Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 516 online users.
» 0 Member(s) | 514 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,511
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,044
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா?
Posted by: narathar - 10-23-2005, 09:47 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (32)

மேற்குறிப்பிட்ட தலைப்பில் எனக்கிருக்கும் சந்தேகஙளைத் தீர்த்துக் கொள்ள ஆளமான,தலைப்புக்கு பொருத்தமான கருத்தாடல்களை எதிர்பார்க்கிறேன்.இதில் எனக்கு இருக்கும் தெழிவின்மைகளுக்கு விளங்கம் கிடைக்குமா என்பதை நோக்காக் கொண்டே இந்த தலைப்பை ஆரம்பிக்கிறேன்.தயவு செய்து இதனையும் பூட்ட வைக்காதீர்.

சரி இனி விசயத்துக்கு வருவோம்.

1)எல்லாருக்கும் சமத்துவமான பொருளாதர நலனை அடிப்படயாக அமைக்கப்பட்ட சோவியத் யூனியன் ஏன் தோல்வி அடைந்தத்து?
2)கம்யூனீச சித்தாந்ததில் இருந்து சீனா ஏன் வழுவியது?
3)மாக்ஸ் எதிர்வு கூறிய மூலதனச் சிக்கல் ஏன் இன்னும் ஏற்படவில்லை?
4)சமத்துவமான பொருளாதாரம் என்பது சாத்தியப் படாத ஒன்றா?
5)போட்டியும் ,சந்தையும்,மூலதன உபரியும் தவிர்க்க முடியாதவையா?

Print this item

  நாளைய பேரணி தொடர்பாக புலி எதிர்ப்புத்தளங்களில் ....
Posted by: Aalavanthan - 10-23-2005, 08:56 PM - Forum: புலம் - No Replies

இது தொடர்பான செய்திகள் புலி எதிர்ப்பு தளங்களில் பிரசுரிக்க எழுதி அனுப்பப்பட்டுள்ளது. அதாவது பேரணி நடைபெற முன்னரே செய்தி தயாரிக்கப்பட்டுவிட்டதாம். அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, குறைந்தளவானோரே கலந்து கொண்டனர் என்ற தொனியில் செய்திகள் இருப்பதாக அவ்வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுக்கருத்தாளர் ஒருவர் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அத்துடன் பேரணி முடியமுன்னரே புலி எதிர்ப்புத்தளங்களில், இவ் எழுச்சிப்பேரணி தோல்வி என்று செய்திகள் வரவேண்டும் என்று இவர்களது மேலிடம் கட்டளையிட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

Print this item

  அட்டகாசம் புரிவோர் மீது தாக்குதல்கள்
Posted by: வினித் - 10-23-2005, 08:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

வீதிகளில் நின்று அட்டகாசம் புரிவோர் மீது யாழில் தாக்குதல்கள் அதிகரிப்பு!
றுசவைவநn டில ளுயமெடைலையn - 1.24 pஅ ளுரனெயலஇ 23 ழுஉவழடிநச 2005

யாழ். குடாநாட்டில் வீதிகள், சந்திகளில் நின்று அட்டகாசம் புரிவோர் மீது அண்மைய நாட்களில் இனந்தெரியாத இளைஞர் குழுவொன்று தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக மானிப்பாய், உடுவில், சுதுமலை, தாவடி, கோண்டாவில், உரும்பிராய் ஆகிய பகுதிகளில் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்ளும் இளைஞர்கள் உந்துருளிகளில் உரிய இடத்திற்கு வந்து இறங்கியதும் தாக்குவதன் காரணத்தினால், வீதிகளில் நின்று அட்டகாசம் புரிவோர் இவர்களின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாத நிலைமை காணப்படுகிறது. தம்மை யாரும் அடையாளம் காணமுடியாதவாறு மேற்படி இளைஞர்கள் தமது முகங்கள துணிகளால் கட்டியவாறே இந்த தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.

தேவையற்ற முறையில் வீதிகள், சந்திகளில் நின்று சண்டித்தனம் புரிவோர், பெண்களுடன் சேட்டை ஈடுபடுபவர்களே இவ்வாறு தாக்குதல்களிற்கு உள்ளாகி வருகின்றனர்.

http://www.sankathi.net/index.php?option=c...=3108&Itemid=41

அது தான் சின்னப்புவை காணைல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  சந்திரிகாவை பதவியிலிருந்து அகற்றிய சதியை அம்பலப்படுத்துவேன்
Posted by: வினித் - 10-23-2005, 08:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>சந்திரிகாவை பதவியிலிருந்து அகற்றிய சதியை அம்பலப்படுத்துவேன்: அனுரா பண்டாரநாயக்க
[திங்கட்கிழமை, 24 ஒக்ரொபர் 2005, 00:24 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரச தலைவர் பதவியிலிருந்து அகற்றிய சதித் திட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவேன் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க அறிவித்துள்ளார்.


கெடம்ப மாநகராட்சி சபை மைதானத்தில் நடைபெற்ற மகிந்த ஆதரவு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அனுரா, சந்திரிகா, மகிந்த ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய அனுரா பண்டாரநாயக்க, 12 ஆண்டுகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சதிச் செயலால் இந்த ஆண்டே அரச தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சதியை விரைவில் நாடாளுமன்றத்தில் நான் அம்பலப்படுத்துவேன் என்றார்.

அமெரிக்காவில் உள்ளது போல் இரு பிரதான வேட்பாளர்களும் நேரடி விவாதங்களை நடத்த வேண்டும் என்றும் அனுரா கேட்டுக்கொண்டார்.

சந்திரிகா பேசியதாவது:

நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடைபெற்றால் தென்னிலங்கைத் தீவிரவாதக் குழுக்களான ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமயவுக்கு 4 விழுக்காடு கூட கிடைக்காது. மக்களை திசை திருப்புகிற எந்த ஒரு தீவிரவாதக் குழுவையும் நாம் அனுமதிக்க முடியாது. இதுவிடயத்தில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

சிறிலங்கா அரச தலைவராக மகிந்த தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தவறு செய்தால் அவரை சுதந்திரக் கட்சியினர் கேள்விக்குள்ளாக்க வேண்டும். மக்கள் அவரை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தாமதமாக கலந்து கொண்ட மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சந்திரிகா குமாரதுங்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். சந்திரிகாவை ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசும் போது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதை தடுக்க முயற்சிப்பார். அதை சந்திரிகா குமாரதுங்க ஏற்கக் கூடாது என்றார் மகிந்த.

</b>
www.puthinam.com

Print this item

  காதலிக்க நேரமில்லாதவருக்கு ஏழு வருடங்கள் சிறை.
Posted by: victor - 10-23-2005, 07:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஏழு பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ய 28 வயதுடைய நபர் ஒருவருக்கு நேற்று நீதமன்று ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த நபர் தான் ஒரு பரபரப்பான நிர்வாக இயக்குநர் என்றும், அழகான, உயர் பதவியில் உள்ள அழகனான தனக்கு காதலிக்க நேரமில்லை என்றும் இணையமூலம் தெரிவித்து, பிழையான படத்தை அனுப்பி பெண்களை ஏமாற்றினார். ஆனால் உண்மையில் அவர் அப்படியானவர் அல்ல. மேலும் அதிக பணம் தருவதாகக் கூறி பாலியல் தொடர்பிற்கு பெண்களை அழைத்து ஏமாற்றியுள்ளார். இவருக்கு ஏமாற்று, பிழையான தகவல் வழங்கியது, ஏழு பெண்களை எட்டுத்தடவைகள் கற்பழித்தது ஆகிய குற்றங்களின் அடிப்படையில் ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Print this item

  புலநாயின் குறுஞ்சித்திர புலனாய்வு...
Posted by: Danklas - 10-23-2005, 05:12 PM - Forum: நகைச்சுவை - Replies (81)

இந்த பகுதியிலும் சக உறுப்பினர்களின் நடவடிக்கைகளை டன்னின் புலனாய் வீடியோ மூலம் சுட்டிருக்கின்றது.. அதைபற்றிய விபரங்கள்.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

யாழ்கள ஸ்ரார் பற்றிய புலனாய் குறுஞ்சித்திரம் 1...

இதை அண்மையில் யாழ்கள ஸ்ரார் ஆன சின்னா களத்தில் லொள்ளு பண்னியதை மனதில் வைத்து யாழ்கள மட்டுறுத்தினர்களான மதன் & யாழ்ப்பாடி இருவரும் பொலிஸ் உடையில் சென்று சின்னாமீது துப்பாக்கி பிரயோகம் செய்வதையும் சின்னா அவர்கள் இருவர் மீதும் பதில் துப்பாக்கி பிரயோகம் செய்வதையும் அவ்விடத்தில் திடிரெண்டு உள் நுழைந்த இராவணன் திடிரெண்டு சின்னாமேல் துப்பாக்கி பிரயோகம் செய்வதை புலனாய் துல்லியமாக படம்பிடித்துள்ளது, இதோ அவ் தகவல்.... Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இங்கே

தொடரும்... Idea

Print this item

  கஜினி வியாதி கலகல பீதி!
Posted by: SUNDHAL - 10-23-2005, 03:11 PM - Forum: நகைச்சுவை - Replies (7)

இப்போதைய ஹாட்டஸ்ட் நோய் கஜினியின் "ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்'. அதை விட புதிய நோய் ஒன்று நம் கற்பனையூரில் இறங்கியுள்ளது. அதன் பெயர் "வெரி ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்'. விளக்கம்: இரண்டு நிமிடங்களுக்கு மேல் எதுவும் நியாபகத்தில் இருக்காது. ஏவிஎம் ஸ்டுடியோவுல "பப்பரப்பெ'ன்னு நடந்து வந்துகிட்டிருக்கிற வடிவேலு, கல் தட்டி கீழே விழ "சொட்டீர்'னு மண்டை தரையில மோதுது! (ஆங்... நோய் வந்துடுச்சி!) பத்து நிமிஷம் கழிச்சு மயக்கம் தெளியுது. கண் விழிக்கிறப்போ எதிர்த்தாப்ல விவேக்! முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் எழுந்திரிக்காரு வடிவேலு.

விவேக் : ஹேய் மேன்! என்ன குட்டித் தூக்கமா, ஷூட்டிங் கேப்ல டைரக்டர்கிட்ட சொல்லிட்டு ஓரமாப் போய் தூங்க வேண்டியதுதான! அதுக்கு ஏன் மேன் கீழே விழுந்து மயங்குனாப்ல ஓவர் ஆக்டிங் குடுக்குற!

வடிவேலு : நில்லு! நீ யாரு? என்ன விஷயம்? நீ பாட்டுக்கு ஒப்பாரி வைக்குற மாதிரி ஒரு மைலுக்கு பேசிக்கிட்டே போற!

விவேக் : அடப்பாவிகளா! ரஜினி சார், உன் கால்ஷீட்டை முதல்ல வாங்கச் சொன்னேன்னு ஸ்டேஜ்ல சொன்ன உடனே உனக்கு கெத்து ஏறிப் போச்சா!

வடிவேலு : ஆமா, ரஜினின்னா யாரு?

விவேக் : (அதிர்ச்சியுடன் இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியல! சூப்பர் ஸ்டாரை யாருன்னு உன்னோட ரப்பர் வாயால கேக்குற அளவுக்கு உனக்கு மண்டையில ஏறிப்போச்சா! இதெல்லாம் எங்க போயி முடியப் போகுதோ? ஏய் வடிவேலு...

வடிவேலு : யாரது வடிவேலு?

விவேக் : ஆஹா... கௌம்பிட்டான்யா! ரொம்பவே ஓவராத்தான் போறான்! இவனை என்ன செய்யலாம்?

(விவேக் கண்களை மூடி யோசித்துக் கொண்டிருக்கும் போதே வடிவேலு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். கண்களைத் திறக்கும் விவேக், அங்கே வடிவேலு இல்லாததைப் பார்த்து)

விவேக் : அடங்கொப்புரானே! இங்கத்தான் நின்னுக்கிட்டிருந்தான். அதுக்குள்ள வண்டியைக் கௌப்பிட்டானே!

(தூரத்தில் வடிவேலு விவேக்கின் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப, விவேக் ஓடிச் சென்று காருக்குள் தாவுகிறார்.)

வடிவேலு : யார் நீ?

விவேக் : எப்பா, இப்பத்தான வெளியே நின்னு நாம ரெண்டு பேரும் அளவளாவிட்டுருந்தோமே!

வடிவேலு : எப்ப? நான் ஏன் உன்கூடப் பேசணும்?

விவேக் : ஆஹா... இப்ப புரிஞ்சிடிச்சி! கஜினி வியாதி உனக்கு வந்துடுச்சா!ஹஹ்ஹஹா! இந்தியாவின் தலைநகரம் எது?

வடிவேலு : தெரியாது.

விவேக் : சந்திரமுகி யாரு?

வடிவேலு : தெரியாது.

விவேக் : ஐஸ்வர்யா ராயோட லவ்வர் யாரு?

வடிவேலு : தெரியாது.

விவேக் : வைகைப் புயல் யாரு?

வடிவேலு : தெரியாது.

விவேக் : ஹேஹ்ஹே... கன்பார்ம்! உனக்கு அதுவேதான்!

வடிவேலு : ஆமா, என் கார்ல நீ எப்படி வந்த?

விவேக் : என்னது உன் காரா... ஏய், இது என் காருடா!

வடிவேலு : அப்ப உன் காருல என்னை ஏன் டிரைவரா வைச்சிருக்க?

விவேக் : ஆங்... ஒரு வேண்டுதல்தான்! அய்யா இப்ப எங்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

வடிவேலு : தெரியாது. (என சொல்லிவிட்டு "நோ பார்ககிங்'ல் காரை நிறுத்தி விட்டு வேகமாக கீழே இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார்.)

விவேக் : அடப்பாவி! நோகாம நோ பார்க்கிங்ல காரை விட்டுட்டு, இன்டிப்பெண்டன்ஸ் டே பரேட்ல நடந்து போறாப்ல போறானே! (காரை எடுத்துக் கொண்டு வடிவேலுவைப் பின் தொடர்கிறார் விவேக்.)

விவேக் : சார், நான் உங்களுக்கு லிப்ஃட் தர்றேன், ஏறிக்கோங்க!

வடிவேலு : தாங்க்ஸ்! (ஏறிக் கொள்கிறார்.)

விவேக் : சார், உங்களுக்கு ஞாபக மறதி வியாதி! எல்லாத்தையும் மறந்துட்டீங்க! நீங்கதான் தமிழ்நாட்டோட சி.எம்!

வடிவேலு : (கொஞ்சம் குழப்பத்துடன்) அப்படியா... சொல்லவே இல்ல!

விவேக் : கடந்த 15 வருசமா நீங்கதான் ஆட்சி புரியறீங்க. உங்க ஆட்சியில வருசம் மும்மாரி பெய்யுது!

வடிவேலு : (ரொம்பவே குழம்பிப் போய்) ஹேய்... மேன் நீ யாரு... என்னைக் கடத்திட்டுப் போறியா? நான் யாரு தெரியுமா... முதலமைச்சர்.

விவேக் : (மனதிற்குள்) நம்பிட்டான்யா நம்பிட்டான்! (வடிவேலு விவேக்குடன் சண்டை போட்டு ஸ்டியரிங்கைப் பிடித்து இழுக்க, கார் நிலை தடுமாறி ஒரு மரத்தின் மேல் மோதி நிற்கிறது. ஐந்து நிமிடங்கள் கழித்து... வடிவேலு தெளிவாக கண்விழிக்க, விவேக்குக்கு நோய் பற்றிக் கொள்கிறது.)

வடிவேலு : ஆத்தாடி. தலை என்னமா வலிக்குது. ஆமா எங்கிட்டு இருக்கோம்? இது யாரு காரு? ஆக்சிடெண்ட் ஆகிக் கெடக்குது. பக்கத்துல பொத்துனாப்ல படுத்துக்கிட்டு கெடக்கறது யாரு. அட... விவேக்கு. இந்தப் பய எப்படி இங்க வந்தான்?

விவேக் : (கண் விழித்துக் கொண்டே) நான் எங்க இருக்கேன்? இது ஆஸ்திரேலியாவா? நீ யாரு மேன். டோட்டல் பாடிக்கும் கருப்பு டை அடிச்சிக்கிட்டு என்கூட உட்கார்ந்திருக்க?

வடிவேலு : (மனதிற்குள்) அலம்பலை ஆரம்பிச்சுட்டான்யா! ஒருவேளை மண்டையில ஏதும் டேமேஜ் ஆகியிருக்குமோ? (சத்தமாக) எப்பா, நீதான் விவேக்கு! நாந்தான் வடிவேலு! ரெண்டு பேருக்கும்தான் இப்ப சினிமால நெம்பர் ஒன் காமெடி நடிகன் யாருன்னு போட்டி!

விவேக் : என்ன மேன் நக்கலா? நீ ஸ்கீரின்ல வந்தா மக்களால சிரிக்கவா முடியும்? இதுல என்னை வேற பஃபூன்னு சொல்லுற... நான்சென்ஸ்! ஏன் மேன் காரையும் மரத்தையும் கிஸ்ஸடிக்க வைச்சிருக்க?

வடிவேலு : யாரு... நானு... டிரைவரு சீட்டுல யாரு உட்கார்ந்திருக்கான்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு பேசுறது!

விவேக் : எனக்கு பசிக்குது! உங்களைப் பாத்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. எனக்கு பீஸôவும், பணியாரமும் செஞ்சித் தாரியா?

வடிவேலு : (மனதிற்குள்) பையன் ஒரு தினுசாப் பேசுறானே... ஓருவேளை கஜினி வியாதி வந்திருக்குமோ? செக் பண்ணிப் பாப்போம்! (சத்தமாக) தம்பி, இந்தியாவின் பிரதமர் யாரு?

விவேக் : சானியா மிர்சா.

வடிவேலு : அய்யோ! அய்யோ! தம்பி உனக்கு மண்டையில அடிபட்டு எல்லாம் உடனே மறந்து போற வியாதி வந்திருக்கு.

விவேக் : ஓ அப்படியா! நான் யாரு?

வடிவேலு : நீதான் சர்வதேச தீவிரவாதி ஒஸôமா பின்லேடன். அமெரிக்காக்காரன் உன்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கான்.

விவேக் : அய்யய்யோ! நானா மறந்தாப்ல போயி போலீஸ்ல மாட்டிக்கிட்டா ஆபத்தாயிருமே! இப்ப நான் என்ன பண்ணுவேன்?

வடிவேலு : ஆங்... அதுக்குத்தான் அண்ணன் ஒரு ஐடியா வைச்சிருக்கேன். அந்த உருட்டுக் கட்டைய எடு! உன் குல தெய்வத்தை நெனைச்சுக்கிட்டு "பொடெர்'னு உன் மண்டையில நீயே அடிச்சிக்கோ! கலங்கிப் போன கபாலம் திரும்ப தெளிவாயிரும்!

விவேக் : சரிண்ணே! (கட்டையை எடுத்து பயந்து நடுங்கியபடியே ஒரு நிமிடம் யோசிக்கிறார்.)

வடிவேலு : என்னா யோசிக்கிற! ஒரே போடாப் போடு!

(வடிவேலுவின் மண்டையில் அடிக்கிறார்.)
ThanksBig Grininamani....

Print this item

  தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: புலிகள்
Posted by: வினித் - 10-23-2005, 01:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<b>அரச தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: விடுதலைப் புலிகள்
[ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரொபர் 2005, 18:44 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் வாரப் பத்திரிகையான சண்டே ஓப்சர்வருக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

சிறிலங்கா அரச தலலைவர் நாம் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ் மக்கள் சுதந்திரமாக தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம். சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஏமாற்றுவதை வழக்கமாக் கொண்டிருப்பதால் எந்தக் கட்சியையும் ஆதரிக்குமாறு தமிழ் மக்களிடம் நாங்கள் சொல்லவில்லை.

தமிழீழப் பகுதிகளில் சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். அதற்குரிய முன் அனுமதிகளைப் பெற வேண்டும். முன்னைய தேர்தல் காலங்களில் சோதனைச் சாவடிகளில் தமிழ் மக்கள் வாக்குகளைச் செலுத்தவிடாமல் தடுக்கப்பட்டனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 80 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டனர். இது அடிப்படை மனித உரிமை மீறல் என்று பின்னர் சிறிலங்கா தலைமை நீதிமன்றம் அறிவித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்கமாட்டார்கள் என்றார் தயா மாஸ்டர்.

</b>

www.puthinam.com

Print this item

  இன்று லண்டனில் நடைபெறவுள்ள விடுதலைப் பேரொளி நு}ல் வெளியீட்டு
Posted by: Mathuran - 10-23-2005, 12:18 PM - Forum: நிகழ்வுகள் - Replies (2)

இன்று மாலை லண்டனில் நடைபெறவுள்ள 'விடுதலைப் பேரொளி" நு}ல் வெளியீட்டு விழாவில் தமிழக விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலர் திரு. தொல்.திருமாவளவன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.கஜேந்;திரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இன்று மாலை ஐந்து மணிக்கு லண்டன் வோதம்போரெஸ்ட் நகர மண்டபத்தில்(Walthamforest Town Hall) இந்நு}ல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் இந்நு}ல் வெளயீட்டுவிழா நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிகழ்வு நடைபெறும் மண்டபத்தின் முகவரி

Walthamforest Town Hall
Forest Road, Walthamstow
London, E17 4JF

நிகழ்வு தொடர்பான விபரங்களிற்கு

மோகன்: 07961582285
அஜித்: 07946153757

http://www.sankathi.net/index.php?option=c...=3102&Itemid=41

Print this item

  ஆபத்தான இடமாக மாறும் கட்டுநாயக்க விமான நிலையம்!
Posted by: MUGATHTHAR - 10-23-2005, 10:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

<b><span style='font-size:25pt;line-height:100%'>ஆபத்தான இடமாக மாறும் விமான நிலையம்!</b></span>

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அபாயகரமான இடமாக மாறிக்கொண்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த இடம் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படும் இடமாகக் கூட மாறிவிடலாம்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் (பயணிகள்) எமது இந்த விமான நிலையத்தில் இடம்பெற்று வரும் விரும்பத்தகாத பல விடயங்கள் தொடர்பாக வெறுப்படைந்துள்ளதுடன் இங்கு பாதுகாப்பு எந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

முன்னரெல்லாம் இடம்பெறாத பல்வேறு சம்பவங்கள் இந்த விமானநிலையத்தினுள் இப்போது இடம்பெற்று வருகிறது.

கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெறும் மோசடி நடவடிக்கைகள் குண்டுப்புரளிகள்இ வதந்திகள் போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக இதே பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டில் பிரசுரமான ஒரு கட்டுரையிலும் விமான நிலையத்தில் இலஞ்சம் ஊழல் மோசடி அச்சுறுத்தல் ஏமாற்று வேலைகள் பாதுகாப்பின்மை போன்ற பல்வேறுபட்ட விரும்பத்தகாத விடயங்கள். நடந்த விபரங்களும் அறியத்தரப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதுடன் நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்திருப்பது அதிகளவான அரசியல் தலையீடுகள் போன்ற பல்வேறு காரணிகள் தொடர்பாக ஊடகங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன.

விமான நிலைய நிர்வாகம் விமான நிலையத்துடன் தொடர்புடைய அமைச்சு அமைச்சர்கள் விழிப்படைந்து விமான நிலையத்தினுள் தோன்றி இருக்கும் சாதகமற்ற செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று பரவலான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும்இ விழிப்படைதல் எதற்கும் செவி சாய்க்கப்படவில்லை என்பதை பறைசாற்றும் வகையில் யாரும் எதிர்பாராத மிகவும் மோசமான சம்பவமொன்று கடந்த 10 ஆம் திகதி விமான நிலையத்தினுள் இடம்பெற்றிருந்ததை முழு உலகமும் அறிந்துகொண்டது.

விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பாக பெரிதாகப் பேசிக்கொள்பவர்கள் வெட்கி அவமானப்பட வேண்டிய சம்பவம் இது. இதனை மிகவும் ஆபத்தான நிலைமை அல்லது அச்சுறுத்தல் என்றும் கூற முடியும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று குவைத் செல்ல விமான நிலையம் வந்திருந்த அப்பாவி இளம் குடும்பப் பெண் ஒருவரை மிகவும் கொடூரத்தனமான முறையில் காமுகர்கள் ஐவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் இவ்வாறானதோர் கொடுமை யொன்று பதியப்பட்டுள்ள முதல் சம்பவம் இதுவாகிறது.

குருநாகலையைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான இந்த அபலைப் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்ற காமுகர்கள் விமான நிலையத்தின் அதிபாதுகாப்பு பகுதி அறையொன்றுக்குள் வைத்து தங்களின் காம இச்சைகளை தீர்த்துக் கொண்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் பின்னர் குறித்த நேரத்தில் அப்பெண்ணை குவைத் விமானத்தில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனர்.

குவைத் விமான நிலையத்தில் இறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் வாந்தி எடுத்துள்ளதுடன் மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளார். இதனையடுத்து குவைத் விமான நிலைய வைத்தியர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கி மீண்டும் இம்மாதம் 19 ஆம் திகதி இலங்கைக்கு திருப்பியனுப்பி வைத்திருந்தனர்.

ஏழ்மையில் வாடிய இப்பெண் தனது குடும்ப நிலைமையை கருத்திற் கொண்டு கடன் வாங்கி வெளிநாட்டு தொழிலுக்கு ஏற்பாடு செய்து கொண்டு எதிர்கால கனவுகளுடன் புறப்பட்ட இந்த பயணம் இறுதியில் வஞ்சிக்கப்பட்ட நிலையில் புஸ்வாணமாகி திரும்பி வந்தபோதுஇ விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கதி தொடர்பாகவும் அதனால் எல்லாம் இழந்துவிட்ட அவல நிலை பற்றியும் உரிய அதிகாரிகளிடம் கூறி அவர்கள் மூலம் விமானநிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்துஇ இப்பெண்ணை இந்த நிலைமைக்கு தள்ளிய விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் இருவரும் துப்புரவு தொழிலில் ஈடுபடும் மூன்று ஊழியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் பொறுப்பு வாய்ந்த துறையை சேர்ந்தவர்கள் குப்பை அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சேர்ந்து இவ்வாறான கீழ்த்தரமான ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது விமான நிலைய பாதுகாப்பையும் அங்குள்ளவர்களின் நடவடிக்கைகளையும் மக்கள் மத்தியில் கேள்விக் குறியாக்கியுள்ளது.

துப்புரவு தொழிலாளர்களுக்கு மலசலகூடமருகில் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நடந்த இப் பாலியல் வல்லுறவு சம்பவம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து இதற்கு முன்னரும் இங்கு அப்பாவி பெண்கள் இவ்வாறு வல்லுறவுக்குள்ளாகியிருக்கலாம் என்ற கோணத்தில் இதில் சம்பந்தப்படாத சந்தேகத்திற்குரிய பலரிடம் தற்போது பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இப்பெண்ணுக்கு பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் எல்லா வகையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது.

இங்கு பொலிஸ் நிலையம்இ சுங்கப் பிரிவுஇ குடிவரவு குடியகல்வு கிளை அலுவலகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பாதுகாப்பு பிரிவுஇ விமான நிலைய பாதுகாப்பு பிரிவுஇ விமானப் படை பாதுகாப்புஇ தேசிய புலனாய்வு பொலிஸ் புலனாய்வு போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு பொலிஸ் பகுதியினர் என்று பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல அரச பிரிவுகள் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பிரிவுகள் உட்பட சர்வதேச விமான போக்குவரத்து பாதுகாப்பு" ஸ்ரீலங்கா விமானச் சேவை பாதுகாப்பு என்ற எத்தனை பிரிவுகள் 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவை அத்தனையையும் மீறி முதன்மைத் துறையாக விளங்கும் பாதுகாப்பு பிரிவின் ஊழியர்களும் கழிவுகளை அகற்றும் துறையைச் சேர்ந்தவர்களும் செய்துள்ள சாதனையினால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியும் அவப்பெயரும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மன்னிக்க முடியாத இக்குற்றத்தை மர்ம விடயமாக வைத்திருக்க காலம் இடம் கொடுக்காததாலேயே இவர்கள் இன்று பிடிபட்டுள்ளனர்.

இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ விடயங்கள் வெளியில் வராமல் இருப்பது போல் இதுவும் இருந்திருக்கும்.

விமானநிலையத்தினுள் நாளாந்தம் சட்டவிரோத பணப்புழக்கம் கை மாறுதல்இ கடத்தல்இ ஆள்மாறாட்டம் உட்பட பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பிட்ட சில அதிகாரிகள்இ வெளியார் ஆகியோர் இவற்றில் சம்பந்தப்பட்டுள்ளதும் மறுக்க முடியாத உண்மை.

இதேவேளைஇ பயணிகள் பொதிகள் திருட்டுஇ பொதிகளை சேதப்படுத்தி சூறையாடுவதுஇ வெளிநாடுகளிலிருந்து வரும் பணிப்பெண்களை ஏமாற்றி பணம் பொருள் கறப்பதுஇ பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி தமிழ் விமானப்பயணிகளை சிக்கல்களில் மாட்டி பதவி உயர்வுஇ சன்மானம் ஆகியன பெற்றுக்கொள்வது அவர்களை கொள்ளையடிப்பதுஇ ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல்இ தங்கம்இ மாணிக்கக் கற்கள் கடத்தல் ஆகியவற்றுக்கு துணை போவது. மோசடியான முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது போன்ற பல்வேறு குற்றச்செயல்களும் நாளாந்த மற்றும் தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் போதும் நடக்காதவையெல்லாம் புதிது புதிதாக இடம்பெறும் போதும் கட்டுநாயக்க விமான நிலையம் இன்று மிகவும் மோசமான நடவடிக்கைகளுக்கு முதலிடம் வகிக்கின்றது.

கடந்த வருடம் ஆய்வு நிறுவனமொன்று இலங்கையில் மோசடிகள்இ துஷ்பிரயோகங்கள் அதிகம் நிறைந்த அரச நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டதுடன் அதில் பொலிஸ் திணைக்களம் முதலிடத்தில் இருந்த போதும் அதையும் தாண்டி கட்டுநாயக்கா விமான நிலையம் இன்று எல்லாவிதமான சம்பவங்களும் இடம்பெறும் கேந்திர நிலையமாக மாறிவருகிறது.

<b>காணாமல் போயுள்ள நிர்மல ஜீவா</b>

இதேவேளை இவ்வாரம் மேலும் பல சம்பவங்கள் தொடர் கதையாக இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சியிலிருந்து தேவை காரணமாக கொழும்பிற்கு வந்த நிர்மல ஜீவாஇ வயது 42. இரண்டு பிள்ளைகளின் தந்தைஇ கடந்த வாரம் காணாமல் போயுள்ளதுடன் இதுவரை அவரைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லையென அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவே இப்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 ஆம் திகதி திங்கட்கிழமை பேலியகொடை என்ற இடத்தில் பாதாள குழு தலைவர் ஒருவர் சுட்டு அப்பாவி நபர் ஒருவர் உயிரிழந்தும் அவரை பொது மக்கள் அடித்தும் வெட்டியும் கொலை செய்த சம்பவமும்இ அதே தினம் புத்தளத்தில் வீதிச் சோதனை கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் காணாத நபரொருவரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் இடம்பெற்றன.

19 ஆம் திகதி இலங்கை விமானப்படைஇ விமானமான ஆள் இல்லா உளவு விமானம் (சி.ஏ.வி.) வன்னிப் பகுதியில் வைத்து காணாமல் போயுள்ளது. காணாமல் போன இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி இருப்பதாக விமானப்படைத்தளபதி எயார் வைஸ் மார்சல் டொனால்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தின் இழப்பு விமானப்படையின் உளவு நடவடிக்கைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் விமானப் படையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு சம்பவத்தை மிஞ்சிய இன்னுமோர் பாலியல் வல்லுறவு சம்பவமொன்று மருதானையில் இடம்பெற்றுள்ளது.

லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் என கருதப்படும் நடுத்தர வயது பெண் ஒருவர் ஐந்து படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பரபரப்பான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன் அது மூடி மறைக்கப்பட்ட விடயமாக மாறியுள்ளது.

இச்சம்பவத்தில் தவறிழைத்த இராணுவத்தினரை கைதுசெய்த இராணுவ பொலிஸார் மற்றும் மருதானை பொலிஸார் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று அறிய முடியாதுள்ளது.

இவ்வாறு மேலும் பல குற்றச் சம்பவங்கள் நிறைவுறும் இவ்வாரத்தில் இடம்பெற்றுள்ளன.

thanks thinakkural

Print this item