Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 482 online users.
» 0 Member(s) | 479 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,312
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,064
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,489
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே..
Posted by: sWEEtmICHe - 12-10-2005, 04:48 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

<img src='http://img302.imageshack.us/img302/3632/sweetmichepoem18kl.jpg' border='0' alt='user posted image'>
[size=22]இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே...
[size=14]ஏன் இந்த வலி உதிரியானது?
சுமையை தாங்க முடியாமலா?
அல்ல இதயம் உடைந்ததாலா?
பூக் காதல் தீயில் குளிக்குதே
வீசிய பூ மேகத்தில்
பாவ வாழ்க்கை தொலைக்கவா?
சொல் ஏன்?
நிஜம் எங்கே.....?
மீண்டும் மீண்டும் திரைக்குள் செல்கிறதே
ஓசையின் துளி தெறிக்கவா ?
அல்லது பூட்டிய அன்பு வாசிக்கவா?
சாப அலை வந்து வீசுதே
அது அடித்து செல்கிறதே
இன்று உடைத்து பார்த்து விட்டதால்
பெருகிற கண்ணீர் கவிதை இந்த கண்கள் எழுதுதே
நீர்க் குளத்தில் கண்ணீர் பொங்கிப்பொங்கி ...
நிலவின் ஒளியில் அருவி வழியில் வடியிது
உயிர் இழந்தும் பாடாமல் துடிக்கிறது
......போராடுமா?
இலையும் கிளையும் !
இக்கண்ணீர் கவிதையால்..காதல்......சேருமா?
[size=16]<b>விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)</b>

Print this item

  15 நாட்களே நீடித்த வைராக்கியம்?
Posted by: kurukaalapoovan - 12-10-2005, 03:02 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

மகிந்தவின் சிந்தனைக்கேற்ப சமாதான ஏற்பாட்டாளராக நோர்வே செயற்படுவதற்கு ஜே.வி.பி தடையல்ல என்பது போன்ற கருத்துக்களை அது முன்வைக்கத் தொடங்கியுள்ளது. இது அடிப்படையில் கேலிக்கிடமானது.....

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக கூக்குரல் இடுவதற்கும், சிங்கள அரசியல் தலைவர்கள் எதையும் கூறுவதற்கும் செய்வதற்கும் தயங்குவதில்லை என்பது வரலாற்றுப் பாடம். ஏனெனில் சிங்கள மக்களின் ஞாபக சக்தி குறித்தும், சிங்கள மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு நிரம்பவே உண்டு.
.....
............
யுத்த நிறுத்த உடன்பாட்டில் கைச்சாத்திட்ட ரணில் விக்கிரமசிங்கவும் சரி, அதன் பின்னர் யுத்த நிறுத்த
உடன்பாட்டை தொடர்வதாக அறிவித்த சந்திரிகா குமாரதுங்கவும் சரி தற்பொழுது யுத்தநிறுத்த உடன்பாட்டை மாற்றி அமைக்கப் போவதாகக் கூறும் மகிந்த ராஜபக்ஷவும் சரி யுத்தநிறுத்த உடன் பாட்டிலும், சமாதான முயற்சிகளிலும் காட்டிய, காட்டும் கரிசனையைவிட இராணுவத் தீர்வில் காட்டிய, காட்டும் கரிசனை அதிகமாகும்.

அவர்கள் தமக்கு வாய்ப்பான சூழ்நிலை வரும் வரையில் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை. ஏனெனில் அவர்களின் சிந்தனை அவர்களின் கூட்டாளிகளின் நோக்கங்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதையோ சமாதான வழியில் தீர்வு என்பதையோ கொண்டதாக இல்லை.
http://www.tamilnaatham.com/editorial/eela...am/20051210.htm

Print this item

  திருமலை ஈபிடிபி கும்பலின் முகாமில் குண்டுவெடிப்பு
Posted by: தூயவன் - 12-10-2005, 02:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள ஈபிடிபி தேசவிரோதிகளின் முகாமிற்குள் இன்று காலை 11.45 மணியளவில் பாரிய குண்டொன்று வெடித்துள்ளது. இதனால் குறித்த முகாமின் மேற்கூரை து}க்கி வீசப்பட்டு, முகாம் கடுமையாகச் சிதைந்துள்ளதுடன், தேசவிரோதிகளும் படுகாயமடைந்துள்ளனர் . ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பின் போது காயமடைந்தவர்களின் பெயர் விபரம். ஞானப்பிரகாசம் புூலோகராஜன்-திருமலை அலுவலகப் பொறுப்பாளர்(வயது 40) அவரின் இளைய சகோதரர் ஞானப்பிரகாசம் அந்தனி பர்னான்டோ(சிறி 29 வயது), ஏ.ஏபிரகாம்(வயது 60), வேலாயுதம் ரகுநாதன்(முத்து 37 வயது),
இக் குண்டு அவர்களின் அலுவலகத்தில் பாவனையிலிருந்த கணணித் தொகுதியிலிருந்து வெடித்ததாகவும், இக் கணணி நீண்ட காலம் அவ் அலுவலகத்தில் பாவிக்கப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமலை காவல்த் துறையினர் தகவல் தருகையில் அலுவலகத்திற்க்கு வெளியிலிருந்து தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தனர். இது ஒரு உள் வீட்டு சதி என நம்பப்படுகின்றது.
சிறீலங்கா இராணுவம், மற்றும் கடற்படையின் உச்ச பாதுகாப்பில் உள்ள குறிப்பிட்ட முகாமிலேயே குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடிப்பையடுத்து வீதித்தடைகள் இராணுவத்தாலும், கடற்படையாலும் ஏற்படுத்தப்பட்டு குறித்த பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத அதேவேளை சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


நன்றி: சங்கதி

Print this item

  வடமராட்சி தென்மராட்சி பகுதிகளில் இந்தியப் புலனாய்வாளர்களின்
Posted by: narathar - 12-10-2005, 01:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

யாழ்ப்பாணத்தில் இந்தியப் புலனாய்வாளர்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. வர்த்தகர்கள் என்ற போர்வையில் யாழ் குடாநாட்டுக்கு விரையும் இந்தியப் புலனாய்வாளர்கள் முக்கிய இடங்களில் கடைகள் அமைந்து புலனாய்வு வேலைகளில் ஈடுபடுகின்றன. குறிப்பாக இந்தியாவில் இருந்து கொண்டுவரும் சேலைகள் மற்றும் ஆடைகள் மிகவும் குறைந்த விலையில் யாழ் குடாநாடு முழுவதும் விற்கப்படுகின்றன.குறிப்பாக வடராட்சி தென்மராட்சிப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இப்பகுதி மக்களுடன் நல்ல உறவை பேண முற்படும் இந்திய உளவாளிகள் இந்தியா பற்றி தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அறிவதில் அதிகம் அக்கறை காட்டி வருகின்றனர்

Print this item

  பலாலி விமானப்படைத் தளத்தை புனரமைக்க இந்திய அரசாங்கம் நிதி ம
Posted by: narathar - 12-10-2005, 01:14 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (2)

பலாலி விமானப்படைத் தளத்தை புனரமைக்க இந்திய அரசாங்கம் நிதி மற்றும் ஆலோசனை உதவி வழங்கியது.

India funds Palaly airstrip reconstruction: Air Force Chief
Colombo | December 09, 2005 10:36:17 PM IST


Sri Lanka's Air Force Commander, Air Vice Marshal, Donald Perera today said the massive reconstruction and repair work of the strategically important Palaly airport runway in the Jaffna peninsula was being carried out with the financial assistance of the Government of India.
''The reconstruction work is in progress with the financial assistance of the Indian government. It was initially planned to complete the work within six to eight months. Unfortunately, the weather is blocking us a little, but it is satisfactorily progressing. A team from India is expected shortly to sit with us and work together,'' the Air Force Chief told reporters here today.

Mr Perera said it took a fair amount of time for the contractors to take their machinery and manpower to the work site since the logistics had to be arranged up there in the North prior to the commencement of work.

Refusing to spell out the exact amount of money that the Government of India is putting in for resurfacing the Palaly runway, the Air Force chief said it depended on the scope of work.

Asked as to what the Government of India is gaining out of this multi-million rupee project, he said ''It is not the question that I could answer or an issue that the Sri Lankan Air force is worried about. It is an issue for the Governments of India and Sri Lanka to discus and decide.'' Responding to questions on the alleged acquisition of light planes by the LTTE, the Air Force chief, today confirmed that the rebels were in the possession of at least two to three single-engine planes, but sought to play down their striking capability.

''Yes, the LTTE has a couple of small flying machines. There are single-engine two-seater planes. There is no strike capability for the LTTE Air force. If you load up a car with a lot of explosives and explode, it can cause a lot of destruction. If that can be done in the same manner from the air, then it will have the same capability. For that one cannot say there is a strike capability as such. It can just be a bomb in the air,'' he said.

http://news.webindia123.com/news/showdetai...86694&cat=India

Print this item

  உலகத்தமிழர் பேரமைப்பு உரைகள். (நாகர்கோவில்)
Posted by: tamilini - 12-10-2005, 01:08 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (1)

http://thenseide.com/ulagathamizhar/Speeches-2005.asp


இந்த இணைப்பில் இருக்கிறது நால்வரது உரைகள்.
பழ நெடுமாறன். கொளத்தூர் மணி. சுப வீரபாண்டியன். தொல் திருமாவளவன். மின்னஞ்சல் செய்தி.

Print this item

  இலங்கை பாடசாலை ஹொக்கி அணிக்கு,தமிழ் மாணவன் கப்டன்
Posted by: MUGATHTHAR - 12-10-2005, 12:53 PM - Forum: விளையாட்டு - Replies (1)

<b>மலேசியா சென்றுள்ள ஹொக்கி அணிக்கு தமிழ் மாணவன் கப்டன்</b>

ஆசிய நாட்டின் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான ஹொக்கிப் போட்டி இன்று மலேசியாவின் பினாங் நகரில் ஆரம்பமாகின்றது.

மலேசியா சென்றுள்ள இலங்கை பாடசாலை ஹொக்கி அணிக்கு, கொழும்பு கொட்டாஞ்சேனை சென். பெனடிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் மாணவரான <b>கிளைப் பெர்னாண்டோ </b>தலைமை தாங்குகின்றார். இலங்கை அணியில் இதே கல்லூரியைச் சேர்ந்த இரு தமிழ் மாணவர்களான <b>நிசான் பிரிங்லர் பாலன்</b>, <b>அரேந்திரன் அரவிந்தன் </b>ஆகியோரும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் மேற்படி போட்டி 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப் போட்டியின் பின்பு இலங்கை பாடசாலை ஹொக்கி அணி 19 ஆம் திகதி தொடக்கம் பாங்கொக்கில் நடைபெற இருக்கும் பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டியிலும் பங்கு பற்றவுள்ளது

thanks: thinakkural

Print this item

  உறங்கா விழி
Posted by: jcdinesh - 12-10-2005, 08:31 AM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

அன்பே....
ஊர் உறங்கி விட்டது திரை வானம்
தன் உருவத்தை மறைக்க முகிலால் இழுத்து
முக்காடு போட்டுக் கொண்டது-நட்சத்திரங்களை
காவலுக்கு வைத்து விட்டு இரவு கூட உறங்கி விட்டது.
பஞ்சுமெத்தையில் நீ கூட தலைஅணையில்
நன்மதியாக உறங்கிவிட்டாய்.
ஆனால் நான் மட்டும் உறங்கவில்லை-நீ
இமைக்கும் சத்தம் தான் எனக்குக் கேட்கிறது
என் இதயத்துடிப்பு உனக்குக் கேட்கிறதா?
என் மனதை பறித்துக்கொண்டு நீ மட்டும்.
ஊறங்கிவிட்டாய்...
உன் மதிமுகம் காணாமல் என் மனம் தவிக்கிறது.
வெளியே வா கிளியே உன் முகம் கொஞ்சம் காட்டு.
உன்னை காணாமல் என் இமைகளும் விளிகளும் உடன்படிக்கைக்கு
வர அடம்பிடிக்கிறது
இன்றைய என் இருண்ட வாழ்வில் உன்னைக் காணாவிட்டால் இந்த இரவு இனி ஒரு
பகலையே சந்திக்காமல் போய்விடு....

Print this item

  பால் ஐஸ்கிரீம்
Posted by: RaMa - 12-10-2005, 07:35 AM - Forum: சமையல் - Replies (7)

பால் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்
பால் - 500 மில்லி லிட்டர்
மில்க் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - 1 1/2 ஸ்பூன்
ஜி.எம்.எஸ் - 3/4 ஸ்பூன்
சர்க்கரை - 10 ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்


செய்முறை:

முதலில் 1/4 டம்ளர் வெதுவெதுப்பான பாலில், பால் பவுடர், கார்ன்ஃப்ளார், ஜி.எம்.எஸ் ஆகியவற்றைக் கரைத்து சர்க்கரையைச் சேர்த்து, சற்றே ஆற வைத்துள்ள பாலுடன் இவற்றைச் சேர்த்து கலக்கி ஐஸ் பாத்திரத்தில் ஊற்றி 4 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பாதி கெட்டி ஆனவுடன் மிக்ஸியில் ஊற்றி அடித்து மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி, மேலும் 2 மணி நேரம் குளிர விட்டு கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறுங்கள். சுவையான பால் ஐஸ்க்ரீம் தயார்.

Print this item

  அனைவருக்கும் எனது வணக்கம்.
Posted by: பின்னா - 12-10-2005, 03:31 AM - Forum: அறிமுகம் - Replies (32)

அனைவருக்கும் எனது வணக்கம். நான் யாழ் களத்தில் புதியவர். எனது பெயர் பின்னா.

Print this item