடல் களில் சுதந்திரமாகத் தொழில் செய்யும் நிலைமை இன்னும் வரவில்லை. அது கடற் படையிடம். ஆனால், மறுபக்கம் தெற்கில் வாழ்க்கை சுமுகம் அடைந்துள்ளது. கொழும்புத் தெருக்களில் அச்சமின்றி நட மாடமுடிகின்றது. தெற்குப் பொருளாதாரத் தைப் பலப்படுத்த முடிந்தது. இந்த வகை யில் கிடைத்த ஆறுதலில் கூட இனங்க ளுக்கிடையே சமமற்ற தன்மை இருக்கின்றது.
இந்த நேரத்தில் தெற்கில் உள்ள அர சியல் கட்சிகள் அர்ப்பணிப்புடனும் நேர் மையுடனும் முழுமூச்சாகப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வுகாண உழைக்காமல் தமது பதவிப் போட்டிகளில் ஈடுபட்டு வரு கின்றன. இதனால் 3வருடங்களாக பேச்சு இழுத்தடிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல தமது இனவாதக் குரோதங்களையும் அடிக் கடி வெளிப்படுத்துகின்றனர்.
இது தமிழ் மக்களுக்கு வெறுப்பையும் ஆத்திரத்தையும் ஊட்டி பொறுமையின் எல்லைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதைச் சர்வதேசத்திற்குத் தமிழ் மக்கள் எல்லோரும் சேர்ந்து தெரியப்படுத்தவேண் டும். ஏனெனில், சர்வதேசம் யுத்தமின்றிய நிலைமையை மபெரும் சாதனைடு எனக் கருத்திற்கொண்டு ஆறுதல் அடைந்துவிடக் கூடும் என்ற மனக்கிலேசமும் தமிழ் மக்களுக்கு உண்டு.
நாம் பாடுபட்டது யுத்தமில்லாத நிலை மையை மட்டும் அடைய அல்ல. தமிழ் மக் கள் யுத்தத்தை விரும்பவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தமி ழர் தாயகப் பகுதிகளில் உரிமைகள் புறக் கணிக்கப்பட்டு அபிவிருத்தி புறக்கணிக்கப் பட்டு தமிழ்மக்கள் அழிக்கப்பட்டபோதுதான் வேறு வழியின்றி யுத்தத்தை தெரிவுசெய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
நாங்கள் அடிப்படையில் வேண்டுவது சுதந்திரத்தை. இதனை நாம் உலகத்துக் குச் சொல்லவேண்டும். இதற்கென நாங் கள் கிராமம் கிராமமாகவும் பிரதேசங்க ளாகவும் மாவட்டங்களாகவும் தேசம் தழு வியும் அணி திரள்வதற்கு இச்சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தவேண்டும். - என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
உதயன்
|
|
|
| புலிகளின் படங்கள் மீது "பெயின்ட்' விசிறிய கும்பல் |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 11:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
புலிகளின் படங்கள் மீது
"பெயின்ட்' விசிறிய கும்பல்
கண்டியில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியில்!
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட் டில் "சமாதானத்தில் ஏ-9 பாதையின் முக்கியத் துவம்' என்ற தொனிப் பொருளிலான புகைப் படக் கண்காட்சி ஒன்று கண்டி "குயின்ஸ்' விடு தியில் நேற்றுமுன்தினம் தொடக்கம் நடைபெற்று வருகிறது. மூவினங்களையும் சேர்ந்த ஏராள மான மக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வை யிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கண்காட்சியின் இரண்டா வது நாளான நேற்று கண்காட்சிக் கூடத்தினுள் புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள், அவர்களது நிர்வாகக் கட்ட மைப்புக்கள், மாவீரர்களினது புகைப்படங்கள் மீது பெயின்ட்டை "ஸ்பிறே' செய்து அசிங்கப்படுத்தி விட்டு நழுவிச் சென்றுவிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்பாட்டாளர் கள், பொலீஸாரிடம் முறைப்பாடு செய்தனர். உடனடியாக அங்கு வந்த பொலீஸார் விசார ணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலை கண்காட்சி நிறைவடையும் நேரம்வரை பொலீஸார் பாதுகாப்பு வழங்கி னர்.பிரித்தானியாவைச் சேர்ந்த பத்திரிகையா ளரான வோல்ரர் யஹலரினால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற் றிருக்கின்றன.
இலங்கையின் சமாதானம் குறித்த பல்வேறு விடயங்கள், நிகழ்வுகள் யாவும் புகைப்படங் களாக சித்திரிக்கப்பட்டிருந்தன.
அரசியல் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ நிலைகள் சம்பந்தமான புகைப்படங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உதயன்
|
|
|
| கடற்புலிப் போராளி சுகவீனத்தால் சாவு |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 11:08 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கடற்புலிப் போராளி
சுகவீனத்தால் சாவு
கடற்புலிகளின் வடமராட்சிப் பிரதேச நிதிப் பொறுப்பாளர் மேஜர் தயானந்தன் (சின்னராசா தங்கவடிவேல்) நேற்றுமாலை சுகவீனம் கார ணமாக சாவடைந்தார். இவர், வல்வெட்டித் துறை, நெடியகாடு, மானாங்கேணியைப் நிரந்தர முகவரியாகவும் 3ஆம் யூனிற், யோகபுரம், மல்லாவியைத் தற்காலிக முகவரியாகவும் கொண்டவர்.
இவருடைய வித்துடல் நேற்று இரவு7 மணியளவில் வடமராட்சி அரசியல்துறை செயலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. பின்னர் அவரது சொந்தஇடமான வல்வெட்டித்துறை நெடியகாட்டுக்கு எடுத்துச்செல் லப்பட்டது.
இன்று அங்கு தயானந்தனின் வித்துடலுக்கு மக்கள்அஞ்சலிசெலுத்துவர். நாளை ஞாயிற்றுக் கிழமை வடமராட்சி மாவீரர்துயிலும் இல்லத் தில் அவரது வித்துடல் விதைக்கப்படும்.
உதயன்
|
|
|
| புலிகளின் குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி சந்திரிகா பதில் |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 11:08 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
துணைப்படை ஏதும் இல்லை!
புலிகளின் குற்றச்சாட்டுக்கு
ஜனாதிபதி சந்திரிகா பதில்
இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை என்று எதுவும் இல்லை என்று கூறுகிறார் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. நேற்று முன்தினம் தம்மைச் சந்தித்துப் பேசிய நோர்வேயின் விசேட சமாதான ஆலோசகர் எரிக் சொல்யஹய்மிடமே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்திக் கூறினார்.
தமது மட்டு.- அம்பாறை மாவட்ட அரசியல் துறை முன்னாள் பொறுப்பாளர் உட்பட 4 போராளிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கொல்லப்பட்டதற்கு இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்களே காரணம் என்று புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையி லேயே ஜனாதிபதி இந்தக் கருத்தைத் தெரிவித் துள்ளார்.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண உதவி களை சமமாகப் பங்கிடுவது மற்றும் உதவித் திட்டங்கçe நடைமுறைப்படுத்துவது தொடர் பான விடயத்தில் புலிகளுடன் சேர்ந்து செயற் படுவதற்கான ஏற்பாடு ஒன்றை (பொதுக் கட்ட மைப்பு) அரசு மேற்கொண்டு வருகின்றது என் றும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நோர்வே விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்யஹய்ம், ஜனாதிபதியை நேற்று முன் தினம் இரவு அவரது உத்தியோகபூர்வ மாளிகை யில் சந்தித்துப் பேசினார். அப்போதே ஜனா திபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
ஜனாதிபதி - சொல்யஹய்ம் சந்திப்புக் குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இந்தமாத ஆரம்பத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித் துத் தாம் பேசிய விடயங்கள் குறித்தும், கடந்த 22ஆம் திகதி கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வ னைச் சந்தித்துத் தாம் பேசிய விடயங்கள் குறித்தும் சொல்யஹய்ம் ஜனாதிபதிக்கு விளக் கினார்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் சரத்து 1.8 இல் கூறப்பட்டுள்ளதன்படி இராணுவத் துணைப்படையினரின் ஆயுதங்கள் களையப் படாதது குறித்தும், தமது மட்டு.-அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தவரான கெளசல்யனின் கொலை குறித் தும் தமிழ்ச்செல்வன் தெரிவித்த விடயங்களை சொல்யஹய்ம் ஜனாதிபதியிடம் கூறினார். ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளுக் கான பொதுக்கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான புலிகளின் கருத்துக்களையும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.
கெளசல்யன் மற்றும் ஐவரின் படுகொலையை இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி கடுமையாகக் கண்டித்தார். அதேசமயம் இராணுவத்தினரு டன் சேர்ந்து துணைப்படைகள் இயங்குகின்றன எனக் கூறப்படும் குற்றச்சாட்டை ஐனாதிபதி அடியோடு மறுத்தார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 3 ஆம் ஆண்டு நிறைவு வேளையில், கிளாலியில் புலிகளின் தாக்குதலில் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றொருவர் காயமடைந்தும் உள்ளமை குறித்த தனது கவலையை ஜனாதிபதி சொல்யஹய் மிடம் வெளியிட்டார்.
இந்தச் சந்திப்பில் சொல்யஹய்முடன் நோர் வேத் தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் மற்றும் தூத ரக அதிகாரிகள் கலந்துகொண்டனர். அரசுத் தரப்பில் சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜெயந்த தனபால மற்றும் வெளிவிவகார அமைச்சு செயலர் பாலிக்கார ஆகியோர் கலந்துகொண்ட னர்.இதேவேளை,நேற்றுமுன்தினம் இரவு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வையும் சந்தித்து இன்றைய அரசியல் நிலை குறித்து சொல்ஹய்ம் பேசினார்.
உதயன்
|
|
|
| மாமல்லபுரம் கடலுக்குள் கோவில் கண்டு பிடிப்பு |
|
Posted by: aathipan - 02-26-2005, 08:23 AM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
மாமல்லபுரம் கடலுக்குள் கோவில் கண்டு பிடிப்பு
ஆய்வு நடத்திய தொல்பொருள் துறை_ கடற்படை அதிகாரிகள் தகவல்
சென்னை, பிப்.26_
மாமல்லபுரம் கடலுக்குள் கோவில் இருப்பதை தொல் பொருள் துறையினரும், கடற்படையினரும் கண்டு பிடித்துள்ளனர்.
கடலுக்குள் ஆய்வு
கல்லும் கதை சொல்லும் காவியச் சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரம் உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
பல்லவர் காலத்தில் `குடவறைக் கோவில்' முறையில் உரு வாக்கப்பட்ட இந்த சிற்பங்களும், கடற்கரை கற்கோவிலும் இந்திய தொல் பொருள் துறை பராமரிப்பில் உள்ளன.
கடந்த காலகட்டங்களில் கடல் கொந்தளிப்பால் மேலும் சில சிற்பங்கள் இந்த கடலில் மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படு கிறது.
ஆராய்ச்சி
ஆகவே, மாமல்லபுரம் கடலுக்குள் அரிய சிற்பங்களும், கோவில் களும் இருக்கிறதா? என்று இந்திய கடற்படையினருடன் இணைந்து இந்திய தொல் பொருள் ஆய்வு துறையினர் கட லுக்குள் ஆராய்ச்சி நடத்தினார் கள்.
இந்த ஆய்வு பணி குறித்து தென் மண்டல இந்திய கடற் படை வீரர்கள் (டைவிங்) பிரிவு தலைவர் தாமஸ் கூறியதாவது:_
மாமல்லபுரத்தில் கடலுக்குள் ஆய்வு செய்யும் பணி 2004_ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது கடந்த 11_ந் தேதி முதல் 25_ந் தேதி வரை கடலுக்குள் கடற்படை வீரர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தப் பணியில் 12 கடற்படை வீரர்களும், 3 தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளும் ஈடுபட்டனர். அப்பொழுது, கடலுக்கு அடியில் ஒரு கோவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான புகைப் படங்களையும் அவர்கள் எடுத்து வந்துள்ளனர்.
இவ்வாறு தாமஸ் கூறினார்.
கடலுக்குள் அரிய சிற்பங்கள்
அப்போது, உடன் இருந்த டெல்லியைச் சேர்ந்த இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துணை சூப்பிரண்டு அலோக் திரிபாதி கூறியதாவது:_
மாமல்லபுரம் கடலுக்குள்ளும் நிறைய அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றைக் கண்டு பிடிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த சிற்பங்கள் 18_வது நூற்றாண்டை சேர்ந்த வையாக இருக்கலாம்.
ஐரோப்பிய பயணக் குறிப்புகளில் மாமல்லபுரம் 7 குகைக் கோவில்களை கொண்டது என்று தெரிவித்து உள்ளனர். அதேபோல, இத்தாலிய பயணக் குறிப்புகளிலும் இந்த தகவல் தெரிய வருகிறது. இப்போது உள்ளவை தவிர மற்ற கோவில் கள்கடலுக்குள் மூழ்கி இருக்க வாய்ப்பு உள்ளது.
500 மீட்டர் தொலைவில்
மாமல்லபுரம் சிற்பக் கோவிலிலிருந்து கடலுக்குள் 500 மீட்டர் தொலைவில் 2,500 சதுர மீட்டரில் கடலுக்குள் அகழ்வாராய்ச்சி நடந்தது. கடலுக்கு அடியில் 6 முதல் 8 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வித்தி யாசமான படிவங்கள், பழங்கால பொருட்கள், பாறைகள், கிரானைட்டால் மனிதர்களால் செதுக்கப்பட்ட படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
அந்த இடம் மாமல்லபுரம் துறைமுகமாக இருந்ததா? அல்லது கோட்டை போன்ற அமைப்பா? என்பது பற்றி ஆய்வு முடிவுக்கு பிறகுதான் சொல்ல முடியும்.
ஆய்வுக்குப் பிறகு
முதல் கட்டமாக தற்பொழுது கடலுக்குள் சென்ற கடற்படை வீரர்கள் டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படங்களை எடுத்து வந்து உள்ளனர்.
தொல் பொருள் ஆய்வுத் துறையை பொறுத்த வரை எதை யும் பார்த்த உடன் அது எந்த காலத்தைச் சேர்ந்த கட்டிடம் என்பதை எல்லாம் தீர்மானிக்க முடியாது.
கடலுக்குள் இருக்கும் கற்களில் கடற்பாசிகள் சூழ்ந்து இருக்கின் றன. அதை எல்லாம் அப்புறப் படுத்தி முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் அவை எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரிய வரும்.
கலசம்
கடலுக்குள் அடியில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ள கோவில் இருக்கும் இடத்தை `மார்க்' செய்து உள்ளோம். கட லுக்குள் அந்த பகுதியில் இருந்து சிறிய கலசம், சிற்பம் செதுக்கிய கற்கள் போன்ற சிலவற்றை எடுத்து உள்ளோம். தொடர்ந்து தீவிர ஆராய்ச்சி செய்து வரு கிறோம்.
முதல் கட்ட கடல் அகழ் வாய்வுப் பணி 25_ந் தேதியுடன் முடிவடைந்து உள்ளது.
டெல்லியில் தொல்பொருள் ஆய்வு பற்றிய சர்வதேச மாநாடு வருகிற 17_ந் தேதி முதல் 19_ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற் கிறார்கள். அந்தமாநாட்டில் மாமல்லபுரம் ஆய்வு உள்ளிட்ட 24 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப் பிக்க உள்ளோம். அப்போது தற்பொழுது நடந்த ஆய்வு பற்றி கருத்து தெரிவிப்போம். அதன் பிறகு அடுத்த கட்ட ஆய்வுப் பணி அடுத்த மாதம் மீண்டும் தொடங்கி நடைபெறும்.
அரிய பொக்கிஷம்
கடலுக்குள் இருக்கும் பொருட் களை தற்பொழுது வெளியே எடுக்க மாட்டோம். ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும்.
`சுனாமி'க்கு பிறகுதான் ஆய்வுப் பணி தொடங்கி உள்ளது என்று கூறுவது சரியல்ல. ஏற்கனவே ஆய்வுப் பணி 2004_ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட் டது.
வருங்காலத்தில் மாமல்லபுரம் கடலுக்குள் அரிய வரலாற்று பொக்கிஷங்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த கட்டமாக அறிவியல் தொழில் நுட்ப உதவி மேற் கொள்ளப்படும். சாட்டிலைட் மூலம் நுண்ணிய புகைப்படங் கள் எடுக்கப்படும். அதனைக் கொண்டுஆராய்ச்சி மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அலோக் திரிபாதி கூறினார். ஆய்வுப் பணி நடந்த கப்பலில் அவர்கள் இந்த பேட்டியை அளித்தனர்.
|
|
|
| தமிழர் கட்சி எம்.பி.க்கள் ஆதரவு |
|
Posted by: aathipan - 02-26-2005, 08:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இலங்கை பாராளுமன்றத்தில்
அதிபர் சந்திரிகா கட்சி மெஜாரிட்டி இழந்தது
தமிழர் கட்சி எம்.பி.க்கள் ஆதரவு வாபஸ்
கொழும்பு, பிப்.26-
தமிழர் கட்சி எம்.பி.க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற தால் இலங்கை பாராளு மன்றத்தில் அதிபர் சந்திரிகா கட்சி மெஜாரிட்டி இழந்தது.
கூட்டணி கட்சி மிரட்டல்
இலங்கையில் அதிபர் சந்திரி காவின் இலங்கை விடுதலை கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த ராஜ பக்சே பிரதமராக இருக்கிறார்.
சந்திரிகாவுக்கு 39 எம்.பி.க் களை கொண்ட மார்சிஸ்டு மக்கள் விடுதலை முன்னணி, 8 எம்.பி.க்கள் கொண்ட சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தமிழர் கட்சி ஆகியவை ஆதரவு கொடுத்து வருகின்றன.
மார்சிஸ்டு மக்கள் விடுதலை முன்னணி விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த கட்சி சமீபத்தில் அதிபர் சந்திரிகாவுக்கு மிரட்டல் விடுத் தது. விடுதலைப்புலிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கி ஒப் பந்தம் செய்ய கூடாது. அப்படி ஒப்பந்தம் செய்தால் ஆளுங் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அறிவித்தது.
தமிழர் கட்சி விலகல்
இந்த மிரட்டலை தொடர்ந்து ஆளும் கூட்டணியில் பிளவு ஏற் பட்டது. தமிழர் கட்சி (சிலோன் தொழிலாளர் காங்கிரஸ்) ஆளுங் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றது.
இந்த தகவலை தமிழர் கட்சி யின் மூத்த எம்.பி.யான ஆர். யோகராஜன் நேற்று அறிவித் தார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி வரிசையில்...
``சந்திரிகா அரசில் இருந்து நாங்கள் விலகி விட்டோம். பாராளுமன்றத்தில் எங்கள் கட்சி எம்.பி.க்கள் 8 பேரும் எதிர்க்கட்சி வரிசையில் அமருவார்கள். சில முக்கிய வாக்குறுதிகளையும், திட்டங்களையும் அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெஜாரிட்டியை இழநëதது
இலங்கை பாராளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் 225 ஆகும். ஆளுங்கட்சிக்கு 119 எம்.பி.க்கள் ஆதரவு இருந்து வந்தது. தமிழர் கட்சி எம்.பி.க்கள் 8 பேரும் ஆதரவை வாபஸ் பெற்று விட்டதால் ஆளுங்கட்சி பலம் 111 ஆக குறைந்து விட்டது.
ஆகவே அதிபர் சந்திரிகாவின் கட்சி மெஜாரிட்டியை இழநëது விட்டது. ஆட்சிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுடன் சுமூக மாக பேச்சு நடத்தி இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் தான் சந்திரிகா அரசுக்கு தமிழர் கட்சி ஆதரவை கொடுத்து வந் தது. அந்த முயற்சிக்கு இடைïறு ஏற்பட்டுள்ளதால் தமிழர் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தெரிய வருகிறது.
பங்கு மார்க்கெட் சரிவு
இந்த அரசியல் நெருக்கடி எதிரொலியாக இலங்கை பங்கு மார்க்கெட்டில் 0.2 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
லூ ஈஹகூஙீட் பகுஹஙூஞ்குகூ 1999.
|
|
|
| ¾¢¨ÃôÀ¼òШÈ¢ÉÕìÌ ´Õ §ÅñΧ¸¡û! |
|
Posted by: hari - 02-26-2005, 06:47 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (2)
|
 |
<span style='color:red'>¾¢¨ÃôÀ¼òШÈ¢ÉÕìÌ ´Õ §ÅñΧ¸¡û!</span>
¾Á¢úò¾¢¨ÃôÀ¼í¸ÙìÌò ¾Á¢Æ¢ø ¦ÀÂ÷¸¨Çî Ýð¼ §ÅñÎõ ±ýÚ ¼¡ì¼÷ þáÁ¾¡Í «Å÷¸Ùõ ¾¢ÕÁ¡ÅÇÅÛõ ÜÚÅÐ ¦Áò¾ô ÀÊò¾ º¢Ä §Á¾¡Å¢¸Ç¢ý ¯ûÇò¾¢ø ±Ã¢îº¨Ä °ðÊ¢ÕôÀ§¾¡Î «ùÅ¡Ú ÜÚõ «Å÷¸¨Çô À¡÷òÐì §¸Ä¢Ôõ ¸¢ñ¼Öõ ¦ºö¸¢ýÈ ¿¢¨Ä ¦¾¡¼Õ¸¢ýÈÐ. ¡÷ ÜÚ¸¢È¡÷¸û ±ýÀ¨¾ Å¢ðÎÅ¢ðÎ, ±ýÉ ÜÚ¸¢ýÈ¡÷¸û ±ýÀ¨¾ ÁðÎõ ºüÚì Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø «¾¢ø Ò¨¾óÐûÇ ¯ñ¨Á ¿¢¨Ä Òâ ÅÕõ. ¼¡ì¼÷ þáÁ¾¡Í ÁüÚõ ¾¢ÕÁ¡ÅÇÅÛìÌ ¬¾ÃÅ¡¸ ¿¡ý ±ØÐž¡¸ ¿¢¨É측Áø ¯ñ¨Á¢§Ä§Â ¾Á¢ú¦Á¡Æ¢ Á£Ð ÀüÚûÇÅ÷¸û º¢ó¾¢òÐô À¡÷ì¸ §ÅñÎõ. ¯Ä¸¢ý ¦¾¡ý¨ÁÂ¡É «Õ¨ÁÂ¡É þÉ¢¨ÁÂ¡É ¦ºõ¦Á¡Æ¢Â¡É ¿õ ¾Á¢ú¦Á¡Æ¢ ¾¢¨ÃôÀ¼í¸Ç¢ø ÀÎõÀ¡ð¨¼ì ¦¸¡ïºõ ¿¢¨ÉòÐôÀ¡Õí¸û. ¦Á¡Æ¢§Â ¦¾Ã¢Â¡¾ ż¿¡ð¼Å÷¸Ç¢ý 𢸠þÕóÐ À¡¼ø¸Ç¡¸ô ÒÈôÀðÎ ÅÕõ ¾Á¢ú¡ü¸Ç¢É ¿¢¨Ä¨Â ¿¢¨Éò¾¡ø þÃò¾ì¸ñ½£§Ã ÅÕ¸¢ýÈÐ.
«ñ¨Á¢ø, ¦ºý¨É ¦ºýÚ þÕó¾ô§À¡Ð, º¢üȨÄ¢ø ´Ä¢ôÀÃôÀÎõ º¢Ä ¾É¢Â¡÷ Å¡¦É¡Ä¢¸Ç¢ý ¾Á¢ú ´Ä¢ÀÃô¨Àì §¸ðÎÅ¢ðÎ «ö§Â¡ ¿õ ¦ºó¾Á¢Øì¸¡ þó¾ì ¸¾¢ ±ýÚ ¯ûÇõ ÐÊò¾Ð. ´Õ ¦Àñ «È¢Å¢ôÀ¡Ç÷ ¾Á¢ú¦Á¡Æ¢¨Âì ¸ÊòÐò ÐôÀ¢ì¦¸¡ñÊÕó¾¡÷. §ÅÚ ´Õ ¿¡¼¡¸ þÕ󾡸 ¦Á¡Æ¢¨Âò ¸ÊòÐò ÐôÒõ «Åâý Ó¸ò¾¢ø ¸¡Ã¢ ±îº¨Ä ¯Á¢úóÐ þÕôÀ¡÷¸û. ¬É¡ø ¾Á¢Æý «¨¾ þú¢òÐì §¸ðÎ Á¸¢ú¸¢ýÈ¡ý. þôÀÊ Áì¸Ç¢¼õ Å¢¨ÃóÐ ¦ºøÖõ ¾¸Åø °¼¸í¸Ç¢ý š¢ġ¸ ¾Á¢ú¦Á¡Æ¢ º¢¨¾ì¸ôÀθ¢ýÈÐ, ¯Õį̀Äì¸ôÀθ¢ýÈÐ. þÐ ¸ñÊôÀ¡¸ ¿õ¦Á¡Æ¢ìÌ ±¾¢Ã¡¸ §Áü¦¸¡ûÇôÀÎõ Ìûǿ⠧ŨġÌõ. þо¡ý þý¨È ¯ñ¨ÁÂ¡É ¿¢¨Ä.
þÃñ¼¡Â¢Ãõ ¬ñθÙìÌ Óý§À º¢Èó¾ þÄ츢 þÄ츽ò¨¾ ¾ýɸò§¾ ¦¸¡ñ¼ ¯Â÷ ¾É¢î¦ºõ¦Á¡Æ¢Â¡É ¾Á¢ú¦Á¡Æ¢Â¢ý «Õ¨Á ¦ÀÕ¨Á¨Âò ¾¢ð¼Á¢ðÎ «Æ¢ì¸, º¢¨¾ì¸ ´Õ Üð¼õ ÓüÀθ¢ýÈÐ. «¨¾ ¡÷ ¾ðÊì §¸ðÀÐ? ¡÷ â¨ÉìÌ Á½¢ ¸ðÎÅÐ? ¾¢Õ.þáÁ¾¡Í ÁüÚõ ¾¢Õ.¾¢ÕÁ¡ÅÇÅý þó¾ôÀ½¢Â¢ø þÈí¸¢Â¢ÕôÀÐ À¡Ã¡ðÎìÌâÂÐ. «Å÷¸Ç¢ý þÂÖìÌ ¯û§¿¡ì¸õ þÕôÀ¾¡¸ô ÀÄ÷ ºó§¾¸¢òРŢÁ÷º¢ì¸¢ýÈÉ÷. ¯û§¿¡ì¸õ ±ÐÅ¡¸ þÕ󾡸 ¿ÁìÌ ±ýÉ? ¿õ ¾Á¢ú¦Á¡Æ¢ À¡Ð¸¡ì¸ôÀθ¢ýȾ¡ þø¨Ä¡? ±ô§À¡Ðõ ±ó¾î¦ºÂ¨ÄÔõ ÌüÈõÌ¨È ÜÈ¢ Å¢Á÷º¢ìÌõ ´Õ Üð¼õ þÕóЦ¸¡ñξ¡ý þÕìÌõ. þô§À¡Ð ¼¡ì¼÷ þáÁ¾¡Í «Å÷¸¨ÇÔõ ¾¢ÕÁ¡ÅÇŨÉÔõ Ì¨È ÜÚ¸¢ýÈÐ. þ¨¾ ²ý «Å÷¸Ç¢ý Á¢Ãð¼Ä¡¸ ±ÎòÐì ¦¸¡ñΠŢÁ÷º¢ì¸ §ÅñÎõ. ¾Á¢ú ¬÷ÅÄ÷¸û Å¢ÎìÌõ §ÅñΧ¸¡Ç¡¸ ²ý ¾¢¨ÃôÀ¼òШÈ¢É÷ ±ÎòÐ즸¡ûÇì ܼ¡Ð?
¾Á¢úò¾¢¨ÃôÀ¼í¸ÙìÌ ¾Á¢Æ¢ø ¦ÀÂ÷ ¨Åò¾¡ø¾¡ý ±ýÉ? ¯í¸û ÌÊ¡ ãú¸¢Å¢Îõ. ¾Á¢Æ¢ø ¦ÀÂ÷ ¨Åò¾¡ø À¼õ µ¼¡¾¡ ±ýÉ? ¬í¸¢Äò¾¢ø ¦ÀÂ÷ ¨Åò¾¡ø¾¡ý À¼õ µÎÁ¡? ¿£í¸û ±ýÉ ¬í¸¢ÄôÀ¼Á¡ ±Î츢ȣ÷¸û? º¢É¢Á¡ þÂìÌ¿÷ Ýâ¡ §À¡ýÈÅ÷¸ÙìÌô À½õ¾¡ý Ó츢Âõ. þŨÃô §À¡ýÈ Å츢ÃôÒò¾¢ ¦¸¡ñ¼ º¢É¢Á¡ þÂìÌ¿÷¸û ÀÄ÷ À¡ÖÈ×ì ¸¡ðº¢¸¨Çî º¢ò¾Ã¢ìÌõ ¸¨¾¸¨Ç ¨ÁÂÁ¡¸ ¨ÅòÐ ¾¢¨ÃôÀ¼í¸û ±ÎòÐ, À½õ Àñ½ò ÐÊìÌõ ÁÄ¢Å¡É "Áïºû" Ţ¡À¡Ã¢¸Ç¡¸ Å¢Çí̸¢È¡÷¸û. ´Õ ¾¢¨ÃôÀ¼ò¾¢ý ¦À¨Ãô À¡Õí¸û À¢.±ô. Áü¦È¡Õ ¾¢¨ÃôÀ¼ò¾¢ý ¦ÀÂ÷ Ã¡Š¸ø. §ÅÚ ¦ÀÂ÷¸§Ç þÅ÷¸ÙìÌì ¸¢¨¼ì¸Å¢ø¨Ä¡? Áð¼Á¡É ÁÄ¢Å¡É Áïºû ¾¢¨ÃôÀ¼í¸û þ¨Ç»÷¸Ç¢ý ¯ûÇò¨¾ì ̨ÄòÐ, ¾£ÂÅÆ¢¸Ç¢ø «¨ÆòÐî ¦ºøÖõ ŸčÁ À¨¼ò¾Ð.
¯Ä¸ò¾¢§Ä§Â º¢É¢Á¡ ¿Ê¸÷¸û Á£Ð ¾£Å¢ÃÁ¡É ÀüÚ즸¡ñÎ «Å÷¸¨Çò ¾í¸Ç¢ý ¸¼×Ç¡¸ ¿¢¨ÉìÌõ Á¨¼Â÷¸û ¡÷ ±ýÚ À¡÷ò¾¡ø ¾Á¢Æ÷¸ÙìÌò¾¡ý «ó¾ô ¦ÀÕ¨ÁÔõ Ò¸Øõ §À¡öÕõ. «ó¾Ç×ìÌì ¸¨Ä¨ÂÔõ ¸¨Ä»÷¸¨ÇÔõ §¿º¢ôÀÅ÷¸û ¿õ Áì¸û. ÌŠÒ ÁüÚõ Å¢ƒÂ¸¡óò §À¡ýÈ ¿Ê¨¸ ¿Ê¸÷¸ÙìÌì §¸¡Â¢ø ¸ðÊ þÇ¢îºÅ¡Âý ¾Á¢Æý. ¿Ê¸÷ Å¢ƒö ¿Êò¾ ´ÕÒ¾¢ÂÀ¼ò¨¾ Ó¾ø¿¡§Ç À¡÷ì¸ ÓÊÂÅ¢ø¨Ä§Â ±ýÚ ¾ü¦¸¡¨Ä§Â ¦ºöЦ¸¡û¸¢ýÈ¡ý ´Õ þ¨Ç»ý. þôÀÊ ´Õ ÀÂí¸ÃÁ¡É ¾¡ì¸ò¨¾ ¯ÕÅ¡ìÌõ ºì¾¢Â¡¸, ²ý ¾Á¢Æ¸ò¾¢ý ¬ðº¢ Á¡üÈòÐ째 ¸¡Ã½Á¡¸ Å¢ÇíÌõ ´Õ ºì¾¢Â¡¸, ¾Á¢ÆÉ¢ý «ýÈ¡¼ Å¡úÅ¢ø ¾Å¢÷ì¸ ÓÊ¡¾ ´Õ ÅÄ¢¨ÁÂ¡É ºì¾¢Â¡¸ò ¾¢¨ÃôÀ¼òÐ¨È ¯ÕÅ¡¸¢ÔûÇÐ ±ýÀÐ ¯ûÇí¨¸ ¦¿øÄ¢ì¸É¢.
´Õ ¸¡Äò¾¢ø ¾¢¨ÃôÀ¼í¸û ÅÆ¢Â¡¸§Å ¾Á¢¨Æ ÅÇ÷ò¾ ¿¢¨ÄÔõ ¯ñÎ. þýÚ ¾Á¢ú¦Á¡Æ¢Â¢ý º¢¨¾×ìÌì ¸¡Ã½Á¡¸ Å¢Çí¸¢ ÅÕ¸¢ýÈÐ. þôÀÊî º¢É¢Á¡ ´Õ Ó츢 ¾¸Åø °¼¸Á¡¸ Å¢ÇíÌõ§À¡Ð «¾¢ø ¾Á¢ú ¬÷ÅÄ÷¸û ¸ÅÉõ ¦ºÖòÐÅÐ Ó츢ÂÁ¡É ¾Å¢÷ì¸ ÓÊ¡¾ ´ýÚ¾¡ý. ¯¼ÉÊ §¾¨ÅÔõ ܼ. º¢É¢Á¡ ÁðÎõ þøÄ¡Áø Å¡¦É¡Ä¢, ¦¾¡¨Ä측ðº¢, ¿¡Ç¢¾ú¸û §À¡ýÈ «¨ÉòÐò ¾¸Åø °¼¸í¸Ùõ ¾ü§À¡Ð ¾Á¢ú¦Á¡Æ¢ º¢¨¾×ì̸ ¸¡Ã½Á¡¸ Å¢Çí̸¢ýÈÉ.
¿Ê¸÷ ¸ÁĆ¡ºý, ¾Á¢ú¦Á¡Æ¢ôÀüÚ ¯¨¼ÂÅ÷ ±ýÀ¾¢ø ¡ÕìÌõ ±ó¾îºó§¾¸Óõ þø¨Ä. ÓýÒ ºñÊÂ÷ ŢŸ¡Ãò¾¢ø À¡¾¢ì¸ôÀ𼾡ø «ÅÕìÌ ¾ü§À¡Ð º¢Éõ ÅÕÅÐ þÂøÒ¾¡ý. ¬É¡ø, ¾Á¢Øì¸¡¸ þó¾ Ó¨È «Å÷ ¾ý ¾¢¨ÃôÀ¼ò¾¢ý ¦À¨à Á¡üȢ즸¡ûÇ ÓýÅà §ÅñÎõ. ÓýÒ ãýÈ¡ó¾Ã «Ãº¢ÂøÅ¡¾¢¸Ù측¸ò ¾ý À¼ò¾¢ý ¦À¨à Á¡üȢ ¿£í¸û ¾üºÁÂõ ¿õ ¾¡ö¾Á¢Øì¸¡¸ô ¦À¨à Á¡üÈ¢ ¨Åò¾¡ø «¾¢ø ´ýÚõ ¾ôÒ þø¨Ä. ¼¡ì¼÷ þáÁ¾¡Í ÁüÚõ ¾¢ÕÁ¡ÅÇÅý ±ýÚ À¡÷측Áø, ¿õ ¦Á¡Æ¢ì¸¡¸ ¿£í¸û þ¨¾î ¦ºö¾ø §ÅñÎõ. ¯í¸¨Çô À¡÷òÐ ÁüÈÅ÷¸Ùõ «ùÅ¡§È ¦ºöÅ¡÷¸§Ç¡ɡø, «Ð ¿õ ¾Á¢ØìÌì ¸¢¨¼ò¾ ¦ÅüȢ¡¸§Å þÕìÌõ. ¾Á¢ú¦Á¡Æ¢ Á£Ð ¯ñ¨Á¢§Ä§Â ÀüÚ ¨Åò¾¢ÕìÌõ ¾¢Õ. ¸Áø «Å÷¸û þó¾ §ÅñΧ¸¡¨Çô Àâº£Ä¢ì¸ §ÅñÎõ. §ÁÖõ ¾¢¨ÃôÀ¼òШÈ¢É÷ Ţ¡À¡Ã §¿¡ì¸ò¾¢§Ä§Â þÕ측Áø ºüÚî ºÓ¾¡Âô ¦À¡Úô¨ÀÔõ ¸ÅÉò¾¢ø ¦¸¡ñÎ ¦ºÂøÀ¼ §ÅñÎõ. ¸¨Ä, ¸¨Ä측¸ ÁðÎÁøÄ! ¸¨Ä ºÓ¾¡Â §º¨ÅìÌõ ±ýÈ ¿¢¨Ä¨Â ¿£í¸û ¯½÷óÐ ¦ºÂøÀ¼ §ÅñÎõ.
நன்றி
-«ìÉ¢ôÒò¾¢Ãý.( agniputhiran@yahoo.com )
|
|
|
|