Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 531 online users.
» 0 Member(s) | 529 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,326
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,648
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,082
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,471
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,509
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு!
Posted by: AJeevan - 10-26-2005, 08:25 PM - Forum: கலைகள்/கலைஞர்கள் - Replies (1)

<span style='color:red'>சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு!
<img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p37.jpg' border='0' alt='user posted image'>
அக்பர், அலெக்ஸாண்டர் வரலாற்றைவிட சாமியார்கள் அழகிகள் வரலாறு நமக்குத் தெளிவாகத் தெரியும்!

என் சக படைப்பாளிதான்... காரசாரமா பேசிட்டு இருந்தோம். திடீர்னு ஆவேசமாகி, என் முகத்தில் குத்திட்டான். என் கண்ணு கலங்கிப்போச்சு. அப்படியே கன்னம் கிழிஞ்சு, ஒரு பல் உடைஞ்சு ரத்தம் வழிய நிக்கிறேன். என்ன பண்றது?
<img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p38a.jpg' border='0' alt='user posted image'>
<b>வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்னு சொன்னாரே வள்ளலார்... அதுதானே படைப்பு மனம்... அதுதானே மனுஷத்தனம். நமக்குள் எதுக்கு இந்த வன்மம்?</b>

இங்கே அரசியல் சினிமா இலக்கியம்னு அத்தனையிலும் நடக்கிற குரூர, அபத்த நாடகங்களுக்கு நான் ஒரு சாட்சிக்காரன். அதுக்கு அடையாளமா இந்த தழும்பும் இருக்கட்டும்னு விட்டுட்டேன்!ரூ சச்சின் டென்ஷனாகிற நேரம் பார்த்து ஷேன் வார்னே பந்து வீச வந்தால், பறக்குமே சிக்ஸர்கள்... அப்படி சாரு நிவேதிதா பேச ஆரம்பித்தாலே பரபரப்புதான்!

கழுத்தில் ஆறேழு தங்கச் சங்கிலிகளைப் போட்டுவிட்டால்இ தமிழ் சினிமாவில் வில்லனாக்கிவிடலாம் என்பது போன்ற தோற்றம். ஜீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் என காமமும் வியர்வையும் கலந்து மணக்கும் சாருவின் எழுத்துக்கள், சமயத்தில் வியப்பளிக்கும்... சமயத்தில் வெறுப்படிக்கும். அப்படி ஒரு ரகளையான பாணியைத் தனது பிரத்யேக மொழியாக்கி வளைய வரும் சாரு, இலக்கிய எல்லைகளைத் தாண்டியும் பிரபலம். ஒரு மழை இரவில் நடந்தது இந்தச் சந்திப்பு...

தமிழ் இலக்கியச் சூழல் இப்போ மோசமா இருக்கு. பாரதி மாதிரி, ப.சிங்காரம் மாதிரி தீவிரமாகவும் உலகத் தரத்திலும் இயங்கக்கூடிய படைப்பாளிகள் ரொம் பவே குறைந்து விட்ட னர். கவிதைகளில் தருமு.சிவராமுக்குப் பிறகு அவ்வளவு உக்கிரமாக, பித்த நிலையில் எழுத ஆட்கள் இல்லை. உரை நடையில் அசோகமித் திரன் அளவுக்கு எழுதும் படைப்பாளி யைத் தேட வேண்டி இருக்கிறது. ஒரு சில பேர் இருந்தாலும், அவர்களும் பரவலாக அறியப் படாமல் வட்டத் துக்குள்தான் வாழ்கிறார்கள்.

பெரு நாட்டு அதிபராக இருந்தவர் லோசா... தன் ஆட்சியில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவிக்க உத்தரவிட்டவர். ஆனால்இ அவர் பிரமாதமான எழுத்தாளர். 'தி ரியல் ஸ்டோரி ஆஃப் அலெக்சான்ட்ரா மாய்தா' என்கிற அவருடைய நாவல், ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய ஆக அற்புதமான படைப்பு. ஓர் எழுத்தாளராக அவரை நான் கொண்டாடுவேன். அப்படிக்கூட இங்கே பலரைக் கொண்டாட முடியாதே!

லக்ஷ்மி மணிவண்ணன், அழகிய பெரியவன், என்.டி.ராஜ்குமார் எனச் சிலர் சொல்கிற மாதிரி எழுதுகிறார்கள். மாலதி மைத்ரி எழுத்துக்களில் ஒரு தெறிப்பு இருக்கு. ஆனாலும், உலகத் தரத்தில் எழுத யாரும் இல்லை. என் எழுத்துக்கள் உலகத் தரத்துக்கானவை. அதற்கான வாசிப்பும் உழைப்பும் என்னிடம் இருக்கிறது. மலையாளத்திலும் வெளிநாடுகளிலும் என்னைக் கொண்டாடுகிறார்கள். அங்கே எல்லாம், நம்ம ஊரில் ஒரு நடிகனுக்குக் கிடைக்கிற மரியாதையும் வரவேற்பும் எனக்குக் கிடைக்கின்றன. ஆனால் இங்கே என்னை எவ்வளவு பேருக்குத் தெரியும்? எழுத்தாளனை மதிக்காத கொண்டாடாத ஒரு சமூகம் எப்படி உருப்படும்..?

<b>சிறு பத்திரிகைச் சூழல் எப்படி இருக்கிறது? </b>

உண்மையில் இங்கே உள்ள பல எழுத்தாளர்கள், சாமான்யர்களைவிட கட்டுப் பெட்டிகளாக பத்தாம்பசலிகளாக இருக்கிறார்கள். ஜாதிய மனோபாவம் சிறு பத்திரிகை உலகிலும் பரவிக் கிடக்கிறது.

விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளாமல் வக்கீல் நோட்டீஸி லிருந்து அடியாள் அனுப்புவது வரையான ஆபத்துக்கள் நடக்கின்றன. உச்சகட்டமாக கும்பலாக வந்து நேரடியாகவே தாக்குகிறார்கள். உனக்கும் எனக்கும் நடுவிலேயே கருத்துச் சுதந்திரம் இல்லையென்றால், சமூகத்தில் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

அப்புறம், கோஷ்டிப் பூசல்... ஆளாளுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக்கொண்டு பண்ணுகிற கோமாளித் தனங்கள். என்னை ஒரு மலையாள பத்திரிகையில் பேட்டி எடுக்க இருந்தால், சாருவா... அவனெல்லாம் ஒரு எழுத்தாளனே இல்லை. குப்பை! என்று தமிழ்நாட்டிலிருந்து தகவல் போகிறது. இந்த மாதிரியான கோஷ்டிப் பூசல்களால்தான், தகுதியானவர்களுக்கு வர வேண்டிய விருதுகளும் கிடைக்காமல் போகின்றன. 'இவருக்கு விருது கொடுத்தால் சண்டை வரும். அவருக்குக் கொடுத்தால் வம்பு' என்று கொடுக்கப் பயப்படுகிறார்கள். இதனால் நம் படைப்புகள் வேறு மொழிகளுக்குப் போய்ச் சேர வாய்ப்பு இல்லாமல் போகிறது. அரசியலைக் குறைத்து அவரவர் படைப்பில் கவனம் செலுத்தினால் தமிழ் இலக்கியத்துக்கு நல்லது நடக்கும்.

இன்னொரு பக்கம் ஆரோக்கியமாவும் இருக்கு. பல்கலைக்கழகங்களோ, அரசியல் இயக்கங்களோ, அரசாங்கமோ, சினிமாவோ, வெகு ஜனப் பத்திரிகைகளோ தமிழை முன்னெடுத்துச் செல்ல முடியாது. சிற்றிதழ்களாலும் சிற்றிதழ் எழுத்தாளர்களாலும்தான் அது நடக்கிறது... தொடர்ந்து நடக்கும்!

<b>பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் பாலுணர்வு தூக்க லாக இருக்கின்றன என்பது மாதிரி யான சர்ச்சைகள்இ அவர்களின் படைப் புச் சுதந்திரத்தை பாதிக்கும்தானே? </b>

முதலில் பெண் படைப்பாளிகளின் எழுத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகச் சொல்வது யார் தெரியுமா? நம் திரைப்படப் பாடலாசிரியர்கள். இந்த மாதிரி உலக காமெடி எல்லாம் இங்கேதான் நடக்கும். அதை விட்டுத் தள்ளுங்க. உடலைப் பற்றி, காமத்தைப் பற்றி இன்னும் ஆழமாக வலிமையாக எழுதப் பெண் படைப்பாளிகள் முன்வர வில்லை என்பதுதான் என் ஆதங்கம்.

நோபல் பரிசு வாங்கின ஆஸ்திரியா நாட்டு பெண் எழுத்தாளர் எல்ஃப்ரிட் ஜெலினெக் எழுதிய பியானோ டீச்சர் என்கிற நாவலைப் படியுங்கள். முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் உடல் வேட்கையைஇ காமத்தை அடிச்சு நகர்த்தி இருப்பார். நாவல் வந்ததும் அது என் சொந்த அனுபவங்கள்தான் என்று துணிச்சலாகச் சொன்னார். அந்த உண்மையில், உக்கிரத்தில் ஒரு சதவிகிதம்கூட இங்கே இல்லை. உடல் எவ்வளவு மகத்தான விஷயம்... அதைக் கொண்டாட வேண்டாமா?

தமிழில் இப்போது பாலுணர்வு பற்றி எழுதுபவர்களில் முக்கியமான ஆள் நான்தான். என் எழுத்துக்களைப் பற்றி இதுவரை எந்த பெண் படைப்பாளியும் கருத்து சொன்னதாகவோ, விவாதித்ததாகவோ விமரிசனம் பண்ணியதாகவோ எனக்குத் தெரியவில்லை. என் எழுத்தை அவர்கள் வாசித்திருப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வாசிப்பு கிடையாது. இன்னும் கட்டுமானங்களை, கட்டுப்பாடுகளை முழுதாக உடைக்க முன்வராவிட்டால், அப்புறம் எப்படி ஜெலினெக் மாதிரியெல்லாம் எழுத முடியும்?

<b>சரி, குஷ்பு பேசிய கற்பு பிரச்னை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?</b>

கற்பாவது மண்ணாங்கட்டியாவது! இதை பெரியார் எப்பவோ சொல்லிட்டார். அந்தப் பெரியார் வழியில் வந்த தம்பிகள்தான் இன்னிக்கு தாம்தூம்னு குதிக்கிறாங்க. இவங்க சொல்ற கற்பு என்ன? ராமன்-சீதா மாதிரி ஒருவனுக்கு ஒருத்தி. ஆனால், நம் தலைவர்கள் எத்தனை பேர் அப்படி இருக்காங்க?
<img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p44.jpg' border='0' alt='user posted image'>நீங்க ஒரே ஒரு நாள் ஃபேமிலி கோர்ட்டுக்கு போய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தீங்கன்னா தெரியும்... நம்ம தேசம் எப்படி இருக்குன்னு? விவாகரத்து கேட்டு வருகிற பல தம்பதி களுக்கு இருக்கிற பிரச்னையே என் மனைவிக்கு இன்னொருத்தனோட தொடர்பு இருக்கு, கணவனுக்கு இன்னொருத்தியுடன் காதல் இருக்கு என்பது மாதிரிதான். நீங்க காட்டுக் கத்தா கத்துகிற கற்பு எங்கே போச்சு? அப்புறம் ப்ரீரூமேரிடல் செக்ஸ். கல்யாணத்துக்கு முன்னாடி யார் யாருடன் எப்படி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவங்கவங்க விருப்பம் சார்ந்த விஷயம். யாரும் யாரையும் ஏமாற்றக் கூடாது; ஏமாந்து விடக் கூடாது. உறவுகளில் பாதுகாப்பாக இருக் கணும். அவ்வளவுதான் விஷயம்! அது பற்றிய பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுப்பது பற்றி யாரும் பதறக் காணோம். போராடக் காணோம். சும்மா கற்பு ஒழுக்கம்னு கத்திட்டே இருக்கிற நம் நாட்டில்தான் கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கிறது. செக்ஸின் தலைமையிடம்னு சொல்லப்படுகிற தாய் லாந்தில் கற்பழிப்பு என்பதே இல்லை. அப்ப என்ன கற்பு... கருமம்னுக்கிட்டு?

திருமாவளவன் டெக்கான் கிரானிகல் இங்கிலீஷ் பேப்பரில் கற்பைப் பற்றி முற்போக்காகப் பேட்டி தருகிறார். இன்னொரு பக்கம் அவர் கட்சிக்காரர்கள் கையில் விளக்கு மாறுடன் கழுதைகளுடன் குஷ்பு வீட்டின் முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். இதுதான் இங்கே இவங்க அரசியல்.

கற்பைப் பற்றி குஷ்பு தவறாகப் பேசிட்டாங்களாம்... ஆளாளுக்கு செருப்பு தூக்குவது, வழக்கு தொடுப்பது கொடும்பாவி கொளுத்துவது என காமெடி நாடகம் நடத்துகிறார்கள். குஷ்பு அப்படி அந்தப் பத்திரிகையில் என்ன பேசினார் என்பதே பலருக்கு சரியா தெரியாது.

உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் சொல்கிற உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்னு ரூஸோ சொன்னது எவ்வளவு மகத்தான கருத்து. ஆனால் இங்கே நம் அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து சமூகத்தையே ரௌடிக் கூட்டமாக மாத்தி வெச்சிருக்காங்க. கொடும் பாவியைக் கொளுத்துகிறவன் நாளைக்கு உயிரோடவும் கொளுத்து வான்... பஸ்ல பிள்ளைங்களை உயிரோட எரிச்சாங்களே அப்படி நடக்கும்!

அதுக்காக நான் குஷ்புவை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. அது தனிக் கச்சேரி. அந்தப் பேட்டியில் குஷ்பு பேசின அத்தனையும் உளறல். குஷ்பு மாதிரி நடிகைகள் எல்லாம் தொழிலதிபர்கள். லட்ச லட்சமா பணம் பார்க்கிறவர்கள். அவங்களுக்கு மக்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது. இப்பவும் சாந்தி தியேட்டர் எதிரே தன் பிள்ளைக்குச் சாப்பாடு வாங்குகிற காசுக்காக உடம்பை வித்து வாழ்கிறார்களே.. அவங்களுக்காகப் போராட நான் ரெடி. குஷ்புவுக்காக நான் எதுக்குப் போராடணும்?

அது இருக்கட்டும், இது மாதிரியான பிரச்னைகளுக்கு ஆரம்பமாக இருந்த தங்கர்பச்சானின் பேச்சு இருக்கே... அதையும் கண்டிக்கணும். அதுவும் கேவலம் அறுநூறு ரூபாய் பாக்கிக்காக ஒரு சிகை அலங்கார நிபுணரெல்லாம் ஷ¨ட்டிங்கை நிறுத்துறாங்கனு ஒரு தொழிலாளியையும் அவங்க வாங்குகிற கூலியையும் கேவலப்படுத்திப் பேசினார் பாருங்க... அதுக்குத்தான் போராடணும். தங்கர்பச்சான் _ குஷ்பு பிரச்னைகள் தமிழ்நாட்டின் பிரச்னையா என்ன... இது சும்மா, பேயும் பிசாசும் அடிச்சுக்குது!

கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாதுன்னு ஆரம்பிச்சு ஓட்டல் களில் நள்ளிரவு நடனம் ஆடக் கூடாது என்பது வரை கலா சாரக் காவல் எண்ணத்தோடு அரசியல் கட்சிகளும்இ கல்வித் துறையும் காவல் துறையும் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறீர்களா?

காட்டுமிராண்டித்தனம்! நம்ம தேசத்தில்தாங்க நடக்குது இவ்வளவு கூத்தும்! இங்கே பொது இடங்களில் சிகரெட் விற்கலாம். ஆனால்இ புகைக்கக் கூடாது. 11 மணிக்கு ஓட்டல் பார்களை மூடிவிட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் டாஸ்மாக் மட்டும் 12 மணி வரை விற்கலாம். சிகரெட், சாராயத்தை விற்க, அரசாங்கமே அனுமதிக்கும். ஆனால், சினிமாவில் மட்டும் இவை இரண்டுமே காட்டக் கூடாது.

அதே போல, கல்லூரிகளிலும், பகலைக்கழகங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் கோமாளிக் கூத்து. ஆட்சி அதிகாரத்தில் யார் அமர வேண்டும் என்று தீர்மானிக்கிற வாக்கு அளிக்கும் வயதும் உரிமையும் உள்ள மாணவர் களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்?
<img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p42a.jpg' border='0' alt='user posted image'>
கல்விக்கூடங்கள் என்பது ஒரு சுதந்திர வெளி. அங்கே இருந்துதான் சிறந்த விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் தலைவர் களும் உருவாகி வருகிறார்கள். அவர்களை அடிமைக் கூட்டமாக ஆக்க ஆசைப்பட்டால், இனி வரும் காலங்களில் ஒரு நல்ல மாணவனையோ, மனிதனையோ சமூகத்துக்கு உருவாக்கித் தர முடியாது.

அப்புறம், இந்த ஹோட்டல் விவகாரம். ரோட்ல டான்ஸ் ஆடினா பிடிங்க... அது த்ரிஷாவா இருந்தா மன்னிச்சு விட்ருவீங்க. ஆனா, நட்சத்திர ஹோட்டலுக்குள் நாலு சுவத்துக்குள் நடனம் ஆடினால் தவறாம். சொல்லப் போனால்இ அது ஒருவரது பிரைவஸிக்குள் அத்துமீறல் என்று காவல்துறை மீதும் மீடியா மீதும் மான நஷ்ட வழக்கே போடலாம்.

ஆனால், அதே நட்சத்திர ஓட்டல் களுக்குள் வேறு ஒரு அநியாயம் நடக்கிறது. சமீபத்தில், நானும் என் நண்பர் ஒருவரும் அப்படி ஒரு ஓட்டலுக் குக் குடிக்கப் போயிருந்தோம். நண்பர், கிராமத்தைச் சேர்ந்தவர். கறுப்பாக இருப்பார். அதனால் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. என்ன அநி யாயம்! அவரும் காசு தானே கொடுக்கிறார்! தீண்டாமை இன்னும் ஒழியலை. எங்கேயும் ஒழியலை. அது வேற வேற முகம் எடுத்துட்டே இருக்கு... அதை எதிர்த்துத்தான் நாம் போராடணும்!

<b>விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருக்காரே...</b>

செம காமெடி! ஏன் அரசியலுக்கு வந்தீங்க?னு ஒரு கேள்விக்கு, அவர் சொல்ற பதில், நான் சின்ன வயசிலேருந்தே சமூக சேவை செஞ்சிருக்கேன். இப்பவும் தையல் மெஷினெல்லாம் குடுக்கிறேன், என்கிறார். நான்கூடத்தான் பீச்சுக்குப் போறேன்... பிச்சை போடறேன். அதுக்காக அரசியலுக்கு வந்திடலாமா?

சினிமாவால் சமூகத்தைக் கெடுத்தது போதாதுன்னு இப்போ அரசியலுக்கும் வர்றாங்க. ரஜினிக்கு ஆன்மிகம் மாதிரி, விஜயகாந்துக்கு அரசியல். பல கோடிகளைப் பத்திரமா பேங்க்ல டெபாஸிட் பண்ணிட்டு, இமயமலைக்கு ட்ரிப் அடிக்கிறது எவ்வளவு சூப்பர் ஆன்மிகம்!

துறவின்னா யாரு... காமம், போகம், யோகம் எல்லாத்தையும் தாண்டி அதிகாரத்தையும் துறக்கணும். ஆனால் துறவி என்கிற பெயரில், ஜனாதிபதியையும் நீதிபதிகளையும் வந்து வாசலில் நின்னு பார்க்க வெச்சு, அதிகாரத்தை நிறுவுகிறவர்கள்தானே இங்கே துறவி! அரசியல், ஆன்மிகம் இலக்கியம்னு அத்தனையும் கெட்டுக் கிடக்கிற சமூகத்தில், விஜயகாந்த் அரசியலுக்கு வருவதா ஆச்சரியம்?

<b>பிரேமானந்தாவில் இருந்து ஜெயலட்சுமி வரைக்கும் தமிழகத்தின் திடீர் பிரபலங்கள் அத்தனை பேரும் செக்ஸ் குற்றச்சாட்டுக்களிலேயே சிக்குவது தொடர்கதையாக இருக்கிறதே... </b>

அக்பர் வரலாறு... அலெக்ஸாண்டர் வரலாற்றைவிட தமிழகத்தின் சாமியார்கள், பெரிய மனிதர்கள் அழகிகள் வரலாறு நமக்குத் தெளிவாகத் தெரியும். புண்ணியம் மீடியாவுக்கு!
<img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p46.jpg' border='0' alt='user posted image'>
மனைவியுடன்...


நம் சமூகத்தில் நடக்கிற பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். செக்ஸ்னா அசிங்கம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிற சமூகத்தில், செக்ஸ் குற்றங்கள்தான் அதிகமாக நடக்கும். காலத்துக்கும் தேவைகளையும் ஆசைகளையும் அழுத்தி அழுத்தி உள்ளேயே பூட்டிட்டு அலைந்தால், பசி அதிகமாகும். வக்கிரம்தான் தலைதூக்கும். பசி அதிகமாகி விட்டால், பிடுங்கிச் சாப்பிடுகிற மாதிரி எங்கே யாவது வாய்ப்பு கிடைக்கிறபோது, எதற்கும் தயாராகிவிடுகிறார்கள்.

அண்ணாச்சி முதல் ஜெயலட்சுமி வரை நடக்கும் அத்தனை விவகாரமுமே நம் சமூகத்தின் சாம்பிள்கள் தான். என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தறே... உன்னை கால்ல போட்டு மிதிச்சுக் காட்டறேன் பார்னு ஒரு பெண் கிளம்பினால் என்னவாகும் என்பதற்கு ஜீவஜோதி முதல் ஜெயலட்சுமிவரை உதாரணங்கள் இங்கே அதிகம்!

<b>உங்களுக்கு ஈழத் தமிழர்களின் நட்பு அதிகம்... அவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது? </b>

இணைய தளத்தில் என் கட்டுரைகளைப் படித்து, நண்பர்கள் ஆனவர்கள் நிறையப் பேர். அவர்களின் வாழ்வு துயரமானது. நிறையச் சம்பாதிக்கிறார்கள். வசதியாகவும் சிலர் வாழ்கிறார்கள். ஆனால், தங்கள் தாய் மண்ணில் போய் ஒரு பிடி சோறு சாப்பிட முடியலையே என்கிற துயரம் எப்பவும் அடிமனதில் அழுத்திட்டே இருக்கு. எனக்குச் சொந்த மண், மொழின்னெல்லாம் ஒண்ணும் கிடையாது. நிலப்பரப்பு எல்லாம் என்னோடதுதான்னு நினைப்பேன். ஆனால், சொந்த மண்ணே மறுக்கப்படுகிறபோது வருகிற சோகம் வேறு. அதை அனுதினமும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ஷோபா சக்தி மாதிரி உக்கிரமான படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள். இங்கே தமிழ் தமிழ் என்று கத்திட்டு, படப் பெயரை மாற்றச் சொல்லி, டாடா சுமோக்களில் போய்ப் போராட்டம் நடத்துபவர்களை விடஇ அவர்கள் பல மடங்கு நம்பகமானவர்கள். அன்னிக்குப் பார்க்கிறேன்... கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் <b>அண்ணைத் தமிழ் வாழ்க!னு</b> மூணு சுழி <b>'ண'</b> போட்டு எழுதி இருக்காங்க. இதுதான் இங்கே அரசியல்! இதுதான் நம்ம சமூகம்!

ஃப்ரான்ஸ்தான் என் கனவு தேசம். அங்கே ஒரே தெருவில் தேவாலயம், ஸ்கூல், செக்ஸ் ஷாப் எல்லாம் இருக்கு. ஆனால், எதுவும் எதுவாலும் டிஸ்டர்ப் ஆவதில்லை. அது மாதிரி ஒரு சூழல் வரும்போதுதான் இந்தியா உருப்படும்!

நன்றி:விகடன் / ராஜுமுருகன்
படங்கள்: புதுவை இளவேனில்.</span>

Print this item

  காதலைப் பற்றிக் கதைக்கப் போறன்
Posted by: narathar - 10-26-2005, 06:54 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (14)

சயந்தனின் அண்மய பதிவை இங்கே போடுகிறேன்,களம் கொன்ச்சம் இறுக்கமா இருக்கிற படியா இது கொன்சம் ஜாலியான விசயமா இருந்திச்சிது,இங்க கன பேருக்கு உதவும் எண்டு போடுறன் ,என்ன நினைக்கிறியள் உங்கட கருத்தென்ன என்டு சொல்லுங்கோ,பிறகு சயந்தன் வந்து என்ன சொல்லுறார் எண்டு பாப்பம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அதென்ன திடீரென்று காதலைப்பற்றிக் கதைக்க வேணும் எண்டு யாரும் கேட்கக்கூடாது. என்ரை பழைய பதிவொண்டில எங்கேயோ ஒரு தடவை காதலுக்கான உடனடிக்காரணங்களில அழகும் ஒண்டு எண்டு சொன்னதுக்காக அப்ப கொழும்பிலயும் இப்ப சிங்கப்பூரிலும் இருக்கின்ற கீது காரசாரமா ஒரு பதில் எழுதியிருந்தவ. (அதில என்னை யோசிக்க வைச்ச ஒரு விசயம் என்னெண்டால் அவவின்ரை பதிவில இருந்த சயந்தன் உம்மட்டை இருந்து இதை நான் எதிர்பாக்க வில்லை எண்டது தான். ) அவவின்ரை பதிவுக்கு என்ரை பதிலை ஒரு பதிவாப் போடலாம் எண்டு தான் இருந்தன். பிறகு மறந்திட்டன்.

ஆனாலும் இப்பவும் காதலுக்கு அழகும் ஒரு உடனடிக்காரணம் எண்டதில நான் உறுதியாத்தான் இருக்கிறன். வலு சிம்பிளா என்னாலை விளக்க முடியும். யார் யார் எண்டே தெரியாத இருவர் ஒருவரை ஒருவர் நெருங்க வேண்டும் எண்ட ஆசையையும் எதிர்பார்ப்பையும் உடனடியாத் தாறதில அழகுக்கு ஒரு முக்கிய இடமிருக்கு!

இங்கை அழகெண்டதை எப்பிடி வரையறை செய்யலாம் எண்டும் ஒருவருக்கு அழகாத்தெரியறது இன்னொருவருக்கு அழகில்லாமல் தெரியும் எண்ட கேட்டலுத்துப்போன கருத்தக்கு ஒரு பதில் சொல்லுறன். அதாவது ஒருவருக்கு அழகாத்தெரியுதே.. அந்த அழகை பற்றித்தான் நான் கதைக்கிறன்.

வேணுமெண்டால் இப்பிடிச்சொல்லலாம். காதலுக்கு முந்திய ஒரு ஈர்ப்பு இருக்குது தானே.. அதுக்கெண்டாலும் இந்த அழகுதான் காரணமாயிருக்கு. அதே நேரம் இப்பிடி எந்த அழகு தொடர்பான ஈர்ப்பு எதுவுமில்லாமல் படிக்குமிடங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ ஒன்றாக இணைந்து இருக்க சந்தர்ப்பம் கிடைத்தவர்களுக்கும் நாட்செல்ல செல்ல இயல்பாக காதல் அரும்பக் கூடும். சிலர் இதைத்தான் உண்மையான காதல் எண்டுகினம்.

அதைவிடுவம். இங்கை ஒஸ்ரேலியாவில காதல் , கல்யாணம் பற்றி ரண்டு தமிழ்ப் பெண்களோடு கதைக்கும் சந்தர்ப்பம் போன முறை சிட்னி போயிருந்த சமயம் கிடைச்சது. அதில ஒருத்தியை கடந்த வருடமே எனக்கு அறிமுகம். கடந்த வருசம் சிட்னியில நடந்த ஒரு நிகழ்வில அவவும் அவவின்ர boyfriend ம் மும்மரமா நிகழ்வு வேலைகளை செய்து கொண்டிருக்க சந்தோசமாய் இருந்தது.

மற்றவவை இந்த முறை தான் தெரியும்.

ஒரு நாள் ரெயினுக்குள்ளை வரும் போது அவையோடு கதைச்சுக் கொண்டு வந்தன். முதலாமவர் தன்னுடைய காதல் உடைந்து விட்டதாக ஒரு கட்டத்தில சொன்னா. அது இங்கெல்லாம் சர்வ சாதாரணம் என்பதால் அது பற்றி எந்த அதிர்ச்சியையும் முகத்தில் காட்ட இல்லை நான். அல்லது காட்டுவது போல நடிக்கவும் இல்லை.

'அவன் எப்ப பாத்தாலும் நீ அதைச் செய்யாதை இதைச் செய்யாதை எண்டு சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அது பிடிக்கவில்லை.. ' என்றாள் அவள். எனக்கதில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லாத படியாலை எதுவும் சொல்லேல்லை எண்டாலும் பெண்களுக்கு குறிப்பாக காதலிகளுக்கு மன்னிக்கவும் காதலிக்கு பிடிக்காத விடங்களாக அவற்றை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தன் மனசுக்குள்ளை.

அவ பொதுவா தன்னோடை பல்கலைக்கழக மட்ட அதுவும் தமிழ்ப்பெடியள் பற்றித்தான் கதைச்சா. இவங்கள் எல்லாரும் தங்களாலை எந்தப் பெண்ணையும் காதலிக்க வைக்க முடியும் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறாங்கள் எண்டா.

அப்பிடியில்லை எந்தப்பெண்ணையும் என்னாலை காதலிக்க வைக்க முடியாது.. சிலரை மட்டும் தான் என்னாலை முடியும் எண்டு நான் பகிடிக்கு சொன்னன்.

இதுக்கிடையில பக்கத்தில இருந்தவ அம்மா அப்பா எங்களுக்கு ஒரு நாளும் கெட்டது செய்ய மாட்டினம். அவையள் தெரிவு செய்தால் அது சரியாத்தான் இருக்கும். எண்டு சொன்னா.

தனக்கு ஒரு பெடியனைப் பிடிச்சிருந்தால் தான் நேரடியா போய் அப்பாட்டை சொல்லுவாவாம். இதுவரை ஒருத்தரையும் பிடிக்கேல்லையாம்.

பதினெட்டு வயசாகுது.. இன்னும் ஒருத்தன் மேலை கூட மனசுக்குள்ளை ஒரு இது வரேல்லையா எண்டு கேட்டதுக்கு.. அப்பிடி ஒரு இது வாறதுக்கெல்லாம் அப்பாட்டை போய் சொல்ல வேணும் எண்டால் நான் ஒவ்வொரு நாளும் எல்லோ அப்பாட்டை போய் சொல்லிக்கொண்டிருக்க வேணும் எண்டு சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்ல.. எங்களை மாதிரித்தான் பெட்டையளும்.. எண்டு நினைச்சுக் கொண்டன்..

இதுக்கிடையில நல்ல பெடியளை எப்பிடிக் கண்டு பிடிக்கிறது எண்டு முதலாமவ கேட்டா.. பேசாமல் என்னை மாதிரி இருப்பாங்கள் எண்டு சொல்லியிருக்கலாம் தான். ஆனா ஒரு அண்ணனா.. ?? என்னை மதிச்சு கேட்டவைக்கு ஒரு தரமான பதிலைச் சொல்ல வேணும் எண்டதுக்காக ஒன்று சொன்னன்.

உன்னை ஒருத்தன் பிடிச்சிருக்கெண்டு சொன்னால் வந்து அப்பாட்டை சொல்லு என்று சொல்லு.. துணிந்து வந்து கதைத்தானென்றால் கொஞ்சம் நல்ல பெடியன். ஆனா இதெல்லாத்துக்கும் முதல் உனக்கும் அவனை பிடிச்சிருக்க வேணும்.

( அண்மைக்காலமா நான் காதல் பற்றி எழுதுற பதிவெல்லாத்தையும் நானே தூக்க வேண்டியிருக்கிறது. இதுவாவது இருக்குமென்று நம்புவோம்)

posted by சயந்தன் at 4:31 PM | 9 comments

http://sayanthan.blogspot.com/

Print this item

  புலிகள் ஐரோப்பா வர தடைவிதிக்கவில்லை
Posted by: வினித் - 10-26-2005, 03:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<b>விடுதலைப் புலிகள் ஐரோப்பாவுக்கு வர ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கவில்லை - சட்டவல்லுனர் உருத்திரகுமார்

[b]விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் ஜரோப்பாவிற்கு வருவதற்கு எந்த விதமான தடைகளும் ஜரோப்பிய யூனியன் போடவில்லையென்றும் சிங்கள அரச ஊடகங்களும் அவர்களுடன் தொடர்புள்ள ஊடகங்களும் போலியான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ்சில் இயக்கிக் கொண்டிருக்கும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிர பல சட்டவல்லுனர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 நாள் பெல்ஜியத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றிய பிதிநிதிகளிடம் மனுக் கையளித்து விட்டு திரும்புகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சுமார் 2.30 மணி நேரம் இந்த பேச்சுக்கள் இடம்பெற்றன. தமிழர் தரப்பில் 10 பிரதிநிதிகள் கலந்து தமிழர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர்.

விடுதலைப் புலிகளுக்கு ஜரோப்பிய நாடுகளும் ஜரோப்பிய ஒன்றியமும் பயணத்தடை விதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பூர்வ சந்திப்புக்களை மட்டும் மறு அறிவித்தல் வரை தவிர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்களே தவிர அவர்கள் எந்த ஒரு பயணத்தடையும் விதிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை சமாதான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இலங்கை சமாதான முயற்சிகளில் தாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்களை ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ப்பதானது சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளின் சமனிலைத் தன்மையினைப் பாதிக்கும் என்றும் சமாதானப் பேச்சுக்களைப் பாதிக்கும் அரச இனவாதிகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய நகர்வுகள் இருக்கக்கூடாது என்பதனையும் தமிழர் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


</b>

http://www.pathivu.com/

Print this item

  புதிய பிரிவுகள் தொடர்பான கருத்தாளர் பார்வைகள்
Posted by: kuruvikal - 10-26-2005, 03:28 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (29)

Quote:சிந்தனைக்களம்: இந்தப் பிரிவினை அனைவரும் பார்வையிட முடியும். ஆனால் இடைநிலை அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களே இதற்குள் புதிய தலைப்பினைத் தொடங்கவும், பதில் கருத்தினை எழுதவும் முடியும். இடைநிலை அங்கத்துவம் என்பது களத்தில் 50 கருத்துக்களை எழுதியபின்னர், அவர்களின் கருத்துக்கள் கண்காணிக்கப்பட்டு பொறுப்பாளரால் வழங்கப்படும்.
இப்பிரிவில் விவாதத்திற்கும், ஆரோக்கியமான கருத்துப் பகிர்விற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே அரட்டைகள், தனிநபர் வசைபாடல்கள்/தாக்குதல்கள் அனைத்தும் நீக்கப்படும் என்பதை முன்னரே தெளிவுபடுத்திக்கொள்கிறோம். அனைத்துக் கருத்துக்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். மற்றும் இப்பிரிவில் "Kick out" என்கிற ஒரு செயற்பாட்டை நிர்வாகத்தினர் (குறிப்பாக இப்பிரிவின் மட்டுறுத்துனர்கள்) கையாள்வர்கள். ஒரு தலைப்பில் விவாதம்/கருத்துப்பகிர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது யாராவது தனிநபர் வசைபாடல்களையோ/தாக்குதல்களையோ அல்லது பண்பற்ற முறையிலான கருத்தாடலையோ மேற்கொண்டால் அவர் அத்தலைப்பில் தொடர்ந்து எழுதமுடியாதவாறு வெளியேற்றப்படுவார். எனவே ஆரோக்கியமான உங்கள் கருத்துப்பகிர்வை இப்பிரிவுகளில் மேற்கொள்ளுங்கள். ஒருவர் தன் தரம்தாழ்த்தி கருத்தெழுகிறார் எனின் பதிலுக்கு நீங்களும் உங்களைத் தரம் தாழ்த்திக் கருத்தெழுதாதீர்கள் (நிர்வாகத்திற்கு தனிமடலில் அறியத் தாருங்கள்). மாறாக அக்கருத்தைக் கணக்கெடுக்காது உங்கள் கருத்தைத் தொடருங்கள். இல்லை, நானும் அப்படித் தான் எழுதுவேன் என்று நீங்களும் எழுதினால், நீங்களும் சேர்ந்து அத்தலைப்பில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.

கால்பந்தாட்டத்தில்...மைதான நடுவர் "கிக் அவுட்" கொடுப்பதற்கு முதல் ஜெளோ ரெட் காட் காட்டுவார்... நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள்.. கிக் அவுட் பண்ணிட்டு காட்டுவிங்களோ...இல்லை முதலே செய்வீங்களோ..! பாரபட்சம் இருக்காதே..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

Print this item

  விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்:
Posted by: வியாசன் - 10-26-2005, 03:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்: ஒரு போராளி வீரச்சாவு
ஜபுதன்கிழமைஇ 26 ஒக்ரொபர் 2005இ 16:54 ஈழம்ஸ ஜவாழைச்சேனை நிருபர்ஸ
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரைப் பிரதேசத்தில் இன்று காலை 7.15 மணியளவில் ஆயுதக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு போராளி வீரச்சாவை தழுவினார்.


கட்டுமுறிவுக் குளத்திற்கு அருகாமையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போராளிகள் மீது இராணுவத்துடன் இணைந்து செயற்படும் ஆயுதக் குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப் பிரதேசமான இந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அருகாமை சிறிலங்கா இராணுவ முகாமை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர்
:oops: :oops: :oops: :oops:

நன்றி புதினம்

Print this item

  இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?
Posted by: vasisutha - 10-26-2005, 03:15 PM - Forum: சமையல் - Replies (137)

இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக
நினைப்பவர்களுக்கு.. :roll:

*நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா?

*ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண்
துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால்
எதை உண்பீர்கள்?

எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்....
(சரி சரி வேணாம் விட்டுறன்..) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு
உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக
இருக்கிறது என்று..
அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது..
இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித
வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல்
சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்..
:wink:

<i>சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....</i>

<b>இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?</b>

<b>1.</b> சம்பல்

<b>2.</b> சொதி

<b>3.</b> மீன் குழம்பு

உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி'
Posted by: இவோன் - 10-26-2005, 01:05 PM - Forum: (தீவிர) இலக்கியம் - Replies (4)

<b>சோளகர் தொட்டி என்னும் நாவல் தொடர்பாக டிசே எழுதிய பதிவு இது. வீரப்பனை பிடிக்கப் போன அதிரடிப்படையினரின் அட்டகாசங்களை புட்டு வைக்கிறது இந்த நாவல் என்கிறார். நெஞ்சை உருக்கும் இந்த நாவலை நீங்கள் யாரேனும் வாசித்திருக்கிறீர்களா.. வாசித்திருப்பின் பகிர்ந்து கொள்ளுங்களேன்..</b>
(1)
"இவதான் மாதியா? சிவண்ணாங்கறவன் பொண்டாட்டி. எங்கேடி உன் புருஷன்? எங்கிருக்கான் சொல்லு" என்றான் அதிகாரி.

"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டான் சாமி. அவனை தலமலைக்குக் கூட்டிக்கிட்டுப் போனபோது பார்த்தது" என்றாள்.

"அப்படியா" என்று அவளது முடியைப் பிடித்து இழுத்து சுவரில் வீசிவிட்டான். அவள் சுவரில் தலைமுட்டிக் கீழே விழுந்தாள். பின் அவளது உடைகளை அவிழ்த்தெறிந்து அவளை நிர்வாணப்படுத்தப்படுத்தினர். இரண்டு கால்களையும் சேர்ந்து உருளையின் ஒரு கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை போலிஸ்காரனை இழுக்க உத்தரவிட்டான் அதிகாரி. கால்கள் மேலே ஏற தலைகீழாய் முடிகள் நிலத்தைத் தொட தொங்கினாள் மாதி. அந்தரத்தில் தொங்கும் அளவு கயிறு கட்டப்பட்டபோது, ஒரு போலிஸ்காரன் அங்கிருந்த தடியை எடுத்துத் தலைகீழாய்த் தொங்கியவளை பலம் கொண்ட மட்டும் அடித்தான். அவள் அலறியபோது கயிறு ஆடியது. அவள் அலறி மயக்கமடையும் நிலைக்கு வந்திருந்தாள். அப்போதுதான் அடிப்பதை நிறுத்தினான்.

அந்த நேரம் மேலே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கெம்பனைக் கீழே இறக்கி, மின் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியைக் காட்டி,
மெக்கர் பெட்டியிலிருந்து "கரண்ட் கொடு" என்றான் அதிகாரி.

உடனே பொலீஸ்காரர்கள் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த ஒயர்களைக் கொண்டு வந்து அதன் முனையிலிருந்த கிளிப்பினை கெம்பனின் இரண்டு காது மடல்களிலும் மற்றொன்ன்றை அவனின் குறியில் விதைப்பையிலும் மாட்டினார்கள்.

ஒரு பொலீஸ்காரன் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த கைப்பிடியை மெதுவாகச் சுற்றினான். அது ஒரு சுற்றும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. பின் ஒரு கருப்புப் பொத்தானை அழுத்தியதும் மின்சாரம் கெம்பனின் உடலில் பாய்ந்து அவன் அதிர்ந்தான். பொத்தானிலிருந்து அடுத்த வினாடி கை எடுக்கப்பட்டதும் அந்த அதிர்வு தடைப்பட்டது. மீண்டும் மெக்கர் பெட்டியைச் சுற்றி இம்முறை அதிக நேரம் பொத்தனை அழுத்திப் பிடித்தான் பொலிஸ்

"எங்கேடா வீரப்பன்? சொல்லு"

அவன் "ஊ...ஊ..." என்று கத்திக்கொண்டு அறை முழுவதும் ஓடி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்த மாதி மீது இடித்துவிட்டுத் தடுமாறிக் கீழே விழும்போது அவன் காலோடு வழிந்த மலம் அறை முழுவதும் சிதறியது. அவன் மயக்கமுற்றுச் சரிந்தான்.

அவன் உண்மையாகவே மயங்கிவிட்டானா? அல்லது நடிக்கின்றானா? என அறிய பொலீஸ்காரன் நூற்றுக்கணக்கான சிறு ஆணிகள் அடிக்கப்பட்ட ஒரு பட்டையான தோல் வாரினை, தண்ணீரில் நனைத்துக்கொண்டு வந்து கெம்பனின் முதுகில் ஓங்கியடித்தான். ஆணிகள் அவனது உடலின் சதைகளைத் துளைத்து வெளியே இழுக்கப்படும்போது இரத்தம் அறைகளின் சுவரில் தெறித்தது. அவன் "அய்யோ" என்று கத்தி நெளிந்தான்.

"டேய் அறைக்குள்ளேயே பீயை இருந்திட்டையா? அதைத் தின்னடா" என்றான் அதிகாரி.

அதிகாரிக்கு அந்த அளவு கோபமூட்டக்கூடியவனாக கெம்பனிருந்ததால், நின்று கொண்டிருந்த பொலீஸ் கெம்பனின் முடியைப் பிடித்து முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, "தின்னுடா பீயை" என்று மலம் சிதறிய பக்கம் அவனை இழுத்தான்.

கெம்பன் சிதறிய மலத்தைக் கையில் எடுத்து கண்களை மூடிக்கொண்டு வாயில் திணித்துக்கொண்டான். அவன் கண்ணில் மரணத்தின் பீதி தென்பட்டது. உடனே அவன் அறைக்கு வெளியே இழுத்துப்போகும்போது வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டபோது, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டிருந்த மாதியை கீழே இறக்கி நிற்கச் சொன்னான். அவள் ஒட்டுத் துணியற்றவளாய் கூச்சத்தில் கால்களையும், கைகளையும் மாராப்ப்பிக்கொண்டு நெளிந்தாள்.

"எங்கேடி உன் புருஷன்?" என்றான் அதிகாரி.
"தெரியாதுங்க"
"இவளுக்கும் கரண்ட் கொடுங்க" என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது பொலிஸ்காரன் மெக்கர் பெட்டியிலிருந்து ஓயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவரில் முட்டி நின்றாள். அவளது காதுகளில் இரண்டு கிளிப்புக்களும், அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக் கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுவர் சுற்றினாள். பின், அதன் கருப்பு நிறப் பொத்தானை அழுத்தினான்.
"அட சாமி....." என அவள் அறை முழுதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது. அவள் பள்ளத்தில் வீழ்வது போல உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலின் நரம்புகள் ஆங்காங்கே தலைமுதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.

"இவ பொண்ணை இழுந்தாங்கடா?" என்றான் அதிகாரி.
"சாமி. வேண்டாம்" என்று அந்த வேதனையிலும் அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கொண்டு முனகினாள். அவன் பூட்ஸ் கால்களால் அவள் முதுகில் ஒரு உதைவிட்டான். மூக்கிலிருந்து ரத்தம் வழிய அவள் சுவரோரமாய் போய் விழுந்தாள். அவள் கண்கள் இருண்டன. பின், அவள் சித்தியின் அலறல் சத்தம் கேட்டுச் சிரமப்ப்பட்டு விழித்தாள். சித்தியும் நிர்வாணமாய் மெக்கர் பெட்டியிலிருந்து மின்சார அதிர்வு பாய்ந்து அலறினாள்.

"வேண்டாம்" என மாதி எழுந்து நிற்க முயலும்போது, அவளைக் கீழே தள்ளி அவளது தலைமுடியை தரையுடன் காலில் வைத்து அழுத்தி நின்று கொண்டான் கணேஷ் பொலீஸ். ஏழாவது முறை மெக்கர் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ச்சப்படும்வரை சித்தி மயங்காமலிருந்தாள்.
(ப204-206)

அப்போது அவர்களின் அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்டது. கணேஷ் பொலிஸ்காரன் வந்தான்.

"இன்னிக்கு வந்த பொம்பளைங்க வெளியே வாங்க" என்று கூறிவிட்டு, மாதி, சித்தி, சரசு என்று பெயர் சொல்லி அழைத்தான்.

மூவரும் எழுந்து வெளியே வந்தனர். இருட்டில் வெளியே ஏழு ஆட்கள் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தது தெரிந்தது.
'வா வெளியே" என்றான்.

மாதி புரிந்து கொண்டாள். முரண்டு பிடித்தால் எத்வும் நடக்காது என்று முடிவு செய்து, "நான் வரேன். என் மகள் சின்னப்பொண்ணு. அவளை விட்டுங்க" என்று கும்பிட்டாள்.

வெளியே நின்றிருந்தவர்களில் மூன்று பேர் சித்தியின் கையைப் பிடித்து அறைக்குப் பின்புறமாயிருந்த மண்தடத்தில் அவளை இருளில் கூட்டிச் சென்று மறைந்து விட்டார்கள்.

மற்ற இருவர் சரசுவையும் ஒருவன் மாதியையும் இழுத்துக்கொண்டு இருட்டில் மரத்தின் பக்கம் கூட்டிச்சென்றனர். மாதியைத் தரையில் கிடத்தி அவன் மீது விழுந்தான்.

சித்தி என்று கத்த நினைத்தாள். நொடிப்பொழுதில் வாழ்க்கையும் நம்பிக்கையும் செத்துப்பிணமாவதை எண்ணி அமைதியாகி விட்டாள். சித்தியை நினைத்துக் கண்ணீர் விட்டாள். அதன்பின், இரண்டு நபர்கள் அவள் மீது விழுந்து எழுந்து போய்விட்டார்கள். அவளுக்கு மேலே திறந்திருந்த வானத்தில் மின்னிய அவளுக்குப் பழக்கப்பட்ட நட்சத்திரத்திடம், "நான் பிணம்" என்று சொல்லிக்கொண்டாள். அதன் பின், "நீயும் கூடத்தான் மாதேஸ்வரா?" என்றாள்.

நடுச்சாமத்துக்குப் பிறகு அவள் கொட்டடையில் கொண்டு வந்து படுக்க வைக்கப்பட்டாள். பக்கத்தில் சித்தி இருக்கிறாளா என இருட்டில் கை வைத்துத் தேடிப்பார்த்தாள். அவளையறியாமல் ஓவென அழுகை வந்ததும் படுத்துக்கொண்டிருந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள். சற்று நேரத்துக்குப் பின் சித்தியை கைத்தாங்கலாய்க் கொண்டுவந்து அறையில் கிடத்திவிட்டுப் போனார்கள். அவள் கண்கள் மூடியிருந்தது. ஆனாலும் மூச்சியிருந்தது. அவளது கன்னங்களைத் தட்டி, சித்தி என மீண்டும் மீண்டும் செய்தாள். அதன் பின் மெல்ல "அம்மா.....அய்யோ" என்றாள் சித்தி.
(ப208)

(2)
'சோளகர் தொட்டி'க்கு ஒரு விமர்சனம் என்னால் எந்தப்பொழுதிலும் எழுத முடியாது போலத்தான் தோன்றுகின்றது.. இப்படி மேலே கூறப்பட்ட சம்பவங்களைப் போல 240 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் அரைவாசிக்கு மேற்பட்ட பக்கங்கள் இவ்வாறான 'வீரப்பன் வேட்டை' என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான அதிகாரமையத்தின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையுந்தான் பேசுகின்றன. மேலே கூறப்பட்ட, கரண்டு கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டது வளர்ந்த ஆண்கள் மட்டுமலல, ஏழு, பதினொரு வயது சிறுவர்களுக்குக் கூட இந்தக் கொடூரம் நிகழ்கின்றது. நிறைமாதக் கர்ப்பிணியை எல்லாம் நாலைந்து பொலீஸ் வீட்டுக்குள் நுழைந்து வன்புணருகின்றனர்.

இந்த நாவல் குறித்து எதை எழுதத் தொடங்கினாலும் ஒருவித நிம்மதியான வாசிப்பனுவத்துடன் எந்த ஒரு வாக்கியத்தையும் முடிந்துவிடமுடியாது என்று மட்டும் தெரிகின்றது. சில சமயம், தொடர்ந்து இதை வாசிக்கமுடியாமல் வெறித்தபடி பஸ்சினுள் பயணித்துக்கொண்டிருந்திருக்கின்றேன்; வீட்டினுள் சோபாவினுள் முடங்கியிருக்கின்றேன். இப்படியான சித்திரவதைச் சம்பவங்களை இதற்கு முன் இந்தளவு வெம்மை உருகும் வார்த்தைகளுடன் வாசித்ததேயில்லை.

இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் யோசிக்கமுடிகின்றது இந்தக்கணத்தில்.

(3)

ச.பாலமுருகன் தனது 'என்னுரையில்' ...
'மகிழ்ச்சி நிரம்ப் வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்கள் சமூகம் பல்வேறு நிகழ்வுகளால் பாதிப்புக்குள்ளாயிற்று. தங்கள் சொந்த விளைநிலங்களிலிருந்து அவர்கள் அன்னியராக்கப்பட்டனர். அம்மக்களின் தாயைப் போன்ற வனத்திற்குள் சுதந்திரமாய்ச் செல்ல இயலாதவாறு பல்வேறு தடைகளையும், அரச இயந்திரங்களின் மனித உரிமை மீறல்களையும் சந்தித்த்தார்கள். கடந்த பத்தாண்டுகளாய் மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வந்தவன் என்றமுறையில் அந்த மக்களிடம் பழகவும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களும் அனுபவமும் எனக்குள் பெருஞ்சுமையை ஏற்றியது.

இந்நாவலில் வரும் அந்த பழங்குடி மக்கள், அவர்களால் தொட்டி என்றழைக்கப்படும் அவர்களது சிற்றூர், அடர்ந்த வனம், அந்தச் சூழல்கள் இவைகளே எனது நாவலுக்கு உயிர்தந்தவை. நாம் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையை விட கனமானவை. இருளை விட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை.. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும். எனவே அவைகளை இந்தப் பதிவின் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்' என்கின்றார்.

வீரப்பன கொலைசெய்யப்பட்டு 'அமைதி' நிலவும் இன்றைய பொழுதிலாவது, இந்தப் பழங்குடி மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா என்பது இன்னும் கேள்விக்குறியே. வாழ்வு திட்டமிட்டுக் குலைக்கப்பட்ட சமூகத்தில், வலிகளுடன் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறுதல் அவ்வளவு இலகுவில்லை.

Print this item

  புதியவன்
Posted by: sanjee05 - 10-26-2005, 09:47 AM - Forum: அறிமுகம் - Replies (42)

வணக்கம் நான் sanjee யாழ் களத்துக்கு புதியவன். என்னையும் வரவேற்பீர்களா

Print this item

  மரணத்தை வென்ற தாய்..
Posted by: அருவி - 10-26-2005, 08:37 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

¾¡ÂýÒ Á¸ò¾¡ÉÐ. «¾üÌ Á¾Á¢ø¨Ä, ¿¢ÈÁ¢ø¨Ä, ƒ¡¾¢ §À¾Á¢ø¨Ä, ²üÈò ¾¡ú׸Ǣø¨Ä. ¦¾öÅò¾¢ý ¸Õ¨½¨Â ¿¡õ §¿Ã¡¸ì ¸ñ¼¾¢ø¨Ä. ¬É¡ø «¾üÌ ºÁÁ¡É ¾¡Âý¨À «§¿¸Á¡¸ «¨ÉÅÕõ «ÛÀÅ¢ò¾¢Õ츢§È¡õ.

«ó¾ò ¾¡ÂýÒìÌ Áýõ ¯ñ¼¡? þø¨Ä ±ý¸¢§Èý. ¾¡Â¢ý «ýÒ Áý¢ôÀ¾¢ø¨Ä. ¾¡Â¢ý «ýÒ Á¨Èž¢ø¨Ä. ¾¡Â¢ý «ýÒ ¦À¡öôÀ¾¢ø¨Ä.

þí§¸ ¿¡õ À¡÷ì¸ô §À¡ÅÐ Áýò¨¾ ¦ÅýÈ ´Õ ¾¡Â¢ý º¡¾¨É¨Â.

þí¸¢Ä¡ó¾¢§Ä Å¢Å¡¸ÃòÐì¸û, ¸½Åý - Á¨ÉÅ¢ À¢Ã¢× ±ýÀÐ º¸ƒÁ¡É ´Õ ¿¢¸ú§Å. «ôÀÊô À¢Ã¢ó¾ ÌÎõÀò¾¢ø þÂü¨¸ Å¢¾¢Â¡¸ ÌÆó¨¾¸¨Çò ¾¡Â¢¼§Á Å¢ÎÅÐ ÅÆì¸õ. þôÀÊÂ¡É ¾¡öÁ¡¨Ã "¾É¢¨Áò ¾¡ö" «¾¡ÅÐ single mother ±ýȨÆôÀ¡÷¸û.

þôÀÊÂ¡É ´ÕÅ÷ ¾¡ý Á캣ý ±Êí¼ý (Maxine Eddington) ±ýÈ 47 ÅÂÐ ¿¢ÃõÀ¢Â ¾¡ö. þÅ÷ ÌÈ¢ôÀ¢ÎõÀÊ¡¸ ±¨¾î º¡¾¢òРŢð¼¡÷? Áýò¨¾ ¦ÅýÚ Å¢ð¼¡÷ ±ýÚ ¿¡ý ¦º¡øÖ§Åý. ±ôÀÊ ±ý¸¢È£÷¸Ç¡?

2004õ ¬ñÎ, ¿ÅõÀ÷ Á¡¾õ þó¾ò ¾¡öìÌ «ÅÃÐ ¦¿ïºò¨¾§Â ¯¨¼ìÌõ ¦ºö¾¢¦Â¡ýÚ ÜÈôÀð¼Ð. þÅ÷ ÒüÚ §¿¡Â¡ø À¡¾¢ì¸ôÀðÊÕôÀÐ ¸ñÎÀ¢Êì¸ôÀðÎ, þÅâý ¯Â¢ÕìÌ 6 Á¡¾ ¦¸Î ¦¸¡Îò¾¢Õó¾¡÷¸û. ¬É¡ø Áýò¨¾ì ¸ñÎ þó¾ Å£ÃÁ¢ì¸ ¾¡ö ÀÂóÐ §À¡ö Å¢¼Å¢ø¨Ä. ¾¡ý ¯Â¢Õì̢Ḡ§¿º¢ìÌõ ¾ÉÐ 16ÅÂÐ Á¸û ¦ƒ…¢ (Jessy)Ô¼ý ¾¡ý Å¡úó¾ 16 ÅÕ¼ ¸¡Ä «ÛÀÅò¨¾Ôõ Å¢Ç츢 ´Õ «Æ¸¡É À¡¼¨Ä ±Ø¾¢É¡÷.

¿¢îºÂõ Áýõ ¾¡ý ºõÀÅ¢ìÌõ, «Ð×õ ´Õ ÌÈ¢ì¸ôÀð¼ ¸¡Ä «Å¸¡ºò¾¢ø ±ýÚ ¸½¢ì¸ôÀð¼ §¿¡Â¡Ç¢¸Ùì¦¸É À¢Ãò¾¢§Â¸Á¡É ¨Åò¾¢Âº¡¨Ä¸û ¯ñÎ. þ¨Å¸¨Ç ¬í¸¢Äò¾¢ø "†ŠÀ¢Š" (Hospice) ±ýÀ¡÷¸û. þí§¸ §¿¡Â¡Ç¢¸Ç¢ý ¸¨¼º¢ ¿¢Á¢¼õ Ũà «Å÷¸ÇÐ §¿¡Â¢ý ¯À¡¨¾¸¨Çì ̨ÈòÐ, «Å÷¸¨Ç ¿¢õÁ¾¢Â¡¸ ¨ÅòÐì ¦¸¡ûžüÌ ²üÈ ¿¼ÅÊ쨸¸¨Ç §Áü¦¸¡ûÅ¡÷¸û.

«ôÀÊÂ¡É ´Õ ¨Åò¾¢Âº¡¨Ä¢§Ä§Â þó¾ò ¾¡ö Å¡úóÐ ÅÕ¸¢È¡÷. «í§¸ þÕìÌõ ´Õ ¦Ã¸¡÷Êí ŠÞʧ¡Ţø, À¢øÄ¢ À¢Ã¡ì (Billy Bragg) ±Ûõ ´Õ À¢ÃÀÄ þ¨ºò¦¾¡ÌôÀ¡Çâý ¯¾Å¢Ô¼ý þó¾ô ¦Àñ½¢ý À¡¼ø Åâ¸û, À¡¼Ä¡¸ ¯Õô¦ÀüÚûÇÉ.

¾¡Ûõ, ¾ÉÐ Á¸Ùõ Å¡úó¾ Á¸¢úîº¢Â¡É ¿¢¨É׸¨Ç þó¾ô À¡¼Ä¢ø ¿¢¨É× Ü÷óÐûÇ¡÷ þó¾ô ¦ÀñÁ½¢. ¾¡ý ÁýÁ¨¼ó¾ À¢ýÒ, ¯¼ÉÊÂ¡É ÐÂÃò¾¢Ä¢ÕóРŢÎÀð¼ À¢ýÒ, þó¾ôÀ¡¼¨Ä ú¢ôÀ¾ý ãÄõ ¾ýÛ¨¼Â Á¸û, ¾¡ý «ÅÕ¼ý ¦¾¡¼÷óÐõ Å¡úž¡¸ ±ñ½ì Üʾ¡¸ þÕìÌõ ±ýÚ þó¾ô ¦ÀñÁ½¢ ÜÚ¸¢ýÈ¡÷.

¾¡ý Á¸¨Çô ¦Àü¦ÈÎò¾ ¿¡û Ӿġö, «ÅÇ¢ý ÅÇ÷¢Öõ, «¨¾ò ¦¾¡¼÷ó¾ «Åû Å¡ú쨸¢Öõ, ¦¾¡¼÷óÐ Àí§¸üÀÐ ´ý§È¾¡ý ¾ýÛ¨¼Â ¸ÉÅ¡¸ þÕó¾Ð ±ýÚ¨ÃìÌõ ¦ÀñÁ½¢, ¾¡ý ´Õ ¸Å¢»§Ã¡ «ýÈ¢ô À¡¼Ä¡º¢Ã¢Â§Ã¡ þø¨Ä ±É×õ, ¾ýÛ¨¼Â Áɾ¢ø ±Øó¾ ¯ñ¨ÁÂ¡É ¯½÷¸¨Çò¾¡ý ¾¡ý Å¡÷ò¨¾Â¡¸ ÅÊò¾¾¡¸×õ ÜÚ¸¢ýÈ¡÷.

¿¡¦Áø§Ä¡Õ§Á þÚ¾¢Â¢ø ÁýÁ¨¼Âò¾¡ý §À¡¸¢§È¡õ, ¬É¡ø ±ÁìÌ þÕìÌõ «ÛÜÄõ ¿ÁÐ Áýò¾¢ý ¾¢Â¾¢ ÓýÜðʧ ÌÈ¢ì¸ôÀ¼Å¢ø¨Ä. þó¾ò ¾¡§Â¡ ¾¡ý ÁýÁ¨¼Âô §À¡Ìõ ¿¡û ¦¾Ã¢ó¾ ¿¢¨Ä¢ø, ¾ý ±ïº¢Â¢ÕìÌõ ¿¡ð¸¨Ç Á¢¸×õ Á¸¢ú¡¸ì ¸Æ¢ì¸ §ÅñÎõ ±Ûõ ¯Ú¾¢Ô¼ý, ÓüȢŢð¼ ÒüÚ§¿¡Â¢ý §Å¾¨É¨ÂÔõ ¾¡í¸¢ì ¦¸¡ñÎ Å¡ú¸¢ýÈ¡÷. «Ð ÁðÎÁøÄ, ¾ýÛ¨¼Â Áýò¾¢ý À¢ý ¾ýÛ¨¼Â ¿¢¨É׸û ¾ý Á¸Ù¼ý šƧÅñÎõ ±ýÀ¾ü¸¡¸ ¯½÷¸¨Ç Å¡÷ò¨¾Â¡ì¸¢ À¡¼Ä¡¸ ¦ÅǢ¢ðÎûÇ¡÷.

þó¾ò ¾¡ö ¿¢îºÂÁ¡¸ Áýò¨¾ ¦ÅýÈÅû¾¡ý. þÅÙ¨¼Â §¿¡öìÌ ¦¸¡Îì¸ôÀÎõ º¢¸¢î¨º º¢È¢¾ÇÅ¡ÅÐ ÀÄÉÇ¢òÐ, «ÅÇÐ ¬¨ºôÀÊ, Á¸Ù¼ý Å¡Øõ ¿¡ð¸û «¾¢¸Ã¢ì¸ §ÅñΦÁÉ ¿¡õ À¢Ã¡÷ò¾¢ìÌõ ¬ñ¼Åý ¡á¸ þÕó¾¡Öõ «ÅÉ¢¼õ §ÅñΧšÁ¡¸!


நன்றி நிலாச்சாரல்

Print this item

  வணக்கம் நோட்டி வந்திருக்கன்
Posted by: naughtgirL - 10-26-2005, 05:48 AM - Forum: அறிமுகம் - Replies (80)

நான் நோட்டி வந்திருக்கன் வரவேற்பிங்களா

Print this item