Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 550 online users.
» 0 Member(s) | 547 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,437
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,255
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,550
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  ஒளிவு மறைவின்றி
Posted by: adsharan - 08-01-2005, 12:19 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (12)

அண்மையில் நிகழ்ந்த புதுமனை புகு விழாவொன்றைப் பற்றிச் சிலர் விமர்சனம் செய்து கொண்டனர்.ஒருவர் தனது வீட்டின் முகப்புக்கு வர்ணம் தீட்டிவிட்டு, புதுமனை புகுவிழா அழைப்பிதழ் அச்சடித்து வேண்டியவர்களிடம் வழங்கினார் இவன் பழைய வீட்டில்தானே இருக்கிறான். புதிய வீடு எதுவும் கட்டவில்லையே' என்று பலரும் யோசித்துக் கொண்டனர். இவர்களில் ஒருவர், நேராகவே இதைக் கேட்டுவிட்டார் நீ புதிய வீடு எங்கே கட்டியிருக்கிறாய்?' என்று கேட்டதற்கு `நான் எனது வீட்டைத் திருத்திப் புதிய வீடாக்கியிருக்கிறேன்.' என்று அவர் பதிலளித்தாராம் அதை புதுமனை என்று கூறி அழைப்பிதழ் கொடுப்பதில்லையே என்று மற்றவர் சொன்னபோது, `நான் இவ்வளவு காலம் எத்தனையோ பேரின் சடங்குகளுக்கு பணம் கொடுத்திருக்கிறேன். அதை வசூலிக்க வேறு வழி தெரியவில்லை' என்று பதிலளித்தாராம்.அதை பணம் வசூலிக்கும் விழா அழைப்பிதழ் என்று வைத்துக் கொள்ளலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  கொழும்பில் பாடசாலை மாணவர்கள் பலத்த மோதல்
Posted by: Paranee - 08-01-2005, 09:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

கொழும்பில் பிரபல பாடசாலை மாணவர்களிற்கு இடையில் பலத்த மோதல்

பஸ்கள் அடித்து நொருக்கப்பட்டன. பழைய மாணவர்கள் புதிய மாணவர்கள் என பாரபட்சம் இன்றி வீதியில் செல்லும் மாணவர்களை எந்தெந்த பாடசாலை மாணவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு தாக்கப்படுகின்றனர்.

மேலதிக தகவல்கள் விரைவில்

Print this item

  வைரமுத்துவின் ஒலிவடிவக் கவிதைகள்
Posted by: தமிழரசன் - 08-01-2005, 05:25 AM - Forum: கவிதை/பாடல் - No Replies

வைரமுத்துவின் ஒலிவடிவக் கவிதைகள்
www.amuthu.com
http://amuthu.com/index/index.php?option=c...sk=click&bid=10

Print this item

  ரொரன்ரோ திரைப்பட விழா!
Posted by: AJeevan - 07-31-2005, 08:40 PM - Forum: குறும்படங்கள் - Replies (2)

[b]<span style='color:darkred'>Í¡¾£É ¸¨Ä ¾¢¨ÃôÀ¼ ¨ÁÂõ- ¦Ã¡Ãý§Ã¡!
¿¡ý¸¡ÅÐ º÷ŧ¾º ¾Á¢ú ÌÚõÀ¼,
Å¢Åýò ¾¢¨ÃôÀ¼ Ţơ!
<img src='http://www.geotamil.com/pathivukal/film_cinema.gif' border='0' alt='user posted image'>


¸¡Äõ:
¦ºô¼õÀ÷ 24,2005 , Á¡¨Ä 2 Á½¢

þ¼õ:
§Â¡÷ìçð áĸ «ÃíÌ, 1785 §ÁüÌ À¢ýî Å£¾¢
(1785 Finch Avenue West) §Âý, À¢ýî ºó¾¢ìÌ «Õ¸¡¨Á¢ø

À¨¼ôÒì¸û ¸¢¨¼ì¸ §ÅñÊ ¸¨¼º¢ ¿¡û ¦ºô¼õÀ÷ 01, 2005.

À¨¼ôÒì¸û 30 ¿¢Á¢¼í¸ÙìÌ ¯ðÀ𼾡¸ þÕì¸ §ÅñÎõ.

À¨¼ôÒì¸Ç¢ý ¦Á¡Æ¢ ¾Á¢Æ¡¸ þÕò¾ø §ÅñÎõ.

ÍÉ¡Á¢ ÀüȢ À¨¼ôÒì¸û ÅçÅü¸ôÀθ¢ýÈÉ.
(º¢Èó¾ À¨¼ôÒì¸¡É Å¢ÕÐ þô À¢Ã¢Å¢Öõ ÅÆí¸ôÀÎõ).

À¨¼ôÒì¸Ù¼ý «¾¢ø ÀíÌÀüȢ ¦¾¡Æ¢ø ÑðÀ ¸¨Ä»÷¸û, நடிகர்கள் ÀðÊÂø þ¨½ì¸ôÀ¼§ÅñÎõ.

À¨¼ôÒì¸Ç¢ý ¾Â¡Ã¢ôÀ¡Çâý ¨¸¦Â¡ôÀòмý ÜÊ ¸Ê¾õ þ¨½ì¸ôÀ¼ §ÅñÎõ.

§¾÷×ì ÌØÅ¢ý ÓʧŠþÚ¾¢Â¡ÉÐ.

À¨¼ôÒì¸û «ÛôÀ §ÅñÊ ӸÅâ:
Independent Art Film Society of Toronto
4 Castlemore Avenue,
Markham, Ontario
Canada L6C 2B3

§Áľ¢¸ ¦¾¡¼÷Ò¸ÙìÌ:

905-887-7457, 416-450-6833 «øÄÐ raguragu100@hotmail.com

À¢ü ÌÈ¢ôÒ:

¬É¢ Á¡¾ ÓüÀ̾¢Â¢ø ¿¨¼¦ÀÈÅ¢Õó¾ þó ¿¢¸ú× ¾Å¢÷ì¸ ÓÊ¡¾ ¸¡Ã½í¸Ç¡ø À¢ü§À¡ð¼ôÀð¼Ð.

Nmahesu@aol.com</span>

Print this item

  நீங்கள் அழகாயிருக்க.....
Posted by: ப்ரியசகி - 07-31-2005, 07:50 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (15)

நீங்கள் அழகாயிருக்க 10 எளிய வழிகள்

1.கவலைகளை சுமக்காதீர்கள்
சிலர் வாயை திறந்தாலே பிரச்சனைகள் தான் வரும்.
கவலைகள் இல்லாதவர்கள் உலகத்திலே இல்லை. ஆனா, அதை 24 மணி
நேரமும் சுமக்க வேண்டுமா? அவைகளை இறக்கி வையுங்கள்.
எப்பொதும் உங்களை கலகலப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

2.கொண்டாடுங்கள்
சின்ன சின்ன சந்தோசங்களையும். வெற்றிகளையும் பெரிதாக கொண்டாடுங்கள்.
கொண்டாடும் போது மனதில் உற்சாகம் பிறக்கிறது. தன்னம்பிக்கையை கொடுக்கிறது

3.அடிமையாகதீர்கள்
எந்த பழக்கத்திற்க்கும் அடிமை ஆகதீர்கள். பழக்கங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால்
அந்தப் பழக்கத்துக்கு சிறு தடை வந் தால் கூட மனதைச் சோர்வடையச் செய்து விடும்.
மாற்றங்கள் அரும் போது அவற்றை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்க்ள்

4.ஆர்வம் கொள்ளுங்கள்
சிலருக்கு எந்த விசயத்திலுமே ஆர்வம் இருக்காது. வாழ்க்கையிலும் ஆர்வம் இருக்காது.
ஆர்வங்கள் தான் உற்சாகம் கொடுக்கும். வாழ்க்கையின் மீது பிடிப்பு எற்ப்படுத்தும்

5. கோவம் கூடாது
கோவப்பட்டு நீங்கள் சாதித்த விடயம் எதுவுமே கிடையாது.கோவம் ஒன்றுக்கும் உதவாத
ஒரு உணர்வு. அதை வைத்திருந்தென்ன பயன்? உண்மையை சொல்லப்போனால்
கெட்ட விசயங்கள் தான் நடக்கும்.

6. குடும்பத்துடன் இருங்கள்
எல்லோரும் குடும்பத்துடன் கலகலப்பாய், ஜாலியாய் பேசிக்கொண்டு இருந்தால் தான் மனசு மகிழ்சியாய் இருக்கும்.

7.மற்றவர்களை மதியுங்கள்
இது முக்கியமான விசயம். மற்றவர்களை மதிக்க முட்யதவர்களால் தங்களை மதிக்க முடியாது.
மற்றவர்களை மதிப்பதால். ஒன்று. உங்களை அவருக்குப் பிடித்துப் போகிறது. இரண்டு. உங்களுக்கு
இன்னொரு நட்பு கிடைக்கிறது

8. கொஞ்சம் பொழுது போக்குங்கள்
வேலை,வீடு,நண்பர்கள் என்று இருக்காமல் சில பொழுது போக்குகளை உங்களுக்கென்று
வைத்துக்கொள்ளுங்கள். அதனால் மனசுக்கு சந் தோசம் கிடைக்கும்.

9.கற்பனை செய்யுங்கள்
உலகிலேயே அதிக சந் தோசம் கொடுக்கும் விசயம் - கற்பனைக்ளில் ராஜாவாகவோ ராணியா
கவோ வாழ்வது தான். எப்போதும் நல்ல விசயங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஏனென்றான் கற்பனைகள் பல நிஞமாகி விடுமாம்.

10. அமைதி கொள்ளுங்கள்
வாரம் ஒரு முறையாவது எந் த சத்தமும் இல்லாத இடத்தில் அரை மணி நேரம் அமைதியார்
இருங்கள். அந் த வாரம் நடந்த ந்ல்லவைகளை நினைத்துக்கொள்ளுங்கள். கெட்டவற்றை தூரப்
போடுகங்கள். இதனால் மனது சுத்தமாகும்.

மனதை அழகு படுத்தும் இந் த வழிகளை பழக்கப்படுத்திக்கொண்டால் எப்போதும் நீங்கள்
உற்சாகமாகவும் அழகாகவும் இருப்பீர்கள்.

.................
இது நான் புத்தகம் ஒன்றில் படித்தேன்..உங்களுக்கும் தெரியப்படுத்தலாம் என்று நினைத்தேன். :roll:

Print this item

  காதலை யாரடி முதலில் சொல்வது..!
Posted by: SUNDHAL - 07-31-2005, 03:37 PM - Forum: நகைச்சுவை - Replies (22)

லவ் ஃ லாஸ்ட் நிமிடம்!

உங்க காதலி என்னிக்காவது எங்கேயாவது வெளியூருக்கு கிளம்பலாம், அது என்னிக்கு, எப்படின்னு தெரிஞ்சு வைச்சுக்கோங்க. இப்ப உதாரணத்துக்கு உங்க காதலி சொப்னா கருவாயன்பட்டிக்கு "கூ..குச்...குச்..' வண்டியில கிளம்பலாம். இன்னும் ரெண்டு நிமிசம்தான் இருக்கு ரயிலு கௌம்ப! 'நான் போயி தண்ணி புடிச்சிட்டு வாரேன்னு' பாட்டிலோட நீங்க எங்கியாவது தள்ளி போயி நின்னுக்கணும். ரெட்டு லைட்டு, ஆரஞ்சாகி, பச்சையா பல்லைக்காட்டும்... ரயிலு நகர ஆரம்பிக்கும். நீங்க "ச்ச்சொப்புனா ஆஆ...'ன்னு கத்திக்கிட்டே தண்ணி பாட்டிலோட அங்கேயிருந்து ஸ்டைலா ஓடி வர ஆரம்பிக்கணும்.

நாலு பேர் மேல மோதணும்; ரெண்டு தடவை லக்கேஜ் தட்டி விழணும். நீங்க இப்படி பரபரப்பா ஓடி வர்றதை உங்க காதலி படபடப்பா பாக்கணும். "இந்தா புடிச்சுக்கோ'ன்னு பாட்டிலை அந்தக் கடைசி நிமிசத்துல அவ கையில கொடுக்கறப்போ, "ஐ லவ் யூ'ன்னு ஒரு குட்டி பேப்பர்லே (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம) எழுதிக் கொடுத்துரணும். அந்த "லவ் ஃ லாஸ்ட் நிமிட்'ல காதல் குபீர்னு பத்திக்க 99% சான்ஸ் இருக்குன்னு "லவ்வாயணம்' சொல்லுது. சொப்னா சட்டுன்னு செயினைப் புடிச்சி இழுத்து ரயிலை நிறுத்தி இறங்கி வந்து கையை நீட்டி..."நாலு அறை' கூட விடலாம். யாரு கண்டா!


ரெமோ நமஹ!


பஸ்ஸ்டாப்ல சொப்னா நிக்கிறா! உங்க காதலியை விட அதிகமான முடியை நீங்க வைச்சிக்கிட்டு, 300 கிலோ வெயிட் உள்ள பைக்ல ஸ்டைலா (உருட்டிட்டு போயாவது) நிக்கணும். அவ கண்ணை நேருக்கு நேரா, 90 டிகிரியில பார்த்து, அவ முகத்து பக்கத்துல உங்க முகத்தைக் கொண்டு போயி (கண்டிப்பா பல் தேய்ச்சிருக்கணும்) ""இருக்கு..புடிச்சிருக்கு..உன்னை..மனசை.. காதலை..எல்லாம்..

புடிச்சிருக்கு..காதலிக்கிறேன்னு'' அவளுக்கு மட்டுமாவது கேக்குற மாதிரி சொல்லணும். அவ அதிர்ந்து நிக்கிறப்போ, ""நம்பலேல...நீ என்னை நம்பலேல''ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே திரும்பாம ரெமோ ஸ்டைல்ல ரோட்டைப் பின்பக்கமா நடந்தே கிராஸ் பண்ணனும்.(ரெட் சிக்னல் விழுந்திருக்கிற நேரம் பாத்து கிராஸ் பண்ணனும். இல்லேன்னா மவனே சட்னிதான்!) இப்படியே குறைஞ்சது பதினாலு தடவையாவது செஞ்சா லவ் சிக்னல் கெடைக்க வாய்ப்பிருக்கு. இல்லாட்டி...அவளுக்கு பஸ் கிடைச்சிருக்கும், ஏறிப் போயிருப்பா!


கவிதையே தெரியுமா!


கவிப்பித்தன், காதல் அடியாள், ரொமான்ஸ்தாசன், ரோமியோநேசன் இப்படி யார்கிட்டயாவது போய் கடன் கேளுங்க..பணம் இல்லீங்க, உங்க மனசை அவகிட்ட 'படார்'னு தொறந்து காட்டுற மாதிரி ஒரு கவிதையை செஞ்சு தரசொல்லுங்க!யாரும்கிடைக்கலியா..கழுத..கவிதைதானே..எழுதி ட்டாப் போச்சு..5 இங்கிலீசு வார்த்தை, நாலரை தமிழ் வார்த்தை, 25 கிராம் மானே, மீனே போட்டு தாளிச்சு இறக்கிட்டா சுடச்சுட கவிதை ரெடி! இப்ப உதாரணத்துக்கு,

""சன்னைத் தின்ன முடியாது..மானே
உன் கண்ணு சன்னு!
பப்ûஸத் தின்ன முடியும்..மீனே
உன் லிப்ஸ் பப்ஸ்!
ரோஸþக்கு நோஸ் கெடையாது..தேனே
உன் நோஸ் ரோஸ்!
சொப்னா..
என் எதயம் ஒரு ஏஹழ்க் ஈண்ள்ந் ...
நீ வந்துப்புட்ட..
இனி அது ஏங்ஹழ்ற் ஈண்ள்ந்!
நீ உன் எதயம் ஞ்ண்ஸ்ங்..
நான் என் எதயம் ஞ்ண்ஸ்ங்..
அதுக்குப் பேருதான் லவ்வு!''

இப்படி ஜிவ்வுன்னு ஒரு கவிதைய போட்டுத்தாக்கினா அதுக்கப்புறம் சான்úஸ இல்லை. அட ஆளு மயங்கிடும்பா!


50 பைசா காதல்!


டவுன் பஸ்..முதல் சீட்டில் சொப்னா! நல்ல கூட்டம்.. 'கொருக்குப்பேட்டை ஒண்ணு'ன்னு டிக்கெட்டுக்கு உங்ககிட்ட பத்து ரூபாய பாஸ் பண்ணுறா! நீங்களும் கண்டக்டர்கிட்ட அந்த 'புனித' நோட்டை அனுப்பி விடுறீங்க! '50 பைசா சில்லறை வேணும்னு கண்டக்டர் கேப்பாரு. நீங்க யோசிக்காம 50 பைசாவை கர்ணப்பிரபுவா எடுத்து நீட்டி அந்த டிக்கெட்டை எப்படியாவது சொப்னாவுக்கு வாங்கி கொடுத்துரணும். சொப்னா அவசரமா அவளோட குட்டி ஹாண்ட்பேக்ல ஒரு குகையில இருந்து 50 பைசாவை எடுத்து 'தாங்ஸ்'னு நீட்டுவா! உடனே கருமம் பிடிச்ச மாதிரி வாங்காம, 'எனக்கு 50 பைசா வேண்டாம், இந்த 50 கிலோ மிராண்டா பாட்டிலோட இதயம்தான் வேணும்'னு ஒரு பஞ்ச் டயலாக்கை எடுத்து விடணும். அப்புறமென்ன..உங்களுக்கு பாலிஷ் போட பஸ்சு 50 அடி தள்ளிப்போய் போலீஸ் ஸ்டேஷன்லே போய்கூட நிக்கலாம்.


போஸ்டர் விடு தூது!


சொப்னா நாய்க்குட்டிக்கு பொறந்த நாளா, அவ பாட்டிக்கு (12வது தடவையா) 51வது பொறந்தநாளா, அவளோட பாசத்துக்குரிய பக்கத்து வீட்டு தாத்தா மண்டையப் போட்டுட்டாரா, அவளோட பேவரிட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் படம் ரிலீஸ் ஆகுதா, உடனே நீங்க போஸ்டர் அடிச்சு ஒட்டிரணும். சொப்னாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல பொறந்தநாள் வருதா முடிஞ்சா இப்பவே கட்-அவுட் வைச்சிருங்க! இப்படியே போய்க்கினு இருந்தா ஒரு நாள் 'ஏன் இப்படி பண்ற?'ன்னு சொப்னா கேட்பா! அப்ப காதலை கண்டமேனிக்கு கொட்டிரனும். அப்பவும் உட்டுட்டா...அவ கல்யாணத்துக்கும் நீங்கதான் போஸ்டர் அடிக்கணும் மாமு!


நஙந புரட்சி!


காதலை நேரே சொல்லப்போனா உதடு 'ஒத்துழையாமை இயக்கம்' நடத்துதா! கவலையை விடுங்க! இருக்கவே இருக்கு செல் பேசும் வார்த்தைகள்..அதாம்பா நஙந. அதுலயும்

ஐ ப்ர்ஸ்ங் ம அப்படிங்கிற வார்த்தை மொத்தமா அனுப்ப விரலு மிரளுதா! தவணை மொறையில ஒவ்வொரு எழுத்தா குழப்பி குழப்பி அனுப்புங்க. ஆனா எப்படியாவது தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ஒரு மாசத்துக்குள்ள மொத்த எழுத்துக்களையும் அனுப்பி வைச்சுருங்க! இது ரொம்ப பாதுகாப்பான வழி. இதுல உள்ள ஒரே ஒரு சின்ன ரிஸ்க், சொப்னா மெúஸஜை 'வ ஐ கஞயஉ ம' ன்னு தப்பா புரிஞ்சுக்கிட கூட வாய்ப்பிருக்கு! காதல்ல இதெல்லாம் சகஜம்பா!

ஆமா..இவ்வளவு அருமையான பொஸ்தகம் எங்க கிடைக்குதுன்னு சொல்லவே இல்லீயேன்னு வருத்தப்படாதீங்க..மொத்த பொஸ்தகமே இம்புட்டுத்தான். (ஒரு சின்ன திருத்தம் : பொஸ்தகத்தின் தலைப்பு மேல தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அது, 'லவ்வைச் சொல்லக்கூடாத சில ஜிவ் வழிகள்!)

ThnaksBig Grininamani

Print this item

  நீங்கா நினைவுகள்!
Posted by: SUNDHAL - 07-31-2005, 03:03 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

நீங்கா நினைவுகள்!


* நீ நடந்த பாதையில்

நித்தமும் நடந்தேன்

நிழலாய் தொடர்ந்தன...

உந்தன் நினைவுகள் – உன்

கால் பதிந்த சாலையை

கவனமாய் கடந்தேன்

கை சேர்த்து என்னோடு

வந்ததுன் நினைவுகள்!

* நீ சூடிய மலர்களை

சுகமாய் தொடுத்தேன்

கனவிலும் மணந்தது

காதல் நினைவுகள்... நீ

பாடிய வரிகளை நான்

பாடிக் களித்தேன்

கூடவே கேட்டது

குயிலாய் உன் குரல்!

* நீ நேசித்த கடிதங்களை

நிதமும் படித்தேன்

வாசிக்கும் போதெல்லாம்

வஞ்சியுன் நினைவுகள்... நீ

உரைத்த சொற்களை

உச்சரித்துப் பார்த்தேன்

ஒவ்வொரு கவிதையாய்

உன்னுடைய நினைவுகள்!

* நீ இருந்த இதயத்தில்

நினைவை சுமந்தேன்

இரும்பாய் கனத்தது

இளமை நினைவுகள்... நீ

மறுத்த காதலை

மறக்கப் பார்த்தேன்

முடியாத காரணத்தால்

மண்ணைப் பிரிகிறேன்!

— கு.மா.பா.கபிலன்

Print this item

  ஒரு உதவி செய்யுங்களேன்
Posted by: Jenany - 07-31-2005, 02:13 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (25)

nan entha oru topic itkkum pathil alikka ponal
viseeda uruppinarkal maddum than pathil alikka mudiyum enru solluthu.. ithatkku enna seya venum???? pls help......

தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்

Print this item

  மின்னலின் வணக்கம்
Posted by: மின்னல் - 07-31-2005, 04:02 AM - Forum: அறிமுகம் - Replies (63)

அனைவருக்கும் வணக்கம்

உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி

Print this item

  சின்னப்பு ஓட்டிய விமானம்
Posted by: ragavaa - 07-31-2005, 03:12 AM - Forum: நகைச்சுவை - Replies (24)

சின்னப்பு ஓட்டிய விமானம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item