| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 387 online users. » 0 Member(s) | 384 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,436
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,642
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,253
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,477
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,550
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,056
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| என்ன செய்ய வேண்டும்... |
|
Posted by: ப்ரியசகி - 08-03-2005, 07:48 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (47)
|
 |
<img src='http://img312.imageshack.us/img312/3644/eyes57zm.jpg' border='0' alt='user posted image'>
வானம் செய்ததென்ன
நீ பார்த்து ரசிக்க...
பூமி செய்ததென்ன
நீ நடந்து போக...
புத்தகங்கள் செய்ததென்ன
நீ எடுத்து படிக்க...
பேனா செய்ததென்ன
நீ பிடித்து எழுத...
கிற்ரார் செய்ததென்ன
உன் விரல்கள் மெல்ல தீண்ட...
மழை செய்ததென்ன
உன் மேல் சிதறி விழ...
பூக்கள் செய்ததென்ன
உன் இதழ்கள் தீண்டி செல்ல...
உன் அன்னை செய்ததென்ன
உன்னை மகனாய் பெற...
உன் தங்கை செய்ததென்ன
உன்னை அண்ணனாய் அடைய...
உன் நண்பன் செய்ததென்ன
உன் நட்பை பெற...
நான் செய்ய வேண்டியதென்ன
இந்த ஒரு ஜென்மமாவது உன்னோடு வாழ................
|
|
|
| இடதுசாரிகள்- வலது குறைந்தவர்களா? மனநோயாளிகளா? |
|
Posted by: cannon - 08-03-2005, 07:16 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (2)
|
 |
நேற்றுக்காலை வெக்ரோன் தொலைக்காட்சியில் "விடியல்" நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் செய்தி ஆய்வில் கலந்து கொண்ட தயானந்தா அவர்கள், "ஜெ.வி.பி", "இடசாரிகள்" சம்பந்தமான உரையாடல் வந்தபோது, பங்குபற்றிய விருந்தினர் ஜெ.வி.பியை இடதுசாரிகள் என்றழைப்பதை ஆமோதிக்காது போது, தயானந்தா அவர்கள் ஜெ.வி.பியினர் இடதுசாரிகள்தான்! என்று உறுதியாகக்கூறி, ஏனென்றால் "வலது குறைந்த கும்பல்கள் - இடதுசாரிகள் " தானென்றார்.
ஆனால் உண்மையில் இந்த ஜெ.வி.பியினரின் கடந்தகால, நிகழ்கால செயற்பாடுகளை பார்க்குமிடத்து, வலதுகுறைந்தவர்கள்! என்றழைப்பதைவிட மனநோயாளிகள்! என்றழைப்பதே பொருத்தமாகவிருக்கும்.
இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக.....
Quote:விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கா இராணுவம் உதவி: விமல் வீரவன்ச
சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவத்தினர் எமது இராணுவத்தினரின் உட்தகவல்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முகாம்கள் குறித்து இராணுவத்தினர் அறிந்து வைத்துள்ள தகவல்கள் அனைத்தையும் கணனியில் பதிவுசெய்து கொண்டு சென்றுவிட்டனர்.
இது மிகவும் பயங்கரமான நிலை. இவையனைத்தையும் தெரிந்து கொண்டும் எமது தலைவர்கள் மௌனம் சாதித்து வருகின்றனர் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் இணைத்தலைவரான விமல் வீரவன்ச காலியில் நடைபெற்ற அதன் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கூறியுள்ளார்.
அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது:
எமது நாட்டின் அரசியல் நெருக்கடிகள் புதிய புதிய மாற்றங்களுடன் அதிகரித்துச் செல்கிறது. இந்த நெருக்கடிகள் ஒருநேரம் ஒரே அளவில் இருக்கிறது. மறுநேரம் அதிகரித்துச் செல்கிறது.
அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆழிப்பேரலை நிவாரண சபை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் இந்தப் பிரச்சனை அதிகரித்துள்ளது.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியதொரு தலைவரை நாம் தெரிவு செய்து கொள்ளாததாலேயே இவ்வாறான பிரச்சனைகள் எழுகின்றன. இங்கிருப்பது தலைமைத்துவம் பற்றிய பிரச்சனையாகும்.
சரியான தலைமைத்துவம் இருந்த காலங்களில் இந்த நாடு நேராக இருந்தது. தேசிய பாதுகாப்பு நல்ல நிலையில் இருந்தது. கலாச்சாரமும் பொருளாதாரமும் சீராக இருந்தது. இன்று இருக்கும் பிரச்சனை சரியான தலைமையின்மையாகும்.
அரசுத் தலைவர் தனது தனிப்பட்ட பிரச்சனைகள் இரண்டை தலையில் வைத்துக் கொண்டே இந்த விடயத்தை நோக்குகிறார். அவருக்கு தேவையான வகையில் நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டுமாயின் நாடு ஸ்திரமற்ற நிலையில் இருக்க வேண்டும். அடுத்து பதவியை பிடிக்க வரும் தலைவரால் அந்த போட்டியில் வெல்ல முடியாத நிலையை ஏற்படுத்தவும் வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க அன்று செய்ததும் இதனையே. காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டமைக்கும் இதுவே காரணம். உலகின் புதிய அடிப்படைவாதிகளின் ஆதரவு ரணில்இ சந்திரிகா இருவருக்குமே கிடைக்கிறது.
மகிந்த ராஜபக்ச இவற்றை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மேற்கத்தேய ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தேவை பிரிவினையை வேண்டும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதமே. அவர்களுக்கு பிறிதொரு இராஜ்ஜியத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் நாட்டின் வளங்களை சூறையாடுவதுமே அவர்களின் திட்டம். அவர்களுக்கு தேவை இலங்கையை கரைத்து அழிப்பதாகும். பொருளாதார ரீதியாகஇ சமூக ரீதியாகஇ கலாச்சார ரீதியாக அதனை அவர்கள் ஆற்றிவருகின்றனர்.
மேற்கத்தேய சக்திகளின் தேவைக்காக இங்கிருக்கும் அரசசார்ப்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் விவகாரத்து சட்டத்தை விரிவாக்கும் ஒரு சட்டமூலத்தை கடந்த காலத்தில் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் எங்களின் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அந்த சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவர முயல்கின்றனர். இதன்மூலம் எமது சமூகத்தில் குடும்ப அமைப்பானது சீர்குலையும் நிலை ஏற்படும்.
இந்த செயற்பாடுகளால் எதிர்ப்பார்ப்புகள் பொய்த்துப் போதல் மற்றும் விரக்தி ஏற்படுவதால் நாட்டை பலவீனமாக்குதல் மேலும் இலகுவாகும்.
நோர்வே அரசு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும் வழங்குகிறது. எதிர்காலத்தில் கொழும்பு கோட்டை பகுதி முழுவதையும் வன்னியிலிருந்தவாறே வெடித்துச் சிதற வைக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் தற்போது புலிகளிடம் உள்ளன. அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் உதவிகளின் சிறியளவு தொடர்பான தகவல்களே வெளிவருகின்றன. சமாதானத்தின் பெயரால் நாட்டின் பாதுகாப்பு பலியிடப்பட்டுள்ளது.
இன்று எமது இராணுவ அதிகாரிகள் பலர் அரசுத் தலைவரை விட சமாதான சலாட்டில் மூழ்கியுள்ளனர். அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
எமது நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக நோர்வே தரப்பினர் பல திட்டங்களை வகுக்கின்றனர். இதற்கென பௌத்த கலாச்சாரத்தை குலைப்பதற்காக சங்க சபையினரின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றனர். தேசிய பற்றையும் சமூக பற்றையும் அழிக்கின்றனர்.
இப்போது கல்வி சீர்த்திருத்தங்களைக் கொண்டுவர கல்வியமைச்சின் செயலாளர் முயற்சிக்கிறார். அவற்றிற்கு தேவையான நிதியை உலக வங்கியே வழங்குகிறது. அதன் மூலம் செய்யப்படப்போவது சர்வதேச பாடசாலைகளின் மூலமான பிரிதொரு வகுப்பினை ஏற்படுத்துவதாகும். ஏமது நாட்டின் பலவீனமான தலைவர்களினூடாக மேற்கத்தேய சக்திகள் இந்த செயற்பாடுகளை மேற்கொள்கிறது.
இவ்வாறான நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய தைரியமானஇ நேர்மையானஇ தலைமையே எமக்குத் தேவை.
இந்நாட்டு புலனாய்வுப்பிரிவினரை அழிப்பதற்கு ரணிலின் சமாதான உடன்படிக்கைகளே உதவின. சந்திரிகாவின் உடன்படிக்கையினால் புலனாய்வுப்பிரிவு முழுமையாக செயழிலக்கும்.
அதனால் இந்நாட்டிலிருக்கும் தேசிய சக்திகளை இனிமேலும் ஏமாற்ற இடமளியாது முற்போக்குச் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து எமது தாய்நாட்டிற்கு எதிரான அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள இயக்கத்தின் இணைத்தலைவரும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
...... இந்தப் பேச்சையே எடுக்கலாம்.
இவர்கள் மட்டுமல்ல, தாடி வளர்த்ததால் மாக்ஸ்ஸிய இடதுசாரியாகிய எச்சிலிலை "டக்லஸ்" ஆகட்டும், இப்படிப் பலர் இடதுசாரிகளென இலங்கைத்தீவில் திரிகிறார்கள்.
வலதுகுறைந்தவர்கள், மனநோயாளிகள், எச்சிலிலைகள், கொலை-கொள்ளைக்காரர்கள், ... எல்லோரும் இடதுசாரிகளாம்! உங்கள் கருத்துக்கள் இந்த "இடதுசாரிகள்" தொடர்பாக என்னவென்று இங்கே கூறுங்கள்/எழுதுங்கள்.
|
|
|
| ப்ரியசகி |
|
Posted by: Mathan - 08-03-2005, 01:38 PM - Forum: சினிமா
- Replies (57)
|
 |
ப்ரியசகி
<img src='http://img135.imageshack.us/img135/1083/priyasakhi4gg.jpg' border='0' alt='user posted image'>
திகட்ட திகட்ட தித்திக்கிற காதல், திருமணத்திற்கு பின்பும் தொடர்கிறதா? சீரான வேகத்தில் ஒரு ஜோரான கதை! ப்ரியாவும் சந்தான கிருஷ்ணனும்தான் ப்ரியசகி. இவர்களின் ப்ரியத்திற்கிடையில் சதியாக நுழைகிற சமாச்சாரம் என்ன என்பதை அழகான நீரோட்டமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.அதியமான்.
ஆபிஸ் விஷயமாக துபாய் போகிற மாதவன் அங்கே மாடல் அழகி சதாவை சந்திக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் சதாவின் மனசை அலைபாய விடுகிறார். பிறகு? ஹைகிளாஸ் சதா, அப்பர் மிடில்கிளாஸ் மாதவனுக்கு மனைவியான பின் அனுபவிக்கிற தொல்லைகளும் துயரங்களும் வேக வேகமாக நகர்கின்றன. டைவர்ஸ் செய்து கொள்கிற இந்த ஜோடி, மீண்டும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
துபாயில் சதாவை சந்திக்கிற மாதவன் மெல்ல மெல்ல அவரை தன் வலைக்குள் வசீகரித்துக் கொள்வது படம் பார்க்கிற இளசுகளையும் கிறங்கடிக்கும். ஒவ்வொரு முறை சதா முறைத்துக் கொள்வதும், அவரை மாதவன் சமாதான படுத்துவதும் அழகழகான குட்டி கவிதைகள். மாதவனின் அலைபாயும் கூந்தல் அழகு. அடிக்கடி சிரிக்கும் அவரின் வசீகரம் அழகு. ஆனால் சதா?
நடிப்பில் அவர் வாங்குகிற மதிப்பெண்களை விடவும் அழகுக்காக அவர் வாங்கும் மதிப்பெண்கள் ரொம்பவே கம்மி. இவரின் கர்ப்பத்தை நினைத்து குடும்பமே சந்தோஷத்தில் மிதக்க, ரொம்ப கேஷ§வலாக ÔÔஅபார்ஷன் பண்ணிக்கிட்டா என்ன?ÕÕ என்று மாதவனிடம் கேட்கிறாரே... பகீர்! அடுத்த வினாடியே அம்மா ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, ரகசிய அபார்ஷனுக்கு ரெடியாகிறது ஐஸ்வர்யா கோஷ்டி! இது புரியாமல் ஐஸ்வர்யாவிடம் போய் ÔÔநீங்க பாட்டியாக போறீங்கÕÕ என்கிற மாதவன் வீட்டாரை பார்த்து அதிர்கிறாரே ஐஸ்வர்யா.. குலுங்குகிறது தியேட்டர்.
காமெடிக்கென்று தனி டிராக் போடாமல் கதையோடு சேர்த்து தெளித்திருக்கிறார்கள். புதுமண தம்பதிகள் ÔபோகோÕ சேனல் பார்ப்பதாக பொய் சொல்லிய அடுத்தநாளே குட்டீஸ்கள் இரண்டும் நாங்களும் ÔபோகோÕ சேனல் பார்க்கிறோம் என்று தம்பதிகள் அறைக்குள் தஞ்சமடைவதும் உதட்டோர புன்னகையை வரவழைக்கிறது.
கலாச்சாரம் எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதை இதைவிட சுவாரஸ்யமாக சொல்லிவிட முடியாது. ÔÔத்தோ இருக்காளே... இவ ஏழு தடவ அபார்ஷன் பண்ணியிருக்காÕÕ ÔÔரொம்ப ஆசைப்படுறா... ஒரு தடவ கல்யாணம் பண்ணிதான் பாரேன்ÕÕ இப்படி போகிற போக்கில் வெடி கொளுத்தி போடுகிறார் இயக்குனர்.
ஜீவனை குழைத்து தருகிற பாடல்கள். மனசை சுண்டியிழுக்கும் பின்னணி இசை என்று ஜமாய்த்திருக்கிறார் பரத்வாஜ். குறிப்பாக Ôமுதல் முதல்Õ என்ற பாடல்.
துபாயை இத்தனை அழகாக எந்த படத்திலாவது காட்டியிருக்கிறார்களா? பிரமிப்பு! ஒளிப்பதிவு சேது ஸ்ரீராம்.
ப்ரியசகி- கறிக்குழம்பு வாசத்திற்கு நடுவில் மரிக்கொழுந்து வாசம்!
தமிழ் சினிமா
|
|
|
| என் காதலே... |
|
Posted by: Jenany - 08-03-2005, 09:01 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (25)
|
 |
//நான் தூக்கி சென்ற புத்தக சுமைகளை விட மூட்டை மூட்டையாய் உன் கனவுச் சுமைகளை கனக்க சுமந்து அலைகிறேன்.
கருப்பு வெள்ளை வார இதழில் கவிதை மட்டும் என் கண்ணுக்கு வர்ணமாய் காண மகிழ்கிறேன்.
மதியவேளை மண்டை பிளக்கும் வெய்யிலில் மனசுக்கு பிடித்த உன்னைக் காண தவறாமல் நிக்கிறேன் திரும்பி கூட பார்க்காத உன் பார்வைக்காக நானும் என் காதலும்...........//
நான் தூக்கி சென்ற
புத்தக சுமைகளை விட
மூட்டை மூட்டையாய்
உன் கனவுச் சுமைகளை
கனக்க சுமந்து அலைகிறேன்.
கருப்பு வெள்ளை வார இதழில்
கவிதை மட்டும் என்
கண்ணுக்கு வர்ணமாய்
காண மகிழ்கிறேன்.
மதியவேளை
மண்டை பிளக்கும் வெய்யிலில்
மனசுக்கு பிடித்த
உன்னைக் காண தவறாமல் நிக்கிறேன்
திரும்பி கூட பார்க்காத
உன் பார்வைக்காக
நானும் என் காதலும்............
தலைப்பு திருத்தி தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி
|
|
|
| சுவிற்சலாந்துச் செய்திகள் |
|
Posted by: sinnappu - 08-03-2005, 07:32 AM - Forum: புலம்
- Replies (76)
|
 |
<b>சுவிற்சலாந்து வாழ் கள உறவுகளே இப்பகுதியில் உங்களுக்கு தெரிந்த நீங்கள் அறிந்த சுவிற்சலாந்து செய்திகளை தாருங்கள்</b>
<img src='http://img63.imageshack.us/img63/6678/switzerc8kr.gif' border='0' alt='user posted image'>
(ஓய் சாத்திரி அதுக்கா இங்கை எழுதிறேல்லை அங்கை ஓடீட்டாள் இங்கை ஓடீட்டாள் எண்டு :evil: )
|
|
|
| தமிழ்ப் படங்களில் நடிக்க மாதவனுக்கு திடீர் தடை |
|
Posted by: Rasikai - 08-03-2005, 01:34 AM - Forum: சினிமா
- Replies (17)
|
 |
தமிழ்ப் படங்களில் நடிக்க நடிகர் மாதவனுக்கு திடீர் தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.
"தயாரிப்பாளர்கள் நியாயமாக நடப்பதில்லை' என ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார் மாதவன். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் மாதவன் மீது சில தயாரிப்பாளர்கள் புகார் அளித்தனர்.
இது குறித்து மாதவன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே மாதவனை இனி எந்த புதிய படத்திலும் நடிக்கவைக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலர் ஏ.எல். அழகப்பன் கூறியது:
மாதவன் மீது புகார் வந்ததால் அவரை எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.
யாரோ ஒரு தயாரிப்பாளர் சரியில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கு எதிராக பேசுவது சரியல்ல.
இது குறித்து மாதவன் விளக்கம் அளிக்கவும் அவருக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவர் கடிதம் அனுப்ப வேண்டும். அவர் விளக்க கடிதம் அனுப்பி மன்னிப்பு கேட்டால் அவர் மீதான தடை உடனடியாக விலக்கப்படும்.
அவர் நடித்து வரும் "தம்பி' படத்துக்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை.
http://www.vaddakkachchi.com/viduppu/index...rt_from=&ucat=&
|
|
|
|