| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 478 online users. » 0 Member(s) | 476 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| Re. Tsunami Relief in Sri Lanka |
|
Posted by: eelapirean - 02-25-2005, 05:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
Dear Friends,
We are facing a very sad and serious development. Sri
Lankan government's actions in the aftermath of
Tsunami disaster has take a turn for the worse.
It is now preventing all relief efforts to the Tamil
speaking Northeastern province. There are more than 50
containers of relief goods for Northeast being held in
Colombo customs. This includes shipments from TRO USA.
Sri Lankan government is asking $10,000 in duty or tax
for each container load of relief goods containing
mostly food, medicine and clothing.
Tamils Rehabilitation Organization has asked its
affiliate organizations abroad and well wishers to
hold back shipments to Colombo until this problem is
resolved.
Write or call your representatives
(congressman/senator) urging them to contact the Sri
Lankan ambassador and to put a stop to the
discrimination in Tsunami relief to tamil speaking
people.
A sample letter is attached below for you to modify
and send or have some idea on what should be done.
Please act immediately to this urgent appeal.
Thank You.
------------------------------
Sample Letter
(date)
The Honorable..............................
House of Representatives
Washington, DC 20515
Re. Tsunami Relief in Sri Lanka
Dear Sen./Rep. …
I am writing to you with deep concerns about the post
Tsunami relief efforts in Sri Lanka. The Sri Lankan
Government is preventing any substantial help from
reaching the Northeast where two thirds of the
casualties and damage occured. Please assure that US
and international assistance for reconstruction is
equitably distributed to the survivors, particularly
funds in the supplemental spending bill now before
Congress.
The government has failed to provide timely assistance
to the northeast, focusing its efforts on the southern
part of the island instead. Government officials and
the armed forces have virtually blocked aid from
reaching the Northeast, going so far as to pirate
lorry loads of privately-rendered relief supplies.
In efforts to divert attention from the northeast, the
Government did not allow either UN Secretary General
Kofi Annan or World Bank President James Wolfenson to
visit nrtheastern Sri Lanka.
Over 50 containers of urgently needed relief supplies
that were sent for Tsunami victims of the Northeast
have been sitting idle in customs in Colombo for well
over one month because of the obstructionist attitude
of the Sri Lankan Government. These containers hold
tents, medicines, food, and clothing that were donated
by an unprecedented outpour of sympathy and
overwhelming response from Americans and others for a
very deserving humanitarian cause.
The new ruse to obstruct assistance are taxes on
humanitarian relief being sent from abroad.
The Tamils Rehabilitation Organization (TRO) is the
only effective Sri Lankan NGO working in the
NorthEastern Province. TRO Colombo has asked all its
well wishers in the USA, UK, Europe and Australia to
hold back shipping supplies until the present policy
of the Sri Lankan Government is reversed.
In addition, a joint mechanism for the equitable
distribution of international assistance needs to be
speedily agreed on between the Sri Lankan Government
and the Liberation Tigers of Tamil Eelam, who hold
substantial sections of the Northeast.
As an expatriate from Sri Lanka, I am anxious to help
my kith and kin way back in Sri Lanka and would urge
you to use your good offices to speak to the Sri
Lankan Ambassador and remedy the situation.
Yours respectfully,
__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com
|
|
|
| உந்துருளி செலுத்துனருக்கு தமிழீழ காவல்த்துறை விடுக்கும் வேண் |
|
Posted by: Mathuran - 02-25-2005, 04:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தமிழீழ காவல்துறையின் வாகனப் போக்குவரத்துப்பிரிவினர் மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கான வேண்டுகோள்களை விடுத்துள்ளனர்.
அண்மைக்காலத்தில் எமது கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் கூடுதலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகளின் கவலையீனத்தாலும் வேகத்தினாலும் வீதிகள் அகலம் குறைவின் காரணத்தாலும் இடம்பெற்று வருகின்றன.
இவ் விபத்துக்கள் நடப்பதற்கு காரணம் மோட்டார் சைக்கிள் சாரதிகள் வீதியின் விதிமுறைகளை பின்பற்றாது சாரத்தியம் செய்வதே ஆகும். இவ் விபத்துக்களை தடுப்பதற்கு மோட்டார் சைக்கிள் சாரதிகள் வீதியின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும்.
வீதியின் விதிமுறையெனக் கூறும்போது மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது வீதியின் இடதுபக்கமாக செலுத்துதல் வேண்டும். ஒரு வாகனத்தை முந்திச் செல்லும்போது வலது பக்கமாக முந்திச் செல்லுதல் வேண்டும். இதேபோன்று இடது பக்கமாக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தாங்கள் வீதியின் தார் விளிம்பில் இருந்து மூன்று அடிக்குள் செலுத்துதல் வேண்டும். வீதியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தும்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பக்கம் பக்கமாகச் செல்வதை தவிர்த்தல் வேண்டும். மோட்டார் சைக்கிளை வீதியில் செலுத்தும்போது ஒடிக்கொண்டிருக்கும் இன்னொரு மோட்டார் சைக்கிளில் பிடித்துக் கொண்டு செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
நீங்கள் வீதியில் மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாது நடுவீதியால் செல்வதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களை சந்திகளில் பாதசாரதி கடைவைகளில் வளைவு நெளிவான இடங்களில் முந்திச்செல்வதை தவிர்த்தல் வேண்டும். நீங்கள் மோட்டார் சைக்கிளில் கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நுழையும்போது மோட்டார் சைக்கிளை கிளை வீதியில் நிறுத்தி பிரதான வீதியின் வலதுபக்கமும் பார்த்துää பின் இடது பக்கமும் பார்த்து திருப்பவும். வலதுபக்கம் பார்த்து வலது பக்கங்களில் இருந்து வரும் வாகனங்களையும் இடது பக்கங்களில் இருந்துவரும் வாகனங்களையும் செல்ல அனுமதித்த பின் மோட்டார் சைக்கிளை பிரதான வீதிக்குள் இடையூறு இன்றி வீதியின் விதிமுறைகளுக்கேற்ப செலுத்துதல் வேண்டும். நீங்கள் மோட்டார் சைக்கிளில் பிரதான வீதியால் சென்று கிளை வீதிக்கோ அல்லது கிளை வீதியிருந்து பிரதான வீதிக்கோ செல்லும்போது திசைக்கேற்ப நூறு அடிக்கு முன் சைகையை (லைற்சைகைää கைச்சைகை) தெளிவாக காட்டுதல் வேண்டும்.
இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது முன்பக்கத்தில் வெள்ளை நிற (முகப்பு வெளிச்சம்) வெளிச்சத்தையும் பின்பக்கத்தில் சிவப்புநிற வெளிச்சத்தையும் அல்;லது சிவப்பு நிற தெறிகல்லையும் பாவித்தல் வேண்டும். வெளிச்சமின்றி செலுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.
மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது முறையான கட்டுப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் பொருட்களை ஏற்றிச்செல்வதை தவிர்த்தல் வேண்டும்.
மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் அதற்கு மேற்பட்டோரை ஏற்றிச்செல்வதை தவிர்த்தல் வேண்;டும்.
மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது வீதியில் தேவையற்ற பொருட்கள் மீது தாங்கள் பார்வையை செலுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மென்நிற ஆடை அணித்திருத்தல் வேண்டும்.
மோட்டார் சைக்கிள் வீதியில் செலுத்தும்போது வீதியில் பணிக்கப்பட்ட வேகத்தை கடைப்பிடித்து செலுத்துதல் வேண்டும்.
நீங்கள் பிரதான வீதியில் இருந்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் வரும் வீதிக்கு திரும்புவதற்காக இருந்தால் உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வரும் வாகனங்கள் நேராகச்செல்லுமானால் அதற்கு வழிவிட வேண்டும்.
மோட்டார் சைக்கிளை வீதியில் செலுத்தும்போது மதுபோதையில் செலுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
வீதியில் மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கு முன் மோட்டார் சைக்கிளின் பொறிமுறைகள் விளக்குகள் டயர்ää தடுப்புக்கள்ää ஒலிக்கருவிகள் என்பன சரியான முறையில் உள்ளதா என உறுதிப்படுத்துங்கள் இவற்றைக்கடைப்பிடித்து வீதி விபத்திலிருந்து உயிர் இழப்புக்களையும் உடமை இழப்புக்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு தமிழீழ காவல்துறையின் வாகனப்போக்குவரத்து பிரிவுப்பொறுப்பாளர் கேட்டுள்ளார்.
நன்றி புதினம்
|
|
|
| பாராளுமன்றத்தில் தமிழில் கவிதை பாடிய ஜனாதிபதி |
|
Posted by: Vaanampaadi - 02-25-2005, 01:41 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
பாராளுமன்றத்தில் தமிழில் கவிதை பாடிய ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி அப்துல்கலாம் "நாம் எங்கு இருக்கிறோம்," என்ற தலைப் பில் தமிழில் ஒரு கவிதை வாசித்தார். இன்று காலை தான் அந்த கவிதையை எழுதி யதாக கூறிய அவர் அதை நிதானமாக வாசித்துக் காட்டினார். அந்த கவிதை வருமாறு:-
எங்கிருக்கிறோம் நாம்,
என்னருமை நண்பர்களே,
இந்திய மக்களின்
இதயவொலி அழைப்பிற்கு,
வரலாற்று வடிவம் தரும்
மகாசபையில்
இருக்கின்றோம்.
மக்கள் நமை கேட்கிறார்கள்.
மக்கள் நமை கேட்கிறார்கள்;
"பாராளுமன்றத்து பாரதத் தாய் சிற்பிகளே,
எங்களது வாழ்விற்கு வளங் கொடுங்கள், ஒளி கொடுங்கள்.
உங்களது நல்லுழைப்பே,
எங்களுக்கு ஒளிவிளக்கு
உயர்ந்திடலாம் நாமெல்லாம்,
உண்மையிலே நீவிர்
உழைத்தால்"
அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழியே.
வளருங்கள் எண்ணத்தில். உயருங்கள் செயலில் நீர்.
வாய்மை முறை உங்களுக்கு,
வழித்துணையாய் ஆகட்டும்.
நீவிர் எல்லோரும் வாழ்க! இறைகருணையால் என் றென்றும்.
Maalaimalr
|
|
|
| யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம் |
|
Posted by: Vaanampaadi - 02-25-2005, 12:19 PM - Forum: நகைச்சுவை
- Replies (16)
|
 |
பிப்ரவரி 25, 2005
யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம்
குருவாயூர்:
தன்னால் தானமாகத் தரப்பட்ட யானை குருவாயூரில் நடந்த யானைகள் ஓட்டப் பந்தயத்தில், வெற்றி பெற்றதைப் பாராட்டி ¬முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இத் தகவலை குருவாயூர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.
அதில், யானை கிருஷ்ணாவுக்கு பாராட்டும், வாழ்த்துக்களையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Thatstamil
|
|
|
| விவாகரத்து பிரித்த மெழுகுச்சிலை |
|
Posted by: Vaanampaadi - 02-25-2005, 12:10 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
விவாகரத்து பிரித்த மெழுகுச்சிலை
லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மிïசியத்தில் ஆலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் பிராட்பிட், அவர் மனைவியும் டி.வி. நடிகையுமான ஜெனீபர் அனிசன் ஆகியோர் ஜோடி யாக நிற்பது போல மெழுகுச்சிலை வைக்கப்பட்டு இருந்தது.
2000_ம் ஆண்டு இவர்கள் திரு மணம் செய்து கொண்டனர். 2004_ம் ஆண்டு இவர்களுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டது. ஆனால் இப் போது இந்த ஜோடி பிரிந்துவிட்டது.
மிïசியத்தில் ஜோடியாக இருக் கும் சிலையையும் பிரிக்க வேண்டும் என்று மியுசிய சிலை வடிப்பாளர்கள் வற்புறுத்தப்பட்டனர். இதனால் சிலை பிரிக்கப்பட்டது.
ஒருவர் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு இருப்பது போல சிலை வடிவமைக்கப்பட்டு இருந்ததால், சிலையைப் பிரிக்க நிறைய நேரமும், நிறையச் செலவும் ஆனதாக மிïசிய நிர்வாகிகள் கூறினர்.
Dailythanthi
|
|
|
| இலங்கையில் ஆளும் கூட்டணி மெஜாரிட்டி இழப்பு |
|
Posted by: Vaanampaadi - 02-25-2005, 12:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
பிப்ரவரி 25, 2005
தமிழர் கட்சி ஆதரவு வாபஸ்: இலங்கையில் ஆளும் கூட்டணி மெஜாரிட்டி இழப்பு
கொழும்பு:
இலங்கையில் ஆட்சியில் உள்ள அதிபர் சந்திரிகாவின் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தமிழர் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது. இதனால் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இத் தகவலை அக் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ஆர்.யோகராஜன் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.பிக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறுகையில், கூட்டணியில் இருந்து நாங்கள் விலகிவிட்டோம். எங்களுக்குத் தந்த சில உறுதிமொழிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. இதனால் ஆதரவை வாபஸ் பெற்றோம் என்றார்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 எம்பிக்களில் இப்போது சந்திரிகாவின் கூட்டணிக்கு வெறும் 111 உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது. இதனால் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது.
தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவால் வென்று வரும் காங்கிரஸ் கட்சி, புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை சந்திரிகா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் கூட்டணியில் இடம் பெற்றது.
புலிகளுடன் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டால் ஆளும் கூட்டணியை விட்டு விலகுவோம் என இலங்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கூட்டணியில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thatstamil
|
|
|
| ஒட்டுப் படை உத்தியை ஒட்டக் கைவிடுங்கள்! |
|
Posted by: Vaanampaadi - 02-25-2005, 09:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
[size=18]ஆசிரியர் தலையங்கம் (24.02.2005 உதயன்)
ஒட்டுப் படை உத்தியை
ஒட்டக் கைவிடுங்கள்!
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான யுத்த நிறுத்த ஏற்பாடு மிகுந்த ஆபத்தான கட்டத்தை அடைந்திருக் கின்றது என ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருவர் சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இரண்டு தசாப்த காலகொடூர யுத்தத்துக்கு, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான யுத்த நிறுத்தமே தற்காலிகமாகவேனும் முடிவு கட்டியது.
யுத்தத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் சார்பில் தலைவர் வே.பிரபாகரனும், அரசின் சார்பில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டனர்.
அவர்கள் இருவரின் சார்பிலேயுமே இப்போது அந்த யுத்தநிறுத்த ஏற்பாடு ஆபத்துக்குள்ளாகியி ருக்கின்றது என்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக் கின்றது.
யுத்தநிறுத்த உடன்பாடு ஆபத்தான கட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளது என எச்சரித்திருக்கும் முன் னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலை வருமான ரணில்விக்கிரமசிங்க, வேறு உள்நோக்கம் கொண்ட தரப்புகள் யுத்தத்துக்குப் போகவே முயலு கின்றன என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
இதேபோன்று, இந்த உடன்பாட்டில் ஒப்பமிட்ட மற்றையவரான புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சார்பில் புலிகள் இயக்க அரசியல்துறைப் பொறுப் பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்தநிறுத்தம் முறியும் ஆபத்தில் இருப்பது பற்றிய முன்னெச்சரிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
மமஇலங்கையில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் அதன் படைத்தரப்பு புதிய, புதிய ஆயுதக் குழுக்களை உரு வாக்கி, படைத்தரப்பும் அவர்களோடு இணைந்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் தேசப்பற்றா ளர்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் ஒரு மறைமுக யுத் தத்தைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றது.
மமஇப்போக்குத் தொடருமானால் அமைதிச் சூழல், சமாதான நிலைமை, யுத்தநிறுத்த ஏற்பாடு - எல்லாமே தகர்த்தெறியப்பட்டு விடும்டுடு இவ்வாறு அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
யுத்த நிறுத்த உடன்பாடு ஆபத்தான கட்டங்களைத் தாண்டித் தாண்டி, மேலும் மேலும் மிக ஆபத்தான கட்டங்களுக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது என்பதையும் செய்தியாளர்களுக்கு எடுத்து விளக்கியி ருக்கின்றார் தமிழ்ச்செல்வன்.
யுத்த நிறுத்த ஏற்பாடுகள் மீறப்படுவது மட்டுமல்ல, புலிகள் அமைப்பின் மீது ஒரு மறைமுகப் போரே தொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் புலிகள் சுட்டிக் காட்டியிருப்பது விசேடமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கடந்த ஏப்ரலில் கருணா என்ற தற்குறி, தமிழர் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் காக்கை வன்னியனாக மாறியபோது அந்தக் கும்பலை வைத்துக்கொண்டு தமிழ்ப் போராளிகள் மீது - யுத்த நிறுத்த காலத்தில் - ஓர் இருள் யுத்தம் நடத்தப்பட்டது.
இருளில் தாக்கியவர்களைப் புலிகள் அம்பலத் துக்கு - வெளிச்சத்துக்கு - கொண்டு வந்ததும் கருணா கும்பலின் பெயரிலான அட்டகாசம் ஓய்ந்தது.
இப்போது மீண்டும் மறைமுக யுத்தம் ஆரம்பிக் கப்பட்டிருப்பதையும், அதன் பின்னணி யார் என்பதை யும் தமிழ்ச்செல்வன் அம்பலப்படுத்தியிருக்கின்றார்.
மமவிடுதலைப் புலிகள் இவ்விடயத்தில் உச்சப் பொறு மையைக் கடைப்பிடிக்கின்றார்கள். புலிகளைக் கோப மூட்டித் தூண்டும் - சீண்டும் - நடவடிக்கைகள் கட்ட விழ்த்து விடப்படுகின்ற போதிலும், யுத்தநிறுத்தத்தைப் பூரணமாகக் கடைப்பிடிக்கும் முழு அர்ப்பணிப்புடன் புலிகள் பொறுமை பேணுகின்றார்கள். தொடர்ந்து இந் தப் பொறுமை எவ்வளவு தூரத்துக்கு - காலத்துக்கு - தாக்குப்பிடிக்கும் என்பதை எம்மால் இப்போது கூற முடியாது. அந்தப் பொறுமையின் எல்லையைக் கடக்க வைக்கும் சம்பவங்கள் தான் இப்போது நடந்தேறிக் கொண்டிருக்கின்றனடுடு என்று தமிழ்ச்செல்வன் சுட்டிக் காட்டியிருப்பது அமைதி விரும்பிகள் ஈண்டு கவனிக்க வேண்டிய விடயமாகும்.
தமிழர் தாயகத்தில் ஒட்டுப்படைகளை - சமூக விரோ தக்கும்பல்களை - துரோகக்குழுக்களை - வைத்துக் கொண்டு புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, அவர்களைச்சீண்டும் போக்குத் தொடர்கின்றது.
யுத்தநிறுத்த உடன்பாட்டின்படி இக்குழுக்கள் எல் லாம் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கிலிருந்து அப் புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த நடவடிக் கையை நிறைவேற்றும் பொறுப்பு ஒப்பந்தப் படி முற்று முழுதாக அரசுத்தரப்பையே சேர்ந்தது.
அதைச்சரிவரச் செய்யாமல், புலிகள் மீதான தாக்கு தல்களை அடுத்து ஏதோ ஒரு குழு மீது பொறுப்பைச் சுமத்திக்கொண்டு அரசு தனது கையை விரிப்பது ஏற் றுக்கொள்ளக் கூடியதல்ல.
அதேபோக்குத் தொடர்ந்தால் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அரசுத் தரப்பு நிறைவேற்ற வேண்டிய அந்தப் பொறுப்பைப் புலிகள் தாமே செய்ய வேண்டிதாகிவிடும். அத்தகைய நிலை ஏற்பட்டால் அது யுத்தநிறுத்தம் நிரந்தரமாக முறிந்து போக வழிசெய்வ தாகிவிடும் என்பதை அரசுத்தரப்பு உணரவேண்டும்.
ஒட்டுப்படைகளின் பெயரில் அட்டகாசம் புரியும் மறைமுகத் தந்திரோபாயத்தை முற்றாகக் கைவிட அரசுப்படைகள் தாமதமின்றி முன்வராவிட்டால், போர் நிறுத்த உடன்பாடு செல்லாக்காசாவது தவிர்க்கப்பட முடியாததாகும்.
உதயன் 24.02.2005
|
|
|
| ஐ.நா. குழு வழிகாட்டலை ஏற்க இலங்கை மறுப்பு! |
|
Posted by: Vaanampaadi - 02-25-2005, 09:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
ஐ.நா. மனித உரிமைகள் குழு வழங்கிய
வழிகாட்டலை ஏற்க இலங்கை மறுப்பு!
சட்டம் இடமளிக்காது என விளக்கம் தெரிவிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை நீதிமன்றத்தினால் 35 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழர் ஒருவரை விடு விக்குமாறு அல்லது அவர் தொடர்பாக வழக்கை மறு விசாரணை செய்வதோடு அவருக்கு உரிய நஷ்டஈடு வழங்குமாறு இலங்கை அரசுக்கு ஐ.நாவின் மனித உரிமைகள் குழு வழங்கிய வழிகாட்டலை ஏற்பதற்கு இலங்கை மறுத்து விட்டது.
இலங்கைத் தமிழரான சிங்கராசா நல்லரட் ணம் என்பவர் தொடர்பாக சிவில் மற்றும் அர சியல் உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனங் களுக்கு அமைவாக ஐ.நா. மனித உரிமைகள் குழு விடுத்த வழிகாட்டலை ஏற்கனவே இலங்கை மறுத்திருக்கின்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற் றம் சுமத்தப்பட்ட சிங்கராசா நல்லரட்ணத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந் தது.
இதனை ஆட்சேபித்து சிங்கராசா சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதி மன்றம் அந்த சிறைத் தண்டனையை 35 ஆண்டு களாகக் குறைத்துத் தீர்ப்பளித்தது.
அதையும் ஆட்சேபித்து உயர் நீதிமன்றத் தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மேன் முறையீட்டை விசாரணை செய்த உயர் நீதி மன்றம் சிங்கராசாவுக்கு மேன்முறையீட்டு நீதி மன்றம் வழங்கிய 35 ஆண்டு காலச் சிறைத் தண்டனையை உறுதிசெய்தது.
இந்த நீதிமன்ற முடிவுகளை ஆட்சேபித்து மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவரிடம் சிங்கராசா சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த மனித உரிமைகளுக் கான ஐ.நா குழு சிங்கராசா விடயத்தில் அவ ருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தது. அவரது மூலவழக்கு விசா ரணை மற்றும் மேன்முறையீடுகள் மீதான விசா ரணைகளில் வேண்டுமென்றே காலதாமதம் செய்து காலம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது என் றும் -
விசாரணை முறைகளுக்கு தண்டனைத் தீர்ப் பும் முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயன்
|
|
|
| ஜனதா விமுக்தி பேரமுனா மிரட்டல் |
|
Posted by: aathipan - 02-25-2005, 09:13 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
விடுதலைப்புலிகளுக்கு அதரவாக செயல் பட்டால் கூட்டணி அரசில் இருந்து விலகி விடுவோம் என்று இலங்கை அரசுக்கு ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
இலங்கையில் அதிபர் சந்திரிகாவின் இலங்கை விடுதலை கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த ராஜ பச்சே பிரதமராக இருக்கிறார். ஆளும் கூட்டணியில் ஜனதா விமுக்தி பேரமுனா கட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த கட்சி விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தைகளை தொடங்க தமிழர் பகுதிக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட சில நிபந்தனை விதித்து உள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு அதரவாக செயல் பட்டால் கூட்டணி அரசில் இருந்து விலகி விடுவோம் என்று இலங்கை அரசுக்கு ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
இலங்கையில் அதிபர் சந்திரிகாவின் இலங்கை விடுதலை கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த ராஜ பச்சே பிரதமராக இருக்கிறார். ஆளும் கூட்டணியில் ஜனதா விமுக்தி பேரமுனா கட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த கட்சி விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தைகளை தொடங்க தமிழர் பகுதிக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட சில நிபந்தனை விதித்து உள்ளது.
இதுபற்றி ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி எம்.பி. வீரவல்சா கூறும்போது "விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்கக்கூடாது.
முதலில் விடு தலைப்புலிகள் சமரச பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கோரிக்கைகள் பற்றி அரசு கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசியபிறகுதான் கோரிக்கை பற்றி முடிவு எடுக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இலங்கை அரசு செயல்பட்டால் கூட்டணி அரசில் இருந்து நாங்கள் விலகி விடுவோம்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
கூட்டணி கட்சியின் இந்த மிரட்டல் காரணமாக இலங்கை அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
|
|
|
|