| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 531 online users. » 0 Member(s) | 529 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,326
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,648
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,082
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,471
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,509
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| கூகிள் Earth இணையத்தளம் தொடர்பாக இந்திய ஜனாதிபதி |
|
Posted by: mayooran - 10-26-2005, 05:36 AM - Forum: இணையம்
- No Replies
|
 |
Google Earth என்ற புதிய இணையத்தளத்தின் நில வரைபடத் திட்டம் பலத்த சார்ச்சைகளை கிளப்பிவருகிறது. இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உட்பட உலகில் அனைத்துப் பாகங்களையும், தெளிவாக பார்வையிட இது வசதி செய்து தருகிறது. இந்திய ஜனாதிபதி மாளிகை கூட இதில் இருந்து தப்பவில்லை.
இது தீவிரவாதிகளின் கையில் கிடைக்குமானால் பல விதங்களிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் எச்சரித்துள்ளார்.
இது போன்று தென் கொரியா, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் இவ்வாறு முக்கிய இடங்களை அம்பலப்படுத்த வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி கூகிள் நிறுவனத்தின் அதிகாரி டெப்பி பிராஸ்ட் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் எந்த இரகசியத்தையும் வெளியிடவில்லை. எல்லாமே இணையத் தளங்களில் பொதுவாக கிடைக்கின்ற விடயங்கள்தான். இதனை விட, நாங்கள் வெளியிடும் படங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்னுள்ள நிலைவரத்தையே காட்டுகின்றன என்றும் கூறியுள்ளார்.
http://sooriyan.com
|
|
|
| உபயோகமான சில குறிப்புக்கள் |
|
Posted by: RaMa - 10-26-2005, 04:35 AM - Forum: சமையல்
- Replies (8)
|
 |
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------
சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------
தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------
பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
நன்றி: சென்னைநேட்வேர்க்
|
|
|
| ஓயாத அலைகள் கிளிநொச்சி மீட்பு எவ்வாறு பாகம் 7 |
|
Posted by: வியாசன் - 10-26-2005, 03:53 AM - Forum: தமிழீழம்
- Replies (2)
|
 |
'ஏழாம் ஆண்டு நிறைவில் ஓயாத அலைகள் -02
ஓயாத அலைகள் -02 கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு?
பாகம் - 7
-இ.சசிக்குமார்-
ஓயாத அலைகள் - 02 கிளிநொச்சி மீட்புச் சமரானது இலகுவான முறையில் வெற்றி கொள்ளப்பட்ட சமரல்ல. எதிரி அனைத்து வளங்களையும் பலங்களையும் இணைத்து தன்னிடமிருந்த அதியுயர் இராணுவ வல்லமைகளையும், தாக்குதல் வியுூகங்களையும் மிக உச்ச அளவில் பயன்படுத்தி முகாமைத் தக்கவைப்பதற்கான அதிஉக்கிர முறியடிப்பு சமரில் ஈடுபட்டிருந்தான்.
இந்த சமரில் வாழ்வா சாவா என்ற நிலையில் எதிரியுடன் களமாடிய புலிகள் அணிகளில் மகளிர் படையணிகளின் தீரமிகு தாக்குதலும் எதிரியை திணறடித்தன. இராணுவ hPதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை முல்லைச் சமருக்கு அடுத்த படியாக சிறிலங்காப் படைகளுக்கு இச்சமர் உணர்த்தியிருந்தது.
இவ்வாறு இரண்டு நாட்களாக நடந்த உக்கிர சமரின் தீவிரத்தை மாலதி படையணி தளபதி கேணல் விதுசா இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
'இரண்டு நாள் தொடர் சண்டையில் காப்பரண்கள் எங்களிடமும் இராணுவத்தினரிடமும், மாறி மாறிக் கைமாறின. எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு, பகலிரவாகத் தொடர்ந்த சண்டையில் உண்டான களைப்பு எல்லாமாகச் சேர்ந்து வெற்றி எம் கைக்கு வரும் சூழலை மாற்றி விடுமோ என்ற ஐயம் எழுந்தபோது தலைவர் அவர்கள் நிலைமையை மாற்றியமைத்தார். கனரக ஆயுதங்கள் யாவற்றையும் ஒருங்குவித்து கிளிநொச்சி படைத்தளத்தின் குறிப்பிட்ட சில மையப்பகுதிகளை நோக்கி செறிவான தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இது இராணுவத்தினருக்கு பாரிய தாக்கத்தை உண்டாக்கியது. இந்த அடியோடுதான் கிளிநொச்சியை விட்டு ஓடும் முடிவை இராணுவம் எடுத்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இத்தீவிர தாக்குதலில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் சோதியா படையணி கிளிநொச்சி படைத்தளத்திலிருந்து தப்பியோடும் படையினரை தாக்கியழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. இத்தாக்குதலில் தப்பியோட முயன்ற பெரும்தொகையான படையினர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் நடவடிக்கைக்கு தலைமை வகித்த சோதியா படையணித்தளபதி கேணல் துர்க்கா அன்றைய களத்தின் நிலைப்பாட்டினை இன்று இவ்வாறு நினைவுக்கு கொண்டு வருகின்றார்.
ஓயாத அலைகள்- 02 களம் வலிந்த தாக்குதல் களங்களில் மாறுபட்டது. ஏனெனில் இதுவரை காலமும் எதிரியின் முன்னரங்கக் காவல் நிலைகளைக் கைப்பற்றி அதனு}டாக உள்நுழைந்து மினிமுகாம்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. அதற்கு மாறாக ஓயாத அலை- 02 இல் தடையுடைத்துக் காவலரண்களைப் பிடிக்கும் பணி சில அணிகளால் செய்யப்பட்டது. அந்தப்பாதையினு}டாக நான்கு படையணிகள் உள்நுழைந்து கிளிநொச்சி இராணுவ முகாமிற்கும், பரந்தன் இராணுவ முகாமிற்கும் இடையில் கண்டி வீதியை ஊடறுத்து நிலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும். விடிவதற்குள் நிலைகளை அமைத்து உருமறைத்துவிட்டு சகல நகர்வுகளையும் நிறுத்திவிட்டுத் தாக்குதல் நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும். விடிந்தால் எதிரியின் சினைப்பர் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் இந்தப் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டது.
கண்டி வீதியை ஊடறுக்கும் திட்டத்தில் இரு வகைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
01. கண்டி வீதியினு}டாக ஓர் அணி கிளிநொச்சி இராணுவ முகாம் நோக்கியதாக இருந்து அதிலிருந்து வெளியேறி தப்பியோட முனையும் இராணுவத்தைத் தாக்கி அழிப்பதற்கும்.
02. அடுத்த அணி பரந்தன் படைமுகாமில் இருந்து கிளிநொச்சி இராணுவ முகாமுக்கு வரக்கூடிய அனைத்து இராணுவ உதவிகளையும் முறியடிப்பதற்கும் என நிறுத்தப்பட்டன.
கண்டி வீதியின் இடது பக்கம் இரு படையணிகளும் கண்டி வீதியின் வலது பக்கம் இரு படையணிகளும் விடப்பட்டிருந்தன. அதில் பரந்தன் முகாம் நோக்கி விடப்பட்ட அணியில் எமது ஒரு பிளட்டுன் ஜெயந்தன் படையணியினருடன் விடப்பட்;டிருந்தது. கிளிநொச்சி இராணுவத்தின் தப்பியோட்டத்தைத் தடுக்கும் பணியில் வீதியின் ஒருபுறம் எமது அணியின் பொறுப்பில் தரப்பட்டிருந்தது. எமது கொம்பனியுடன் ஜெயந்தன் படையணியின் மணிவண்ணனின் பிளட்டுன் ஒன்று தரப்பட்டிருந்தது. நாங்கள் கிளிநொச்சி முகாம் நோக்கி நிலைகளை அமைத்திருந்தோம்.
இந்தத் தடுப்பு நடவடிக்கையில் கண்டி வீதியின் ஊடறுப்பு முக்கியமானதாக இருந்தது. இதில் இருபக்க அணிகளில் எந்த ஒரு முனையில் அணிபலம் இழந்தாலும் பாதகமான நிலையாகவே இருக்கும். பரந்தன் இராணுவ உதவியைத் தடுப்பது இயலாது போனால் கிளிநொச்சி முகாம் எமது கட்டுப்பாட்டில் வருவது கடினம். அதேவேளை கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து தப்பியோடும் இராணுவத்தைத் தாக்கி அழிக்காவிட்டால் எமது தரப்பின் அனைத்துச் செயற்பாடுகளும் அர்த்தமற்றதாகி எமது தரப்பில் இழப்புக்கள் மட்டுமே எஞ்சிவிடும் எனவே 'கட்அவுட்", 'கட் ஓவ்" (கு) இரண்டுமே சிறந்த முறையில் அமையவேண்டும் என எமக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதிலும் குறிப்பாக கிளிநொச்சி முகாம் முற்றுகையிடப்பட்ட நிலையில் இதர உதவிகளும் நிறுத்தப்பட்டால் முகாமை விட்டுத் தப்பியோடும் எதிரித்தரப்பினால் மேற்கொள்ளப்படும் உக்கிரமான தாக்குதல் எமது அணிகள் மீதே அதிகமாக இருக்கும் என்றும் அதற்கேற்ப அணிகளின் பாதுகாப்பும் சிறந்த தாக்குதல் வியுூகமும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் தலைவரால் எமக்கு நன்கு வலியுறுத்தப்பட்டிருந்தன.
இந்தப் பணிகளுக்காக களத்துள் இறங்கியதும் அதற்கேற்ப நிலைகளை அமைத்து எந்த நேரத்திலும் சண்டையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். 28 ஆம் திகதி காலை எமது அணிக்குப் பின்புறமாக பரந்தன் நோக்கி நிலையமைத்திருந்த அணியினருக்கும் பரந்தனில் இருந்து வந்த இராணுவத்தினருக்கும் இடையில் கடும் சண்டை மூண்டது. எனினும் அந்த நகர்வு முறியடிக்கப்பட்டு உள்ளே செல்ல இருந்த உதவிகள் தடுக்கப்பட்டன.
அதே நாள் மாலை எதிரியின் எறிகணைத் தாக்குதல்கள் அதிகரித்தன. புகைக்குண்டுத் தாக்குல்களும் நடத்தப்பட்டன. எமது அணிகளைத் தாண்டி எதிரி தனது வெடிபொருட்களுடன் தப்ப முடியாது என்ற நிலையில் அவை அனைத்தையுமே எங்கள் பகுதியை நோக்கிப் பிரயோகித்தப்படி நகர்வைத் தொடங்கினான். இதன் மூலம் எமது பலத்தில் பாதியை அழித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் எதிரி நகர்வைத் தொடங்கியபோதும் கட்ஓப் (கு) அணிகளின் தாக்குதல்கள் அவனை நிலைகுலைய வைத்தன.
அதில் எமது படையணிக்குத் தரப்பட்ட பகுதியில் கண்டி வீதியில் இடப்பக்கமாக சுமார் நு}று மீற்றர் து}ரத்தில் இருக்கும் குளத்து வாய்காலையும், கண்டி வீதியையும் அதனிடைப்பட்டபகுதியையும் பயன்படுத்திய படியே தாக்குதல் நடத்தியபடி தப்பிப்போக முனைந்த எதிரி மீது எம்மவர்களின் தாக்குதல்கள் உக்கிரமாக நடத்தப்பட்டன எமது கண் பார்வைக்குட்பட்ட எந்தப் பிரதேசத்தாலும் எதிரியால் தப்பிப்போக முடியாதவாறு எமது தாக்குதல்கள் இருந்தன. இறந்தவனின் உடலைக் காப்பாக வைத்தே தப்பியோடிய எதிரி தமது உயிரை காப்பாற்றினான்.
எமது நிலைகள் எதுவும் தலைக்கு மேலாக பாதுகாப்புச் செய்யப்பட்டிருக்கவில்லை எழுந்து நின்றால் முழங்கால் மட்டுமே மறைக்கப் படக்கூடிய நிலைகளில் மனஉறுதி, துணிவு என்பவற்றையே காப்பாகக் கொண்டு அணிகள் சண்டையிட்டன. ஒரு கட்டத்தில் எம்மிடம் இருந்த வெடிபொருட்கள் தீர்ந்து போகத் தொடங்கின. அதில் நின்ற எங்கள் ஒவ்வொருவரின் குண்டுகளும் 5 மீற்றர்வரை வந்த எதிரிமீது வீசப்பட்டன. அதில் வீழ்ந்து இறந்த இராணுவத்தின் வெடிபொருட்களையும் கனரக ஆயுதங்களையும் எடுத்தே தொடர்ந்து வந்த எதிரிமீது தாக்குதலை மேற்கொண்டோம்.
எமது பகுதியில் கப்டன் எழிற்செல்வியின் பீ.கே., அருவியால் தப்பிச் செல்ல முற்பட்;ட எதிரியில் பலரை அழித்தது. பீ.கே நிலையில் நின்று வீரவேங்கை நல்லரசி, வீரவேங்கை உயிரொளி, லெப்ரினன்ட் மதுசா போன்றோர் தாக்குதலை நடத்தி அதிலே வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். கப்டன் எழிற்செல்வி அச்சண்டையிலே மிகத்; திறமையாகச் செயற்பட்டவர். பின்னர் வேறு ஒரு சண்டையில் வீரச்சாவு அடைந்தார். அவ்வாறே மணிவண்ணனுடன் சிலர் கண்டி வீதிக்கரையுடன் நின்று சண்டையிட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
நள்ளிரவுடன் முடிந்துபோன அச் சண்டையில் எமது படையணியில் 28 பேர் மாவீரர்களாகினர். எமது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இரு நு}ற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தின் சடலங்கள் குவிந்து கிடந்தன. எமது அணி நிலைகொண்டிருந்த அப்பகுதியில் சண்டை ஆரம்பிக்க முன் இராணுவத்தின் நகர்வை அறிவதற்கு எமது அணியினர் சிலர் முன்சென்று வேவுத்தரவுடன் வர நாம் அணியைத் தயார்படுத்தி நிற்க எதிரியும் நகர்ந்து வந்தான். இச் சமர்க்களத்தில் எமது அணியினரின் சண்டையிடும் ஆற்றலை எதிரி தரப்பில் தப்பியோடி இருப்பவர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.
களத்தில் இறங்கிய நேரத்தில் இருந்து தண்ணீரும் இன்றி அந்த வெட்டையில் எந்தச் சோர்வும் இன்றித் துரிதமாகத் தமக்குரிய காவல் நிலைகளைச் சரியான முறையில் அமைத்துக் கொண்டனர். காலை விடிந்ததும் எதிரியின் சினைப்பர் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலைகளில் இருந்தவர்கள் நிலையெடுத்து இருந்தவாறே மண்ணை வழித்து மூடையாக்கி நிலைகளை மேலும் பலப்படுத்திக் கொண்ட இடங்களும் உண்டு. அத்துடன் அணியினர் அனைவரும் பயிற்சியில் அறிவுறுத்தப்பட்ட அனைத்து விடயங்களையும் கவனத்தில் எடுத்துச் செயற்பட்டதுடன் அதில் பங்கு பற்றிய அணிகள் அனைத்துமே தமது உயரிய பங்களிப்பைச் செய்து அந்தச் சமரை வெற்றியடையச் செய்தன, என அன்றைய களமுனையின் தீவிரத்தையும், மாவீரர்களின் தியாகங்களையும் களத்தில் எதிரிமீது போராளிகள் நடாத்திய தாக்குதலின் தீவிரத்தையும் வெளிப்படுத்தினார் கேணல் துர்க்கா அவர்கள்.
தொடரும
நன்றி தமிழ்நபதம்
|
|
|
| சோமவன்ஸவின் திடுக்கிடும் திகிலான தகவல்கள் |
|
Posted by: வினித் - 10-25-2005, 07:51 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b>சோமவன்ஸவின் திடுக்கிடும் திகிலான தகவல்கள்.
ஜ புதன்கிழமைஇ 26 ஒக்ரேபர் 2005 ஸ ஜ உதயன் ஸ
<img src='http://img440.imageshack.us/img440/6627/p31pu.gif' border='0' alt='user posted image'>
ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ நிதியையும், அந்த அமைப்பினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும் மோசடி செய்து, தனது குடும்பத்தவர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்கினார் என்பதால் ஜே.வி.பியின் அதியுயர்பீடம் சோமவன்ஸ அமரசிங்கவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது என "வன்முறைகளற்ற பாதையில் ஜே.வி.பி.' என்ற அமைப்பின் சர்வதேச அமைப்பாளர் டாக்டர் சுபாஷ் சந்திரா பெர்னாண்டோ திடுக்கிடும் தகவல்களை இப்போது வெளியிடுகின்றார். விசேட பேட்டி ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ""முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்காவை அவரது றொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில் இருந்து கடத்துவதற்குத் திட்டமிட்டவரும் இதே சோமவன்ஸதான். மருதானையில் உள்ள வீடு ஒன்றில் கூடி ஐவர் கொண்ட குழுவை அமைத்து 1971 ஏப்ரல் 5ஆம் திகதி சிறிமாவைக் கடத்த அவர் திட்டமிட்டார். ஆனால், அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. இல்லையேல் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரதுங்கவை கொலை செய்வதற்கு முன்னர் ஜனாதிபதியின் தாயார் சிறிமாவோவை இவர்கள் கொலை செய்திருப்பார்கள்'' என்றும் டாக்டர் பெர்னாண்டோ பழைய விடயங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார். ""ஜே.வி.பியினரின் மரண தண்டனைக்குப் பயந்து, அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் அதிகாரமிக்க ஒருவராக இருந்த சிறிசேன கூரேயிடம் தஞ்சம் அடைந்தார் சோமவன்ஸ அமரசிங்க. அவருடைய உதவியின் மூலம் கள்ளத்தோணியில் இந்தியாவுக்குத் தப்பி ஓடினார். ""அந்தச் சமயத்தில் இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பியதற்காக அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாஸ மீது கடுப்பாக இருந்தது இந்தியா. அந்தச் சூழ்நிலையை வசமாக வகையாக பயன்படுத்திக் கொண்டார் சோமவன்ஸ. இந்தியாவில் "றோ' இவருக்கு சகல பாதுகாப்பையும் வழங்கியதுடன் லண்டன் செல்லவும் உதவியது.'' என்றும் டாக்டர் பெர்னாண்டோ சுட்டிக் காட்டினார். சோமவன்ஸ தலைவரான கதை ""உண்மையான ஜே.வி.பி.க்குத் துரோகம் இழைத்தவராகக் கூறப்படும் சோமவன்ஸ அமரசிங்க எப்படிப் பின்னர் கட்சிக்கே தலைவரானார்?'' என்று டாக்டர் பெர்னாண்டோவிடம் கேட்டோம்.
""இது நியாயமான கேள்விதான். சோமவன்ஸ அமரசிங்க நான்கு ஐந்து தடவைக்குக்கு மேல் கூட ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீரவை நேரடியாகச் சந்தித்தவரல்லர். பிரதான தலைவர்கள் கொல்லப்பட்டபின் பணத்தையும், தங்கத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிய சோமவன்ஸ சிறிது காலம் சென்ற பின்னர் தன்னைத்தானே தலைவராக மகுடம் சூட்டிக் கொண்டார். அதுதான் உண்மை'' எனத்தெளிவுபடுத்தினார் பெர்னாண்டோ. ஜே.வி.பியுடன் தொடர்பு ""தொழில் ரீதியாக நீங்கள் ஒரு டாக்டர் உங்களுக்கும் தீவிரவாத இயக்கத் தலைவர் ரோஹண விஜேவீரவுக்கும் எப்படி உறவேற்பட்டது? '' என்று கேட்டோம். ""எனது சகோதரர் எச்.எஸ்.பெர்னாண்டோ அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அவர் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர். எனது சகோதரும், ரோஹண விஜேவீரவும் நண்பர்கள். ""1965ஆம் ஆண்டு கொழும்பு மருத்துவக் கல்லூரி விடுதிக்கு ரோஹண விஜேவீரவை அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார் எனது சகோதரர். ""வைத்தியபீட மாணவர் விடுதியில் இருந்தே ரோஹண விஜேவீர தனது ஜே.வி.பி. இயக்கம் தொடர்பான பாட விதானங்களைத் தாயாரித்தார். மிகவும் அன்பாகவும் அமைதியாகவும் பழகுவார்.
<img src='http://img440.imageshack.us/img440/9830/p229pj.jpg' border='0' alt='user posted image'>
""படித்தால் மட்டும் போதாது. படிப்போடு அரசியலிலும் ஈடுபடவேண்டும். அரசியலில் இளைஞர்கள் ஈடுபடாவிட்டால் முதலாளித்துவ வாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற முடியாது என உபதேசம் செய்வார். அவருடைய பேச்சும் போக்கும் மாணவர்களாகிய எங்களை அவர் பால் ஈர்த்தன. ""நான் வைத்தியபீட ஜே.வி.பி. மாணவர் அணியின் தலைவரானேன். அதேபோன்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பிரிவுத் தலைவர்களாக முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர, எம்.ஏ.மெண்டிஸ், ஈரியகொல ஆகியோர் முன்நின்று செயற்பட்டனர். ஆரம்பம் முதலே எங்களுடைய தொடர்பு இறுக்கமானதாக இருந்தது. இப்படித்தான் எங்களுக்கிடையில் தொடர்பு ஏற்பட்டன'' உணர்ச்சிகரமாக தனது இளமைக் கால நினைவுகள் மலர விவரிக்கின்றார் டாக்டர்.
""சுபாஷ் சந்திரா பெர்னாண்டோ என்பது உங்களுடைய இயற் பெயரா? அல்லது இயக்கப் பெயரா?'' இது எமது கேள்வி. ""அது என்னுடைய இயற் பெயர்தான். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் இறந்த செய்தியை இந்திய வானொலி அறிவித்த தினத்திலேயே நான் பிறந்துள்ளேன். சுதந்திர வெறியுடையவரான எனது தந்தை அப்போதே சுபாஷ் சந்திர பெர்னாண்டோ என்று எனக்குப் பெயர் வைத்துள்ளார்.'' சிறுபுன்னகையுடன் டாக்டரிடமிருந்து பதில் வருகிறது.
""டாக்டராகப் பணிபுரிந்த உங்களை எப்போது பொலிஸார் கைது செய்தனர்?''
""1970ஆம் ஆண்டு இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பிரதேசத்திலுள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலை உரிமையாளரான டாக்டர் ஒருவர் (அவரின் பெயர் இப்போது ஞாபகம் இல்லை) அரசாங்க வைத்தியசாலையில் இருந்த சில அதிகாரிகளின் உதவியுடன் மருந்து வகைகளைத் திருடிக் கொண்டிருந்தார்.
""இம்மோசடியைக் கண்டு பிடிப்பதற்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் அன்டன் ஜயசூரியவுக்கு நான் உதவினேன். இது அந்தத் தனியார் வைத்தியருக்கு எரிச்சலை மூட்டியது.
""இந்தத் தனியார் டாக்டர் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த வாசுதேவ நாணயக்கார, நந்தா எல்லாவல ஆகியோரின் தேர்தல் செலவுகளுக்குப் பெருந்தொகைகளை வழங்குபவர்.
""இவருடைய செல்வாக்கினால் வாசுதேவ நாணயக்காரவும், நந்தா எல்லாவலையும் இரகசியப் பொலிஸாருக்கு அனுப்பிய முறைப்பாட்டின் படியே இரகசியப் பொலிஸார் என்னைக் கைது செய்தனர்.'' என்றார் டாக்டர் பெர்னாண்டோ. சாவின் விளிம்பு வரை
""இந்த விவரம் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?'' என்று கேள்வி எழுப்பினோம்.
""1971 புரட்சியின்போது வாசுதேவ நாணயக்காரவும் கைது செய்யப்பட்டு எங்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சந்தர்ப்பத்திலேயே வாசுதேவ இந்த உண்மையை ஒப்புக்கொண்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டார்'' என்று விளக்கினார் டாக்டர் பெர்னாண்டோ.
""இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்த எமது விடுதிக்கு ரோஹண விஜேவீர அடிக்கடிவருவார். எனது அறையிலேயே ஜே.வி.பி. தொடர்பான அறிக்கைகள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. என்னுடன் கைதுசெய்யப்பட்ட நான்குபேர் இரத்தினபுரி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். என்னை நிர்வாணப்படுத்தி பெட்ரோல் ஊற்றி தீவைக்க முற்பட்டபோது தெய்வாதீனமாக அங்குவந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீல் வீரசிங்க என் உயிரைக் காப்பாற்றினார்'' எனத் தனக்கு நேர்ந்த திகில் அனுபவத்தை எம்மோடு பகிர்ந்துகொள்கிறார் டாக்டர்.
மறக்க முடியாத அனுபவம்
""உங்களுடைய சிறை அனுபவம் தொடர்பாக மறக்க முடியாத சம்பவங்கள் ஏதும் உண்டா?''
""விட்டு விட்டும், தொடர்ந்தும் நான் 17 வருடங்கள் மொத்தமாகச் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளேன். கொடுமையான சித்திரவதைகளையும் அனுபவித்துள்ளேன். ஆனால், இரண்டு தமிழ்ப் பெரியார்கள் எனது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன். அடுத்தவர் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகராக இருந்த கந்தையா. இவர்கள் இல்லாவிட்டால் இன்று நான் உயிருடன் இருக்கமுடியாது'' என்றும் பெர்னாண்டோ கண்ணீர் மல்கக் கூறினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றும் ஒரு முக்கியமான விடயத்தையும் கோடிட்டுக் காட்டினார் டாக்டர் பெர்னாண்டோ.
""ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்டு யாழ். சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது லொக்கு அத்துல, அத்துல நிமலசிறி, ஜயசிங்க ஆகியோர் மாற்றுக் குழு ஒன்றை அமைத்து விஜேவீரவைக் கொலைசெய்யவும் திட்டமிட்டனர். ஆனால் அது பலிக்கவில்லை. இவர்களுக்கு உடந்தையாக சோமவன்ஸதான் செயற்பட்டார்'' என்றும் குறிப்பிட்டார் பெர்ணான்டோ.
83 கலவரத்தில் ஜே.வி.பியின் பங்கு
""1983ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு ஜே.வி.பிதான் காரணம் என்று கூறப்படுகின்றதே. இது சரிதானா?'' என்ற கேள்வியை எழுப்பினோம்.
""இது தவறு. 1983 ஜூலை மாதம் ரோஹண விஜேவீர எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் யூ.என்.பி. குண்டர்களும் , சிறில்மதியூ மற்றும் சிறிசேனகுரே ஆகியோரின் அடியாட்களும் இனக்கலவரத்தை ஏற்படுத்திவிட்டு அப்பழியை ஜே.வி.பி. மீது போடத் திட்டமிட்டுள்ளனர். நான் எனது மனைவி பிள்ளைகளுடன் தலைமறைவாகிப் போகின்றேன்; நீரும் எப்படியாவது தலைமறைவாகிவிடவும்.' என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதம் இன்றும் என்னிடம் உள்ளது'' என்றார் பெர்ணான்டோ.
""அப்படியானால் நீங்கள் எப்படி கைதானீர்கள்?'' இது எமது சந்தேகம்.
""இனக்கலவரம் உக்கிரமாகிக்கொண்டிருக்கும்போது கம்பஹாவில் என்னிடம் சிகிச்சைபெறும் கந்தையா என்ற முதலாளி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு வீதியில் கிடந்தார். அவரைக் காப்பாற்றும்படி கம்பஹா பொலிஸில் முறையிட்டேன். நீர் உமது வேலையைப் பாரும். தமிழ் நாய்கள் பற்றிக் கவலைப்படாதீர் எனக்கூறி என்னை விரட்டினர். நான் திம்பிவரும்போது கந்தையா முதலாளியை அவரது வீட்டுக்குள் போட்டு தீவைத்துக் கொளுத்திவிட்டனர். ஆனால், மறுநாள் என்னைக் கைதுசெய்தனர். இனக்கலவரத்தைத் தூண்டி விட்டேன் எனத் தெரிவித்து நாடாளுமன்ற குண்டுவெடிப்பு உட்பட பலவற்றுடன் தொடர்புபடுத்தி, 17 குற்றாச்சாட்டுகளைச் சுமத்தி மீண்டும் என்னை சிறையில் தள்ளிவிட்டனர். ஆனால், எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. நான்கு வருடங்களின் பின் விடுதலை செய்தனர்.
""இந்தச் சந்தர்ப்பத்தில் சோமவன்ஸ அமரசிங்க, சிறிசேன குரேயிடம் தஞ்சம் புகுந்தார். தங்களுக்கு எதுவுமே தெரியாது, எல்லாவற்றிற்கும் ரோஹண விஜேவீரதான் காரணம் எனக்கூறிவிட்டார் அவர். அவர் இரகசியப் பொலிஸாரின் ஒற்றனாகச் செயற்பட்டு ஜே.வி.பி யினரை காட்டிக் கொடுத்துவந்தார்.
""ஜே.வி.பி. தலைவர் ரோஹணவிஜேவீர பண்டாரவளையிலும், உலப்பனையிலும் மாறி மாறி மறைந்து வாழ்ந்து வந்தார். இந்தத் தகவலை சோமவன்ஸவின் நண்பர்களும் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களுமான ஆனந்த, ஹேரத் ஆகிய இருவரும் அவரிடம் தெரிவித்தபின், அவர்களைப் பொலிஸில் மாட்டிவிட்டு அவர்கள் மூலமாக ரோஹண விஜேவீரவின் மறைவிடத்தைப் பொலிஸாருக்கு காட்டிக் கொடுத்தார் சோமவன்ஸ. என்றாலும் தான் நல்ல பிள்ளைபோல் வெளியே காட்டிக்கொண்டார்.
""கொடுக்கப்பட்ட தகவலின்படி ரோஹண விஜேவீர உலப்பனையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு அன்றிரவே சுட்டுக்கொல்லப்பட்டார். அதேயிரவில் சோமவன்ஸ கொடுத்த தகவலின்படி ஆயிரத்திற்கும் அதிகமான ஜே.வி.பி. உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.'' என்றும் டாக்டர் பெர்ணான்டோ கட்சியின் பயங்கர அனுபவங்களை எடுத்துக் கூறினார்.
ஜே.வி.பி. ஆயுதம் தூக்கிய வரலாறு
""புரட்சிகர அரசியலில் ஈபட்ட ஜே.வி.பி எப்படி ஆயுதம் தூக்கியது?'' என வினாவினோம்.
அது ஒரு சுவாரஸ்யமான கதை என்றபடியே அதைச் சொல்லாத் தொடங்குகின்றார் டாக்டர். ""ரோஹண கைதுசெய்யப்பட்டு யாழ். சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தென்பகுதியில் எமது இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இதனால், லொக்கு அத்துல, ஆயுதத் தாக்குதலில் ஈடுபடவேண்டும் என்றார். ஆனால், தலைவரின் அனுமதியின்றி ஆயுதம் தூக்க முடியாது என்று கட்சி உறுப்பினர்கள் கூறிவிட்டனர்.
""இதன்படி லொக்கு அத்துல, ஒஸ்மன் சில்வாவின் தாயார் ஆகியோர் உட்பட ஒரு தூதுக் குழுவினர் யாழ்ப்பாணம் சென்று ரோஹண விஜேவீரவைச் சந்தித்து விடயத்தைக் கூறினர்.
""அன்றைய நிலையில் எம்மிடம் இருந்தவை ஒரு சில ரைபிள்களும், கட்டுத் துவக்குகளும், வெடிகுண்டுகளும் மட்டும்தான். இதை வைத்துக் கொண்டு பலமிக்க இராணுவம், பொலிஸ{டன் மோத முடியாது. எனவே,ஆயுதங்களைப் பதுக்கி வைத்துவிட்டு தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை நிறுத்தி வையுங்கள் என ரோஹண விஜேவீர தன் கைப்பட கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால்,ரோஹண விஜேவீரவின் கடிதத்தை லொக்கு அத்துல மறைத்து விட்டு தலைவர் ஆயுதத் தாக்குதலை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார் எனக் கூறி தாக்குதலை ஆரம்பித்தார். இதனால், எங்களுடைய ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தது'' என்று டாக்டர் பெர்ணாண்டோ பதில் அளித்தார்.
இறுதியாக இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமானால், ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒத்த கருத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாக பேசுவதன் மூலமே அதனைச் சாதிக்க முடியும், எனவும் தாம் கருதுகிறார்</b>
http://www.nitharsanam.com/?art=12555
|
|
|
| புூசணி அல்வா |
|
Posted by: கீதா - 10-25-2005, 07:21 PM - Forum: சமையல்
- Replies (11)
|
 |
புூசணி அல்வா
தேவையானவை
வெள்ளைப் புூசணிக்காய் -- 1பெரியதுண்டு
சக்கரை தேவையானது
முந்திரிப் பருப்பு ---எட்டு
பால் தேவையானவை
நெய் 1கரண்டி
ஏலக்காய்-- 2
செய்முறை
புூசணிக்காயை கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும்?
அந்தத் துருவலைக் கையால் ஐலமில்லாமல் பிழியவும்
இல்லாவிடின் ஒரு துணியில் போட்டு வடியவிடலாம்
ஒரு வெண்கல உருளிpயில் அரை கரண்டி நெய் விட்டு
புூசணித் துருவலைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வதங்கி
அரை ஆழாக்குப் பாலையும் கால் டம்ளர் ஐலத்தையும்
விட்டு கொதிக்க விடவும் ஏலக்காய்தூள் ஒரு சிட்டிகை
கேசரிப் பவுடர் குங்குமப்புூ இவற்றை போட்டு நன்றாக கிளறி
பக்கங்களில் ஒட்டாமல் சுருளவந்தவுடன் மீதி நெய்யை விட்டு
முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும்
|
|
|
| வேலை நிறுத்தம் செய்த குடும்ப தலைவி |
|
Posted by: SUNDHAL - 10-25-2005, 04:01 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (17)
|
 |
வேலை நிறுத்தம் செய்த குடும்ப தலைவி
வேலை நிறுத்தம் செய்வது தொழிலாளர்களின் தனி உரிமையா என்ன? நானும் வேலை நிறுத்தம் செய்வேன் என்று ஒரு குடும்பத் தலைவி வேலை நிறுத்தத்தில் அம்மா என்ற பேனருடன் வீட்டுக்கு அருகே நடைபாதையில் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து விட்டார். அவர் பெயர் ரெஜினா ஸ்டீபன்சன். 41 வயதான இவர் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகரைச் சேர்ந்தவர்.
அன்றாடப் பணிகளில் தன் குடும்பத்தினரின் உதவி தேவை என்று கோரித்தான் இவர் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்.
எனக்கு 7 வயது முதல் 19 வயது வரை உள்ள 4 குழந்தைகள். எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டி உள்ளது. வீட்டைச் சுத்தம் செய்வது சமைப்பது, துவைப்பது என்று எல்லாத்தையும் நானே செய்யவேண்டி உள்ளது. குழந்தைகள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும். நான் பாடுபடுவதை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக தான் இந்த வேலை நிறுத்தம் என்கிறார் ரெஜினா.
Thanks:Thanthi...
|
|
|
|