| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 359 online users. » 0 Member(s) | 356 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,086
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,517
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| பொங்கு தமிழ் - 2005 |
|
Posted by: iruvizhi - 09-23-2005, 11:59 AM - Forum: தமிழீழம்
- Replies (8)
|
 |
தமிழீழ தனியரசுக் கோரிக்கையை சர்வதேச சமூகம் அங்கிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 30ம் நாள் யாழ். குடா நாட்டில் நடைபெறவுள்ள 'பொங்குதமிழ் - 2005" எழுச்சி நிகழ்வுக்கு சர்வதேச நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகள், பொது அமைப்புக்கள், பல்கலைக் கழக தமிழ் மாணவர் ஒன்றியங்கள் என்பன ஆதரவு செய்திகளை அனுப்ப விரும்பின் எதிர்வரும் 27ம் நாளிற்கு முன்பாக pழபெரவயiஅடை2005@லயாழழ.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி
யாழ் பொங்குதமிழ் ஏற்பாட்டுக்குழு
நன்றி சங்கதி
|
|
|
| யாழ்ப்பாணம் ஒரு வரலாறு...... |
|
Posted by: Thala - 09-23-2005, 08:43 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (20)
|
 |
<b>யாழ்ப்பாண இராசதானி</b>
<b>(விக்கிபீடியாவில் இருந்து)</b>
(யாழ்ப்பாண அரசு இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன.
யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களிலொன்றான <b>வையாபாடல்</b> <b>இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 இவ்வரசு கி.பி. --- யில் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களம் அமைத்துக் கொடுத்தன என்பது அவர்களது கருத்து.
யாழ்பாடி வாரிசு இல்லாது இறந்த பின்னர், இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட, கூழங்கைச் சக்கரவர்த்தியிலிருந்து தொடங்கி, ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்ட வம்சம், அரசு போர்த்துக்கீசர் கைப்படும்வரை ஆண்டு வந்தது. இவர்கள் பரராசசேகரன் செகராசசேகரன் என்ற பட்டப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு ஆண்டு வந்தனர்.
யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென [b]சிங்கைநகர், நல்லூர்</b> என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் இறுதிக்காலத்தில் தலைநகராயிருந்ததென்பதில் ஐயமெதுவும் இல்லை. சிங்கைநகரென்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள <b>வல்லிபுரப்பகுதியில்</b> அமைந்திருந்ததென்றும், இவ்வரசின் ஆரம்பகாலத் தலைநகரம் இதுவேயென்றும் சிலர் கூற, சிங்கைநகரென்பதும் நல்லூரையே குறிக்குமென்றும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர் மட்டுமேயென்றும் வேறு சிலர் கொள்வர்.
இதேபோல யாழ்ப்பாண அரசின் ஆட்சி எல்லை பற்றியும் தெளிவு இல்லை. குடாநாட்டுப்பகுதியைத் தளமாகக் கொண்டு, சமயங்களில் இவ்வரசின் எல்லை, <b>வன்னிப்பிரதேசம் முழுவதையும் உள்ளடக்கி, மேற்குக் கரையில் புத்தளம் வரை கூடப் பரந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.</b>
கி.பி.1450ல் யாழ்ப்பாணம் தென்னிலங்கையிலிருந்து படையெடுத்துவந்த, செண்பகப் பெருமாள் என்பவனிடம் தோல்வியடைந்தது. எனினும் 17 வருடங்களின் பின், தோற்றோடிய கனகசூரிய சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து படைதிரட்டிவந்து இழந்த நாட்டை மீட்டான்.
16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கீசரின் நடமாட்டம் இலங்கையையண்டிய கடற்பிரதேசங்களில் அதிகரித்து இலங்கை அரசியலிலும் அவர்கள் தலையிடத் துவங்கிய பின்னர், யாழ்ப்பாண இராச்சியத்திலும் அவர்கள் பார்வை விழுந்தது. போர்த்துக்கீசரின் செல்வாக்கால் இப் பிராந்தியத்தில் கத்தோலிக்க மதம் தலையெடுக்க ஆரம்பித்து, யாழ்ப்பாண இராச்சியத்திலும் மதமாற்றங்கள் தொடங்கியபோது, அப்போதைய யாழ்ப்பாண அரசன், தனது ஆளுகைக்குட்பட்ட மன்னாரில் அவ்வாறு மதம் மாறியோரைச் சிரச்சேதம் செய்வித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனைச் சாக்காக வைத்துக்கொண்டு, 1560ல் போர்த்துக்கீசத் தளபதி டொம் கொன்ஸ்டண்டீனோ டி பிரகன்ஸா, யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். இதன் பின்னர் 1620 வரை போர்த்துக்கீசரின் தயவிலேயே யாழ்ப்பான மன்னர்கள் நாட்டை ஆண்டுவந்தனர். 1620ல் இராச்சியத்திலேற்பட்ட பதவிப் போட்டியைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததின் மூலம், யாழ்ப்பாண மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்த இராச்சியம் 1658ல் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. இவர்கள் 138 வருடகாலம் ஆண்டபின், 1796ல் யாழ்ப்பாணத்தை பிரித்தானியரிடம் பறிகொடுத்தனர். பிரித்தானியர் யாழ்ப்பாணத்தையும், அவர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் சேர்த்து ஒரே அலகாக நிர்வகித்தனர். 1948 பிப்ரவரி 4ஆம் திகதி, முழுத்தீவையும் ஒரே நாடாகவே சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறினர்.....
|
|
|
| காதல் ஒரு வாழ்க்கைப் பாடம்..! |
|
Posted by: kuruvikal - 09-23-2005, 07:28 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (22)
|
 |
<img src='http://sooriyan.com/images/stories/AJ/heart.jpg' border='0' alt='user posted image'>
<b>சிறு வயது முதல் காதல் என்பது பற்றி பெற்ரோர் கருத்துக் கொள்வதில் இருந்து அது ஓர் கெட்ட செயல் என்றும், சிறுவயதில் இருந்து நான் காதலித்துவிடக் கூடாது என்ற முடிவுக்கும் வந்திருந்தேன். சிறு வயதில் இருந்து அதனால் தானோ என்னவோ எனக்கு பெண்களைப் பிடிப்பதில்லை. பெண்களைப் பிடித்துக் கொண்டால் காதலித்து விடுவேன் என்ற பயத்தினால் கூட இருந்திருக்கலாம்.</b>
<b>காதலைப்பற்றிய எழுத்தாளர்களின்...</b>
எண்ணகளில் "அது ஓமோன்களின் தூண்டுதலால் வந்தது" என்றோ "இது நிஐக்காதல் தானோ அல்லது Infatuation என்பதோ தெளிவில்லை" என்றோ கூறப்பட்டாலும், எனது அந்த அரும்பு மீசை காலத்து இனிய நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.
நிச்சயமாக அது காதல் தானா என்று இன்றுவரை என்னால் உறுதியாகக் கூறமுடியாமல் இருந்தாலும், அது எனது வாழ்வில் பாரிய திருப்பத்தை, பாரிய தாக்கத்தை, ஏற்படுத்தி விட்டது என்பது உண்மை.
சில உளவியல் நிபுணர்களை பொறுத்தவரை அவர்கள் காதலை காதலாக ஏற்றுக் கொள்கிறார்கள். உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி காதலின் முதல் படி பரீச்சயமே என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றார்கள். ஆனால் பலர் பரீச்சயத்தையே காதலாக கருதி விடுவதாகவும் இதனால் பல தோல்விகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்றும்; குறிப்பிடுகிறார்கள். அவர்கள் கருத்து படி ஒருவர் மீதான பரீச்சயம் அவருடைய அழகிலோ, அல்லது ஒருவரின் குறிப்பிட்ட திறமை காரணமாகவே ஏற்படலாமென்றும் இவ்வாறு ஏற்படுவது காதல் அல்ல என்றும் கூறிப்பிடுகிறார்கள். இவ்வகையான பரீச்சயத்தால் உண்டான நட்பால் அவர்களுக்கு இடையேயான புரிந்துணர்வு வளர்க்கப்படுகிறது என்றும், புரிந்துணர்வின் ஊடாக அவர்கள் தனது நண்பர் தனது வாழ்க்கை துணைக்கு ஏற்றவர் என்று முடிவு செய்கின்ற போது அளவுகடந்த புரிந்துணர்வால் காதல் பிறக்கிறது அங்கு தோல்விகளுக்கோ, இழப்புகளுக்கோ இடமில்லை. என்கிறார்கள். இதனால் நட்பை விட உயர்ந்தாக காதலை கருதுகிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கும் போது அவனும் அவளும் நீண்டநாட்களாக மனம் விட்டு பழகுகின்றபோது அவளுக்கு பிடிக்காதது என்பதற்காக அவனும், அவனுக்கு பிடிக்காதது என்பதற்காக அவளும் பலவற்றை தவிர்கிறார்கள், நீண்ட நாள் பழகியதால் அவர்களால் பிரிவைத் தாங்கமுடியவில்லை. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக உணர்கிறார்கள். ஆனால் காதலைச் சொல்லத் தயங்குகிறார்கள் அல்லது மற்றவர் காதலைச் வெளிப்படுத்தும் வரை காத்திருக்கிறார்கள் என்றும் அங்கேதான் நல்ல காதல் வெளிப்படுகிறது என்றும் கலாநிதி ருத்ரன் போன்ற உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள் அன்றியும் கண்டதும் காதல் சமாச்சாரங்கள் யதார்த்த வாழ்க்கைக்கு சரி வராது என்றும் அவை சமூகத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறதாகவும் உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேலும் புதிய இடத்தில் காணும் அழகான பெண்ணை கண்டு எந்த ஆணுக்கும் காதல் வயப்படுவதில்லை என்றும் கூறுகிறார்கள். மேலும் அவர்களின் கருத்துப் படி மனிதர்கள் அவர்களின் மனதில் ஏற்படுகின்ற சில மீள் பதிவுகளுடாகவே காதல் வயப்படுவதாகவும் கூறுவார்கள். ஆகவேதான் எப்பொழுது தொடங்கம் காதலிக்கிறீர்கள் என்று காதலர்களை கேட்டால், அவர்களால் சரியாக கூற முடியாததாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் முதல் காதலை மட்டுமே நிஜமான காதலாகவும் அதுவே புனிதம் மிக்கதாகவும் கருதுகிறார்கள். இதனால் எழுத்தாளர்களுக்கும் உளவியலாளர்களுக்கு இடையே பல கருத்து முரண்பாடுகள் இருப்பதைக் காண முடிகின்றது.
க.போ.த உயர்தரத்திற்காக சிறிய பாடசாலையிலிருந்து பக்கத்து ஊரிலுள்ள கல்லூரிக்கு சென்ற புதிதில் ஓர் கண்காட்சின் பொழுது ஓர் பெண்ணை சந்திக்க நேர்ந்தது அது 1999 ஐப்பசி 28. அந்த பள்ளிக்காலத்தில் காலத்தில் அவளை எனக்கு பிடித்ததால்தானோ என்னமோ மற்றறைய பெண்களையும் எனக்கு பிடிக்க தொடங்கியது. அத்துடன் அவர்களை மதிக்கவும் தொடங்கினேன். ஏன் அவளை எனக்கு பிடித்துக் கொண்டது? அவளது அந்த துருதுருத்த சின்னஞ்சிறு கரு விழி பார்வை என்னை மயங்கியதால் இருக்கலாம். அல்லது ஒற்றைப்பின்னல் கூந்தலுடன் அவள் அழகாக அங்கு வைக்கப்பட்டிருந்த நளதமயந்தி செய்யுள் கோவையை விபரித்த விதம் எனக்கு பிடித்திருக்கலாம். இதனை உளவியல் நிபுணர்கள் கருத்துப்படி பரீட்சையமாக கருதலாம். ஆனால் அதன் பின் நான் வெறுமை உணர்ந்தாகவே கருதுகிறேன். ஆனால் இதனையே நான் வைரமுத்து அவர்களின் "உனது வயிற்றுனுள் ஏதோ ஓர் உருட்டை உருளுவதாக உணர்வாய்" போன்ற காதல் பற்றிய எண்ணக்கருவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அதனை காதலாக கருதி விட இடமுண்டு.
அந்த புன்னகை பூத்த முகத்தை தினம் தினம் பார்ப்பதற்காக ஏங்கியிருக்கிறேன். அது சிலவேளைகளில் இரண்டு மூன்று நாட்களுக்;கு இயலாது போகவே எனது அண்ணனாக கருதும் ஆண்டவனிடமே வேண்டியிருக்கிறேன். தயவு செய்து நாளைக்காவது அவளை பார்க்க வழி செய் என்று. நான் அவனிடம் பொதுவாக இதனை கேட்க விருப்பாவிட்டாலும் சில சிறிய சந்தோசத்திற்காக கேட்டுத்தான் இருக்கிறேன். ஆவளைக்கண்டதும் எனது முகத்தில் ஓர் பிரகாசம் தெரிந்திருக்கும், நிஜத்தில் நான் அப்போதெல்லாம் சந்தோசப்பட்டிருக்கிறேன் அதற்காக. ஆப்போதெல்லாம் நாங்கள் கோயில்களுக்கு தொண்டர்களாக செல்வதுண்டு அங்கே அவளது எதிர்கால கல்விக்காக ஆண்டவனிடம் விண்ணப்பித்திருக்கிறேன். ஆனாலும் அது நடந்ததாக அறியவில்லை. துனிமையில் பித்துப்பிடித்தவன் போல் இருக்கையில் நண்பர்பளின் "கடி"களுக்கு இலக்காகியிருக்கிறேன். ஆதற்காக நான் அவளைக் காதலித்து விட்டதாகச் சொல்லிவிடவில்லை.
நான் காதலிக்காததால் காதல் தோல்வியின் பாதிப்பை முழுமையாக விளங்காவிட்டாலும் மனிதம், மனித உணர்வுகள் ஆகியவற்றை விளங்கி கொண்ட அடிப்படையில் சிறிதளவாகவேனும் புரிந்து கொள்ள முடியும். இம்முறை உயர்தர பரீட்சை வெளியான பிறகான ஓர் சம்பவம் எனது உள்ளத்தை நிஜமாகவே பாதித்து விட்டன என்றே கூறவேண்டும். அதனுடைய தாக்கம் தான் இக்கட்டுரை என்பதை ஒப்புக் கொள்ளவிருக்கிறது.
எனது வீட்டிற்கு அடுத்த தெருவில் வசித்து வந்த உயர்தரம் படித்து மூன்று பாடங்களில் அதி விசேட திறமை சித்திகளை பெற்ற அந்த சிறிய உள்ளம் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்து நொந்து போனேன். எங்களுடைய பார்வையில் அந்த துர் சம்பவம் தேவையற்றது என்று கருதினாலும் அந்த சிறிய உள்ளத்தை காதல் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதனை அதன் முடிவிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக இம்முடிவை நான் சரியென ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவள் தன் காதலை புனிதமாக கருதியதை நான் நினைத்து பெருமைப்படுகிறேன். இதனை தான் முதல் காதல், சிறு வயது காதல் நிஜமாகவும், புனிதமாகவும் இருப்பதாக எழுத்தாளர் சுஜாதா கருதுகிறார் எனவும் எண்ணத் தோன்றுகின்றது. எமது வாழ்க்கையில் எத்தனையோ காதல் வெற்றிகளை கண்டிருக்கிறோம். அக்காதல்களும் புனிதமாகவும் நிஜமாகவும், இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் சில இடங்களில் ஏற்படுகின்ற இழப்புகளினால் அவை பெருமை பெற்று விட்டதாகவும் கருதுகிறேன். இதனைத்தான் எனது நண்பன் கவிதையில் தாய், தந்தை தடுத்து பிரிந்தகாலம் நூறு வீதம் புனிதமான காதல் என்றானோ
காதல் ஆனாது சுஜாதா போன்ற எழுத்தாளர்களால் Infatuation என்றும் ஓமோன்களின் தூண்டுதல் என்று கருதப்பட்டாலும் ஆண்டவனால் இப் பூமியில் உயிரினங்களின் விருத்திக்காக படைக்கப்பட்டதான காதல் இன்று பல காதலார்களால் தவறாக பயன்பட்டாலும், உள்ளத் தூய்மைக்கு புனிதமான Infatuation க்கு மனிதத்தின் முழுமைக்கு காதல் தேவையானதாகவே கருதுகிறேன்.
நன்றி- சூரியன்.கொம்
|
|
|
| ஜே.வி.பி ஹெல உறுமயவுக்கும் பொங்கு தமிழுக்கு அழைப்பு! |
|
Posted by: வினித் - 09-23-2005, 07:23 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
ஜே.வி.பி ஹெல உறுமயவுக்கும் பொங்கு தமிழுக்கு அழைப்பு!
யாழ். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடை பெறவுள்ள "பொங்கு தமிழ்' எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஜே.வி.பி,ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிக ளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்சிகளுக்கான அழைப்பிதழ்களை பல்கலைக்கழகச் சமுகம் இரண்டு கட்சிகளின தும் முகவரியிட்டு அனுப்பியுள்ளது.
"பொங்கு தமிழ்' எழுச்சி நிகழ்வு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையைச் சர்வதேசச் சமுகம் அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரும் வகையில் பல்கலைக்கழகச் சமுகம் முன்னெடுக்கும் இந்த மாபெரும் எழுச்சி நிகழ்வில் இனவாதக் கட்சிகளின் பிரதிநிதிக ளும் கலந்துகொள்ளும் பட்சத்தில் அங்கு திர ளும் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை அவர்களும் அறிந்து கொள்வர்.
அதற்காகவே,இந்த அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று பொங்கு தமிழ் ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரி வித்தார்.
இதேவேளை தமிழ்,முஸ்லிம்,சிங்கள அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறு வனங்கள்,இலங்கையில் உள்ள வெளிநாட் டுத் தூதரங்கள் என்பவற்றுக்கும் பொங்கு தமிழுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கி றது.
|
|
|
| இன்னொரு வகையில் பயங்கரமாகும் குடாநாடு |
|
Posted by: வினித் - 09-23-2005, 07:20 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (2)
|
 |
சிறிலங்காவில் ஒரு தேர்தல் அதுவும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறப் போவது உறுதியாகி இருக்கின்றது. தென்னிலங்கை அரசியலரங்கில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் கொந்தளிப்புக்கள், கட்சிகளுக்கு இடையிலான உள் முரண்பாடுகள் என்ப வற்றுக்கு இடையில் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை பகடைக் காயாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மையமாக வைத்துக் கொண்டு தென்னிலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த தேர்தலில் எவர் வென்றாலும் ஆட்சியமைத்தாலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்கள்; கிடைக்கும் வழிமுறைகளுக்கு ஊடாக ஒடுக்கப்படுவார்கள் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.
இதுவரையான சமாதானத்துக்கான காலத்தை தென்னிலங்கை எவ்வாறு கையாண்டது, கையாள்கின்றது என்பதை நினைவுபடுத்தினால் இது மிகத் தெளிவாகும்.
சமாதான காலத்தை விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதற்கும் அவர்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களின் இயல்பு வாழ்வுக்கு எதிராகவும் செயற்படவல்லவர்களை வளர்த்தெடுப்பதற்கும் தான் தென்னிலங்கை பயன்படுத்திக்; கொண்டிருக்கின்றது. அது நடத்தி வரும் நிழல் யுத்தமும் ஜனநாயகவாத கோசத்தினூடாக மேற்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத இனவழிப்பும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக மோசமானவை.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்னதாக சிறிலங்கா படையினரின் பிடிக்குள் இருந்த பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் ஏன் வரவேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்களோ அதே சூழ்நிலையை, இப்போது திரும்பவும் சிறிலங்கா இராணுவம் ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளுக்கு விடுத்து வந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல் மூலம் அவர்களை வெளியேறச் செய்துவிட்டு சமூக விரோத சக்திகளையும் விடுதலை விரோத அமைப்புக்களையும் வளர்த்தெடுக்க அது முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. யாழ். குடா நாட்டின் இன்றைய நிலை மிக அப்பட்டமாக இந்த பயங்கரமான சூழ்நிலையை துலாம்பரப்படுத்துகின்றது.
குடா நாட்டுக்குள் விடுதலைப் புலிகள் பிரவேசித்ததையடுத்து பெருமளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்த சமூகவிரோதச் செயல்கள் அவர்கள் வெளியேறியதை அடுத்து இப்போது பெரும் விசுவரூபம் எடுத்திருக்கின்றன.
விடுதலைப் புலிகள் குடா நாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இவ்வாறானவைகள் இடம்பெறவில்லை என்று கூற இயலாது. சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களதும் அந்நிய புலனாய்வாளர்களினதும் ஏஜென்டுக்கள் இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவித்து செயற்படுத்தி வந்தன. விடுதலைப் புலிகள் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவற்றை தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் தான் கட்டுப்படுத்த முடிந்திருந்தது.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அங்கீகாரம் பெற்றிருந்த நபர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட இந்தவாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எதிர்ப் பிரசாரகர்களின் திசைதிருப்பல் உத்திக்கு வாய்ப்பளிக்கக் கூடியதாயிருந்தது. இதன் காரணத்தால் மிகச் சூட்சுமமான முறையில் நடக்கும் தமிழ் விரோத செயற்பாடுகளைக் கட்டப்படுத்த இயலாத தன்மை காணப்பட்டது.
ஆனால், இப்போது கட்டப்பாடற்று ஒழுக்க முறைமைகளை மீறிச் செயற்படத் தொடங்கியுள்ள இளைஞர் குழுக்களின் கை மேலோங்கிய தன்மை குடா நாட்டில் வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா படையினரின் பிடியில் குடா நாடு இருந்த ஆறாண்டு காலத்துள் கட்டுப்பாடற்று திறந்துவிடப்பட்ட சீரழிவு ஊடகங்களினதும் திரைப்படங்களினதும் தாக்கம் பல்வேறு அடிதடிக் குழுக்களை உருவாக்கியது.
தென்னிந்தியத் திரைப்படங்களின் பெயரில் ஒவ்வொரு குழுக்களும் உருவாகி தெருச்சண்டியர்களாக அடாவடித்தனம் காட்டத் தொடங்கின. இதனால் சாமானிய மக்கள் தெருவில் இறங்குவதோ நியாயப்படி நடந்து கொள்வதோ இயலாததாகும் நிலை உருவானது.
சிறிலங்கா இராணுவத்தினரின் பின்னணியுடன் இயங்கிய அநேகமான இந்தக் குழுக்கள் போதைப் பொருள் விநியோகம், இளம் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துதல், வாகனங்களில் வந்து பாடசாலை மாணவியரைக் கடத்திச் செல்லுதல், கூலிக்கு வீடு புகுந்து தாக்குதல், கொலை செய்தல் வரை தமது கைங்கரியங்களைக் காட்டத் தலைப்பட்டன.
இவற்றின் செயற்பாடுகளால் ஓராண்டுக்குள் குறைந்தது இரு கொலைகளாவது யாழ். குடாநாட்டில் முன்னர் நடந்தன. அதே அபாயம் இப்போது விடுதலைப் புலிகள் குடாநாட்டில் இருந்து வெளியேறிய கையோடு ஏற்பட்டிருக்கின்றது. தென்மராட்சியில் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற மோதல் சம்பவங்கள், வடமராட்சி அல்வாயில் ஏற்படுத்தப்பட்டு தூண்டி விடப்பட்டிருக்கும் இரு சமூகங்களுக்கு மத்தியிலான மோதல்கள் என்பன பரபரப்பான கடைசியான சம்பவங்கள்.
தென்மராட்சி சம்பவத்தில் காயமுற்ற ஒரு இளைஞர் இவ்வாரம் உயிரிழந்திருக்கின்றார். அவரை நோக்கி தாக்குதல் நடத்திய மற்றைய குழு சிறு ரக துப்பாக்கியால் சுட்டிருக்கின்றது. அந்தச் சம்பவத்தில் கைக்குண்டு வீச்சுக்களும் கூட இடம்பெற்றிருக்கின்றன. இது சிங்களப் படையினரின் பின்னணியுடன் நடந்த சம்பவம் என்பது தெளிவானது.
தமிழ் தேசவிரோத அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை கொண்டு அவர்களையும் களமிறக்கி குடாநாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமான நிலைக்குள் தள்ளியிருக்கின்றன. இதற்கு முன்னதாக வடமராட்சியில் இரு சமூகங்களுக்கு இடையில் தூண்டிவிடப்பட்ட கலவரம் கொமாண்டோ பாணியில் நடத்தப்பட்ட தாக்குதலாக ஒரு பகுதியினரின் 35 வரையிலான குடிசைகளை எரித்து நாசம் செய்திருக்கின்றது.
இவற்றுக்கு அப்பால் இப்போதும் தெருக்களின் மூலைகளில் புதிய புதிய மோட்டார் சைக்கிள்களில் கைத்தொலைபேசிகள் சகிதம் நிற்கும் இளைஞர் கும்பல்கள் வீதியால் சென்று வரும் இளம் பெண்கள் உட்பட அப்பாவிகள், மெலியார் யாவரையும் தங்களது வீரப்பிரதாபத்தை காட்டுவதற்குரியவர்களாக நடந்து கொண்டிருக்கும் கெடுகாலம் வியாபித்துள்ளது. மாணவியர்கள் இதனால் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் காரணமாக குறிப்பிட்ட பாதைகளினால் தனியாகச் செல்ல முடியாத நிலைமை தோன்றியிருப்பது விடுதலைப் போருக்கும் தமிழர்களின் கலாசாரத்துக்கும் எதிரான மிகப் பெரிய சவாலாகவே இருக்கின்றது.
இது தொடர்பில் சிறிலங்கா பொலிசார் எந்த ஆக்கப+ர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதற்கு பாதிக்கப்படுபவர்கள் முறைப்பாடு தெரிவிக்கவில்லை என்பதை மட்டும் காரணமாக அவர்கள் சுட்டிக்காட்டிவிட்டு, பின்கதவு வழியாக இத்தகைய அடாவடிக்காரர்களுக்கு ஒத்துழைக்கும் போக்கையே கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் வாழ்வியல் முறையில் சில சம்பவங்களால் பாதிக்கப்படுபவர்கள் வெளிப்படையாக எழுத்து மூல முறைப்பாடுகளை கொடுக்க முன்வருவதில்லை. அதற்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நீண்ட கால நோக்கில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள் காரணமாகும். இதனை புரிந்து கொண்டு செயற்படவல்ல, சமூக ஓட்டங்களை விளங்கிக் கொண்டு அதனை பேணி வழிநடத்தக் கூடிய, சிவில் நிர்வாகமாக யாழ். குடா நாடு உட்பட தமிழர் தாயகங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் இல்லை.
இதுதான் விடுதலைப் புலிகளை நோக்கி மக்கள் கைகளை நீட்டுவதற்கு காரணமாக இருக்கின்றது. கடந்த வாரம் குடா நாட்டில் வெளியான பத்திரிகைச் செய்திகளில் கணிசமானவை இது விடயத்தில் விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் விடுத்த கோரிக்கைகளாகவே இருந்தன.
இந்த நிலையில் எல்லாளன் படை குடாநாட்டுக்குள் தனது செயற்பாடுகளை மீளவும் தொடங்கியிருக்கின்றது. அது பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கும் செய்திக்குறிப்பில் இத்தகைய நடவடிக்கைகளி;ல் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையை விடுத்திருப்பதுடன் அவர்களைத் திருந்திக் கொள்ளுமாறு இறுதி அவகாசமும் வழங்கியிருக்கின்றது.
இதனைக் கவனத்தில் கொள்ளாது தொடர்ந்தும் இத்தகைய சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. <span style='font-size:25pt;line-height:100%'>இத்தகைய பின்னணியில் தான் மருதனார் மடத்தில் வைத்து ஆலயப் ப+சகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேற்கொண்டு வந்த மிக மோசமான கலாசார சீரழிவு நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை புறக்கணித்ததன் விளைவாக அந்த முடிவு நேர்ந்திருக்கின்றது என்பது தெளிவானது</span>.
அதனைத் தொடர்ந்து கொக்குவில் பகுதியில் மாந்திரிகர் வேடம் போட்டு துர்நடத்தைகளில் ஈடுபட்டு அப்பாவிகள் பலரை பாதிப்புக்குள்ளாக்கிய ஒருவர் மீது அப்பகுதி இளைஞர்கள் பாய்ச்சல் நடத்தி அவரின் கூத்துக்களை அம்பலப்படுத்தியிருக்கின்றார்கள். இவை சமூக, கலாசார அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஓங்கத் தொடங்கியிருக்கும் நியாயத்தின் கையென கருதலாம்.
இது இன்னும் ஓங்காவிடில் சிறிலங்கா படைகள் தாங்கள் செயற்படாமலே தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது விடுதலைக்கு எதிராக செயற்படவல்ல சக்தியொன்றை உருவாக்கிய வெற்றியைப் பெற்றுவிடுவார்கள்.
http://www.battieezhanatham.com/weeklymatt...9/gnabahan.html
|
|
|
| துவக்கு இதழின் கவிதைப் போட்டி அறிவிப்பு |
|
Posted by: Muthukumaran - 09-22-2005, 11:11 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
நீண்ட நெடுநாளைய கனவு இன்று தான் விடிந்திருக்கிறது.
அறிவிப்பதற்கு முன்னதாக சில முன்னேற்பாடுகள் தேவைப்பட்டதால் சில காலம் தாமதம்.
இது குறித்து சில நண்பர்களுடன் பேசியிருக்கிறோம்.
துவக்கு அமைப்பின் முதல் இலக்கியப் பணியாக கலந்துரையாடல்களும் தகுந்தோர்க்குப் பாராட்டு விழாக்களாகவும் சிறிய சிறிய பணியில் இயங்கி பின்னர் இதழாக வடிவம் கண்டது.இரண்டு இதழ்கள் வந்த பின்னர், எல்லோரும் வடிவம் நன்றாக இருந்தாலும், பிடிஎஃப் கோப்புகள் இறங்க சிரமமாக இருப்பதால் வலைதளமாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே என்று கருதி அப்படியே தகவலும் தந்தனர். நாங்களும் வலைதளமாக மாற்றிக் கொண்டாலும், அது குறித்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் சில காலம் தாமதமாகி விட்டது. என்றாலும் மூன்றாவது இதழும் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் அதை www.thuvakku.com என்ற தளத்தில் காண முடியும்.
இப்பொழுது மூன்றாவது கட்டமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணமாக தனது அடுத்த கட்ட பணியினைத் துவங்கியிருக்கிறது துவக்கு.
மன்ற அன்பர்கள் இந்த கவிதைப் போட்டி அறிவிப்பினை பல தளங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தாங்கள் இயங்கும் வலை தளங்கள் வலைப்பூக்கள் மடலாடற்குழுக்கள் மின்னஞ்சல்கள் தொலைபேசி கைப்பேசி மற்றும் வசதிப்பட்ட ஊடகங்கள் வழியாக இந்த தகவலை எடுத்துச் சென்று பெருமளவில் படைப்பாளிகளை இந்த கவிதைப் போட்டியில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்ற உதவியை வேண்டுகிறோம்.
நன்றி
அறிவிப்பு கீழே
|
|
|
| எம்மை நாமே தொலைக்கிறோமா? 1 |
|
Posted by: KULAKADDAN - 09-22-2005, 10:49 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (10)
|
 |
ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் பலவிதங்களால் இல்லது போயின
1. தமிழ் பௌத்தர்கள இருந்ததற்கான வரலாறு சிங்களவர் தமது என உரிமை கோரி அபகரித்துகொண்டனர்
2. இந்து/சைவ சமயம் சார் ஆதாரங்களான புராதன ஆலயங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தரால அழிக்கப்பட்டு அம்மூலப்பொருட்கள் கோட்டைகள் கட்ட பயன் பட்டன.
அதற்கு இன்றும் உள்ள ஆதாரமாக திருகோணமலை கோட்டைசுவரில் உள்ள
முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை எனும் கற்வெட்டு.
3. போர் சூழலால் அழிக்கப்பட்டவை.
4. நாமெ அழித்தவை, அழித்துகொண்டிருப்பவை
இதில
நாமே அழித்தவை /அழித்துகொண்டிருப்பவை தான் வருத்ததிற்குரியதும் எமது இழி நிலையுமாகும்.
எம்மிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்கள் தற்போது இல்லதுவிட்டாலும் சில நூற்வருடங்களுக்கு முற்பட்ட கட்டடங்கள் வீடுகள் ஆங்காங்கே காணப்படுகிறன. அவற்றையும் நாம் புதுவீடு கட்டுகிறோம் என்று இடித்து அழித்துகொண்டிருக்கிறொம். அவைதான் எமது கடந்த வரலற்றை பேசப்போகிறன என்பதை மறந்து இன்று எமது வெளி நாட்டு பணமும், புதிதாக்கல் எனும் அவாவும் எமது தொன்மையை நாமே குழிதோண்டி புதைப்பதாக அமைகிறது. ஏற்கனவே பல நூறு வீடுகள் அழிக்கப்பட்டு விட்டது. எஞ்சிய சிலவும் விரைவில் அழிக்கப்பட்டு நவீன வீடுகள் கட்டப்பட்டு விடலாம்.
இன்று மேற்கு நாடுகளில் குறிப்பக நான் இருக்கும் நாட்டில் அவர்கள் தமது தொன்மையான கட்டிடங்களை பேண மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , அவர்களிடம் உள்ள விழிப்புணர்வு எமது மக்களிடமோ அல்லது அது சார் துறையினரிடமோ இல்லாதது வருத்ததிற்குரியது. இங்கு பழைய வீட்டை புதிதாக்க போகிறார்கள் என்றால் அதன் முகப்பை அப்படியே பேணுவதற்குரிய முன் ஏற்பாடுகள் செய்துவிட்டு எஞ்சிய பகுதியை இடித்து புதிதாக்குவார்கள்.
இது நான் இருக்கும் நாட்டில் உள்ளா 1600 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட கோட்டை?
இதை தற்போது புதுப்பிக்க முயற்சிகள் நடக்கிறன.
<img src='http://img347.imageshack.us/img347/479/bru57po1gw.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img347.imageshack.us/img347/5787/bru79zl3fd.jpg' border='0' alt='user posted image'>
நாமோ அடியோடு கிளறி எறிந்துவிடுகிறோம்.
<img src='http://img347.imageshack.us/img347/2315/jaf10048us.jpg' border='0' alt='user posted image'>
மேலே படத்தில் காட்டப்பட்ட வீடு பருத்திதுறையில் கைவிடப்பட்டு இடிந்துள்ள வீடு.
இதே போல் கொக்குவில் பொற்பதிவீதியிலும் இரண்டுவீடுகள் இடிந்துகொண்டிருக்கிறன.
நல்ல நிலையில் இன்றும் உள்ள வீடுகள் சிலவற்றை சுழிபுரப்பகுதியிலும், காரைநகர்வீதி சங்கானையிலும் கண்டிருக்கிறேன். வட்டுகோட்டைபகுதியிலும் சிலவீடுகள் உள்ளன. அவற்றையாவது பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு ஆவது பாதுகாத்து எதிர்காலச்சந்ததிக்கு கொடுத்திமானால் அதுவே பெரிய காரியம்.
இதில் முக்கிய பங்காற்றவேண்டியது புலம்பெயர் மக்களே. ஏன் எனில் இன்கிருந்து போகும் கட்டளைகளுக்கு அமையவே அங்கு இடிப்பதுவும் கட்டுவதும் பெரும்பாலும் நடைபெறுகிறது.
சாவகசேரி இந்துகல்லுரியிலும் பாடசாலை ஆரம்பித்தகால சுண்ணம்பு கட்டடம் ஒன்று இருந்து.அதை அவர்கள் புத்தாக்கம் செய்து பேணிவைத்திருப்பது மிகவும் நல்லவிடயம். அதே போல ஏனைய பாடசாலைகளும், தனியாரும் செய்தால் சிலநூறு வருடத்து வரலாற்றையாவது காப்பாற்றலாம்.
போரால் சிதைந்த பழையவீடு
<img src='http://img347.imageshack.us/img347/935/45a3me5bz.jpg' border='0' alt='user posted image'>
நாம் செய்வோமா?
யாழ்ப்பாண வீடுகளை பற்றி தெளிவாக விபரிக்கும் இணையபக்கம் இதோ
http://us.geocities.com/rmayooranathan/
|
|
|
| டெக்ஸாஸ் நோக்கி ரீட்டா சூறாவளி |
|
Posted by: AJeevan - 09-22-2005, 08:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b>ரீட்டா சூறாவளி மணிக்கு 165 மைல் வேகத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தை நோக்கி விரைவு மக்கள் வெளியேற்றம்; அவசரகால உதவிகளுக்கு ஏற்பாடு </b>
டெக்ஸ்ஸாஸ்,
ரீட்டா என்னும் சூறாவளி மணிக்கு 165 மைல்வேகத்தில் (265 கிலோ மீற்றர்) டெக்ஸாஸ் மாநிலத்தை நோக்கித் திரும்பியுள்ளது. இது சனிக்கிழமை இம்மாநிலத்தைத் தாக்கலாமென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அமெரிக்கா இதுவரை காணாத அதிக சக்தி படைத்ததாக, இச்சூறாவளி உருக் கொண்டுள்ளது. இதனால் டெக்ஸாஸில் பாரிய அனர்த்தம் விளையலாம் என வானிலை அவதானிப்பு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இச் சூறாவளியையொட்டி, டெக்ஸாஸ் மாநிலத்திலும் அயலிலுள்ள லூசியானா மாநிலத்திலும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
வெளியேற்ற உத்தரவுகளை கடைப் பிடியுங்கள். தட்டிக் கழிக்காதீர்கள். ரீட்டா சூறாவளி பேரழிவுகளை ஏற்படுத்தக் கூடாது என நாம் பிரார்த்திக்கின்றோம். அத்தகைய அனர்த்தங்கள் ஏற்படமாட்டாவென்றும் நம்புகின்றோம் என்றும் புஷ் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருப்பினும், இச் சூறாவளியைப் பொறுத்தமட்டில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். எச்சரிக்கை தேவை. இதற்கு முகம் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மெக்சிக்கோ வளைகுடாவில் ரீட்டா சூறாவளியின் பலம் இரட்டிப்பாக அதிகரித்தது. இது ஐந்தாந்தர சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே சூறாவளிகளில் ஆகக் கூடிய சக்திபடைத்ததாகும்.
கடந்தமாதம் அமெரிக்காவின் கரையோரப் பிரதேசங்களான நியூ ஓர்லியன்ஸ், மிசிசிப்பி, லூசியானா, அலாபாமா ஆகியவற்றைத் தாக்கிய கற்றினா சூறாவளி, தாக்க அளவில் நான்காவதாக வகைப்படுத்தப்பட்டதாகும்.
டெக்ஸாஸிலுள்ள கல்வெஸ்டன், கோர்புஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்களிலிருந்தும் ஹூஸ்டனின் பல பகுதிகளிலிருந்தும் உடனடியாக வெளியேறிவிடுமாறு குடியிருப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெக்ஸாஸில் அகதிகளாக தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான லூசியா மக்கள், ஆர்கன்ஸாஸ், டெனிஸி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். கற்றினா சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளான லூசியானவிலிருந்து, இவர்கள் அகதிகளாக வந்து, டெக்ஸாஸில் தஞ்சமடைந்திருந்தார்கள்.
அனைத்து மக்களையும் வெளியேற்றுவதற்கு போதிய அரசாங்க வாகனங்கள் கிடையாது. இது விடயத்தில், மக்கள் வெளியேற்றத்துக்கு நண்பர்களும் அயலவர்களும் தவறாது உதவ வேண்டுமென இத்தருணத்தில் ஹுஸ்டன் மாநகர பிதாபில் வைட் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.
எல்லோருமே அஞ்சுகின்றனர். அதனால் நாங்களும் வெளியேறுகின்றோம் என கல்வெஸ்டன் குடியிருப்பாளர் மரியா ஸ்டிபன்ஸ் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்தார்.
கற்றினா சூறாவளி அனர்த்தங்களை தொலைக்காட்சியில் பார்த்தேன். மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தார்கள். நீரில் சடலங்கள் மிதந்தன. இக்கதி எனது குடும்பத்துக்கும் நேரிட்டு விடக் கூடாது என்று அப் பெண்மணி குறிப்பிட்டார்.
ரீட்டா சூறாவளி திரும்பியுள்ள மார்க்கத்தில் நியூ ஓர்லியன்ஸ் அமையவில்லை. எனினும் கடும் காற்றாலும், பலத்த மழையாலும் அனர்த்தங்கள் ஏற்படலாம். வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என, இங்கு மீள் கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொறியியலாளர்கள் அச்சம் தெரிவித்தார்கள்.
மெச்சிக்கோ வளைகுடாவில், எழுபது வீதமான எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
ஹூஸ்டனிலுள்ள ஜோன்சன் விண்வெளி ஆய்வு மையம், ரீட்டா சூறாவளி அனர்த்தங்களையொட்டி மூடப்பட்டு விட்டது. சர்வதேச விண்வெளி ஆய்வு மைய கட்டுப்பாட்டகம் ரஷ்யாவுக்கு மாற்றப்பட்டுள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாஸா தெரிவித்தது.
சமஷ்டி அதிகாரிகள் மீட்பு நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். அவசரகால ஊழியர்கள், மருத்துவக் குழுவினர் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ட்ரக்குகளில் நீர், உணவு, மருந்து வகைகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மெச்சிக்கோ கிழக்குக் கரையோரப் பிராந்தியங்களில், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரீட்டா சூறாவளி செவ்வாய்க்கிழமை புளோரிடா கீஸைத்தாக்கியது. அப்போது இது மூன்றாம் தர சூறாவளியின் பலத்தையே பெற்றிருந்தது. அதனால் பாரிய அனர்த்தங்கள் விளையவில்லை எனினும் வெள்ளப் பெருக்கெடுத்தது. மின் விநியோகம் தடைப்பட்டது. கட்டிடங்கள் சேதமடைந்தன.
இச் சூறாவளியையொட்டி இடம் பெயர்ந்தவர்கள் தற்போது தம் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இச் சூறாவளியின் வலிமை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
¿ýÈ¢: ţ縺â
|
|
|
| சிங்கள திரை இயக்குனர்கள் புலி பயங்கரவாதிகள் |
|
Posted by: AJeevan - 09-22-2005, 08:45 PM - Forum: குறும்படங்கள்
- Replies (1)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'><b>FMM slams threats to filmmakers</b>
Media watchdog Free Media Movement (FMM) expressed concern on attempts to portray certain filmmakers as 'new terrorists.'
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050922160651handagama.jpg' border='0' alt='user posted image'>
<i>FMM says newspaper articles were
a result of a organised campaign</i>
The FMM says it is disturbed by the recent remarks on internationally acclaimed film directors Asoka Handagama, Prasanna Vithanage, Sudath Mahadivulwewa and Vimukthi Jayasundara.
Recent newspaper articles written by the Security Service officers and political leaders have criticized the work of four directors on the ethnic conflict in Sri Lanka as propaganda for separatist Tamil Tigers.
Freedom of expression
FMM said : \"The FMM wishes to underscore the importance of upholding the cultural rights and the freedom of expression of artistes and filmmakers in Sri Lanka. Artistic interpretation is an inviolable right of all artistes and media personnel and is linked to the freedom of expression.\"
The watchdog said the Cannes award winning director Vimukthi Jayasundara is now facing threats to leave Sri Lanka.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050922160755vimukthi.jpg' border='0' alt='user posted image'>
<i>FMM says Jayasundara is now
facing threats to leave Sri Lanka </i>
Refering to a meeting held further to the comments by the military officials,\"where the film makers were asked whether they were willing to make films for military propaganda, the filmmakers were told that if war breaks out again they will have to face the repercussions\".
A statement issued by FMM spokesperson Sunanada Deshapriya called for all parties to respect freedom of expression including the right to creative expression and media by artistes and filmmakers.
'Unofficial censorship'
\"We urge the government and the security forces to uphold these rights,\" the statement added.
The remarks in the press were triggered by the recent release of Sudath Mahadivulweva's \"Sudu Kalu saha Alu\" and Vimukthi Jayasundera's \"Sulange Enu Pinisa\".
Artistic interpretation is an inviolable right of all artistes and media personnel and is linked to the freedom of expression
FMM
Vimukthi Jayasundera petitioned to courts on Thursday, demanding an order to stop his film being taken out of distribution in five cinemas in the government-owned Film Corporation circuit.
He told the BBC, the films are taken out as a way of \"unofficial censorship\".
The Corporation claims the cinemas were poor in box office returns during the last week.</span>
Thanks: BBC News
|
|
|
|