Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 482 online users.
» 0 Member(s) | 479 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,312
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,064
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,489
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  ஆதவன் தீட்சண்யா கவிதை
Posted by: Eelavan - 12-11-2005, 04:52 AM - Forum: (தீவிர) இலக்கியம் - No Replies

கவனமாய் கடக்கவும்

ஆதவன் தீட்சண்யா

துர்சொப்பனங்களின் நெரிப்பில்
படுக்கையில் 'மூச்சா' போய்விடும் குழந்தைகளும்
அதிர்ந்து பேசும் சுபாவமற்ற இருதய பலஹீனர்களும்
இக்கவிதையைப் படிக்க வேண்டாமென
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

உலகை களியாட்ட மேடையாய் வரித்து
வாழ்வைத் துய்க்கிறவர்களுக்கும்
மலர் மழை மழலைச்சிரிப்பென பாடித்திளைக்கும்
நெப்பமான நுரைமனக் கவிஞர்களுக்கும்
பொருந்தும் இவ்வெச்சரிக்கை

காவல் நிலையத்தைக் கடக்கும் பெண்ணின் பதற்றத்தோடு
மாற்றுப்பாதை வழியே இக்கவிதையைக் கடப்பதன்றி
சாத்வீகத்தால் நிரப்பப்பெற்ற நற்குணவான்
தனது நம்பிக்கைகளை தற்காத்துக்கொள்ள
மறுமார்க்கமில்லை

மேற்சென்று படிக்க நேரிட்டால்
வளைந்து ஒடுங்கி விறைத்திருக்கும் எழுத்துருக்கள்
விபத்தில் சிதைந்தவர்களைப்போல் அச்சமூட்டக்கூடும்
எழுத்திலிருந்து துண்டித்து மேலேத் தெரியும்
மெய்யெழுத்துப் புள்ளி
தலைவேறு முண்டம் வேறாய் தறிக்கப்பட்ட
மேலவளவு முருகேசனை நினைவுபடுத்தி
ஒரு எழுச்சியை வீழ்த்தியதானக் கொண்டாட்டங்களை
முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம்

வல்லுறவுக்கு பிளக்கப்பட்ட தொடையிடையே
வழியும் உதிரம்
ஒரு சொல்லுக்கும் மற்றொன்றுக்குமான
இடைப்பள்ளத்தில் தேங்கி
உங்களது மெல்லிதயத்தை மூழ்கடித்துவிடும்
அபாயமுண்டு

ஒவ்வொரு வரியும்
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கடத்தப்பட்டிருக்கும்
பிரேதங்களைப்போல தெரியும்பட்சம்
வீடு திரும்பாத உறவினர்களைத் தேடியலையக்கூடும்

முதல் பாராவுக்கும் அடுத்த பாராவுக்கும்
இடையேயுள்ள வெளி
கடலோரத்தில் பொக்லைன்களால் தோண்டப்பட்ட
பெருங்குழிகளாக சாயலிடுமானால்
இக்கவிதையை சுனாமிக்கானதாய் தப்பர்த்தம்
கொள்ள வாய்ப்புண்டு

என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளி போல்
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்
தூக்கத்தில் வளர்ந்து
நடுகற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்
வேறெதோ பயணத்தைக் கிளப்பிவிட்டு
ஊர்திரும்பலை சாத்தியமற்றதாக்கிவிடும்

ஒரே ஊரின்
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப் போலிருக்கும்
அடுத்தடுத்தப் பக்கங்களில்
வெட்டுப்பட்டு மொக்கையான
கன்னங்கரிய எழுத்துக்களாலாகி
யாவரும் வெறுக்கத்தக்கவொரு கவிதையிருக்கிறது.

நன்றி:கீற்று

Print this item

  முகத்தார் மற்றும் சின்னப்புக்கான எச்சரிக்கை
Posted by: தூயவன் - 12-11-2005, 04:45 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (16)

யாழ். உடுவில் பகுதியில் மக்கள் குடியேற்றத்தி;ற்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த 'கள்ளு தவறணை"யை அகற்றுமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைகள் எதுவும் கவனத்தில் எடுக்கப்படாத நிலையில் குறித்த தவறணை அடையாளம் தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக குறிப்பிட்ட இந்த கள்ளுத் தவறணையை அந்த இடத்தில் இருந்து அகற்றும் படி பல தடவைகள் உரிய சங்கத்திற்கும் மற்றும் உடுவில் பிரதேச செயலாளர் மதுவரித் திணைக்களம் என பல இடங்களுக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதனை அகற்ற உரியவர்கள் நடவடிக்கையெடுக்காத நிலமையிலேயே ஆத்திர முற்றவர்களினால் இத் தவறணை அடித்துடைக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

குறிப்பிட்ட தவறணைக்கு வரும் மதுப் பிரியர்களின் நடவடிக்கைகாரணமாக இப் பகுதியில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் வழிபாடுகள் கூட கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டு இருந்த வருகின்றமையும் குறிப்பிட வேண்டியதாகும் இந்நிலைமையிலேயே இந்த தவறனை இனம் தெரியாதவர்களினால் அடித்துடைக்கப்பட்டுள்ளது.

எனவே உங்களுக்கான பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு யாழ் கள உறுப்பினர்கள் சார்பில் வேண்டிக் கொள்கின்றோம்.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  கருணாவும் கல்குடாவும்
Posted by: kurukaalapoovan - 12-10-2005, 10:42 PM - Forum: தமிழீழம் - No Replies

புனைக்கதை எழுதுவோரின் எதிர்பார்ப்புக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியவராக மாத்திரம் அல்ல கார்த்திகை 17 தேர்தல் முடிவுகளின் படி ஊரோடு பகைத்தவர் வேரோடு கெட்டுவிட்டார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
http://www.sangam.org/taraki/articles/2005...nd_Kalkudah.php

Print this item

  உயர்பாதுகாப்பு வலைய விடுதலைப்படை
Posted by: kurukaalapoovan - 12-10-2005, 09:49 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

யாழ்மாவட்ட உயர்பாதுகாப்பு வலையங்களால் இடம்பெர்ந்துள்ள மக்கள் பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள்.
http://www.sangam.org/taraki/articles/2005...ow_the_Wind.php

Print this item

  துயர் பகிர்வு- அமரர் அ.பொ செல்லையா
Posted by: KULAKADDAN - 12-10-2005, 09:33 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (6)

<img src='http://img167.imageshack.us/img167/9477/apcel0mh.jpg' border='0' alt='user posted image'>

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.அவரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்.

Print this item

  புளுகர் பொன்னையா வந்திருக்கிறன், படலயத் திறவுங்கோ..
Posted by: pulukarponnaiah - 12-10-2005, 09:16 PM - Forum: அறிமுகம் - Replies (45)

வணக்கம் பிள்ளயள்,


எனக்குப் பாருங்கோ இந்தக் கணனி எல்லாம் தண்ணி பட்ட பாடு.சின்ன வயசிலேயே நான் இந்த மவுசால வித்தை காட்டினான்.பில் கேட்ஸ் நான் எழுதினதப்பாத்துத் தான் இந்த டொஸ் என்டுற சாமானயே எழுதினவர்.
இங்க கன பேர் எதோ எழுதிக் கிழிக்கினம் எண்டு கேள்விப் பட்டன்.எப்பன் எட்டிப் பாப்பம் எண்டு வந்திருக்கன்.



அந்தக் காலத்திலேயே நான் எழுதின காதல் கவிதைகளைப் படிச்சிட்டு கன பேர் எனக்கு லைனில நிண்டு அப்லிக்கேசன் குடுத்தவை.



வேற இன்னும் கன கதை இருக்கு ,வாறன் ஒருக்கா பிலாவில ஏத்திட்டு வந்து மிச்சம் கதைக்கிறன்.

Arrow Arrow Arrow Arrow Arrow Arrow

Print this item

  விழி அம்பு.....
Posted by: jcdinesh - 12-10-2005, 07:35 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

இமைதிறந்து..பார்வை வீசுவது கண்கள்..நீ மட்டும் ஏனடி அம்பு வீசுகிறாய்.....
உன் விழியை பார்த்த கணம்... என் பிரபஞ்சம் ஸ்தம்பிக்குதடி....
ஆழ்கடலில் உள்ள அற்புதம் போல் ... உன் விழிகடலில் பல அதிசயங்கள்.....
சிற்பியும் இல்லை.... உளியும் இல்லை.....
உன் விழியே என்னை செதுக்கி விட்டது....
அன்பே.....
என் கோவில் வரங்கள் எல்லாம் உன் விழியே என் ஒளியாகிவிட வேண்டும் என்றுதான்...........

Print this item

  Sri Lankan family lives in fear of deportation
Posted by: Vaanampaadi - 12-10-2005, 05:37 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Sri Lankan family lives in fear of deportation</b>
http://www.belfasttelegraph.co.uk/news/sto...sp?story=672278

Print this item

  குரல்....
Posted by: sWEEtmICHe - 12-10-2005, 05:09 PM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

<img src='http://img518.imageshack.us/img518/1880/sweetmichepoem21fm.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:29pt;line-height:100%'><b>குரல்....</b>
அந்த காட்டாற்று புயலில்
ஓடிக்கொண்டிருந்த..
சின்ன கிளியின் குரல்
மூழ்கிக்கிடக்காமல்..
அணைக்கட்டு கரை ஒரத்தில் பாயும்
ஆற்றின் நீரைப்பார்த்து..
...கரை ஓதுங்கி அமர்ந்தது
இதயத்தை இரணமாக்கி...
<b>[size=15]இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது </b></span>

Print this item

  நிலவில் ஒரு பிம்பம்
Posted by: sWEEtmICHe - 12-10-2005, 05:06 PM - Forum: கவிதை/பாடல் - Replies (16)

[size=18]<b>நிலவில் ஒரு பிம்பம்</b>
<img src='http://static.flickr.com/39/75141237_40c06c7c29_o.gif' border='0' alt='user posted image'>

Print this item