| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 514 online users. » 0 Member(s) | 512 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| சினிமாவில் நடிக்க ஆசையா? தொடர்பு கொள்ளவும் |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 03:59 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
சினிமாவில் நடிக்க ஆசையா? அப்படியானால் மேற்கொண்டு படியுங்கள்
ஜெ.ஜெ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் திரைப்படம் "சென்னாபுரி காளிகாம்பாள்". இந்த படத்தில் கதாநாயகனாக திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் தம்பி மகன் ஜெய் நடிக்கிறார். இசை: தேவா இயக்கம்-ராஜா மகேஷ். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் சுவாரசியமான பல விஷயங்கள் சேர்க்கப்பட்டு, மனதைக் கவரும் பாடல்களுடன் வெளி வரவுள்ளது. இந்தியா, மலேசியா,சிங்கப்பூர்,லண்டன் ஆகிய நாடுகளில் படமாக்கப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக பிரபலமாக நடைபெற்றுவரும் விசுவின் "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான செல்வக்குமார், இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா அண்மையில் இந்தியாவில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய துணைத்தூதர் ரோஸ்லின் இஸ்மாயில்,முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு, தயாரிப்பாளர் அழகப்பன், இசையமைப்பாளர் தேவா போன்றோர் கலந்து கொண்டனர்.
மிக அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் நடிக்க, நடிகர்-நடிகைகள், துணைநடிகர்-நடிகைகள், நடனமணிகள் தேவைப் படுகின்றனர். எனவே திரைப்படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்கள் 016-9085341 தொடர்பு கொள்ளலாம். தங்களது புகைப்படம், சுயவிவரக்குறிப்பு(Bio-Data) போன்றவற்றுடன் மேற்குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்:deena@ibosglobal.com
நடிக்க ஆசை உள்ளவர்கள் விரைந்து தொடர்பு கொள்ளவும்.
Vanakkammalaysia
|
|
|
| அப்பாவின் படத்தை சேர்ந்து பார்த்த ஸ்டாலின், அழகிரி |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 03:45 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
மார்ச் 06, 2005
அப்பாவின் படத்தை சேர்ந்து பார்த்த ஸ்டாலின், அழகிரி
மதுரை:
திமுக தலைவரும், தங்களது தந்தையுமான கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் தயாரான மண்ணின் மைந்தன் படத்தை மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும், அவரது அண்ணன் அழகிரியும் சேர்ந்து பார்த்தனர்.
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைப் பார்வையிட ஸ்டாலின் திண்டுக்கல் வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து அவர் மதுரை வந்தார்.
மதுரை வந்த ஸ்டாலின், தனது அண்ணன் அழகிரியுடன் சேர்ந்து பைபாஸ் சாலையில் உள்ள குரு தியேட்டருக்கு சென்றார். அங்கு கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான மண்ணின் மைந்தன் படம் திரையிடப்பட்டிருந்தது.
இருவரும் சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தனர். அவர்களுடன் மதுரை மேயர் செ.ராமச்சந்திரன், முன்னாள் மேயர்கள் குழந்தைவேலு, பட்டுராஜன், எம்.எல்.ஏ. பரணிக்குமார் உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் படத்தைப் பார்த்தனர்.
தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சிக்கிய பிறகு, ஸ்டாலினும், அவரும் சேர்ந்து மதுரையில் ஒரு பொது இடத்திற்கு வருவது இதுவே முதல் முறை.
|
|
|
| தமிழில் பேசி தமிழை வளர்ப்போம் |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 03:26 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (19)
|
 |
மார்ச் 06, 2005
தமிழை இழந்து கொண்டிருக்கிறோம்: ராமதாஸ்
சென்னை:
தமிழ் மொழியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு தமிழர்கள் மத்தியில் வலுத்துக் கொண்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ராமதாஸ் எழுதிய பண்பாட்டுச் சீரழிவுகள், தத்தளிக்கும் கல்வி, தமிழகம் எங்கே போகிறது?, சமூகம் சில பதிவுகள், தமிழகத்தின் உயிர் நாடி ஆகிய ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் மாவட்ட நூலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். முன்னாள் சபாநாயகர் ராசாராம் நூல்களைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், தமிழ் மொழியை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே வலுப்பட்டு வருகிறது. தமிழ் மொழி நமது உயிர் நாடி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். தமிழையும் இழந்து வருகிறோம், காவியையும் இழந்து வருகிறோம்.
பிற மாநிலங்களில் உள்ள மொழிப் பற்றில் 1 பகுதி கூட தமிழர்கள் மத்தியில் இலலை என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்த வருத்தமான நிலை மாற வேண்டும்.
சினிமா மூலம் தமிழ் அழிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழ் வளரக் கூடாது, தமிழ் அழிக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் எங்களது நோக்கத்தை தவறாக சித்தரித்து திசை திருப்பப் பார்க்கிறார்கள்.
சினிமா என்பது சிறந்த ஊடகம். ஆனால் அதை வைத்துக் கொண்டு மொழியைக் கொலை செய்வதை, பண்பாட்டைச் சீரழிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதனால்தான் தமிழ் கலாச்சாரத்திற்கு முரண்பாடான காட்சிகள் தமிழ்ப்படங்களில் இடம் பெறக் கூடாது, தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
சினிமாக்களில் தமிழ் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியும். இதை சில சினிமாக்காரர்கள் மறுக்கலாம். அவர்களோடு விவாதம் நடத்த நாங்கள் தயார், அவர்கள் தயாரா?
ஆங்கிலத்திற்கு நாங்கள் எதிரிகள் இல்லை. அதை ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர வாழ்க்கை மொழியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மாணவர் விரும்பினால் எந்த மொழியையும் தனது விருப்ப மொழியாக எடுத்துக் கொண்டு படிக்கலாம். ஆனால் தமிழே படிக்காமல் உயர் கல்விக்கு வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
தமிழர்களிடையே மங்கி வரும் தமிழ் உணர்வை மீட்கவே தமிழ் பாதுகாப்பு இயக்கம். இதேபோல மறைந்து வரும் தமிழ்ப் பண்ணிசையை வளர்க்கவும் அறிஞர் குழு ஒன்றை அமைக்கவுள்ளோம். அதில் குறைந்தபட்சம் 10 தமிறிஞர்கள் இடம்பெறுவர்.
இந்தக் குழுவிடம் தமிழ் பண்ணிசையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 1 மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும். அதன் பரிந்துரைகளை திமுக தலைவர் கருணாநிதியிடம் கொடுக்கவுள்ளோம்.
அவர்தான் அடுத்த முதல்வராக வரப் போகிறார். எனவே அவரிடம்தான் இதை தெரிவிக்க வேண்டும். மேலும், சட்டசபைத் தேர்தலின்போது தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களின்போது பண்ணிசை வளர்ச்சிக்கான பரிந்துரைகளைத்தான் நாங்கள் நிபந்தனைகளாக வைக்கப் போகிறோம்.
தமிழுக்கு சேவை செய்பவர் கருணாநிதி. எனவே அவரிடம் இந்த நிபந்தனைகளை கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.
நிபுணர் குழு பரிந்துரைகள் தவிர, பள்ளி கல்லூரிகளில் தமிழ் இசையை ஒரு பாடமாக வைக்க வேண்டும். அதற்கு 100 மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். இசையறிஞர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பதையும் கோரிக்கைகளாக வைக்கவுள்ளோம்.
இவைதான் எங்களது நிபந்தனைகள். இவற்றை எல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றுங்கள் என்று கருணாநிதியைக் கேட்டுக் கொள்ளப் போகிறோம் என்றார் ராமதாஸ்.
ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், ராமதாஸ் பெரியார் போல. கோபம் வந்து விட்டால் சில காரியங்களை அவரது பாணியில் செய்வார். சினிமா மீது அவருக்குக் கோபம் கிடையாது. அங்கு தமிழ் அழிக்கப்படுவதால்தான் எதிர்க்கிறார்.
இப்போது அரசியலில் சரியான வழிகாட்டியாக ராமதாஸ் விளங்குகிறார். நீங்கள் என்ன செய்தாலும் அது தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதாக அமையும் என்றார் வீரப்பன்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தார்.
|
|
|
| பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா? |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 03:03 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
வேலைவாய்ப்பு பெறுவதற்காக
போலி திருமணங்கள் நடத்திய இந்திய பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா?
25_ந் தேதி தீர்ப்பு
லண்டன், மார்ச். 6_
வேலைவாய்ப்பு பெறுவதற் காக லண்டனில் போலி திருமணங்கள் நடத்தி பிடி பட்ட இந்திய பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா? என்பது 25_ந் தேதி தெரிய வரும்.
போலி திருமணங்கள்
இங்கிலாந்தில் குடியேறி, வேலைவாய்ப்பு பெறுவதற்காக போலி திருமணம் செய்து கொண்டு பலர் நுழைவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தடுக்க லண்டன் சமூக குற்றத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த போலீசாரின் பிடியில் கடந்த ஆண்டு ஒரு இந்திய தம்பதி சிக்கினர். பிடிபட்டவர் பெயர் தர்ஷன்கில், மனைவி பெயர் ஜஸ்விந்தர்கில். இந்தியா வில் இருந்து லண்டன் செல்லும் ஆண்களுக்கு அங்குள்ள பெண்களை போலி திருமணம் செய்ய இவர்கள் ஏற்பாடு செய் தனர்.
இந்த போலி திருமண நாடகத் துக்கு முன்வரும் பெண்களுக்கு ரூ.83 ஆயிரம் வழங்கினர். இங்கிலாந்திலும், இந்தியாவிலும் இந்த போலி திருமணங்கள் நடந்தேறின. மேலும் அந்த பெண் களுக்கு `மாடலிங்' வேலை வாய்ப்பு தருவதாகவும் ஏமாற்றி இருக்கிறார்கள்.
தண்டனை கிடைக்குமா?
இதன்பேரில் கணவன்_ மனைவி இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்கள். இவர் களுக்கு உதவி புரிந்ததாக பசில் ரசீது, ஆகாஷ்கன்னா அகமது சபீர் ஆகியோரும் பிடிபட்டுள் ளார்கள்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள் ளனர். இந்த வழக்கில் வருகிற 25_ந் தேதி தீர்ப்பு வழங்கப் படுகிறது. அப்போது இந்திய பெண் உள்பட 5 பேருக்கும் தண்டனை கிடைக்குமா? என்பது தெரிய வரும்.
|
|
|
| ஜெயலலிதா தங்கிய பங்களாவில் இன்று காலை துப்பாக்கிச்சூடு |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 03:01 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
ஜெயலலிதா தங்கிய பங்களாவில் இன்று காலை துப்பாக்கிச்சூடு
திருப்போரூர், மார்ச் 6- முதல்வர் ஜெயலலிதா தங்கிய சிறுதாவூர் பங்களாவில் இன்று நரிக்குறவர்கள் நரிகளை துப்பாக்கியால் சுட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூரில் கட்டப்பட்டுள்ள புதிய பங்களா வில் ஜெயலலிதா மற்றும் சசிகலா அவரது உறவினர்கள் தங்கி இருப்பது தெரிந்ததே. நேற்று முன் தினம் சட்டசபை கூட்டம் முடித்து விட்டு சசிகலாவுடன் அந்த பங்களாவுக்கு சென்ற ஜெயலலிதா, நாகபூஜை, ராகு-கேது பெயர்ச்சி யாகம் நடத்தினார். நேற்று இரவும் அங்கேயே தங்கினார். இன்று காலை 6 மணிக்கு ஒரு டாடா சுமோ கார் உள்ளே சென்றது. பின்னர் அதே கார் திருப்போரூர் பேருந்து நிலையத்துக்கு காலை 8.30 மணிக்கு வந்தது. அதில் இருந்து 6 நரிக்குறவர்கள் இறங்கினர். அவர்களை சென்னை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டு சாதாரண உடையில் இருந்த போலீசார் சென்று விட்டனர். துப்பாக்கி சூடு„ஜெயலலிதாவுக்கு சொந்தமான காரில் 2 நரிக்குறவர்கள் வந்தது ஏன்? அவர்களை போலீசாரே டாடா சுமோவில் வந்து சென்னை பேருந்தில் ஏற்றிவிட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி விசாரித்த போது பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. அது வருமாறு„-
சிறுதாவூரில் கட்டப்பட்ட அந்த பங்களா, 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களாக அந்த பங்களாவில் ஜெயலலிதா தங்கிய போது இரவு நேரங்களில் 2 நாள்களும் ஒரு காட்டுப்பூனையும் ஊளையிட்டுக் கொண்டே இருந்தனவாம். நரி ஊளையிட்டால் கெட்ட சகுனம் என்று கருதியதாக கூறப்படுகிறது. எனவே இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நரியையும் பூனையையும் கொல்ல நரிக்குற வர்களை அழைத்து வாருங்கள் என்று தகவல் பறந்தது. எனவே தான் சென்னையில் இருந்து 6 நரிக்குறவர்களை ஏற்றிக் கொண்டு அந்த கார் வந்தது. அங்கு அந்த நரிக்குறவர்கள் நரி வேட்டை ஆடினர். இரவில் ஊளையிட்ட அந்த 2 நரிகளை நரிக்குறவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் ஒரு காட்டுப்பூனையையும் 3 முயல்களையும் சுட்டுக் கொன்றனர். 2 நரிகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கிளம்புங்கள் என்று நரிக்குறவர்களை அனுப்பி வைத்தனர். போகும் போது 3 செத்த முயல்களையும் காட்டுப்பூனையையும் நரிக்குறவர்களிடம் கொடுத்து விட்டனர். இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இது சரியா?வன விலங்குகளை கொல்லக் கூடாது என்று சட்டமே உள்ளது. மான் வேட்டை யாடிய பிரபல இந்தி நடிகர் மீது எல்லாம் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அப்படி இருக்கையில் முதல்வர் தங்கிய பங்களாவிலேயே 2 நரி, 3 முயல், காட்டுப்பூனையை சுட்டுக் கொன்றதாக அந்த நரிக்குறவர்களே கூறுகிறார்கள். இதற்கு வழக்கு உண்டா?
பேசிய பணத்தை தராத போலீசார்
நரிகள், முயல்களை சுட வேண்டும். ஒரு நரிக்கு 500 ரூபாய், முயலுக்கு 100 ரூபாய் தருகிறோம் என்று கூறி நரிக்குறவர்களை போலீசார் அழைத்து வந்தனர். அவர்களும் வந்தார்கள். சுட்டுக் கொன்றார்கள். ஆனால் பேசியபடி பணம் தரவில்லை. நரிக்கு 400 ரூபாய் என்று 800 ரூபாயும் முயலுக்கு 100 ரூபாய் என்று 300 ரூபாயும் தந்தனர். காட்டுப் பூனைக்கு காசு கிடையாது என்று போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர். பங்களாவில் கொடுத்த 500 ரூபாயில் போலீசார் 100 ரூபாய் கமிஷன் எடுத்தார்களா? அல்லது அவர்களே 400 ரூபாய் தான் கொடுத்தார்களா என்பது தெரிய வில்லை.
|
|
|
| தமிழர் 15ஆவது இடம் |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 03:00 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
ஆஸ்திரேலிய கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் நாராயண் கார்த்திக் 15ஆவது இடம்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/03/20050306041834karthikeyan1.jpg' border='0' alt='user posted image'>
நாராயண் கார்த்திகேயன்
அதிவேக போர்முலா 1 கார் ஓட்ட விளையாட்டில் அவுஸ்திரேலிய 'கிராண்ட் ப்ரீ' பந்தயத்தில் கலந்து கொண்ட முதலாவது இந்திய வீரர் நாராயண் கார்த்திகேயன் 15வது இடத்தை பெற்றுள்ளார்.
இந்த கார் ஓட்டப் பந்தயத்தின் முதலாவது போட்டியில், இந்த 27 வயது இளைஞர், 57 தடவைகள் ஓடுபாதையில் சுற்றி வந்ததை இந்தியாவெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் கண்டுகளித்தனர்.
போர்முலா 1 ஓட்டப்பந்தயத்துக்கான ஒரு ஓடு பாதையைக் கூட கொண்டிருக்காத ஒரு நாட்டில் இருந்து, இந்த இளைஞர் இவ்வளவு உச்சத்தை எட்டியிருப்பது மிகவும் அசாதாரணமான விசயம் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கு இந்த கார் ஓட்டப்போட்டி மிகவும் புதியது என்ற போதிலும், கார்த்திக் தற்போது உலக மட்டத்திலான இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளமை அங்கு இனிமேல் கார் ஓட்டப்பந்தயங்களுக்கும் பெரும் வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
BBC Thamiloosai
|
|
|
| கண்ணீர் துளி ஆபரணம் |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 02:58 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
கண்ணீர் துளி ஆபரணம்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Mar/06/oddnews/C132_1ms-dkn.jpg' border='0' alt='user posted image'>
கண்ணீர் துளி ஆபரணம்
பெண்கள் கழுத்து, காதுகளில் ஆபரணம் அணியும் பேஷன் மறைந்து கண்களில் ஆபரணம் அணிவது பேஷனாகி வருகிறது.
பெண்கள் கழுத்து, காதுகளில் ஆபரணம் அணியும் பேஷன் மறைந்து தொப்புளில் ஆபரணம் அணிவது சமீபகாலம் வரை பேஷனாக இருந்து வந்தது. தற்போது கண்களில் ஆபரணம் அணிவது பேஷனாகி வருகிறது. பிரான்சு தலைநகர் பாரிசில் கடந்த சில தினங்களாக முன்பு பேஷன் ஷோஒன்று நடை பெற்றது. இதில் ஒரு அழகி இமைகளுக்கு கீழே கண்ணீர் துளி போன்று ஆபரணம் அணிந்து வந்து பார்வையாளர்களை அசத்தினார்.-------------------
|
|
|
| பாட்டியின் விளம்பரம் |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 02:57 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
பேரன் தேவை_பாட்டியின் விளம்பரம்
சீனாவில், பேரன் தேவை என்று ஒரு பாட்டி செய்திதாளில் விளம்பரம் செய்துள்ளார். அவரது பெயர் லியுலான். 64 வயதாகிறது. சிச்சுவான் மாநிலம் செங்க்டு என்ற ஊரைச் சேர்ந்தவர்.
இவருடைய மகனுக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிறது. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. தனக்கு பேரன் வேண்டும் என்று அடிக்கடி மகனிடம் தகராறு செய்தும் பலன் ஏற்படவில்லை. சொந்தப்பேரன் இல்லாததால் ஒரு பேரனை தத்து எடுக்க விரும்புகிறார்.
``என்னிடம் போதுமான வசதி இருக்கிறது. ஆனால் என்னைப் பார்த்துக்கொள்ள ஒரு பேரன் இல்லை. சிறு குழந்தையுடன் கூடிய 3 பேர் கொண்ட குடும்பத்தை என் உறவினர்களாக்கி கொள்ள விரும்பு கிறேன். அவர்கள் என் மீது எப்படி அன்பு செலுத்துகிறார்கள் என்று 6 மாதம் பார்ப்பேன். அவர்கள் மீது திருப்தி ஏற்பட்டால் அவர்களை என்னுடன் சேர்த்துக்கொள்வேன். அதன் பின் நான் அந்தக் குழந்தைக்கு உண்மையான பாட்டியாக மகிழ்ச்சியுடன் என் வாழ் நாளை கழிப்பேன்.
இவ்வாறு அவர் விளம்பரப்படுத்தி உள்ளார். தங்களது குழந்தையை பேரனாக ஏற்றுக்கொள்ளும்படி ஏராளமான பேர் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
Dailythanthi
|
|
|
| ஜெயானந்தமூர்த்தி எம்.பி.க்கு கொலை அச்சுறுத்தல். |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 02:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஜெயானந்தமூர்த்தி எம்.பி.க்கு கொலை அச்சுறுத்தல்.
வன்னிப் புலிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு தேவையற்ற விடயங்களை பேசி வருவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் உமக்கான மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்த மூர்த்திக்கு கருணா குழுவென்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவரினால் தொலைபேசி மூலம் நேற்று நண்பகல் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:
வன்னிப் புலிகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டும் அவர்கள் தொடர்பாக பொது மக்கள் மத்தியில் பிரசாரங்கள் செய்வதையும் அவர்களுக்கு ஆதரவான கூட்டங்களில் உரையாற்றுவதையும் நாம் அவதானித்து வருகிறோம். அது மாத்திரமல்லாமல் சில பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெறும் நிவாரண மோசடிகளையும் நீர் அம்பலப்படுத்தி வருகிறீர். இது தங்களுக்குத் தேவையற்ற விடயம். அண்மையில் வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்ற மோசடிகளை நீர் அம்பலப்படுத்தியுள்ளீர். இதுபற்றி எமக்கு சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களும் பிரதேச செயலகத்தின் ஒருசில உத்தியோகத்தர்களும் மற்றும் கிராமங்களில் உள்ள ஒருசில பிரமுகர்களும் முறைப்பாடு செய்துள்ளார்கள். அவர்களின் நடவடிக்கைகளில் நீர் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளவும் என்று அந்த தொலைபேசி மிரட்டலில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சில கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகத்திலுள்ள ஒருசில உத்தியோகத்தர்களும் சுனாமி நிவாரண முத்திரைகளிலும், மரணக் கொடுப்பனவுகளிலும் பெரும் மோசடி செய்திருந்தனர்.
இதை பிரதேச செயலாளர் அறிந்திருந்தும் ஊழல்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடந்த புதன்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச செயலாளரை இடம் மாற்றுவதுடன் சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்த மூர்த்திக்கு அவர்கள் அறிவித்ததையடுத்து அவர் அரசாங்க அதிபர் வே.சண்முகத்தையும் அழைத்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதையடுத்தே சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களும், பிரதேச செயலகத்தின் ஒருசில உத்தியோகத்தர்களும் கருணா குழுவுக்கு முறைப்பாடு செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது.
மேற்படி ஊழல்கள் தொடர்பான சகல விடயங்களும் எழுத்து மூலம் அரசாங்க அதிபர் வே.சண்முகத்திடம் நேற்று பொது மக்களினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி
|
|
|
| இலங்கை வானொலி |
|
Posted by: Mathan - 03-07-2005, 02:07 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இலங்கை வானொலி
இப்பொழுது இலங்கை வானொலியின், இல்லை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையின் தமிழ் ஒலிபரப்பைக் கேட்கும் போது கோபமோ, எரிச்சலோ, அருவருப்போ கூட வருவதில்லை. அந்தளவுக்கு அது எங்களது இருப்புக்கு அந்நியப்பட்டுப் போய் விட்டது. பேரினவாத ஆட்சியாளர்கள் எள் என்றால் எண்ணெய்யாக வழிகிறவர்கள்தான் இன்று தமிழ் ஒலிபரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
ஒரு தகவல் ஊடகம் என்ற வகையில் படிப்படியாகத் தனது நம்பகத் தன்மையை இழந்து, 1983 ஆடிக் கலவரத்தின் போது தமிழ் மக்களது உணர்வுகளைச் சிறிதும் மதியாத ஒரு அரசாங்கத்தின் நிந்தனை மொழிகளைத் தமிழில் வழங்குவதற்கு மட்டுமே தகுதி வாய்ந்ததாக அதை அதன் எஜமானர்கள் கருதினார்கள். அந்த மதிப்பீட்டுக்கு ஏற்றபடி இலங்கை வானொலியைக் கொண்டு நடத்தக் கூடியவர்களாகத் தேடி அதன் பொறுப்பில் அமர்த்தினார்கள். தமிழ் மக்களது உரிமைகட்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள் அதன் நிர்வாகப் பொறுப்புகளில் அமர்வது அரிது. அமர்ந்தாலும் நின்று பிடிப்பது இயலாதது.
அரச அலுவல்களிலும் கல்வித் துறையிலும் சிங்களப் பேரினவாதச் சிந்தனையும் சிங்கள பௌத்தமும் செலுத்தி வந்த மேலாதிக்கத்தின் பிரதிபலிப்பாகவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பகுதியும் நடந்து கொண்டது. இலங்கை வானொலி அரச சார்பு ஊடகமாக இருந்த போதும் மொழி, பண்பாடு, இலக்கியம் போன்ற துறைகளில் காத்திரமான பங்களிப்புகள் நீண்ட காலமாக இருந்து வந்தன. அவை ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இன்னும் பிற வகைகளிலும் தமிழ்ப் பிரிவு ஒரு கனதியான ஆவணக் காப்பகமாக இருந்தன. 1977 க்குப் பின்பு துரிதமடைந்த புறக்கணிப்பு 1983 க்குப் பிறகு திட்டமிட்ட சீர்குலைப்பாக மாறியது. எத்தனையோ பெறுமதி வாய்ந்த ஒலிப்பதிவு வடிவிலான ஆவணங்கள் என்றென்றைக்குமே இல்லாமற் போய்விட்டன என்று பேராசிரியர் சிவத்தம்பி உட்பட்ட பலரும் கடந்த சில ஆண்டுகளாகப் பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டியுள்ளனர். ஆயினும் எதுவும் நடக்கவில்லை, நடக்கப் போவதுமில்லை.
தமிழ் - முஸ்லிம் இன முரண்பாட்டைப் பயன்படுத்தியும் பல்வேறு காரியங்கள் நடைபெறுகின்றன. தமிழ்மொழியிலுள்ள தகவல் வளத்தைப் பேணுவதும் பெருக்குவதும் தவிர்ந்த பதவிப் போட்டிகளும் இனத்துவ அரசியல் முரண்பாடுகளும் தமிழ் ஒலிபரப்புச் சேவையை மேலும் செயலற்றதாக முடக்குகின்றன. இதற்கிடையே அரசாங்கத்தினதும் அதனோடு உள்ள ஓட்டுண்ணிகளதும் பிரசாரம் தளராமல் நடைபெறுகிறது.
1990 களின் இறுதி ஆண்டுகள் தொட்டு இந்த நூற்றாண்டின் முதல் மூன்று ஆண்டுகள் வரை, சில துறைகளிலேனும், நம்பிக்கையூட்டக் கூடிய சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அவை ஒவ்வொன்றாகச் சிதறடிக்கப்பட்டு விட்டன. கனதியான விடயங்களைப் பேச அமைந்த களம் ஒவ்வொன்றும் விஷய ஞானம் சிறிதும் இல்லாத அறிவிப்பாளர்களும் ஏறத்தாழ அவர்களளவு ஞானமுடைய நிபுணர்களும் தமது அறியாமையைப் பகிருவதற்கே இன்று பயன்படுகிறது. இது பற்றிப் பேசிப் பயனில்லை என்று தான் நீண்ட காலமாக இதுபற்றிக் குறிப்பிடாமல் இருந்தேன். எனினும், ஃபெப்ரவரி இறுதியில் கேட்க நேர்ந்த சில நிகழ்ச்சிகள் இலங்கை வானொலி சீரழிய இன்னமும் நிறைய இடம் உண்டு என்று எனக்குத் தெளிவுபடுத்தின.
`வெண்பா நயம்' என்றொரு நிகழ்ச்சி. அதில் வெண்பாவை நயப்பது பற்றி எதையும் யாரும் அறிய முடியாது. ஒரு வெண்பாவை வாசித்து ஒருவர் பொருளுரைப்பார். இன்னொருவர் அதைப் பாடுவார். எல்லாம் ஔவையாரின் நீதி வெண்பாக்கள் தாம். அதன் பின்பு வாக்கியகாரர் என்ற நிகழ்ச்சி. உண்மையிலேயே, அண்மை வரை நான் விரும்பிக் கேட்ட ஒரு நிகழ்ச்சி என்பேன்.
இசை பற்றிய அறிவும் ஈடுபாடும் உள்ள ஒருவர், வாரம் ஒரு வாக்கியகாரர் (அதாவது கர்நாடக இசைப் பாடலாசிரியர்) ஒருவரது வாழ்க்கைக் குறிப்புக்களுடன் அவ் வாக்கியக்காரரது அதி சிறப்பு வாய்ந்த சாகித்தியங்களில் சிலவற்றை ஒலிபரப்புவார். நான் கடைசியாக கேட்ட நிகழ்ச்சியில், ஊர்ப் பேரையோ ராகத்தின் பேரையோ உச்சரிக்கக் கூடத் தடுமாறுகிற ஒருவர், வெண்பா நயம் நிகழ்ச்சியில் வெண்பாவை வாசித்த அதே நபர், அந்த நிகழ்ச்சியைப் பாழாக்கினார். அதே நபர், இப்போது சைசமய நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துவதாக அறிகிறேன். கர்நாடக இசை, தமிழ் செய்யுள், சைவ சமயம் ஆகிய மூன்று துறைகளிலும் ஒருவர் கொடிகட்டிப் பறக்க இயலாது என்பது என் கருத்தல்ல. ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பாளராக உள்ளவர் அவ்வளவு தகைமை வாய்ந்தவராகத் தெரியவில்லை. யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிக்கிற தோரணையில் அவர் பேசுவதைக் கேட்கையில் யார் மீது இரக்கப்படுவது என்று தெரியவில்லை.
இன்று தமிழ்த் தெரிந்தவர்கள் செய்தி அறிக்கைகளை எழுதுகிறார்களா என்ற ஐயம் எனக்கு மட்டும் ஏற்படும் ஒன்றல்ல. தேவையற்ற சொற்களும் பொருட் செறிவற்ற வாக்கியங்களும் குழப்பமான சொற் பிரயோகமும் எல்லா ஒலிபரப்பு ஊடகங்களுக்குமுரியன. சிங்கள ஒலிபரப்பாளர்களுடைய மொழியறிவின் போதாமை பற்றிச் சிங்கள நண்பர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். எனினும், தமிழ் ஒலிபரப்பாளர்களளவுக்குத் தமது மொழியை உருத் தெரியாமற் சிதைக்கும் ஆற்றலினளவு சிங்கள ஒலிபரப்பாளர்களுக்குத் தமது மொழியைச் சிதைக்கும் ஆற்றல் இல்லை என்பேன்.
சென்ற ஆண்டு முற்பகுதியில் ஒருநாள், `விடியும் வேளை' நிகழ்ச்சியில் அப்துல் ஹமீட் பங்குபற்றினார். தமிழ் ஒலிபரப்பின் தரம் தாழ்ந்து விட்டது பற்றி நிகழ்ச்சித் தயாரிப்பாளரை மனம் நோகச் செய்யாமல் எவ்வளவு வெளிப்படையாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு வெளிப்படையாகச் சொன்னார். ஆனால், அதற்குப் பின்பும், தமிழ் ஒலிபரப்பு அதன் உள்ளடக்கத்திலும் ஒலிபரப்பின் தரத்திலும் தாழ்ந்தே வந்துள்ளது.
இன்று தேசிய சேவையின் தமிழ் ஒலிபரப்பு தமிழ்த் தேசிய இனத்தின் அடிமைத் தனத்தின் அன்றாடப் பிரகடனமாகவே உள்ளது. காலையிலே இப்போது பௌத்த மதப் போதனை தவறாமல் நடக்கிறது. அது நமது சிந்தனையைப் பரந்து பட்டதாக்கும் முயற்சியின் ஒரு பகுதி எனில் நல்லது. அப்படியானால் ஏன் சிங்கள, ஆங்கில ஒலிபரப்புகளிலும் நாட்டின் ஒவ்வொரு மதத்தினது நற்சிந்தனைகளும் ஒலிபரப்பக் கூடாது?
ஒவ்வொரு நாளும் இரவில் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதத்தின் மெட்டு ஒலிபரப்பாகு முன்பு சமாதானத்தை வேண்டுகின்ற ஒரு பாடல் தவறாமல் ஒலிபரப்பாகிறது. சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளில் ஏன் சமாதானம், சாந்தி, சகோதரத்துவத்தை வற்புறுத்துகிற பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை?
1975 அளவில் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்கான ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அதை நடத்தியவர்கள் அரசாங்கத்தில் கூட்டாளியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான ஒரு தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர். அங்கே நாட்டின் ஒற்றுமை பற்றித் தமிழர்கள் காட்டிய அக்கறையை அங்கு அழைக்கப்பட்ட அமைச்சர்கள் கூடக் காட்டவில்லை. அமைச்சர்களின் உரையில், தேசிய இன ஒற்றுமைக்குத் தமிழர்களே பங்கமாக நடந்து கொள்கிறார்கள் என்ற தொனி ஓங்கியிருந்தது. அது பாராளுமன்ற அரசியற் சறுக்குப் பாதையில் அடிவைத்த ஒரு கட்சியினதும் அதனுடன் ஒட்டிக் கிடந்த இலக்கியவாதிகளதும் சிந்தனையின் சீரழிவைக் குறித்தது. இன்று பலர் அந்த நாட்களை நினைவுகூர விரும்புவதில்லை. ஆனால், அதே மனோபாவமே தமிழ்ச் சமூகத்தை ஒவ்வொரு துறையிலும் பாதிக்கின்றது.
தங்களுடைய தனிப்பட்ட அற்ப நலன்களுக்காகத் தமிழ் மக்களதும் இந்த நாட்டினதும் நலன்களைச் சிதைக்க ஆயத்தமானவர்களாலேயே உயர் பதவிகளைப் பிடிக்க முடிகிறது. மக்கள் அவர்களை அறிவார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்களது ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களது நம்பகத் தன்மைக்கு மற்றவர்கள் உதவ வேண்டுமா? உள்ளதை உள்ளபடி பேசவும் உண்மைகளைத் திரிக்காமல் வழங்கவும் தடையாக உள்ள நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் எந்த நேர்மையான மனிதரும் தமது வாய்ப்புகளை உண்மைகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டும். அதற்கு இடமில்லை என்றால் பங்குபற்ற மறுக்க வேண்டும்.
ஊடகங்கள் தமக்கு இடமளிப்பதை ஒரு உபகாரமாகக் கருதுகிற எவரும் தன்னைத் தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்ள இடமளிப்பது தவிர்க்க இயலாதது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை எம்மாற் சீர்திருத்த இயலாது. ஆனால், அந்தச் சீரழிவுக்கு மூடு திரைகளாகப் பயன்படாமல் எம்மால் நடந்து கொள்ள இயலும்.
நன்றி - தினக்குரல்
|
|
|
|